1 month 3 weeks ago
18 Sep, 2025 | 03:14 PM

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் கூறுகையில்,
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகாண தொழிற்சாலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்.
எனவே, குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கான அனு ஆவணங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்கான ஆவணங்கள் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.
ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி, வியாபார அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
https://www.virakesari.lk/article/225419
1 month 3 weeks ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 ஆகஸ்ட் 15 கார்த்திகைத் உற்சவம், ஆகஸ்ட் 17 கைலாச வாகனம் என அடுத்து அடுத்து வந்த பெரு விழாக்களில் சனநெருக்கம் கூடியதால், அவர்கள் ஒரு ஒதுக்குப்புறமாக தங்கள் தனிமையை தேடிக்கொண்டனர். கைலாச வாகன ஊர்வலத்தின் போது, அருண், இரவு உணவுக்கு, தான் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஆடம்பர 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்தான். அவள் எந்தவித தயக்கமும் இன்று புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். எனவே அவர்கள், கொஞ்சம் நல்லூரில் இருந்து தள்ளி அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அப்ப நேரம் மாலை ஆறு அரை தான். எனவே அங்கே உள்ள நீச்சல் தடாகத்தில் ஒன்று, ஒன்றரை மணிநேரம் பொழுது போக்க முடிவு செய்தான். அவளும் சம்மதிக்க, அங்கேயே மிகவும் கவர்ச்சியான அழகான ஒரு துண்டு பெண்கள் நீச்சல் உடை [one piece ladies swimming dress] வாங்க விரும்பினான். ஆனால் அவள் இரண்டு துண்டு பெண்கள் நீச்சல் உடை [two piece ladies swimming dress] தனக்கு விருப்பம் என்றும் அது தனக்கு வசதியானது என்றும் கூற, அதையே வாங்கினான். அவள் அவன் கரங்களை தன் கரங்களுடன் கோர்த்து, நெருக்கமாக நின்று உங்கள் அறையில் போய் உடை மாற்றுவோமா என்றாள். ஆனால் அது, தனிப்பட்ட அறையில், இப்போதைக்கு வேண்டாம், இங்கு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக உடை மாற்றும் இடம், நீச்சல் தடாகத்துடன் இருக்கிறது, அங்கே நாம் மாற்றலாம் என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை, அமைதியாக ஒத்துக் கொண்டாள். என்றாலும் அவள் வாய் 'கண்ணுக்கு இமை ஆடை. விண்ணுக்கு மேகம் ஆடை. மண்ணுக்குக் கடல் ஆடை. இதயத்திற்கு எண்ணங்களே ஆடை. ஆன்மாவுக்கு உடல் ஆடை. காதலிக்கு காதலன் ஆடை. அதற்கு ஏன் தனித்தனி அறை? சமணர்களில் ஒரு பிரிவினர் நிர்வாணமாக இருப்பார்கள். கேட்டால் ‘நாங்கள் நிர்வாணத்தையே உடுத்தியிருக்கிறோம் என்பார்கள். உங்களுக்கு உங்களில் முதல் நம்பிக்கை வேண்டும்' ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அவன் உள்ளம், அதைக் கேட்டு, அவன் மேல் உள்ள, அவளின் நம்பிக்கையை பாராட்டினாலும், அவன் எனோ தன் முடிவை மாற்றவில்லை. தன் கரங்களை வின்னெங்கும் விரித்து அணைத்தபடி ஆதவன் ஒருபுறம் மறைய.... மறுபுறம் வான் கடலில் மும்முரமாக நீச்சல் பழக வேகமாக வந்துகொண்டிருந்தது நிலவு.... அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக் கிடந்த நட்சத்திரங்கள் பூமிக் காதலனை காதலோடு பார்க்க.....வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் அழகான பொன் அந்தி மாலைப் பொழுது.... அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண்சிமிட்ட.... எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த கட்டிடங்களை தனக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அந்த ஹோட்டலின் நீச்சல் தடகத்துக்கு, அழகான கண்ணைக் கவரும் பகட்டான இறுக்கமான இரண்டு துண்டு நீச்சலுடையில் இளமையின் பூரிப்புடனும், சதைப் பிடிப்புடனும் விளங்கும் தனது பெரும் பகுதியை வெளிக் காட்டிய வண்ணம், ஒய்யாரமாக அன்ன நடையில் ஆரணி வந்தாள். அருண் ஏற்கனவே உடை மாற்றி அங்கே நீச்சல் உடையில் [swim suit] இருப்பதைக் கண்ட ஆரணி, அலைகளுக்குள் எழுந்த சந்திர ஒளியைப் பார்த்தது போல் திகைத்து, நீரின் பளிங்குச் சாயலில் ஒளிர்ந்த அவனது உடல்வாகு [உடற்கட்டு], அவளது இதயத்தில் இனிய அலைகளை எழுப்பி, அவளுக்குள் சொல்லமுடியாத ஈர்ப்பைத் தூண்டின. அதேநேரம், ஆரணியின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதில் பதித்துக் கொண்டு, விளக்குகள் அலை அலையாக பாய்ந்து, நீச்சல் தடாக தண்ணீரில், அது நட்சத்திரங்களைப் போல பிரதிபலிப்பதை ரசித்துக் கொண்டு இருந்த அவன், தன் கால்களை நீரில் நனைத்தபடி, ' உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கனும்' என்றான். நாம் அழகிகள் என்று நினைக்கும் பெண்களில் பலர், உண்மையில் பல பொருத்தமான ஆடைகளால், தமது அவலட்சணத்தை மறைப்பதில் சாமர்த்தியம் வாய்ந்தவர்கள் என்பதே உண்மை. அவர்களின் உண்மை அழகு எவ்வளவு என்பதை அவர்களை ஒரு நீச்சலுடையில் பார்க்கும் பொழுது தான் தெரியும்! ஆரணியோ அப்படிப்பட்ட அழகி அல்ல. உடைகள் உண்மையில் அவள் அழகை வெளிக் காட்டுவதற்குத் தடையாக இருந்தனவே அல்லாமல், துணை புரியவில்லை. அவற்றைக் குறைக்கக் குறைக்க வளவளப்பான அவளது இயற்கை மேனி வெளியே தெரிய, அவள் அழகும் அதிகரித்தது. ஆரணி தன் வண்ணமயமான நீச்சலுடையில் ஒரு தங்கப் பதுமை போல் பிரகாசித்தாள். அவளது சிற்றிடை ஒடுங்கித் தோன்ற, அவளது எலுமிச்சம் பழ நிறக் கால்களும், வசீகரமான பொற்றோள்களும் பரிசுத்தமாக விளங்கிய கழுத்தும் வெறுமையாகத் தோன்றிக் காண்பவர் கண்களைப் பறித்தன. அதில் அருண் விதிவிலக்கல்ல. அவள் அந்த உடலுடன் ஒட்டிய இரண்டு துண்டு உடையில், பெண்மையின் அழகை முழுமையாக அள்ளி வீசிக் கொண்டு, அவன் அருகில் வந்து, அவன் மேல் சாய்ந்தபடி, விளையாட்டுத்தனமாக தன் கைகளால் நீரை அள்ளி அவன் முகத்தில் தெளித்தபடி, 'நாம் ஸ்விம் [swim] பண்ணலாமா' என்று கேட்டாள். யூனிவர்சிட்டியில் [university] இருந்த காலத்தில் ஸ்விம் [swim] பண்ணியது, இன்று தான் அதன்பின் நீந்தப் போகிறேன் என்றான் அருண், பின், அவள் கைகளை பிடித்தபடி. அவள் ஷாவெரில் [shower] ஏற்கனவே உடலை நனைத்துக் கொண்டு வந்ததால், அவளின் நனைந்த தோற்றத்தை பார்த்த அருண், 'உன் ஸ்ட்ரக்சர் [structure] செம்மையாக இருக்கு .. நல்லா மெயின்டெய்ன் [maintain] பண்ணுறாய்' என்றான். 'உங்களை பார்த்தாலே தெரியுது உங்கள் நீச்சலை .. ஆனா பிராக்டிஸ் [practice] பண்ண மீண்டும் எல்லாம் சரிவரும்' என்றவள், அவன் எதிர்பாராத அந்தக் கணத்தில் அவனை நீரில் தள்ளி விட்டு விட்டு. தானும் குதித்தாள். அப்பொழுது மாலைச் சூரியன் நீச்சல் தடாகத்தில் சிவந்த பொற்கதிர்களைப் பரப்பியிருந்தது. நீருக்குள் அவள் இறங்கிய அந்த நொடியில், பவளமெனத் திகழ்ந்த அவளது சருமம், நீரின் பளிங்குச் சாயலில் மேலும் ஒளிர்ந்தது. அவள் நீந்தத் தொடங்கியவுடன், நீர் அலைகள் அவளது உருவத்தை அணைத்துப் போற்றுவது போல தோன்றியது. ஒவ்வொரு அசைவும் ஒரு இசை, ஒவ்வொரு சிரிப்பும் ஒரு கவிதை. அருகில் நீருக்குள் இருந்த அருணின் கண்கள் தன்னிச்சையாக அவளின் மீது ஈர்க்கப்பட்டன. அவன் நீந்துவதையே கொஞ்சம் மறந்துவிட்டான். “அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல… அழகு, நாணம், இளமை—எல்லாமும் ஒரே வடிவில் கலந்தவள்,” என்று அவன் உள்ளம் தனக்குள் பேசிக் கொண்டது. அவள் நீரிலிருந்து மேலெழும்பும் போது, துளிகள் கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர, அவன் இதயம் அந்த நொடியிலேயே