Aggregator

ஈரோட்டில் கர்ப்பிணி பழங்குடி பெண்ணை காவல்துறை, சுகாதாரத்துறை சேர்ந்து தேடுவது ஏன்?

1 month 4 weeks ago
ஈரோட்டில் சுகாதாரத் துறை தேடிய பழங்குடி கர்ப்பிணி பெண் சொந்த ஊர் திரும்பினார் - என்ன நடந்தது? படக்குறிப்பு,பழங்குடி கர்ப்பிணி சேவந்தி கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 17 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து தேடி வந்த சேவந்தி என்ற பழங்குடி கர்ப்பிணி பெண் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பிரசவ வலி இன்னும் வரவில்லை. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவர்களுக்கு‌ அவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக குடும்பத்தார் கூறியுள்ளனர். அவரை சுகாதாரத்துறையினர் தேட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை. இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம் தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி. அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. படக்குறிப்பு,சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும். தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை. அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார். படக்குறிப்பு,சேவந்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். "அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர். சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தாளவாடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார். அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்) சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன். "அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர். சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர். ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்? சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம். "அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளவாடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார். இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன? மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம் கொல்லிமலை பழங்குடிகளின் உணவுமுறையையே மாற்றிய காலநிலை மாற்றம் - ஆய்வில் தெரிய வந்த உண்மை பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். "பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார். பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார். மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce37ewp130do

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

1 month 4 weeks ago
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் Published By: VISHNU 19 JUL, 2025 | 12:54 AM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ் . பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார். https://www.virakesari.lk/article/220357

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

1 month 4 weeks ago

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

Published By: VISHNU

19 JUL, 2025 | 12:54 AM

image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். 

1002310941.jpg

யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ் . பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார். 

1000951651.jpg

அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார்.

1000951625.jpg

https://www.virakesari.lk/article/220357

டெட்டானஸ் தடுப்பூசி

1 month 4 weeks ago
டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும். உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும். செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை. தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும். தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு. தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின் ஆறாவது வாரம் பத்தாவது வாரம் பதினான்காம் வாரம் அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள் அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள் அதற்குப் பின் பத்து வயதிலும் பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும். காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும். ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை. டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும் அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது. சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்.. அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம் டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://www.facebook.com/100002195571900/posts/24463025596687286/?rdid=9R4LokMDKkQyVDfQ#

டெட்டானஸ் தடுப்பூசி

1 month 4 weeks ago

519175913_24463025363353976_208348608358

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும்.

செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை.

தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்

ஆறாவது வாரம்

பத்தாவது வாரம்

பதினான்காம் வாரம்

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள்

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள்

அதற்குப் பின் பத்து வயதிலும்

பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,

ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும்

அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்..

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம்

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

https://www.facebook.com/100002195571900/posts/24463025596687286/?rdid=9R4LokMDKkQyVDfQ#

யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு!

1 month 4 weeks ago
வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை மீட்பு 19 JUL, 2025 | 09:31 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (18) வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த எறிகணையை கைப்பற்றியுள்ளனர். இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/220365

ஓடும் பேருந்தில் மற்ற பயணிகளுக்கு தெரியாமல் குழந்தையை பிரசவித்து வெளியே வீசிய பெண்

1 month 4 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ப்ரியங்கா ஜக்தப் பிபிசி மராத்திக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் *எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பத்ரி - செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை. குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேருந்துக்கு வெளியே வீசப்பட்டது? நடந்தது என்ன? ஜூலை 15-ஆம் தேதி காலை வழக்கம் போல் பத்ரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் காவல்துறை அதிகாரி அமோல் ஜெய்ஸ்வால். அப்போது அவருக்கு தன்வீர் ஷேக் என்ற நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. தன்வீர் மிகவும் பதற்றத்துடன், "பச்சிளம் குழந்தை ஒன்றை யாரோ பேருந்தில் இருந்து தூக்கி வீசிச் சென்றுள்ளனர். செலு சாலைக்கு அருகே இருக்கும் கால்வாய்க்கு அருகே வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் உதவி எங்களுக்கு அவசரமாக தேவை," என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் தன்வீர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தார் ஜெய்ஸ்வால். காவல்துறையினரிடம் மேற்கொண்டு பேசிய தன்வீர், "நாங்கள் வழக்கம் போல் சாலையின் இந்த பகுதியில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது ஓடும் பேருந்தில் இருந்து ஏதோ ஒன்று தூக்கி வீசப்படுவதை பார்த்தோம். 100 அடிக்கு முன்னாள் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு சில நிமிடம் அங்கே நின்ற பேருந்து, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது," என்று கூறினார். அந்த பொருள் தூக்கி வீசப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கே கறுப்பு - நீல நிற துணியில் சுற்றப்பட்ட ஆண் குழந்தையை பார்த்தேன் என்று தன்வீர் கூறியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமோல் ஜெய்ஸ்வாலிடம் தன்வீர், அந்த பேருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அமோல் ஜெய்ஸ்வால் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் மகேஷ் லந்தேகேவிடம் தகவலை தெரிவித்து, ஆம்புலன்ஸை வரவழைத்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் மகேஷ், கான்ஸ்டபிள் விஷ்ணு வாக் மற்றும் அவருடைய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? சம்பவ இடத்திற்கு சென்ற மகேஷின் குழுவினர் அந்த பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உரிமையாளர் சுயோக் அம்பில்வாதேவுக்கு அழைப்பு விடுத்து நடந்த சம்பவத்தை அவர் எடுத்துரைத்தார். பேருந்து எங்கே இருந்தாலும் அதனை உடனடியாக நிறுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். பிபிசி மராத்தி அந்த பேருந்து உரிமையாளரிடம் பேசியது. "காலை 7.30 மணி அளவில் மகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. பச்சிளம் குழந்தையை யாரோ ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றதாக அவர் கூறினார். அந்த பேருந்து எங்கே சென்று கொண்டிருந்தாலும் அதனை உடனே நிறுத்தும்படியும், காவல்துறையினர் வரும் வரை அதில் இருந்து யாரும் இறங்கக் கூடாது என்றும் மகேஷ் கேட்டுக் கொண்டார்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சுயோக் பேருந்தை அடைந்த அதேநேரத்தில் காவல்துறையினரும் அங்கே வந்துவிட்டனர். சுயோக் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பேருந்தை சோதனை செய்து, பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற நபர்களை அழைத்துச் சென்றனர். குழந்தையின் அம்மாவை பர்பானியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பேருந்தில் பயணித்த மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்தினர். பத்ரி காவல் நிலையத்திற்கு பேருந்து எடுத்துச் செல்லப்பட்டு முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டது. "நாங்கள் அங்கே சென்ற போது, அப்பெண் பேருந்திலேயே அக்குழந்தையை பிரசவித்திருக்கிறார் என்று தெரியவந்தது. ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை எனவே அங்குள்ள யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனர்," என்று சுயோக் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். பேருந்து பயணத்தின் போது அப்பெண் பிரசவித்ததற்கான அனைத்து தடயங்களையும் காவல்துறையினர் சேகரித்துவிட்டனர் என்றும் அவர் கூறினார். குழந்தை தூக்கி எறியப்பட்டது ஏன்? காவல்துறையினர் வழங்கிய தகவலின் படி, குழந்தையின் தாய்க்கு வயது 19. தந்தைக்கு 21. பர்பானி பகுதியில் வசித்து வரும் அவர்கள் சிகாராபூரில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அமோல் ஜெய்ஸ்வால் பதிவு செய்துள்ள புகாரில், "எங்களுக்கு அக்குழந்தை வேண்டாம் என்பதால் நாங்கள் வீசிச்சென்றோம்," என்று அந்த தம்பதி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். "குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் அவர்கள் குழந்தையை துணி ஒன்றில் சுற்றி ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றுள்ளனர்," என்று புகாரில் குறிப்பிடப்படுள்ளது. காவல் ஆய்வாளர் மகேஷ் இதுகுறித்து பேசும் போது, குழந்தையின் மருத்துவ ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான், குழந்தை பிறக்கும் போதே இறந்து தான் பிறந்ததா அல்லது தூக்கி வீசப்பட்டதால் இறந்ததா என்பது தெரிய வரும் என்று குறிப்பிட்டார். இந்த தம்பதியினர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை அறிக்கை முடிவுகள் வந்த பிறகு விசாரணைக்கு மறுபடியும் அழைக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. அந்த தம்பதியினர் மீது ஐ.பி.சி. 94, 3(5) பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையின் உடலை கைவிட்டுச் செல்லும் குற்றத்திற்காக பதியப்படும் பிரிவு இது. குழந்தையின் தந்தையிடம் பிபிசி மராத்தி பேச முயற்சி செய்தது. ஆனால் அவரிடம் இருந்து எந்த கருத்தையும் பெற இயலவில்லை. அவர்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகு இந்த செய்தி புதுப்பிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4rd4kkxlxo

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!

1 month 4 weeks ago
சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்கு! – பிரதமர் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது எனவும், கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ” அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை எனவும் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம்‘ பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது எனவும், கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ” அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை எனவும் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம்‘ பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439714

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி

1 month 4 weeks ago
மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி முன்னெடுப்பு! மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் நேற்று (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது. இதேவேளை, குறித்த நிகழ்வில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன. இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டதுடன், வீதிகளில் மக்களும் கூடியிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர். https://athavannews.com/2025/1439760

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!

1 month 4 weeks ago
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு! திய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது. குறித்த விளக்கத்தின்படி, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் ஐந்து பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. https://athavannews.com/2025/1439692

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!

1 month 4 weeks ago

SLK-2014-Noorani-0373.jpg.webp?resize=75

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் எதிர்ப்பு!

திய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று (17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்தது.

குறித்த விளக்கத்தின்படி, 10 மற்றும் 11 ஆம் தரங்களில் ஐந்து பாடங்கள் கட்டாய பாடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தேர்வுப் பாடங்களில் வரலாறு மற்றும் அழகியல் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் அதிபர்கள் சங்கங்கள் இன்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

https://athavannews.com/2025/1439692

யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு!

1 month 4 weeks ago
யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது . குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1439756

யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு!

1 month 4 weeks ago

New-Project-1-12.jpg?resize=600%2C300&ss

யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .

குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர்.

இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது.

இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.

மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1439756

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

1 month 4 weeks ago
பெற்ற மகனும் கட்டிய மனைவியும் நடக்கப்போவது தெரியாமல் நிம்மதியாக தூங்க, பாதகன் சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து சென்றான். அவன் உடலை மறைத்த நயவஞ்சக சீடர், அவர் ஞானம் எய்திவிட்டார் என்கிற பொய்யுரைக்க அந்தப் பொய்யில் மதத்தை தோற்றுவித்து வயிறு வளர்த்தனர் அவர்தம் சீடர். அதன் உண்மையை புரிந்துகொண்ட சிங்களம் தன் பங்குக்கு புத்தனை வைத்து கொலை, கொள்ளையடிக்கிறது. புத்தன் தான் கடவுளல்ல, தான் ஒரு ஞானி என்பதை வெளிப்படுத்தாமல் மறைத்ததும் நயவஞ்சகமே!

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? - அசேப எதிரிசிங்க

1 month 4 weeks ago
சிங்களவர்களின் அழிவுக்கும் காரணமான, அவர்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டியுங்கள், அவர்கள் மேலும் விசாரணையை கோருங்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக, செல்வாக்கிற்காக நாட்டு மக்களை பலி கொடுத்ததும் வளங்களை அழித்தும் சூறையாடிய, காலத்திற்கும் எங்களை எதிரிகளாக்கிய இனவாதிகளே காரணம். எங்களது, உங்களது இழப்பில், பகைமையில் குளிர் காய்ந்தது அவர்கள் மட்டுமே. அவர்கள் தண்டிக்கப்பட்டாலேயே இப்படியானதொரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். சிங்களவரை ஏமாற்றி போர் செய்வதும் பின்னர் அவர்களை வைத்து தப்புவதும் நிறுத்தப்பட வேண்டும். நீங்கள் ஒன்றும் நாட்டில் தேசியம் வளர வேண்டுமென்று இங்கு குரல் எழுப்பவில்லை, அப்படியிருந்திருந்தால்; எப்பவோ எழுப்பியிருப்பீர்கள். இப்போ உங்களுக்கு சன்மானம் தரப்பட்டிருக்கிறது, உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது, சிங்கள மக்கள் உண்மையை அறிந்து குரல் கொடுக்காமல் தடுப்பதற்கும் அவர்களை அதிலிருந்து திசை திருப்புவதற்கும். இப்போ மக்கள் உங்களை கேட்க வேண்டிய கேள்வி; இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தாய், இதுவரை உனக்கு இதுபற்றி தெரிந்திருக்க வில்லையா என்கிற கேள்வியே. இனவாதிகளின் செல்வாக்கு அழிந்து விட்டதால், காலம் கடந்து விட்டதால் நீங்கள் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள், இன்னும் எந்தெந்த பாம்பு எந்த புற்றிலிருந்து கிளம்பி வரப்போகிறதோ தெரியவில்லையே. உண்மை தானாகவே கிளம்பியிருக்கிறது, உண்மையை விழுங்கிய மண் வெளியே தள்ளுகிறது. போராடுங்கள், தலை குனிவது அவற்றை மறைக்க அவற்றுக்கு தடைபோட முயலும் நீங்களுந்தான்.

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

1 month 4 weeks ago
ஒருபுறம் செம்மணி புதைகுழி, மறுபுறம் புலம்பெயர்ந்தோரின் எழுச்சி, தன்னை விரட்டுகிறது என்பது சிங்களத்தின் கவலை, பயம். எத்தனை நாடுகளை சீரழித்து, அடிமைப்படுத்தி தம்மை வளப்படுத்திக்கொண்ட நாடுகள் இன்று மனிதாபிமானிகள். ஆனால் அடிமை, அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் வழியில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தாங்களும் செய்த கொடூரங்களை மறைக்க இப்படி கூச்சல் போடுவது வழமை. இலங்கை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஐ .நா .அமர்வுகளில் போது பல நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்து அறிக்கைகள் தாயாரித்தது. அதற்கு யாரும் சாதாரணப்பட்டவர்கள் உடன்படுவது இல்லை. சமூக ஊடகங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், சட்ட விடயத்தை கையாண்டவர்கள், சட்டத்தரணிகள் போன்ற விடயம் தெரிந்தவர்களே. இலங்கை அரசுக்காக இவ்வாறான அறிக்கைகளை தயாரித்து அவர்களை காப்பாற்றி பாராட்டும் பெற வைத்திருக்கிறார்கள். அவர்களே இலங்கை அரசு செய்த அடூழியங்களை நிஞாயப்படுத்துகிறார்கள், கண்டும் காணாததுபோல் இருந்தார்கள், இதற்கு அவர்களுக்கு ஊதியமுமுண்டு.