Aggregator

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

1 month 4 weeks ago

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும், இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/319082

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

1 month 4 weeks ago
கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும், இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/319082

ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஹரிணி அமரசூரிய

1 month 4 weeks ago
19 JUL, 2025 | 08:12 PM ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, "கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர். இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். இதன் போது கருத்துத் தெரிவித்த உயர்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவாகே, "புதிய கல்வி மறுசீரமைப்புடன் தொழில்சார் கல்வி நிறுவனங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம், தேர்ச்சியடையாத மாணவர்கள் தொழில்சார் கல்விக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் பாடசாலைக் கல்வியின் ஊடாகவே தொழில்சார் கல்வியை கௌரவமான முறையில் கற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்" என்றார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர, நிஹால் கலப்பத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/220412

ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்; ஹரிணி அமரசூரிய

1 month 4 weeks ago

19 JUL, 2025 | 08:12 PM

image

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

"கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக்  கொள்கைகள் வகுக்கப்பட்டன.

புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான   நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும்.

நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு  புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும்  ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர். இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள்

புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். 

இதன் போது கருத்துத் தெரிவித்த உயர்கல்வி பிரதி அமைச்சர்  நலின் ஹேவாகே, 

"புதிய கல்வி மறுசீரமைப்புடன் தொழில்சார் கல்வி நிறுவனங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் மூலம், தேர்ச்சியடையாத மாணவர்கள் தொழில்சார் கல்விக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் பாடசாலைக் கல்வியின் ஊடாகவே தொழில்சார் கல்வியை கௌரவமான முறையில் கற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்" என்றார். 

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர,  நிஹால் கலப்பத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/220412

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

1 month 4 weeks ago
இது நல்ல விடயம். விமான நிலையத்தில் கார் வாடகைக்கு எடுக்க ஏற்கனவே முன்பதிவு செய்து செல்பவர்களுக்கு இந்த நடைமுறை வசதியாக இருக்கும். அரச சேவைகளை மக்கள் பெறும் நடைமுறை இலகுவாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதே.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

1 month 4 weeks ago
புலிகளை தவறிழைக்க தூண்டினார்கள். ஊர்காவல் படை என்பது, கிழக்கில் தமிழ் முஸ்லீம் கலவரத்தை தூண்டுவதற்காக இராணுவப்பிரிவிலிருந்த ஒரு குழு. கிழக்கிலே தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால், தமது அடாவடிகளை நடத்த முடியாது என்பதற்காக, அவர்களை திட்டமிட்டு எதிரிகளாக்கியது. அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்தார்கள், இதனால் புலிகளை தூண்டி முஸ்லீம் மக்களை தாக்க வைத்து, அந்த வெறுப்பை, பகைமையை கொழுந்து விட்டு எரிய பண்ணுவதற்காக, மிகுதி கொலைகளை முஸ்லீம் ஊர்காவற்படையே செய்து, புலிகள் மீது பழியைப்போட்டு வன்மத்தை வளர்த்தனர். அமைதியாக இருந்த கிழக்கில் ஊர்காவல் படை எதற்கு ஸ்தாபிக்கப்பட்டது? அவர்களால் ஏன் அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லை? முஸ்லீம் அரபு நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு இதை பயன்படுத்தியவர்கள், அதை ஏன் தடுக்க தவறினார்கள்? முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தமிழரிடம் இருந்து பறித்து தருவதாக கூறியே இத்தனை அனர்த்தங்களை அரங்கேற்றினார்கள். தூர நோக்கற்ற முஸ்லிம்கள், அற்ப வார்த்தையை நம்பி தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் அதை உணரும்போது இவர்களை தூக்கி விடுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். எமது சொந்த நிலங்களை பறிக்கிறார்கள், விகாரை அமைக்கிறார்கள். இவர்களுக்கு இது நடப்பதற்கு எத்தனை நேரமாகும்? எனது அதிகாரத்தை பாவித்து இதை சாதித்தேன் என்கிறார் ஹிஸ்புல்லா. நாளைக்கு இந்த அதிகாரம் வேறொருவர் கைமாறும். அதிகாரம் ஒன்றுமில்லை, தமிழரை அழிக்க உதவியதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம், அனுரா அரசு இதையும் விசாரிக்க வேண்டும், இதற்கு அனுமதியளித்தது யார், ஏன் என விசாரித்தால், அங்கும் ஒரு குடும்பமே சிக்கும். அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை பெற்றுக்கொடுத்த பெருமை ஹிஸ்புல்லாவை சாரும். அனுரா அமைதியான ஒரு நாட்டை உருவாக்க விரும்பினால், இவை எல்லாம் விசாரிக்கப்படவேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அல்லது குடியுரிமை பறிக்கப்படவேண்டும். எதிர் காலத்தில் இவர்கள் அரசியல் செய்யவோ, அரச தொழில் புரியவோ முடியாதவாறு சட்டமியற்ற வேண்டும், தடை விதிக்க வேண்டும்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

