2 months ago
சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்கின்ற சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டம் அங்குரார்ப்பணம் 16 JUL, 2025 | 03:22 PM எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான 'அர்த்த' என்னும் திட்டத்தை யதார்த்தமாக்கும் முதல் படி எடுத்து வைக்கப்பட்டது. சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்ந்து வருகின்ற சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அச்சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் அங்குரார்ப்பண விழா செவ்வாயக்கிழமை (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ. ஓல்கா, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள், பிரதேச செயலாளர்கள், அரசு உத்தியோகத்தர்கள், 'அர்த்த' பயனாளிகளான சிறுவர் இல்லங்களின் காப்பாளர்கள் அத்தோடு இந்த விழாவை அலங்கரிக்க தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் தலைமையில் செயல்படுத்தப்படுகின்ற 'அர்த்த' திட்டத்தின் உத்தியோகபூர்வ வங்கியாக இந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு வங்கியான தேசிய சேமிப்பு வங்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கு மாதாந்தம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாயில் 3,000 ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் வாழ்ந்து வருகின்ற சிறுவர் இல்லங்களின் நிர்வாகத்திற்கு வழங்கப்படுவதோடு, எஞ்சிய 2,000 ரூபாய் பணம் அச்சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும். அவர்கள் இச்சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கும் போது அவர்களின் எதிர்கால கல்விக்காகவோ அல்லது தொழில் சார்ந்த தேவைகளுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த சேமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் தெரிவிக்கையில், "பல்வேறு காரணங்களினால், பல்வேறு சந்தர்ப்பங்களில், குடும்பத்தோடு சமுதாயத்தில் பெற்றோரின் அரவணைப்போடு தமது இல்லத்தில் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கின்ற சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற கடைசித் தேர்வாகவே சிறுவர் இல்லமோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையங்களோ அமைகின்றன. அத்தகைய இடங்களில் வசித்து வருகின்ற சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று நாம் கருதுகின்றோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. ஆகையினால் அனைத்துப் பிள்ளைகளையும் பிள்ளைகளாகக் கருதி, அந்த அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் நழுவி விட இயலாது. அந்த வகையிலேயே இந்த 'அர்த்த' என்னும் செயல்திட்டம் அர்த்தமுள்ள தேசிய செயல்திட்டமாக அமைகின்றது. இந்த சிறுவர் இல்லங்களில் வசித்து வருகின்ற பிள்ளைகளின் அடையாளத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதே எமது இந்த 'அர்த்த' செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும்." இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகவே கருத வேண்டும். ஏனைய சிறுவர்களுக்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இச்சிறுவர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அச்சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த 'அர்த்த' செயல்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இச்சிறுவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவது எம் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுப் பிரதமர், இச்சிறுவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு இருப்பதாகவும் ஆகையினால் அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார். இச்செயல்திட்டத்திற்கு என அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதோடு, அதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் இருக்கின்ற 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசித்து வருகின்ற, கைவிடப்பட்ட, அனாதையான, அல்லது நீதிமன்றங்கள் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட என மொத்தமாக ஒன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஒன்று (9191) சிறுவர்களுக்கு 'அர்த்த' செயல்திட்டத்தின் மூலம் மாதாந்தம் 5,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், "தமது சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து சிறுவர் இல்லத்திலோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையத்திலோ வசித்து வருகின்ற பிள்ளைகளின் பொறுப்பினை ஏற்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற வகையில் இத்தகைய செயல்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்துவது வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்" என்று கூறினார். அத்தோடு இது மனிதநேயம் மிக்க பொறுப்பாகும் என்றும் அதற்கு இந்நாட்டின் சகல குடிமக்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றும் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/220136
2 months ago
