Aggregator

இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!

2 months ago

◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!!

வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!

வெளியே ஒரு விசுவாசமான நாய்.

◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..

ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...

பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள்

◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....

சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்..

◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!

அடுத்து ஒரு புளியமரம்...!!!

◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த

ஒரு அகத்திமரம்..

◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...

◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!

◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .

தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.இவை மட்டுமே போதும்...

எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.

■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!

நன்றி .........முக நூல் .

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months ago
அதே தனிநபர் அறமில்லாத தன்மை மட்டுமே காரணமில்லை என்பதைத்தான் சொல்கிறேன். அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப் படவேண்டியவர்களே. நான் இந்த வங்குரோத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். ஆனால், அதை எப்படிச் சொன்னாலும், மீண்டும் மீண்டும் சஞ்சீவும் மனைவியுமே காரணம் என்று இங்கு ஓடிக் கொண்டிருக்கு.

எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே

2 months ago
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை இன்னும் இது இருக்குதே என்று நினைவில் உருகி மெல்லிதாக தொட இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன சூட்கேசின் அடுத்த பக்கத்தில் அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால் 'என்னப்பா, அங்கே சத்தம்............ ஏதோ ஓடுதோ.................' 'காலில் தடக்கி ஏதோ சாமான் உருளுது..................' புலியையே முறத்தால் அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள் நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது சிஞ்ஞோரே.

எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே

2 months ago

எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
----------------------------------------------

large.Attic.jpg

என்ன சத்தம் அது

எலியாக இருக்குமோ

இரவிரவாக விறாண்டியதே என்று

பல வருடங்களின் பின்

பரணுக்குள் ஏறினேன்

எலி என்றில்லை

ஏழு எட்டு டைனோசர்கள் 

அங்கே நின்றாலும்

கண்டே பிடிக்க முடியாத

ஒரு காடு அது என்று

அங்கே நான் விக்கித்து நிற்க

'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார்

காடு வளர்த்து

எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய

என்னுடைய கங்காணி

முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த

வாழ்க்கையின் அடையாளம் கூட

அங்கே தெரிந்தது

பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும்

இந்தப் பூகம்ப தேசத்தில்

தலைக்கு மேல கத்தி

பரண் தான் போல

மொத்தத்தையும் அள்ளி விற்றாலும்

சில பணம் கூட தேறாது

அள்ளுகிற கூலி நூறு

அது அவ்வளவும் நட்டம்

ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை

இன்னும் இது இருக்குதே என்று

நினைவில் உருகி

மெல்லிதாக தொட

இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன

சூட்கேசின் அடுத்த பக்கத்தில்

அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால்

'என்னப்பா, அங்கே சத்தம்............

ஏதோ ஓடுதோ.................'

'காலில் தடக்கி

ஏதோ சாமான் உருளுது..................'

புலியையே முறத்தால் 

அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள்

நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது 

சிஞ்ஞோரே.

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

2 months ago
எனக்குச் சரியாக நினைவில் இல்லை, முந்தி இலங்கையில இறுதி யுத்தம் நடந்தபோது அமெரிக்காவிலை பராக் ஹுசைன் ஒபாமா என்றொரு முகமதியர் அதிபராக இருந்தவர். அவர் அதிபராக வந்து ஒரு வருடம் முடியுறதுக்குள்ள அவர் செய்த அளப்பரிய சேவைகளுக்காக சமதானத்துக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைச்சது!

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

2 months ago
இலங்கையில் நடந்த இனக்கலவரங்களுக்கு முக்கிய காரணங்களை அலசி ஆராய்ந்தாலே பல விடைகள் கிடைத்து விடும். இது தமிழர்களுக்கு மட்டுமே எதிரான இனக்கலவரம். இதில் முஸ்லீம்கள் அடங்கவில்லை. இனக்கலவரத்தினால் அவர்கள் இடம்பெயரவுமில்லை. அப்படி இருக்கும் போது இவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது? இனத்திலும் ஒன்று சேர மாட்டார்கள். மொழியிலும் ஒன்று சேர மாட்டார்கள். மதத்தை மட்டும் வைத்து தனி அலகு கேட்பவர்களை இந்த உலகம் நிகாரிக்க வேண்டும்.

புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா

2 months ago
இங்கு செய்தி எல்லாம் கூட்டெழுத்தில் இருப்பதனால் வாசித்து கொண்டே இருக்கிறேன். இன்னமும் முடிக்கவில்லை. கூட்டெழுத்து படித்தவர்களுக்கு மட்டுமே படங்களுக்கு இடையில் உள்ள செய்து புரியும்.

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு!

2 months ago
இந்த பாலியல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தன் அரசியல் பலத்துடன் காப்பாற்ற முனைந்த முன்னாள் கல்வி,சிறுவர்,பெண்கள் இராஜாங்க அமைச்சரான வியஜகலா மகேஸ்வரன் அவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். விஜகலாவை மறந்தவர்களுக்கு இந்த படம்.

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்

2 months ago
தாலி கட்டிய மனைவியையே நிர்வாண நிலையில் பார்க்க இருட்டை தேடிய மண்ணில்....மாணவிகள் நிர்வாணமாக நிற்கும் படங்கள் எடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் பெருகிவிட்டது. ☹️

தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!😱

2 months ago
தனியே ஈழத்தமிழர் மட்டும் கலாச்சாரத்தாலும் போதை பாவனைகளாலும் தடம் மாறவில்லை. போதை பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.இதை தடுக்க அரசுகளும் காவல்துறைகளும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்கள் தாமாக திருந்தினாலேயே ஒழிய..... போதை பாவனையை முற்றாக ஒழிக்க முடியாது என்பது என் கருத்து.

புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா

2 months ago
நான் வழமைக்கு மாறாக பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு படங்களை பார்த்தேன்.வழமை போல் செய்தியை வாசிக்கவில்லை. 😎