Aggregator

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது! adminJuly 16, 2025 செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி , மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து , தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார் நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217901/

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நீடித்தார்; யுத்த நிறுத்த திட்டங்களை நிராகரித்தார் - நியுயோர்க் டைம்ஸ்

2 months ago
அப்படி நடந்த்து இருந்தாலும், Knesset (இஸ்ரேல் பாராளுமன்றம்_ என்ன சும்மா இருந்தததா? இது இஸ்ரேல் (முழு அரசினதும்) இந்த முடிவு. மேற்கு இப்போது வாதத்தை திருப்புவாதத்திற்கு, BB ஐ முதலை ஆக்குகிறது. இதில் இஸ்ரேல் இல் பெரிய பிரச்சனை இல்லை. மேற்கு நடிக்கும், வடிக்கும் முதலை கண்ணீர், ஏனெனில் ரஷ்யா - உக்கிரைனில், மேற்கால் Global South இன் ஏதிர் விவாதம் மட்டும் அல்லா, அதனால் பொருளாதாரம் இயங்குவதையும் சகிக்க முடியாமல் இருப்பது. அனால், ஈரானில், மேற்கு 2ம் தரம் un ஐ ஆகக்குறைந்தது பகுதியாக குழிதோண்டி புதைதது விட்டது. இவ்வளவு இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று இங்கு சிலரால் சொல்லப்படும் இரானில் கூட, யுத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றம் (Majlis) பெரும்பான்மை ஒப்புதல் அளிக்க வேண்டும் (மேலும் ஒரு விடயமாக, இரானில், ஹாமெனியும், ஈரான் அதிபர் Masoud Pezeshkian உம அசரி இனத்தவர்கள் (பக்கத்தில் இதுக்கும் Azerbaijan இன் பெருமைப்பாண்மை இனம்), ஈரானில் பெர்சியன் இனத்தவர் பெருபான்மையாக இருந்தும். தலைமை பீடம் பல்லினம்)

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்! செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி, மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து, தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார். நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439350

சிஸ்ட்டர் அன்ரா

2 months ago
இவளவு கடினமான பாதைகளில் பயணித்தவர்கள் இடையே ஒரு மௌனம் எப்போதும் குடியிருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறீர்கள். எந்த நிலையிலும் துவண்டு விடாது இருக்கும் உங்கள் துணிவு உங்கள் தனி சிறப்பு. உங்கள் அன்ராவின் ஆன்மா சாந்தியடையட்டும் !

35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது!

2 months ago
35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1439346

35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது!

2 months ago

New-Project-193.jpg?resize=750%2C375&ssl

35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1439346

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2 months ago
ஜூலை முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் வருகை! இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது. முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் 16,329 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது 20.5 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்தும், அவுஸ்திரேலியாவில் இருந்தும் அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு, இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://athavannews.com/2025/1439324

அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.

2 months ago
அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார். அத்துடன் சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார். சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439344

அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.

2 months ago

istockphoto-537971779-612x612-1.jpg?resi

அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.

அத்துடன் சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர்.

கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439344

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

2 months ago
ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான தடைகள் குறித்த அச்சுறுத்தல்களால் கலங்காத மேற்குலகம், தனது அமைதிக்கான நிபந்தனைகளில் ஈடுபடும் வரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் தொடர்ந்து போராட திட்டமிட்டுள்ளார். மேலும், ரஷ்யப் படைகள் முன்னேறும்போது அவரது பிராந்திய கோரிக்கைகள் விரிவடையக்கூடும் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்ட புட்டின், ரஷ்யாவின் பொருளாதாரமும் அதன் இராணுவமும் எந்தவொரு கூடுதல் மேற்கத்திய நடவடிக்கைகளையும் தாங்கும் அளவுக்கு வலிமையானவை என்று நம்புவதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க புட்டின் மறுத்ததால் திங்களன்று (14) ட்ரம்ப் விரக்தியடைந்தார். மேலும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உட்பட உக்ரேனுக்கான ஆயுத விநியோக அலையை அறிவித்தார். அத்துடன், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார். கிரெம்ளினின் உயர்மட்ட சிந்தனையை நன்கு அறிந்த மூன்று ரஷ்ய வட்டாரங்கள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் கீழ் புட்டின் போரை நிறுத்த மாட்டார் என்றும், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா, மொஸ்கோவின் எண்ணெய் வாங்குபவர்களை குறிவைத்து அச்சுறுத்தப்பட்ட அமெரிக்க வரிகள் உட்பட மேலும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் என்று நம்புவதாகவும் கூறின. ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையே பல தொலைபேசி அழைப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போதிலும், அமைதித் திட்டத்திற்கான அடிப்படை குறித்து விரிவான விவாதங்கள் எதுவும் இல்லை என்று ரஷ்யத் தலைவர் நம்புவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான புட்டினின் நிபந்தனைகளில் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி, உக்ரேனிய நடுநிலைமை மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீதான வரம்புகள், அங்கு வசிக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் பிராந்திய ஆதாயங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்கவும் புட்டின் தயாராக உள்ளார், இருப்பினும் இது எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் தனது கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீதான ரஷ்யாவின் இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், நேட்டோவில் சேர விரும்புகிறதா என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை கெய்வ் தக்க வைத்துக் கொள்கிறது என்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கிரெம்ளின் சிந்தனையை நன்கு அறிந்த இரண்டாவது வட்டாரம், மேற்கத்திய அழுத்தத்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார இழப்புகளையும் விட மொஸ்கோவின் இலக்குகளை புட்டின் மிக முக்கியமானதாகக் கருதினார் என்றும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக சீனா மற்றும் இந்தியா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றும் கூறியது. போர்க்களத்தில் ரஷ்யாவின் கை மேலோங்கியுள்ளதாகவும், போரை நோக்கிச் செல்லும் அதன் பொருளாதாரம், பீரங்கி குண்டுகள் போன்ற முக்கிய ஆயுதங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை ஏற்கனவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1,415 சதுர கிமீ (546 சதுர மைல்) முன்னேறியுள்ளது என்று உளவுத்துறை வரைபடமான DeepStateMap இன் தரவுகள் தெரிவிக்கின்றன. ஷ்யா தற்போது கிரிமியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, அதை 2014 இல் இணைத்துக் கொண்டது. மேலும் லுஹான்ஸ்க் கிழக்குப் பகுதி முழுவதையும், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் 70% க்கும் அதிகமான பகுதிகளையும், கார்கிவ், சுமி மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான மோதலான ரஷ்ய – உக்ரேன் போரில் 1.2 மில்லியன் மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தங்கள் இழப்புகளுக்கான முழு புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை. மேலும் மொஸ்கோ மேற்கத்திய மதிப்பீடுகளை நிராகரிக்கின்றது. போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பின்னர் 2025 ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப், ரஷ்யாவுடனான உறவுகளை சரிசெய்ய முயன்று வருகிறார். புட்டினுடன் குறைந்தது ஆறு முறை தொலைபேசியில் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439332

புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்

2 months ago
மிக நல்ல ஒரு செய்தி வாசிப்பாளர் அவரின் செய்தி வாசிப்பு தொனியே வித்தியாசமானது , நிதர்சனத்தின் ஒளி வீச்சில் ஓயாத அலைகள் தொகுப்பில் இவரின் குரல் வழியே காட்சிகள் விரியும் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தினருக்கு

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

2 months ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 10 / 'மே பௌர்ணமி நாளில் விஜயன் இலங்கையில் தரையிறங்க முடியுமா?' புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. அதாவது, இலங்கை எனும் சிறந்த தீவு முப்பத்திரண்டு யோசனை நீளமும், பதினெட்டு யோசனை அகலமும் கொண்டது, அதன் சுற்றுப்பாதை நூறு யோசனை; அது கடலாலும், ஒரு பெரிய புதையல் சுரங்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அது ஆறுகள், ஏரிகள், மலைகள் மற்றும் காடுகளைக் கொண்டுள்ளது என்கிறது. இங்கு யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப் பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை, கீழே உள்ள இலங்கை வரைபடத்தில், தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது. இதுவரை, விஜயனின் வருகை, அவரது தோழர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை விவாதிக்கப்பட்டது. விஜயனைத் தொடர்ந்து, விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் தொடரும். Part: 10 / 'Can Vijaya land in Sri Lanka on May full moon day?' The Buddha died on a full moon day in the month of May. The Northeast monsoon is active in the months of November, December, January and February, see the Lanka map given below. There is no prevailing Monsoonal wind during March, April and May to assist them towards Lanka, and they would have died of de-hydration and starvation, as the ship was left to drift. There is no way that they could have turned around to reach the Western coast of India, to the ports of Suppara and Bharukaccha, as they had to wait for the South-West Monsoonal wind. Monsoonal wind changes are annual events. The South-West Monsoon would have brought them back to the place where they started. The story of Vijaya is a hoax and it is invented by the monks for their wellbeing, and to erase the trace of the aboriginal inhabitants of Lanka. The starting verse of the chapter 17 of the Dipavamsa describes Lanka as rectangular shape country. The author or the authors of the Dipavamsa never had the knowledge of the country North of Anuradhapura. See the Lanka map below with the narrowing landscape North of Anuradhapura with thicker outline. Arrival of Vijaya, his companions, and its historical relevance have been discussed so far, and the narrative about the consequent kings and the related affairs will follow. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 11 தொடரும் / Will Follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

