Aggregator

எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த வளர்ப்பு நாய்

1 month 2 weeks ago
எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த நாய் தனது எஜமானை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழ். மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. https://hirunews.lk/tm/421236/an-uninvited-guest-rushed-to-the-jaffna-hospital-to-inquire-about-the-well-being-of-his-master

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

1 month 2 weeks ago
கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம் முருகானந்தம் தவம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்திரம் கொடுத்தன. சிறப்புரிமைகளை அங்கீகரித்தன. ஆனால், தற்போதைய அனுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் மூடி மறைக்க முற்படுகின்றது என்றவாறாக கடும் விமர்சனங்கள் வெளிக் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் பிளவுகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றியமை போன்றவற்றால் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பாளிகள், மீண்டெழும் ராஜபக்‌ஷக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனம் வரவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும், நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்கவே தற்போது ‘சர்வாதிகாரம்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இவ்வாறான நிலையில்தான் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஏற்கெனவே சில தடவைகள் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்த நிலையில், அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி மீதும் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சபை கூடிய நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தனது அறிவிப்பை விடுத்தார். அதில், “அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது. ஆனால், பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒழுங்கற்றது. அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்குக் காரணமாக சபாநாயகர் எடுத்துக் கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அவற்றைச் சமர்ப்பிக்காது சந்தித்தன முறையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நிராகரித்ததுடன் சபையில் சபாநாயகர், சபைமுதல்வர் ஆகியோர் நடந்து கொண்ட முறைதான் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசின் சர்வாதிகாரத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற் கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே அரசு அதனை நிராகரித்தது. அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை யாருக்குக் கொண்டுவர முடியும் யாருக்குக் கொண்டுவர முடியாது எனவும் நிலையியற் கட்டளையில் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லையென்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தபோதும், சபை முதல்வரே சபைக்கு உதவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாகவும் சண்டித்தனப் போக்குடனும் நடந்து கொண்டார். சபை முதல்வர் எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியும் கிண்டலடித்தும் எச்சரித்தும் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எமது மேல் மாகாண எம்.பிக்களை மட்டும் வைத்தே எம்மால் தோற்கடிக்க முடியும் எனக்கூறியதுடன் எமது பக்கத்துக்கு எம்.பிக்களையும் எழுந்து நிற்க வைக்கவா?. உங்களால் மட்டுமல்ல எங்களினாலும் முடியும் என மிரட்டும் தொனியிலும் பேசினார். அதுமட்டுமன்றி, இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் சபாநாயகரை எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியதுடன், எதிர்க்கட்சி எம்.பிக்களை பார்த்து சபைக்கு உதவாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சபைக்கு உதவாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தி சபைக்கு நடுவுக்கு வந்த நிலையில், சபை முதல்வருக்கு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு முதலில் கூற தடுமாறிய சபாநாயகர் பின்னர் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து, குறித்த தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கூறியபோதும் சபைமுதல்வரான பிமல், அது தொடர்பில் காதில் வாங்காது சபாநாயகருக்கு உத்தரவிடும்வகையில் சில கருத்துக்களைக்கூறினார் , சபாநாயகருக்கு சபையை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது போன்று வகுப்பெடுத்து சர்வாதிகாரிபோன்றே செயற்பட்டார். இறுதிவரை அந்த சபைக்குதவாத வார்த்தையை சபைமுதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாபஸ் பெறவில்லை, எனினும், எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வாபஸ் பெறவேண்டும். அந்த வார்த்தை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக நின்றதால் சபையைக் கொண்டு நடத்தமுடியாத நிலையில், இறுதியாகச் சபாநாயகர் அந்த வார்த்தையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிட நேரிட்டது. அந்தளவுக்கு சபாநாயகரைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில், சபை முதல்வர் சபையில் செயற்பட்டதுடன், சர்வாதிகாரத்தனத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தமையும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது . மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம், சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு முரணான புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை. ஆனால், மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும் சட்டங்களை இயற்றும் உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது, தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே.வி.பி. தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சிறிது சிறிதாகத் தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொஞ்சம்-கொஞ்சமாக-மாறும்-கொடூரமான-முகம்/91-364872

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

1 month 2 weeks ago

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

முருகானந்தம் தவம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில்  ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி  அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னர் ஆட்சி  புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி  தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின்   கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்திரம் கொடுத்தன.

