Aggregator

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்

2 months ago
அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் - இயக்குனர் கௌதமன் சீற்றம்! 13 JUL, 2025 | 05:36 PM நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது. தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களை இங்கு குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகழிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது. தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை அரசியல் வேலைகளை செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும். முன்னாள் விடுதலை புலிகள் என்னும் சந்தேகத்தின் பெயரில் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு, இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருக்கும் ஈழத்தமிழர்களை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பனவே அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள். ஈழத்தில் இருந்து அடைக்கலம் கோரி தமிழ்நாட்டுக்கு வந்துள்ள எமது தொப்புள்கொடி உறவுகளின் குறைந்தபட்ச கோரிக்தைகளை கூட நிறைவேற்றுவதற்கு இதற்கு முன்னர் இருந்த இந்திய ஒன்றிய, மாநில அரசாங்கங்களும், தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஒன்றிய, மாநில அரசாங்கமும் முன்வராத நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் அதை விட கோபமாகவும் உள்ளது. சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? அப்படி என்ன அவர்கள் பெரிதாக உங்களை கேட்டார்கள்? அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஏன் இதன் பின்னும் உங்களால் செய்துகொடுக்க முடியவில்லை? ஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ, நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது என்பது எத்தகைய குரூரம். ஈழத்தில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற விடயம் என்பது நூறு சதவிகித உண்மை என்பதை தற்போதைய ஈழத்தின் செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை அகழும்போது அங்கே எங்களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு நிகழ்ந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்கூடாக பார்க்கக்கூடியதே ஆகப் பெரும் சாட்சியாக நிற்கின்றது. இதனை வைத்து பார்க்கும்போது இதற்கு மேலும் உங்களுக்கு பட்டவர்த்தனமாக தெரியவில்லையா அவர்களுக்கு அங்கே உயிர் அச்சுறுத்தல் இருக்கிறதென்கிற விடயம்? அரசியல் ஆதாயத்திற்காக தொப்புள்கொடி உறவுகள் என்று நாம் வாய் கிழிய கத்தினால் மட்டும் போதாது. அந்த தொப்புள் கொடி உறவுகள் அடைக்கலம் புகுந்த நமதிடத்தில் அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அத்தனை பேருக்கும் உள்ளது என்பதை தமிழ்நாடு அரசும், தமிழ் நாட்டு மக்களும் மறந்து விடாதீர்கள். ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை. எனவே யோகராசா நவநாதனின் கோரிக்கைகளுக்கு இனியாவது செவி சாயுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள். அன்னம் தண்ணி நீர் ஆகாரமின்றி எட்டாவது நாளை கடந்து உண்ணா நிலையிலிருக்கும் சகோதரர் யோகராசா நவநீதன் அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை தர வேண்டும். இதன் பிறகும் தமிழ் நாட்டில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் இந்திய அரசோ மாநில அரசோ நீங்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219899

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months ago
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடிகளுடன் பங்களாதேஷை அதிரவைத்தது இலங்கை Published By: VISHNU 10 JUL, 2025 | 10:30 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. பங்களாதேஷுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட மொத்தமாக 225 ஓட்டங்களைப் பெற்று தொடர்நாயகனான குசல் மெண்டிஸ், தனது தொடர்ச்சியான திறமையை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மிக பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பெத்தும் நிஸ்ஸன்க 16 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் இலங்கையின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. எனினும் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலமான நிலையில் இட்டனர். குசல் பெரேரா 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் சர்வதேச அரங்கில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தினார். எனினும் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது குசல் மெண்டிஸ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார். குசல் மெண்டிஸ் கொடுத்த மிகவும் கடினமான பிடியை இடப்புறமாக ஓடிய ஷமிம் ஹொசெய்ன் உயரே தாவி இடதுகையால் பிடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அவிஷ்க பெர்னாண்டோ 11 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர் முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 8 ஓவர்களில் 65 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த ஏழு ஓவர்களில் 43 ஓட்டங்களையே பெற்றது. எனினும் கடைசி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களை எடுத்து கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன் ஆகிய இருவரும் 30 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தன்ஸித் ஹசன் 16 ஓட்டங்ளுடனுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. அணித் தலைவர் லிட்டன் தாஸ் 6 ஓட்டங்களுடனும் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது தௌஹித் ஹிரிதோய் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார். (89 - 4 விக்.) தொடர்ந்து மொஹம்மத் நய்ம், மெஹிதி ஹசன் மிராஸ் (29) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். மொஹம்மத் நய்ம் 32 ஓட்டங்களுடனும் ஷமிம் ஹொசெய்ன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணிக்கு ஒரு வருடத்திற்கு பின்னர் மீளழைக்கப்பட்ட தசுன் ஷானக்க 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெவ்றி வெண்டசே 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 32 ஓட்டங்களுக்கு ஒரு ? விக்கெட்டையும் விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சரவ்தேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/219695

