Aggregator

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

1 month 4 weeks ago
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 12:42 PM திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/220451

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

1 month 4 weeks ago
யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன் ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது. அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிக்கிறார்கள்” என்ற பொருள்பட அவர் கவலைப்பட்டிருந்தார். அது மட்டுமல்ல. “கிணற்று நீரை குடிக்கலாமா இல்லையா என்பதனை இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளுக்கு எனக்கு தெரிந்தவரை இன்றுவரையிலும் யாரும் உத்தியோகபூர்வமாக பதில் சொல்லவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சுன்னாகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்… ஒஸ்ரேலியாவில் தான் மேற்படிப்பு படிக்கும் பொழுது இந்த கேள்வியை ஒருவர் தமது விரிவுரையாளரிடம் கேட்டாராம். அதற்கு அந்த விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே சொன்னாராம், ”யாழ்ப்பாணத்தவர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறுகிறோம். அந்தக் கெட்டித்தனத்துக்கும் அவர்களுடைய கிணத்து நீருக்கும் தொடர்பு இருக்குமா ?” என்று. ஆனால் நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் அதாவது ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நடப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் ஈழத் தமிழர்கள் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி பாரதூரமாக மேல் எழுகிறது. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் கொழும்புத் துறைப் பகுதியை சேர்ந்த ஒரு நாடகச் செயற்பாட்டாளரை ஒரு நீர் விற்கும் கடையில் கண்டேன். அவரிடம் கேட்டேன் “உங்களுடைய கிணற்று நீரை அருந்த முடியாதா?” என்று. அவர் சொன்னார் “எனது பகுதிகளில் நீர் பெருமளவுக்கு உவராகிக் கொண்டு வருகிறது” என்று. அவர் அப்படி கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் கடல் நீரேரியை அண்மித்திருக்கும் கோப்பாய் இருபாலை ஆகிய பகுதிகளில் நீர் உவராகி வருவதாக முறைப்பாடுகள் உண்டு. ஆனால் இது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டு பொது வேலைகள் திணைக்களத்தின்(PWD) ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகிறது…”யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கல் குறுகிய காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை படிப்படியாக உவர்த்தன்மை கொண்டவையாக மாறிவருவது உண்மை. எடுத்துக்காட்டாக, பொது வேலைகள் பகுதியின் வளவுக்குள் இருக்கும் கிணறு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீரைக் கொண்டிருந்தது. அந்த வளவிலிருந்து நீர் பாய்ச்சி மிகச் சிறப்பான திராட்சைக் கொடிகளை வளர்த்தனர். ஆனால், இப்போது நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. திராட்சைக் கொடிகளும் அழிந்துவிட்டன…..கச்சேரி வளவுக்குள் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கும் இதே நிலைதான். தற்போது முற்றவெளியில் உள்ள இரண்டு கிணறுகளும், சுண்டிக்குழிக் குருமனை வளவில் உள்ள ஒரு கிணறும் மட்டுமே நல்ல தண்ணீர்க் கிணறுகள். முற்றவெளிக் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக நீரை அள்ளுவதால்,அவை நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பது ஐயத்துக்குரியது. இந்த நல்ல நீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒரு வழியில் தயாராவதற்காகப் புத்தூர்க் கிணற்றுத் திட்டத்தைக் சுவனத்தில் எடுத்துள்ளோம்…..” மேற்படி தகவல்களை அண்மையில் வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு” என்ற நூலில் காணலாம். தமிழ் விக்கிபீடியாவை ஸ்தாபித்தவர்களில் ஒருவராகிய, கட்டடப்படக் கலைஞர் மயூரநாதன் அந்த நூலை எழுதியுள்ளார். ஆகவே இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மேலெழுந்த ஒரு பிரச்சினை. அதுவும் குடித்தொகை பெருகாத,தொழில்நுட்பம் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திராத,ஒரு காலகட்டத்தில் உணரப்பட்ட ஒன்று. ஆனால் அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலான பின்னரும் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்ப்பில்லாமல் இருப்பதன் விளைவாகத்தான் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கும் ஒரு நிலை வளர்ந்து வருகிறதா? இவ்வாறு தெருத்தெருவாக நீர் விற்கும் கடைகள் மற்றும் வாகனங்களில் எத்தனை அதற்குரிய பதிவுகளோடு இயங்குகின்றன? யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் மேயராக இருந்த காலத்தில் மாநகர சபை உறுப்பினரான பார்த்திபன் இது தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். தொடக்கத்தில் ஆறுக்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் இருந்தன. இக்கடைகள் எவையும் நீரை விற்பதற்கு அனுமதி பெற்றவை அல்ல. வியாபார அனுமதியை மட்டும் பெற்றவை. இதுதொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கடைகளை விட முதலில் ஊர் ஊராக வாகனங்களில் நீர் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பார்த்திபன் மேற்படி தீர்மானத்தை கொண்டு வந்தார். எனினும் அந்த தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு போலீசார் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறப்படுகிறது. மாநகர சபை ஊழியர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது கிடைக்கும் தகவல்களின்படி யாழ் நகரப் பகுதிக்குள் 30க்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் வந்துவிட்டன. தான் ஆணையாளராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் ஆறு கடைகளில் இருந்ததாக முன்னாள் ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார். இப்பொழுது புதிய மாநகர சபை நிர்வாகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தின் குடிநீர் உவராகும் ஆபத்தைக் குறித்தும் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வடிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புதிய நிர்வாகத்துக்கு உண்டு. யாழ் மாநகர சபைக்கு மட்டுமல்ல புதிதாக தெரிவு செய்யப்பட்ட எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரு பிரச்சினை படிப்படியாக வளர்ந்து வந்து இப்பொழுது காசுக்கு நீர் வாங்கிக் குடிக்கும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. தமிழ்ச் சமூகம் தன்னை மெத்தப் படித்த சமூகம் என்று நம்புகின்றது.ஆனால் தன் சொந்தக் கிணத்து நீரை குடிக்கலாமா இல்லையா என்ற கேள்விக்கு விடை காண முன்னரே பல கிணறுகள் உவராகி வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் நீரைக் குடித்த பொழுது அது கனமில்லாமல் இருந்ததாக தான் உணர்ந்ததாக. லண்டனில் தான் குடித்த நீரோடு ஒப்பிடுகையில் இங்குள்ள வடித்த நீர் இலேசானதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் வரும் பாதகமான விளைவுகள் எவை ? “யாழ்ப்பாணத்தின் ஆழக் கிணறுகளில் ஏடுக்கும் நீரில் படியும் கல்சியத்தை அந்நியப் பொருளாக யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கத் தேவையில்லை. அது யாழ்ப்பாணத்துக்கு அந்நியமானது அல்ல. சுண்ணக் கற் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு கல்சியம் ஒரு புறத்திப் பொருள் அல்ல” என்று பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கூறுகிறார். புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். முதலில் வடித்து விற்கப்படும் நீரைக் குடிப்பதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும். இரண்டாவதாக தமிழ் மக்கள் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்;பெருக்க வேண்டும்.அதாவது உள்ளூராட்சி சபைகள் அதற்குப் பொருத்தமான பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். இதுதொடர்பான துறைசார் ஆராய்ச்சிக்காக தாயகத்திலேயே வந்து தங்கி இருக்கின்ற பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களின் துறைசார் ஞானத்தை உள்ளூராட்சி சபைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களில் பொறியியலாளர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புடையவர்கள் பலர் உண்டு.எல்லாரையும் அழைத்து இதுதொடர்பாக கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்கள் தமது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை வகுக்க வேண்டும். சில கிழமைகளுக்கு முன்பு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான ஒரு குழுவினர் வழுக்கி ஆற்றின் தடங்களைப் பின்தொடர்ந்து சென்று யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பான களஆய்வுகளை மேற்கொண்டார்கள். வழுக்கையாறு ஓடியதாகக் கருதப்படும் தடங்களில் காணப்படும் குளங்களையும் நீர்நிலைகளையும்,நீர் தேங்குமிடங்களையும், நீரோடும் வழிகளையும் பாதுகாப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இதுதொடர்பில் உள்ளூர் மக்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய உள்ளூராட்சி சபைகளில் கட்சி முரண்பாடுகளும் மோதல்களும் நிறைய உண்டு.ஆனால் அவர்கள் போட்டிபோட வேண்டிய இடம் அதுவல்ல.தங்கள் உள்ளூராட்சிப் பிரதேசங்களை எப்படிப் பசுமைப் பிரதேசங்களாக மாற்றுவது என்பதில்தான் அவர்கள் போட்டி போட வேண்டும்.ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினரும் தனது வட்டாரத்தைத் தூய்மையானதாக, குப்பையற்றதாக, பசுமை வட்டாரமாக மாற்றுவது என்று உறுதிபூண வேண்டும். அவருடைய பதவிக்காலம் முடியும் பொழுது அவர் நட்ட மரங்களும் அகழ்ந்த குளங்களும் தூர் வாரிய வாய்க்கால்களும் என்றென்றும் அவருடைய சந்ததிக்கு அவருடைய புகழைச் சொல்லும். https://www.nillanthan.com/7543/

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

1 month 4 weeks ago

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

qqqqqqq.jpg

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல்  விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது.

அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிக்கிறார்கள்” என்ற பொருள்பட அவர் கவலைப்பட்டிருந்தார். அது மட்டுமல்ல. “கிணற்று நீரை குடிக்கலாமா இல்லையா என்பதனை இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அந்த வேண்டுகோளுக்கு எனக்கு தெரிந்தவரை இன்றுவரையிலும் யாரும் உத்தியோகபூர்வமாக பதில் சொல்லவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சுன்னாகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர்  சிறீஸ்கந்தராஜாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்… ஒஸ்ரேலியாவில் தான் மேற்படிப்பு படிக்கும் பொழுது இந்த கேள்வியை ஒருவர் தமது விரிவுரையாளரிடம் கேட்டாராம். அதற்கு அந்த விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே சொன்னாராம், ”யாழ்ப்பாணத்தவர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறுகிறோம். அந்தக் கெட்டித்தனத்துக்கும் அவர்களுடைய கிணத்து நீருக்கும் தொடர்பு இருக்குமா ?” என்று.

ஆனால் நடப்பு நிலைமைகளைத்  தொகுத்துப் பார்த்தால்  அதாவது ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நடப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் ஈழத் தமிழர்கள் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி பாரதூரமாக மேல் எழுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் கொழும்புத் துறைப் பகுதியை சேர்ந்த ஒரு நாடகச் செயற்பாட்டாளரை ஒரு நீர் விற்கும் கடையில்  கண்டேன். அவரிடம் கேட்டேன் “உங்களுடைய கிணற்று நீரை அருந்த முடியாதா?” என்று. அவர் சொன்னார் “எனது பகுதிகளில் நீர் பெருமளவுக்கு உவராகிக் கொண்டு வருகிறது” என்று. அவர் அப்படி கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் கடல் நீரேரியை அண்மித்திருக்கும் கோப்பாய் இருபாலை ஆகிய பகுதிகளில் நீர் உவராகி வருவதாக முறைப்பாடுகள் உண்டு.

ஆனால் இது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டு பொது வேலைகள் திணைக்களத்தின்(PWD) ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகிறது…”யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கல் குறுகிய காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை படிப்படியாக உவர்த்தன்மை கொண்டவையாக மாறிவருவது உண்மை. எடுத்துக்காட்டாக, பொது வேலைகள் பகுதியின் வளவுக்குள் இருக்கும் கிணறு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீரைக் கொண்டிருந்தது. அந்த வளவிலிருந்து நீர் பாய்ச்சி மிகச் சிறப்பான திராட்சைக் கொடிகளை வளர்த்தனர். ஆனால், இப்போது நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. திராட்சைக் கொடிகளும் அழிந்துவிட்டன…..கச்சேரி வளவுக்குள் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கும் இதே நிலைதான். தற்போது முற்றவெளியில் உள்ள இரண்டு கிணறுகளும், சுண்டிக்குழிக் குருமனை வளவில் உள்ள ஒரு கிணறும் மட்டுமே நல்ல தண்ணீர்க் கிணறுகள். முற்றவெளிக் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக நீரை அள்ளுவதால்,அவை நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பது ஐயத்துக்குரியது. இந்த நல்ல நீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒரு வழியில் தயாராவதற்காகப் புத்தூர்க் கிணற்றுத் திட்டத்தைக் சுவனத்தில் எடுத்துள்ளோம்…..”

மேற்படி தகவல்களை அண்மையில் வெளியிடப்பட்ட  “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு” என்ற நூலில் காணலாம். தமிழ் விக்கிபீடியாவை ஸ்தாபித்தவர்களில் ஒருவராகிய, கட்டடப்படக் கலைஞர் மயூரநாதன் அந்த நூலை எழுதியுள்ளார். ஆகவே இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மேலெழுந்த ஒரு பிரச்சினை. அதுவும் குடித்தொகை பெருகாத,தொழில்நுட்பம் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திராத,ஒரு காலகட்டத்தில் உணரப்பட்ட ஒன்று. ஆனால்  அதிலிருந்து  ஒரு நூற்றாண்டுக்கு மேலான பின்னரும் இந்த விடயத்தில்  தமிழ் மக்கள்  விழிப்ப்பில்லாமல் இருப்பதன் விளைவாகத்தான் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கும் ஒரு நிலை வளர்ந்து வருகிறதா?

இவ்வாறு தெருத்தெருவாக நீர் விற்கும் கடைகள் மற்றும் வாகனங்களில் எத்தனை அதற்குரிய பதிவுகளோடு இயங்குகின்றன? யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் மேயராக இருந்த காலத்தில் மாநகர சபை உறுப்பினரான பார்த்திபன் இது தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். தொடக்கத்தில் ஆறுக்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் இருந்தன. இக்கடைகள் எவையும் நீரை விற்பதற்கு அனுமதி பெற்றவை அல்ல. வியாபார அனுமதியை மட்டும் பெற்றவை. இதுதொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கடைகளை விட முதலில் ஊர் ஊராக வாகனங்களில் நீர் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பார்த்திபன் மேற்படி தீர்மானத்தை கொண்டு வந்தார். எனினும் அந்த தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு போலீசார் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறப்படுகிறது. மாநகர சபை ஊழியர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது கிடைக்கும் தகவல்களின்படி யாழ் நகரப் பகுதிக்குள் 30க்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் வந்துவிட்டன. தான் ஆணையாளராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் ஆறு கடைகளில் இருந்ததாக முன்னாள் ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

இப்பொழுது புதிய மாநகர சபை நிர்வாகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தின் குடிநீர் உவராகும் ஆபத்தைக் குறித்தும் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வடிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புதிய நிர்வாகத்துக்கு உண்டு.

யாழ் மாநகர சபைக்கு மட்டுமல்ல புதிதாக தெரிவு செய்யப்பட்ட எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரு பிரச்சினை படிப்படியாக வளர்ந்து வந்து இப்பொழுது காசுக்கு நீர் வாங்கிக் குடிக்கும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. தமிழ்ச் சமூகம் தன்னை மெத்தப் படித்த சமூகம் என்று நம்புகின்றது.ஆனால் தன் சொந்தக் கிணத்து நீரை குடிக்கலாமா இல்லையா என்ற கேள்விக்கு விடை காண முன்னரே பல கிணறுகள் உவராகி வருகின்றன.

அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் நீரைக் குடித்த பொழுது அது கனமில்லாமல் இருந்ததாக தான் உணர்ந்ததாக. லண்டனில் தான்  குடித்த நீரோடு ஒப்பிடுகையில் இங்குள்ள வடித்த நீர் இலேசானதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இவ்வாறு உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் வடிக்கப்பட்ட நீரைக்  குடிப்பதால் வரும் பாதகமான விளைவுகள் எவை ?

“யாழ்ப்பாணத்தின் ஆழக் கிணறுகளில் ஏடுக்கும் நீரில் படியும் கல்சியத்தை அந்நியப் பொருளாக யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கத் தேவையில்லை. அது யாழ்ப்பாணத்துக்கு அந்நியமானது அல்ல. சுண்ணக் கற் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு கல்சியம் ஒரு புறத்திப் பொருள் அல்ல” என்று பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கூறுகிறார்.

புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். முதலில் வடித்து விற்கப்படும் நீரைக் குடிப்பதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும். இரண்டாவதாக தமிழ் மக்கள்  நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்;பெருக்க வேண்டும்.அதாவது உள்ளூராட்சி சபைகள் அதற்குப் பொருத்தமான பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதுதொடர்பான  துறைசார் ஆராய்ச்சிக்காக தாயகத்திலேயே வந்து தங்கி இருக்கின்ற பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களின் துறைசார் ஞானத்தை  உள்ளூராட்சி சபைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களில் பொறியியலாளர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புடையவர்கள் பலர் உண்டு.எல்லாரையும் அழைத்து இதுதொடர்பாக கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்கள் தமது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

சில கிழமைகளுக்கு முன்பு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான ஒரு குழுவினர் வழுக்கி ஆற்றின் தடங்களைப் பின்தொடர்ந்து சென்று யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பான களஆய்வுகளை மேற்கொண்டார்கள். வழுக்கையாறு ஓடியதாகக் கருதப்படும் தடங்களில் காணப்படும் குளங்களையும் நீர்நிலைகளையும்,நீர் தேங்குமிடங்களையும், நீரோடும் வழிகளையும் பாதுகாப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இதுதொடர்பில் உள்ளூர் மக்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதிய உள்ளூராட்சி சபைகளில் கட்சி முரண்பாடுகளும் மோதல்களும் நிறைய உண்டு.ஆனால் அவர்கள் போட்டிபோட வேண்டிய இடம் அதுவல்ல.தங்கள் உள்ளூராட்சிப் பிரதேசங்களை எப்படிப் பசுமைப் பிரதேசங்களாக மாற்றுவது என்பதில்தான் அவர்கள் போட்டி போட வேண்டும்.ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினரும் தனது வட்டாரத்தைத் தூய்மையானதாக, குப்பையற்றதாக, பசுமை வட்டாரமாக மாற்றுவது என்று உறுதிபூண வேண்டும். அவருடைய பதவிக்காலம் முடியும் பொழுது அவர் நட்ட மரங்களும் அகழ்ந்த குளங்களும் தூர் வாரிய வாய்க்கால்களும் என்றென்றும் அவருடைய சந்ததிக்கு அவருடைய புகழைச் சொல்லும்.

