Aggregator

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
புதிய மாணவர்களுக்கு உதவி நிச்சயமாக தேவைப்படும் என கருதுகிறேன், அவ்வாறு உதவினாலே புதிய மாணவர்களும் பழைய மாணவர்களும் இயல்பாக பழகலாம், பகிடி வதை என்பது குரூர புத்தி கொண்ட சிலரது வக்கிரங்களுக்கு வடிகாலாக இருப்பதலாலேயே சிலர் இதனை விரும்பி செய்கிறார்கள் என கருதுகிறேன், உடைந்து போன ஒரு சமூகத்தில் இருக்கும் பொதுவான அம்சம் (வர்க்க, மத, சாதி வேறுபாடுகள்) இது என கருதுகிறேன்.

"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

2 months ago
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது. 1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்! அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் ! இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது! அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே! அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர். காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட. அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள். என் இனமே என் சனமே … நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்! சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும். செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்! அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்! நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

2 months ago

"என் இனமே என் சனமே”

(செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின.

அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது.

1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்!

அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் !

இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது!

அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே!

அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர்.

காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட.

அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள்.

என் இனமே என் சனமே …

நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்!

சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும்.

செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்!

அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்!

நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


'கடைக் கண்ணாலே இரசித்தேனே'

2 months ago
'கடைக் கண்ணாலே இரசித்தேனே' கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே! இடைவெளி விட்டு நடந்து சென்றாலும் இடையை வருட உன்கை மறக்கவில்லையே! பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே! பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு பொங்கி எழுந்ததே காதலும் காமமும்! பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

'கடைக் கண்ணாலே இரசித்தேனே'

2 months ago

'கடைக் கண்ணாலே இரசித்தேனே'

கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று

கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே!

இடைவெளி விட்டு நடந்து சென்றாலும்

இடையை வருட உன்கை மறக்கவில்லையே!

பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது

பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே!

பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு

பொங்கி எழுந்ததே காதலும் காமமும்!

பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல

மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்


ஆடிப்பிறப்பு.... ஆடிக்கூழ்.