1 month 4 weeks ago
எம்பியாக இருந்துமட்டும் என்னத்தை சாதித்தவராக்கும்? வரே வா அப்படி வழிக்கு என்று சொல்வார்கள். நேற்றுத்தான் சுமந்திரன், சாணக்கியன் இதை சொன்னால் விளைவு என்ன என்கிற மாதிரி கதை. இன்று இப்படி. சாணக்கியன் சிங்கள கட்சியிலிருந்து பதவிக்காக கட்சி தாவி இப்போ கிழக்கின் முதலமமைச்சர் பதவி கனவில், யாரிலும் நோகக்கூடாது என்று காத்திருக்கிறார். அன்று ஹிஸ்புல்லா சொன்னார், அதாவது கிழக்கில் முஸ்லீம், முதலமைச்சராக வந்தால் தமிழர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள் என்றார், அதே இன்று, ரவுப் கக்கீம் சொல்கிறார். தமிழரசுக்கட்சிகளோடு பல விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறார்களாம், முஸ்லிம்களுக்கென்று ஒரு மாகாணம் என்றால் அது கிழக்கு மாகாணம் தானாம், அதை தாங்கள் காத்துக்கொள்ள வேண்டுமாம். அப்போ சாணக்கியன் என்ன செய்வாரென ஆரூடம் கூறியாச்சு. முதலில் சாணக்கியன் தமிழரசில் போட்டியிடும்போதே தூஷண பிக்கரை கூட்டி வந்து அப்பாவி மக்களை பயமுறுத்தி வாக்கு சேர்த்தவர். அப்பவே அடித்து சொன்னேன் சாணக்கியனின் தந்திரத்தை. அங்கே முஸ்லிம்கள் காகித ஆலையை ஆட்டையைப்போட கங்கணம் கட்டுகிறார்கள். சிறீநாத், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்க போராடுகிறார்கள். சாணக்கியன் கனவில் மிதக்கிறார். இருந்து பாருங்கள், சாணக்கியன் கிழக்கின் முதலமைச்சர் ஆனால், இருக்கும் தமிழரின் நிலங்களும் பறிக்கப்படும். அவர்களுக்கு தமிழரும் தேவையில்லை, நிலங்களும் தேவையில்லை, பதவி மட்டும் வேண்டும். அதற்காகவே சாணக்கியன், சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு நுழைந்தனர். சிங்கள மக்களோடு வாழ்வது அதிஷ்ட்டம் என்றவர், வடக்கு கிழக்கில் எனது உயிருக்கு ஆபத்து இராணுவம் மற்றும் அதிரடிப்படையின் பாதுகாப்பு வேணும் என்று சிங்களத்திடம் கேட்டு பெற்று விட்டு, வடக்கு கிழக்கிலே வாக்கு கேட்க்கும் வெட்கம் கெட்டவர், சிங்களத்திடம் எதிர்த்து கேள்வி கேட்க்கும் தைரியம் இருக்கா? சொன்னாரே, மன்னாரில் மனித புதை குழி தோண்டினார்கள், அப்போ நானும் அங்கிருந்தேன், அதன் பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். செம்மணி புதைகுழி வெளிவந்தவுடன் பேட்டி கொடுக்கிறார். ஏன் அவரால் அதை முன்கொண்டு செல்ல முடியவில்லை? இவர் சட்டத்தரணிதானே? தமிழரின் பிரதிநிதி என்று வேறு அதிகாரம் செலுத்துகிறார். அப்போ ஏன் அவரால் முடியவில்லை? நீங்களும் அப்பப்போ சுமந்திரனுக்கு எதிரும் புதிருமாக கருத்துக்களை பதிந்து நடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நடிப்பு அவர்களை காப்பாற்றாது.

