Aggregator
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது.
அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது.
மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு - நளிந்த ஜயதிஸ்ஸ
செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு - நளிந்த ஜயதிஸ்ஸ
செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி!
செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை. 2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியைத் ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளோம்" என்றார்.
காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்
காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள் - ரவிகரன்
15 JUL, 2025 | 06:12 PM
தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.
இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப்படகுகள் எமது வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச்செல்கின்றன.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது.
இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது. எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர்.
படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள்.
கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக்கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றிவைத்திருக்கின்றனர்.
கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள்.
எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார்.