கதைக்கு நன்றி @ரசோதரன் . கிறிஸ்மஸ் மரமாக இருக்கும் pine, spruce மரங்கள் குளிர்காலத்தில் பனியுறைந்த நாடுகளின் வைக்கிங்குகள் தங்கள் மர வீடுகளில் நறுமணம் வீசுவதற்காக வைக்க ஆரம்பித்து, பின்னர் கிறிஸ்தவ மதம் அவர்களிடம் பரப்பப் பட்ட போது, அதுவே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் மரமாக மாறி விட்டது என்பார்கள். வீட்டில் வைக்க அழகாகத் தான் இருக்கும். ஊரில் நாம் வைக்கும் கிறிஸ்மஸ் மரம் Casuarina என்ற சாதியைச் சேர்ந்தது. கசூரினா (Casuarina) பீச் இந்த கசூரினா சாதி சவுக்கு மரங்களால் அழகு பெற்ற ஒரு இடம். 85, 86 இல் என்று நினைக்கிறேன். மில்க்வைற் கனகராசா அவர்கள் நூறு மில்க்வைற் சவர்க்காரப் பொதிப் பேப்பர்களைச் சேர்த்து அவர்களிடம் மீள ஒப்படைத்தால், ஒரு சவுக்குக் கண்டு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார். நான் 200 சேர்த்துக் கொடுத்து 2 சவுக்குக் கண்டுகள் பெற்றுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரி வீதி ஸ்ரேஷன் வீதிச் சந்தியில் நாம் வாடகைக்கு இருந்த வீட்டின் முற்றத்தில் நாட்டினேன். இரண்டும் கிடு கிடுவென வளர்ந்து வந்தன. பின்னர் நாம் 90 இல் வீட்டை மாற்றிக் கொண்டோம். 2002 இல் நான் போய்ப் பார்த்த போது மரங்கள் இருந்தன. 2012 இல் இரண்டு மரங்களும் காணாமல் போய் விட்டன!
2 months ago
❤️................ என்ன ஆனாலும் சிலவற்றை இறுதிவரை தொடர்வோம் போல, சுவி ஐயா.
2 months ago
உண்மைதான். இங்கே வீதிகளின் மேலே ரயில் பாலம் இருப்பின் அந்த இடத்தில் வீதி இறங்கி செல்லும், அவை வெள்ளத்தில் நிரம்பும் போது, அவற்றூடு காரை செலுத்தி எஞ்சினை நாசாமாக்குவர் பலர். ஒரு இலங்கை பயணத்தில் புத்தளத்தில் இருந்து மன்னார் அரிப்பு பகுதியை ரிசார்ட் போட்ட கள்ள ரோட்டால் அடைய முயற்சித்தோம், வெள்ளம் அதிகம் என. சொல்லி நண்பன் ஒர் அளவுக்கு அப்பால் போகாமல் திரும்பி வந்து மடுவால் சுத்தி கொண்டு போனோம். அப்போ நண்பர் அதிகம் பயப்படுவதாக தோன்றினும். இப்போ அதுவே சரி எனபடுகிறது.
2 months ago
ஆம். நான் யாரும் இறக்கவில்லை என்று எழுதிய போது இந்த தகவல்கள் வெளிவந்திருக்கவில்லை. பொதுவாகவே வெள்ளத்தை நகரங்களில் வசிக்கும் மக்கள் குறைத்து எடை போடுவது வழமை. ஆனால், வேகமாக நகரும் மூன்றடி ஆழ வெள்ளமே ஆளை இழுத்துச் சென்று மீள முடியாத கான்களுக்குள் முடக்கிக் கொன்று விடும் சக்தி வாய்ந்தது. இங்கே நாம் இவ்வளவு கவனமாக இருக்கிறோம். கிளிநொச்சிக் குளம் நிரம்பி உருத்திர புரம், கனகபுரம், ஜெயந்தி நகர் எல்லாம் வீதிகளில் இடுப்பளவு வெள்ளம் ஓடிய ஒரு தருணத்தில் அதற்கூடாக நடந்து போன முட்டாள் தனத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்😂
2 months ago
Torrential rain swept across New York City and New Jersey overnight, killing two people after drowning entire neighborhoods with floodwater, swamping NYC’s subway system and knocking out power for thousands across the tristate area. The deaths occurred in the suburb of Plainfield on Monday, after intense flooding swept a vehicle into the small waterway of Cedar Brook at the peak of the storm around 8 p.m. Both people inside were pronounced dead on the scene, said Gov. Phil Murphy, who declared a state of emergency amid the deadly weather. Their deaths marked the third and fourth caused by severe storms in the city this month. “All of Plainfield grieves this latest loss,” Mayor Adrian Mapp said in a statement. “To lose four residents in a short span of time is unimaginable. We mourn with the families and remain committed to doing all we can to strengthen our emergency response systems and protect our residents from future harm.” Nearby in North Plainfield, a home caught fire and exploded shortly after the family inside had fled the rising floodwaters, authorities said. No injuries were reported. https://www.nydailynews.com/2025/07/15/thunderstorms-flooding-new-york-city-new-jersey-deaths/ நியூயேர்சியில் ஜஸ்ரின் ஊருக்கு அண்மையில் உள்ள ஊரில் இருவர் இறந்துள்ளனர்.
2 months ago
யூகேயிலும் இப்போ சுருதி மாற தொடங்கிவிட்டது. உலக அளவில் 1% க்கும் குறைவாக உலகவெப்பமாதலுக்கு காரணமான நாம் என்ன செய்தாலும் ஒன்றும் ஆகாது. பணத்தை மீள் உருவாக கூடிய சக்திகளில் பாவிப்பதை விட வெள்ளம், அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் விடயங்களில் செலவிட வேண்டும். இப்படியான கதைகள் மெதுவாக வலுபெற்ய்லுகிறன.
2 months ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 months ago
காரில் இதற்கான பாதுகாப்பு பொறிமுறை உள்ளது, ஆரம்பத்தில் வெள்ளத்தில் மிதக்கும் கார் பின்னர் கார் மூழ்க ஆரம்பிக்கும் உள்ளிருந்து காரின் கதவினை திறக்க முடியாது யன்னல் ஊடாக வெளியேறலாம், ஆனால் காரின் முன் பாகம் தண்ணீரில் முதலில் மூழ்கும், எஞ்ஞின் எடை காரணமாக, அதனால் காரின் பின் பகுதி தண்ணீருக்கு மேல் இருக்கும் போது காரின் பின் பகுதிக்கு சென்று காரின் பின் கதவினை அவசரகாலத்தில் திறப்பதற்கான ஆழியின் துணையால் திறந்து வெளியேறலாம்.
2 months ago
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில், மதுபோத்தல்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபோத்தல்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபோத்தல்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார். மதுபோத்தல்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439386
2 months ago
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439405
2 months ago
கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை. சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது. விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1439372
2 months ago

