Aggregator

சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு

1 month 4 weeks ago

சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு

July 19, 2025 5:00 am

சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.

பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.

1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது.

விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://oruvan.com/40-tenants-ordered-to-vacate-buildings-housing-tamil-shops-in-switzerland/

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago
மு.க.முத்து.... தனது சித்தி ராசாத்தி அம்மாளை விட வயதில் மூத்தவர். அதாவது.... கருணாநிதியின் மகனை விட, (சின்ன) அம்மா இளையவர். திராவிட மாடல்.

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

1 month 4 weeks ago
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் ! 19 JUL, 2025 | 11:25 AM உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பதுடன் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். https://www.virakesari.lk/article/220371

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

1 month 4 weeks ago

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

19 JUL, 2025 | 11:25 AM

image

உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பதுடன் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

https://www.virakesari.lk/article/220371

அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்

1 month 4 weeks ago
அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும் 19 July 2025 அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிறுவனம் கோரியபடி பணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து சட்ட ஆலோசனையை நாடியது. சில செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதலுக்கான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாகவும், இதற்கான மொத்தத் தொகை ரூ.300 முதல் 500 மில்லியன் வரை இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. https://hirunews.lk/tm/410642/sri-lanka-to-pay-rs-500-million-for-halting-adanis-projects

அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்

1 month 4 weeks ago

அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்

19 July 2025

1752910539_9628428_hirunews.jpg

அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. 

இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. 

பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிறுவனம் கோரியபடி பணம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து சட்ட ஆலோசனையை நாடியது. 

சில செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதலுக்கான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாகவும், இதற்கான மொத்தத் தொகை ரூ.300 முதல் 500 மில்லியன் வரை இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எரிசக்தி அனுமதிக்கு அதானி செலுத்திய தொகையை எந்த சூழ்நிலையிலும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை உறுதியாகக் கூறுகிறது. 

இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் பணிப்பாளர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, திருப்பிச் செலுத்தும் தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும். 

இந்த நிறுவனம் வட மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டங்களை நிர்மாணிப்பதற்கு 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமெனவும் இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://hirunews.lk/tm/410642/sri-lanka-to-pay-rs-500-million-for-halting-adanis-projects

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago
முதல்வர் ஸ்ராலின் ஐயாவின் கவனத்திற்கு.... மெரீனா பீச்சில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குப் பக்கத்தில் மு.க.முத்துவை அடக்கம் செய்ய வேண்டும். இப்பவே இவருக்கு அங்கு இடம் ஒதுக்கினால்தான்... நாளை தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், அழகிரி, ஸ்ராலின், கனிமொழி, உதயநிதி, இன்பநிதி என்று இடம் பிடித்து வைக்க வசதியாக இருக்கும். அனுதாபங்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

1 month 4 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை General19 July 2025 பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/410648/signature-drive-demanding-repeal-of-the-prevention-of-terrorism-act

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

1 month 4 weeks ago

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

General19 July 2025

1752912334_5503755_hirunews.jpg

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. 

சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இன்னுமொரு அடக்குமுறை வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

முன்னதாக கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/410648/signature-drive-demanding-repeal-of-the-prevention-of-terrorism-act

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

1 month 4 weeks ago
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் இது அமுலுக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும். மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmd9oa0qu01cgqp4kd8tck58h

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago
எம் ஜி ஆருக்கு போட்டியாக கருணாநிதி இவரை திரை நட்சத்திரமாக்க முனைந்தாராம். ஆனால் எண்ணையை பூசி கொண்டு பிரண்டாலும் ஒட்டுற மண்தானே ஒட்டும்🤣. மகன் நடிப்பதோ பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பதோ கொள்ளையோ கொள்ளை என்பது அன்றைய பிரபல அரசியல் வாசகமாம். பின்னாளில் இந்த முத்துவே எம்ஜிஆரிடம் சரணடைந்து பண உதவிகோரினாராம். உதவி செய்தாலும், அரசியலில் இவரை எம்ஜிஆர் சேர்த்துகொள்ளவில்லையாம். தன்னை கவிழ்ப்பார் என்ற பயமா அல்லது அப்பனுக்கு எதிராக மகனை நிறுத்த கூடாது என்ற நல்லெண்ணமா தெரியவில்லை. சார்ந்தோருக்கு அனுதாபங்கள்.

இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம்

1 month 4 weeks ago
இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம் சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது. எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். R https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-பாடசாலை-மாணவிகளிடையே-அதிகரிக்கும்-கர்ப்பம்/175-361345

இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம்

1 month 4 weeks ago

இலங்கையில் பாடசாலை மாணவிகளிடையே அதிகரிக்கும் கர்ப்பம்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. 

அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது. எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். 

கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். R

https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-பாடசாலை-மாணவிகளிடையே-அதிகரிக்கும்-கர்ப்பம்/175-361345

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

19 Jul 2025, 9:51 AM

kalaingar eldest son M.K.Muthu passes away!

கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார்.  

நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

image-318-1024x569.png

இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் மறைவையொட்டி அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/kalaingar-eldest-son-m-k-muthu-passes-away/

மது போதையில் வாழ்க்கையைத் தொலைத்த மு.க.முத்து!

-இர்ஷாத் அகமது

M-K-Muthu-Images-6-Copy.jpg

மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்;

2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில்  ஒரு கட்டுரை வெளியானது.

அப்போது நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தேன்.

மு.க.முத்து நடித்த திரைப்படங்களில் ஒரு படம் கூட நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால், அவர் நடித்த படங்களில் வரும் ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ ஆகிய இனிமையான பாடல்கள் என்றென்றும் என் மனதைக் கவர்ந்தவை.

எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அரசியலிலும் திரைப்படத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த காலக்கட்டத்தில்,  அவருக்குப் போட்டியாக கலைஞரால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டவர் மு.க.முத்து என்ற பொதுவான ஒரு கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், மு.க.முத்து நடித்த படங்கள் அனைத்திலும்  அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே எம்ஜிஆரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.

mgr-mk-muthu.jpg

திமுக தலைவரின் மகன், முதலமைச்சரின் மகன், திரைப்பட  நடிகர், பாடகர், பணபலம், செல்வாக்கு என இத்தனை சிறப்புகள் இருந்தும் தனது இளம் வயதில் ‘சேர்வாரோடு சேர்க்கை’ காரணமாக மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, அவரால் ஒரு சாதாரண மனிதனைப் போல கூட  சமுதாயத்தில் ஒரு ‘அந்தஸ்துடன்’ வாழ முடியவில்லை.

மு.க.முத்து குறித்த செய்திகளால் எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது பள்ளி வாழ்க்கை, சினிமாத் துறையில் மறக்க முடியாத அனுபவங்கள் என அவரது வாழ்க்கையின் இன்னொரு அழகிய பக்கம் குறித்து செய்தி வெளியிட முடிவு செய்து திருவாரூர் சென்றேன்.

பஸ்சில் சென்று திருவாரூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னை அப்போதைய திருவாரூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்று, அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். (கல்யாணசுந்தரத்தை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்களது நட்பு கடந்த ஆண்டு அவர் திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டு  இறக்கும் வரை தொடர்ந்தது).

மு.க.முத்து அப்போது திருவாரூரை அடுத்த குளிக்கரை என்ற கிராமத்தில்  ஒரு வீட்டின் பின்புறம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு மிகச் சிறிய குடிசையில் வசித்து வந்தார்.

நாங்கள் சென்றபோது மு.க.முத்து வீட்டில் இல்லை. குடிசை வீட்டிற்குள், அழுக்கடைந்த. கிழிந்த ஆடை அணிந்த ஒரு பெண், பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப் பெண்ணுடன் தான் மு.க.முத்து தற்போது ‘குடித்தனம்’ நடத்தி வருவதாக  அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

“மு.க.முத்து எங்கே?,” என நண்பர் கல்யாணசுந்தரம் கேட்டதற்கு, அவர் வெளியே சென்றிருப்பதாக அப்பெண் பதிலளித்தார்.

எனவே, நாங்கள் இருவரும் அவரது வருகைக்காக அவ்வீட்டின் வெளியே ரோட்டில் காத்திருந்தோம். சுமார் ஒருமணி நேர காத்திருத்தலுக்குப் பின், “ஸார், அவர் வர்றார்,” என்றார் கல்யாணசுந்தரம்.

அவர் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருவரும் எனது பார்வையில் படவில்லை.

‘எங்கே வர்றார்?’  என நான் கேட்டேன். “ஸார், தொப்பி அணிந்து ஒருத்தர் வர்றார் பாருங்க. அவர்தான் மு.க.முத்து,” என்றார் கல்யாணசுந்தரம்.

இப்போது அவர் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் எனதருகே நெருங்கியபோது திடீரென சாராய நெடி மூக்கைத் துளைத்து, குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல குமட்டியது.

அவரது அலங்கோல நிலையைக் கண்ட எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது.

888.jpg

அதற்கு காரணம், அவர் ஒருகாலத்தில் திரைப்பட நடிகர் என்பதால் திரைப்பட ஸ்டில்களில் பார்த்த அவரது அழகிய உருவத்தை என் மனதில் நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால். அவரோ பல நாட்களாக குளிக்காத, அழுக்கடைந்த, கசங்கிய ஆடைகள் அணிந்திருந்ததுடன், தலையில் அழுக்கடைந்த ஒரு தொப்பியும் அணிந்திருந்தார். அதனால் அவரை என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவரா இவர்? என என்னால் நம்பவே முடியவில்லை.

ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு, அவரை வழிமறித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை பேட்டி காண வந்திருப்பதாக கூறினேன். அவ்வளவு போதையிலும் அவர் ரொம்ப நிதானமாகவே இருந்தார். நாங்கள் சொன்ன தகவலை புன்முறுவலுடன் கேட்டுவிட்டு, எங்களை அக் குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

அங்கே உட்கார பாய் கூட இல்லை. அதனால் வெறுந் தரையில் தான் உட்கார்ந்தோம். குடிசையில் ஒரே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறிகூட இல்லை. அக் குடிசையில் எங்களுக்கு மின்விசிறி வசதிகூட இல்லாமல் அசௌகரியமாக இருப்பதற்காகவும், எங்களுக்கு குடிக்க டீ கூட தரமுடியாத தன்னுடைய நிலையையும் வருத்தத்துடன் கூறி, அதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்டார் மு.க.முத்து.

என்னுடைய பெயரை கேட்ட மு.க.முத்து, மனதில் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை, தனக்கு நாகூர் ஆண்டவரை  ரொம்ப பிடிக்கும் எனக்கூறி, ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலைப் பாடினார்.

பின்னர், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற பாடலின் ஒருசில வரிகளையும், சிவாஜி படத்தில் வரும் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.

அதன் பின்னர், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க’ என்ற பாடலை பாடிக் காட்டினார்.

ஏதோ பல ஆண்டுகள் பழக்கமானவர் போல எங்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி எங்களது முதல் சந்திப்பிலேயே கலகலவெனப் பேசினார். இன்று நினைத்தாலும் அக்காட்சி எனது கண் முன்னே தோன்றுகிறது.

“சென்னையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மெயின்கார்ட் கேட் அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாங்க. ஆனால் அங்கேயும் நான் ஒழுங்கா படிக்கல. ஃபெயிலாகிட்டேன்,” என்றார் மு.க.முத்து.

“எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  நானும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். அவரும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். ஆனா அவர் வாழ்க்கையில் போராடி ஜெயிச்சு முதலமைச்சரா  ஆகிவிட்டார். நான் தான் வாழ்க்கையிலும் தோற்றுவிட்டேன்,” என சிரித்தவாறே கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனதில் உள்ள வலியை என்னால் உணர முடிந்தது.

tamil-indian-express-2023-07-28T152355.5

“என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வரணும்னு எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணினார்.  ஆனால் நான் தான் அவரது பேச்சைக் கேட்டு நடக்காம, அவருக்கு ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்திவிட்டேன்,” எனக்கூறி வருத்தப்பட்டார் மு.க.முத்து.

சினிமாத் துறையில் நுழைந்தது குறித்து கேட்டதற்கு, ‘அதற்கும் எங்கப்பா தான் காரணம்,’ என்றார், மு.க.முத்து.

“எனக்கு சினிமாவில் நடிக்க கொஞ்சஞ் கூட விருப்பம் இல்லை. ஆனால், எங்க அப்பா தான் என்னை பெரியப்பா (எம்ஜிஆர்) மாதிரி ஆக்கணும்னு ஆசைப்பட்டு என்னை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வெச்சார். ஆனா, எங்க பெரியப்பாவுக்கு  என்மேல எப்பவுமே ரொம்ப பிரியம். எங்க அப்பாமீது அவருக்கு கோபம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம நான் நடிச்ச ‘பிள்ளையோ பிள்ளை’ பட சூட்டிங்கிற்கு வந்திருந்ததோடு, படப்பிடிப்பை கிளாப் அடிச்சு தொடங்கி வச்சார் பெரியப்பா. நான் திரைத் துறையில் வெற்றி பெற்று பெரிய  ஆளா வரணும்னு மனசார வாழ்த்தினார்,” என்றார் மு.க.முத்து.

images-1.jpg

எம்ஜிஆரை பெரியப்பா என்றே குறிப்பிட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரை புகழ்ந்து பேசினார்.

“சிவாஜி சித்தப்பாவின் படங்களைவிட எனக்கு பெரியப்பா (எம்ஜிஆர்) நடிச்ச படங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அவர் நடிச்ச  படங்களை பலமுறை ஸ்கூலுக்கு ‘கட்’அடிச்சிட்டு தியேட்டருக்குப் போய்  பார்த்து ரசிச்சிருக்கேன்.

எங்க பெரியப்பாவுக்கும் என் மேல ரொம்ப பிரியம். அவரை நான் எப்போ சந்திச்சாலும், என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று ரொம்ப அன்பாக பேசுவார்.  ‘அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்’னு எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்வார்,” என்றார் மு.க.முத்து.

“எங்க பெரியப்பா (எம்ஜிஆர்) இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா, இந்த அளவுக்கு என்னோட  நிலைமை மோசமா ஆகியிருக்காது. அரசியல் என்ற சனியன் தான் எங்க அப்பாவையும், பெரியப்பாவையும் பிரிச்சிருச்சு,” எனக் கூறிவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியானார் மு.க.முத்து. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார்.

mu-ka-muthu_1491457531.jpg

‘லட்சுமி, மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய மூவருமே ரொம்ப சீனியர் நடிகைகள். ஆனா, அதையெல்லாம் கொஞ்சங்கூட பொருட்படுத்தாம என்னோட படத்தில எனக்கு  ஜோடியா நடிச்சாங்க. உண்மையிலேயே, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்றார் மு.க.முத்து.

