Aggregator
மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்
Nov 11, 2025 - 08:00 AM
மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
'அவிஷ்க புத்தா' எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் படகு நேற்று (10) விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது படகிலிருந்த 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகை, மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை அந்நாட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்றும் கடற்படையின் விஷேட குழுவொன்று மாலைத்தீவுக்கு சென்றுள்ளதுடன், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்
அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்
அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்?

பட மூலாதாரம், @abikinger/Instagram
10 நவம்பர் 2025
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார்.
செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'.
2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள்.
நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது.
பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.
இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார்.
ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது.

பட மூலாதாரம், @abikinger/Instagram
இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார்.
அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார்.
அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர்.
அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர்.
ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கருத்து படங்கள்
சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை
சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் - சபாநாயகர் கடும் எச்சரிக்கை
11 Nov, 2025 | 09:15 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை கடுமையாக எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது, அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றுகையில், சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்த போதே சபாநாயகர் இவ்வாறு எச்சரித்தார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுஜீவ சேனசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த போது, உங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முடியாது என்று சுஜீவ சேனசிங்கவுக்கு சபாநாயகர் கூறினார்.
எனினும் சுஜீவ சேனசிங்க தொடர்ந்தும் எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில் தயவு செய்து நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இங்கே இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் உங்களை வெளியேற்ற நேரிடும் என்று எச்சரித்தார்.
இதேவேளை அர்ச்சுனா இராமநாதன் எம்.பியும் தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். அது ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இதனால் அமைச்சரை தொடர்ந்தும் பேசுமாறு சபாநாயகர் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்த போது, நீங்களும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் இங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் கூறினார்.
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்
Iryna Balachuk, Mykhailo Tkach — 10 நவம்பர், 09:14

டைமர் மிண்டிச் (இடது). புகைப்படம்: ஸ்கெமி
61003 61003 பற்றி
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நிறுவிய உக்ரேனிய தயாரிப்பு நிறுவனமான குவார்டல் 95 இன் இணை உரிமையாளரும் தொழிலதிபருமான டைமூர் மிண்டிச், நவம்பர் 10 அன்று உக்ரைனை விட்டு வெளியேறினார் - தேசிய ஊழல் தடுப்புப் பணியகத்தின் (NABU) தேடுதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு.
மூலம்: அரசியல் வட்டாரங்களில் உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள்
ஒரு மூலத்திலிருந்து மேற்கோள்: "தேடல்களுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, மிண்டிச் இரவில் நாட்டை விட்டு வெளியேறினார்."
விவரங்கள்: முன்னதாக, NABU துப்பறியும் நபர்கள் மிண்டிச்சின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவிடம் தெரிவித்தன.
உக்ரைன்ஸ்கா பிராவ்தா NABU விடம் இருந்து ஒரு கருத்தைக் கோரியுள்ளது, அது கிடைத்தவுடன் அதை வெளியிடும்.
பின்னணி:
ஜூலை மாதம், உக்ரைன்ஸ்கா பிராவ்தா, ஒரு செல்வாக்கு மிக்க ஊழல் எதிர்ப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, NABU மற்றும் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) மிண்டிச் மீது வழங்க சந்தேக அறிவிப்பைத் தயாரித்து வருவதாகக் கூறியது.
NABU மற்றும் SAPO ஊழியர்கள் " ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த அதே முகவரியில் உள்ள ஒரு பிளாட்டில் மிண்டிச்சைப் பதிவு செய்ய முடிந்தது " என்று வணிக வட்டாரங்களில் உள்ள உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
மிண்டிச் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும், இது பணமோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் உக்ரைன்ஸ்கா பிராவ்தா தெரிவித்தார்.
உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்களின்படி, அமெரிக்க புலனாய்வாளர்கள் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம், இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் மற்றும் "சுகர்மேன்" என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் ஆகியோரை விசாரித்து வருகின்றனர். (இந்தப் பெயர் தொழிலதிபர் மைக்கைலோ சுகர்மேனுடன் பொருந்துவதாகத் தெரிகிறது. ஹோலோஸ் (குரல்) பிரிவின் எம்.பி. யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக்கின் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுகர்மேன் மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் "முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு ஒடேசா துறைமுக ஆலையுடன் தொடர்புடையவை.").
https://www.pravda.com.ua/eng/news/2025/11/10/8006609/
உள்வீட்டு தகவலாக இருக்குமா?
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்
3185 -
ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது.
மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை
மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் சேர்ந்து 20வது தடைகள் தொகுப்பைத் தயாரித்து வருகிறோம். இந்த தொகுப்பின் உள்ளடக்கங்கள் ஒரு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம்.
உக்ரேனிய குழந்தைகளை கடத்துபவர்கள் பற்றிய புதுப்பிப்புகளும் இருக்கும் - இது உண்மையிலேயே உலகளாவிய அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் .
விவரங்கள்: ரஷ்ய போர் உற்பத்தியை செயல்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் மிக அதிக அழுத்தம் இருக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
மேற்கோள்: " ஒவ்வொரு ரஷ்ய ஏவுகணையும், ஒவ்வொரு ரஷ்ய ட்ரோனும் மற்ற நாடுகளின், குறிப்பிட்ட நாடுகளின் குறிப்பிட்ட கூறுகளைக் கொண்டுள்ளது - அவை இல்லாமல், ரஷ்ய ஆயுதங்கள் எதுவும் இருக்காது. இதற்கான பணிகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் இந்தப் பொறுப்பு குறிப்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ளது. "
மேலும் விவரங்கள்: உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக வரும் வாரங்களில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஜெலென்ஸ்கி அறிவித்தார்.
மேற்கோள்: " சில நாடுகள் ஏற்கனவே எங்களுக்கு உதவி வருகின்றன, குறிப்பாக வடக்கு ஐரோப்பாவின் நாடுகள், மேலும் தெற்கு ஐரோப்பாவின் நாடுகளுடனும் நாங்கள் ஒப்பந்தங்களைத் தயாரித்து வருகிறோம். மேலும் அரசியல் பார்வையில், உக்ரேனியர்களுக்கு, நமது மாநிலத்திற்கு, ஐரோப்பாவிற்குள் புவியியல் ரீதியாக சமநிலையான ஆதரவு மிகவும் முக்கியமானது. "
Zelenskyy: EU expected to prepare 20th Russia sanctions p...மேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம்.