Aggregator

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் - வலி. மேற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

1 month 2 weeks ago
Published By: Vishnu 20 Sep, 2025 | 02:37 AM வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறுக்கே வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்றையதினம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது செட்டியார் மடம் சந்தியிலும் இவ்வாறு ஒரு வாகனம் மாடு ஒன்றின் கயிற்றில் சிக்கியது. அது பெரிய வாகனமாக இருந்ததால் ஆபத்துகள் ஏற்படவில்லை. இதுவே மோட்டார் சைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டியாக இருந்திருந்தால் அங்கே பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதுபோல கட்டாக்காலி நாய்கள் வீதியில் செல்வதாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/225553

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் - வலி. மேற்கு பிரதேச சபையில் வலியுறுத்து!

1 month 2 weeks ago

Published By: Vishnu

20 Sep, 2025 | 02:37 AM

image

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார்.

20250919_114143.jpg

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறுக்கே வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

நேற்றையதினம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது செட்டியார் மடம் சந்தியிலும் இவ்வாறு ஒரு வாகனம் மாடு ஒன்றின் கயிற்றில் சிக்கியது. அது பெரிய வாகனமாக இருந்ததால் ஆபத்துகள் ஏற்படவில்லை. இதுவே மோட்டார் சைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டியாக இருந்திருந்தால் அங்கே பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.

இதுபோல கட்டாக்காலி நாய்கள் வீதியில் செல்வதாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

https://www.virakesari.lk/article/225553

மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!

1 month 2 weeks ago
ஆயுள் தண்டனை வழங்கப்படு முன் விசாரணை கைதியாக உள்ள போது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் நாய்களுக்கு வந்தால் பிணை வழங்கப்படுமா?

ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர்ப் பாதை தொற்று - உடலுறவு மூலம் பரவுமா?

1 month 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ரெபேக்கா தார்ன் பிபிசி 19 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா? இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம். உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது. உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது. பட மூலாதாரம், Getty Images சிறுநீர் பாதை தொற்று ஏற்பட என்ன காரணம்? சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று. பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது. அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது. பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும். அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் திடீரென அல்லது வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை மேகமூட்டம் போல் தோன்றும் சிறுநீர் சிறுநீரில் ரத்தம் காணப்படுதல் கீழ் வயிற்றில் வலி, அல்லது முதுகில் (விலா எலும்புகளுக்குக் கீழே) வலி அதிக காய்ச்சல், அல்லது குளிர்ச்சி/வெப்பம், நடுக்கம் ஏற்படுதல் சோர்வு அல்லது பலவீனம் அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம். சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதன்மை முறையாகும் "சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா. நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது. மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது. மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள். "அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன். "எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார். குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீரகத் தொற்று பெண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று தொற்றக்கூடியதா? சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல. ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய சிறுநீரின் மாதிரியை வழங்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம். சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும். இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள். இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும். சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள். இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார். "நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா. நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிறுநீர் பாதை தொற்றை குணமாக்க க்ரான்பெரி சாறு உதவுமா இல்லையா என்பது குறித்து கலவையான கருத்துக்கள் உள்ளன குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது. க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன. சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்) - கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும். - பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள் - நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். - உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும் - உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும் - நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும். - பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள் பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன? மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம். ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர். "சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdjv23l369o

ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர்ப் பாதை தொற்று - உடலுறவு மூலம் பரவுமா?

1 month 2 weeks ago

சிறுநீர் பாதை தொற்று

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா தார்ன்

  • பிபிசி

  • 19 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா?

இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம்.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது.

உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது.

அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது.

சிறுநீர் பாதை   தொற்று

பட மூலாதாரம், Getty Images

சிறுநீர் பாதை தொற்று ஏற்பட என்ன காரணம்?

சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று.

பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது.

அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது.

பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும்.

அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?

சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்

  • திடீரென அல்லது வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை

  • மேகமூட்டம் போல் தோன்றும் சிறுநீர்

  • சிறுநீரில் ரத்தம் காணப்படுதல்

  • கீழ் வயிற்றில் வலி, அல்லது முதுகில் (விலா எலும்புகளுக்குக் கீழே) வலி

  • அதிக காய்ச்சல், அல்லது குளிர்ச்சி/வெப்பம், நடுக்கம் ஏற்படுதல்

  • சோர்வு அல்லது பலவீனம்

அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம்.

சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா?

சில சந்தர்ப்பங்களில், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையின் புறணியை (lining)  ஆக்கிரமித்து உடலின் சொந்த செல்களுக்குள் மறைத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதன்மை முறையாகும்

"சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா.

நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது.

மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது.

மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள்.

"அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன்.

"எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார்.

குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள்.

பாக்டீரியாக்கள், சிறுநீர்ப்பையின் சுவரில் தங்களை ஒட்டிக்கொண்டு, பயோஃபில்ம் எனப்படும் ஒரு பாதுகாப்பு அடுக்கின் கீழ் மறைந்து விடுகின்றன. இதனால், அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளையும் மற்றும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளையும் தவிர்க்க முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரகத் தொற்று பெண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்

சிறுநீர் பாதை தொற்று தொற்றக்கூடியதா?

சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல.

ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும்.

மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது?

மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீரகத் தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய சிறுநீரின் மாதிரியை வழங்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்.

சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும்.

இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள்.

இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும்.

சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார்.

"நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா.

நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது?

பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீர் பாதை தொற்றை குணமாக்க க்ரான்பெரி சாறு உதவுமா இல்லையா என்பது குறித்து கலவையான கருத்துக்கள் உள்ளன

குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது.

க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன.

சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்)

- கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும்.

- பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள்

- நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம்.

- உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும்

- உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும்

- நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும்.

- பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள்

பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன?

மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.

இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம்.

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர்.

"சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czdjv23l369o

ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?

1 month 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர் வெள்ளை மாளிகை டேனியல் கேய் வணிக செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர். டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார். "ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக். நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்பின் புதிய கோல்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறார் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக். 2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது. தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார். மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார். பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன். பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார். "சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ். ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது. ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார். "நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப். 2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது. அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg3jeyeklzo

ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியா கவலை ஏன்?

1 month 2 weeks ago

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்.

கட்டுரை தகவல்

  • பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர்

  • வெள்ளை மாளிகை

  • டேனியல் கேய்

  • வணிக செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதன் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்ற நிலையில் ஈலோன் மஸ்க் உள்ளிட்ட அத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இந்தத் திட்டம் உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர்.

டிரம்ப் புதிய "கோல்ட் கார்ட்" (Gold card) உருவாக்குவதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1 மில்லியன் பவுண்ட் (சுமார் 11.8 கோடி இந்திய ரூபாய்) கட்டணம் செலுத்தினால் விரைவாக விசா பெற முடியும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்புடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கும் உடனிருந்தார்.

"ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர்கள் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாங்கள் அவர்களிடம் பேசியுள்ளோம்," என்றார் லுட்னிக்.

நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் என்று கூறும் லுட்னிக், "நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்." என்றார்.

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் புதிய கோல்ட் கார்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசுகிறார் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக்.

2004-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அதிகபட்ச ஹெச்-1பி விசாக்களின் எண்ணிக்கை 85,000 ஆக உள்ளது.

தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக 1,500 டாலர் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தரவுகளின்படி ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டம் மூலம் அதிக பலன் பெற்ற நிறுவனமாக அமேசானும் அதனைத் தொடர்ந்து டாடா, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போன்றது எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "அனைவருக்கும் செலவு அதிகரிக்கப் போகிறது. அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும். பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணி செய்வதற்கான ஊழியர்கள் கிடைப்பதில்லை எனக் கூறுவார்கள்." என்றார்.

பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார் வாட்சன்.

ஹச்-1பி விசா, அமெரிக்கா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா கட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனமான லிட்லர் மெண்டெல்சன் பிசியின் தலைவரான ஜோர்ஜ் லோபஸ் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது "உலகளாவிய அளவில் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் அமெரிக்கா போட்டியிடுவதன் மீது தடை விதித்ததைப் போல ஆகிவிடும்" என்கிறார்.

"சில நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தங்களின் உற்பத்தியை மாற்றலாம், ஆனால் அது நடைமுறையில் மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று தெரிவித்தார் லோபஸ்.

ஹெச்-1பி விசா தொடர்பான விவாதங்கள் முன்னர் டிரம்பின் குழு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பிளவை உண்டாக்கியது.

ஹெச்-1பி மீதான இருதரப்பு வாதங்களையும் தான் புரிந்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய வருடம் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தொழில்நுட்ப துறையின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சித்த டிரம்ப், திறமைசாலிகளை ஈர்க்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் கல்லூரி பட்டதாரிகளுக்கு க்ரீன் கார்ட் வழங்குவதாகவும் கூட தெரிவித்தார்.

"நிறுவனங்களில் வேலை செய்ய உங்களுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். உங்களால் அவர்களை பணியில் சேர்த்து தக்கவைத்துக் கொள்ள முடிய வேண்டும்." என ஆல்-இன் பாட்காஸ்டில் கூறியிருந்தார் டிரம்ப்.

2017-ஆம் ஆண்டு டிரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசாக்களில் ஏற்படும் முறைகேடுகளைக் கண்டறியும் வழிமுறையை மேம்படுத்த விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

2018-ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி விண்ணப்பங்களில் நிராகரிப்பு விகிதம் 24% ஆக உயர்ந்தது. இது பராக் ஓபாமாவின் ஆட்சி காலத்தில் 5-8% ஆகவும் ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் 2-4% ஆகவும் இருந்தது.

அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் ஹெச்-1பி உத்தரவை விமர்சித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg3jeyeklzo

உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!

1 month 2 weeks ago
மன்னரும் நானே மக்களும் நானே! மரம், செடி, கொடியும் நானே! சொன்னவன் பொலிசு, சொல்பவன் பொலிசு. துணிந்து நீ போதை ஏற்று.🤪 சிறீமாவோ காலத்தில் எட்டாம் வகுப்புடன் பொலிஸ் படையில் இணைக்கப்பட்டோரும், யெயவர்த்தன காலத்தில் இணைக்கப்பட்ட சிறைக் கைதிகளும் இன்னமும் சேவையில் இருக்கிறார்கள்போல் உள்ளது.🤔

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
goshan_che குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் படவேண்டும் என்று சொல்வார்கள். நான் யாழ்களத்தில், தங்கத்தால் மகுடமே சூட்டிவந்துள்ள வரும் உறவுகளில் ஒருவரின் பத்து விரல்களாலும் ஆசீர்வாதமே பெற்றுவிட்டேன்.🙌 🙌 🙏

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
செப்டம்பர் 24 ல் ஒருநாள் மந்திரி மனைக்கு மாலை நேரம் போனன் ..திடீரென ஒருவர் சயிக்கிளில் வந்து...விட்டார் சயிக்கிளை ..நிலத்தை கூட்டினார் ..படுக்கையை போட்டார் ...சுற்ற்ப்பார்த்த எங்களை ஏளனம் செய்தபடி தன்னுடையகாணீ ....வீடு என்று அட்டகாசம் செய்தார் ...கூடவந்தவை கனடாவில் பிறந்த பிள்ளைகள் ....அதுகள் ..இவர்தான் சங்கிலிய மன்னனின் மந்திரி எனகேட்கமுன்...ஆட்டோவில் ஏறி ... ரியோ கிறீம் கவுசுக்குப் போய்விட்டோம்..