சிறப்புரிமைகளை அங்கீகரித்தன. ஆனால், தற்போதைய  அனுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும்   மூடி மறைக்க முற்படுகின்றது என்றவாறாக  கடும் விமர்சனங்கள் வெளிக் கிளம்பியுள்ளன.

கட்சிக்குள் பிளவுகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றியமை  போன்றவற்றால் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பாளிகள், மீண்டெழும் ராஜபக்‌ஷக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனம் வரவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும், நெருக்கடிகளிலும்  சிக்கித் தவிக்கும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.- தேசிய மக்கள்  சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்கவே   தற்போது  ‘சர்வாதிகாரம்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில்தான் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஏற்கெனவே சில தடவைகள் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்த நிலையில், அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி மீதும் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை 
காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சபை கூடிய நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தனது அறிவிப்பை விடுத்தார்.

அதில்,  “அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது.

ஆனால், பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 
அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற  முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். 

எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒழுங்கற்றது. அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு  எதிராக  எதிர்க்கட்சி  கொண்டுவந்த  நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்குக் காரணமாக சபாநாயகர் எடுத்துக்   கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின்  பணியாற்தொகுதியின் அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியபோதும் அவற்றைச் சமர்ப்பிக்காது சந்தித்தன முறையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நிராகரித்ததுடன்  சபையில் சபாநாயகர், சபைமுதல்வர் ஆகியோர் நடந்து கொண்ட முறைதான் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசின் சர்வாதிகாரத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற் கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே அரசு அதனை நிராகரித்தது. அதேவேளை, நம்பிக்கையில்லாப்  பிரேரணையை  யாருக்குக் கொண்டுவர முடியும் யாருக்குக் கொண்டுவர முடியாது எனவும்  நிலையியற் கட்டளையில் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லையென்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தபோதும், சபை முதல்வரே  சபைக்கு உதவாத வார்த்தைப் பிரயோகங்களை  மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாகவும் சண்டித்தனப் போக்குடனும் நடந்து கொண்டார்.

சபை முதல்வர்  எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியும் கிண்டலடித்தும் எச்சரித்தும் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எமது மேல் மாகாண எம்.பிக்களை  மட்டும் வைத்தே எம்மால் தோற்கடிக்க முடியும் எனக்கூறியதுடன் எமது பக்கத்துக்கு எம்.பிக்களையும்  எழுந்து நிற்க வைக்கவா?. உங்களால் மட்டுமல்ல எங்களினாலும்  முடியும் என மிரட்டும் தொனியிலும் பேசினார்.

அதுமட்டுமன்றி, இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் சபாநாயகரை எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியதுடன், எதிர்க்கட்சி எம்.பிக்களை  பார்த்து சபைக்கு உதவாத  வார்த்தைகளையும்  பயன்படுத்தினார்.

எதிர்க்கட்சி எம்.பிக்கள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சபைக்கு உதவாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தி   சபைக்கு  நடுவுக்கு வந்த நிலையில்,   சபை முதல்வருக்கு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு முதலில் கூற   தடுமாறிய சபாநாயகர் பின்னர்  சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து,  குறித்த  தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு  கூறியபோதும் சபைமுதல்வரான பிமல், அது தொடர்பில் காதில் வாங்காது சபாநாயகருக்கு உத்தரவிடும்வகையில் சில கருத்துக்களைக்கூறினார் , சபாநாயகருக்கு சபையை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது போன்று வகுப்பெடுத்து சர்வாதிகாரிபோன்றே  செயற்பட்டார்.

இறுதிவரை அந்த சபைக்குதவாத வார்த்தையை   சபைமுதல்வரான  அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாபஸ் பெறவில்லை, எனினும், எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வாபஸ் பெறவேண்டும். அந்த வார்த்தை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக நின்றதால்  சபையைக் கொண்டு நடத்தமுடியாத நிலையில்,   இறுதியாகச் சபாநாயகர் அந்த வார்த்தையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிட நேரிட்டது.

