Aggregator

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்

1 month 4 weeks ago
8 பந்துகளில் 8 சிக்ஸர்: வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை - யார் இந்த ஆகாஷ் சௌத்ரி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஞ்சி டிராஃபியில் மேகாலயாவுக்காக விளையாடுகிறார் ஆகாஷ் சௌத்ரி 10 நவம்பர் 2025 முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி வரலாறு படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் அவர். வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை பிளேட் டிவிஷனின் குரூப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். சூரத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணியின் ஸ்கோர் 576/6 என இருந்தபோது அவர் களமிறங்கினார். மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 628/6 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் சாதனை சமன் ஆகாஷ் சௌத்ரிக்கு முன்னதாக முதல் தரப் போட்டிகளில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர்கள் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மட்டுமே. . தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ராக்டரும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால், இருவேறு ஓவர்களில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தார். தன் இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஆகாஷ் இரண்டு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு இடது கை ஸ்பின்னர் லிமார் தாபி வீசிய ஓவரில் 6 பந்துளிலுமே சிக்ஸர் அடித்தார் அவர். அடுத்த ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் டி.என்.ஆர்.மோஹித் பந்துவீச்சில், தான் சந்தித்த முதலிரு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி அவர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 11 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அவர் சாதனை படைத்தார். இதற்கு முன், 'குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்' என்ற சாதனையை டெஸ்டர்ஷயர் அணியின் வெய்ன் வைட் வைத்திருந்தார். 2012-ஆம் ஆண்டு எஸக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். 9 நிமிடங்களில் அரைசதம் இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, நேர அடிப்படையில் முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட அரைசதங்களின் பட்டியலில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஆகாஷ் சௌத்ரி தன் அரைசதத்தை 9 நிமிடங்களில் அடித்திருக்கிறார். இந்த சாதனை கிளைவ் இன்மேன் வசம் இருப்பதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ சொல்கிறது. 1965-ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக ஆடிய அவர், நாட்டிங்ஹாம்ஷயருக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், அது 8 நிமிடங்களிலேயே அடிக்கப்பட்டிருக்கிறது. வலது கை மித வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, வலது கை பேட்டர். அவர் 1999-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி பிறந்தவர் என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ குறிப்பிட்டிருக்கிறது. அவர் 30 முதல் தரப் போட்டிகளில் (அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பு வரை) 14.37 என்ற சராசரியில் 503 ரன்கள் எடுத்திருந்தார். 29.97 என்ற சராசரியில் 87 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார். இவருக்கு முன்பாக, முதல் தரப் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை பந்தீப் சிங் வசம் இருந்தது. 2015-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடிய அவர் திரிபுரா அணிக்கெதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த சாதனையை முதன்முதலில் செய்தவர் கேரி சோபர்ஸ். 1968-ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் கிலாமார்கன் அணிகள் மோதிய போட்டியில், மால்கம் நேஷ் பந்துவீச்சில் அந்தச் சாதனையை செய்தார் சோபர்ஸ். 1984-85 ரஞ்சி சீசனில் பரோடாவுக்கு எதிரான போட்டியில் அன்றைய பாம்பே (இன்று மும்பை) அணிக்கு விளையாடிய ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரி, திலக் ராஜ் வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2y16gz17eo

வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்

1 month 4 weeks ago
13 Nov, 2025 | 12:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/230220

வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்

1 month 4 weeks ago

13 Nov, 2025 | 12:47 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்  உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் பதிலளித்ததாவது,

மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/230220

சுவிஸ் தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்.

1 month 4 weeks ago
இந்தக் காணொளியில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேள்வி இவர்களின் வர்த்தகத்தை யாழில் நேரடியாக செய்ய நேரடி விமானசேவை செய்ய முடியாதாம். காரணம் யாழில் இறங்கி ஏறும் விமானங்களுக்கு இந்திய அனுமதி பெற வேண்டுமாம். இதனால் பெரும் பணம் விரயமாகும் என்கிறார்கள். இன்னுமொரு ஆச்சரியம் இலங்கை விமானங்களுக்கும் இந்தியாவே இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டுமாம். இலங்கையில் அதுவும் யாழில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்த தனியான கோபுரம் இல்லையா?