https://www.nillanthan.com/7543/

வரதரின்(2025) புதிய முயற்சிகள் — கருணாகரன் —

1 month 4 weeks ago
வரதரின்(2025) புதிய முயற்சிகள் July 19, 2025 — கருணாகரன் — ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அரசியல் ரீதியானதே. சந்திப்பில் சுரேஸ் அணியின் தரப்பில் வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தருமான சர்வேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் யாழ்ப்பாணக் கொமிட்டியின் செயலாளர் கமலாகரன் (குகன்) மற்றும் சிவா ஆகியோரும் வரதரோடு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கிருபாகரன் உட்பட மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், இது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் வரதராஜப்பெருமாள் செயற்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான கட்சிசார் அரசியற் சந்திப்பு இல்லை என்று சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. கட்சிசார் அரசியற் சந்திப்பாக இருந்தால் அதில் முக்கியமாக தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுகு ஸ்ரீதரன், மோகன் போன்றோரும் பங்கேற்றிருப்பார். மட்டுமல்ல, அதனுடைய தன்மையும் வேறாகவே இருந்திருக்கும். அப்படியென்றால் இந்தச்சந்திப்பில் என்ன முக்கியத்துவம் என்று யாரும் கேட்கலாம். ஏற்கனவே எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் அரசியல் உரையாடலையும் உறவாடலையும் அரசியற்கூட்டுகள், தேர்தற்கூட்டுகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் சுரேஸ் – வரதர் சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியலில் இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனாலும் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசத்துக்குரியது என்றே கருதப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்தச் சந்திப்பு கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்கு அப்பாலானதாக இருக்கிறது. அதை வரதராஜப்பெருமாளும் சுரேஸ் அணித் தரப்பும் சொல்லியுள்ளது. மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியைச் சந்தித்ததைப்போல, 17.07.2025 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் வரதராஜப்பெருமாள் சந்தித்துப்பேசியிருக்கிறார். அதற்கு அப்பால், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் உட்பட வேறு சிலரையும் சந்தித்துப்பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வரதராஜப்பெருமாளுடன் பேசியபோது, தன்னுடைய இந்தப்பயணமும் சந்திப்புகளும் தேர்தல் அரசியல், கட்சி அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலானது. தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் தனக்கு இப்பொழுது ஆர்வமில்லை. அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள், கட்சிகள் பற்றித் தான் எத்தகைய விமர்சனங்களையும் கருத்துகளையும் சொல்லப்போவதில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய ஆர்வமும் நிலைப்பாடும், மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்துவது, மாகாணசபையை வினைத்திறனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக வலுப்படுத்துவது, தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை – அதற்கான செயற்பாட்டு முனைப்பை அதற்குரிய தரப்புகளிடம் பேசி, இணைந்து செயற்பட்டுக்கூர்மைப்படுத்துவது போன்றதே என்றார். மாகாணசபையை வலுவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் சமஸ்டி, தனிநாடு போன்றவற்றைப் பேசுவோர், அதற்காகச் செயற்படுவோரை தாம் மறுக்கப்போவதில்லை. அவற்றைத் தான் வரவேற்கிறேன். சமஸ்டியோ தனிநாடோ கிடைக்குமாக இருந்தால் எதை யார்தான் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் வரதராஜப்பெருமாள். ஆனால், அது கிட்டும் வரையில் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவையாக, வினைத்திறன் மிக்கவையாக இயங்க வைப்பது அவசியம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்களுடைய பாதுகாப்பு, முன்னேற்றம், சுயாதீனம் போன்றவற்றுக்கு மாகாணசபைகள்தான் யதார்த்தமாக உள்ளன. மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறிப்பாக ஜனாதிபதியை மையப்படுத்திக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாகாண சபைகள்தான் பகிரக்கூடிய பொறிமுறையாக உள்ளது. எங்கே அதிகாரம் குவிக்கப்படுகிறதோ, அங்கே ஊழல் தொடக்கம் அதிகார துஸ்பிரயோகங்கள் வரையில் அத்தனை பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகாரங்களைப் பகிரும்போது ஒன்றை ஒன்று கட்டுப்படுத்திக்கொள்ளவும் கண்காணித்துக்கொள்ளவும் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவேதான் நாம் மாகாணசபைகளை பல்வேறு அடிப்படைகளில் வலியுறுத்துகிறோம். இது அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். என்பதால்தான் சகல தரப்புகளோடும் இதை வலியுறுத்திய ஒரு உரையாடலைச் செய்ய விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரோடும் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மாகாணசபை முறைமையிலும் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், அந்த மாகாண சபைகள் பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்களத் தரப்பினரால் ஆளப்படுவது. சிங்களத் தரப்பே எப்போதும் ஆளும் தரப்புமாக இருப்பதால் அங்கே அதிகாரம் குறைந்திருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால், வடக்குக் கிழக்கின் நிலை அப்படியல்ல. அது பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் தரப்புகளால் நிர்வகிக்கப்படுவது. இதனால் அதிகாரம் இல்லை என்றால், உரிய ஆதரவையும் ஆற்றலையும் பெறுவது கடினமாகும். இதைக்குறித்து நாம் தெளிவாக உரையாடி வேண்டியுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினை என்பது இலங்கையின் தீராத அரசியல் நெருக்கடியாக நீண்டு செல்கிறது. அரசியல் நெருக்கடி இருக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடியும் இருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதை வெறுமனே நல்லிணக்கம், சமாதானம் போன்ற வார்த்தைகளால் தீர்த்து விட முடியாது. அதற்கப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திருப்தி அடையக் கூடிய, நம்பிக்கை கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் முக்கியம். அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் நடைமுறைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக பொருத்தமானதொரு அரசியல் யாப்பைக் குறித்த உரையாடல்களை நாம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பால், சமூக ஒருங்கிணைப்போடு செய்யலாமா என்று முயற்சித்துப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமாகும் எனமேலும் சொல்கிறார் வரதர். அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. அறுதியிட்டுக் கூற முடியாது. “இருந்தாற்போல திடீரென்று ஏதோ ஞானோதயம் கிடைத்ததைப்போல வந்து நிற்கிறார். இதற்கான பின்னணி என்ன? உண்மையான நிலவரம் என்ன?” என்று சிலர் குழம்பக்கூடும். எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னுடைய முதிர்வு, அரசியல் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தன்னால் முடிந்தவற்றை, தனக்குத் தெரிந்தவற்றையும் தனக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே வரதர் வந்திருக்கலாம். உண்மையான ஈடுபாட்டின் விளைவாகவே அவருடைய முயற்சிகள் இருக்கலாம். வரதர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள விருப்பத்தையும் அந்த மெய்யான நோக்கத்தையும் சந்தேகித்தோ சந்தேகிக்காமலோ யார் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? அவர் சொல்வதிலுள்ள நியாயங்களை யார் யாரெல்லாம் புரிந்து கொள்ளப்போகிறார்கள், ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால், வரதருடைய இந்தச் சந்திப்புகளைக் குறித்தும் இந்த உரையாடல் முயற்சிகளைப் பற்றியும் ஒரு நேர்மறையான தோற்றமே – அணுகுமுறையே – இதுவரையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு – உரையாடல்கள் – பற்றிய முதல் ஊடகச் செய்திகளும் வரவேற்கக் கூடியவையாகவே உள்ளன. இந்தப் பத்தியாளர் கவனப்படுத்த விரும்புவது, எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் தமக்கிடையில் இணக்கங்களைக் கண்டு வரும் ஒரு சூழல் மலர்ந்து வருகிறது. துரோகி – தியாகி என்ற பிரிவுக்கோடு மெல்ல அழிந்தோ மங்கியோ வருவதாகத் தோன்றுகிறது. மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் யதார்த்த நிலையை உணர்வதாகத் தெரிகிறது. அதாவது பலரிடத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதொரு தொடக்க நிலைதான். ஆனால், வரவேற்கக் கூடிய தொடக்கம். அந்த வகையில் வரதர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க வேண்டியது. கட்சி, இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் பாரபட்சமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரோடும் பேசுவதற்கு தான் முயற்சிக்கிறேன் என்பது வரவேற்க வேண்டியதே. எப்போதும் உரையாடல்கள் முக்கியமானவை. அதில் தயக்கங்களும் தாமதங்களும் விடுபடல்களும் புறக்கணிப்புகளும் தேவையில்லை. இந்த உலகம் உரையாடல்களினால்தான், இணக்கங்களினால்தான் ஏராளம் விடயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது; சாதித்திருக்கிறது. இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் வரதர் புரிந்திருப்பது நல்லது. அதனால்தான் அவர் தானாகவே முன் வந்து எல்லோருடைய கதவுகளையும் தட்டுகிறார். எல்லோருடைய கைகளையும் குலுக்குகிறார். எல்லோருடனும் ஒரு தேநீரைப் பருகவும் பகிரவும் தயாராக இருக்கிறார். வரதராஜப்பெருமாளுடைய அரசியல் வரலாறும் அனுபவமும் நீண்டது, பரந்தது. எந்த வரலாறும் நேர்கோட்டில் பளிச்செனத் துலங்கிச் செல்வதில்லை. பல நூறு சுழிப்புகளையும் முடிச்சுகளையும் ஏற்ற இறக்கங்களையும் இருளையும் ஒளியையும் தன்னுள் கொண்டே வரலாறு நகர்கிறது. வரதருடைய அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலானதுதான். வரதருடையது மட்டுமல்ல, அனைவருடையதும் அப்படியானதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 1970 களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான தன்னுடைய அரசியல் வரலாற்றில், போராட்டம், சிறை, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், தலைமறைவு வாழ்க்கை எனப் பலதையும் சந்தித்தவர் வரதராஜப்பெருமாள். மாகாணசபை முறைமையைப் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் வரதருக்குண்டு. அரசியலமைப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் கொண்டவர். கூடவே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நேரடி அனுபவத்தையும் அறிவையும் கொண்ட இந்தியாவின் இறுதித் தலைமுறையுடன் தொடர்பும் பரிச்சயமும் உள்ளவர்களில் ஒருவர். இலங்கைச் சூழலிலும் அறியப்பட்ட ஓர் அரசியல் ஆளுமை. இத்தகைய ஒருவர் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலான அரசியல் இயக்கமொன்றை (Political movement) பற்றிச் சிந்திப்பது இன்றைய சூழலில் நல்லதே. பலருடனும் பேசி, உரையாடி, விவாதித்து, பொருத்தமான அடிப்படைகளை உருவாக்குவதைப்பற்றிய இத்தகைய அரசியல் முன்னெடுப்பு – அரசியற் பண்பாடு – நம்மிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். எத்தகைய எதிரெதிர் நிலைப்பாடு, கோட்பாடு, கொள்கை போன்றவற்றோடு இருந்தாலும் பரஸ்பரப் புரிதலோடு பேசிக் கொள்வது அவசியமானது. கைகளைப் பற்றிக் குலுக்கி, முகத்தை முகம் நேரில் பார்த்து, நெகிழ்ச்சியோடு தொடர்ந்து உரையாடும்போது பரஸ்பர நெருக்கமும் புரிதலும் ஏற்படும். பேச்சுகளில் – உரையாடல்களில் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு தரப்புக்கும் உள்ளோட்டங்களும் தனியான நிகழ்ச்சி நிரலும் இருக்கலாம். அல்லது உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சம்பிரதாயமாக வேறொன்றைப் பேசலாம். எதுவாயினும் பரவாயில்லை. முதலில் சந்திப்பதும் பேசுவதும் அவசியமானது. அதொரு சிறந்த பண்பாடு. உயர்ந்த நாகரீகம். பேசாதிருப்பது, முகத்தைத் திருப்பிக் கொள்வது, தனிமைப்படுவது, தனிமைப்படுத்துவது எல்லாம் பயனற்றவை. கீழ்மையானவை. தீங்கானவை. இதனால் நாம் சந்தித்த இழப்புகளும் பின்னடைவுகளும் ஏராளம். தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது. மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது. https://arangamnews.com/?p=12166