அந்தளவுக்கு சபாநாயகரைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காத  நிலையில், சபை முதல்வர் சபையில் செயற்பட்டதுடன், சர்வாதிகாரத்தனத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தமையும்  கடும் விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளது .
மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே  ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம், சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க  விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு  முரணான புதிய திசையில்  பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை.

ஆனால், மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலும்  சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும்    சட்டங்களை இயற்றும்  உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது,  தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே.வி.பி. தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சிறிது சிறிதாகத் தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொஞ்சம்-கொஞ்சமாக-மாறும்-கொடூரமான-முகம்/91-364872

"மூன்று கவிதைகள் / 09"

1 month 2 weeks ago
"மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர்த்துவிடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 09" https://www.facebook.com/groups/978753388866632/posts/31395276500120921/?

"மூன்று கவிதைகள் / 09"

1 month 2 weeks ago

"மூன்று கவிதைகள் / 09"

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே

முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே

உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா

மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே!

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே

சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே

பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே

கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !!

...........................................

தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள்

அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை

உண்டாக்குவது எப்படி என்று?

என் கல்லறைக்கு வரும் போதாவது

அவளை பார்த்து யாராவது கேளுங்கள்

அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று?

.........................................................

மஞ்சள் வெயில் பூத்த வானமும்

பனை மரங்களின் இனிய தாலாட்டும்

பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்

யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்

எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்

அன்பும் பண்பும் துளிர்த்துவிடும்!

வீட்டை விட்டு எட்டி நடந்தால்

வானம் பாடிகளின் ஆட்டமும்

வீதியோர பசுக்களின் கூட்டமும்

காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்

வானுயர நிமிர்ந்த பனைமரமும்

மனதைத் தொடும் நினைவுகளே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மூன்று கவிதைகள் / 09"

https://www.facebook.com/groups/978753388866632/posts/31395276500120921/?

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
மந்திரிமனை ஐரோப்பிய திராவிட சிற்ப கலையை உபயோகித்து கட்டப்பட்டது. Mantri Manai Article Talk Language Watch Edit Mantri Manai or Manthiri Manai (pronounced[mən̪d̪ɪɾɪˑmənəj]; literally Abode of Minister) is a historic palace situated in Nallur, Jaffna, Sri Lanka. It is one of the archaeological protected monuments in Jaffna District and was listed by the Sri Lankan government in 2007.[2] Mantri Manai மந்திரி மனை Mantri Manai Location in greater Jaffna General information Status Good Town or city Jaffna Country Sri Lanka Coordinates 9°40′38.9″N80°02′09.3″E Owner Sri Lankan government Landlord S. Thambipillai[1] Height Architectural European and Dravidian Technical details Material Brick, lime plaster, wood, tile Designations Archaeological protected monument (23 February 2007) Known for Jaffna kingdom The palace is associated with the Jaffna kingdom. It is believed to be one of the palaces or residences of a minister of Cankili, king of Jaffna, before the fall of the Jaffna kingdom to the Portuguese.[3] The building is surrounded by other historical remains of the Jaffna kingdom such as the Sattanathar temple, which was one of the city temples of the kingdom; Yamuna Eri and Cankilian Thoppu are also located nearby. However, much of the architectural style belongs to the post-Jaffna kingdom era.[4] https://en.m.wikipedia.org/wiki/Mantri_Manai

இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள்

1 month 2 weeks ago
இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள் written by admin September 20, 2025 மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல் மக்கள் தாம் குடிப்பதற்கு பணம் கொடுத்து நீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் , அதனால் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து இராணுவத்தினர் நீரினை பெறுவதை தடை செய்ய வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் 10 ஆயிரம் லீற்றர் களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு தினமும் அதிகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும். இதேவேளை அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30 ஆயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது. முன்னர் அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது. இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர். இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு தினமும் தண்ணீரை எடுப்பதால் அந்த கிணற்றில் மாத்திரமல்லாது அயலில் உள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.எனவே இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து நீரை பெறுவதனை தடை செய்ய வேண்டும் என்றார். https://globaltamilnews.net/2025/220590/

இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள்

1 month 2 weeks ago

இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள்

written by admin September 20, 2025

nagaranjini.jpg?fit=594%2C400&ssl=1

மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல் மக்கள் தாம் குடிப்பதற்கு பணம் கொடுத்து நீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் , அதனால் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து இராணுவத்தினர் நீரினை பெறுவதை தடை செய்ய வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.   மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் 10 ஆயிரம் லீற்றர் களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும் அதிகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும்.

