Aggregator

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !

1 month 3 weeks ago
"மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்" - ஜனாதிபதியிடம் கோரிக்கை Jan 18, 2026 - 07:06 AM தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: "வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தேன். குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. விகாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியுடனேயே தொடர்புடையது. எனினும், பொதுமக்கள் சார்பாகவே இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்" என்றார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkj2fv6x042fo29naid25pme

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

1 month 3 weeks ago
7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி Jan 17, 2026 - 11:37 PM உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkimddk9042bo29n71nz2g4r

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

1 month 3 weeks ago

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

Jan 17, 2026 - 11:37 PM

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு  24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmkimddk9042bo29n71nz2g4r

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

1 month 3 weeks ago
இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு Published By: Vishnu 17 Jan, 2026 | 10:06 PM “அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) மற்றும் ‘இலங்கையைக் குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) ஆகிய செயற்திட்டங்கள், “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” இல் (Global Caregiver Forum 2026) உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.” “இலங்கை தனது அண்மைக்கால வரலாற்றில் மிகப்பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) எனும் செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் வேளையில், அதற்கு இணையாகப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ‘இலங்கையை குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) எனும் மற்றுமொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, அனைத்துத் தரப்பினரினதும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலமும், அவர்களது தனிப்பட்ட உள வடுக்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதன் மூலமும், நாட்டின் தேசிய முன்னுரிமையாகச் சிறுவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்கு கிடைப்பதை இச்செயற்திட்டம் உறுதி செய்கிறது.” - சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் – நேற்று (16), கௌரவ அமைச்சர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலாவது “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026”இல் (Global Caregiver Forum 2026) கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினின் ராணி லெட்டிசியா (Her majesty Queen Letizia) அவர்களின் அனுசரணையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்த இரண்டு நாள் மாநாடு, யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), மற்றும் லெகோ (LEGO) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சர்வதேச வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் பல செயற்பாடுகள் இம்மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன. “எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் தலைப்பிலான மாநாட்டின் இறுதி அமர்வில் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒரு குழு உறுப்பினராகப் பங்கேற்றார். இக்குழுவில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பி பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple P Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போவிஸ்டா (Boavista) பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த அமர்வின் போது, முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு: • முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "ஸ்டெப்-அப்" (Step-Up) தொடர்பாடல் திட்டம். • 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி. • முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டம் 2025-2029. • ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான ஐந்து ஆண்டு கால திட்டம். அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த “இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்” மற்றும் “இலங்கையை குணமாக்குதல்” ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், உலகத் தலைவர்களின் பாராட்டையும் பெற்றன. இம்மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் பின்வருவோர் அடங்குவர்: • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாட்டிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் செல்வி நிலுஷிகா தனசேகர • யுனிசெஃப் இலங்கையின் கல்வி அதிகாரி செல்வி சசிகலா சுமுது குமாரி ரத்நாயக்க https://www.virakesari.lk/article/236294

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

1 month 3 weeks ago

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

Published By: Vishnu

17 Jan, 2026 | 10:06 PM

image

“அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) மற்றும் ‘இலங்கையைக் குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) ஆகிய செயற்திட்டங்கள், “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” இல் (Global Caregiver Forum 2026) உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.”

“இலங்கை தனது அண்மைக்கால வரலாற்றில் மிகப்பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) எனும் செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் வேளையில், அதற்கு இணையாகப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ‘இலங்கையை குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) எனும் மற்றுமொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது, அனைத்துத் தரப்பினரினதும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலமும், அவர்களது தனிப்பட்ட உள வடுக்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதன் மூலமும், நாட்டின் தேசிய முன்னுரிமையாகச் சிறுவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்கு கிடைப்பதை இச்செயற்திட்டம் உறுதி செய்கிறது.”

- சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் –

நேற்று (16), கௌரவ அமைச்சர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலாவது “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026”இல் (Global Caregiver Forum 2026) கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயினின் ராணி லெட்டிசியா (Her majesty Queen Letizia) அவர்களின் அனுசரணையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்த இரண்டு நாள் மாநாடு, யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), மற்றும் லெகோ (LEGO) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சர்வதேச வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் பல செயற்பாடுகள் இம்மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

“எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் தலைப்பிலான மாநாட்டின் இறுதி அமர்வில் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒரு குழு உறுப்பினராகப் பங்கேற்றார். இக்குழுவில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பி பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple P Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போவிஸ்டா (Boavista) பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வின் போது, முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு:

• முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "ஸ்டெப்-அப்" (Step-Up) தொடர்பாடல் திட்டம்.

• 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி.

• முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டம் 2025-2029.

• ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான ஐந்து ஆண்டு கால திட்டம்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த “இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்” மற்றும் “இலங்கையை குணமாக்குதல்” ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், உலகத் தலைவர்களின் பாராட்டையும் பெற்றன.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் பின்வருவோர் அடங்குவர்:

• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ்

• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாட்டிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் செல்வி நிலுஷிகா தனசேகர

• யுனிசெஃப் இலங்கையின் கல்வி அதிகாரி செல்வி சசிகலா சுமுது குமாரி ரத்நாயக்க

https://www.virakesari.lk/article/236294

டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!

1 month 3 weeks ago
அந்தம்மா விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. பிரதிபலனையே எதிர்பார்த்தா. ரம் எதுவுமே பேசவில்லை. எதிர்காலத்தில் ஆதரவு கொடுக்கலாம். வரும் தேர்தல் நேரம் தான் தெரியும்.

“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!

1 month 3 weeks ago
இப்படியும் சில மனிதர்கள்

Different types of boats used by Tamils during british era

1 month 3 weeks ago
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala, which formed an integral part of ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document: shirini

20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!

1 month 3 weeks ago
ஆண்கள்.... நான்கு போத்தல்களும், பெண்கள்... இரண்டு போத்தல்களும் தவறாமல் வாங்குவார்கள். 😂 அதனால்... நமது வியாபாரம் நட்டம் இல்லாமல், ஓஹோ... என்று ஓடுது. 🤣

டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!

1 month 3 weeks ago
அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு செய்திகள் 2026

1 month 3 weeks ago
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு பட மூலாதாரம்,@mkstalin 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர், பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்களுக்கு மற்றும் காளைகளுக்கு பரிசு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பரிசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் பைக் பரிசாக பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 11 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை முதலிடம் பெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மாடு இரண்டாம் இடம் பெற்றது. இவருக்கு மோட்டார் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளை மூன்றாவது பரிசினை வென்றது. அவருக்கு எலக்ட்ரிக் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 63 பேர் காயம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4 பேர், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர் இதில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞர் உட்பட 21 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,@mkstalin 'அதிக காளைகளை அடக்கினால் அரசு வேலை' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜல்லிக்கட்டைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர்" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o