அதே போல, நடிகர் ரவிச்சந்திரன் தான் தனக்கு முதன் முதலில்  ‘தண்ணியடிக்க’ கத்துக் கொடுத்ததாக கூறினார் மு.க.முத்து.

“நடிகர் ரவிச்சந்திரன் எங்க உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். எனக்கு முதன் முதலில் தண்ணியடிக்க கத்துக் கொடுத்ததே அவர் தான்.  அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சது தான் அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது,” என்றார் மு.க.முத்து.

கலைஞர் உள்பட தனது நெருங்கிய உறவினர்கள் யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறி வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினார்.

அவரது நிலையைக் கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. என்னிடம் அப்போது சட்டைப் பையில் ரூ 300 இருந்தது. அதனால் அதில் ரூ100 கொடுக்கலாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என மனதில் ஒரு தயக்கம் இருந்தது.

இந் நிலையில், பேட்டி முடிந்து நானும் நண்பர் கல்யாணசுந்தரமும் எழுந்து கிளம்ப தயாரானோம்.

அப்போது சற்றும் எதிர்பாரா வகையில், “ஏதாவது பணம் இருந்தா கொடுங்க, ஸார்,” எனக் கேட்டார் மு.க.முத்து. இதை நாங்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான்  அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு எனது சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதில் ரூ200ஐ அவரிடம் கொடுத்தேன். ரூ100 கொடுத்தால் நாகரீகமாக இருக்காது எனக் கருதி ரூ200 கொடுத்தேன். ஆனால் அவர் மீதி  100 ரூபாயையும் தருமாறு கேட்டார்.

அதற்கு நான், “ பணம் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பணம் நான் ரொம்ப  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிச்சது. ஆனா நீங்க அதை தண்ணியடிக்க கேட்கிறீங்க. அதனால உங்களுக்கு கொடுக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கு. இந்த பணத்தை தண்ணியடிக்க பயன்படுத்த மாட்டேன் என நீங்க ஒரு உறுதி கொடுத்தீங்கன்னா நான் என்னிடமுள்ள மீதி 100 ரூபாயையையும் தருகிறேன்,” என என் மனதில் பட்ட கருத்தை  தெரிவித்தேன்.

எனது வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிரித்தபடியே அமைதியாக நின்றிருந்த மு.க.முத்து, ‘நிச்சயமாக இந்த பணத்தில் தண்ணியடிக்க மாட்டேன். சாப்பாடு தான் வாங்குவேன்,” எனக் கூறினார்.

அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு முதலமைச்சரின் மகன் என்னிடம் கையேந்தும் நிலையை நினைத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் என்னிடம் மீதம் இருந்த 100 ரூபாயையும் அவரிடம் கொடுத்தேன். அதை, அவர் சிரித்த முகத்துடன் தனது இருகைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தடைந்த நான், இச் செய்தியை எனது அலுவலகத்தில் இருந்த மோடத்தில் அடித்து, திருச்சி அலுவலகத்துக்கு அனுப்பினேன்.

ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சென்னை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தியாளர் டி.என். கோபாலனிடமிருந்து எனக்கு ஃபோன். “இர்ஷாத், மு.க.முத்து பற்றிய உன்னோட செய்தியை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு. அனேகமா ‘ஆல் எடிஷன்ல’ முதல் பக்க செய்தியா போடலாம் என நினைச்சிருக்கேன்,” எனக் கூறிவிட்டு, “மு.க.முத்துவின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எதுவும் இருந்தால், அதை உடனடியாக அனுப்பு,” என்றார் டிஎன்ஜி.

mk.jpg

என்னிடம் தற்போது மு.க.முத்துவின் புகைப்படம் எதுவும் இல்லை எனக் கூறிய நான், அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு, உடனடியாக நண்பர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டு மு.க.முத்துவை புகைப்படம் எடுத்து அதை  திருச்சி அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்புமாறு கூறினேன். ஆனால், தற்போது இருட்டி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் படம் எடுக்க முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறினார். அத்தகவலை நான் அலுவலகத்தில் தெரிவித்து விட்டேன்.

இந்நிலையில், அதற்கடுத்த ஒருமணிநேரம் கழித்து, மீண்டும் சென்னை அலுவலகத்திலிருந்து டி.என்.கோபாலனிடமிருந்து ஃபோன்.

