Aggregator

யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!

2 months ago
ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 months ago
எனது பூட்டன் சம்புநாதர், சம்பர் என்று அழைப்பார்கள். இவர் காலத்தில்தான் காடாக கிடந்த கரவாகு வட்டை காணியும், தற்போது கல்முனை என்று அழைக்கப்படும் இடமும் வோச்சி துரை என்று அழைக்கப்படும் வெள்ளைக்கார அதிகாரியால் காடு வெட்டி வயல் வெளி உருவாக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கரவாகு என்னும் பெரிய தமிழ் கிராமம் இருந்தது. கரவாகு கிராமத்தில் எனது தாயின் பாட்டனார் முத்துக்குட்டி ஆச்சாரி அவர்கள் ஓரளவு ஆங்கிலம் கதைக்க தெரிந்தவர் வெள்ளைக்கார துரை கூறுவதை தமிழில் மக்களுக்கு எடுத்துரைப்பவர். காடுகள் வெட்டி கூலிக்கு வேலை செய்ய வந்த முஸ்லிம்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. போக்குவரத்து மார்க்கம் தாளவட்டுவான் சந்தியில் இருந்து கிட்டங்கி துறைக்குச் சென்று, அங்கிருந்து வள்ளம் மூலமாக மட்டக்களப்புக்கு செல்வார்கள். --> குணசேகரன் வீரக்கொடி, மட்டக்களப்பு

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 months ago
கல்முனை இனவன்முறை: https://noolaham.net/project/840/83902/83902.pdf

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 months ago
90ஆம் ஆண்டு புலிகள் 24மணி நேரம் கொடுத்து யாழ் முஸ்லிங்களை வெளி ஏற்றினார்கள் என்பது பிழை என்றால் (உண்மையில் பிழை)1968/04/12அன்று எந்தவித பிழையும் செய்யாத போதும் எந்த வித தமிழ் ஆயுத குழுக்களும் இல்லாத காலத்தில் 1நிமிடம் கூட கொடுக்காமல் கல்முனை கரவாகு தமிழர்களை அகமது எம்பிக் வழி காட்டலில் வம்முறு சயிது போண்ற காடையர் குழுவை வைத்து அப்பாவி தமிழர்களை சித்திரை புது வருடத்தை கொண்டாட விடாமல் இரவோடு இரவாக அடித்து விரட்டியது புனித ஜிகாத் யுத்தமா அமைதி மார்க்கத்தை பின்பற்றும் காத்தான் குடி இஸ்லாமிய சகோதரர்களே --> சிவதாசன் சந்திரமோகன் இது தொடர்பில் மேலும் தகவல்கள் திரட்ட வேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
போன கிழமை எங்கேயோ T20 விளையாடிக் கொண்டு இருந்தவா. இப்போ உலகக் கிண்ண வெற்றியாளர். அதிரடிக்குப் பெயர் போன ஆள். ஆனால் என்ன, தொடர்ச்சியான பெறுபெறு இல்லை. இனியாவது அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

2 months ago
இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

2 months ago
இவர் ரணிலின் மற்றும் மகிந்தவின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார் என்றும், அதனால் தான் அரசியல் ரீதியில் பழிவாங்கபட்டார் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையான காரணம் எதுவென அறிய முடியவில்லை.

யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!

2 months ago
பயங்கர துவேசி , அத்துடன் ராஜபக்ஸ விசுவாசி. இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி/சாட்சி. தட்டுற மாதிரி தட்டினால் வாயை திறப்பார்!

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு

2 months ago
நீங்கள் சொன்னது சரி . இலங்கையில் தமிழர்களின் சன தொகை 2024 அதிகரித்திருக்கின்றது. அப்படியிருக்க பதற வைக்கும் தமிழர்களின் வீழ்ச்சி என்று காணொளியும் ஒன்று உலாவருகின்றது.

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

2 months ago
இரண்டு குற்றங்களுக்க மாணவ குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களை வதைத்த குற்றம் பலவந்தமாக மதுபானம் பருக்கிய குற்றம்.

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

2 months ago
ஐயா இளஞ்செழியனின் பேச்சைக் கேட்க மிகவும் கஸ்டமாக இருந்தது. ஏன் இவ்வளவு வஞ்சகம்? எல்லோரும் சமமாக வாழுவோம் என்கிறார்களே? இதுவா சமம்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
இவா மீண்டும் அணிக்கு வ‌ந்த‌ ப‌டியால் தான் கோப்பை இந்தியாவின் கைக்கு வ‌ந்த‌து இல்லையே தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் கோப்பையுட‌ன் நாடு திரும்பி இருப்பின‌ம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இவாவிட‌ம் ப‌ந்து போட‌க் குடுத்த‌தை நான் பார்க்க‌ வில்லை...............ப‌ந்து வீச்சு ம‌க‌ளிர்க‌ள் ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்க‌ இடையில் இவா ப‌ந்து போட‌ வ‌ந்த‌ கையோட‌ இர‌ண்டு விக்கேட் எடுத்த‌ ப‌டியால் தான் இந்தியா ப‌க்க‌ம் மெதுவாய் வெற்றி வ‌ந்த‌து இவா தொட‌க்க‌ ம‌ட்டைய‌டி ம‌க‌ளிர்👍...................................

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

2 months ago
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார். ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

2 months ago

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

Monday, November 03, 2025 செய்திகள்

q.png


தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.


கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார்.


ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.


இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.