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை.
சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது.
விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://athavannews.com/2025/1439372
2 months ago
இவர் ஏற்கெனவே இராணுவத்தில் இருந்து விலகி, பிக்குவாகவும் சில காலம் இருந்தவர் என்ற படியால்..... இவருக்கு மடகாஸ்கர் தண்டனைகளை கொடுக்க மாட்டார்கள். மாறாக பதவி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.
2 months ago
இவருக்கும் மடகாஸ்கர் நீதிமன்றம் கொடுத்த தண்டனைபோன்று கொடுத்தால் என்ன.🤔
2 months ago
https://www.youtube.com/watch?v=iN1BnyfANxU https://www.youtube.com/watch?v=sKzzKDx4Bvg
2 months ago
16 JUL, 2025 | 11:08 AM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற ஜெயகரன், முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220107
2 months ago
16 JUL, 2025 | 11:08 AM

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற ஜெயகரன், முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





https://www.virakesari.lk/article/220107
2 months ago
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது 3 விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர். மனித புதைக்குழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு, உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்”. என்றார். அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது. ஏற்கனவே, மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார். அதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது. இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21 ஆம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார். குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/319012
2 months ago
5 மணி நேரங்களுக்கு முன்னர்
கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.
"பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி.
சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
"சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர்.
ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி.
"என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்." என்கிறார் பேராசிரியர் ஜென்சி.
தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

BBC News தமிழ்

ஜென்சி: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் கல்வியா...
கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.