“ஐ ஆம் வெரி ஸாரிப்பா. உன்னோட செய்தி ரெசிடென்ட்  எடிட்டருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சமயத்தில இப்படி ஒரு செய்தியை போட்டா கலைஞர் கோவிச்சுக்குவார் என நம்ம  சேர்மன் (மனோஜ்குமார்) சொந்தாலியா ரொம்ப ஃபீல் பண்றார். அதனால் உன்னோட இச்செய்தியை நம்ம பத்திரிகையில் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார்,” எனக் கூறிய டிஎன்ஜி, “என்ன செய்வது? சில சமயம் இப்படியெல்லாமும் நடக்கும். இதுக்காக வருத்தபடாதீங்க. மனசை தளரவிடாதீங்க,” என ஆறுதல் கூறினார்.

அதைக் கேட்டு எனக்கு வருத்தம் ஏற்பட்டது. டிஎன்ஜி கூறியபடி, நான் ஆர்வமுடன் அனுப்பியிருந்த அச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை.

கட்டுரையாளர்; இர்ஷாத் அகமது

மூத்த பத்திரிகையாளர்

குறிப்பு; கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் ஒரே மகன் மு.கமுத்து. பிறக்கும் போதே தாயை பறிகொடுத்தவர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க முத்து தந்தையின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய செய்தி ஊடகங்களில் வந்தது. அப்போது கைத்தாங்கலாக இருவர் அவரை அழைத்து வந்தனர். பிறகு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் உயர்தர சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. சமீபத்தில் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரன் என்ற சினிமா தயாரிப்பாளருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. இத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவியும் முன்னின்று நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://aramonline.in/21889/mk-muthu-liquor-karunanithi-mgr/

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

1 month 4 weeks ago
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்! 19 Jul 2025, 9:51 AM கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவையொட்டி அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/kalaingar-eldest-son-m-k-muthu-passes-away/ மது போதையில் வாழ்க்கையைத் தொலைத்த மு.க.முத்து! -இர்ஷாத் அகமது மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்; 2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியானது. அப்போது நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தேன். மு.க.முத்து நடித்த திரைப்படங்களில் ஒரு படம் கூட நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால், அவர் நடித்த படங்களில் வரும் ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ ஆகிய இனிமையான பாடல்கள் என்றென்றும் என் மனதைக் கவர்ந்தவை. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அரசியலிலும் திரைப்படத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவருக்குப் போட்டியாக கலைஞரால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டவர் மு.க.முத்து என்ற பொதுவான ஒரு கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், மு.க.முத்து நடித்த படங்கள் அனைத்திலும் அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே எம்ஜிஆரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். திமுக தலைவரின் மகன், முதலமைச்சரின் மகன், திரைப்பட நடிகர், பாடகர், பணபலம், செல்வாக்கு என இத்தனை சிறப்புகள் இருந்தும் தனது இளம் வயதில் ‘சேர்வாரோடு சேர்க்கை’ காரணமாக மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, அவரால் ஒரு சாதாரண மனிதனைப் போல கூட சமுதாயத்தில் ஒரு ‘அந்தஸ்துடன்’ வாழ முடியவில்லை. மு.க.முத்து குறித்த செய்திகளால் எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது பள்ளி வாழ்க்கை, சினிமாத் துறையில் மறக்க முடியாத அனுபவங்கள் என அவரது வாழ்க்கையின் இன்னொரு அழகிய பக்கம் குறித்து செய்தி வெளியிட முடிவு செய்து திருவாரூர் சென்றேன். பஸ்சில் சென்று திருவாரூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னை அப்போதைய திருவாரூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்று, அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். (கல்யாணசுந்தரத்தை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்களது நட்பு கடந்த ஆண்டு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் வரை தொடர்ந்தது). மு.க.முத்து அப்போது திருவாரூரை அடுத்த குளிக்கரை என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு மிகச் சிறிய குடிசையில் வசித்து வந்தார். நாங்கள் சென்றபோது மு.க.முத்து வீட்டில் இல்லை. குடிசை வீட்டிற்குள், அழுக்கடைந்த. கிழிந்த ஆடை அணிந்த ஒரு பெண், பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப் பெண்ணுடன் தான் மு.க.முத்து தற்போது ‘குடித்தனம்’ நடத்தி வருவதாக அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர். “மு.க.முத்து எங்கே?,” என நண்பர் கல்யாணசுந்தரம் கேட்டதற்கு, அவர் வெளியே சென்றிருப்பதாக அப்பெண் பதிலளித்தார். எனவே, நாங்கள் இருவரும் அவரது வருகைக்காக அவ்வீட்டின் வெளியே ரோட்டில் காத்திருந்தோம். சுமார் ஒருமணி நேர காத்திருத்தலுக்குப் பின், “ஸார், அவர் வர்றார்,” என்றார் கல்யாணசுந்தரம். அவர் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருவரும் எனது பார்வையில் படவில்லை. ‘எங்கே வர்றார்?’ என நான் கேட்டேன். “ஸார், தொப்பி அணிந்து ஒருத்தர் வர்றார் பாருங்க. அவர்தான் மு.க.முத்து,” என்றார் கல்யாணசுந்தரம். இப்போது அவர் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் எனதருகே நெருங்கியபோது திடீரென சாராய நெடி மூக்கைத் துளைத்து, குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல குமட்டியது. அவரது அலங்கோல நிலையைக் கண்ட எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது. அதற்கு காரணம், அவர் ஒருகாலத்தில் திரைப்பட நடிகர் என்பதால் திரைப்பட ஸ்டில்களில் பார்த்த அவரது அழகிய உருவத்தை என் மனதில் நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால். அவரோ பல நாட்களாக குளிக்காத, அழுக்கடைந்த, கசங்கிய ஆடைகள் அணிந்திருந்ததுடன், தலையில் அழுக்கடைந்த ஒரு தொப்பியும் அணிந்திருந்தார். அதனால் அவரை என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவரா இவர்? என என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு, அவரை வழிமறித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை பேட்டி காண வந்திருப்பதாக கூறினேன். அவ்வளவு போதையிலும் அவர் ரொம்ப நிதானமாகவே இருந்தார். நாங்கள் சொன்ன தகவலை புன்முறுவலுடன் கேட்டுவிட்டு, எங்களை அக் குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கே உட்கார பாய் கூட இல்லை. அதனால் வெறுந் தரையில் தான் உட்கார்ந்தோம். குடிசையில் ஒரே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறிகூட இல்லை. அக் குடிசையில் எங்களுக்கு மின்விசிறி வசதிகூட இல்லாமல் அசௌகரியமாக இருப்பதற்காகவும், எங்களுக்கு குடிக்க டீ கூட தரமுடியாத தன்னுடைய நிலையையும் வருத்தத்துடன் கூறி, அதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்டார் மு.க.முத்து. என்னுடைய பெயரை கேட்ட மு.க.முத்து, மனதில் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை, தனக்கு நாகூர் ஆண்டவரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி, ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலைப் பாடினார். பின்னர், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற பாடலின் ஒருசில வரிகளையும், சிவாஜி படத்தில் வரும் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார். அதன் பின்னர், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க’ என்ற பாடலை பாடிக் காட்டினார். ஏதோ பல ஆண்டுகள் பழக்கமானவர் போல எங்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி எங்களது முதல் சந்திப்பிலேயே கலகலவெனப் பேசினார். இன்று நினைத்தாலும் அக்காட்சி எனது கண் முன்னே தோன்றுகிறது. “சென்னையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மெயின்கார்ட் கேட் அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாங்க. ஆனால் அங்கேயும் நான் ஒழுங்கா படிக்கல. ஃபெயிலாகிட்டேன்,” என்றார் மு.க.முத்து. “எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நானும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். அவரும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். ஆனா அவர் வாழ்க்கையில் போராடி ஜெயிச்சு முதலமைச்சரா ஆகிவிட்டார். நான் தான் வாழ்க்கையிலும் தோற்றுவிட்டேன்,” என சிரித்தவாறே கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனதில் உள்ள வலியை என்னால் உணர முடிந்தது. “என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வரணும்னு எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனால் நான் தான் அவரது பேச்சைக் கேட்டு நடக்காம, அவருக்கு ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்திவிட்டேன்,” எனக்கூறி வருத்தப்பட்டார் மு.க.முத்து. சினிமாத் துறையில் நுழைந்தது குறித்து கேட்டதற்கு, ‘அதற்கும் எங்கப்பா தான் காரணம்,’ என்றார், மு.க.