வரதரின்(2025) புதிய முயற்சிகள் — கருணாகரன் —

1 month 4 weeks ago

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

July 19, 2025

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

— கருணாகரன் —

ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இருவரும் ஒரு காலத்தில் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்கள். 1988 இல் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் கூட முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்கள். பின்னாளில் வெவ்வேறு நிலைப்பாடுகளால் இருவேறு அணிகளாகியிருந்தனர். இப்போது கூட வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 

இந்தச் சந்திப்பு தனிப்பட்டதல்ல. அரசியல் ரீதியானதே. சந்திப்பில் சுரேஸ் அணியின் தரப்பில் வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கியஸ்தருமான சர்வேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் யாழ்ப்பாணக் கொமிட்டியின் செயலாளர் கமலாகரன் (குகன்) மற்றும் சிவா ஆகியோரும் வரதரோடு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் கிருபாகரன் உட்பட மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். 

ஆனால், இது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான  ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் வரதராஜப்பெருமாள் செயற்பட்டுவரும் தமிழர் சமூக ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான கட்சிசார் அரசியற் சந்திப்பு இல்லை என்று சம்மந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. கட்சிசார் அரசியற் சந்திப்பாக இருந்தால் அதில் முக்கியமாக தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுகு ஸ்ரீதரன், மோகன் போன்றோரும் பங்கேற்றிருப்பார். மட்டுமல்ல, அதனுடைய தன்மையும் வேறாகவே இருந்திருக்கும். 

அப்படியென்றால் இந்தச்சந்திப்பில் என்ன முக்கியத்துவம் என்று யாரும் கேட்கலாம். ஏற்கனவே  எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் அரசியல் உரையாடலையும் உறவாடலையும் அரசியற்கூட்டுகள், தேர்தற்கூட்டுகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் சுரேஸ் – வரதர் சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியலில் இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனாலும் இந்தச் சந்திப்புச் சற்று வித்தியாசத்துக்குரியது என்றே கருதப்பட வேண்டியுள்ளது. 

ஏனென்றால், இந்தச் சந்திப்பு கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்கு அப்பாலானதாக இருக்கிறது. அதை வரதராஜப்பெருமாளும் சுரேஸ் அணித் தரப்பும் சொல்லியுள்ளது. மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியைச் சந்தித்ததைப்போல, 17.07.2025 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் வரதராஜப்பெருமாள் சந்தித்துப்பேசியிருக்கிறார். அதற்கு அப்பால், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் உட்பட வேறு சிலரையும் சந்தித்துப்பேசியிருக்கிறார். 

இந்தச் சந்திப்புகள் தொடர்பாக வரதராஜப்பெருமாளுடன் பேசியபோது, தன்னுடைய இந்தப்பயணமும் சந்திப்புகளும் தேர்தல் அரசியல், கட்சி அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலானது. தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் தனக்கு இப்பொழுது ஆர்வமில்லை. அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள், கட்சிகள் பற்றித் தான் எத்தகைய விமர்சனங்களையும் கருத்துகளையும் சொல்லப்போவதில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய ஆர்வமும் நிலைப்பாடும், மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்துவது, மாகாணசபையை வினைத்திறனுள்ளதாக, ஆற்றல் மிக்கதாக வலுப்படுத்துவது, தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை – அதற்கான செயற்பாட்டு முனைப்பை அதற்குரிய தரப்புகளிடம் பேசி, இணைந்து செயற்பட்டுக்கூர்மைப்படுத்துவது போன்றதே என்றார். 

மாகாணசபையை வலுவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசினாலும் சமஸ்டி, தனிநாடு போன்றவற்றைப் பேசுவோர், அதற்காகச் செயற்படுவோரை தாம் மறுக்கப்போவதில்லை. அவற்றைத் தான் வரவேற்கிறேன். சமஸ்டியோ தனிநாடோ கிடைக்குமாக இருந்தால் எதை யார்தான் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறார் வரதராஜப்பெருமாள். 

ஆனால், அது கிட்டும் வரையில் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவையாக, வினைத்திறன் மிக்கவையாக இயங்க வைப்பது அவசியம். ஏனென்றால் இப்போதுள்ள சூழலில் தமிழ் பேசும் மக்களுடைய பாதுகாப்பு, முன்னேற்றம், சுயாதீனம் போன்றவற்றுக்கு மாகாணசபைகள்தான் யதார்த்தமாக உள்ளன. மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறிப்பாக ஜனாதிபதியை மையப்படுத்திக் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாகாண சபைகள்தான் பகிரக்கூடிய பொறிமுறையாக உள்ளது. எங்கே அதிகாரம் குவிக்கப்படுகிறதோ, அங்கே ஊழல் தொடக்கம் அதிகார துஸ்பிரயோகங்கள் வரையில் அத்தனை பிரச்சினைகளுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகாரங்களைப் பகிரும்போது ஒன்றை ஒன்று கட்டுப்படுத்திக்கொள்ளவும் கண்காணித்துக்கொள்ளவும் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. 

ஆகவேதான் நாம் மாகாணசபைகளை பல்வேறு அடிப்படைகளில் வலியுறுத்துகிறோம். இது அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். என்பதால்தான் சகல தரப்புகளோடும் இதை வலியுறுத்திய ஒரு உரையாடலைச் செய்ய விரும்புகிறேன். தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டியக்கத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரோடும் பேசுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மாகாணசபை முறைமையிலும் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால், அந்த மாகாண சபைகள் பெரும்பான்மைச் சமூகமாகிய சிங்களத் தரப்பினரால் ஆளப்படுவது. சிங்களத் தரப்பே எப்போதும் ஆளும் தரப்புமாக இருப்பதால் அங்கே அதிகாரம் குறைந்திருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால், வடக்குக் கிழக்கின் நிலை அப்படியல்ல. அது பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் தரப்புகளால் நிர்வகிக்கப்படுவது. இதனால் அதிகாரம் இல்லை என்றால், உரிய ஆதரவையும் ஆற்றலையும் பெறுவது கடினமாகும். இதைக்குறித்து நாம் தெளிவாக உரையாடி வேண்டியுள்ளது.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினை என்பது இலங்கையின் தீராத அரசியல் நெருக்கடியாக நீண்டு செல்கிறது. அரசியல் நெருக்கடி இருக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடியும் இருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதை வெறுமனே நல்லிணக்கம், சமாதானம் போன்ற வார்த்தைகளால் தீர்த்து விட முடியாது. அதற்கப்பால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் திருப்தி அடையக் கூடிய, நம்பிக்கை கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் முக்கியம். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவேதான் நடைமுறைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக பொருத்தமானதொரு அரசியல் யாப்பைக் குறித்த உரையாடல்களை நாம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பால், சமூக ஒருங்கிணைப்போடு செய்யலாமா என்று முயற்சித்துப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமாகும் எனமேலும் சொல்கிறார் வரதர். 

அரசியற் தீர்வுக்கு முன்பு, அவ்வாறான நடவடிக்கைகளை – அதாவது நம்பிக்கை அளிக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதைத் தாராளமாகச் செய்யலாம். அதையும் நாம் வலியுறுத்த வேண்டும். நடைமுறைச் சாத்தியமான நல்லிணக்கம் என்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல், எத்தனை தடவை அந்தச் சொற்களை உச்சரித்தாலும் நல்லிணக்கமோ சமாதானமோ கிட்டாது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் உச்சரிக்கப்படுகிறது. நேர்மையாகச் சொல்லுங்கள். எந்தச் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.  அறுதியிட்டுக் கூற முடியாது. “இருந்தாற்போல திடீரென்று ஏதோ ஞானோதயம் கிடைத்ததைப்போல வந்து நிற்கிறார். இதற்கான பின்னணி என்ன? உண்மையான நிலவரம் என்ன?” என்று சிலர் குழம்பக்கூடும். 

எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னுடைய முதிர்வு, அரசியல் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தன்னால் முடிந்தவற்றை, தனக்குத் தெரிந்தவற்றையும் தனக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று உண்மையாகவே வரதர் வந்திருக்கலாம். உண்மையான ஈடுபாட்டின் விளைவாகவே அவருடைய முயற்சிகள் இருக்கலாம். 

வரதர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள விருப்பத்தையும் அந்த மெய்யான நோக்கத்தையும் சந்தேகித்தோ சந்தேகிக்காமலோ யார் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? அவர் சொல்வதிலுள்ள நியாயங்களை யார் யாரெல்லாம் புரிந்து கொள்ளப்போகிறார்கள், ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

ஆனால், வரதருடைய இந்தச் சந்திப்புகளைக் குறித்தும் இந்த உரையாடல் முயற்சிகளைப் பற்றியும் ஒரு நேர்மறையான தோற்றமே – அணுகுமுறையே – இதுவரையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு – உரையாடல்கள் –  பற்றிய முதல் ஊடகச் செய்திகளும் வரவேற்கக் கூடியவையாகவே உள்ளன. இந்தப் பத்தியாளர் கவனப்படுத்த விரும்புவது, எதிரும் புதிருமாக இருந்த பல தரப்புகள் தமக்கிடையில் இணக்கங்களைக் கண்டு வரும் ஒரு சூழல் மலர்ந்து வருகிறது. துரோகி – தியாகி என்ற பிரிவுக்கோடு மெல்ல அழிந்தோ மங்கியோ வருவதாகத் தோன்றுகிறது. மூத்தவர்கள், அனுபவஸ்தர்கள் யதார்த்த நிலையை உணர்வதாகத் தெரிகிறது. அதாவது பலரிடத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதொரு தொடக்க நிலைதான். ஆனால், வரவேற்கக் கூடிய தொடக்கம். 

அந்த வகையில் வரதர் எடுத்துள்ள முயற்சி வரவேற்க வேண்டியது. கட்சி, இனம், மதம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் பாரபட்சமும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரோடும் பேசுவதற்கு தான் முயற்சிக்கிறேன் என்பது வரவேற்க வேண்டியதே. எப்போதும் உரையாடல்கள் முக்கியமானவை. அதில் தயக்கங்களும் தாமதங்களும் விடுபடல்களும் புறக்கணிப்புகளும் தேவையில்லை. இந்த உலகம் உரையாடல்களினால்தான், இணக்கங்களினால்தான் ஏராளம் விடயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது; சாதித்திருக்கிறது. 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் வரதர் புரிந்திருப்பது நல்லது. அதனால்தான் அவர் தானாகவே முன் வந்து எல்லோருடைய கதவுகளையும் தட்டுகிறார். எல்லோருடைய கைகளையும் குலுக்குகிறார். எல்லோருடனும் ஒரு தேநீரைப் பருகவும் பகிரவும் தயாராக இருக்கிறார். 

வரதராஜப்பெருமாளுடைய அரசியல் வரலாறும் அனுபவமும் நீண்டது, பரந்தது. எந்த வரலாறும் நேர்கோட்டில் பளிச்செனத் துலங்கிச் செல்வதில்லை. பல நூறு சுழிப்புகளையும் முடிச்சுகளையும் ஏற்ற இறக்கங்களையும் இருளையும் ஒளியையும் தன்னுள் கொண்டே வரலாறு நகர்கிறது. வரதருடைய அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலானதுதான். வரதருடையது மட்டுமல்ல, அனைவருடையதும் அப்படியானதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1970 களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான தன்னுடைய அரசியல் வரலாற்றில், போராட்டம், சிறை, வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர், தலைமறைவு வாழ்க்கை எனப் பலதையும் சந்தித்தவர் வரதராஜப்பெருமாள். மாகாணசபை முறைமையைப் பற்றிய தெளிவான அறிவும் அனுபவமும் வரதருக்குண்டு. அரசியலமைப்பு மற்றும் பொருளாதார அடிப்படைகளைப் பற்றிய புரிதலும் அறிவும் கொண்டவர். கூடவே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நேரடி அனுபவத்தையும் அறிவையும் கொண்ட இந்தியாவின் இறுதித் தலைமுறையுடன் தொடர்பும் பரிச்சயமும் உள்ளவர்களில் ஒருவர். இலங்கைச் சூழலிலும் அறியப்பட்ட ஓர் அரசியல் ஆளுமை. இத்தகைய ஒருவர் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் போன்றவற்றுக்கு அப்பாலான அரசியல் இயக்கமொன்றை (Political movement) பற்றிச் சிந்திப்பது இன்றைய சூழலில் நல்லதே. 

பலருடனும் பேசி, உரையாடி, விவாதித்து, பொருத்தமான அடிப்படைகளை உருவாக்குவதைப்பற்றிய இத்தகைய அரசியல் முன்னெடுப்பு – அரசியற் பண்பாடு – நம்மிடையே வளர்ந்து செழிக்க வேண்டும். எத்தகைய எதிரெதிர் நிலைப்பாடு, கோட்பாடு, கொள்கை போன்றவற்றோடு இருந்தாலும் பரஸ்பரப் புரிதலோடு பேசிக் கொள்வது அவசியமானது. கைகளைப் பற்றிக் குலுக்கி, முகத்தை முகம்  நேரில் பார்த்து, நெகிழ்ச்சியோடு தொடர்ந்து உரையாடும்போது பரஸ்பர நெருக்கமும் புரிதலும் ஏற்படும். 

பேச்சுகளில் – உரையாடல்களில் ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு தரப்புக்கும் உள்ளோட்டங்களும் தனியான நிகழ்ச்சி நிரலும் இருக்கலாம். அல்லது உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சம்பிரதாயமாக வேறொன்றைப் பேசலாம். எதுவாயினும் பரவாயில்லை. முதலில் சந்திப்பதும் பேசுவதும் அவசியமானது. அதொரு சிறந்த பண்பாடு. உயர்ந்த நாகரீகம். 

பேசாதிருப்பது, முகத்தைத் திருப்பிக் கொள்வது, தனிமைப்படுவது, தனிமைப்படுத்துவது எல்லாம் பயனற்றவை. கீழ்மையானவை. தீங்கானவை. இதனால் நாம் சந்தித்த இழப்புகளும் பின்னடைவுகளும் ஏராளம்.

தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில்  மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது. 

மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது.

https://arangamnews.com/?p=12166

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

1 month 4 weeks ago

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

FB_IMG_1753001841333-438x470.jpg

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம், ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி பின்வருமாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்:

4.5 கோடி ரூபாய் புனரமைப்புப் பணிகளுக்காக (பொது கழிவறை அமைத்தல் உட்பட)
2 கோடி ரூபாய் டிஜிட்டல் சேவைகளுக்காக
* 3.5 கோடி ரூபாய் கணினிகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுக்காக

எனினும், புனரமைப்பு நிதியின் கணிசமான பகுதியை தனியான கழிவறை வசதியை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே நிதியின் அசல் நோக்கம் என்று வாதிட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்பதால், முழு நிதி ஒதுக்கீட்டையும் அதன் அசல் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சூடான விவாதத்தைத் தொடர்ந்து, நிதி டிஜிட்டல் சேவைகளின் மேம்பாட்டிற்காக மட்டுமே முறையாகவும் கண்டிப்பாகவும் செலவிடப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சரியான பொது கழிப்பறை வசதிகள் இல்லாததாலும், தற்போதுள்ள கழிப்பறைகள் நகர சபையால் மோசமாகப் பராமரிக்கப்படுவதாலும், பல பொதுமக்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் காரணம் காட்டி, நூலகத்தில் ஒரு தனி கழிப்பறை வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.