2 months ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 10 / 'மே பௌர்ணமி நாளில் விஜயன் இலங்கையில் தரையிறங்க முடியுமா?'

புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. அதாவது, இலங்கை எனும் சிறந்த தீவு முப்பத்திரண்டு யோசனை நீளமும், பதினெட்டு யோசனை அகலமும் கொண்டது, அதன் சுற்றுப்பாதை நூறு யோசனை; அது கடலாலும், ஒரு பெரிய புதையல் சுரங்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அது ஆறுகள், ஏரிகள், மலைகள் மற்றும் காடுகளைக் கொண்டுள்ளது என்கிறது. இங்கு யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப் பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை, கீழே உள்ள இலங்கை வரைபடத்தில், தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது.

இதுவரை, விஜயனின் வருகை, அவரது தோழர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை விவாதிக்கப்பட்டது. விஜயனைத் தொடர்ந்து, விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் தொடரும்.

Part: 10 / 'Can Vijaya land in Sri Lanka on May full moon day?'

The Buddha died on a full moon day in the month of May. The Northeast monsoon is active in the months of November, December, January and February, see the Lanka map given below. There is no prevailing Monsoonal wind during March, April and May to assist them towards Lanka, and they would have died of de-hydration and starvation, as the ship was left to drift. There is no way that they could have turned around to reach the Western coast of India, to the ports of Suppara and Bharukaccha, as they had to wait for the South-West Monsoonal wind. Monsoonal wind changes are annual events. The South-West Monsoon would have brought them back to the place where they started. The story of Vijaya is a hoax and it is invented by the monks for their wellbeing, and to erase the trace of the aboriginal inhabitants of Lanka.

The starting verse of the chapter 17 of the Dipavamsa describes Lanka as rectangular shape country. The author or the authors of the Dipavamsa never had the knowledge of the country North of Anuradhapura. See the Lanka map below with the narrowing landscape North of Anuradhapura with thicker outline. Arrival of Vijaya, his companions, and its historical relevance have been discussed so far, and the narrative about the consequent kings and the related affairs will follow.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 11 தொடரும் / Will Follow


முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
புலவர், இது உங்கள் ஆதாரம்? "தமிழ் நாட்டின் பால் உற்பத்தி குறைகிறது" என்றல்லவா குறைப்பட்டீர்கள்? அதற்கு ஆதாரமாக "இந்தியா உற்பத்தி செய்யும் பால் மக்களுக்குக் கிடைக்கவில்லை" என்ற ஒரு தகவலை ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு நீங்கள் எழுதியதே உங்களுக்கு மங்கலாகத் தெரிகிறதா😂? சீமான் ரீமிடம் கொடுத்து விட்ட மூளையை உடனே போய் மீட்டு கம்பீரமாக உரையாட ஆரம்பியுங்கள்! ஒவ்வொரு கருத்திலும் புதுப் புது கேள்விகளை உருவாக்காமல், தரவுகளைத் தேடி விட்டு எழுத ஆரம்பியுங்கள்!

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
நான் சில திரிகளுக்குள் வர விருப்படுவதில்லை..ஆனாலும் சில கருத்துக்களை பார்க்கும் போது அதுவும் பெண் பிள்ளைகளை வைத்திருப்போரோ இப்படி எழுதும் போது என்ன செய்வது.. சில செய்திகளை கண்டும் காணாதது போல் போவதே மேல் இது அனைவருக்கும்.. .காரணம்..யாருடைய பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டிய பெண் பிள்ளை..மற்றையது முழுப் பிழைளயும் பெற்றோரில் தான் இருக்கிறது..ஓரளவுக்கு வந்து போகும் உறவுகளை பற்றி கொஞ்சமாவது புரிந்து இருக்க வேணும்.ஏன் இவர் அடிக்கடி வாறார்....இவரது நோக்கம் என்ன...வீட்டிலிருக்கும் பிள்ளைகளோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேணும்.இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.அதை விடுத்து.....