Aggregator

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
1999ஆம் ஆண்டு செம்மணி புதைகுழி வழக்கை தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சட்டத்தரணி கருத்து தெரிவித்த அந்த வாரத்திலிருந்தே அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது….. செம்மணி இங்கு இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொ*லையின் முக்கிய சாட்சியமாக மாறக்கூடும். இங்கு நாளாந்தம் எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் அதற்கு ஒரு முக்கிய சாட்சிகள். குழந்தைகளின் என்புத் தொகுதி என சந்தேகிக்கப்படும் ஒன்றரை அடி என்புத் தொகுதிகள், சிறுவர்களின் என்புத் தொகுதிகள் என சந்தேகிக்கப்படும் 3 அடிக்கும் குறைவான என்புத் தொகுதிகள், மண்டையோடுகள் நொருங்கிய நிலையில் காணப்படும் என்புத் தொகுதிகள், முழங்கால்கள் மடக்கப்பட்டு கைகள் கால்கள் கட்டப்பட்டது போன்ற சந்தேகத்துக்கிடமான என்புத் தொகுதிகள், பாடசாலை புத்தகப்பை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, சிறுமியின் ஆடை, வளையல், பெண்களின் பாதனிகள் என இதுவரை வெளிவந்த சான்றுப் பொருட்கள் செம்மணியின் கொடூரத்தை இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன. செம்மணியில் நிகழ்ந்த படுகொ*லைகள், கிருசாந்தி படுகொ*லை, பழைய செம்மணி புதைகுழி அகழ்வு எல்லாம் தற்போது செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் புள்ளியில் இணைவதை திசை திருப்பத சிலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய புதைகுழி வேறு 1999 செம்மணி புதைகுழி வேறு என்ற கருத்துவாக்கத்தை அவசர அவசரமாக ஏற்படுத்தி செம்மணி புதைகுழியில் ஏற்பட்டிருக்கும் கவனத்தை சிதைக்க முற்படுகின்றார்கள். இவ்வளவு காலமும் அமைதியாக இருந்தவர்கள் கடந்த வாரத்திலிருந்து தங்களுக்கு தரப்பட்ட பணியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவசர அவசரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்னில் கடந்த வாரமே” நீதிமன்றின் முறையான அனுமதியோடு பழைய செம்மணி புதைகுழி வழக்கை(1999) தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி கருத்து தெரிவித்தார். நான் அவதானித்தவரை அன்றிலிருந்து அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அழைக்கக்கூடாது என அந்த பிரதேசத்திலிருக்கும் தங்களின் விசுவாசிகளிடமிருந்து கருத்துவாக்கங்களை சிலர் முதலில் எழுப்புகின்றனர். அகழ்வு இடம்பெறும் இடத்தினை செம்மணி என கூறக்கூடாது என்று கூறுபவர்களின் முகநூல் பதிவுகளை பார்த்தாலே தெரியும் அவர்கள் யார்? அவர்களை இயக்குபவர்கள் யார் என? செம்மணியில் வெளிவரும் என்புத் தொகுதிகளையும் அதன்பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களையும் ஆராயாமல் செம்மணி என்ற சொல்லை பயண்படுத்த விடாமல் கருத்துவாக்கத்தைச் செய்து செம்மணி புதைகுழி வழக்கை வேறொரு கோணத்திற்கு கொண்டுசெல்ல பார்க்கிறார்கள். எங்களுக்கு இடையில் உருவாக்கப்படும் கருத்துவாக்கங்களின் பின்னனிகளை ஆராய வேண்டும் செம்மணி எங்களுக்கு நடந்த இனப்படுகொ*லையை பறைசாற்றும். அதனை தடுக்க இடமளியோம்…. செம்மணி புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அடையாளப்படுத்துவதற்கு எதிராக நிற்பவர்களின் சூழ்ச்சியையும் அவர்களின் பின்புலத்தையும் அறிந்துகொள்வோம்.. செம்மணி என்பதை தவிர்த்துவிட்டு போவதற்கு இடமளியோம். பிரபாகரன் டிலக்சன்

