Aggregator

ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!

2 months ago

ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!

adminJuly 15, 2025

Attack.jpg

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.07.25) ஜேர்மன் நாட்டில் இருந்து சென்ற நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து, மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்னர்.

https://globaltamilnews.net/2025/217868/

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

adminJuly 14, 2025

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம்  சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம்  காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/217863/

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months ago
பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன். இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள். மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன. இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

2 months ago
ஈரோடு கிழக்கில் இரு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் கூட டெபாசிட்டை தக்க வைக்க முடியாமல் நாதக அவமானத்தோல்வி அடைந்தபோது… அதை வெற்றி என்றும், வாக்குவீத உயர்வு, 2ம் பெரிய கட்சி எனவும் நீங்களும் இன்னும் பலரும் கஞ்சா கப்ஸா கதைகளை அவிட்டு விட்டீர்கள் அல்லவா? அந்த திரியில், 2026 இல் சீமான் தனித்து நின்று 15% பெறமாட்டார் என பந்தையம் கட்ட அழைத்தேன். அத்தனை சீமானியர்களும் கூண்டோடு எஸ் (நீங்களும்)…. சீமானின் மீது விமர்சன பார்வை உள்ளவரான வாத்தியார் அண்ணா மட்டும் பந்தயம் கட்டினார்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
ஆனால், மூன்றாவது பெரிய கட்சிக்கு வைப்புத் தொகையே கிடைக்காத ஒற்றையெண் வீதம் அல்லவா வாக்கு வீதம்? அதனால் கருத்துக் கணிப்பில் கூட பெரும்பாலும் உள்ளடக்குவதில்லை என நினைக்கிறேன். அதிருக்கட்டும். அந்த புள்ளி விபரம், பால் உற்பத்தி பற்றி என்ன நிலைவரம்? எஸ்கேப் தானா?

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை

2 months ago
இதில் பொலிசார் திறமையாக செயற்பட்டு மூன்று கொலையாளிகளும் தப்பி செல்ல விடாது அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டது நல்ல விடயம். வீட்டுக்கு விருந்தினர்களாக வந்து அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இருவரின் மனைவிமார் கையால் பிஸ்கட் தேனீரும் வாங்கி குடித்துவிட்டு அவர்களின் கணவரை படுகொலை செய்த நம்பிக்கை துரோகிகளான அயோக்கியர்களை சுட்ட நிசாங்க பாராட்டுக்குரியவர்

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

2 months ago
அரை மணித்தியாலம் எதிர்ப்புப் போராட்டம் இரண்டரை நிமிடம் பேச்சு.கருநாய்நிதி கூட 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் செய்தார்.2019 இல் திமுக எதிர்ப்பு என்ற போர்வையில் கமல் இறக்கபட்டார் 2024 இல் திமுகவிற்குள் ஐக்கியமாகிவிடடார்.விஜை எவ்வளவு காலம்?திமுக எதிர்ப்ப்பு வாக்குகள் ஓரணிக்குள் போகாமல் சிதறடிக்கபட்டு திமுகவுக்கு சாதகமான சந்தர்பதை திட்டமிட்டு அரங்கேற்றுகிறார்கள்.மக்கள் நலக்கூட்டணி 2.0.ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள். அது என்ன சவால்?அறியத்தாருங்கள்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
அண்ணா, இந்திய தேர்தல்களின் மீது மொத்தமாகவே எங்களுக்கிருப்பது ஒரு அவநம்பிக்கையையே என்றால், இங்கு பலதும் அர்த்தங்களை இழந்து போய்விடுகின்றன. இந்த அவநம்பிக்கை இருக்குமானால், சீமான் போன்று பணபலமும், கூட்டணிப் பலமும் இல்லாமல் அரசியல் களத்தில் நிற்பவர்கள் எதையுமே எக்காலத்திலும் சாதிக்க முடியாது, அடைய முடியாது என்ற முடிவை இன்றே எடுத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம். சீமான் போன்றோர் மிகத் தீவிர இடதுசாரிகள் (நக்சலைட்டுகள்) போன்ற ஒரு அமைப்பை அல்லது ஒரு இயக்கத்தை நடத்தாமால், மாறாக ஜனநாயக வழியிலான தேர்தல்களில் நம்பிக்கை உள்ள ஒரு அரசியல் கட்சியை நடத்துவதன் பின்னணியே அவர்களுக்கும், இங்கு பெரும்பாலானோருக்கும் இந்திய தேர்தல்களில் உள்ள நம்பிக்கையே காரணம். பணபலத்தின் மூலம் வென்றிடலாம் என்றால், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் பாஜக தோற்றிருக்கவே முடியாது. ராமர் கோவிலைக் கட்டி, அதைத் தொடர்ந்து அந்த தொகுதியையே வைகுண்டம் போன்று ஆக்கினார்கள் ஆளும் பாஜகவினர். ஆனாலும் அங்கு தோற்றார்களே................... எந்த பணபலமும் இல்லாத ஆம் ஆத்மி டெல்லியிலும், பஞ்சாப்பிலும் வென்று ஆட்சியமைத்தார்கள். ஆம் ஆத்மி ஒரு சேர பாஜகவையும், காங்கிரஸையும் எதிர்த்து நின்று வென்று காட்டினார்கள். மக்கள் ஆம் ஆத்மியை, அதன் கொள்கைகளை, அங்கிருந்த தலைவர்களை நம்பினார்கள். எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத ஆளுமையின் மறைவின் பின்னர், தமிழ்நாட்டில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறியே ஆட்சி அமைத்தன. ஆளும் கட்சிகளின் பணபலத்தாலோ அல்லது மோசடிகளாலோ தங்களது ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்த அரசுக்கள் அடுத்த தேர்தல்களில் மிகக் கடுமையான தோல்விகளைக் கூட தமிழ்நாட்டில் சந்தித்திருக்கின்றன. பணபலத்தையும், ஆளும் நிர்வாகத்தின் மோசடிகளையும் மீறி, இந்தியாவில் மக்களின் தீர்ப்புக்கு இன்னமும் இடமிருக்கின்றது. பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் ஒரு சார்வாதிகார அல்லது இராணுவ நிர்வாகம் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு அதன் மக்களும், தேர்தல்களும் ஒரு பிரதான காரணம். தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக என்று மூன்றே இன்று பிரதானமாக இருக்கின்றது. மற்றைய கட்சிகள் ஏதோ சில வகைகளில் ஒரு சாதியக் கட்சி போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை மூன்றுக்குமே ஆட்சியமைக்கும் தகமையும், சாத்தியங்களும் இருக்கின்றன. இன்றிருக்கும் பாமக, நாதக, விசிக போன்ற கட்சிகளுக்கு அந்த தகமை கிடையாது, சாத்தியங்களும் இல்லை. இன்று உலகின் சில நாடுகளில் அந்த நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தங்களையே பாதிக்கப்பட்டவர்களாக எண்ணிக் கொள்ளும் ஒரு போக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது, உதாரணம்: அமெரிக்காவில் வெள்ளையின மக்கள், இந்தியாவில் இந்துக்கள், இலங்கையில் சிங்கள மக்கள். இது அங்கங்கே இருக்கும் சில அரசியல் தலைவர்களாலும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளாலும் பிரச்சாரங்கள் ஆக்கப்படுகின்றன. இந்தியாவில் பாஜக, அமெரிக்காவில் மஹா குழுமம், இலங்கையில் மஹிந்தவின் பொதுஜன பெரமுன என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள். இவை கூட மக்களின் வாக்குப் பலத்தால், ஜனநாயக தேர்தல்களின் ஊடாக இல்லாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவநம்பிக்கையுடன் எதையும் ஆரம்பிக்க முடியாது. நம்பிக்கையுடன் ஆரம்பித்து தோற்றுப் போகலாம்.

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months ago
இன்று காசாவில் பலஸ்த்தீனர்களைக் கொல்வதால் யூத இனம் மீது திட்டமிட்ட இனவழிப்பை நடத்தி 8 மில்லியன் யூதர்களைக் கொன்று ஹிட்லர் செய்தது சரியென்று நீங்கள் கூறுவீர்களாகவிருந்தால், இன்று உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் படுகொலைகளைப் பார்க்கும்போது அதே இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரினால் 27 மில்லியன் ரஸ்ஸியர்கள் கொல்லப்பட்டதும் சரியென்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று ஆகிறது. காசாவில் இஸ்ரேல் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியாதோ அவ்வாறே உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும் நியாயப்படுத்த முடியாது. 8 மில்லியன் யூதர்களை கொன்றது சரியென்றால், 27 மில்லியன் ரஸ்ஸியர்களைக் கொன்றதும் சரியே! (8 மில்லியன் யூதரை ஹிட்லர் கொன்றான் என்று அகமகிழும் குமாரசாமியண்ணை, அதே ஹிட்லர் நீங்கள் ஆதரிக்கும் ரஸ்ஸியர்களில் 27 மில்லியனைக் கொன்றான் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். அதிலும் 10 மில்லியன் ரஸ்ஸியர்களை இனவழிப்பு எனும் நோக்கத்திலேயே கொன்றான் என்று கூறப்பட்டிருக்கிறது.)

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

2 months ago
சீமானை தோற்கடிக்க ஆள் வேற இறக்கவேணும் என நினைக்கிறியள் பாருங்கோ அண்ணை…. இதனால்தான் உங்கள் தமிழக அரசியல் புரிதலை யாழ்களமே கொண்டாடுகிறது.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
மிக சரியான பதில். இப்போ…. இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். கஜனோ, விக்கியோ, லுச்சா டொக்டரோ, மாம்பழமோ இப்படி சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். 16 வருடமாக ஏன் ஒரே இடத்தில் நின்று சுத்துகிறோம் என்பதற்கான விடை இதுவே.