எனினும், டிஜிட்டல் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு கணிசமான பகுதியை திசை திருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியாயத்தை கடுமையாக எதிர்த்தனர். யாழ்ப்பாண மாநகர சபையும் ஏனைய உள்ளூர் அதிகாரிகளும் தற்போதுள்ள பொது கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொடர்பில்லாத உள்கட்டமைப்புக்காக திசை திருப்பக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், வட மாகாண சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்பிராந்தியத்தில் தேவையான இடங்களில் பொது கழிப்பறைகளை நிர்மாணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

https://akkinikkunchu.com/?p=333517

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

1 month 4 weeks ago
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை! யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம், ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி பின்வருமாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்: 4.5 கோடி ரூபாய் புனரமைப்புப் பணிகளுக்காக (பொது கழிவறை அமைத்தல் உட்பட) 2 கோடி ரூபாய் டிஜிட்டல் சேவைகளுக்காக * 3.5 கோடி ரூபாய் கணினிகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவுக்காக எனினும், புனரமைப்பு நிதியின் கணிசமான பகுதியை தனியான கழிவறை வசதியை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே நிதியின் அசல் நோக்கம் என்று வாதிட்டப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்பதால், முழு நிதி ஒதுக்கீட்டையும் அதன் அசல் நோக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சூடான விவாதத்தைத் தொடர்ந்து, நிதி டிஜிட்டல் சேவைகளின் மேம்பாட்டிற்காக மட்டுமே முறையாகவும் கண்டிப்பாகவும் செலவிடப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சரியான பொது கழிப்பறை வசதிகள் இல்லாததாலும், தற்போதுள்ள கழிப்பறைகள் நகர சபையால் மோசமாகப் பராமரிக்கப்படுவதாலும், பல பொதுமக்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் காரணம் காட்டி, நூலகத்தில் ஒரு தனி கழிப்பறை வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர். எனினும், டிஜிட்டல் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு கணிசமான பகுதியை திசை திருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியாயத்தை கடுமையாக எதிர்த்தனர். யாழ்ப்பாண மாநகர சபையும் ஏனைய உள்ளூர் அதிகாரிகளும் தற்போதுள்ள பொது கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொடர்பில்லாத உள்கட்டமைப்புக்காக திசை திருப்பக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், வட மாகாண சுற்றுலாத்துறை அமைச்சகம் இப்பிராந்தியத்தில் தேவையான இடங்களில் பொது கழிப்பறைகளை நிர்மாணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். https://akkinikkunchu.com/?p=333517

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

1 month 4 weeks ago

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

arjun.jpg

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

2016இல் நிறுவப்பட்ட விஸ்டம் ஓக், முக்கியமாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்படுகிறது. நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடுகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்துடன் அவர் செய்த பணிக்காக மகேந்திரன் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2016 இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள சிங்கப்பூர் சென்ற மகேந்திரனை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்தது.

எனினும், சிங்கப்பூர் இதுவரை அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர் எந்தத் தடையும் இல்லாமல் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/?p=333526

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி

1 month 4 weeks ago
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 2016இல் நிறுவப்பட்ட விஸ்டம் ஓக், முக்கியமாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் செயல்படுகிறது. நிறுவனம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடுகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் அவர் செய்த பணிக்காக மகேந்திரன் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 2016 இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, பிணைமுறி மோசடி வழக்கை எதிர்கொள்ள சிங்கப்பூர் சென்ற மகேந்திரனை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்தது. எனினும், சிங்கப்பூர் இதுவரை அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக, அவர் எந்தத் தடையும் இல்லாமல் சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=333526

யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!

1 month 4 weeks ago

யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!

Vhg ஜூலை 20, 2025

1000547315.png

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

https://www.battinatham.com/2025/07/blog-post_743.html

யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!

1 month 4 weeks ago
யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது! Vhg ஜூலை 20, 2025 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. https://www.battinatham.com/2025/07/blog-post_743.html

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி

1 month 4 weeks ago

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி

Published By: RAJEEBAN

20 JUL, 2025 | 12:25 PM

image

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர்.

gaza_july20_25.jpg

கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்களில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெய்னாவில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக கொல்லப்பட்டனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவவட்டாரங்கள் இஸ்ரேலின் ஹெராட்ஸ் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களில் அதிகளவானவர்கள் சிறுவர்கள் பதின்மவயதினர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

25 பேரின் உடல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கான் யூனிசின் நாசர் மருத்துவமனை காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு குறுகிய நேரத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர்  என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் அடெல் அவ் ஹெளட் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார்.

போதியளவு உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்துகள் இல்லாததால் எங்களால் போதிய சிகிச்சையை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இஸ்ரேல் அமெரிக்க காசா மனிதாபிமான பவுண்டேசன் தனது பகுதிகளிற்கு அருகில் துப்பாக்கி சூடு  இடம்பெறவில்லை தன்னுடைய உணவு விநியோக தளங்களில் இருந்து வெகுதொலைவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

gaza_july_20_251.jpg

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை மீறி சந்தேகநபர்கள் படையினரை நோக்கி வந்தவேளை எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

நான் உணவுவிநியோக மையத்தை நோக்கி பலருடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை - அனேகமாக இள வயதினர் -இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என மஹ்மூட் மொக்கெய்மார் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

இது ஒரு படுகொலை  ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் நான் ஒருவாறு உயிர் தப்பினேன் ஆனால் மூன்று உடல்களை பார்த்தேன் காயமடைந்திருந்த பலரையும் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்றது அவர்கள் எங்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் உயிரிழந்த பலரை பார்த்தேன் என அவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.'gaza__july20_252.jpg

அந்த பகுதியிலிருந்து தப்பியோடியவேளை உயிரிழந்த நிலையில் பலரை கண்டதாக 55 சனா ல் ஜபேரி தெரிவித்துள்ளார்.'

நாங்கள் உணவு உணவு என சத்திமிட்டோம் ஆனால்அவர்கள் எங்களுடன் பேசாமல் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் நாங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தோம் டாங்கிகள் ஜீப்புகளில் எங்களை நோக்கி வந்த இஸ்ரேலிய படையினர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என 24 வயது டமெர் அபு அக்பர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220449

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி

1 month 4 weeks ago
'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 12:25 PM காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர். கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்களில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெய்னாவில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக கொல்லப்பட்டனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவவட்டாரங்கள் இஸ்ரேலின் ஹெராட்ஸ் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களில் அதிகளவானவர்கள் சிறுவர்கள் பதின்மவயதினர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 25 பேரின் உடல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கான் யூனிசின் நாசர் மருத்துவமனை காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு குறுகிய நேரத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் அடெல் அவ் ஹெளட் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார். போதியளவு உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்துகள் இல்லாததால் எங்களால் போதிய சிகிச்சையை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இஸ்ரேல் அமெரிக்க காசா மனிதாபிமான பவுண்டேசன் தனது பகுதிகளிற்கு அருகில் துப்பாக்கி சூடு இடம்பெறவில்லை தன்னுடைய உணவு விநியோக தளங்களில் இருந்து வெகுதொலைவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. இதேவேளை தங்களின் எச்சரிக்கையை மீறி சந்தேகநபர்கள் படையினரை நோக்கி வந்தவேளை எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நான் உணவுவிநியோக மையத்தை நோக்கி பலருடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை - அனேகமாக இள வயதினர் -இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என மஹ்மூட் மொக்கெய்மார் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். இது ஒரு படுகொலை ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் நான் ஒருவாறு உயிர் தப்பினேன் ஆனால் மூன்று உடல்களை பார்த்தேன் காயமடைந்திருந்த பலரையும் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார். டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்றது அவர்கள் எங்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் உயிரிழந்த பலரை பார்த்தேன் என அவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.' அந்த பகுதியிலிருந்து தப்பியோடியவேளை உயிரிழந்த நிலையில் பலரை கண்டதாக 55 சனா ல் ஜபேரி தெரிவித்துள்ளார்.' நாங்கள் உணவு உணவு என சத்திமிட்டோம் ஆனால்அவர்கள் எங்களுடன் பேசாமல் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் நாங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தோம் டாங்கிகள் ஜீப்புகளில் எங்களை நோக்கி வந்த இஸ்ரேலிய படையினர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என 24 வயது டமெர் அபு அக்பர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220449

உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 4 weeks ago

உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: RAJEEBAN

20 JUL, 2025 | 03:19 PM

image

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான இடம்பெற்றது என்பதற்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளதாவது.

பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும்.

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.

அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஏனென்றால் நீங்கள் அதற்கு முதல் இங்கு வந்தீர்கள் என்றால் அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்புகின்ற அத்தனை வாக்குறுதிகளையும் செம்டம்பர் மாதம் வரப்போகின்ற அந்த தீர்மானத்தை எந்தளவிற்கு பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பலவீனப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து இறுதியில் அந்த தீர்மானம் பலவீனப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களிற்கு அதிலிருந்து மீள முடியாத நிலையை ஏற்படுத்தும் என  அவர்கள் தங்கள் மகஜரில் வலியுறுத்தியிருந்தனர்.

