Aggregator

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

1 month 4 weeks ago
இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது.................. https://www.jeyamohan.in/222076/ குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும் November 13, 2025 அன்பின் ஜெ, எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன். நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார். நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார். நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார். இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன. இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது? அன்புடன் ராஜேஷ் பெங்களூர் அன்புள்ள ராஜேஷ், இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம். குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர். குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது. ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும். நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான். பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது. குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார். இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை. பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை? ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை. நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்? “போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன். மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள். அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான். ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை. நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’ ‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும். ஜெ

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

1 month 4 weeks ago

இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும்.

இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது..................

https://www.jeyamohan.in/222076/

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

November 13, 2025

big.jpg

அன்பின் ஜெ,

எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.

நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.

நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.

நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.

இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.

இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?

அன்புடன்

ராஜேஷ் 

பெங்களூர்

அன்புள்ள ராஜேஷ்,

இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.

ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.

அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.

நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.

பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.

குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.

இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.

பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?

ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.

நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?

“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.

அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.

ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.

பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு.  வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.

நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’

‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.

ஜெ

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

1 month 4 weeks ago
உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார். ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 13, 2025 காலை 6:41 GMT+11 2 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், நவம்பர் 6, 2025 அன்று கிரேக்கத்தின் ஏதென்ஸில் உரையாற்றுகிறார். REUTERS/Stelios Misinas/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நயாகரா-ஆன்-தி-லேக், கனடா, நவம்பர் 12 (ராய்ட்டர்ஸ்) - உக்ரைனில் ஏற்பட்ட எரிசக்தி ஊழல் ஊழல் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், அதை கியேவ் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார், இது நாட்டின் அரசாங்கத்தின் மீது புதிய பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது என்று கூறப்படும் $100 மில்லியன் ஊழல் திட்டம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில். ராய்ட்டர்ஸ் கட்டண கண்காணிப்பு செய்திமடல் என்பது சமீபத்திய உலகளாவிய வர்த்தகம் மற்றும் கட்டணச் செய்திகளுக்கான உங்கள் தினசரி வழிகாட்டியாகும். இங்கே பதிவு செய்யவும் . "அவர்கள் மிகவும் வலுவாக செயல்படுகிறார்கள். ஊழலுக்கு இடமில்லை, குறிப்பாக இப்போது. அதாவது, மக்களின் பணம்தான் முன்னணியில் செல்ல வேண்டும்," என்று கனடாவில் நடந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் ஓரத்தில் கல்லாஸ் கூறினார். "அவர்கள் இதை மிக விரைவாக மேற்கொண்டு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். டாப்னே சலேடகிஸ் அறிக்கை; லில்லி பேயர் எழுத்து; கிறிஸ் ரீஸ் மற்றும் நிக் ஜீமின்ஸ்கி தொகுத்தல்.

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

1 month 4 weeks ago

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

ராய்ட்டர்ஸ் மூலம்

நவம்பர் 13, 2025 காலை 6:41 GMT+11 2 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவரும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான கல்லாஸ் கிரேக்கத்திற்கு வருகை தருகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், நவம்பர் 6, 2025 அன்று கிரேக்கத்தின் ஏதென்ஸில் உரையாற்றுகிறார். REUTERS/Stelios Misinas/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது

நயாகரா-ஆன்-தி-லேக், கனடா, நவம்பர் 12 (ராய்ட்டர்ஸ்) - உக்ரைனில் ஏற்பட்ட எரிசக்தி ஊழல் ஊழல் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், அதை கியேவ் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார், இது நாட்டின் அரசாங்கத்தின் மீது புதிய பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது என்று கூறப்படும் $100 மில்லியன் ஊழல் திட்டம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில்.

ராய்ட்டர்ஸ் கட்டண கண்காணிப்பு செய்திமடல் என்பது சமீபத்திய உலகளாவிய வர்த்தகம் மற்றும் கட்டணச் செய்திகளுக்கான உங்கள் தினசரி வழிகாட்டியாகும். இங்கே பதிவு செய்யவும் .

"அவர்கள் மிகவும் வலுவாக செயல்படுகிறார்கள். ஊழலுக்கு இடமில்லை, குறிப்பாக இப்போது. அதாவது, மக்களின் பணம்தான் முன்னணியில் செல்ல வேண்டும்," என்று கனடாவில் நடந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் ஓரத்தில் கல்லாஸ் கூறினார்.

"அவர்கள் இதை மிக விரைவாக மேற்கொண்டு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

டாப்னே சலேடகிஸ் அறிக்கை; லில்லி பேயர் எழுத்து; கிறிஸ் ரீஸ் மற்றும் நிக் ஜீமின்ஸ்கி தொகுத்தல்.

மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 month 4 weeks ago
மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 11, 2025 மாலை 4:35 GMT+11 நவம்பர் 11, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பின் ஒரு பகுதியாக, மே 7, 2022 அன்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோவில், கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஷ்ய மிக்-31 போர் விமானம், ரெட் சதுக்கத்தின் மீது பறக்கிறது. REUTERS/Maxim Shemetov உரிம உரிமைகளை வாங்குகிறது ., புதிய தாவலைத் திறக்கிறது மாஸ்கோ, நவம்பர் 11 (ராய்ட்டர்ஸ்) - கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையுடன் கூடிய மிக்-31 ஜெட் விமானத்தை 3 மில்லியன் டாலர்களுக்கு திருட ரஷ்ய விமானிகளைத் தூண்டும் உக்ரைனிய மற்றும் பிரிட்டிஷ் உளவாளிகளின் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட விமானம், ருமேனிய நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள நேட்டோ விமான தளத்தை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும், அங்கு அது வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் FSB கூறியதாக RIA செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. ராய்ட்டர்ஸ் சஸ்டைனபிள் ஸ்விட்ச் செய்திமடல் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதிக்கும் சமீபத்திய ESG போக்குகளைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே பதிவு செய்யவும் . சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசான எஃப்எஸ்பி, கடத்தப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி உக்ரைனும் பிரிட்டனும் பெரிய அளவிலான "ஆத்திரமூட்டலை" திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரேனிய இராணுவ உளவுத்துறை ரஷ்ய விமானிகளை $3 மில்லியனுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முயன்றதாகவும் கூறியது. "எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை சேவைகளின் பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கான திட்டங்களை முறியடித்துள்ளன" என்று FSB ஐ மேற்கோள் காட்டி RIA தெரிவித்துள்ளது. உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையில் பணிபுரிவதாகவும், ஐரோப்பாவிற்கு மிக் விமானத்தை ஓட்ட ஒரு ரஷ்ய விமானிக்கு 3 மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும், அந்த விமானிக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டதாகவும் கூறிய ஒரு நபரின் செய்திகள் மற்றும் பதிவுகளின் படங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ராய்ட்டர்ஸால் கணக்கை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ரஷ்யாவின் கின்சல் என்பது வான்வழி ஏவப்படும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும், இது மாஸ்கோ ஹைப்பர்சோனிக் என்று அழைக்கிறது, இது மிக அதிக வேகம் மற்றும் சூழ்ச்சி விமானப் பாதைகளைக் கையாளும் திறன் கொண்டது, இது வான் பாதுகாப்புகளைக் கண்காணிப்பதையும் இடைமறிப்பதையும் கடினமாக்கும் நோக்கம் கொண்டது. ரஷ்யா நீண்ட காலமாக பிரிட்டனை தனது முக்கிய எதிரியாகக் காட்டி வருகிறது. லண்டன் உக்ரைன் போரைத் தூண்டிவிடுவதாகவும், பிரிட்டிஷ் உளவுத்துறை ரஷ்யாவிற்குள் ஆழமான நடவடிக்கைகளை உக்ரைனுக்கு வழங்க உதவுவதாகவும் மாஸ்கோ குற்றம் சாட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை மாஸ்கோவின் ஏகாதிபத்திய பாணி நில அபகரிப்பு என்று பிரிட்டன் வர்ணிக்கிறது. ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் குழப்பத்தை விதைக்க ரஷ்ய உளவுத்துறை முயற்சிப்பதாக லண்டன் பலமுறை எச்சரித்துள்ளது. மாஸ்கோவில் ராய்ட்டர்ஸ் மற்றும் மெல்போர்னில் லிடியா கெல்லி செய்தி வெளியிட்டனர். ஸ்ரீ நவரத்தினம்/கை ஃபால்கன்பிரிட்ஜ் எடிட்டிங். https://www.reuters.com/business/aerospace-defense/russia-says-it-foiled-ukrainian-british-plot-steal-mig-31-jet-state-media-2025-11-11/

மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 month 4 weeks ago

மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் மூலம்

நவம்பர் 11, 2025 மாலை 4:35 GMT+11 நவம்பர் 11, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது

மாஸ்கோவில் வெற்றி நாள் அணிவகுப்புக்கான ஒத்திகை

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பின் ஒரு பகுதியாக, மே 7, 2022 அன்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோவில், கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஷ்ய மிக்-31 போர் விமானம், ரெட் சதுக்கத்தின் மீது பறக்கிறது. REUTERS/Maxim Shemetov உரிம உரிமைகளை வாங்குகிறது ., புதிய தாவலைத் திறக்கிறது

மாஸ்கோ, நவம்பர் 11 (ராய்ட்டர்ஸ்) - கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையுடன் கூடிய மிக்-31 ஜெட் விமானத்தை 3 மில்லியன் டாலர்களுக்கு திருட ரஷ்ய விமானிகளைத் தூண்டும் உக்ரைனிய மற்றும் பிரிட்டிஷ் உளவாளிகளின் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடத்தப்பட்ட விமானம், ருமேனிய நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள நேட்டோ விமான தளத்தை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும், அங்கு அது வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் FSB கூறியதாக RIA செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.

ராய்ட்டர்ஸ் சஸ்டைனபிள் ஸ்விட்ச் செய்திமடல் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதிக்கும் சமீபத்திய ESG போக்குகளைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே பதிவு செய்யவும் .

சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசான எஃப்எஸ்பி, கடத்தப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி உக்ரைனும் பிரிட்டனும் பெரிய அளவிலான "ஆத்திரமூட்டலை" திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரேனிய இராணுவ உளவுத்துறை ரஷ்ய விமானிகளை $3 மில்லியனுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முயன்றதாகவும் கூறியது.

"எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை சேவைகளின் பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கான திட்டங்களை முறியடித்துள்ளன" என்று FSB ஐ மேற்கோள் காட்டி RIA தெரிவித்துள்ளது.

உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையில் பணிபுரிவதாகவும், ஐரோப்பாவிற்கு மிக் விமானத்தை ஓட்ட ஒரு ரஷ்ய விமானிக்கு 3 மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும், அந்த விமானிக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டதாகவும் கூறிய ஒரு நபரின் செய்திகள் மற்றும் பதிவுகளின் படங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ராய்ட்டர்ஸால் கணக்கை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

ரஷ்யாவின் கின்சல் என்பது வான்வழி ஏவப்படும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும், இது மாஸ்கோ ஹைப்பர்சோனிக் என்று அழைக்கிறது, இது மிக அதிக வேகம் மற்றும் சூழ்ச்சி விமானப் பாதைகளைக் கையாளும் திறன் கொண்டது, இது வான் பாதுகாப்புகளைக் கண்காணிப்பதையும் இடைமறிப்பதையும் கடினமாக்கும் நோக்கம் கொண்டது.

ரஷ்யா நீண்ட காலமாக பிரிட்டனை தனது முக்கிய எதிரியாகக் காட்டி வருகிறது. லண்டன் உக்ரைன் போரைத் தூண்டிவிடுவதாகவும், பிரிட்டிஷ் உளவுத்துறை ரஷ்யாவிற்குள் ஆழமான நடவடிக்கைகளை உக்ரைனுக்கு வழங்க உதவுவதாகவும் மாஸ்கோ குற்றம் சாட்டுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை மாஸ்கோவின் ஏகாதிபத்திய பாணி நில அபகரிப்பு என்று பிரிட்டன் வர்ணிக்கிறது. ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் குழப்பத்தை விதைக்க ரஷ்ய உளவுத்துறை முயற்சிப்பதாக லண்டன் பலமுறை எச்சரித்துள்ளது.

மாஸ்கோவில் ராய்ட்டர்ஸ் மற்றும் மெல்போர்னில் லிடியா கெல்லி செய்தி வெளியிட்டனர். ஸ்ரீ நவரத்தினம்/கை ஃபால்கன்பிரிட்ஜ் எடிட்டிங்.

https://www.reuters.com/business/aerospace-defense/russia-says-it-foiled-ukrainian-british-plot-steal-mig-31-jet-state-media-2025-11-11/

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

1 month 4 weeks ago
எனது சந்தேகம் இந்தியாவே இதனை செய்திருக்கும் என, பாகிஸ்தானினை பயங்கரவாத நாடாக உருவகப்படுத்துவதற்கு இதனை தானே செய்திருக்க வாய்ப்புள்ளது, கொஞ்ச காலமாக ஆசிய பகுதியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இந்தியா மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையே ஒரு அச்சாணி போல இருந்த நிலையில், இந்தியா தற்போது புறந்தள்ளப்படுகின்றது, மறு வளமாக பாகிஸ்தான் திடீர் அமெரிக்க நட்பு என ஒரு நல்ல நிலையில் உள்ளது, இதனிடையே இலங்கை அணி பாகிஸ்தானிற்கு விளையாட சென்றுள்ளது, இதியணி பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் இருந்து கோப்பையினை வாங்குவதனை தவிர்த்திருந்தது. இலங்கை அணி மீது மீண்டும் ஒரு தாக்குதலை இந்திய ஆதரவுடன் செய்யவதற்காகவே புலிகள் உறுப்பினர்களுக்கும் தாவூத்திற்கும்? தொடர்பு என அண்மையில் இந்திய உளவுத்துறை கூறியதாக செய்தி விட்டிருக்கலாம்.

பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!

1 month 4 weeks ago
🔴Exclusive - செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது! - selvam adaikalanathan">செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது!

நிரூபணவாதி

1 month 4 weeks ago
எழுதுங்கள் அல்வாயன்................ உங்களின் எழுத்துகளை வாசித்து ரசிப்பதற்கு இங்கு பலர், நான் உட்பட, இருக்கின்றார்கள்.................👍. எழுதுவதில் உங்களுக்கு சோம்பேறித்தனமா................ ஊர்ப் புதினம் பகுதிகளில் சில திரிகளில் பிளந்து கட்டுகின்றீர்களே..................🤣. அதே உற்சாகத்துடன் இங்கேயும் எழுதுங்கள்.................🤝.

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

1 month 4 weeks ago
காஜலிசம்=சோசலிசம்=கம்யூனிசம் ?! "எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிவிடும். இது வாழ்க்கையின் நிலையாமைக்கான ஒரு உதாரணம். அதற்காக, இன்று நம்மிடம் உள்ளதை சிறப்பாகப் பயன்படுத்துவோம்." என்று பலர் கூறுகின்றனர். ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி "காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

1 month 4 weeks ago
அவர்களுக்குப் புரியும். புரிந்தும் என்ன பயன் ? மீண்டும் இதே நபர்களே தேர்தலில் நின்று வெல்கிறார்கள். அல்லது மாற்றீடாக ஒரு பைத்தியத்தை வெல்ல வைக்கிறார்கள்.

நிரூபணவாதி

1 month 4 weeks ago
முயற்சி பண்ணினால் கடவுள் எழுதிக்கொடுக்கும் அந்த காகிதமும் கிடைக்கும் ...வாழ்த்துக்கள் ரசோ.. இடக்கு மடக்கு எழுத்துக்கள்.... அதை எவர்மூலம் வாசித்தாலிம் சிறப்பு... நானும் எத்தனயோ விடையங்களை எழுத நினைக்கின்றேன் ...சோம்பல்தனம் டடுத்து விடுகின்றது...

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

1 month 4 weeks ago
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸார் ஈடுபடவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கம் 12 Nov, 2025 | 04:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது. தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன. பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது. கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/230180

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month 4 weeks ago
'இந்திய அணி கொடுத்த பிறந்த நாள் பரிசு' - மகளிர் கிரிக்கெட் அணியில் பணியாற்றிய தமிழக மருத்துவர் பட மூலாதாரம், Harini Muralidharan கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி. இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள், இந்திய அணி தோல்விகளிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், இந்த அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்த விஷயங்கள் என இந்தப் பேட்டியில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் ஹரிணி. கேப்டன், துணைக் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் ஆகியோர் முக்கியமான தருணங்களில் என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்மிடம் அவர் கூறினார். உலக சாம்பியன் அணியின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். அந்த உணர்வு எப்படி இருக்கிறது? உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் மருத்துவராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே பெரிய விஷயம். அதற்கே முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். அதன்பிறகு அந்தப் பயணத்தில் ஒன்றாக இருந்து, அணியோடு வெற்றி, தோல்விகள் அனைத்தையும் சந்தித்து, அந்த உலகக் கோப்பையையும் வென்ற அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தையே இல்லை. அந்த நிமிடங்கள் எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தான் வந்தது. சொல்லப்போனால் அப்போது எதுவுமே தோன்றவில்லை, ஆனால் எங்களைச் சுற்றிப் பேசிய ஒரு விஷயம் பின்பு புரிந்தது. அது என்னவெனில், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எப்படி 1983 உலகக் கோப்பையோ அதுபோல் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வருட வெற்றி என்றார்கள். அதைக் கேட்கும்போது புல்லரித்தது. இது மிகவும் விசேஷமான ஒரு தருணம். பட மூலாதாரம், Harini Muralidharan படக்குறிப்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மருத்துவர் ஹரிணி முரளிதரன் ஒரு கிரிக்கெட் அணியில் உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது? இந்த அணியில் மருத்துவராக உங்களுடைய பங்கு என்ன? மருத்துவம் முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது சிலர் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தை பரிந்துரைத்தனர். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, பாசு சங்கரிடம் (இந்திய அணிக்கு ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தவர்) இன்டர்ன்ஷிப் (internship) செய்தேன். அப்போது ஒரு மாதத்திலேயே எனக்கு இதுதான் எதிர்காலம் என்று தோன்றிவிட்டது. அதன்பிறகு பிரிட்டனில் முதுகலை பட்டம் பெற்றேன். இப்போது ஆர்சிபி (RCB), இந்திய அணி என்று பயணிக்கிறேன். ஸ்போர்ட்ஸ் மருத்துவம் என்பது 'காயம் மேலான்மை' (injury management) பற்றியது. முக்கியமாக ஒரு காயம் ஏற்படுவதை எப்படித் தவிர்க்கலாம், ஒருவேளை காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்பன முக்கியமான விஷயங்கள். அதிலிருந்து தொடங்கி, ஊக்கமருந்து பயன்பாட்டைத் தடுப்பது எப்படி என்பதிலும் நாங்கள் பங்களிக்கவேண்டும். மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் ஊட்டச்சத்து, கொஞ்சம் உளவியல் ஆகியவையும் சேர்ந்ததுதான் ஸ்போர்ட்ஸ் மருத்துவம். இதுவே ஒரு அணிக்குள் ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரெந்த் அண்ட் கண்டிஷனிங் (strength & conditioning) பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், உளவியல் ஆலோசகர் என தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருப்பார்கள். அதேசமயம் வீரர்களும் தனியாக தங்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சியாளர்கள் வைத்திருப்பார்கள். அப்படியிருக்கும்போது நான் முக்கியமாக கவனத்தில் கொள்வது, ஒரு தொடருக்கு நடுவே எந்த மாற்றமும் கொண்டுவரக்கூடாது என்பது. அந்தந்த தருணங்களில் அந்த வீரருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும். காயம் மேலாண்மை என்று பேசும்போது, இந்த இந்திய அணியில் உங்களுக்கு பல சவால்கள் இருந்திருக்கும். ஐந்து வாரங்கள் நடக்கும் ஒரு மிகப் பெரிய தொடரில் அனைவரையும் ஃபிட்டாக வைத்திருப்பது என்பதே மிகப் பெரிய சவால்தானே? பொதுவாகவே இப்போது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி பெண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஆஃப் சீசன் (Off Season - போட்டிகள் இல்லாத காலகட்டம்) என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒரு வீரரின் ஃபிட்னஸ் முன்னேற்றம் பற்றிய எங்களுடைய திட்டங்கள் ஓய்வு நேரத்தை பொறுத்துத்தான் அமையும். ஆனால், இப்போது வீரர்களுக்கு அவ்வளவாக நேரமே கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ரெகவரி நேரம் (recovery time) மிகவும் குறைவு. இந்த உலகக் கோப்பைக்கு முன்புகூட அவர்கள் ஒரு தொடரை முடித்துவிட்டு (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) நேராக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அப்படியிக்கும்போது அதன் தாக்கம் நிச்சயம் இதில் இருக்கும். ஆனால், நான் அதை சவால் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு வீரருக்குமான தேவை என்ன, அவர்கள் எந்த அளவுக்கு ஓய்வு எடுக்கிறார்கள், அவர்களின் ரெகவரி நேரம் என்ன என்பதை கணக்கிட்டோம். ஒரு சிறு வலியாக இருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும், ஃபிசியோ தேவையா, மருந்துகள் தேவையா, மருந்துகள் என்றால் என்ன கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டோம். உதாரணமாக ஆன்டிபயாடிக்ஸ் (antibiotics) கொடுக்கும்போது உடல் பலவீனமாகும். அதனால் அனைத்து விஷயங்களையும் சரியாக அலசி ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா சரி, இந்த உலகக் கோப்பையின் முக்கிய தருணங்களைப் பற்றிப் பேசுவோம்... லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக 3 போட்டிகளைத் தோற்றது. அந்த 3 போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டு வந்தது எப்படி? அதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்னென்ன? இந்த அணியில் நான் பார்த்த நல்ல விஷயம் ஒன்று இருக்கிறது. அந்தத் தோல்விகள் அவர்களுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தன. ஆனால், அதை யாருமே நெகடிவாக வெளிக்காட்டவே இல்லை. 'இன்று நாம் தோற்றுவிட்டோம், அடுத்த போட்டியில் ஜெயித்துவிடலாம்' என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். நானாக இருக்கட்டும், அணியில் இருந்த பயிற்சியாளர் குழுவாகட்டும், அனைவருமே உரையாடல்களை பாசிடிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். யாரிடமும் தோல்வியைப் பற்றிப் பேசாமல், அடுத்த போட்டிக்கு, அடுத்த பயிற்சிக்கு என்ன செய்யப்போகிறோம், வீரர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்யப்போகிறோம், அவர்களை எப்படி அடுத்த வெற்றிக்குத் தயார் செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் உரையாடல்களாக இருந்தது. அனைவருமே அடுத்த நாள் பற்றித்தான் யோசித்தார்களே தவிர, முந்தைய நாள் பற்றி யாரும் பேசவில்லை. அதுவே வீராங்கனைகளுக்கு ஒரு நல்ல உத்வேகமாக அமைந்தது என்று நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர் குழுவில் யாரும் அந்தத் தோல்விகளைப் பற்றிப் பேசவில்லை எனும்போது, 'அவர்கள் நம்மை நம்புகிறார்கள். நமக்காக உழைக்கிறார்கள்' என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்ககூடும். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே! ஏனெனில், தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு அரையிறுதி இடம் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விக்குப் பின் என்ன மாற்றம் நடந்தது? நிச்சயமாக அந்த மூன்றாவது தோல்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அந்தத் தொடரின்போது வீராங்கனைகளின் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். 'இந்தப் போட்டியை விட்டுவிட்டோமே' என்ற கவலை அவர்களிடத்தில் இருந்தது. அங்கு நடந்த அழகான விஷயம் என்னவெனில், அணியின் கேப்டனும் (ஹர்மன்ப்ரீத் கவுர்) துணைக் கேப்டனும் (ஸ்மிரிதி மந்தனா) பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டார்கள். 'இது எங்கள் அணி, அந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம், நாங்கள் இந்த அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள். கேப்டனும் தலைமைப் பயிற்சியாளரும் இன்னொரு அழகான விஷயம் சொன்னார்கள். அங்கிருந்த சப்போர்ட் ஸ்டாஃப் (support staff) அனைவரையும் பார்த்து உங்களுக்காக இதை வென்றுகொடுக்கிறோம் என்றார்கள். வீராங்கனைகள் எங்களுக்காக பேசியது மிகவும் சிறப்பான ஓர் உணர்வைக் கொடுத்தது. இந்த வீராங்கனைகள் அவர்களுக்காக என்று நினைக்காமல், ஒருவருக்கொருவர் ஆடவேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அதுதான் இந்த அணியின் சிறப்பம்சம். நீங்கள் சொன்னதுபோல், ஸ்மிரிதி தானே அந்தத் தோல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறினார். தன்னுடைய விக்கெட் தான் தோல்விக்கு வித்திட்டது என்று வெளிப்படையாக சொன்னார். சொன்னதுபோல் பொறுப்பை ஏற்று அடுத்த போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். அவரை ஆர்சிபி அணியில் இன்னும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இங்கிலாந்து டிஸ்மிசல் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அடுத்த சில தினங்களில் ஸ்மிரிதியிடம் என்ன மாறியது? அவரிடம் எதுவும் அதிகமாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. அவர் தலைமைப்பண்பை நன்கு வெளிப்படுத்தினார் என்றுதான் நான் சொல்வேன். ஸ்மிரிதி அன்று களமிறங்கும்போது 