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months ago
பிகு அமிர்தலிங்கம் இருந்த கட்சி - அதுவே நினைவு தினம் அனுஸ்டிக்கும் நிலைக்கு வந்து விட்டது - ஆகவே அமிரை நினைவு கொள்ள முடியாமல் போய் இருக்கலாம், ஆனால் அவரின் கட்சிக்கு அப்பாலும் 35 ஆண்டுகளாக அமிர் நினைவுகூரப்படுகிறார் என்பதே உண்மை. அமிர் வரலாறின் குப்பை தொட்டிக்கு உரியவர் என்பதே என் நிலைப்பாடும். ஆனால் லைன்சன்ஸ் எடுக்காமல் ஏரோபிளேன் ஓட்டினாலும், உண்மை ஒன்றுதான்🤣.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
4-5 வயதுடைய சிறுமி செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் டிலக்சன்

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months ago
யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் ந...யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை நிகழ்வுமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கி...👆இது 2023 இல். 👇 இது 2 நாள் முன்பு Tamilwinஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!...இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36...

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2 months ago
பாராட்டுக்கள். இது சம்பந்தமாக வரும் சகல சட்ட, சட்டத்துக்கு புறம்பான எதிர்வினையையும், சட்ட பூர்வமாக எதிர்கொள்ள இப்போதே தயார் நிலையில் இருக்க வேண்டும்.

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
வெளிநாட்டில் இருந்தும் கண்ணகிகள் (கற்புக்கரசர்கள்) தாய்நாட்டிற்கு வருவார்கள்.....சிரிக்கமாட்டுமே என் பதில்கள் உங்களுடன்

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
தமிழ், சிங்கள, இஸ்லாமிய மாணவர்கள் என்ற பேதங்கள் இல்லாமல், மூவினங்களிலிருந்தும் சில மனநோய்க் கூறுகளைக் கொண்டவர்களால் இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் இந்த எல்லை மீறிய பகிடிவதை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1997ம் ஆண்டில் வரப்பிரகாஷ் என்னும் மாணவன் பேராதனை பொறியியல் பீடத்தில் இப்படியான ஒரு பகிடிவதையால் இறந்து போனது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தி இருந்தாலும், அதன் பின்னரும் இந்தப் பகிடிவதை இதே வகைகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பகிடிவதையின் அடிப்படையே புதிய மாணவர்களும், ஏற்கனவே அங்கிருக்கும் மாணவர்களும் கலந்து பழகும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொல்லப்பட்டாலும், அத்துமீறிய பகிடிவதைகளைச் செய்வோர்களில் மிகப் பெரும்பாலானோர் பகிடிவதைக் காலத்தின் பின் பழகுவதும் இல்லை, புதிய மாணவர்களும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் இல்லை.

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2 months ago
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, https://athavannews.com/2025/1439315

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2 months ago

121561381_gettyimages-976199210.jpg?resi

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட  மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச்  சிலை அமைக்கப்படவுள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீஸின்  புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது.

மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

https://athavannews.com/2025/1439315

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
அவர் நெருப்புடன் விளையாட மாட்டார். ஆனால் நெருப்பு வந்தால் பூனைக்குட்டிகள் என்ன பாடுபடும் என நினைத்து கவலைப்பட தொடங்கி விடுவார்.