தெற்கில் இருக்கின்ற சுமார் 100 மனித உரிமை அமைப்புகளும் அவசரமாக நீங்கள் வராதீர்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

அதைஎல்லாவற்றையும் மீறித்தான் அந்த ஆணையாளர் வருகின்றார், அந்த ஆணையாளர் வந்தபோது ,துரதிஸ்டவசமாக என்னால் இங்கே இருக்க முடியாத ஒரு காலம்.

2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் - நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார்.

மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம்.

இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம்.

உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது.

நாங்கள் அந்த கடிதத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டும் என விரும்பியதால் நாங்கள் அந்த முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியையும் அடைந்தோம்.

அனைத்து தரப்புகளும் அந்த கடிதத்தி;ல் கையெழுத்திட்டவை மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இங்கேயிருக்கின்ற அமைப்புகளை சந்தித்த இடத்தில்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக சிங்கம் ஊடாக அது வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தை நாங்கள் வழங்கியபோது செம்மணியையும் உள்வாங்கித்தான் அதனை கொடுத்திருந்தோம்.

தற்போது இருக்கின்ற சூழல் பொறுப்புக்கூறல் படிப்படியாக குறைந்து பேச்சுபொருளாக மாறிவிட்ட சூழல்

போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான முயற்சிகள் பூஜ்ஜியத்திற்கு வருகின்ற இடத்திற்கு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து விட்டினம்.

அதனை இன்று ஒரு பேச்சுப்பொருளாக கூட இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளார்கள்.

கடந்த தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றது அரசாங்கத்தை விசாரணைமுன்னெடுக்க சொல்லி  செய்யசொல்லி கேட்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதுவும் அந்த தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போரின்கடைசிக்கட்டத்தில் ,இடம்பெற்ற விடயங்களை விசாரணை செய்யவேண்டும் என்பதுதான் 2012 முதல் இந்த தீர்மானங்களின் குறிக்கோளாக உள்ளது.

செம்மணி போர்நடைபெற்ற காலத்தில்தான் இடம்பெற்றது.ஆனால் இந்த தீர்மானம் விரும்புகின்ற அந்த காலப்பகுதிக்கு வெளியே.

புதுதீர்மானம் செப்டம்பரில் வருகின்றது, செம்மணி எப்போதோ மறைக்கப்பட்ட ஒரு விடயம்,வெறுமனே 15 உடல்களை கண்டுபிடித்த இடத்தில் அதன் பின்னர் அரசாங்கம் விசாரணைக்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன்கதிர்காமர் இருந்தவேளை இது ஒரு பொய்,மனித புதைகுழிகள் இல்லை குற்றவாளியொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இடத்தில கோபத்தில எல்லா பழிகளையும் அரசாங்கத்தின் மீது போட விரும்பின நிலையில் தான் அந்த வாக்குமூலம் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லைஉண்மைதன்மையும்  என தெரிவித்து முழுமையாக மூடினார்கள்.

அதனை கிடப்பில் போடுவதற்கு தான் அவர்களின் முழுமுயற்சியும் இருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு பிறகு வந்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமும் இவை எவற்றையும் எடுத்துப்பார்க்க விரும்பவில்லை, இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த அரசாங்கத்தை பற்றி நாங்கள் சொல்லவேண்டியதில்லை.

செம்மணி பொய் 600 உடல்களே கொல்லப்பட்டு புதைக்கப்படவில்லை என சொல்லப்பட்டு ஒரு முடிவாகயிருந்த நிலையில் தான், செம்மணியின் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

செம்மணி எங்களிற்கு இரண்டு சந்தர்ப்பங்களை தருகின்றது,

ஒன்று ஜெனீவாவில் இருக்கின்ற சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது.

இரண்டாவது விடயம் செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது.

அதாவது நடந்தது இரண்டு தரப்புகளிற்கும் இடையிலான ஒரு போர் அல்ல,இதற்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது, தமிழ் மக்களிற்கு நடந்த அநியாயங்களை சரியாக பார்த்தால் அது இறுதியில் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்ற எல்லா விடயத்தையும் உள்வாங்கி யார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதுதான் எங்களிற்கு கூட தேவைப்படுகின்றது.

அப்போதுதான் எங்களிற்கு உண்மையான நீதியும் நியாயமும் கிடைக்கும்.

இல்லாவிடில் ஒரு சரித்திரத்தை மாத்திரம் மூடிமறைத்துவிட்டு ஒரு பக்கத்தை மாத்திரம் படமெடுத்துவிட்டு  நீங்கள் இதற்குரிய தீர்வை கொண்டுவாருங்கள் என கேட்பது நியாயத்தைகொண்டுவரப்போவதில்லை.

செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது.

ஆகவே இன்று எங்களிற்கு உள்ள தேவை என்னவென்றால் இந்த முழு விடயத்தையும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதே.

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இது ஒரு ஆபத்தானது

ஏனென்றால் இலங்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு உரிய சட்டத்தரணியாக செயற்படுகின்றது அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் வந்தாலும் அவர்கள்தான் போவார்கள், அதேவேளை அவர்கள் தான் குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.அரசதரப்பில் இருக்கின்ற பிழை செய்தவர்களிற்கு எதிராகவும் அவர்கள்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள்.

இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் ஒரு பொதுப்பிரச்சினை.அந்த பொதுப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம்.

அதற்கும் இனப்பிரச்சினை காலத்தில் இலங்கையில் நடந்த அநியாயத்திற்கும் இடையில்  எந்த தொடர்பும் இல்லை.

அவ்வாறான சுயாதீன அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களிற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.

ஏனென்றால் இலங்கையில் இருக்ககூடிய இனப்பிரச்சினை இனங்களிற்கு இருக்ககூடிய பிரச்சினை,அந்த இனங்கள்  என பார்க்கின்ற போது இலங்கை அரசு என்பது ஒரு இனத்தின் சொத்தாக மாறியுள்ளது.

ஏனைய இனங்களிற்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை அரசின் கட்டமைப்பே மாறியிருக்கின்றது. என்ற கருத்தை சொல்லித்தான் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார் ஒரு உள்ளக விசாரணை இலங்கையிலே பொருத்தமே இல்லாதது என்று.

இலங்கைக்கு உள்ளே அந்த இனப்பிரச்சினையின் தாக்கம் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையே நடுநிலைதன்மை இழக்க வைத்திருக்கின்றது என்பதும் அது ஒரு போதும் ஒரு உள்ளக விசாரணை ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த குற்றங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்காது.

ஆகவே ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் , சர்வதேச விசாரணைதான் மிகப்பொருத்தம் ஆனால் ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் என சொன்னார்.

அதற்கு ஒரு விட்டுக்கொடுப்பாக நாங்கள் தமிழ் தரப்பு தெரிவித்தது இதூன் கலப்புபொறிமுறையின் முழு கட்டுப்பாடும் சர்வதேச தரப்பிடம் இருந்தால் தான் கலப்பு பொறிமுiயை நாங்கள் பரிசீலிப்போம் . இதுதான் எங்களின் நிலைப்பாடாகயிருந்தது.

இன்றைக்கு திட்டமிட்ட வகையிலே சுயாதீன வழக்குரைஞர் அலுவலம் ஒன்று தேவை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய விடயத்திற்கு தீர்வாக அதனை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