முத்து. “எனக்கு சினிமாவில் நடிக்க கொஞ்சஞ் கூட விருப்பம் இல்லை. ஆனால், எங்க அப்பா தான் என்னை பெரியப்பா (எம்ஜிஆர்) மாதிரி ஆக்கணும்னு ஆசைப்பட்டு என்னை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வெச்சார். ஆனா, எங்க பெரியப்பாவுக்கு என்மேல எப்பவுமே ரொம்ப பிரியம். எங்க அப்பாமீது அவருக்கு கோபம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம நான் நடிச்ச ‘பிள்ளையோ பிள்ளை’ பட சூட்டிங்கிற்கு வந்திருந்ததோடு, படப்பிடிப்பை கிளாப் அடிச்சு தொடங்கி வச்சார் பெரியப்பா. நான் திரைத் துறையில் வெற்றி பெற்று பெரிய ஆளா வரணும்னு மனசார வாழ்த்தினார்,” என்றார் மு.க.முத்து. எம்ஜிஆரை பெரியப்பா என்றே குறிப்பிட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரை புகழ்ந்து பேசினார். “சிவாஜி சித்தப்பாவின் படங்களைவிட எனக்கு பெரியப்பா (எம்ஜிஆர்) நடிச்ச படங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அவர் நடிச்ச படங்களை பலமுறை ஸ்கூலுக்கு ‘கட்’அடிச்சிட்டு தியேட்டருக்குப் போய் பார்த்து ரசிச்சிருக்கேன். எங்க பெரியப்பாவுக்கும் என் மேல ரொம்ப பிரியம். அவரை நான் எப்போ சந்திச்சாலும், என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று ரொம்ப அன்பாக பேசுவார். ‘அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்’னு எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்வார்,” என்றார் மு.க.முத்து. “எங்க பெரியப்பா (எம்ஜிஆர்) இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா, இந்த அளவுக்கு என்னோட நிலைமை மோசமா ஆகியிருக்காது. அரசியல் என்ற சனியன் தான் எங்க அப்பாவையும், பெரியப்பாவையும் பிரிச்சிருச்சு,” எனக் கூறிவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியானார் மு.க.முத்து. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார். ‘லட்சுமி, மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய மூவருமே ரொம்ப சீனியர் நடிகைகள். ஆனா, அதையெல்லாம் கொஞ்சங்கூட பொருட்படுத்தாம என்னோட படத்தில எனக்கு ஜோடியா நடிச்சாங்க. உண்மையிலேயே, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்றார் மு.க.முத்து. அதே போல, நடிகர் ரவிச்சந்திரன் தான் தனக்கு முதன் முதலில் ‘தண்ணியடிக்க’ கத்துக் கொடுத்ததாக கூறினார் மு.க.முத்து. “நடிகர் ரவிச்சந்திரன் எங்க உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். எனக்கு முதன் முதலில் தண்ணியடிக்க கத்துக் கொடுத்ததே அவர் தான். அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சது தான் அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது,” என்றார் மு.க.முத்து. கலைஞர் உள்பட தனது நெருங்கிய உறவினர்கள் யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறி வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினார். அவரது நிலையைக் கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. என்னிடம் அப்போது சட்டைப் பையில் ரூ 300 இருந்தது. அதனால் அதில் ரூ100 கொடுக்கலாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என மனதில் ஒரு தயக்கம் இருந்தது. இந் நிலையில், பேட்டி முடிந்து நானும் நண்பர் கல்யாணசுந்தரமும் எழுந்து கிளம்ப தயாரானோம். அப்போது சற்றும் எதிர்பாரா வகையில், “ஏதாவது பணம் இருந்தா கொடுங்க, ஸார்,” எனக் கேட்டார் மு.க.முத்து. இதை நாங்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு எனது சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதில் ரூ200ஐ அவரிடம் கொடுத்தேன். ரூ100 கொடுத்தால் நாகரீகமாக இருக்காது எனக் கருதி ரூ200 கொடுத்தேன். ஆனால் அவர் மீதி 100 ரூபாயையும் தருமாறு கேட்டார். அதற்கு நான், “ பணம் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பணம் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிச்சது. ஆனா நீங்க அதை தண்ணியடிக்க கேட்கிறீங்க. அதனால உங்களுக்கு கொடுக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கு. இந்த பணத்தை தண்ணியடிக்க பயன்படுத்த மாட்டேன் என நீங்க ஒரு உறுதி கொடுத்தீங்கன்னா நான் என்னிடமுள்ள மீதி 100 ரூபாயையையும் தருகிறேன்,” என என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன். எனது வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிரித்தபடியே அமைதியாக நின்றிருந்த மு.க.முத்து, ‘நிச்சயமாக இந்த பணத்தில் தண்ணியடிக்க மாட்டேன். சாப்பாடு தான் வாங்குவேன்,” எனக் கூறினார். அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு முதலமைச்சரின் மகன் என்னிடம் கையேந்தும் நிலையை நினைத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் என்னிடம் மீதம் இருந்த 100 ரூபாயையும் அவரிடம் கொடுத்தேன். அதை, அவர் சிரித்த முகத்துடன் தனது இருகைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தடைந்த நான், இச் செய்தியை எனது அலுவலகத்தில் இருந்த மோடத்தில் அடித்து, திருச்சி அலுவலகத்துக்கு அனுப்பினேன். ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சென்னை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தியாளர் டி.என். கோபாலனிடமிருந்து எனக்கு ஃபோன். “இர்ஷாத், மு.க.முத்து பற்றிய உன்னோட செய்தியை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு. அனேகமா ‘ஆல் எடிஷன்ல’ முதல் பக்க செய்தியா போடலாம் என நினைச்சிருக்கேன்,” எனக் கூறிவிட்டு, “மு.க.முத்துவின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எதுவும் இருந்தால், அதை உடனடியாக அனுப்பு,” என்றார் டிஎன்ஜி. என்னிடம் தற்போது மு.க.முத்துவின் புகைப்படம் எதுவும் இல்லை எனக் கூறிய நான், அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு, உடனடியாக நண்பர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டு மு.க.முத்துவை புகைப்படம் எடுத்து அதை திருச்சி அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்புமாறு கூறினேன். ஆனால், தற்போது இருட்டி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் படம் எடுக்க முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறினார். அத்தகவலை நான் அலுவலகத்தில் தெரிவித்து விட்டேன். இந்நிலையில், அதற்கடுத்த ஒருமணிநேரம் கழித்து, மீண்டும் சென்னை அலுவலகத்திலிருந்து டி.என்.கோபாலனிடமிருந்து ஃபோன். “ஐ ஆம் வெரி ஸாரிப்பா. உன்னோட செய்தி ரெசிடென்ட் எடிட்டருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சமயத்தில இப்படி ஒரு செய்தியை போட்டா கலைஞர் கோவிச்சுக்குவார் என நம்ம சேர்மன் (மனோஜ்குமார்) சொந்தாலியா ரொம்ப ஃபீல் பண்றார். அதனால் உன்னோட இச்செய்தியை நம்ம பத்திரிகையில் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார்,” எனக் கூறிய டிஎன்ஜி, “என்ன செய்வது? சில சமயம் இப்படியெல்லாமும் நடக்கும். இதுக்காக வருத்தபடாதீங்க. மனசை தளரவிடாதீங்க,” என ஆறுதல் கூறினார். அதைக் கேட்டு எனக்கு வருத்தம் ஏற்பட்டது. டிஎன்ஜி கூறியபடி, நான் ஆர்வமுடன் அனுப்பியிருந்த அச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. கட்டுரையாளர்; இர்ஷாத் அகமது மூத்த பத்திரிகையாளர் குறிப்பு; கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் ஒரே மகன் மு.கமுத்து. பிறக்கும் போதே தாயை பறிகொடுத்தவர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க முத்து தந்தையின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய செய்தி ஊடகங்களில் வந்தது. அப்போது கைத்தாங்கலாக இருவர் அவரை அழைத்து வந்தனர். பிறகு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் உயர்தர சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. சமீபத்தில் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரன் என்ற சினிமா தயாரிப்பாளருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. இத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவியும் முன்னின்று நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://aramonline.in/21889/mk-muthu-liquor-karunanithi-mgr/

தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை!

1 month 4 weeks ago
தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை! வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வாழ்க்கைமுறையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அத்துடன் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அவசியம். விளையாட்டுக்கழகங்கள் சமூக உறவை மேம்படுத்த உரிய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமங்களில் சமூக உருவாக்கங்களை ஏற்படுத்தி வந்த சனசமூகநிலையங்கள் தொடர்ந்து இயங்க உரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எமது சமூகத்தில் நல்ல மனிதர்கள் உருவாவதை உறுதி செய்யும். தனியார் பிரத்தியேக வகுப்புகளை, குறைந்தது தரம் 10க்கு உட்பட்டவர்களுக்காவது, வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் நிறுத்தி, நல்ல ஒரு ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்க உரிய வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயத்தில், எமது ஒத்துழைப்பையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். என தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/article/தனியார்_பிரத்தியேக_வகுப்புக்கள்_தொடர்பில்_சர்வ_மத_பேரவையின்_கோரிக்கை!

தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை!

1 month 4 weeks ago

தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை!

402918930.jpg

வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண  ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது 

விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வாழ்க்கைமுறையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அத்துடன் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அவசியம். விளையாட்டுக்கழகங்கள் சமூக உறவை மேம்படுத்த உரிய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். 

கிராமங்களில் சமூக உருவாக்கங்களை ஏற்படுத்தி வந்த சனசமூகநிலையங்கள் தொடர்ந்து இயங்க உரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எமது சமூகத்தில் நல்ல மனிதர்கள் உருவாவதை உறுதி செய்யும்.

தனியார் பிரத்தியேக வகுப்புகளை, குறைந்தது தரம் 10க்கு உட்பட்டவர்களுக்காவது, வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் நிறுத்தி, நல்ல ஒரு ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்க உரிய வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விடயத்தில், எமது ஒத்துழைப்பையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். என தெரிவித்துள்ளனர். 

https://newuthayan.com/article/தனியார்_பிரத்தியேக_வகுப்புக்கள்_தொடர்பில்_சர்வ_மத_பேரவையின்_கோரிக்கை!

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

1 month 4 weeks ago
அப்போ சிறிதரன், கஜன் முக்காத தலைவர்களா? தவறு அனைவர் மீதும்தான். ஈழ தமிழர் வரலாற்றில் ராமனாதன் தொட்டு அப்படி வந்த ஒரு தலைவரை காட்டுங்கள் ? ஆனால் எமக்கான ஒரு குரல் அல்லவா? அவர் அரசியலில் முன்னிலை பெற்ற பின் கனடாவின் எம்மீதான போக்கு 180 பாகையால் திரும்பியதா இல்லையா? இதை பாதுகாக்க வேண்டியது நம் வேலை அல்லவா?

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

1 month 4 weeks ago
இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பல்கலையிலும், மாணவர் ஒன்றியத்திலும் முடிவெடுக்கும் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே உள்ளார்கள்.. ஆகவே இதில் ஏனைய சமூக மாணவர்கள் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை.