Aggregator

திருவாரூர்: 'மலம் கலந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால்...' - அரசுப் பள்ளி சமையலர்கள் நேரில் கண்டது என்ன?

2 months ago

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

படக்குறிப்பு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன்

பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது?

திங்கள் கிழமை (ஜூலை 14) காலை 7 மணியளவில் காலை உணவு தயாரிப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் கார்த்திகா, பிரியா ஆகியோர் வந்துள்ளனர்.

"உள்ளே நுழையும்போதே உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன" எனக் கூறுகிறார், கார்த்திகா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து காய்களையும் பறித்துக் கீழே வீசியிருந்தனர். அங்கிருந்த குடிநீர் குழாய்களையும் உடைத்திருந்தனர். இதைப் பார்த்து பயந்து போய் வெளியில் வந்தோம்," என்கிறார்.

பள்ளி வளாகத்துக்குள் அசாதாரண சூழல் நிலவியதால், ஊர் மக்களில் சிலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். "சமையல் அறைக்கு வெளியில் வாழை இலையில் மசாலாவை போட்டு பிரட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. உடும்பு அல்லது கீரியைச் சமைத்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகா.

பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட ஊர் மக்கள், சமையலறைக் கதவை உடைத்து சிலர் பயன்படுத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

'தற்செயலாக உள்ளே பார்த்தேன்'

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

"சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்திவிட்டுச் சென்றது. அவர்கள் சென்ற பிறகு குடிநீர்த் தொட்டியின் முன்பு உடைக்கப்பட்ட குழாய்களைப் பார்த்துவிட்டு, தற்செயலாக குடிநீர்த் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்" எனக் கூறுகிறார், காரியாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான கோ.சி.மணி. இவரது மகள் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள கான்கிரீட் சுவற்றின் மீது குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

"நீர் வெளியேறும் குழாய் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஐந்து தேங்காய்கள் உரிக்கப்படாமல் கிடந்தன. ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அதில் மனித மலம் இருந்ததைக் கண்டேன்" எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

"உடனே காவல்துறையை மீண்டும் அங்கு வரவழைத்தோம்" எனக் கூறும் அவர், "காலையிலேயே இதைக் கவனித்துவிட்டதால் குழாயைச் சரி செய்து நீரைத் தொட்டிக்குள் நிரப்பும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அசுத்தம் கலக்கப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் குழந்தைகள் நீரைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறை விசாரணை தீவிரம்

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

இதையடுத்து, திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பள்ளியில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றை நோக்கி மோப்ப நாய் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரிடம் திருவாரூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

"பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உடும்பு மற்றும் கீரியைப் பிடிப்பதற்காக கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அந்தக் கூண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த சாக்குப் பையில் கீரியின் உரிக்கப்பட்ட ரோமங்கள் இருந்தன" எனக் கூறுகிறார், கோ.சி.மணி.

சமையல் கூடத்தில் உள்ள சிலிண்டர் மூலம் கீரியை நெருப்பில் வாட்டி சுட்டு சமைத்துள்ளதாகக் கூறும் அவர், "சமையல் அறையைப் பயன்படுத்தி சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், மனித மலம் கலக்கப்பட்டதை ஏற்க முடியாது" என்கிறார்.

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

'மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்'

இதே கருத்தை முன்வைக்கும் சமையலர் கார்த்திகா, "ஒரு குழாய் விடாமல் அனைத்தையும் உடைத்துவிட்டனர். அந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறும் அவர், அதில் இருவர் பள்ளிக்கு அருகிலும் இருவர் பக்கத்து தெருவிலும் வசிப்பவர்ளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கி மிக அராஜகமாக செயல்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்கிறார்கள். சாதிரீதியாக நடந்திருக்குமா எனத் தெரியவில்லை," எனவும் அவர் கூறினார்.