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

1 month 4 weeks ago
காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ் சிறுவர்களை - குறிவைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான சம்பவங்களை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக அனுபவித்ததாக பிபிசி ரேடியோ 4 இடம் கூறினார். இதேபோன்ற காயங்களுக்கு சிகிச்சை தேவை. “ஒரு நாளில் அவை அனைத்தும் வயிற்று துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை அனைத்தும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை கை அல்லது காலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும்,” என்று அவர் கூறினார். “இது கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு விளையாடுவது போல் உள்ளது, அவர்கள் இன்று தலையில் சுட முடிவு செய்கிறார்கள், நாளை கழுத்தில் சுடுவார்கள், மறுநாள் விதைப்பைகளில் சுடுவார்கள்.” பேராசிரியர் மேனார்டின் கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்து ஐடிஎஃப் பிபிசிக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. IDF soldiers deliberately wounding children in Gaza ‘like a game’, says British doctor Thu, July 17, 2025 at 3:35 PM GMT+1 Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza - REUTERS *This article contains an image of a malnourished infant which some readers may find distressing Severe malnutrition is spreading in Gaza and aid distributions supposed to stop famine have instead become a “death trap”, a top British surgeon has said. Professor Nick Maynard, a Oxford-based gastrointestinal surgeon currently in Gaza, added that snipers were deliberately targeting “certain body parts on different days, such as the head, legs or genitals” near US-Israeli run aid distribution points. Prof Maynard said “unprecedented levels” of severe malnutrition were directly contributing to preventable deaths among patients receiving surgery. “The malnutrition I’m seeing here is indescribably bad. It’s much, much worse now than a year ago”. Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza - REUTERS He added that colleagues he worked with a year ago were barely recognisable, having lost 20-30 kg due to severe food shortages. Critically, he said injured patients were dying because malnutrition was preventing them from healing properly. “The repairs that we carry out fall to pieces, patients get terrible infections, and they die. I have never had so many patients die because they can’t get enough food to recover,” he said. Prof Maynard said the Nasser hospital, in Khan Younis, southern Gaza, where he is currently based, had almost completely run out of intravenous liquid fluids, used to treat severely malnourished children. He added that four infants recently died from malnutrition in the neonatal ward. “I saw a seven-month-old who looked like a newborn. The expression ‘skin and bones’ doesn’t do it justice,” he said. A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation - AP Prof Maynard added that snipers appear to be targeting body parts including genitals and legs near the controversial US-Israeli Gaza Humanitarian Foundation’s (GHF) food aid collection points in southern and central Gaza “The medical teams here have also been seeing a clear pattern of people being shot in certain body parts on different days, such as the head, legs or genitals, which seems to indicate deliberate targeting,” said Prof Maynard. “These are mainly from the militarised distribution points, where starving civilians are going to try and get food but then report getting targeted by Israeli soldiers or quadcopters.” Local medics have also reported a pattern of snipers targeting Palestinians in the backside, according to the BBC. GHF, the Israeli-backed American organisation, limits food distribution to four fixed sites in southern and central Gaza, all guarded by private American security contractors and Israeli soldiers, in a move designed to wrest distribution away from aid groups led by the UN. Israel and the US have been criticised over near-daily shootings near the distribution sites, which have killed 875 Palestinians seeking food since May, according to the UN human rights office. British surgeon Prof Nick Maynard said he has “never had so many patients die because they can’t get enough food to recover” - Medical Aid for Palestinians (MAP) Israeli and international news organisations have talked to IDF reservists and a contractor working for GHF who confirmed that civilians were being fired on. Prof Maynard called the distribution sites “death traps”, saying he has mostly operated on young teenage boys who were trying to retrieve food for their families. “A twelve-year-old boy I was operating on died from his injuries on the operating table – he had been shot through the chest,” said Prof Maynard. “The enforced malnutrition and attacks on civilians we are witnessing will kill many more thousands of people if not stopped,” he said, adding that “getting adequate food and aid into Gaza is essential.” “The fact the world is letting Israel get away with this is deeply upsetting, something must be done to stop this collective punishment of the population of Gaza.” Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza - REUTERS Gaza’s more than 2 million Palestinians are living through a catastrophic humanitarian crisis, and the territory is teetering on the edge of famine, according to food security experts. Unrwa, the UN Relief Works Agency for Palestinian Refugees, recently reported one in 10 children brought to its clinics were malnourished, adding that the condition surged amid severe shortages of nutrition supplies. Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF), the medical NGO, said their teams are witnessing the highest levels of acute malnutrition ever recorded in two facilities in Gaza. Numbers of malnutrition in the Gaza City clinic, north of the enclave, almost quadrupled in less than two months, with cases soaring from more than 290 cases in May to over 980 cases at the beginning of July, said MSF. “This is the first time we have witnessed such a severe scale of malnutrition cases in Gaza,” said Mohammed Abu Mughaisib, MSF deputy medical coordinator in Gaza. “The starvation of people in Gaza is intentional, it can end tomorrow if the Israeli authorities allow food in at scale.” https://ca.news.yahoo.com/idf-soldiers-deliberately-wounding-children-162950060.html?guccounter=1