2 months ago
Nagamuthu Piratheeparajah rodnetposSch1c8ca98m594cih37mgc7a647ga8a615af19cl3u8316m120m · 16.07.2025 புதன்கிழமை இரவு 11.45 மணி. ***.ஆடிப்பிறப்பும் காலநிலையியலும் *** நாளை ஆடிப் பிறப்பு.... பொதுவாக தமிழர்களின் பண்டிகைகளுக்கும் காலநிலையியலுக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. தமிழர்களின் பண்டிகைகளுக்கு பின்னணியான பல புவி விஞ்ஞான விடயங்கள் மிகவும் ஆச்சரியமானவை. ஏனெனில் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்னரே தமிழர்கள் புவிச்சுற்றுகை, புவிச் சுழற்சி போன்றவற்றை மிகத் துல்லியமாக கணித்து அதற்கேற்ற வகையில் தமது பண்டிகைகள் மற்றும் அவை கொண்டாடும் முறைகளை வடிவமைத்து இயற்கையுடன் இணைந்ததாக ஆனால் விஞ்ஞான ரீதியிலான அர்த்ங்களோடு பண்டிகைகளைக் கொண்டாடி வந்துள்ளனர். சூரியனைப் புவி சுற்றுகின்ற பாதையின் அமைவிடங்களை மையப்படுத்தியே தமிழர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக தைப்பொங்கல் என்பது தென்னரைக்கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான சூரியனின் நகர்வின் ( உண்மையில் சூரியன் நகர்வதில்லை. பூமி தான் நகர்கின்றது. ஆனால் இதனை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக சூரியன் நகர்வதாக குறிப்பிடுகின்றேன். ) தொடக்க நாளை தைப்பொங்கல் என கொண்டாடுகின்றோம். இதனை உத்தராயணம் எனவும் அழைப்பர். அவ்வாறு நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது சித்திரை வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றோம். வடவரைக் கோளம் வந்த சூரியன் மீள வடவரைக்கோளத்திலிருந்து தென்னரைக் கோளம் நோக்கி நகரும் நாளை ஆடிப் பிறப்பு என அழைக்கின்றோம். நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது தீபாவளியைக் கொண்டாடுகின்றோம். கருதுகோளின் அடிப்படையில் தெற்கு 90° யிலிருந்து சூரியன் புறப்படும் நாளையும் (தைப்பொங்கல்), மத்திய கோட்டை (,0°) அணமிக்கும் நாளையும்( சித்திரை வருடப் பிறப்பு) பின்னர் வடக்கு 90° யிலிருந்து புறப்படும் நாளையும் ( ஆடிப் பிறப்பு) மத்திய கோட்டை அண்மிக்கும் நாளையும்( தீபாவளி) நாம் பண்டிகைகளாக கொண்டாடுகின்றோம். சூரியனை புவி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும்போது புவியின் எந்த பகுதியும் ஆண்டின் இரண்டு தடவைகள் சூரியனுக்கு அண்மையாகவும் இரண்டு தடவைகள் சூரியனுக்கு சேய்மையாகவும் அமையும். நாம் சித்திரை வருடப் பிறப்பு மற்றும் தீபாவளிக்கு அண்மித்த காலங்களில் சூரியனுக்கு மிக அண்மையாக வருகின்றோம். ஆனால் தென்னரைக்கோளத்தில் இருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு வடவரைக்கோளத்திற்கு நகரும் காலம் வரை அதாவது ஜனவரி 01 முதல் ஜூலை 01 வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தென்னிந்தியாவிலும் சற்று வெப்பமான வானிலை நிலவும். மாறாக வடவரைக்கோளத்திலிருந்து தெற்கு நோக்கிய சூரியனின் நகர்வு தென்னரைக் கோளத்தினை அடையும்வரை அதாவது ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை மழையுடனான வானிலை நிலவும். இரண்டு காலங்களிலும் புவியின் நகர்வு காரணமாக இரண்டு வேறுபட்ட வானிலை கோலங்கள் நிலவும். இந்த வேறுபட்ட வானிலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் நாம் நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதனை அறிவிக்கவே இந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் ஊடாக வெப்பமான வானிலை நிகழ்வை அறிவித்தாலும் அதை விட இன்னமும் வெப்பமான வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டமும், ஆடிப்பிறப்பினூடாக மிதமான வெப்பநிலை கொண்ட வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவித்தாலும் கூட கன மழையுடன் கூடிய வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். குறிப்பாக இந்த பண்டிகைகளின் கொண்டாட்ட முறைமைகளின் பின்னால் மிகப் பெரிய காலநிலை சார் விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமான வானிலையை வரவேற்க பிரதானமாக பொங்கல் பொங்கி வரவேற்கின்றோம். இதற்காக தான் தைப்பொங்கலுக்கும் சித்திரை வருடப் பிறப்பிற்கும் பொங்கல் பொங்கி கொண்டாடுகின்றோம். மாறாக குளிரான அல்லது மழையுடன் கூடிய வானிலையை வரவேற்க மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம். அதனால் தான் ஆடிப்பிறப்பிற்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்றவற்றுடன் கொண்டாடுகின்றோம். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் ஆடி மாதம் முதல் பண்டைய தமிழர்களின் முதன்மையான மற்றும் முக்கியமான தொழிலான விவசாய நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலமாகவும் கருதுவார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்வார்கள். அவர்கள் அதிக உடலுழைப்பைச் செலுத்தும் அதேவேளை மிக நீண்ட நேரம் வேலை செய்வார்கள். அவர்கள் நீண்ட நேரம் பசிக்களையின்றி வேலையைத் தொடர மாப்பொருட்களாலான பண்டங்களை உண்பார்கள். அதனைக் கருத்தில் கொண்டு நாம் மாப்பொருட்களாலான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆடிப் பிறப்புக்கு மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றோம். இன்றைய உலகம் வலியுறுத்தும் காலநிலைத் தழுவல்( Climate Adaptation) என்பதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகச்சரியாக கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பண்டிகைகளும் அவை கொண்டாடப்படும் முறைகளும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களுக்கு முன்னரே புவியின் சுழற்சி மற்றும் சுற்றுகைகளை மிகச்சரியாக கணித்துள்ளார்கள். தற்போதைய விஞ்ஞான ரீதியிலான கணிப்புக்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் புவிச்சுழற்சி மற்றும் புவிச்சுற்றுகை பற்றிய தமிழர்களின் கணிப்பு அபரிமிதமானது. நவீன கணிப்புக்களோடு சில நாட்கணக்கில் வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான அவர்களின் கண்டுபிடிப்பு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. இவ்வாண்டு கூட தென்னரைக் கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான நகர்வு 03.01.2025 அன்று ( தமிழர்களின் கணிப்பின்படி ஜனவரி -14 : தைப்பொங்கல்.... 11 நாட்கள் வேறுபாடு) நிகழ்ந்துள்ளது. அதேவேளை வடவரைக் கோளத்திலிருந்து கடந்த 04.07.2025 அன்று ( தமிழர்களின் படி நாளை 17.07.2025: ஆடிப்பிறப்பு ... 13 நாட்கள் வேறுபாடு) சூரியன் தென்னரைக்கோளம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பல விடயங்களில் தமிழர்கள் மிகச் சிறப்பாக காலநிலைத் தழுவலைக் கடைப்பிடித்துள்ளார்கள். உணவுகள், உடைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், நீர்ப்பாதுகாப்பு,வனப் பாதுகாப்பு என்ற வகையில் பல விடயங்களில் தமிழர்கள் காலநிலையோடு இணைந்து மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள்( இவை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்). நாளை ஆடிப்பிறப்பு. இதனை வெறுமனே சம்பிரதாயத்துக்காகவன்றி இதன் பின்னாலான அர்த்தங்கள் நிறைந்த காரணங்களை அறிந்து கொண்டாடுவோம். 'ஆடி உழவைத் தேடி உழு ' என்ற வாக்குக்கமைவாக ஆடி மாதத்தில் எம் விவசாயிகள் பலர் வயல் உழவு வேலைகளைத் தொடங்குவார்கள். அதற்கேற்ப எதிர்வரும் 22.07.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -நாகமுத்து பிரதீபராஜா-