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
நீங்கள்… சுத்தி, சுத்தி எங்கை வாறியள் எண்டு விளங்குது. 😂 ஊரில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீது புலம் பெயர் மக்கள் அதிக கௌரவத்துடன் அவர்களை மதிக்க வேணும். 🙂

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

2 months ago
டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள்; ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள் 15 JUL, 2025 | 05:34 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையான 27 ஓட்டங்களுக்கு சரிந்ததுடன் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வேகமாக 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு உரித்தானார். துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மிச்செல் ஸ்டாக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்தவீச்சுக்கான அபூர்வ சாதனையை நிலைநாட்டினார். ஜெமெய்க்கா கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 27 ஓட்டங்களுக்கு சுருண்டது. இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லண்டில் 1955ஆம் ஆண்டு நியூஸிலாந்து பெற்ற மிகக் குறைந்த 26 ஓட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையை விட ஒரு ஓட்டம் அதிகமாக மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது. மிச்செல் ஸ்டார்க் தனது முதலாவது ஓவரில் 3 விக்கெட்களையும் 3ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியதன் மூலம் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் வேகமாக (குறைந்த பந்துகளில்) 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை மிச்செல் ஸ்டாக் நிலைநாட்டினார். மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இதுவே முதல் தடவையாகும். மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக்காய்ல் லூயிஸின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிச்செல் ஸ்டாக், 400 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். மிச்செல் ஸ்டாக் 400ஆவது விக்கெட்டை தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது விசேட அம்சமாகும். இதேவேளை, ஸ்டாக்குக்கு பக்கபலமாக பந்துவிசிய ஸ்கொட் போலண்ட், ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் போட்டியில் ஹெட் ட்ரிக் சாதனை புரிந்த 10ஆவது பந்துவீச்சாளர் போலண்ட் ஆவார். மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் சகலரும் ஆட்டம் இழந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 516 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டது. அத்துடன் இந்தப் போட்டியில் ஒருவர் கூட அரைச் சதம் பெறவில்லை. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஸ்டீவன் ஸ்மித் 48, கெமரன் க்றீன் 46, பெட் கமின்ஸ் 24, ஷமார் ஜோசப் 33 - 4 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 56 - 3 விக்., ஜேடன் சீல்ஸ் 59 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோன் கெம்பெல் 36, ஷாய் ஹோப் 23, ஸ்கொட் போலண்ட் 34 - 3 விக்., பெட் கமின்ஸ் 24 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 32 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 121 (கெமரன் க்றீன் 42, ட்ரவிஸ் ஹெட் 16, அல்ஸாரி ஜோசப் 27 - 5 விக்., ஷமார் ஜோசப் 34 - 4 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 204 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 27 (ஜஸ்டின் க்றீவ்ஸ் 11, மிச்செல் ஸ்டாக் 7.3 - 4 - 9 - 6 விக்., ஸ்கொட் போலண்ட் 2 - 3 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் (9 விக்கெட்கள்) தொடர்நாயகன்: மிச்செல் ஸ்டாக் (15 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/220077

செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு - நளிந்த ஜயதிஸ்ஸ

2 months ago
செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி! செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை. 2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியைத் ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளோம்" என்றார். https://adaderanatamil.lk/news/cmd4bdc4l0176qp4k7rfi2izs

செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு - நளிந்த ஜயதிஸ்ஸ

2 months ago

செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை. 2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியைத் ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளோம்" என்றார்.

https://adaderanatamil.lk/news/cmd4bdc4l0176qp4k7rfi2izs

காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்

2 months ago
ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/318802

காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்

2 months ago

காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/318802

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன்

2 months ago
15 JUL, 2025 | 06:12 PM தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது. இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவைப்படகுகள் எமது வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச்செல்கின்றன. இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது. எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர். படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள். கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக்கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றிவைத்திருக்கின்றனர். கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/220079

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன்

2 months ago

15 JUL, 2025 | 06:12 PM

image

தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகள் எமது வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச்செல்கின்றன.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது. 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது. எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர்.

படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள்.

கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக்கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றிவைத்திருக்கின்றனர்.

கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். 

எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார்.

IMG-20250715-WA0017.jpg

IMG-20250715-WA0009.jpg

IMG-20250715-WA0013.jpg

https://www.virakesari.lk/article/220079