Aggregator

கிறிஸ்துமஸ் மரம்

2 months ago
கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிகை நாட்களில் அவர்களின் எவர் வீடுகளுக்குள்ளும் போனதாக ஞாபகம் இல்லை. உண்மையில் அவர்களின் ஒருவரின் வீடுகளுக்குள்ளும் ஒரு தடவையும் போனதில்லை. பின்னர் அவர்களில் ஒருவன் நெருங்கிய நண்பன் ஆனான். அப்பொழுதும் கூட அவன் வீட்டின் வெளிக்கதவில் நின்றே அவனைக் கூப்பிடுவோம். அவன் அதற்கு முன்னர் அவ்வளவாக ஊர் சுற்ற எங்களுடன் வெளியில் வந்ததில்லை. அவர்கள் ஒரு உயர்குடி என்ற அபிப்பிராயம் எங்கள் மனதுகளில் பொதுவாக இருந்தது. மார்கழி மாதங்களில் அவன் வீட்டின் கண்ணாடி யன்னல்களில் சின்ன சின்ன மின்விளக்குகள் நின்று நின்று எரிந்து கொண்டிருக்கும். அவனின் வீடே அந்த நாட்களில் இன்னும் அழகானதாக மாறி இருக்கும். நண்பனின் வீட்டுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்திருக்கும். அந்த மரத்திற்கு சோடனைகள் செய்திருப்பார்கள். அதன் உச்சியில் ஒரு நட்சத்திரமும் வைத்திருப்பார்கள். ஆனால் நான் இவை எதையும் பார்க்கவில்லை. அவன் சில நாட்களில் சில தின்பண்டங்களை எடுத்து வருவான். அவை வித்தியாசமானதாக இருந்தன, நன்றாகவும் இருந்தன. பின்னர் அவனுடன் ஒன்றாக நான்கு வருடங்கள் தங்க வேண்டியிருந்தது. அது படிக்கும் காலம். இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கின்றார்களா என்று ஆச்சரியப்படவைத்தான். அதை நான் அவனுக்கு சில தடவைகள் நேரடியாகவே சொல்லியிருக்கின்றேன். ஒரு விதமாக சிரிப்பான். நீ தான் அடுத்த தேவமைந்தன் என்று பகிடி போல சொல்லியும் இருக்கின்றேன். சில மனிதர்கள் எப்படி அப்பாவிகளாகவும், மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாகவே இருக்கின்றது. இவ்வாறு இருப்பவர்களின் உலகத்தில் மிகச் சில விடயங்களே இருக்கின்றன. அவர்களின் உலகத்தில் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இறைவன் ஒருவரும் இருக்கின்றார் போல. பின்னர் எங்கள் வாழ்க்கையில் நானும் மனைவியும் சேர்ந்து வருடாவருடம் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டியதாகியது. இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பை ஏமாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்துடன் சேர்ந்து வீடும் அழகாகவே இருந்தது. எதற்கு இருக்கின்றது தெரியாமல் இருக்கும் புகைபோக்கியினூடாக ஒரு தாத்தா வருவார் என்று அங்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி வைக்க வேண்டியதாகியது. வருடத்தில் ஒரு நாள் தாத்தாவிற்கு பிஸ்கட்டும், பாலும் வைக்கும் ஒரு வழக்கத்தையும் கற்றுக்கொண்டோம். முன்பக்கம் இருந்த அயல் வீடொன்றில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், அவர் வேறு எங்கேயோ இருந்தார். அடிக்கடி வந்து போவார். வெள்ளை இனத்தவரான அவர்கள் எங்களுடன் பேசவில்லை. அவர்கள் பேசுவதற்கு கூட முயலவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சிறிது முயன்றேன், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். அவர் வயதானவர் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். அவர் வீட்டில், வளவில் எல்லா வேலைகளையுமே மிகவும் நேர்த்தியாகச் செய்தார். அவர் வீட்டின் கூரையின் ஒரு பகுதியைக் கூட அவரே புதிதாகப் போட்டார். கூரையில் ஏறி கோழி கூட பிடிக்க முடியாத நான் கூரையை