Aggregator
கனடாவில் இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை
Nov 7, 2025 - 08:59 AM
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார்.
கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார்.
அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. அவர் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (07), அஷ்வினி விக்கிரமசிங்க (04), ரினியானா விக்கிரமசிங்க (02), கெலி விக்கிரமசிங்க (02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
இறைவனிடம் கையேந்துங்கள்
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
இரசித்த.... புகைப்படங்கள்.
இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!
இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!
◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!!
வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள்
◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்..
◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த
ஒரு அகத்திமரம்..
◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...
◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!
◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .
தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.இவை மட்டுமே போதும்...
எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.
■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!
நன்றி .........முக நூல் .
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
----------------------------------------------

என்ன சத்தம் அது
எலியாக இருக்குமோ
இரவிரவாக விறாண்டியதே என்று
பல வருடங்களின் பின்
பரணுக்குள் ஏறினேன்
எலி என்றில்லை
ஏழு எட்டு டைனோசர்கள்
அங்கே நின்றாலும்
கண்டே பிடிக்க முடியாத
ஒரு காடு அது என்று
அங்கே நான் விக்கித்து நிற்க
'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார்
காடு வளர்த்து
எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய
என்னுடைய கங்காணி
முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த
வாழ்க்கையின் அடையாளம் கூட
அங்கே தெரிந்தது
பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும்
இந்தப் பூகம்ப தேசத்தில்
தலைக்கு மேல கத்தி
பரண் தான் போல
மொத்தத்தையும் அள்ளி விற்றாலும்
சில பணம் கூட தேறாது
அள்ளுகிற கூலி நூறு
அது அவ்வளவும் நட்டம்
ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை
இன்னும் இது இருக்குதே என்று
நினைவில் உருகி
மெல்லிதாக தொட
இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன
சூட்கேசின் அடுத்த பக்கத்தில்
அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால்
'என்னப்பா, அங்கே சத்தம்............
ஏதோ ஓடுதோ.................'
'காலில் தடக்கி
ஏதோ சாமான் உருளுது..................'
புலியையே முறத்தால்
அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள்
நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது
சிஞ்ஞோரே.