'நான் என்னுடைய 100% கொடுப்பேன் என்றுதான் இறங்கினார். ஆனால், அவர் எப்போதுமே அந்த மனநிலையில் தான் களமிறங்குவார். அவர் அதே மனநிலையில் தான் இருந்தார். அதேசமயம், என்னதான் பொறுப்பை அவர் தன் தோள்களில் ஏற்றுக்கொண்டாலும், இந்த இந்திய யூனிட் எப்போதும் ஓர் அணியாகவே செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருமே அந்தப் போட்டிக்கு நன்கு தயாரானார்கள். அந்தப் போட்டிக்கு முன்பு நடந்த 2 பயிற்சி செஷன்களிலுமே மிகவும் தீவிரமாக பயிற்சியெடுத்தார்கள். அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இருவரும் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டனர் என்கிறார் மருத்துவர் ஹரிணி. அந்த இங்கிலாந்து தோல்வி உங்களுக்கு பெர்சனலாகவும் வருத்தமளித்திருக்குமே! ஏனெனில், அன்று (அக்டோபர் 19) உங்களுடைய பிறந்த நாள் வேறு... நான் இந்த பணிக்கு விண்ணப்பித்த பிறகு, 'என் பிறந்தநாளன்று இந்திய அணியுடன் இருக்கவேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 2 தோல்விகளுக்குப் பிறகு அன்று வீராங்கனைகள் சற்று பாசிடிவாகத்தான் இருந்தார்கள். 'இன்னைக்கு எனக்காக ஜெயித்துக் கொடுத்திடுங்க' என்று விளையாட்டாக சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால், போட்டி முடிந்த பிறகு அனைவருக்கும் மிகவும் கனமாக இருந்தது. அந்த நிலையிலும் கூட வீராங்கனைகள் கேக் வெட்டுவதற்காக எடுத்துவந்தார்கள். நான் வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் கேக் வெட்ட வைத்தார்கள். எல்லாம் முடித்து கிளம்பும்போது பேருந்தில் ஜெமி (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) அருகில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவர்தான், 'சாரி மேம் உங்களுக்காக ஒரு பிறந்த நாள் பரிசு கொடுக்க முடியவில்லை' என்று வருந்தி கூறினார். 'பரவாயில்லை ஜெமி, 2ம் தேதி (நவம்பர் 2 - இறுதிப் போட்டி நடந்த நாள்) பரிசு கொடுங்கள் என்று சொன்னேன். அன்று இறுதிப் போட்டியை வென்றதும், பரிசுக்கு நன்றி என்று ஜெமியிடம் சொன்னேன். கட்டிப்பிடித்து 'ஹேப்பி பர்த்டே மேம்' என்று அவர் சொல்லிச் சென்றார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஒரு மிக முக்கியமான செயல்பாட்டை இந்த உலகக் கோப்பையில் கொடுத்தார். ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தொடரின் தொடக்கத்தில் இரண்டு டக் அவுட்கள், பின்னர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், அதன்பிறகு பேட்டிங் பொசிஷன் மாற்றம் வேறு. அனைத்தையும் கடந்து அசத்தினார். ஆனால், அவரும் கூட உளவியல் ரீதியாக கஷ்டப்பட்டதாகக் கூறினார். நீங்களும் ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் உளவியலும் ஒரு அங்கம் என்று சொன்னீர்கள். உங்கள் பார்வையில் ஜெமியின் இந்தப் பயணம் எப்படி இருந்தது? ஜெமி போன்று ஒரு பாசிடிவான குதூகலமான ஒரு ஆளைப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர் அவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார் என்பதே அந்த பேட்டியைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் தன்னுடைய அறையில் அந்த உணர்வுகளோடு போராடியிருக்கிறார். அதை நினைக்கும்போதே எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவர் வெளியில் ஒரு இடத்தில் கூட அந்த உணர்வுகளை காட்டிக்கொள்ளவில்லை. அவர் எல்லோர் மீதும் அக்கறை செலுத்துவார், அனைத்து விஷயங்களிலும் அக்கறை செலுத்துவார். மும்பையில் அவர் வீட்டில் இருந்து அவருக்காக ஏதாவது உணவுப்பொருள் வருகிறதென்றால், அது மொத்த அணிக்கும் வருமாறு பார்த்துக்கொள்வார். மிகவும் பாசிடிவான நபர் அவர். அந்த தருணத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே பார்க்கும் ஒருவர் அவர். அவுட் ஆனாலும் கூட, அடுத்து ஃபீல்டிங்கில் எப்படி பங்களிக்கலாம் என்று யோசிப்பவர். அவரைப் பொறுத்தவரை எல்லாமே அணிக்காகத்தான். அதுதான் முதலில். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகக் கோப்பையின்போது உளவியல் ரீதியாக தான் அவதிப்பட்டதாகக் கூறியிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. 338 என்ற இலக்கை அதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் யாரும் சேஸ் செய்ததில்லை. அதை இந்தியா மிகப் பெரிய அரங்கில் நிகழ்த்திக் காட்டியது. ஆனால், அசாத்தியம் என்று கருதப்பட்ட விஷயம் எப்படி சாத்தியமானது. இன்னிங்ஸ் இடைவெளியில் என்ன நடந்தது? அப்போது யாரும் அதிகமாகப் பேசிய நினைவு இல்லை. அனைவரும் தயாராகிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் ஒரேயொரு விஷயத்தை அங்கிருந்த போர்டில் ஒரு விஷயத்தை எழுதினார். 'நாம் அவர்களை விட 1 ரன் அதிகமாக எடுப்போம்' என்பதை எழுதிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். எல்லோரும் தயாரானார்கள். சென்று கூடுதலாக அந்த ரன்களையும் எடுத்துவிட்டார்கள். தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று ஓர் உலகக் கோப்பையை வென்றுகொடுத்திருக்கிறார். அவர் இந்த அணியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? நான் பார்த்தவரைக்கும் அவர் மிகவும் நிதானமான நம்பிக்கையான பயிற்சியாளர். அவருக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன தேவையோ அதை சரியாகத் திட்டமிட்டு, சரியாக அதை தொடர்புகொள்கிறார். இது முதல் விஷயம். இரண்டாவதாக, ஒரு வீரரின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வீரரை 100% நம்புகிறார். அந்த வீராங்கனை கொடுக்கும் கருத்துகளை (feedback) ஏற்றுக்கொண்டு திட்டமிடுகிறார். வீரர்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் அதுதான். 'நீங்கள் இந்த விஷயத்தில் வல்லுநர், இதுதான் சிறந்தது என்று நீங்கள் பரிந்துரைத்தால் நாம் அதைச் செய்வோம்' என்கிறார். அவர் எதையும் முயற்சி செய்யாமல் விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் செய்தால் நல்ல முடிவு கிடைக்குமா, அதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா, அப்படியிருந்தால் அதை நாம் செய்துவிடுவோம் என்று சொல்பவர். இதுவொரு மிகச் சிறந்த பண்பு. ஒவ்வொருவரின் மீதும் மரியாதை செலுத்தி, அவர்கள் மீது நம்பிக்கையும் வைக்கும்போது இந்த அணி ஒரு குடும்பம் போல் ஆகிவிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளரான அமோல் மஜும்தார் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடர் இந்த வெற்றியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? டபிள்யூ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக மிகப் பெரியது. அதை மறுக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் தொடர் அட்டவணைகள் என்பது அவ்வளவாக இருந்திருக்கவில்லை. நம்முடைய இந்தியா மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று தேசிய அணிக்கு வீரர்களை அடையாளம் காண்பது என்பது நடைமுறையில் கடினமான ஒன்று. இந்த இடத்தில் டபிள்யூ.பி.எல் மேடை நன்கு இந்திய கிரிக்கெட்டுக்கு உதவியிருக்கிறது. இந்த 3 ஆண்டுகளில் வீரர்களின் தரத்தில், ஃபிட்னஸில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சீசனில் இருந்ததை ஒப்பிடும்போது இப்போது நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. இங்கு வாய்ப்பு பெற்ற வீராங்கனைகள் பிரகாசமாக ஜொலிப்பதற்கும், புதிதாக வீராங்கனைகள் விளையாட ஆசைப்படுவதற்கும் இது ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இவ்வளவு ஏன் எங்களைப் போன்ற சப்போர்ட் ஸ்டாஃப்கள் கூட நிறையப் பேர் அங்கிருந்துதான் வந்திருக்கிறோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0rpyd1pkd4o

நிரூபணவாதி

1 month 4 weeks ago
🤣................ 'கடவுள் இருக்காரு அல்வாயன்...............', ஆனால் கோயில் மண்டபத்தில் வைத்து எனக்கு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு அவர் என்னோடு இதுவரை அவ்வளவு நெருக்கம் இல்லை போல............ 'மானிடனே, உன்னுள் இருந்து எழுதுவதும் நானே........... அல்வாயனின் உள்ளே இருந்து வாசிப்பதும் நானே..................' என்று இன்று இரவு கனவில் வந்து நிற்கப் போகின்றார்............🤣.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

1 month 4 weeks ago
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் . அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார். இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார். இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/230188

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம்; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

1 month 4 weeks ago

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர்

12 Nov, 2025 | 04:24 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

டக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில்  இராணுவத்தினர், பொலிஸார்  இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் .

அதுமாத்திரமன்றி வடக்கு  மற்றும்  கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும்  கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை.  உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.  

யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது  6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது.

போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும்  யாழ் மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும்  கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு  ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார்.

இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/230188

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

1 month 4 weeks ago
எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!