எப்படி மாற்றுவேன் என்று அதிர்ச்சி அடைவதை தவிர வேறொரு மார்க்கமும் எனக்கு இருக்கவில்லை. அவர் எந்த வேலை செய்தாலும் அவருடைய மனைவி எந்த உதவியும் செய்ததில்லை. அவர் வேலை செய்யும் போது வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர் கூரைக்கு மேல் நின்ற நாட்களில் கூட அவரின் மனைவி வீட்டினுள்ளேயே இருந்தார். அவர்களின் வீட்டின் முன் ஒரு மரம் நின்றது. அது நான் சிறு வயதில் கற்பனையில் கண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஓரளவிற்கு ஒத்தது. அதுவே தான் அவர்களின் கிறிஸ்துமஸ் மரம் என்பது முதல் வருடத்தில் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா சோடனைகளும் அந்த மரத்திற்கே நடந்து கொண்டிருந்தது. பரிசுப் பொதிகள் போன்றவை கூட அந்த மரத்தின் கீழே வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் இருக்கவில்லை. வெளியில் உயிருடன் நின்ற கிறிஸ்துமஸ் மரத்தை சோடிப்பதற்காகவே விசேடமாக சின்ன ஏணி, சில தடிகள் என்று அவர் வைத்திருந்தார். சில வருடங்களின் பின் அவர் மிகவும் தளர்ந்து போனார். ஒரு நாள் அவராகவே வந்து அவரது ஈரல் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் மிகவும் நட்புடனும், நெருக்கத்துடனும் பேச ஆரம்பித்தார். அந்த வருடமும் அவரே கிறிஸ்துமஸ் மரத்தை சோடித்தார், கொஞ்சம் மெதுமெதுவாக. அவரின் மனைவி உள்ளேயே இருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் வீட்டின் முன் தெருவின் கீழ் போய்க் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இருவர் திருத்திக் கொண்டிருந்தார்கள். அவரின் மகன் அந்த இருவரின் அருகிலே நின்று கொண்டிருந்தார். குழாய் வெடித்து விட்டதா என்று அவரின் மகனிடம் கேட்டேன். ஆமாம், உடைந்து விட்டது, இன்று திருத்தி விடுவார்கள் என்றார் அவரின் மகன். கூரையையே மாத்தியவருக்கு இந்தக் குழாயை மாற்றுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, ஆனால் இப்பொழுது உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என்று நினைத்தபடியே அப்பா எங்கே என்று கேட்டேன். 'அப்பா போன மாதம் இறந்து போனார்..................' '' வார்த்தை ஒன்றும் வரவில்லை. அந்தக் கணத்தில் உலகமே அப்படியே உறைந்து போனது. எனக்கு ஏன் சொல்லவில்லை என்று உரக்கக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இது என்ன உலகம், இந்த மனிதர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கையாலாகாத நிலையிலேயே அங்கே நின்றேன். 'அம்மா......................' என்றேன். 'அம்மா உள்ளே இருக்கின்றார்................'. எதுவும் சொல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த அம்மா அந்த வீட்டுனுள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இரவுகளில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உயிருள்ள கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மரம் இனி என்னவாகும் என்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. அந்த வருட பண்டிகைக்காலம் ஆரம்பித்த ஒரு நாள் வெளியே போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கும் திசையில் பார்வை அதுவாகப் போனது. அங்கே அதே விசேட சின்ன ஏணி, சில தடிகளை வைத்துக் கொண்டு அந்த அம்மா கிறிஸ்துமஸ் மரத்தை மெதுமெதுவாகச் சோடித்துக் கொண்டிருந்தார்.

