Aggregator
விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்!
விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்!
விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழியிலே குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பெண்களின் ஆடைகளுடன் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் சர்வதேச நீதி வேண்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் புற்றுக்குள் இருந்து கொண்டு பாம்பு வந்தது போல ஜேவிபி கட்சியின் முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச கோஷமிடுகின்றனர்.
1988, 1989 களில் எந்த காரணமும் இல்லாமல் ஜேவிபினர் போராடினார்கள். தமிழ் மக்கள் போராடியதற்கு காரணம் இருக்கிறது. ஜேவிபி போராடியதற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும். எத்தனை கொலைகளை செய்தீர்கள்? விமல் வீரவன்ச இங்குள்ள புதைகுழிகளில் இருந்து வரும் எலும்புக்கூடுகள் தொடர்பாக இன்று பல கதைகளை கூறுகிறார்.
எல்லாவற்றையும் மூடி மறைத்து தாங்கள் கொலைகளை செய்து முடித்துவிட்டு தேவையில்லாமல் பல விடயங்களை விமல் வீரவன்ச கதைக்கிறார். விமல் வீரவன்ச தனது சொந்த வீட்டிலேயே வேலைக்காரியை கொலை செய்தவர்.
கொலைகாரன் விமல் வீரவன்சவை கைது செய்து அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை யாழ்ப்பாணத்தில் இருந்து நான் வலியுறுத்துகிறேன்.
அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீங்கள் அரசாங்கம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. இந்த நேரத்தில் செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக விமல் வீரவன்ச அறிக்கை விட என்ன காரணம்?
ஜேவிபியுடன் சுற்றிவிட்டு பின்னர் ராஜபக்ஷ பக்கம் பாய்ந்து சென்றார். அடுத்தவர்களை பயமுறுத்தி தன்னை விளம்பரப்படுத்தி தனது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக் கொண்டு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு திரிகின்றார்.
கடந்த காலங்களில் அவர் செய்த ஒரே ஒரு கொலை மட்டுமே வெளியில் வந்தது. ஆனால் இன்னும் எத்தனை நடந்தது என்று தெரியாது. இந்த தருணத்தில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்!
இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்!
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே இயங்கும் EK650/651 விமானங்களில் அதன் மறுசீரமைக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானங்களை பயன்படுத்தவுள்ளது.
இதன் மூலம், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட இரண்டாவது தினசரி விமானமாக எமிரேட்ஸ் மாறும்.
தற்போது, எமிரேட்ஸின் விரிவான வலையமைப்பில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் பிரீமியம் எகானமியை வழங்குகின்றன.
பிரீமியம் எகானமியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் கொழும்புக்கான பயணங்களைத் திட்டமிடுபவர்கள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்து, உயர்ந்த பயண அனுபவத்தையும் அனுபவிக்கலாம்.
எமிரேட்ஸின் EK650 விமானம் துபாயிலிருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பு வந்தடைகிறது.
திரும்பும் விமானம் EK651 கொழும்பிலிருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு துபாய் சென்றடைகிறது.
(துபாய் நேரம்)
பிரீமியம் எகானமி டிக்கெட்டுகளை emirates.com, எமிரேட்ஸ் ஆப் அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர்கள் மூலமாகவும், எமிரேட்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
15 மில். டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
15 JUL, 2025 | 05:08 PM
சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுக்கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் (Prof. Hans Keirstead) மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாலி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கையில் சுகாதாரம், விவசாயம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல துறைகளிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளிலும் சோதனை செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான நீண்டகால தேவை காணப்படுகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, இன்றைய தினம் இலங்கைக்கு ஒரு விசேட நாள் என்றும், ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உடுகமசூரிய வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுடன் இணைந்து பிரதான ஆய்வகமாக செயல்பட்டு பல்வேறு துறைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை இந்த ஆய்வகத்தின் ஊடாக உறுதி செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகிறது.
STEMedicalஇன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட் குறிப்பிடுகையில், ஆய்வகத் திறனை அதிகரிப்பது போன்ற அறிவியல் துறையின் வளர்ச்சித் தேவைகளை அடையாளம் காண இந்தத் துறையின் பரந்த பார்வையைக் கொண்ட இலங்கையில் தற்போதைய தலைமைத்துவம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் மருத்துவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் நாட்டிற்கு பல நன்மைகளைத் தரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பொருளாதார நிபுணர்களின் கவனமும் நாட்டிற்கு ஈர்க்கப்படும் என்றும், மருந்துகள் போன்ற பொருட்களை நம் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் அங்கீகாரத்திற்காக இங்கு அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கியர்ஸ்டெட் கூறினார்.
அமெரிக்காவில் STEMedical நிறுவன ஸ்தாபகரான பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை உயிரணு (Stem cells) நிபுணர் ஆவார். அவர் அமெரிக்காவில் மீளுருவாக்கம் மருத்துவத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முனைவோராகவும் உள்ளார்.
தற்போது உலகளாவிய மனித நோயெதிர்ப்புத் திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகிக்கும் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், டிஸ்கவர் சஞ்சிகையில் உலகின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித செனரத் யாப்பா, அமெரிக்காவின் STEMedical நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி நிஸ்டர் கேப்ரியல் லோன் (Dr. Nistor Gabriel Loan) உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்
பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்.
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை இழந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த ஆர்ப்பாட்டம் பங்கேற்றிருந்தார்.
இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
கடந்த மாதம் மேல்சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணியின் முக்கிய ஆதரவுடன் உறுதி செய்யப்பட்டது.
ஜூன் மாதம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ஆளும் கூட்டணியால் முன்மொழியப்பட்ட நான்கு வேட்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.
மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுடன் திமுக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், புகழ்பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரை நியமித்தது. திமுக தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது மாநில சட்டமன்றத்தில் கூட்டணியின் வலுவான பெரும்பான்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (AIADMK), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் எம். தனபால் ஆகியோரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏனெனில் அதன் தொடக்கத்திலிருந்து கட்சியிலிருந்து ஒருவர் மாநிலங்களவையில் நுழைவது இதுவே முதல் முறை.
கமல்ஹாசன் மாநிலங்களவையில் உறுப்பினராக இணைந்திருப்பது, தேசிய சட்டமன்ற விவாதங்களுக்கு ஒரு புதிய குரலைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவரது உறுப்புரிமை மேல்சபையில் திமுக தலைமையிலான கூட்டணியின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும்.
முஸ்லிம் சமூகத்தின் இழப்புகளை முறையாக ஆவணப்படுத்துவது யார்?
இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூகங்களையும் பாதித்தது. இந்த யுத்தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புக்களும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பெரும்பாலும் போதியளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்பது கவலை தரும் உண்மையாகும். உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள், பள்ளிவாசல் படுகொலைகள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், குருக்கள்மடம் படுகொலை என பல சம்பவங்கள் முஸ்லிம்களின் வரலாற்றில் ஆழமான தழும்புகளை ஏற்படுத்தியுள்ளன.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும், இந்த இழப்புக்கள் பற்றிய முழுமையான பதிவுகள், ஆவணங்கள் எல்லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என்பதே யதார்த்தமாகும். ஆய்வாளர் மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்கள் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆவணப்படுத்துவதில் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும், அவரது மறைவிற்குப் பின்னர், இந்த முக்கியமான பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. இது ஒரு பாரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையமும் இதுபோன்ற பணிகளை முன்னெடுத்த போதிலும் சமூகத்திடமிருந்து போதியளவு ஆதரவுகள் கிடைக்கப் பெறாததால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இளம் ஆய்வாளர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் போர் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அஷ்ரபின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய விடயப் பரப்புகளில் அண்மையில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும். இத்தகைய ஆய்வுகள் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினர் தமது கடந்த காலத்தை புரிந்துகொள்வதற்கும் அத்தியாவசியமானவை.
ஆனால், ஒரு சில தனிநபர்களின் முயற்சியால் மட்டும் இந்தப் பாரிய பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாது. இலங்கை முஸ்லிம்கள் யுத்தத்தில் இழந்தவை குறித்து முழுமையான, விரிவான ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தலை மேற்கொள்வதற்கு ஒரு நிரந்தரமான ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் மையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்த மையம், சாட்சியங்களைப் பதிவு செய்தல், ஆதாரங்களைச் சேகரித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் சமூகத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அனுபவங்கள், இழப்புக்கள் மற்றும் அவர்களின் கலை, கலாசாரப் பாரம்பரியங்கள் குறித்து பல ஆய்வுகள், ஆவணப்படங்கள், நூல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு சமூகத்தின் நினைவுகளைப் பாதுகாப்பதற்கும், நீதி கோருவதற்கும் எதிர்காலத்திற்குப் பாடமாக அமைவதற்கும் மிகவும் அவசியமாகும். தமிழ் சமூகம் மேற்கொண்ட இத்தகைய முயற்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு, முஸ்லிம் சமூகமும் தமக்கான ஒரு ஆவணப்படுத்தல் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன ரீதியான அரசியல் கட்சிகள், இந்த முக்கியமான ஆவணப்படுத்தல் பணியில் கவனம் செலுத்தத் தவறிவிட்டன என்பது கசப்பான உண்மையாகும். அரசியல் அதிகாரத்திற்காகவும் பதவிகளுக்காவும் போராடிய இந்தக் கட்சிகள், சமூகத்தின் நீண்டகால வரலாற்றுப் பதிவுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்திரமான திட்டத்தை வகுக்கவோ, நடைமுறைப்படுத்தவோ தவறிவிட்டன. மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழகம் கூட இது விடயத்தில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும்.
இது ஒரு சமூகமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தோல்வியாகும். அரசியல் தலைவர்கள் குறுகிய கால நலன்களைத் தாண்டி, நீண்ட கால நோக்கில் சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சிவில் சமூக அமைப்புக்களும் இந்த விடயத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகக் கருதி செயற்பட வேண்டும். இத்தகையதொரு மையத்தை ஸ்தாபிப்பதற்கும், அதற்குத் தேவையான நிதியையும், மனித வளத்தையும் வழங்குவதற்கும் அவர்கள் முன்வர வேண்டும். கடந்த காலத்தை ஆவணப்படுத்துவது என்பது வெறும் கடந்த காலத்தைப் பதிவு செய்வது மட்டுமல்ல; அது எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஒரு முக்கியமான பாடமாகும்.
முஸ்லிம் சமூகம் யுத்தத்தில் இழந்தவற்றின் முழுமையான ஆவணப்படுத்தல் என்பது ஒரு நீதிசார்ந்த கோரிக்கையுமாகும். இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அங்கீகரிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதற்கும் உதவும். எனவே, உரிய தரப்பினர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.- Vidivelli
அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; 09 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து; 09 பேர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3
15 JUL, 2025 | 03:54 PM
அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள்.
"நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்," "நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்." . "என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது " என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார்.
50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
70 வயது வயோதிப பெண்ணும், 77 வயது ஆணும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.