இதேவேளை அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30 ஆயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது.

முன்னர் அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது. இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர்.

இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு தினமும் தண்ணீரை எடுப்பதால் அந்த கிணற்றில் மாத்திரமல்லாது அயலில் உள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.எனவே இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து நீரை பெறுவதனை தடை செய்ய வேண்டும் என்றார்.


https://globaltamilnews.net/2025/220590/

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

1 month 2 weeks ago
விமான நிலையத்தில், 2000 ரூபாய்க்கு வாகன அனுமதி பத்திரம் பெற்ற வெளி நாட்டவர். 😂 🤣 ELETTRONIKA

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 month 2 weeks ago
Battinews.com - Sri Lanka Tamil Newsகாதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையி...காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற காதலன் !

குட்டிக் கதைகள்.

1 month 2 weeks ago
1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து, பிரச்சினையை எப்படியாவது தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் என்ன செய்தார்…? ஒரு விசிலையும் சில ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார். ஒருவரோடு ஓருவர் பின்னால் இருந்து பிடித்தவாறு ரயில் விளையாட்டு விளையாடுமாறு ஊழியர்களிடம் கூறினார். ஒருவர் விசில் அடித்து "டூட்.. டூட்.." என்று சொல்ல, அவருக்குப் பின்னால் ரயில் பெட்டிகளைப் போன்று ஒருவரையொருவர் பிடித்தவாறு வீதியில் சென்றனர். மருத்துவர் கமல் என்ன கணித்தாரோ அது நடந்தது. ஆம். தப்பியோடிய ஒவ்வொரு பைத்தியமும் அந்த ரயிலில் ஏறியது. அவர்களை சுற்றி வளைத்த டாக்டர் கமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிரச்சினை எப்போது துவங்கியது தெரியுமா…? தப்பியோடிய பைத்தியங்கள் மொத்தம் 243 தான்! ஆனால் ரயில் பயணத்தின் மூலம் மருத்துவமனைக்கு திரும்பியவர்களோ 612 பேர். மீதிப் பைத்தியங்கள் எங்கிருந்து வந்தனர்? தெரியாது. அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் திகைத்தது. அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால், அந்த ரயிலில் எத்தனை நபர்கள் ஏறுவார்கள்?! உண்மை உரைகல்

உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!

1 month 2 weeks ago
அதெல்லாம் ஒரு காலம் இப்ப பண ஆசை பிடித்து பிணத்துக்கும் வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் இலங்கை தீவு எங்கும் கூடி விட்டார்கள் . பகல் முழுதும் அரசாங்க வைத்திய சாலைகளில் பெயருக்கு வேலை .அதன் பின் தனியார் வைத்திய சாலைகளில் அடிமை வேலை அவர்களின் ஒரே நோக்கம் பணம் மட்டுமே மேல் சொன்ன அடி பாடுகள் வரும் காலத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாது போகும் .

அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"

1 month 2 weeks ago
https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express

அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"

1 month 2 weeks ago

https://fb.watch/Ce88Q5X_Pd/

"அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"

#USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete

549806170_1330500245097940_5539985622685

See more in Video

Video thumbnail

0:21

'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump

Daily Express


தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
இது ஒரு நொண்டிச்சாட்டு ஒரு வீதியை அகலப்படுத்துவதற்காக தனியார் காணியச் சுவீகரித்து அதில் இருக்கும் கட்டிடங்களை அகற்றும் அரசாங்கம் கண்ட கண்ட இடங்கள் எல்லாம் தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்று தாமே தாட்டு வைத்தை புத்தர் சிலைகளை எடுத்து புத்தசிலைகளை நிறுவும் வல்லமை வாய்ந்த தொல்லியல் துறை கேட்டும் தனியார் அனுமதிக்காதபடியால் பாதுகாக்க முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரின் அடையாளங்களை வேண்டுமென்றே அழிப்பதிலும் அழியவிடுவதிலும் சங்களவர்கள் காட்டும் அக்கறை நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்களும் இந்த அழிவுகளுக்கு துணைபேபவர்களே அதன் மதிப்பு த் தெரியாமல் கம்பியைக் களவாடிய கபோதிகளை என்ன வென்பது. கண்ணிரடும் சித்திரம் வாங்குவதில் தமழர்கள் வல்லவர்கள். எங்கள் கண்முன்னே நாங்கள் பாவித்த கலப்பை.மாட்டுவண்டிகள். உரல்உலக்கை எல்லாம் விறகுக்குப் போட்டுவிட்டு இப்போது அதுவும் வேண்டாம் என்று காஸ் அடுப்பில்சமைப்பவர்களதானே நம் இனம். இல்லையென்றால் தஞ்சைப் பெரிகோவிலைக்கட்டிய இராஜஇராஜ சோழனிற்கு சிறி கொட்டிலில் சமாதி என்ற பெயரில் ஒரு சிறிய கல்லை நட்டுவிட்டு சென்னைக் கடற்கரையைச் திராவிடச் சுடுகாடாக்கியவர்கள்தானே தமிழர்கள்.

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

1 month 2 weeks ago
இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்! 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447845

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

1 month 2 weeks ago

skynews-child-abuse-online-abuse_5318310

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் வுட்லர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447845

இந்தியாவின் முதல் பெண் மாவோயிஸ்ட் 'கமாண்டர்' 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியது ஏன்?