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
அய்யா திருந்தாத ஜென்மமாகிவிட்டோம்...நாட்டிலும் ..புலத்திலும்...விசாரணை முடிவைப் பார்த்து...எங்குபிழை ..சரி என்பது வெளிவரலாம்...புலத்திடம் பணமிருக்கு...நாட்டில் புத்தியிருக்கலாம்...பொறுத்திருப்போம்....

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான். ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது. இடம், பொருள், ஏவல்.

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months ago
எந்த வித முன் ஆயத்தமும், சரிவருமா, ஏது நிலை என்ன என்ற ஆராய்ச்சியும் செய்யாமல், இந்தியாவின் கருத்து என்ன என அறியாமல், தனி நாட்டு கொள்கையை முன் வைத்து, மக்களை அதன்பால் ஒன்றிணைத்தது. இதன்பால் இளைஞர்களை ஒருங்கிணைத்தது. போகாத ஊருக்கு வழிகாட்டி உசுப்பேத்தியது. இந்தியா அது சரிவராது என உணர்த்திய பின்னும், அதை உணர்ந்த பின்னும், உடனடியாக மக்களிடம் திரும்பி அதை வெளிப்படையாக சொல்லி, தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம், ஏன் கைவிடுகிறோம் என்பதை விளக்கி, அந்த அடிப்படையில் வாங்கிய பா ஊ கதிரைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக கொழும்பிலும், சென்னையிலும் போய் ஒழிந்து கொண்டார். தனிநாட்டு கோரிக்கையே நடைமுறை சாத்தியமில்லை என தெரிந்துகொண்டு, அதை விட சாத்கியமில்லாத ஆயுத போராட்டம் மூலம் அதை அடையும் ஆரம்ப முயற்சிகளை உருவேற்றி, உசுப்பேற்றி வளர்த்தார். மாற்று அரசியல்வாதிகளை துரோகிகள் என பட்டியல் இட்டு, அரசியல் கொலை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அரசியல் கொலைகளை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் ஈற்றில் அவரும் அதற்கே பலியானார். விடுதலை இயக்கங்களை போராளிகளை தன் அரசியல் இலாபத்துக்கான பீரங்கி சக்கைகள் cannon fodder போல் பாவிக்க முனைந்தார். இயகக்க்கள் இடையே சைக்கிள் ஓடினார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அநியாயங்களை அடியோடு மறுத்து வெள்ளை அடித்தார். தன் மனைவி, பிள்ளைகளை அரசியல், போராட்ட-இராணுவ பதவிகளில் போட்டு ஒரு வாரிசு அரசியலை ஆரம்பித்தார். தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார். சம்பந்தர் செய்த நாச அரசியலை போல 10 மடங்கு செய்தவர் அமிர். ஆனால் சுட்டு கொல்லபட வேண்டியவர் அல்ல.

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
கார்கள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் அதுதான் பிரச்சினையாகிவிடும், ஒரு தடவை இப்படி மழை பெய்து வெள்ளம் வந்த போது எனக்கு முன்னால் பக்கத்து வீதியில் சென்ற ஒரு SUV தண்ணீரில் (ஒரு அடி உயரமளவில்) மாட்டுப்பட அந்த வாகன ஓட்டுனர் பதட்டத்தில் என கருதுகிறேன் கார் கதவினை திறந்து விட்டார், தண்ணீர் காருக்குள் சென்றதனை பார்த்தேன், அவர் சிறிது மெதுவாக போனதால் அப்படி மாட்டி கொண்ட்டார் என ஊகித்து எனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தி கடக்க முயன்றேன் (எனது கார் சிறிய 4 இருக்கை கொண்ட கார்) கார் மிதக்க தொடங்கியது துரிதமாக காரினை வீதியினை பிரிக்கும் உயரமான பகுதியில் ஏற்றியதால் சேதம் இல்லாமல் தப்பித்தேன்.