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

1 month 4 weeks ago

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

ரிச்சர்ட் கில்சீன்

சனி, ஜூலை 19, 2025 காலை 8:01

IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ் சிறுவர்களை - குறிவைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான சம்பவங்களை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக அனுபவித்ததாக பிபிசி ரேடியோ 4 இடம் கூறினார். இதேபோன்ற காயங்களுக்கு சிகிச்சை தேவை.

“ஒரு நாளில் அவை அனைத்தும் வயிற்று துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை அனைத்தும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை கை அல்லது காலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

“இது கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு விளையாடுவது போல் உள்ளது, அவர்கள் இன்று தலையில் சுட முடிவு செய்கிறார்கள், நாளை கழுத்தில் சுடுவார்கள், மறுநாள் விதைப்பைகளில் சுடுவார்கள்.”

பேராசிரியர் மேனார்டின் கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்து ஐடிஎஃப் பிபிசிக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

IDF soldiers deliberately wounding children in Gaza ‘like a game’, says British doctor

Thu, July 17, 2025 at 3:35 PM GMT+1

Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza

Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza - REUTERS

*This article contains an image of a malnourished infant which some readers may find distressing

Severe malnutrition is spreading in Gaza and aid distributions supposed to stop famine have instead become a “death trap”, a top British surgeon has said.

Professor Nick Maynard, a Oxford-based gastrointestinal surgeon currently in Gaza, added that snipers were deliberately targeting “certain body parts on different days, such as the head, legs or genitals” near US-Israeli run aid distribution points.

Prof Maynard said “unprecedented levels” of severe malnutrition were directly contributing to preventable deaths among patients receiving surgery.

“The malnutrition I’m seeing here is indescribably bad. It’s much, much worse now than a year ago”.

Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza

Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza - REUTERS

He added that colleagues he worked with a year ago were barely recognisable, having lost 20-30 kg due to severe food shortages. Critically, he said injured patients were dying because malnutrition was preventing them from healing properly.

“The repairs that we carry out fall to pieces, patients get terrible infections, and they die. I have never had so many patients die because they can’t get enough food to recover,” he said.

Prof Maynard said the Nasser hospital, in Khan Younis, southern Gaza, where he is currently based, had almost completely run out of intravenous liquid fluids, used to treat severely malnourished children. He added that four infants recently died from malnutrition in the neonatal ward.

“I saw a seven-month-old who looked like a newborn. The expression ‘skin and bones’ doesn’t do it justice,” he said.

A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation

A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation - AP

Prof Maynard added that snipers appear to be targeting body parts including genitals and legs near the controversial US-Israeli Gaza Humanitarian Foundation’s (GHF) food aid collection points in southern and central Gaza

“The medical teams here have also been seeing a clear pattern of people being shot in certain body parts on different days, such as the head, legs or genitals, which seems to indicate deliberate targeting,” said Prof Maynard.

“These are mainly from the militarised distribution points, where starving civilians are going to try and get food but then report getting targeted by Israeli soldiers or quadcopters.”

Local medics have also reported a pattern of snipers targeting Palestinians in the backside, according to the BBC.

GHF, the Israeli-backed American organisation, limits food distribution to four fixed sites in southern and central Gaza, all guarded by private American security contractors and Israeli soldiers, in a move designed to wrest distribution away from aid groups led by the UN.

Israel and the US have been criticised over near-daily shootings near the distribution sites, which have killed 875 Palestinians seeking food since May, according to the UN human rights office.

British surgeon Prof Nick Maynard said he has "never had so many patients die because they can't get enough food to recover"

British surgeon Prof Nick Maynard said he has “never had so many patients die because they can’t get enough food to recover” - Medical Aid for Palestinians (MAP)

Israeli and international news organisations have talked to IDF reservists and a contractor working for GHF who confirmed that civilians were being fired on.

