Aggregator
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு
வவுனியா விமானப் படை முகாமை அகற்ற விடோம்; புதிய மக்கள் முன்னணி தெரிவிப்பு
â
தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் இது தொடர்பில் அறிவித்தாரா? இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள புதிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பின் கேந்திர மையமாகவுள்ள வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த விமான படை முகாம் 1985 ஆம் ஆண்டு 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வடக்கு , கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றல், மூடப்பட்ட வீதிகளை திறத்தல் காணி விடுவிப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நகைகளை மீள ஒப்படைத்தல் என்பன தற்போது கண்காட்சி போன்று இடம்பெறுகின்றன.
2024.03.23 ஆம் திகதியன்று எஸ்.ஞானசம்பந்தன் என்பவர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் .அக்கடிதத்தில் வவுனியா விமான படை முகாம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒருபகுதி தனது தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது. ஆகவே இந்த காணியை விடுவித்து தனக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரியிருந்தார்.
இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் இந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விமானப் படையிடம் அறிக்கை கோரினார் .2024.07.04 ஆம் திகதியன்று விமானப் படை இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.அந்த அறிக்கையில் ‘1985 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக இந்த காணி விமான படைக்கு கையளிக்கப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக 1997.12.12 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்ட இந்த காணிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள எஸ்.ஞானசம்பந்தன் என்பவரின் தாயாரான மீனாட்சி சிவபாதசுந்தரம் என்பவர் 2 இலட்சம் ரூபா நஷ் ஈட்டை பெற்றுக்கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் எஸ்.ஞானசம்பந்தர் என்பவர் இந்த முயற்சியை கைவிட்டு விட்டு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது காணியை விடுவிக்குமாறு 2024.12.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இந்த கடிதத்தை துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கடிதம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு இணைப்பு கடிதம் ஒன்றை எழுதி, குறித்த காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விமானப்படைக்கு ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய வவுனியா விமானப் படை காணியை சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்க அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எவ்வாறு குறிப்பிட முடியும்?இந்த ஆலோசனையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே வழங்கியுள்ளார். இந்த விமானப் படை முகாமை அகற்றி இவ்விடத்தில் ஆரம்ப குடியிருப்பாளர்களை மீண்டும் அந்த காணியில் குடிமயர்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும், தேசிய பாதுகாப்பு சபைக்கும் அறிவித்தாரா?இவரது செயற்பாடுகள் தன்னிச்சையான முறையில் உள்ளன.1985 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே இந்த முகாமுக்கான காணிகள் பெறப்பட்டன. எனவே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை மகிழ்விப்பதற்காக வவுனியா விமானப் படை முகாமை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!
சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும்.
இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன.
ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.
சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வார இறுதியில் ட்ரூஸ் போராளிகளுக்கும் உள்ளூர் பெடோயின் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
இதனால் மோதலை அடக்க சிரிய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போதிருந்து அரசாங்க ஆதரவுப் படைகளும் மோதலில் இணைந்துள்ளன.
இது பெரும்பாலும் சுவைடாவில் வசிக்கும் ட்ரூஸ் சமூகத்திற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (SOHR) தெரிவித்துள்ளது.
புதன்கிழமை சுவைடா தேசிய மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் உள்ள பெரிய ட்ரூஸ் மக்கள்தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரூஸ் சமூகங்களின் சுய-அறிவிக்கப்பட்ட பாதுகாவலராக இஸ்ரேல் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
மே மாதத்தில், சுவைதாவில் நடந்த வன்முறைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது.
சிரிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல் மூலமாக சிரியாவின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியும் இருந்தது.
ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளைப் பிரிவைப் பின்பற்றும் ஒரு அரபு சிறுபான்மைக் குழுவாகும்.
பெரும்பாலான ட்ரூஸ் இனத்தவர்கள் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் வாழ்கின்றனர்.
சிரியாவில் 700,000 ட்ரூஸ் இனத்தவர்களும், லெபனானில் 300,000 பேரும், இஸ்ரேலில் 140,000 பேரும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
July 17, 2025
இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
Vhg ஜூலை 17, 2025
சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியூடாக, அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் (20-07-2025)ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் காணி உரிமை, கடற்றொழிலாளர் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!
மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!
மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!
மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் - அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!
மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது.
எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் - என்றார்.