'என்ன கோபம் எனத் தெரியவில்லை'

திருவாரூர், அரசுப் பள்ளி, குடிநீர்த் தொட்டி

பட மூலாதாரம்,BBC TAMIL

மேலும், "குடிபோதையில் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், நான்கு குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு, தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கும் அளவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை," என்கிறார் கார்த்திகா.

திட்டமிட்டே இதைச் செய்ததாகப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறும் கார்த்திகா, "தேங்காய்களைப் பறித்து வீசியதோடு இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்?" எனவும் கேள்வியெழுப்பினார்.

வரும் நாட்களில் பள்ளியில் காலை உணவு தயாரிப்பதற்குத் தனியாக வந்து செல்வதற்குத் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததால், பள்ளி ஆசிரியர் அன்புச்செல்வியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பள்ளி கட்டடத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. தண்ணீர்த் தொட்டியை மாற்றிவிட்டோம்" எனக் கூறினார்.

காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தான் வந்து பத்து மாதங்களே ஆகியிருப்பதாகக் கூறும் அன்புச்செல்வி, "இதற்கு முன்பு சிலர் தேங்காய்களைப் பறித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" என்கிறார்.

மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்

குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் துணை காண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்" எனக் கூறினார்.

பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், "என்ன நோக்கத்திற்காகச் செய்துள்ளனர் எனத் தெரியவில்லை. சாதிரீதியான காரணம் எதுவும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்" என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வைக்குமாறு கூறியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rp86n2gjpo

திருவாரூர்: 'மலம் கலந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால்...' - அரசுப் பள்ளி சமையலர்கள் நேரில் கண்டது என்ன?

2 months ago
கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன? திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். பட மூலாதாரம்,BBC TAMIL படக்குறிப்பு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது? திங்கள் கிழமை (ஜூலை 14) காலை 7 மணியளவில் காலை உணவு தயாரிப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் கார்த்திகா, பிரியா ஆகியோர் வந்துள்ளனர். "உள்ளே நுழையும்போதே உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன" எனக் கூறுகிறார், கார்த்திகா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து காய்களையும் பறித்துக் கீழே வீசியிருந்தனர். அங்கிருந்த குடிநீர் குழாய்களையும் உடைத்திருந்தனர். இதைப் பார்த்து பயந்து போய் வெளியில் வந்தோம்," என்கிறார். பள்ளி வளாகத்துக்குள் அசாதாரண சூழல் நிலவியதால், ஊர் மக்களில் சிலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். "சமையல் அறைக்கு வெளியில் வாழை இலையில் மசாலாவை போட்டு பிரட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. உடும்பு அல்லது கீரியைச் சமைத்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகா. பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட ஊர் மக்கள், சமையலறைக் கதவை உடைத்து சிலர் பயன்படுத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 'தற்செயலாக உள்ளே பார்த்தேன்' பட மூலாதாரம்,BBC TAMIL "சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்திவிட்டுச் சென்றது. அவர்கள் சென்ற பிறகு குடிநீர்த் தொட்டியின் முன்பு உடைக்கப்பட்ட குழாய்களைப் பார்த்துவிட்டு, தற்செயலாக குடிநீர்த் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்" எனக் கூறுகிறார், காரியாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான கோ.சி.மணி. இவரது மகள் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள கான்கிரீட் சுவற்றின் மீது குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. "நீர் வெளியேறும் குழாய் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஐந்து தேங்காய்கள் உரிக்கப்படாமல் கிடந்தன. ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அதில் மனித மலம் இருந்ததைக் கண்டேன்" எனக் கூறுகிறார், கோ.சி.மணி. "உடனே காவல்துறையை மீண்டும் அங்கு வரவழைத்தோம்" எனக் கூறும் அவர், "காலையிலேயே இதைக் கவனித்துவிட்டதால் குழாயைச் சரி செய்து நீரைத் தொட்டிக்குள் நிரப்பும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அசுத்தம் கலக்கப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் குழந்தைகள் நீரைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்" எனவும் குறிப்பிட்டார். காவல்துறை விசாரணை தீவிரம் பட மூலாதாரம்,BBC TAMIL இதையடுத்து, திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பள்ளியில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றை நோக்கி மோப்ப நாய் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரிடம் திருவாரூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. "பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உடும்பு மற்றும் கீரியைப் பிடிப்பதற்காக கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அந்தக் கூண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த சாக்குப் பையில் கீரியின் உரிக்கப்பட்ட ரோமங்கள் இருந்தன" எனக் கூறுகிறார், கோ.சி.மணி. சமையல் கூடத்தில் உள்ள சிலிண்டர் மூலம் கீரியை நெருப்பில் வாட்டி சுட்டு சமைத்துள்ளதாகக் கூறும் அவர், "சமையல் அறையைப் பயன்படுத்தி சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், மனித மலம் கலக்கப்பட்டதை ஏற்க முடியாது" என்கிறார். பட மூலாதாரம்,BBC TAMIL 'மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்' இதே கருத்தை முன்வைக்கும் சமையலர் கார்த்திகா, "ஒரு குழாய் விடாமல் அனைத்தையும் உடைத்துவிட்டனர். அந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறும் அவர், அதில் இருவர் பள்ளிக்கு அருகிலும் இருவர் பக்கத்து தெருவிலும் வசிப்பவர்ளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கி மிக அராஜகமாக செயல்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்கிறார்கள். சாதிரீதியாக நடந்திருக்குமா எனத் தெரியவில்லை," எனவும் அவர் கூறினார். 'என்ன கோபம் எனத் தெரியவில்லை' பட மூலாதாரம்,BBC TAMIL மேலும், "குடிபோதையில் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், நான்கு குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு, தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கும் அளவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை," என்கிறார் கார்த்திகா. திட்டமிட்டே இதைச் செய்ததாகப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறும் கார்த்திகா, "தேங்காய்களைப் பறித்து வீசியதோடு இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்?" எனவும் கேள்வியெழுப்பினார். வரும் நாட்களில் பள்ளியில் காலை உணவு தயாரிப்பதற்குத் தனியாக வந்து செல்வதற்குத் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததால், பள்ளி ஆசிரியர் அன்புச்செல்வியிடம் பிபிசி தமிழ் பேசியது. "பள்ளி கட்டடத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. தண்ணீர்த் தொட்டியை மாற்றிவிட்டோம்" எனக் கூறினார். காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தான் வந்து பத்து மாதங்களே ஆகியிருப்பதாகக் கூறும் அன்புச்செல்வி, "இதற்கு முன்பு சிலர் தேங்காய்களைப் பறித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" என்கிறார். மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம் குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் துணை காண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்" எனக் கூறினார். பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், "என்ன நோக்கத்திற்காகச் செய்துள்ளனர் எனத் தெரியவில்லை. சாதிரீதியான காரணம் எதுவும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்" என்றார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். சம்பந்தப்பட்ட பள்ளியில் குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வைக்குமாறு கூறியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rp86n2gjpo

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

2 months ago
நான் மஹ்தியின் குடும்பத்தில் ஒருவராக இருப்பின், இறுதிவரைக்கும் இவரை மன்னிக்க மாட்டேன். கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடலை அப்புறப்படுத்த முயன்ற ஒருவர் இவர். காரணம், தனது பாஸ்போர்ட்டினை மஹ்தி வாங்கி வைத்து கொண்டு தன்னை துன்புறுத்தினார் (பாலியல் துன்புறுத்தல் அல்ல) என கூறுகின்றார்.

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
நான் இருப்பது மேற்குக்கரையில், அல்வாயன். இங்கு வெள்ளம் வருவது குறைவு அல்லது இல்லை, ஆனால் நெருப்பு எரியும். அநேகமாக ஈழப்பிரியன் அண்ணா இங்கு கலிஃபோர்னியா வரும் போது நெருப்பு எரியும் என்று நினைக்கின்றேன்...............😜.

மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2 months ago
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 15 JUL, 2025 | 05:28 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது. 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். இது தொடர்பில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220075

கருத்துக்களில் மாற்றங்கள் - 2025

2 months ago
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்! திரியில் இணைக்கப்பட்ட நா.த.க வினரின் பிரச்சார காணொளிகள் நீக்கப்பட்டன. எந்தக் கட்சியினதும் பிரச்சார காணொளிகள் இணைக்கபடல் ஆகாது என்பது கள விதி. அத்துடன் இணைக்கப்படும் காணொளிகள் மற்றும் செய்திகள் அனைத்தும் தரமான, நம்பத்தகுந்த தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...

2 months ago
இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு 14 ஜூலை, 2025 இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழக அரச தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. https://thinakkural.lk/article/318884

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

2 months ago
"35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் வாடுகின்றோம் எங்கள் செய்தியை ஜனாதிபதிக்கு சொல்வதற்காக கொழும்பிற்கு வந்தோம்" - வலிகாமத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் 15 JUL, 2025 | 05:23 PM 35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம், நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை அலட்சியம் செய்து விட்டனர். இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலையை தெரிவிப்பதற்காக கொழும்பிற்கு வந்தோம் என கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது. குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர். வலிகாமம் விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்ததாவது, பழைய வர்த்தமானியை நீக்கி எங்களின் காணிகளை எங்களிடம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். 35 வருடங்களாக இடம்பெயர்ந்து பெரும் துன்பத்தில் இருக்கின்றோம். வலிகாமத்தில் விடுவிக்கப்படவேண்டிய 2400 ஏக்கர் காணி உள்ளது அதனை உடனடியாக விட்டுதரவேண்டும். நாங்கள் மயிலிட்டியில் ஐந்து நாள் போராட்டம் நடத்தினோம், அதன்போது எந்த அரச அதிகாரியும் வந்து எங்களுடன் பேசவும் இல்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவும் இல்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு அந்த செய்தி சென்றிருக்காது என்ற காரணத்தினால் இன்று கொழும்பில் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். ஜனாதிபதிக்கு நாங்கள் எங்களின் நிலையை தெரிவிப்பதற்காகவும் அவருக்கு மகஜர் கையளிப்பதற்காகவும் இன்று இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். எங்கள் காணிகளை விரைவாக விட்டுத்தரவேண்டும், மயிலிட்டியில் 1200 ஏக்கர் காணியை விடுவிக்கவேண்டும், அதில் சிறுபகுதிதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் பயன்பாட்டின் கீழ் உள்ளது ஏனையது வெறும் காணியாக காணப்படுகின்றது. அந்தக்காணியின் உரிமையாளர்கள் வந்து வீதியில் நின்று பார்த்துவிட்டு திரும்பிச்செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. சும்மா இருக்கும் காணியை எங்களிடம் தந்தால் நாங்கள் எங்கள் காணிக்குள் சந்தோசமாக இருப்போம். இதனை நாங்கள் பல இடத்தில் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி செய்து தருவார் என்ற நம்பிக்கை இருக்கு, இதன் காரணமாகத்தான் நாங்கள் இங்கு வந்து போராடுகின்றோம். ஜனாதிபதி எங்கள் காணிகளை விரைவாக விடுவித்து தரவேண்டும். இதேவேளை இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் நாங்கள் எங்கள் காணிகளை விட்டுவிட்டு இங்கே இருக்கின்றோம், அவர்கள் தேங்காய் மாங்காய் பிடுங்குகின்றார்கள் என தெரிவித்தார். காணிகளை விட்டால்தான் நாங்கள் சீவிக்கலாம், இப்பவும் அங்கு ஒரு ஆக்களும் இல்லை எங்கள் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை என தெரிவித்த அவர் ஜனாதிபதியிடம் இதனை கேட்க போகின்றோம். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் கோவில் நாங்கள் அங்கிருந்து வெளிக்கிட்டு முப்பத்தைந்து நாற்பது வருடங்களாகின்றன என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220072

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று

2 months ago
15 ஜூலை, 2025 நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். https://thinakkural.lk/article/318947

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று

2 months ago

15 ஜூலை, 2025

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

https://thinakkural.lk/article/318947

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months ago
பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி .... பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli) தேவையான பொருட்கள்: பூரணத்திற்குப்: கடலை பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி மாவிற்குப்: மைதா – 1 கப் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – சிட்டிகை செய்முறை: 1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும். 2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும். 4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும். --- 2. தேங்காய் போலி (Coconut Poli) தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – ¾ கப் ஏலக்காய் – சிறிதளவு மைதா – 1 கப் மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு நெய் – தேவையான அளவு செய்முறை: 1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும். 3. நெய்யில் சுட்டு பரிமாறவும். --- 3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli) செய்முறை: 1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம். --- 4. சக்கரை போலி (Sugar Poli) தேவையானவை: சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் தேங்காய் (விருப்பம்) – ¼ கப் ஏலக்காய் – சிறிது செய்முறை: 1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும். --- 5. பால் போலி (Milk Poli) செய்முறை: 1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும். 2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும். --- 6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli) மாற்றம்: மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது. --- 7. பீடருட் போலி (Beetroot Poli) செய்முறை: 1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும். --- 8. சோயா போலி (Soy Poli) செய்முறை: 1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும். 2. போலி வடிவத்தில் செய்து சுடவும். --- 9. முந்திரி போலி (Cashew Poli) செய்முறை: 1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும். 2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும். --- 10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli) செய்முறை: 1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும். 2. சாதாரண போலி போலச் செய்யலாம். --- பொதுவான குறிப்புகள்: எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும். நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது. சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும். திண்டுக்கல் சமையல்

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
அதுவும் நாதக ரீம் தயக்கமேதுமில்லாமல் தங்கள் "கனவுத் தொழிற்சாலைகளில்" டிசைன் செய்து வெளியும் வீடியோக் குப்பைகளைக் கொட்டி விட்டுப் போகிறார்கள். இந்தியாவில் இருந்து வெளிவரும் TOI இல் வந்த கட்டுரையை, "உலகச் செய்திகளில் ட்ரென்ட் ஆகும் சீமான்" 😂 என்று தம்பிகள் வெளியிட ஒருவர் இங்கே இணைத்திருக்கிறார் பாருங்கள்! முகப்பில் ஒரு வெள்ளையினப் பெண் செய்தி வாசிப்பாளரின் படத்தைப் போட்டு விட்டு உள்ளே TOI இல் வந்த கட்டுரையை திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். TOI உலக ஊடகம் என்று நம்பும் சீமான் தம்பிகள் இருக்கும் வரை சீமான் காட்டில் , (அத்தோடு பாங்க் அக்கவுன்டில்) மழை தான்😎!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
சாட்டோடு சாட்டாக செந்தமிழன் சீமான் அண்ணாவின் பிரசாரக் காணொளிகள் தங்குதடையின்றி இணைக்கப்படுகின்றன!

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்.. எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகள் பரமேஸ்வரன் கோவிலில் சென்று வழிபட்டு திருநீறு அணியக் கூடிய சைவர்களுக்குத் தான் கிடைக்கும். ஏனையோர் குதிரைக் கொம்பு போல அரிது! அதே டிசைனில் முஸ்லிம்களுக்கு என்று உருவான பல்கலை தான் தென்கிழக்குப் பல்கலை. இது இலங்கையில் சாதாரணமான போக்கு. ஆனால், நீங்கள் சொல்வது போல இஸ்லாமியப் பாணி கட்டுபாடுகள் கடுமையென்பது பொய்க்கதை. இலங்கையின் ஏனைய அரச பல்கலைகள் போலவே இங்கேயும் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக சைவக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன இருக்கின்றன.