Prof Maynard called the distribution sites “death traps”, saying he has mostly operated on young teenage boys who were trying to retrieve food for their families.

“A twelve-year-old boy I was operating on died from his injuries on the operating table – he had been shot through the chest,” said Prof Maynard.

“The enforced malnutrition and attacks on civilians we are witnessing will kill many more thousands of people if not stopped,” he said, adding that “getting adequate food and aid into Gaza is essential.”

“The fact the world is letting Israel get away with this is deeply upsetting, something must be done to stop this collective punishment of the population of Gaza.”

Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza

Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza - REUTERS

Gaza’s more than 2 million Palestinians are living through a catastrophic humanitarian crisis, and the territory is teetering on the edge of famine, according to food security experts.

Unrwa, the UN Relief Works Agency for Palestinian Refugees, recently reported one in 10 children brought to its clinics were malnourished, adding that the condition surged amid severe shortages of nutrition supplies.

Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF), the medical NGO, said their teams are witnessing the highest levels of acute malnutrition ever recorded in two facilities in Gaza.

Numbers of malnutrition in the Gaza City clinic, north of the enclave, almost quadrupled in less than two months, with cases soaring from more than 290 cases in May to over 980 cases at the beginning of July, said MSF.

“This is the first time we have witnessed such a severe scale of malnutrition cases in Gaza,” said Mohammed Abu Mughaisib, MSF deputy medical coordinator in Gaza.

“The starvation of people in Gaza is intentional, it can end tomorrow if the Israeli authorities allow food in at scale.”

https://ca.news.yahoo.com/idf-soldiers-deliberately-wounding-children-162950060.html?guccounter=1

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 month 4 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · tnoreoSpsdjuim717uu,ilt2t82e08u1 la85h50694ui:4cl62 1itag5u0 · உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ. ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி. தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ?

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

1 month 4 weeks ago
1- அவர்களை குப்பை என்றபடி சுமந்திரனினை குண்டுமணியாக்கும் பணிக்கான எனது கருத்து மட்டுமே. 2- பட்டறிவே பாடம் 3- உலகெங்கும் முக்கியமாக கனடாவில் அவருக்கான ஒருமித்த ஆதரவு இருக்கிறது வெளிக்கொண்டு வர பட்டிருக்கிறது. ஆனால் முள்ளில் விழுந்த சேலையின் நிலை....

அதிசயக்குதிரை

1 month 4 weeks ago
Benitto Kumar onretpSdsoili09 e0231 u808u4l:t7l16t6cj1hu9lltiu8gm9751,75ta · பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது, தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்" ஜீவா. "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர். உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள். "நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக் கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர். "காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க, "அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர், "அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார். "கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர். விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. "என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார். உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். "ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார். உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்... ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது. காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பது தான். இனி எங்கே காணமுடியும்..? இது போன்ற தலைவர்களை. அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள். இதை பகிரலாம் என்று நினைத்தால், செய்யலாமே... !! நண்பர்களே....!! Voir la traduction

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 4 weeks ago
வணக்கம் வாத்தியார் ............. ! ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ ஆண் : மூக்கழக கண்டாலும் முன்ன நின்னு பாத்தாலும் மூச்சு வரவில்லையடி அய்யே அய்யய்யே பாக்கு வச்சு பாக்காமே பத்தினி பெண் இல்லாமே தூக்கம் வரவில்லையடி தய்யே தய்யைய்யே அடி பன்னீரு பூப்போல தண்ணீரில் மீன் போல உன்னோடு என்னை அள்ளிக் கொண்டால் என்ன ஆண் : மாரியம்மன் திருநாளில் மங்கை உனைப் பார்த்த பின்னே வேறுப் பெண்ணை பாக்கவில்லை அய்யே அய்யய்யே காரியத்தைப் பார்த்தாலே காரணத்த கேளாம காதல் கொள்ள சொல்லுமடி தய்யே தய்யைய்யே அடி பஞ்சாங்கம் பாக்காமே பங்காளி இல்லாமே இப்போது என்னைக் கட்டிக் கொண்டால் என்ன ......... ! --- தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது ---

சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு

1 month 4 weeks ago
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு July 19, 2025 5:00 am சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது. பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது. 1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது. விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://oruvan.com/40-tenants-ordered-to-vacate-buildings-housing-tamil-shops-in-switzerland/