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months ago
13 JUL, 2025 | 06:36 PM மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது. இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/219906

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months ago

13 JUL, 2025 | 06:36 PM

image

மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது.

இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/219906

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months ago
யாரிடம் கூலிவாங்கிக் கொண்டு மாரடிக்கிறார்? ஆதாரம் கொடுக்க முடியுமா?சீமானை மட்டம் தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்சியின் காரணமாக ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது 200 ரூபா உபிக்களின் வாந்திகளையோ இங்கே கொண்டு வநது கொட்டக் கூடாது.ஓ தளத்தில் அரசியல் செய்பவர்களை விமர்சிக்காதவர்கள் எல்லாம் களத்தில் நின்றுபத்திரிகையாளர்களின் எந்தக் கேள்களுக்கும் முகம் கொடுக்கும் சீமானை விமர்சிக்கிறார்கள். சீமான் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்வெற்றியோ தோல்வியோ சீமான் 2026 தேர்தலைதனித்தே எதிர்கொள்ள வேண்டும்.இந்தத் தேர்தலை சீமான் தாக்குப் பிடித்தால் அதன் பிறகு சீமான்தான் கிங்மேக்கர்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணி மனித புதைகுழி; கார்பன் பரிசோதனைகள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்; தமிழரசுகட்சியின் வேண்டுகோள்கள் பயனுள்ளவை - காணாமல்போனோர் அலுவலக அதிகாரி கருத்து Published By: RAJEEBAN 13 JUL, 2025 | 02:26 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வும் நடவடிக்கைகள் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.தற்பரன் இதனை தெரிவித்துள்ளார். உடல்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு முறையாக கார்பன் பரிசோதனையை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பயன்படுத்தப்படும் ஒரு முறை குறிப்பாக வேறு பொருட்கள் ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை என தெரிவித்துள்ள அவர் எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையிடம் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவிற்கே அனுப்பவேண்டும். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்றன. இந்த 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளிற்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15ம் திகதிக்குள் முதல் 15 நாட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து கரிசனைஎழுப்பியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சில நடவடிக்கைகளை கோரியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கையின் தார்மீக மற்றும் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நோக்கிய நம்பமான பாதையை உருவாக்குவதற்கும் இது அவசியம் என தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து பதிலளித்துள்ள காணாமல்போனோர் அலுவலக அதிகாரி தற்பரன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பயனுள்ளவையாக அர்த்தபூர்வமானவையாக அமையும் என தெரிவித்துள்ளார். சுயாதீன மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதுபோன்ற கூட்டுப் பணிகள் அதிக ஈடுபாட்டிற்கான வளங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என்பதற்கான கூடுதல் சூழமைவை தமிழரசுக்கட்சியின் வேண்டுகோள்கள் நமக்கு வழங்குவதால் நாங்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவோம். மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும்" .என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் அலுவலகம் இன் பணியைத் தொடர நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தலைவர் மற்றும் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219871

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு

2 months ago
13 JUL, 2025 | 02:41 PM இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும். மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது. ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது. வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/219869

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு

2 months ago

13 JUL, 2025 | 02:41 PM

image

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது.

இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த  இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால்  அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.

ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். 

மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.

வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது.  நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/219869

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

2 months ago
பகிடி தலைவர் கவுண்டமணியின் தெலுங்கு பதிப்பு - நான் புடிச்ச மாப்பிள்ளை தாலாட்டு கேட்குதம்மா பொறந்த வீடா புகுந்த வீடா ....... இன்னும் பல.. கண்ணீர் அஞ்சலிகள்..

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

2 months ago
நிபுணர்களின் கூற்றுப்படி, பல்வேறு கட்டுமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கான்கிரீட்டுகளுக்கும் பாதுகாப்பான சிமென்ட் கலவை விகிதம் 4:2:1 ஆகும். அதாவது, நான்கு பங்கு நொறுக்கப்பட்ட கற்களை இரண்டு பங்கு மணலுடன் ஒரு பங்கு சிமெண்டுடன் கலந்து, அனைத்து நோக்கங்களுக்காகவும் கான்கிரீட் தயாரிக்க சிறந்த சிமென்ட் கலவையை உருவாக்கும்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

2 months ago

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST]

TVK Seeman Udhayanidhi Stalin

சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர்.

தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.

மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர்.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/tvk-members-slam-seeman-and-udhayanidhi-stalin-during-protest-720179.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

2 months ago
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர் Halley KarthikPublished: Sunday, July 13, 2025, 19:33 [IST] சென்னை: காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த தவெகவினர், சீமானையும், உதயநிதி ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த பிரச்சனை தொர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோராப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதியை மறுத்திருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தை நாடி தவெக அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தவெகவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களிடம் களத்தில் ஒன் இந்தியா தமிழ் பேட்டி எடுத்திருந்தது. அதில், தவெகவினர் சீமான் மற்றும் உதயநிதியை சரமாரியாக விமர்சித்திருந்தனர். தவெக பெண் தொண்டர் பேசியதாவது, "சீமான் சரியான பச்சோந்தி. முதலில் விஜய்யை தம்பி, தம்பி என்று அழைத்திருந்தார். ஆனால் விஜய் தனது அரசியலை கையில் எடுத்த பிறகு, தப்பியாது, இதுவாவது என்று சொல்லியிருந்தார். சீமான் ஒரு பச்சோந்தி. அவருக்கு கீழே விஜய்யா? எங்கள் தளபதியின் கால் தூசிக்கு யாரும் வரமாட்டார்கள்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து உதயநிதி குறித்து பேசிய அவர், "உதயநிதியெல்லம் ஒரு ஆளே கிடையாது. அவருடைய அப்பா மு.க.ஸ்டாலினும் ஆளே கிடையாது. அவங்கெல்லாம் எங்களுக்கு மேட்டரே கிடையாது. என்னுடைய முதல் ஓட்டு உனக்குதான் தலைவா. என்னைக்கும் நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியுள்ளார். மற்ற தொண்டர்கள் பேசுகையில், தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை அலைகலைப்பது வரை காவல்துறையினர் மோசமாக நடந்தக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கின்றனர். சில தொண்டர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர்கள் தங்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை போல பாவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தவெகவினரான நாங்கள் என்ன பாகிஸ்தானிலிருந்தா வந்திருக்கிறோம்? எதற்காக எங்களை இப்படி இழுத்தடிக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில், தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்றும், மீண்டும் யாரும் ஆட்சியமைக்க முடியாத வகையில் வலுவாக ஆட்சியை நடத்தும் என்றும் கூறியுள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tvk-members-slam-seeman-and-udhayanidhi-stalin-during-protest-720179.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
ம்ம்ம்… கேள்விக்கு பதில் இல்லை … அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது. கேள்வி மீண்டும் ஒரு தரம்