1 month 2 weeks ago
பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்த நேரத்தில் அவர் பலமுறை தனது பெயரை மாற்றிக்கொண்டார். கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தபோது, அவர் தேவக்கா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு அவர் வட்டி அடிமே என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தேவியின் கணவர் ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டர்தான். அவரது அனுபவங்கள் டஜன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேவி பற்றி மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாங்கள் அவர் ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் கமாண்டர் ஆனது மற்றும் சரணடைந்தது குறித்த கதையை அறிய விரும்பினோம். முதலில் தனது வாழ்க்கைக் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். இறுதியில், தனது கிராமத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றோம். தேவிக்கு இப்போது 50 வயது. நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் நீலபச்சை நிற புடவை அணிந்திருந்தார். வேலை செய்யும் போது அது ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காக அதை உயர்த்திக் கட்டியிருந்தார். எங்களுக்கு அவர் தேநீர் கூட தயாரித்துக் கொடுத்தார். எங்கள் உரையாடல் இடைவெளி விட்டுவிட்டு நடந்தது. இதற்கிடையில், அவர் அரிவாளை எடுத்துக்கொண்டு வயலில் வேலை செய்யவும் சென்றார். நாங்களும் அவரோடு சென்று பேசினோம். ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைதல் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளின் குழுவில் மிகக் குறைந்த பெண்களே இருந்த நேரத்தில், தேவி ஒரு சாதாரண கிராமப்புற குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு, கிளர்ச்சி அரசியல் மற்றும் 'கொரில்லாப் போர்' பாதையைத் தேர்ந்தெடுத்தார். "நாங்கள் நிலமற்றவர்கள். ஏழைகள், பெரும்பாலும் பட்டினியாக இருந்தோம். அடிப்படை சுகாதார சேவைகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் காட்டில் நிலத்தை உழ முயற்சிக்கும்போது, வனத்துறை அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். அவர்கள் போலீசாருடன் கைகோர்த்து செயல்பட்டனர்," என அவர் தெரிவித்தார். வன நிலத்தில் விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. கிராம மக்களைத் தடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சாதாரணமானது என்று உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது மீண்டும் கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். தனது 13வது வயதில் தனது தந்தை வனத்துறை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை பார்த்ததாக தேவி கூறுகிறார். அதன் பிறகு போலீசார் அவரது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவை அனைத்தையும் பார்த்த பிறகு, தேவி வீட்டை விட்டு வெளியேறி வன்முறைப் பாதையில் இறங்கினார். "எனது கருத்தை சொல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது – அது துப்பாக்கி முனையில் பேசுவதுதான்" என்று கூறுகிறார். கிராம மக்கள் ஏன் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது அவர், "போலீஸ் ஒருபோதும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, மாவோயிஸ்டுகள் வந்த பின்னரே வனத்துறை அதிகாரிகள் பின்வாங்கினர்" என்று கூறினார். மாவோயிசம் முடிவுக்கு வந்ததாக கூறிய அரசு 1988-ல் தேவி ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைந்தார். 2000-களில், மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தது. 10 மாநிலங்களில் பரவியிருந்த இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். அதன் வலிமை மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தொலைதூர காடுகளில் இருந்தது. இந்தியாவின் இந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சி சீனப் புரட்சியாளர் மா சே துங்கின், 'அரசாங்க அதிகாரத்திற்கு எதிரான மக்களின் போர்' என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. 1967-ல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதமேந்திய விவசாயிகள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனுடன் சேர்த்து இது நக்சலிச இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்த வன்முறைப் போராட்டத்தில் பல ஏற்ற இறக்கங்கள் வந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பலவீனமடைந்துள்ளது. மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் கொரில்லா முறைகளைப் பின்பற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள், ஏழைக் குழுக்களிடையே நிலத்தைப் பகிர்ந்தளிக்கவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை அகற்றி ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தை நிறுவவும் போராடுவதாகக் கூறுகின்றனர். இந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதிகளை அரசாங்கம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணித்து வருவதாகவும், காட்டு நிலங்களை பெரிய நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், இந்த கிராமப்புறக் குழுக்களுக்கு வன நிலத்தின் மீது உரிமை இல்லை என்று அரசு வாதிடுகிறது. அந்த நிலத்தை உழ முடியாது. மேலும், பெரிய தொழில்கள் மூலமாகவே வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சலிசத்தை "ஏழை பழங்குடி பகுதிகளுக்கு ஒரு பெரிய பேரிடர்" என்று விவரித்தார். இதனால் பழங்குடி மக்கள் "உணவு, மின்சாரம், கல்வி, வீட்டுவசதி, கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர்" என்று அவர் கூறினார். சரணடைய விரும்பாத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு இப்போது ஒரு "கடுமையான அணுகுமுறை" மற்றும் "சகித்துக்கொள்ளாத கொள்கை" ஆகியவற்றை பின்பற்றுகிறது. இதைச் செயல்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 2026 மார்ச் 31-க்குள் "இந்தியா நக்சல் இல்லாத நாடாகிவிடும்" என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். போராட்டத்தில் இறந்தவர்கள் 1980-களைப் பற்றிய தேவியின் கூற்றுக்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்துவது எங்களுக்குச் சாத்தியமில்லை. அவர் 30 பேர் கொண்ட படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி, ஒருபோதும் ஒரே இடத்தில் தங்கவில்லை என்று கூறுகிறார். பாதுகாப்புப் படைகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அவர், "நான் முதல் முறையாக மறைந்திருந்து தாக்கியது எனக்கு நினைவிருக்கிறது. நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள கண்ணிவெடியை அமைத்து ஒரு கண்ணிவெடியால் தகர்க்க முடியாத வாகனத்தை வெடிக்கச் செய்தேன். அதில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று கூறுகிறார். இத்தகைய தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதில் அவருக்குப் பெருமை உள்ளது. மேலும், இதில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது கைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நாங்கள் பலமுறை வற்புறுத்திக் கேள்வி கேட்டோம். பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, காட்டில் ஷம்பாலா தேவியின் புகைப்படம். காவல்துறையின் ஒற்றர்கள் என்று தவறாக நினைத்துத் தாங்கள் கொன்ற அல்லது பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறந்த பொதுமக்களின் மரணத்திற்காக அவர் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். அவர், " நாங்கள் எங்கள் சொந்த மக்களைக் கொன்றுவிட்டோம் என்பதால் இது தவறாகத் தோன்றியது. நான் அவர்களின் கிராமங்களுக்குச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டேன்," என்று கூறுகிறார். ஒருமுறை அவரது படைப்பிரிவு, பாதுகாப்புப் படையினர் மீது பதுங்கித் தாக்கியபோது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சாதாரண குடிமகனும் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அவரது தாய் மிகவும் கோபமாக இருந்தார், அழுதுகொண்டிருந்தார். படைப்பிரிவு ஏன் இரவில் தாக்குதல் நடத்தியது என்று கேட்டார் என்று அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் பொதுமக்களை அடையாளம் காண்பது கடினம். தேவியின் கூற்றுப்படி, இரவு நேரத் தாக்குதல்கள் மிகவும் பயனுள்ளவை. தாம் எத்தனை பேரைக் கொன்றோம் என்பது தனக்குத் தெரியாது என்று தேவி கூறுகிறார். ஆனால், பாதுகாப்புப் படைகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் 'குறைந்த தீவிரம் கொண்ட போர்' குறித்த மிகப்பெரிய தரவுத்தளமான 'தெற்கு ஆசிய தீவிரவாத தளம்' தரவுகள்படி, 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்த மோதலில் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 4,900 மாவோயிஸ்டுகள், 4,000 பொதுமக்களும் மற்றும் 2,700 பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வன்முறையை அனுபவித்த மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் கிராம மக்கள் பெரும்பாலும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்ததாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும் தேவி கூறுகிறார். பல பழங்குடி சமூகங்கள் மாவோயிஸ்டுகளைத் தங்கள் மீட்பர்களாகக் கருதினர் என்று அவர் கூறுகிறார். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அவர்கள் காட்டு நிலங்களை சாதாரண மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர். மேலும், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற அவர்களுக்கு உதவினர். இது தொடர்பாக நாங்கள் சில கிராம மக்களுடன் பேசினோம். அவர்களும் தேவியின் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தினர். சவால்களும் 'சுதந்திரமும்' முதலில், கொரில்லாப் போரின் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் தேவிக்கு புதியவையாக இருந்தன. அவர் அதற்கு முன்பு ஒருபோதும் பொதுவில் ஆண்களுடன் பேசியதில்லை. எனவே, அவர்களுக்குத் தலைமை தாங்குவதையும், அவர்களுக்குக் கட்டளையிடுவதையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக நிலத்தில் வேலை செய்த பிறகு அவர் இந்த நிலையை அடைந்ததால், ஆண்கள் அவரை மதித்தனர் என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, மாவோயிஸ்ட் அமைப்பில் தினமும் தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் பொறுப்பு. பாதுகாப்புப் படைகள் அங்குத் தேடுவதால், முகாம்கள் தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் படைப்பிரிவு தொடர்ந்து காடுகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. கடினமான மாதவிடாய் காலங்களில் கூட பெண்களுக்கு எந்த விடுப்பும் அளிக்கப்படவில்லை. ஆனால், தேவி ஒரு 'சுதந்திர' அனுபவத்தைப் பற்றியும் பேசுகிறார். தன்னை நிரூபிப்பதன் மூலமும், தனது அடையாளத்தை உருவாக்குவதன் மூலமும் இந்த 'சுதந்திரத்தை' அவர் உணர்ந்தார். "பழங்குடி சமூகத்தில் பெண்கள் செருப்புகளைப் போல் நடத்தப்பட்டனர். அவர்கள் யாருடைய மனைவியோ அல்லது தாயோ என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. ஆனால், மாவோயிஸ்ட் அமைப்பில், எங்கள் வேலை மூலம் நாங்கள் அடையாளம் காணப்பட்டோம் – அப்படி கமாண்டர் ஆனது எனது அடையாளம்," என்று அவர் கூறுகிறார். தான் தனது கிராமத்திலேயே இருந்திருந்தால், சிறு வயதிலேயே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பேன் என்று தேவி கூறுகிறார். மாவோயிஸ்டாக மாறிய பிறகு, அவர் தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிந்தது. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தேவியின் கணவர் ஷம்பாலா ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டராக இருந்தார். ஆனால், மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து, அதிக மக்கள் கொல்லப்பட்டபோது, தேவி தனது வாழ்க்கையைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். வாக்குறுதியளிக்கப்பட்ட புரட்சி எங்கும் காணப்படவில்லை என்று அவர் உணர்ந்தார். "ஒருபுறம், பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. மறுபுறம், நாங்களும் அதிக தாக்குதல்கள் மற்றும் கொலைகளைச் செய்து கொண்டிருந்தோம்" என்று அவர் கூறினார். அந்த வாழ்க்கையை விட்டு வெளியேற மற்றொரு காரணம், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு எலும்பு காசநோய் (bone TB) ஏற்பட்டது. சிகிச்சைக்காக அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மறைந்து மறைந்து செல்ல வேண்டியிருந்தது. "எந்தவொரு நிரந்தர மாற்றமும் நாடு தழுவிய விரிவாக்கத்தால் மட்டுமே வர முடியும். ஆனால், நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் செல்வாக்கு குறைந்துகொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் குறைந்துகொண்டிருந்தது," என்று தேவி கூறினார். தொலைதூரப் பகுதிகளில் வாழும் சமூகங்கள் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளிடம் உதவி பெற்றன. இப்போது அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. மொபைல் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் வெளி உலகத்துடன் சிறப்பாக இணைந்தனர். இதற்கிடையில், பாதுகாப்புப் படைகள் டிரோன்கள் போன்ற நவீன உபகரணங்களைக் கொண்டு ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளை கிராமங்களிலிருந்து தொலைவில் உள்ள காடுகளுக்குத் தள்ளினர். இது அவர்களை மேலும் தனிமைப்படுத்தியது. சரண் பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது அரசு கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்கிறார். 25 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அரசின் கொள்கையின் கீழ் தேவி ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார். இந்தக் கொள்கையின் கீழ், மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதங்களை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்து சரணடைகிறார்கள். அரசு அவர்களின் மறுவாழ்வுக்காக நிதி, நிலம் மற்றும் விலங்குகளை வழங்குகிறது. இப்போது தேவி, தான் ஓடி வந்த அதே கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சரணடைந்த பிறகு, தேவி மற்றும் அவரது கணவருக்கு அரசிடமிருந்து நிலம், ரொக்கப் பணம் மற்றும் குறைந்த விலையில் 21 செம்மறி ஆடுகள் கிடைத்தன. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, தனது கணவர் ரவிந்தர் மற்றும் மகளுடன் ஷம்பாலா தேவி சரணடைதல் கொள்கை, மாவோயிஸ்டுகளின் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று வெளிப்படையாக கூறவில்லை. இதன் கீழ், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்த்து, ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். தங்களுக்கு எதிராக வன்முறை தொடர்பான சட்ட வழக்குகள் எதுவும் இப்போது இல்லை என்று இந்தத் தம்பதியர் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் அத்தகைய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 8,000 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மறுபுறம், எத்தனை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் எஞ்சியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் அவர்களின் உச்சத்தில் தீவிரமாக இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை. சரணடைந்த பிறகு, தேவி கிராம சபையில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர்கள் மக்களின் புகார்களை கிராமத் தலைவரிடம் எடுத்துச் சென்று, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவுகின்றனர். "அரசுடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாவோயிஸ்டுகளையும் ஒழித்துவிடுவோம் என்ற அரசின் அறிவிப்பு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாங்கள் தேவியிடம் கேட்டோம். படக்குறிப்பு, கிராம மக்களிடையே ஷம்பாலா தேவி மற்றும் அவரது கணவர் அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்து, "இறுதியில் இந்த இயக்கம் தோல்வியடைந்தாலும், அது ஒரு வரலாற்றை உருவாக்கிவிட்டது. உலகம் ஒரு பெரிய போராட்டத்தைக் கண்டுள்ளது. இது எங்கோ இருக்கும் ஒரு புதிய தலைமுறைக்கு தங்கள் உரிமைகளுக்காகப் போராட உத்வேகம் அளிக்கலாம்" என்று கூறினார். ஆனால், தனது எட்டு வயது மகளை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் அனுப்புவாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, அவரது பதில் தெளிவாக இருந்தது. "இல்லை, இங்குள்ள சமூகம் வாழும் வாழ்க்கையை நாங்கள் இப்போது வாழ்வோம்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n4yky4mdo