Aggregator

"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025]

2 months ago
"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025] பத்து அகவையில் காலெடுத்து வைப்பவனே பக்குவமாய் பழகும் பண்பாட்டு நட்சத்திரமே பரந்த இங்கிலாந்தில் பிறந்த திரனே [Dhiran] பந்தாடும் அழகில் பரவசம் அடைகிறேனே! ஆர்சனல் வீரன்போல் ஆட்டத்தில் ஆடுபவனே ஆர்வமாய் பாய்ந்து தடுக்கும் புலியே ஆகாயத்தை ஒளிரவைக்கு மைக்கல் ஜாக்சனே ஆச்சரியம் கொள்கிறேன் உன் திறமையிலே! இனிய தம்பிகள் நிலன் மற்றும் ஆரினுடன் இரவியின் மூன்று குதிரைகளாக பயணிப்பவனே இன்றும் என்றும் பெற்றோரின் ஆசிகளுடன் இல்லமும் நாடும் மகிழ வாழ்கவாழ்கவே! தேர்வுகள் கடந்து வலிமைகளை பெற்று தேசத்தின் வீரனாய் எழுந்து வருபவனே தேவதை ஆன அம்மம்மாவின் வாழ்த்து தேய்ந்து போகாமல் உன்னை வழிநடத்துமே! மேலே இருந்து அம்மம்மா பெருமையடைய மேடு பள்ளம் தாத்தா வழிகாட்டிட மேன்மை தங்கிய எங்கள் பேரனுக்கு மேள தாளத்துடன் அகவைதின வாழ்த்துக்கள்! நடனக் கலைஞனே விளையாட்டு வீரனே நன்மதிப்புகள் பாரினில் ஓங்கி ஒளிர நயவஞ்சகர்கள் தூர விலகிப் போக நம்பிக்கை ஒளிர பத்துதீபம் எரியட்டுமே! என்றென்றும் அன்புடன் உங்கள் தாத்தா கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

குளிக்கும் வேலை

2 months ago
இப்ப தான் இலங்கையில் உள்ள எனது மாமியார் குளியலறையில் தடக்கி விழுந்து மண்டையும் நாரியும் உடைந்து பார்த்துட்டு வந்திருக்கிறோம்.

'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி

2 months ago
மதங்கள் பெயர்கள்ர்தான் வித்தியாசம் ஆனால் அதன் உள்ளார்த்தங்கள் ஒன்றுதான். பாலின சுதந்திரம் என்பது ஒரு சமூக பிரச்சினை, பல அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு மதங்கள்தான் காரணமாக இருக்கின்றன, அதே வேளை மதங்கள் நல்ல விடயங்களை கூறினாலும் தமது நம்பிக்கைகளுக்கும் விருப்பிற்கும் எதிராக இருந்தால் மதத்தினை வழிகாட்டியாக பயன்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படை காரணமே சாதாரண மனிதர்கள் தம்மை தாமே கற்பனையான விம்பங்களில் பார்ப்பதுதான். சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு மதங்களும் தேவையில்லை, முட்டாள் சமூக கோட்பாடுகளூம் தேவையில்லை.

குளிக்கும் வேலை

2 months ago
🤣................ அடுத்த தடவை போய் விடுவேன் என்று நினைக்கின்றேன். உலகம் முழுக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காயப்படுவதில் குளியலறையில் விழுவதும் ஒன்று என்று சொல்லுகின்றார்கள். இன்னும் சில வருடங்கள் இருக்கின்றன.............😜.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே

சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்

2 months ago
நானும் ஊருபார்க்க ஆசைப்பட்டு நடந்து திரிந்தேன் ...நல்ல வேளை பொக்குளைச்சுற்றி ...12 ஊசி போட வேண்டி வரவில்லை...அதுமட்டுமில்லை நாய்க்கு பயந்து கொட்டனுடன் திரிந்தால்...தம்பிக்கு சுகரோ நடக்க ஏலாதோ..காட்டிலை அடைப்பெடுத்ததோ....இப்படி பல கேள்வி வரும்...இதையெல்லாம் கடந்து ..ஊர் பார்த்து திரும்பவேணும்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
இதையேதான் நானும் எதிர் பார்த்தது.... நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். இதை சொன்னதும் ...செய்ததும் மட்டுமல்ல ....இப்ப வெள்ளை வேட்டி சேட்டு இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை. இதுக்கு இந்த முசுலிம் குரலற்ற அமைப்பு ....என்ன சொல்லப் போகுது..

பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?

2 months ago

பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?

Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 11:08 [IST]

Edappadi Palaniswami AIADMK

காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

என்ன கட்சி

எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது.

இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த கட்சி நாம் தமிழரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.

இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/a-big-party-is-going-to-join-in-our-nda-alliance-wait-and-see-says-edappadi-palanisamy-721053.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

த வெ க, பாஜக உள்ள கூட்டணிக்கு போல வாய்ப்பில்லை. கொள்கை எதிரி என மேடை போட்டு அறிவித்து விட்டு, அதை பலதடவை சொல்லி விட்டு - அவர்களிடம் கூட்டு வைக்கும் அளவுக்கு விஜை பிஸ்கோத்து அல்ல என்றே நினைக்கிறேன்.

நா த க வாக இருக்கலாம். அண்ணனுக்கு யு டர்ன் அடிப்பது ரஸ்கு சாப்பிடுவது போல். அத்தோடு ஆர் எஸ் எஸ் சுக்கும் அண்ணனுக்கும் கொள்கையில் அதிக வேறுபாடில்லை.

ஆனால் பிரமாண்டமான கட்சி என்பதுதான் இடிக்கிறது🤣.

பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?

2 months ago
பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி? Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 11:08 [IST] காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும். அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். என்ன கட்சி எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது. இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த கட்சி நாம் தமிழரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/a-big-party-is-going-to-join-in-our-nda-alliance-wait-and-see-says-edappadi-palanisamy-721053.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி த வெ க, பாஜக உள்ள கூட்டணிக்கு போல வாய்ப்பில்லை. கொள்கை எதிரி என மேடை போட்டு அறிவித்து விட்டு, அதை பலதடவை சொல்லி விட்டு - அவர்களிடம் கூட்டு வைக்கும் அளவுக்கு விஜை பிஸ்கோத்து அல்ல என்றே நினைக்கிறேன். நா த க வாக இருக்கலாம். அண்ணனுக்கு யு டர்ன் அடிப்பது ரஸ்கு சாப்பிடுவது போல். அத்தோடு ஆர் எஸ் எஸ் சுக்கும் அண்ணனுக்கும் கொள்கையில் அதிக வேறுபாடில்லை. ஆனால் பிரமாண்டமான கட்சி என்பதுதான் இடிக்கிறது🤣.

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

2 months ago

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 13:26 [IST]

Edappadi Palaniswami

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதில்

இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.

கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பதிலடி

முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.

அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

அமித் ஷா சொன்னது என்ன?

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/it-is-nda-rule-not-aiadmk-rule-says-annamalai-to-edappadi-palanisamy-on-alliance-721157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

தேர்தல் முடிந்ததும் எடப்பாடியும் இருக்க மாட்டார் அதிமுகவும் இராது.

தன்னையும், கட்சியையும் காப்பாற்ற ஒரே வழி - தவெக கூட்டணிதான்.

ஆனால் இப்போ பாஜகவை கழட்டி விட்டால் - வழக்குகள் சரமாரியாக பாயும்.

டெலிகேட் பொசிசன்.

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

2 months ago
கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 13:26 [IST] தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல். முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பதில் இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம். கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார். எடப்பாடி பதிலடி முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது. அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அமித் ஷா சொன்னது என்ன? தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/it-is-nda-rule-not-aiadmk-rule-says-annamalai-to-edappadi-palanisamy-on-alliance-721157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி தேர்தல் முடிந்ததும் எடப்பாடியும் இருக்க மாட்டார் அதிமுகவும் இராது. தன்னையும், கட்சியையும் காப்பாற்ற ஒரே வழி - தவெக கூட்டணிதான். ஆனால் இப்போ பாஜகவை கழட்டி விட்டால் - வழக்குகள் சரமாரியாக பாயும். டெலிகேட் பொசிசன்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
இந்த அமைபினர்க்கு உள்ள தைரியம் ஒரு தமிழ் எம்பிக்கும் இல்லை.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
அனைத்துப்புதைகுழிகளையும் தோண்டட்டும் ஆனால் முடிவில் செம்ணி உட்பட அனைத்தும் புலிகளால் செய்யபட்ட கொலைகள் என்று முடிக்காமல் விட்டால் சரி. அத்துடன் சர்வதேச நடுநிலையாளர்கள் முன்னிலையில் தோண்டுவது சிறந்தது. அந்தக்குழுவில் இந்தியர் இருக்கக் கூடாது. அவர்களால் செய்யப்பட்ட கொலைகளுக்காகவும் தமிழர் விரோத மன நிலையிலும் எல்லாவற்றிற்கும் புலிகள் மீதே பழி போடுவார்கள்.