Aggregator
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
13 JUL, 2025 | 06:36 PM
மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது.
இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு
இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு
13 JUL, 2025 | 02:41 PM
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது.
இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.
ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர்.
மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?
குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உணவு செய்முறையை ரசிப்போம் !
நகைச்சுவைக் காட்சிகள்
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST]
சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர்.
தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.
மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர்.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர்.