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
நியாயம் வெள்லம் வர முன்னரே தயாராக இருந்தமையால் எல்லோரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்த்தாக ஜஸ்ரின் கூறியுள்ளார்! நான் நினைக்கிறேன் நீங்கள் பார்த்த நபர் வீட்டில் இருந்தபோதே புத்தகத்திற்குள் இருந்த பூச்சி கடித்து கீழே உள்ள காணொளியில் உள்ளதனை போல கீழே விழுந்திருப்பாரோ?🤣 https://www.youtube.com/watch?v=_UueYngVdXI

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
அய்யா கோசான்ஜி....இலங்கை தமிழினத்தில் இரண்டுவகையுண்டு...ஒன்று நாட்டுத்தமிழ்...புலம்பெயர் தமிழ்....இதில் இரண்டாமவர்...செல்லாக்காசு....ஆக பணத்தேவைக்கு மட்டுமே தேவைப்படுவர்...இல்லாவிடில் அவர் குப்பை முதலாமினம் ..தறிகெட்டுப்போய்விட்டது...ஒத்துகொள்ளத்தான் வேண்டும்...ஏனெனில் சாதாரண் யூடூயூப் காரனிடமே மயங்கக்கூடிய நிலையில் நம்ம இளம் தலைமுறை இருக்கு...கால்காடு யாருக்குமே கிடையாது...இந்த நிலையி புலம் பெயர்ந்தோர் பகட்டு அங்கு இன்னமும் சீரழிக்கும் என்பது வெள்ளிடைமலை...இதற்கு புலம்பெயர் நற்குன்று ஒன்று புத்திசொல்லப்போனால் கிடைப்பது இருட்டடியும் வாள் வெட்டும் ...இதனை நான் நீண்டநாள் அண்௸கு நின்றூ நேரில் அனுபவித்த அனுபவம் எனவே எங்கு எம்மால் ஜோக்கடிக்கமுடியுமோ ..அங்கு ஜோக்கடித்து சந்தோசமாக வாழ்வோம்..எப்ப புலம் பெயர்ந்தோமோ ..அப்பவே...அந்நியப்பட்டுவிட்டோம்...யாருக்குமாக எமது உயிரை இழக்க வேண்டாமே..னிந்த விளக்கம் உங்களுக்கு காணாமல் இருக்கல்லாம் ....நாட்டில் இதுதான் உண்மை

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு சுகன்யா பழனிச்சாமி 1 Min Read `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Published:28 Mar 2018 4 PMUpdated:28 Mar 2018 4 PM `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Join Our Channel 1Comments Share உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது. நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்:

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
கார் ஓடும் வீதியில் காட்டாறு பாய்கிறது . ....... இவ்வளவு வளம் மிகுந்த அமெரிக்காவையே ஒரு வெள்ளம் ஸ்தம்பிக்க வைக்குது என்றால் , மற்ற நாடுகள் பற்றி என்னத்தை சொல்ல .........! நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் பிரியன் . .......... !

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
இப்படி சொல்லபடுவதே மோசமான கோமாளிதனம். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் படிப்பவர்கள் பெற்று கொள்ளும் நன்மைகள் 👇 கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும். ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும். https://shorturl.at/uk59L

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
அதிக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதீதமான படம் காட்டல்களின் எதிர் வினைகள் இவை. அம்மக்கள் இவற்றை புரிந்து பிள்ளைகளை எச்சரிக்கையுடன் வாழ பழக்காத வரை ...???☹️

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2 months ago
அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; பிறப்பு 4 மார்ச் 1938 மட்டக்களப்பு மறைவு 14 திசம்பர் 2006 லண்டன் இங்கிலாந்து. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகங்கள். சோசலிசத் தமிழீழத்தை நோக்கி · பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் · போரும் சமாதானமும் · மக்கள் திலகமும் மாவீரனும் ·

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
இருவரும் நலம் என்பதில் ஆறுதல். ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும். புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months ago
அவருக்கு நெருப்பு தண்ணி பூனைக்குட்டி எல்லாமே ஒன்று தான். பிரச்சனை என்றால் நேய் நேய் என்று குரல் கொடுத்தால் காப்பாற்ற ஆள்வரும்.