https://www.virakesari.lk/article/220468

உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 4 weeks ago
உள்நாட்டு போரின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் விசாரணை செய்யும் சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும் ;இனப்படுகொலை விசாரணை இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 20 JUL, 2025 | 03:19 PM செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான இடம்பெற்றது என்பதற்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொறுப்புக்கூறல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது உங்களிற்கு தெரியும். ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்னரே எங்களிற்கு அறிவித்திருந்தார்கள்.வார ஒரு நோக்கம் இருப்பதாக எங்களிற்கு சொல்லப்பட்டிருந்தது. அப்படி சொல்லப்பட்ட நிலைமையில் வடகிழக்கை சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன. செப்டம்பர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முடிவடையும் வரை இங்கே வராதீர்கள் என அவர்கள் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஏனென்றால் நீங்கள் அதற்கு முதல் இங்கு வந்தீர்கள் என்றால் அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் கேட்க விரும்புகின்ற அத்தனை வாக்குறுதிகளையும் செம்டம்பர் மாதம் வரப்போகின்ற அந்த தீர்மானத்தை எந்தளவிற்கு பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பலவீனப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் செய்து இறுதியில் அந்த தீர்மானம் பலவீனப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களிற்கு அதிலிருந்து மீள முடியாத நிலையை ஏற்படுத்தும் என அவர்கள் தங்கள் மகஜரில் வலியுறுத்தியிருந்தனர். தெற்கில் இருக்கின்ற சுமார் 100 மனித உரிமை அமைப்புகளும் அவசரமாக நீங்கள் வராதீர்கள் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. அதைஎல்லாவற்றையும் மீறித்தான் அந்த ஆணையாளர் வருகின்றார், அந்த ஆணையாளர் வந்தபோது ,துரதிஸ்டவசமாக என்னால் இங்கே இருக்க முடியாத ஒரு காலம். 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி ஒரு பொதுகடிதத்தை தமிழ் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து அனுப்பியிருந்தோம். பொறுப்புக்கூறல் தொடர்பிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் - நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தில் அவ்வேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராயிருந்த சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டிருந்தார். மனித உரிமை விடயத்தில் உறுதியாக இணைந்து பயணிக்கின்ற அமைப்புகளும் கைச்சாத்திட்ட கடிதம். இன்றைக்கும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அந்த கடிதம் ,இன்றும் மிகவும் பொருத்தமான ஒரு கடிதம். உண்மையிலேயே தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயம் 100க்கு நூறு வீதமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடிதமாக அது காணப்படுகின்றது. நாங்கள் அந்த கடிதத்தை மீண்டும் வலியுறுத்தவேண்டும் என விரும்பியதால் நாங்கள் அந்த முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியையும் அடைந்தோம். அனைத்து தரப்புகளும் அந்த கடிதத்தி;ல் கையெழுத்திட்டவை மனித உரிமை ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது இங்கேயிருக்கின்ற அமைப்புகளை சந்தித்த இடத்தில்,தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக சிங்கம் ஊடாக அது வழங்கப்பட்டது. அந்த கடிதத்தை நாங்கள் வழங்கியபோது செம்மணியையும் உள்வாங்கித்தான் அதனை கொடுத்திருந்தோம். தற்போது இருக்கின்ற சூழல் பொறுப்புக்கூறல் படிப்படியாக குறைந்து பேச்சுபொருளாக மாறிவிட்ட சூழல் போர்க்காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான முயற்சிகள் பூஜ்ஜியத்திற்கு வருகின்ற இடத்திற்கு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து விட்டினம். அதனை இன்று ஒரு பேச்சுப்பொருளாக கூட இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தியுள்ளார்கள். கடந்த தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்றது அரசாங்கத்தை விசாரணைமுன்னெடுக்க சொல்லி செய்யசொல்லி கேட்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதுவும் அந்த தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் போரின்கடைசிக்கட்டத்தில் ,இடம்பெற்ற விடயங்களை விசாரணை செய்யவேண்டும் என்பதுதான் 2012 முதல் இந்த தீர்மானங்களின் குறிக்கோளாக உள்ளது. செம்மணி போர்நடைபெற்ற காலத்தில்தான் இடம்பெற்றது.ஆனால் இந்த தீர்மானம் விரும்புகின்ற அந்த காலப்பகுதிக்கு வெளியே. புதுதீர்மானம் செப்டம்பரில் வருகின்றது, செம்மணி எப்போதோ மறைக்கப்பட்ட ஒரு விடயம்,வெறுமனே 15 உடல்களை கண்டுபிடித்த இடத்தில் அதன் பின்னர் அரசாங்கம் விசாரணைக்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன்கதிர்காமர் இருந்தவேளை இது ஒரு பொய்,மனித புதைகுழிகள் இல்லை குற்றவாளியொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இடத்தில கோபத்தில எல்லா பழிகளையும் அரசாங்கத்தின் மீது போட விரும்பின நிலையில் தான் அந்த வாக்குமூலம் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லைஉண்மைதன்மையும் என தெரிவித்து முழுமையாக மூடினார்கள். அதனை கிடப்பில் போடுவதற்கு தான் அவர்களின் முழுமுயற்சியும் இருந்தது. சந்திரிகாவின் அரசாங்கம் மாத்திரமல்ல அதற்கு பிறகு வந்த ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமும் இவை எவற்றையும் எடுத்துப்பார்க்க விரும்பவில்லை, இவ்வாறான சூழ்நிலையில் மகிந்த அரசாங்கத்தை பற்றி நாங்கள் சொல்லவேண்டியதில்லை. செம்மணி பொய் 600 உடல்களே கொல்லப்பட்டு புதைக்கப்படவில்லை என சொல்லப்பட்டு ஒரு முடிவாகயிருந்த நிலையில் தான், செம்மணியின் இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. செம்மணி எங்களிற்கு இரண்டு சந்தர்ப்பங்களை தருகின்றது, ஒன்று ஜெனீவாவில் இருக்கின்ற சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு நடந்திருக்ககூடிய அநியாயங்களை விசாரிக்ககூடிய காலவரையறையை நீடிக்கவேண்டும் என்ற நிலைமையை உயிர்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகயிருக்கின்றது. இரண்டாவது விடயம் செம்மணி இந்தளவிற்கு வந்திருப்பதன் உடன் வேறு வேறு இடங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது இனப்படுகொலைக்கான சூழலை மீண்டும் திறக்கவைத்து விசாரணை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றது. அதாவது நடந்தது இரண்டு தரப்புகளிற்கும் இடையிலான ஒரு போர் அல்ல,இதற்கு பின்னால் ஒரு சரித்திரம் உள்ளது, தமிழ் மக்களிற்கு நடந்த அநியாயங்களை சரியாக பார்த்தால் அது இறுதியில் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்ற எல்லா விடயத்தையும் உள்வாங்கி யார் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்பதுதான் எங்களிற்கு கூட தேவைப்படுகின்றது. அப்போதுதான் எங்களிற்கு உண்மையான நீதியும் நியாயமும் கிடைக்கும். இல்லாவிடில் ஒரு சரித்திரத்தை மாத்திரம் மூடிமறைத்துவிட்டு ஒரு பக்கத்தை மாத்திரம் படமெடுத்துவிட்டு நீங்கள் இதற்குரிய தீர்வை கொண்டுவாருங்கள் என கேட்பது நியாயத்தைகொண்டுவரப்போவதில்லை. செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது. ஆகவே இன்று எங்களிற்கு உள்ள தேவை என்னவென்றால் இந்த முழு விடயத்தையும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதே. செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஒரு ஆபத்தானது ஏனென்றால் இலங்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு உரிய சட்டத்தரணியாக செயற்படுகின்றது அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் வந்தாலும் அவர்கள்தான் போவார்கள், அதேவேளை அவர்கள் தான் குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.அரசதரப்பில் இருக்கின்ற பிழை செய்தவர்களிற்கு எதிராகவும் அவர்கள்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள். இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் ஒரு பொதுப்பிரச்சினை.அந்த பொதுப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம். அதற்கும் இனப்பிரச்சினை காலத்தில் இலங்கையில் நடந்த அநியாயத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அவ்வாறான சுயாதீன அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களிற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் இலங்கையில் இருக்ககூடிய இனப்பிரச்சினை இனங்களிற்கு இருக்ககூடிய பிரச்சினை,அந்த இனங்கள் என பார்க்கின்ற போது இலங்கை அரசு என்பது ஒரு இனத்தின் சொத்தாக மாறியுள்ளது. ஏனைய இனங்களிற்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கை அரசின் கட்டமைப்பே மாறியிருக்கின்றது. என்ற கருத்தை சொல்லித்தான் முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார் ஒரு உள்ளக விசாரணை இலங்கையிலே பொருத்தமே இல்லாதது என்று. இலங்கைக்கு உள்ளே அந்த இனப்பிரச்சினையின் தாக்கம் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையே நடுநிலைதன்மை இழக்க வைத்திருக்கின்றது என்பதும் அது ஒரு போதும் ஒரு உள்ளக விசாரணை ஊடாக இனப்பிரச்சினை சார்ந்த குற்றங்களிற்கு ஒரு தீர்வு கிடைக்காது. ஆகவே ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் , சர்வதேச விசாரணைதான் மிகப்பொருத்தம் ஆனால் ஆகக்குறைந்தது ஒரு கலப்புபொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும் என சொன்னார். அதற்கு ஒரு விட்டுக்கொடுப்பாக நாங்கள் தமிழ் தரப்பு தெரிவித்தது இதூன் கலப்புபொறிமுறையின் முழு கட்டுப்பாடும் சர்வதேச தரப்பிடம் இருந்தால் தான் கலப்பு பொறிமுiயை நாங்கள் பரிசீலிப்போம் . இதுதான் எங்களின் நிலைப்பாடாகயிருந்தது. இன்றைக்கு திட்டமிட்ட வகையிலே சுயாதீன வழக்குரைஞர் அலுவலம் ஒன்று தேவை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய விடயத்திற்கு தீர்வாக அதனை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. https://www.virakesari.lk/article/220468

பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால

1 month 4 weeks ago

பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால

General20 July 2025

1752997057_2095807_hirunews.jpg

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/410744/important-matters-related-to-pillaiyaan-to-be-brought-to-court-soon-minister-ananda-wijepala

பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால

1 month 4 weeks ago
பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு! – அமைச்சர் ஆனந்த விஜேபால General20 July 2025 பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய, நீதிமன்றத்துக்கு கண்டறியப்பட்ட விடயங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது. இந்தநிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளில் கண்டறியப்பட்ட சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/410744/important-matters-related-to-pillaiyaan-to-be-brought-to-court-soon-minister-ananda-wijepala

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு

1 month 4 weeks ago

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு

1006468013.jpeg

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/article/அனைத்து_ஆசிரியர்களும்_பட்டதாரிகளாக_இருப்பது_கட்டாயம்!_பிரதமர்_அறிவிப்பு