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 month 4 weeks ago
நான் சொல்வதும் நிறுவனத்தின் வரி, vat போன்றவை. வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு வந்தால், , uk இல் நிறுவனம் வரித்திணைக்கத்திடம் vat (ஆஸ்திரலியாவில் ஒப்பானது gst) க்கு பதிய வேண்டும், தனிநபர் நிறுவனமும் (sole trader ) உள்ளடக்கம். அது விற்கும் பொருட்கள், சேவைகளுக்கு vat ஐ, அரசு சார்பாக / பிரதிநிதியாக, vat ஐ அறவியவேண்டும் அனால், அந்த vat அறவிவிட்டுதலில், uk இல் நிறுவனங்கள் தொழிற்படுவது பெருமளவில் வங்கியை ஒத்தது. தனிநபர் சம்பளத்தை சொன்னது புரிவது இலகுவாக. சிறுவிளக்கம் : வங்கிக்கு (தனிநபர், வேலையாளர்) சம்பளம் செலுத்தப்பட்டால், அந்த பணம் வங்கிக்கு பாவிக்க உரிமை, வேலையாளர் வங்கிக்கு unsecured creditor. வங்கியில், வேலையாளர் unsecured creditor என்ற படியால், அந்த பணம் வங்கிக்கு கிட்டத்தட்ட சொந்தம், இது நம்ப / ஏறுகொள்ளமுடியாது தான், ஆனால் அது தான் நிலை. கிட்டதட்ட இதே நிலை தான் vat போன்றவற்றில் - அதாவது அரசு சார்பாக , பிரதிநிதியாக, நிறுவனம் சேகரிக்கும் அல்லது நிறுவனத்துக்கு செலுத்தப்படும், நிறுவனதின் விடயங்களோடு தொடர்பு அல்லாத பணம். (மேலே சொன்ன தனிநபர் வேலையாளர் / வங்கி யின் கிட்டத்தட்ட ஒத்த நிலையினால் தான் ), UK இப்போது சொல்வது, 'பாதுகாக்க' முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிறது. இடையூறு இல்லை (ஏய்ப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது வரியை மறைப்பது, ஒன்று அல்லது பலவழிகளில்)

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 month 4 weeks ago
கோசான் கூறுவது நிறுவனத்தின் வருமான வரி ஏய்ப்பு பற்றியது என நினைக்கிறேன், நீங்கள் குறுவது, நுகர்வோர் பொருள்கள்சேவைகள் மீதான தீர்வை என நினைக்கிறேன், இரண்டும் வெவ்வேறானவர்களுக்கான தீர்வை, எதற்கும் கோசான் தான் உறுதிப்படுத்த வேண்டும், நான் இடையூறு செய்தால் மன்னிக்கவும்.

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்

1 month 4 weeks ago
வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு டவுட் இதுக்குள்ள யுவராஜ் சிங் வர மாட்டாரா.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 4 weeks ago
வணக்கம் வாத்தியார் .......! தமிழ் பாடகர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத ஓ ஓ ஹோ ஓ கொல்லாத ஆண் : என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற ஆண் : காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான் கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக ஆண் : ஹ்ம்ம் சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது என் மனசு தாக்கியது உன்னால உன்னால ஆண் : ஹ்ம்ம் ஜாதி மதம் பாா்க்கலையே சம்மதத்த கேட்கலையே காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால ஆண் : நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக ஆண் : ஹோ வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டிப்பய போலிருந்தேன் வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால ......! --- உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---

களைத்த மனசு களிப்புற ......!

1 month 4 weeks ago
கராத்தே பழகுங்கள் ........ தற் பாதுகாப்புக்கு .........! 👍 "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " தெரியாதா ......... அளவுடன் பார்த்து அளவின்றி ரசிக்கவும் . .....! 😂