அவளிடம் சிறையானது. அவள் சிரித்தாள்; அந்த சிரிப்பில் ஒரு மலர்ந்த ரோஜாவின் மணமும், ஒரு புதிதாக எழும் காதலின் திகைப்பும் இருந்தது. அருகில் பார்த்துக் கொண்டிருந்த அவனின் மனம் தன்னிச்சையாக அவள் மேல், மேலும் ஈர்க்கப்பட்டது. சிறிது தைரியமாய்ப் பின் பேசத் தொடங்கினான்: “உன்னைப் பார்த்தால் நீருக்கே பொறாமை வருகிறதே… உன்னைச் சுற்றி சுற்றி ஆடி ஆடி விளையாடுகிறது.” என்றான். அவள் சிரித்தாள். தண்ணீரின் துளிகள் அவளது கன்னத்தில் முத்துக்களாய் ஒளிர்ந்தன. அவள் சிறிது நாணத்துடன் தண்ணீருக்குள் தன் கைகளை, முகத்தை புதைத்தாள். “நீ நீரிலிருந்து மேலெழும் ஒவ்வொரு தருணமும், என் மனதில் ஒரு அழகு சிற்பம் உருவாகிறது." என்றான். “சிற்பமா? நான் ஒரு சாதாரணப் பெண் தான்…” என்ற சொன்ன அவள், யாரும் அங்கு இல்லாத அந்த வேளையில், திடீரென அவனைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து, மெல்லச் சிரித்தாள். அவளது அந்த சிரிப்போடு சேர்ந்து, அவனது உள்ளங்களிலும் புதிதாய் மலர்ந்த அவனின் காதல், மேலும் மேலும் வேரூன்றிக் கொண்டது. நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்த ஆரணி, கண்ணாடி முன் பக்கவாட்டில் நின்றவாறு தன் முன் அழகையும் பின் அழகையும் ஒரு முறை பார்த்தாள். பின் துவாலை [towel] ஒன்றால் தன்னை போர்த்திக் கொண்டு, உடை மாற்ற புறப்பட்டாள். மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, மணிப் பூ ஆடை-அது போர்த்து, கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி, நடந்தாய்; வாழி, ஆரணி ! வண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக் கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக் கொண்டு நடந்தாய், வாழ்க ஆரணி என்று அவன் மனம் மகிழ்ந்து கொண்டு இருந்தது. அருண் அங்கிருந்த சாய்வு நாற்காலியில், இன்னும் ஈரத்துடனே, திடகாத்திரமான மேனியுடன், துவாலை ஒன்றாலும் போர்க்காமல், சாய்ந்து இருந்தபடி, ' நான் உன்னை ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைத்தேன்' என்று கிண்டலாகக் கூறினான். 'க்கும்' என பொய்க் கோபத்துடன் முகத்தைக் சுளித்துக் கொண்டாள் ஆரணி. என்றாலும் அவனின் மூங்கில் போன்ற தோள்கள், பரந்த மார்பு, நீண்ட கைகள், முறுக்கேறிய வல்லமை கொன்ட தசைகள். நேர் கொண்ட கூரிய விழிகள். அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், உறுதியைக் காட்டும் உடலமைப்பு கொண்ட கம்பீரமான தோற்றம் அவளை சற்று வியக்க வைத்தது. அவனை கீழிருந்து மேல்வரை திரும்பவும் பார்த்த ஆரணி, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி, ' ரொம்ப சூட இருக்கிங்க போல' என்று சிரித்தபடி, அவனின் தோளை மெல்ல தட்டி விட்டு போனாள். சந்தோசத்தில் அவன் கண்களை விரித்து 'ஓகே ஓகே' என்று கூறியபடி அவளின் பின் தானும் உடை மாற்ற தொடர்ந்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31368158149499423/?
1 month 3 weeks ago
18 Sep, 2025 | 11:47 AM மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நடத்தப்பட்டது. இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 45க்கும் அதிகமானவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/225393
1 month 3 weeks ago
18 Sep, 2025 | 11:47 AM

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,
அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார்.
பின்னணி
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நடத்தப்பட்டது. இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 45க்கும் அதிகமானவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.
எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/225393