'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி

2 months ago
இந்த லொயோலா கல்லூரி ஒரு கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். கத்தோலிக்க திருச்சபையில், யேசு சபை (Society of Jesus) என்ற ஒரு குருக்கள் சபை இருக்கிறது. இந்த யேசு சபையினரால் நிர்வகிக்கப் படும் பல உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்று தான் லொயொலா கல்லூரி. இந்தச் சபையில் விண்ணப்பிக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அனேகமாக ஒரு உயர் கல்வித் தகுதி இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு துறை சார் நிபுணராகவும் இருக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யேசு சபையில் சேரும் கத்தோலிக்க குருக்கள் முற்போக்காளர்களாக இருப்பர். முன்னாள் போப் பிரான்சிஸ் யேசு சபையைச் சேர்ந்தவர், அவரது முற்போக்கான கொள்கைகளுக்கு இது ஒரு காரணம்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 💯 🤣 நன்றி அண்ணா

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months ago
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் ......... ! --- என்னுள்ளே என்னுள்ளே ---

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months ago
சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை. யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன். 53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கடும் விசனம்

2 months ago
Published By: VISHNU 16 JUL, 2025 | 08:13 PM (நா.தனுஜா) நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான பெனிஸ்லஸ் துஷான் இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்குச் சொந்தமானது என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார். நான்கு அல்லது ஐந்து வயதைத் தாண்டாத சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டு, மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டு, அச்சிறுமியைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அதுபற்றி மறந்துபோயிருக்கும் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம். இப்போது, தசாப்தங்கள் கடந்து, அந்த நிலம் தனது அமைதியை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. உண்மையை நீண்டகாலத்துக்குப் புதைத்து வைத்திருக்கமுடியாது. அவ்வாறிருந்தும் நாம் அதற்கான நீதியையும், கௌரவத்தையும், பொறுப்புக்கூறலையும் கோருகையில் பிறிதொரு எதிர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனைப் பார்க்கிறோம். துரோகிகள் என்றும், அமைதியை குழப்புபவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தற்போது சுட்டிக்காட்டும் இந்த பொருளாதார நெருக்கடி உருவானது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு வாக்குகள் அச்சத்தின் நிமித்தம் அளிக்கப்பட்டவையே தவிர, தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை அல்ல. அந்நபருக்கு வாக்களிப்பதென மேற்கொள்ளப்பட்ட தெரிவு எமது பொருளாதாரத்தை வங்குரோத்துநிலைக்கு இட்டுச்சென்றதுடன் மாத்திரமன்றி, நாட்டின் நேர்மை மற்றும் மனசாட்சி என்பவற்றையும் சீர்குலைத்தது. நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220169

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் கடும் விசனம்

2 months ago

Published By: VISHNU

16 JUL, 2025 | 08:13 PM

image

(நா.தனுஜா)

நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார்.

pommai.png

செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்  செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான பெனிஸ்லஸ் துஷான் இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்குச் சொந்தமானது என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார்.

நான்கு அல்லது ஐந்து வயதைத் தாண்டாத சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டு, மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டு, அச்சிறுமியைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அதுபற்றி மறந்துபோயிருக்கும் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம். இப்போது, தசாப்தங்கள் கடந்து, அந்த நிலம் தனது அமைதியை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. உண்மையை நீண்டகாலத்துக்குப் புதைத்து வைத்திருக்கமுடியாது.

அவ்வாறிருந்தும் நாம் அதற்கான நீதியையும், கௌரவத்தையும், பொறுப்புக்கூறலையும் கோருகையில் பிறிதொரு எதிர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனைப் பார்க்கிறோம். துரோகிகள் என்றும், அமைதியை குழப்புபவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தற்போது சுட்டிக்காட்டும் இந்த பொருளாதார நெருக்கடி உருவானது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு வாக்குகள் அச்சத்தின் நிமித்தம் அளிக்கப்பட்டவையே தவிர, தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை அல்ல. அந்நபருக்கு வாக்களிப்பதென மேற்கொள்ளப்பட்ட தெரிவு எமது பொருளாதாரத்தை வங்குரோத்துநிலைக்கு இட்டுச்சென்றதுடன் மாத்திரமன்றி, நாட்டின் நேர்மை மற்றும் மனசாட்சி என்பவற்றையும் சீர்குலைத்தது.

நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்?

கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/220169

நவாலியூர் சோமசுந்தரப்_புலவர்.

2 months ago
தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் இதிகாசங்களைக் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமய பாடங்களைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தினார். பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். 400 இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. யாப்பிலக்கணங்களைக் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். 'சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910 இல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927 இல் ஈழத்துத் தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர். ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். குழந்தைகளுக்கான 'ஆடிப்பிறப்பு', 'கத்தரிவெருளி', 'புளுக்கொடியல்', 'பவளக்கொடி', 'இலவுகாத்த கிளி' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி "சிறுவர் இலக்கிய முன்னோடி" என்ற பெருமை பெற்றார். 'தாடி அறுந்த வேடன்', 'எலியும் சேவலும்' உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழி_அமைப்பு

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் ; குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

2 months ago
16 JUL, 2025 | 04:40 PM கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார். இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/220151