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 2 weeks ago
லங்காசிறி ...வீரகேசரி புதினத்தாள்போல...தமிழரெண்டால் பெயர் போடுவினம்...மற்றவை என்றால் பெயர் வராது 4 hours ago, ரசோதரன் said: அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். எங்கெல்லாம் பூந்து விளையாடி ..கோர்த்து ..அழகாக கதை சொல்லுறியள்....நல்லாயிருக்கு..

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 2 weeks ago
நாட்டுக்கு நாடு வேறுபடுவார்களென நினைக்கிறன். அலுப்புத்தட்டாது, ஆர்வத்தை தூண்டும் அழகிய எளிய வசன நடை. மற்றவரை நோகடிக்காது அவர்களையும் அரவணைத்து எழுதும் உங்கள் மனநிலை எழுத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்

1 month 2 weeks ago
நடவாது என்று சொல்வார்கள்...... பின்னாளில் அது நடந்து விடும். நடந்த கதைகளுமுண்டு,

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

1 month 2 weeks ago
கள்ளர் கூட்டத்தலைவனை சந்தித்து அடுத்த கட்ட திட்டம் பற்றி யோசிக்கிறார்கள். ஒருபுறம் பிச்சைப்பாட்டு, மறுபுறம் வீரப்பேச்சு. எத்தனை நாளுக்கு மக்களை கூட்ட முடியும்? கூட்டம் கலையும் முன் ஏதாவது திட்டம் தீட்ட வேண்டுமே. இந்தளவுக்கு தெருவுக்கு வருவோமென எந்த அரசியல் வாதியும் நினைத்திருக்க மாட்டார்கள். அனுரா அரசியல் கதிரைக்கு வந்தவுடன் சவால் விட்டவர், அச்சுறுத்தியவர்கள் இப்போ தம்மை காப்பாற்ற கூடுகின்றனர். இத்தனை பிச்சைக்காரர்களை மக்களே போசித்துள்ளனர் இவ்வளவு காலமும். உதயன் கம்மன் பில சொன்னார், "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை , 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." ஆனால் உண்மை அதுவல்ல. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து நாட்டை கொள்ளையடித்து விருந்துண்டார்கள். அதற்கு தமிழரை விலையாக காட்டி, ஏழை மக்களை ஏமாற்றினார்கள். மீண்டும் வெட்கமில்லாமல் அந்த மக்களிடம் தஞ்சசமடைகிறார்கள் இராணுவத்தின் பின்னால். இவர்களின் பழிகளை இராணுவம் சுமக்கிறது. இராணுவம் தம்மை புனிதப்படுத்த வேண்டுமென்றால்; குற்றவாளிகளை அடையாளம் காட்டி தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். எத்தனை கலந்தான் ஏமாற்றுவார் நாட்டை?

ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி!

1 month 2 weeks ago
போலந்தின் எல்லை மூடல் ஐரோப்பிய ஒன்றியம்-சீன வர்த்தகத்தை நெரிக்கும் அபாயம் உள்ளது. ரஷ்யாவின் சமீபத்திய போர் பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக முன்னெச்சரிக்கை, ஆண்டுதோறும் €25 பில்லியன் மதிப்புள்ள சீனா-ஐரோப்பிய ஒன்றிய ரயில் சரக்குகளை நிறுத்துவதாக மாறி வருகிறது. பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ரஷ்ய-பெலாரஷ்ய "சபாட்" பயிற்சியை சிறப்பாகக் கண்காணிக்க வார்சா வெள்ளிக்கிழமை பெலாரஸுடனான தனது எல்லையை மூடியது. | கெட்டி இமேஜஸ் வழியாக வோஜ்டெக் ராட்வான்ஸ்கி/ஏஎஃப்பி செப்டம்பர் 17, 2025 9:24 pm CET மார்டினா சாபியோ மற்றும் வோஜ்சிக் கோஸ்க் மூலம் ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் முடிந்திருக்கலாம், ஆனால் போலந்து ஓய்வெடுக்கவில்லை - மேலும் பெலாரஸுடனான அதன் எல்லையை காலவரையின்றி மூட முடிவு செய்துள்ளது, இதனால் சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஆண்டுக்கு €25 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ரஷ்ய-பெலாரஷ்ய " சபாட் " பயிற்சியை சிறப்பாகக் கண்காணிக்க வார்சா வெள்ளிக்கிழமை பெலாரஸுடனான தனது எல்லையை மூடியது . ஆனால் தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூறப்பட்டவை இப்போது முடிவற்றதாகத் தெரிகிறது, அரசாங்கம் "போலந்து குடிமக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை"யைக் குறிப்பிட்டு, "எல்லை முழுமையாகப் பாதுகாப்பானதும் போக்குவரத்து மீட்டெடுக்கப்படும்" என்று கூறியது. கடந்த வாரம் ரஷ்யா போலந்தின் வான்வெளியில் ஒரு ட்ரோன் கூட்டத்தை அனுப்பி போலந்தின் பாதுகாப்புகளை சோதித்த பிறகும், உக்ரைனில் கிரெம்ளினின் போர் முயற்சிக்கு உதவியதற்காக சீனாவை தண்டிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகரித்து வரும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியிலும், அதிக இராஜதந்திர பதற்றம் நிலவும் ஒரு தருணத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. "வர்த்தக தர்க்கம்" "பாதுகாப்பு தர்க்கத்தால்" மாற்றப்படுவதாக போலந்து அரசாங்கம் கூறியது. முக்கியமாக, இந்த மூடல் சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ரயில் சரக்குகளில் 90 சதவீதத்தை நகர்த்தும் வர்த்தகப் பாதையைத் தாக்குகிறது. அந்த வழியில், சீனாவிற்கும் EUவிற்கும் இடையிலான சரக்கு அளவுகள் 2024 ஆம் ஆண்டில் 10.6 சதவீதம் வளர்ந்தன, அதே நேரத்தில் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட 85 சதவீதம் உயர்ந்து €25.07 பில்லியனாக உயர்ந்தது. இந்த வழித்தடம் இப்போது அனைத்து EU-சீன வர்த்தகத்திலும் 3.7 சதவீதத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு வருடம் முன்பு 2.1 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது - இது டெமு மற்றும் ஷீன் போன்ற மின்வணிக ஜாம்பவான்களுக்கு உயிர்நாடியாகும். போலந்து நிறுவனங்களும் பாதிக்கப்படலாம். அரசு கட்டுப்பாட்டில் உள்ள PKP கார்கோ, குறுகிய கால தாமதங்களை நிர்வகிக்க முடியும் என்று கூறியது , ஆனால் நீடித்த மூடல் தெற்கே, கஜகஸ்தான், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக தெற்கு ஐரோப்பா அல்லது துருக்கிக்கு வர்த்தகத்தைத் திருப்பிவிடும் என்று எச்சரித்தது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் அதன் முதல் வார்சா-சீனா சரக்கு ரயிலை நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த மூடல் வந்துள்ளது - இது போலந்தின் மையமாக பங்கை உறுதிப்படுத்தவும், PKP கார்கோவின் சர்வதேச சுயவிவரத்தை உயர்த்தவும் குறிக்கப்பட்ட ஒரு அடையாள ஓட்டமாகும். "முழுமையான எல்லை மூடல் என்பது போக்குவரத்து மற்றும் தளவாடங்களுக்கு மட்டுமல்ல, முழு பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்," என்று போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போலந்து தொழில் சங்கத்தின் மூலோபாய திட்ட இயக்குனர் ஆர்தர் கலிசியாக் கூறினார். போலந்து போக்குவரத்து நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட சுமார் 10,000 பெலாரஷ்ய ஓட்டுநர்களும் போலந்தில் வேலைக்குத் திரும்பவோ அல்லது வீடு திரும்பவோ முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார். மருந்து மற்றும் உணவு போன்ற நேரத்தை எடுத்துக்கொள்ளும் போக்குவரத்து உட்பட அனைத்து சரக்குகளும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன. மாற்று வழிகளைப் பொறுத்தவரை, "நீங்கள் லிதுவேனியா அல்லது லாட்வியா வழியாக முயற்சி செய்யலாம், ஆனால் அதற்கு நிச்சயமாக அதிக நேரமும் அதிக பணமும் தேவைப்படும். அப்படியிருந்தும் கூட, அந்த எல்லைகள் திறந்தே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்று அவர் கூறினார். பெலாரஷ்ய எதிர்க்கட்சி செய்தி நிறுவனமான பெல்சாட், புதிய விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அறிக்கை அளித்தது , லிதுவேனியாவின் கவுனாஸ், போலந்தின் லோட்ஸ் அல்லது ஜெர்மனியின் டியூஸ்பர்க்கில் உள்ள ஒரு முனையத்திற்கு ஏற்றப்பட்ட லாரி செல்லும் ஒரு தீர்வு உருவாக்கப்பட்டதாகக் கூறியது - அங்கிருந்து சரக்குகள் மாற்றப்பட்டு பின்னர் லிதுவேனியன் ரயில் கடவைகள் வழியாக பெலாரஸுக்குள் நுழைகின்றன. "இது மிகவும் கடினமான சூழ்நிலை," என்று கலிசியாக் முடித்தார். "சூழலைக் கண்காணித்து வருவதாகவும், எல்லை பாதுகாப்பாக இருக்கும்போது மீண்டும் திறக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறுகிறது. இதுதான் எங்களுக்குத் தெரியும்... எனவே, வணிகக் கண்ணோட்டத்தில், எங்களுக்கு எதுவும் தெரியாது." | ஜாப் அரியன்ஸ்/நூர் புகைப்படம் கெட்டி இமேஜஸ் வழியாக "பெலாரஸுடனான எல்லையை மூடுவதற்கான முடிவு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று போலந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்லாப்கா புதன்கிழமை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார் . மீண்டும் திறக்கும் தேதி எதுவும் தெரியாததால், வணிகங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. "எல்லை எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிந்தவுடன் இழப்புகள் மதிப்பிடப்படும். அந்த நேரத்தில், அமைச்சகங்கள் ஒரு மதிப்பீட்டைத் தயாரிக்க முடியும், இது தனிப்பட்ட தொழில்துறை துறைகளுக்கு சாத்தியமான அரசு ஆதரவு குறித்த அரசாங்கத்தின் முடிவுகளுக்கு அடிப்படையாக செயல்படும்," என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசியல் சதுரங்கம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திங்களன்று வார்சாவிற்கு விமானம் மூலம் தனது போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடன் பேசினார். "இந்த சூழ்நிலையில், எங்களுக்கு நன்மை பயக்கும் வர்த்தகத்தின் தர்க்கம், பாதுகாப்பு தர்க்கத்தால் மாற்றப்படுகிறது என்பது பேச்சுவார்த்தையின் போது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது. மேலும் இது அமைச்சர் சிகோர்ஸ்கியால் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது," என்று போலந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாவெல் வ்ரோன்ஸ்கி கூறினார். எல்லையை மீண்டும் திறக்க சீனத் தரப்பு நேரடி கோரிக்கைகள் எதையும் வைக்கவில்லை என்றும் அவர் கூறினார். அமைச்சர்கள் சந்திப்பதற்கு முன்பே, போலந்து "[பெலாரஸ் எல்லையில் ரயில் இணைப்பு] பாதுகாப்பான மற்றும் சீரான செயல்பாட்டையும், சர்வதேச தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும்" என்று நம்புவதாக பெய்ஜிங் ஏற்கனவே கூறியிருந்தது , மேலும் சீனா-ஐரோப்பா ரயில்வே எக்ஸ்பிரஸ் போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சீனாவின் ஒத்துழைப்பில் ஒரு "முதன்மை திட்டம்" என்று வலியுறுத்தியது. ஆனால் இந்த விளையாட்டில் சீனா மட்டுமே பங்கு வகிக்கவில்லை. "அமெரிக்காவும் உள்ளது, அவர்களுடன் எங்களுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. சீனாவிற்கான ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகள் மீது சீனா மீது கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதால், குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது பாதைகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டு வாஷிங்டன் மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று போலந்தின் வெளியுறவு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் பியோட்ர் க்ராவ்சிக் கூறினார். "சீனப் பொருட்களுக்கான முக்கிய நில நுழைவாயில் இப்போது சிறிது காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார். "அமெரிக்கர்கள் புன்னகைத்து, போலந்து அரசாங்கத்தை மீண்டும் திறக்க அவசரப்படாமல் ஆதரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - குறைந்தபட்சம் மிக விரைவில் அல்ல." ஐரோப்பாவும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகிறது, ஆனால் க்ராவ்சிக் குறிப்பிட்டது போல், "எந்த நாட்டிலிருந்தும் எந்த எதிர்வினையையும் நான் காணவில்லை - ஆணையத்திடமிருந்தும் தலைநகரங்களிலிருந்தும் எதுவும் இல்லை. எனவே ஐரோப்பாவும் பிரதான நுழைவாயில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடையாமல் இருக்கலாம்." "இந்த நுழைவாயில் அடைக்கப்பட்டால், அவர்கள் வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டும் - உதாரணமாக, விமானப் போக்குவரத்து அல்லது கடல் போக்குவரத்து ... உதாரணமாக, ரோட்டர்டாம் மற்றும் ஹாம்பர்க்கில் உள்ள துறைமுகங்கள் போலந்து-பெலாரஷ்ய எல்லை வழியாக இனி செல்ல முடியாத பொருட்களைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். சீனாவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, வார்சாவை தளமாகக் கொண்ட கிழக்கு ஆய்வுகளுக்கான மையத்தின் பொருளாதார வல்லுநரான கொன்ராட் பாப்லாவ்ஸ்கி - ஒரு அரசாங்க ஆலோசனை சிந்தனைக் குழு - ஆபத்தில் உள்ள தொகைகள் குறிப்பிடத்தக்கவை, ஆனால் விளையாட்டை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல என்றார். சீனாவின் உள்நாட்டு மேற்கு மாகாணங்களுக்கு மூடல் மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார், ஏனெனில் அவை ரயில் இணைப்புகளை பெரிதும் நம்பியுள்ளன மற்றும் துறைமுகங்களுக்கான அணுகல் இல்லை. "இருப்பினும், நாங்கள் பரந்த அளவிலான வர்த்தகத்தைப் பற்றிப் பேசவில்லை - இது சில தொழில்களுக்கு நிலையான துளிர் முக்கியமானது, ஆனால் ஒட்டுமொத்தமாக எந்த வகையிலும் முக்கியமானதல்ல." "பெரிய கேள்வி என்னவென்றால், எல்லை மூடல் பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, ஒருவேளை சீனாவிற்கும் கூட போதுமான அளவிலான பிரச்சினையை ஏற்படுத்துமா என்பதுதான் - எந்தவொரு பெரிய எதிர்வினையையும் கட்டாயப்படுத்த" என்று பாப்லாவ்ஸ்கி முடித்தார். ஆனால் போலந்து-பெலாரஷ்ய எல்லை வழியாகப் பாயும் வர்த்தகத்தின் மதிப்பு கணிசமானதாக இருந்தாலும், மாஸ்கோ அல்லது மின்ஸ்க் மீதான தனது நிலைப்பாட்டை மாற்ற பெய்ஜிங்கைத் தள்ளும் அளவுக்கு அது இன்னும் பெரியதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு குற்றச்சாட்டு நாடகமாக இருப்பதற்கு இன்னுமொரு உதாரணமாக இந்த விடயமும் இருக்கலாம்.