Aggregator

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

1 month 3 weeks ago
Published By: Priyatharshan 16 Sep, 2025 | 01:00 PM இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225220

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

1 month 3 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு குறித்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறியுள்ளதுடன், இது தவறான சித்தரிக்கப்பட்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfm8ghbu00gjo29n9jy9a3yj

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

1 month 3 weeks ago
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு குறித்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறியுள்ளதுடன், இது தவறான சித்தரிக்கப்பட்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfm8ghbu00gjo29n9jy9a3yj

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்வு

1 month 3 weeks ago
15 Sep, 2025 | 03:42 PM ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதியோர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். இந்த சாதனை, உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட நாடாக ஜப்பானை நிலைநிறுத்தியுள்ளது. 100 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 1963-ல் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1998 இல் 10,000 ஆகவும், 2012 இல் 50,000 ஆகவும் உயர்ந்தது. தற்போது, ஒரு ஒலட்சத்தை நெருங்கியுள்ளது. 114 வயதான ஷிகேகோ ககாவா என்பவரே ஜப்பானில் வாழும் மிக வயதான பெண் ஆவார். அவர் 80 வயதைக் கடந்தும் மகப்பேறு மருத்துவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். மிக வயதான ஆண், 111 வயதான கியோடகா மிசுனோ ஆவார். ஷிமானே மாகாணத்தில் அதிகபட்சமாக ஒவ்வொரு 100,000 பேருக்கும் 168.69 பேர் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். அதே சமயம், சைட்டாமா மாகாணத்தில் இந்த விகிதம் மிகக் குறைவாக உள்ளது. ஜப்பானின் சுகாதார அமைச்சர் டகாமரோ புகோகா கூறுகையில், ஜப்பானியர்கள் மீன் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்வதும், தினசரி நடைப்பயிற்சியும் இதற்கு முக்கிய காரணங்கள் என்றார். நீண்ட ஆயுள் ஒரு சாதனை என்றாலும், ஜப்பான் கடுமையான மக்கள் தொகைக் குறைவு மற்றும் முதுமையடையும் சவால்களை எதிர்கொள்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சந்தைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/225157

கைகுலுக்காத சர்ச்சை: ரெஃப்ரி மீது பாகிஸ்தான் ஆவேச புகார் - பிசிசிஐ கூறியது என்ன?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்." ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது. ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான "கை குலுக்கல்" நடக்கவில்லை. போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். "ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது" என்று கூறினார் அவர். ஹெசன் மேலும் கூறுகையில், "நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்." ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, துபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி டாஸின் போது இரு கேப்டன்களும் போட்டி நடுவரும் இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், "ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது" என்று எழுதினார். "எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை" என்று நக்வி மேலும் எழுதினார். டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது. பட மூலாதாரம், Getty Images கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை" என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு "நல்லெண்ண சைகை" மட்டுமே என்று கூறினார். "நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல" என்றார் அந்த மூத்த அதிகாரி. "சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை," என அவர் மேலும் கூறினார். எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம், Getty Images கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும். இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளப் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது. உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள். நேர்மையாக விளையாடுங்கள். உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும். சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும். எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள். போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jq7v35l08o

கைகுலுக்காத சர்ச்சை: ரெஃப்ரி மீது பாகிஸ்தான் ஆவேச புகார் - பிசிசிஐ கூறியது என்ன?

1 month 3 weeks ago

போட்டியின் போது எடுக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி

4 மணி நேரங்களுக்கு முன்னர்

"இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்."

ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார்.

ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.

ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான "கை குலுக்கல்" நடக்கவில்லை.

போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். "ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது" என்று கூறினார் அவர்.

ஹெசன் மேலும் கூறுகையில், "நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்."

ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டாஸின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி டாஸின் போது இரு கேப்டன்களும் போட்டி நடுவரும்

இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது.

பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், "ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது" என்று எழுதினார்.

"எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை" என்று நக்வி மேலும் எழுதினார்.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது.

துபையில் நடைபெற்ற போட்டியின் போது சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை" என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு "நல்லெண்ண சைகை" மட்டுமே என்று கூறினார்.

"நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல" என்றார் அந்த மூத்த அதிகாரி.

"சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை," என அவர் மேலும் கூறினார்.

எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வீசிய சூர்யகுமார்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும்.

இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளப் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது

அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது.

  • உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள்.

  • நேர்மையாக விளையாடுங்கள்.

  • உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்.

  • சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

  • எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள்.

  • போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jq7v35l08o

புதைத்து பல ஆண்டுகள் ஆகியும் சில உடல்கள் அழுகாமல் இருப்பது ஏன்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் ஆர்ச்சி அட்டாண்ட்ரில்லா பிபிசி வங்க சேவை 15 செப்டெம்பர் 2025 பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன. அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுதான். வழக்கமாக, இறந்து 12 மணிநேரம் கழித்து உடல் அழுக ஆரம்பிக்கிறது. ஆனால், பல சமயங்களில், உடல்கள் புதைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அவை அழுகுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. பழமையான கல்லறைகளை தோண்டியபோது, பல ஆண்டுகள் கழித்தும் அதிலிருந்த சடலங்கள் கிட்டத்தட்ட அப்படியே இருந்தன. இது பெரும்பாலும் மத ரீதியிலான பார்வையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு பின்னால் அறிவியல் ரீதியிலான காரணங்களும் உண்டு. இப்படியான சூழல்களில், உடல்கள் அழுகாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இதற்கு தடயவியல் விஞ்ஞானிகள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, மம்மிஃபிகேஷன் எனப்படும் உடல் அழுகாமல் பதப்படுத்தும் செயல்முறை (mummification). மற்றொன்று, இறந்த உடல் முழுவதும் மெழுகு போன்ற பொருளால் பூசப்படுவது (adopasory), இது உடல் அழுகாமல் தடுக்கிறது. இயற்கையாகவே 'மம்மி'யாதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாலைவன பகுதிகளில் சில உடல்கள் இயற்கையாகவே 'மம்மி'யாகிவிடும், பல ஆண்டுகளாக அவை அப்படியே இருக்கும் வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் மிகவும் குறைவாக, அதிக வெப்பநிலை உள்ள சூழல்களில் இறந்த உடல்களை வைக்கும்போது, உடலில் நீர் உள்ள பகுதிகள் வேகமாக வறண்டு விடுகின்றன. இதன் காரணமாக, உடலில் பாக்டீரியாக்கள் வளர முடியாமல், உடல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். சர் சலீம் உல்லாஹ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி, இந்த செயல்முறைக்கு மம்மிஃபிகேஷன் என்று பெயர் என தெரிவித்தார். இந்த செயல்முறை உடலை பதப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இதன்காரணமாக, பாலைவனங்களில் பல சடலங்கள் இயற்கையாகவே 'மம்மி'யாகி விடுகின்றன, பல ஆண்டுகள் அழுகாமல் அதே நிலையில் இருக்கின்றன. வறண்ட மணல் உள்ள பகுதிகளில் சடலங்கள் இயற்கையாகவே பதப்படுத்தப்படுவது சாத்தியம். எனினும், வங்கதேசத்தில் மணல் மற்றும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் காரணமாக இவ்வாறு நடப்பதில்லை. அடாப்சரி (Adapsory) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூழலில் நிலவும் பல காரணிகளை பொறுத்தே உடல் எவ்வளவு வேகமாக அழுகுகிறது என்பது அமைகிறது அடிபோஜெனிக் (Adipogenic) அல்லது அடிபோஸ் (adipose) திசு என்பது, ஒருவித சோப் போன்று இருக்கும் மெழுகு போன்ற பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்பு உடைவதற்கு பதிலாக, அதை பாதுகாக்க உதவுகிறது. யூஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை, அடிபோசைட்டுகள் உருவாகுதல் மற்றும் அழிக்கப்படுதல் இரண்டும் சூழலை சாந்தே அமைவதாக கூறுகிறது. ஒருமுறை இத்தகைய அடப்சோரியம் உருவான பின்னர், பல நூறு ஆண்டுகளுக்கு அது நிலையாக இருக்கிறது. டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூற்றின்படி, இது பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. வெப்பநிலை, காலநிலை, உணவு முறை, உடல் புதைக்கப்பட்டுள்ள முறை, உயிரிழந்த நபரின் உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், "ஈரமான சூழல்களில், சடலங்கள் வெள்ளை நிறத்தில் தோன்றும். அவற்றைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று பூசப்பட்டிருப்பது போன்று தோன்றும். உடலில் உள்ள கொழுப்பு பகுதி, மெழுகு போன்ற பொருளை உருவாக்கி, சடலம் முழுவதையும் சூழும். இது, நீருடன் ஏற்படும் வேதியியல் செய்முறையால் நடைபெறுகிறது" என்றார். இந்த செயல்முறை நடந்தால், அந்த சடலம் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும் என்கிறார் அவர். அதாவது, உடல் அழுகத் தொடங்கும் செயல்முறை நடக்காது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான மற்றொரு ஆய்வில், அத்தகைய சடலங்கள் பல பத்தாண்டுகளாக பதப்படுத்தப்படலாம் என்கிறது. மேலும், அடாப்டாலஜி (adaptology) எனும் இந்த முறையில் மூன்று விஷயங்களும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவது, ஹைட்ராக்ஸி கொழுப்பு அமிலங்கள் உருவாவது இரண்டாவது, இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள அதிகப்படியான நீர். மூன்றாவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இந்த காரணங்களுக்காக, உடல்கள் மண்ணுக்குக் கீழே ஆழமாக புதைக்கப்படும்போதும் இத்தகைய சூழல் உருவாக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூறுகையில், இத்தகைய சூழலை உடலில் உருவாக்கக்கூடிய பல மருந்துகள் உள்ளன என்கிறார். பல வித உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் தனிமமும், உடல் அழுகுவதை மெதுவாக்குகிறது. தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் தடயவியல் நிபுணர் மருத்துவர் கபீர் சோஹெல் கூறுகையில், இத்தகைய அடபோசிஸ் முறையை வேறுவிதமாக விளக்குகிறார். "இறந்த பின் உடலில் உள்ள கொழுப்பு கெட்டியாகி விடுவதால், உடல் அழுகுவதற்கு காரணமான பாக்டீரியா அல்லது மற்ற கிருமிகள் செயல்பட முடியாமல் போகிறது. அப்படியான சூழலில், உடலின் அமைப்பு அப்படியே மாறாமல் நீண்ட காலம் இருக்கிறது, மேலும் முகமும் அடையாளம் காணும் வகையில் உள்ளது. இத்தகைய சூழல்களில் உடல் நீண்ட காலத்துக்கு முன்பே புதைக்கப்பட்டாலும் அதே நிலையில் உள்ளது." என்றார் அவர் தாகா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள டாக்டர். முகமது மிஸானர் ரஹ்மான் கூறுகையில், உடலில் அதிகமாக கொழுப்பு இருந்தால், இவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது என்கிறார். புதைக்கப்படும் இடத்தில் காற்று இருந்தாலோ அல்லது அந்த நிலம் தாவரங்கள் வளர முடியாத தரிசு நிலமாக இருந்தாலோ அல்லது மணலாக இருந்தாலோ, உடல் அழுகுவது மெதுவாக இருக்கும் என்கிறார் அவர். "வங்கதேசத்தில் நிலவும் சூழலில், உடலின் தோல் இலகுவாகி, ஆறு முதல் 12 நாட்களுக்குள் உதிர்ந்துவிடும். ஆனால், இந்த கால அளவு பருமனாக இருப்பவர்களுக்கு நீள்கிறது. அப்படியான சமயங்களில், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலான காலம் எடுக்கிறது," என தெரிவித்தார் அவர் வங்கதேசத்தில் குளிர் காலங்களில் நிலவும் வறண்ட வானிலையால், அடிபோஸ் திசுவின் மூலம் அழுகாமல் இருப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகின்றன. எனினும், இந்திய துணைக்கண்டத்தின் காலநிலை வேகமாக அழுகுவதற்கான சாதகத்தையே கொண்டுள்ளது. வேதியியல் விளைவுகள் படக்குறிப்பு, மருத்துவர் கபீர் சோஹெல் மருத்துவர் கபீர் சோஹெல், சில சந்தர்ப்பங்களில் உடல்களை பதப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்தார். அப்படியான சூழல்களில், ஃபார்மாலின் உள்ளிட்ட பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ரசாயனங்கள் பூசப்பட்ட உடல்கள், நீண்ட காலத்துக்கு பதப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டில் ஒருவர் இறந்து, அவரை அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும்போதோ அல்லது வேறு காரணத்துக்காக பதப்படுத்த வேண்டிய தேவை இருந்தாலோ, அந்த சூழல்களில் எம்பால்மிங் எனும் செயல்முறை செய்யப்படுகிறது. இதற்கு, ஃபார்மால்டீஹைட், மெத்தனால் மற்றும் மற்ற ரசாயனங்களின் உதவியுடன் உடல் பதப்படுத்தப்படுகிறது. புதைக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த ரசாயனங்களால் உடல்கள் நீண்ட காலத்துக்கு அழுகாமல் அப்படியே இருக்கும். ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிக்கல் சயின்ஸ் எனும் இதழில் வெளியான கட்டுரையின்படி, மண்ணில் உள்ள உலோகங்கள், கனிமங்கள் மற்றும் அமிலத்தன்மை காரணமாக, உடலை அழுகச் செய்யும் பாக்டீரியாவின் விளைவுகளை குறைத்து, உடல் அழுகுதலை மெதுவாக்கும் என்கிறது. இதுதவிர, உடல்களை பதப்படுத்த அங்கு நிலவும் வெப்பநிலையும் சில சமயங்களில் தாக்கம் செலுத்துகிறது. உதாரணத்திற்கு, இமயமலையில் இறப்பவர்களின் உடல்கள், பல நாட்களுக்கு அழுகாமலேயே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr57j531w1o

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

1 month 3 weeks ago
"இதுக்கெல்லாம் ஆதாரமில்லை" என மனம் தளர்வது ஏன்? "பச்சைக் கலரு சிங்குச்சா, சிவப்புக் கலரு சிங்குச்சா" என்று நீங்கள் பத்து இடத்தில் எழுதி விட்டாலே அது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் வரை நின்று பிடிக்கக் கூடிய ஆதாரமாகி விடுமே😇??

ஜெர்மனி ICU வில்.

1 month 3 weeks ago
இது "நான் வளர்கிறேனா மம்மி?" 😂என்று வேறு யாரோ ஒரு கட்சிக் காரரின் ஆட்கள் கேட்டது போல இருக்கிறது. இந்தியாவை விட 10 மடங்கிலும் குறைவான சனத்தொகை கொண்ட ஜேர்மனி உலக பொருளாதார பலத்தில் (GDP) மூன்றாமிடம். ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியா மிக அண்மையாக நான்காவது இடம் (அதுவும் ஜப்பான் படுத்து விட்டதால் கிடைத்த இடம்). கோவிட்டின் பின்னரான வளர்ச்சியில் ஜேர்மனியை விட மோசமான மந்த நிலையடைந்த ஜி7 நாடுகளும் இருக்கின்றன. ஆனாலும், இருக்கும் நாடுகளுள் ஜேர்மனி தான் இன்னும் ஐரோப்பாவின் பொருளாதார powerhouse என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. முதல் உலகப் போரில் இருந்து அவர்களது பலமே உடனே சுதாரித்துக் கொண்டு மொடலை மாற்றி வளர்ச்சியைத் தூண்டுவார்கள். இப்படியான ஒரு நிலை இந்தியாவில் சாத்தியமில்லை.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 month 3 weeks ago
பார்க்காமையால் தான் இங்கே இணையுங்கள் என்றேன். இப்போது தான் இது புரிந்ததா😂? இப்பவாவது இணையுங்கள், என்ன சொல்லியிருக்கிறார், யாரைச் சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பம்! நீங்கள் தாயகத்தில் யுத்த காலத்தில் வசித்து யுத்தத்தில் இறந்த, மின் கம்பத்தில் கட்டப் பட்ட உடல்களுள் ஒன்றைத்தானும் பார்த்தறியாத ஒருவர் போலத் தெரிகிறது (உங்கள் ஏனைய பாரதங்களும் அதைத் தான் காட்டுகின்றன😎). "12.7 mm தோட்டா" என்று செய்தியில் இருக்கிறது. இந்தத் துப்பாக்கி ரவை ஏற்படுத்தும் வெளியேறும் காயம் (exit wound) எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

1 month 3 weeks ago

1502462336.JPG

யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன.

கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு அறுவடை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை விவசாயிகள் படகின்மூலம் ஏற்றிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

1 month 3 weeks ago
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு அறுவடை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை விவசாயிகள் படகின்மூலம் ஏற்றிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு

1 month 3 weeks ago

16 Sep, 2025 | 11:15 AM

image

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட  கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து  நேற்று திங்கட்கிழமை (15)  இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார்.

குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு  மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது.

அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குநேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்கமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும்வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். 

IMG-20250915-WA0255.jpg

IMG-20250915-WA0269.jpg

IMG-20250916-WA0018.jpg


முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு | Virakesari.lk

முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு

1 month 3 weeks ago
16 Sep, 2025 | 11:15 AM முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று திங்கட்கிழமை (15) இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார். குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது. அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குநேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்கமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும்வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு | Virakesari.lk

எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025]

1 month 3 weeks ago
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] From Jaffna’s soil to London’s skies, A journey of hope, where your spirit flies. Through trials and loss, you stood so tall, A guiding light, admired by all. A healer’s heart, both kind and true, The world is brighter because of you. A son, an Engineer and a matured father, Each year you grow, we hold you near. Though your mother now rests above, She sends her blessings, her endless love. From heaven’s gate she smiles today, “Happy Birthday, my son,” she’ll say. May health and peace forever stay, Happy Birthday, my son, on this special day. [Appa, Kandiah Thillaivinayagalingam] எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/31335919739389931/?

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 month 3 weeks ago

16 Sep, 2025 | 11:56 AM

2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 95,119 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 85,667 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 month 3 weeks ago
16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 95,119 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 85,667 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk