Aggregator

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன், அதனால் தென்னாபிரிக்கா இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது, இந்திய முன்னால் வீரர் ஒருவர் சிறந்த ஆடுகளம் என வர்ணித்த ( புற்களை எல்லாம் நீக்கிவிட்டு முழங்காலுக்கு மேல் எழாத அதிகமாக சுழாத) ஒரு செத்த ஆடுகளத்தினை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கொடுக்க வேண்டும் என கூறியதாக எங்கோ பார்த்த நினைவுள்ளது, இந்தியா இப்படியான ஒரு ஆடுகளத்தினை கொடுத்தால் போட்டியில் வெல்லலாம் என கூறினார்.

இந்தியா எப்படி தோற்றது?

1 month 2 weeks ago
ஆசிய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை அணி வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து மிக சொற்ப ரண்களில் ஆட்டமிழந்ததனால் இந்தியா இலகுவாக வென்றிருந்த்து. அந்த சுப்பர் ஓவரில் வேறு ஒரு சுவாரசியமான நிகழ்வும் நடந்தது ஆனால் அதனால் கூட இலங்கை அணிக்கு எந்த பலனும் பெரிதாக ஏற்படவில்லை.🤣

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

1 month 2 weeks ago
பாவம் சஜித்தும் நாமலும். அவர்கள் நினைத்திருப்பார்கள் அனுரா படையை அனுப்பி தங்கள் பேரணியை தடுக்கும் போராட்டம் வரும் அதனை தங்களுக்கு சாதகமாகலாமென நினைத்திருப்பார்கள் மாறாக அனுரா அவர்களது பேரணிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து தடங்கல் இல்லாமல் செல்ல வழி அமைத்துக்கொடுத்து போராட்டங்களால் தான் அடிபணியப்போவதில்லை அவர்கள் பாதையில் தான் செல்லப்போவதில்லை என்பதை நிரூபித்து அவர்களை வெட்கமடையச்செய்திருக்கிறார் ராஜபக்ச திருடர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பாதாள போதைக்கும்பல், ஊழல் பெருச்சாளிகள் கொலை கொள்ளைக்காரர் இவர்களை பணயம் வைத்து மக்களை திரட்டி தம்மை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். ஓடிகளைக்குமாடும் இவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும். மக்களைக்கூட்டுவதற்காக சஜித் தனது பச்சை இனத்துவேசத்தை வெளிக்காட்டி, தன்னை தமிழ் மக்களுக்கு இனங் காட்டியுள்ளாரே தவிர அவர் நினைத்தது நிறைவேறவில்லை, எதுவும் சாதிக்கவில்லை. உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக்கண்ணன் என்கிற கதையாய் சஜித்தின் நிலைமை. தேர்தல் காலத்தில் இவர் எப்படி தமிழரிடம் வாக்குக்கேட்பார்? இவருக்கு தமிழ் மக்களின் வாக்கே அதிகமாக விழுவது, அதையும் இழந்து தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார். இவருக்கு வாக்குபோடும்படி கேட்ட சுமந்திரன், அரிய நேந்திரனை விலக்கி வைத்த சுமந்திரன் இதற்கு பொறுப்பேற்று, மக்களை தவறாக வழிநடத்திய குற்றத்திற்காக தமிழரசுக்கட்சியிலிருந்து விலக வேண்டும். ஏனையோர் இவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்!

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்

1 month 2 weeks ago
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்

1 month 2 weeks ago

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*.

சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா!

காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..!

சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..!

அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு

பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!!

அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்...

பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.!

மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!!

பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....!

ஆஸ்திரேலியா-

சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..!

மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்...

சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..!

சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!!

"ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..!

" சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது?

பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா..

கோபாலன் மௌனமானான்!!

USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ்

அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..!

சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!!

காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.!

கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்..

"Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..!

அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!!

" why are you looking sad dad?

Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..!

அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!!

ன்னையில் காலை 10.30..!

பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..!

வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..!

தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..!

அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....!

சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!...

நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..!

இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது.

காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..!

BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது...

மணி 4.30

சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..!

"நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள்.

விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது..

சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார்.

உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார்.

பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார்.

வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி

"சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார்.

திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..!

ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்..

கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்...

இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...!

சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..”

படித்ததும் பகிர்ந்ததும்

இந்தியா எப்படி தோற்றது?

1 month 2 weeks ago
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரில்தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஒட்டங்களை பெற்றது. வங்காளதேசம் அணி 9 விக்கெட் இழப்புடன் 125 பெற்று சமநிலை அடைந்தது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் அணி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளும் இழந்தது 6 ஓட்டங்களை பெற்றது. இன்னும் 3 பந்துகள் இருந்தும் 2 விக்கெட் இழப்பினால் வங்காளதேசத்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தான் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

1 month 2 weeks ago
நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனம் செய்து "பெண்கள் உள் நுழைய முடியாது" என்று விதி வைத்திருக்கும் கோவில் அல்லவா இது? பெண்களை விலக்கி வைத்தவர்கள் திருடர்களை அவர்களுக்கு மாதவிடாய் வருவதில்லை என்ற காரணத்தால் அனுமதித்திருக்கிறார்கள். பிறகு தங்கம் திருடு போகாமல் இருக்குமா😎?

நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்

1 month 2 weeks ago
2004 இல், மகிந்தவை மறைமுகமாக பதவிக்கு வர ஆதரித்து முள்ளிவாய்க்காலில் மக்களையும் இழந்து தாமும் அழிந்த புலிகளும் இப்போது இல்லை. 2024 இல் சஜித்தை ஆதரித்த சுமந்திரனும் இப்போது மக்கள் பிரதிநிதியாக இல்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் வரை புலிகளோடு அரசியல் துறைப் பிரபலமாக பயணித்த நிலாந்தன் மாஸ்ரர் மட்டும் எதையும் இழக்காமல் "ஆய்வாளர்" பதவியிலேயே இருக்கிறார்😂!

சிரிக்கலாம் வாங்க

1 month 2 weeks ago
இங்கு எங்கே மனிதநேயம் தெரிகிறது? விலங்கு நேயத்தை ரசிக்கிறார்களா, வியக்கிறார்களா மனிதர்கள் என்று தெரியவில்லை. மனிதர்கள் நேயத்தை காட்டியிருந்தால், விலங்கேன் இறங்கி போராடுது.

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

1 month 2 weeks ago

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

written by admin November 23, 2025

sabarimalai.jpg?fit=840%2C473&ssl=1

 

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும்  கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது.

இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன்.

கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Global Tamil News
No image previewசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…


சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

1 month 2 weeks ago
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும் கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Global Tamil Newsசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

1 month 2 weeks ago
கொழும்பிலிருந்து வரும் புகையிரத சேவையை மையப்படுத்தி இந்த பேருந்து சேவை இடம்பெற்றால் வரவேற்கத்தக்கது . பலரும் பயன் அடைவார்கள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 48 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 48 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் அனைவரையும் கிரிதீபா தீவுக்கு விரட்டிய பின், இயக்கர்கள் (Yaksha) மீண்டும் இலங்கையில் எப்படி வந்தார்கள்?' அத்தியாயம் 11 அபயன் அல்லது அபயாக்குப் [Abhaya] பிறகு இலங்கையின் நான்கு மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது. அபயாவுக்குப் பிறகு, பதினேழு ஆண்டுகள் இடைக்காலம் இருந்தது. பகுண்டா [பண்டுகாபயன்] தனது தாய்வழி மாமன்கள் ஏழு பேரைக் கொன்ற பிறகு, அரியணையைக் கைப்பற்றுவதற்கு முன்பு, அந்த இடைக்காலத்தின் போது ஒரு கொள்ளையனாக 17 ஆண்டுகள் வாழ்ந்தான். பகுண்டா முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். தொடர்புடைய மகாவம்ச அத்தியாயத்தின் கீழ் பகுண்டா பற்றிய, மேலதிக கருத்துக்களைப் பார்க்கவும். அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் இறக்கும் போது அவனுக்கு குறைந்தபட்சம் நூற்றி ஏழு வயது இருக்க வேண்டும்; இது வாழ்க்கையின் மிக நீண்ட காலம் ஆகும்! 11-4: Enjoying sovereignty both over men and Yakkhas, Pakuṇḍa reigned during full seventy years. மனிதர்கள் மற்றும் இயக்கர்கள் இருவரின் மீதும் இறையாண்மையை [sovereignty] செலுத்தி அல்லது பாவித்து, பகுண்டன் முழு எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறப்படுகிறது. புத்தர், அத்தியாயம் 1 இன் படி, இயக்கர்களை மற்றொரு தீவான கிரிதீபாவிற்கு அனுப்பினார். கிரிதீபா [Giridipa] என்பது மற்றொரு தீவு அல்ல, ஆனால் இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பகுதி (கிரி - மலை) என்று நாம் இப்போது கருத வேண்டும் போல் உள்ளது?; இல்லையேல் கட்டாயம் மீண்டும் இயக்கர்கள் ஆளப்பட்டிருக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை? மேலும், இயக்கர்கள் மீதான இறையாண்மை பற்றிய கருத்து குழப்பமானது. உதாரணமாக ஒரு அரசுக்கு தன் குடி மக்கள் மீதான- மூலமான முழுமையான வரையற்ற அதிகாரமே இறைமை எனப்படுகிறது. அப்படியாகின் இயக்கர்களும் குடி மக்கள் என்பது தெளிவாகிறது! ஏனென்றால், விலங்குகள் அல்லது துணை மனிதர்கள் மீது யாருக்கும் இறையாண்மை இல்லை, ஏனெனில் அவர்கள் அதை புரிந்து கொள்ள மாட்டார்கள். இறையாண்மை என்பது மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கருத்து. ஆகவே, இயக்கர்கள், தீபவம்சத்தின் ஆசிரியர் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதேதோ கூறினாலும், அவர்கள் இலங்கையின் ஒரு பூர்வீக மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, அந்த பண்டைய காலத்தில், மொழி மக்களிடையே ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை என்றும் தெரிகிறது. பகுண்டானின் ஒரே மகன் முத்தசிவா அல்லது மூத்தசிவன் [Mutasiva] ஆகும். இவன் அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்; மற்றொரு நீண்ட ஆட்சி. இருப்பினும், அவரது அறுபது ஆண்டுகால ஆட்சி, அவரது நீண்ட ஆட்சியைப் பற்றிய எந்த விவரமும் இல்லாமல், வெறுமனே கடந்து செல்கிறது. அவருக்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் அல்லது தீசன் அரியணை ஏறியபோது, திஸ்ஸவின் முடிசூட்டு விழாவில் பல அற்புதங்களும் பல பொக்கிஷங்கள் தானாக - பரிசு பொருட்களாக - வெளிவந்த நிகழ்வுகளும் நிகழ்ந்தன. திஸ்ஸாவும் அசோகாவும் ஒருவரை யொருவர் சந்தித்ததில்லை, ஆனால் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அந்த பழமையான நாட்களில் ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நபர்களிடையே இந்த நெருக்கம் எப்படி உருவானது என்று விளக்கப்படவில்லை. திஸ்ஸ என்ற பெயரை சிங்களவர்கள் பாசத்துடன் ஏற்றுக் கொண்டாலும், இந்தப் பெயர் வங்காளத்திலிருந்து தமிழகம் மற்றும் இலங்கை வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து உள்ளது. எடுத்துக்காட்டாக, 2014 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சியானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொல்பொருட்களின் மீது 'திஸ்ஸா' என்ற பெயர் தமிழில் பதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது. பௌத்தம் முதலில் தமிழ் நாட்டிற்கு வந்து, பின்னர் சிறிது காலத்திலேயே படகு மூலம் இலங்கைக்கு வந்தது என்பதுக்கு பல தடயங்கள் உள்ளன. இவை பற்றி முன்பும் கூறியுள்ளோம். மீண்டும் பேசுவோம். அன்னம் போல மகிந்த தேரர் பறந்து இலங்கை போனார் என்பது, அப்பாவி பக்திமான்களின் நுகர்வுக்கு ஒரு விசித்திரக் கதை. அவ்வளவுதான்! திஸ்ஸ (தேவநம்பியதீசன்) அந்த விலைமதிப்பற்ற பொருட்களை அசோகருக்கு அனுப்பினார். இதையொட்டி, அசோகர் தேவநம்பியதீசனின் இரண்டாவது முடிசூட்டு விழாவிற்கு பொருட்களை அனுப்பினார். தேவநம்பியதிஸ்ஸ முதல் முடிசூட்டுக்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களில் இரண்டாவது முடிசூட்டு விழா நடந்தது மிகவும் விசித்திரமானது. இதன் உண்மைத் தன்மையை ஏற்கனவே விரிவாக அலசி உள்ளோம். மகிந்த தேரர் திஸ்ஸவின் இரண்டாவது முடிசூட்டு விழா முடிந்து, முப்பது நாட்களுக்குப் பின்னர் புத்தரின் நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வதற்காக தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்தார். ஆகவே அதற்கு முதல், புத்த மதம் இலங்கையில் இல்லை என்றாகிறது! Part: 48 / Appendix – Dipavamsa / 'How Yakkhas again appeared in Lanka, After Buddha chased all of them to another island Giridipa? The Chapter 11 speaks of four kings of Lanka after Abhaya. After Abhaya, there was an interregnum of seventeen years. Pakunda [King Pandukabhaya] lived as a robber during that interregnum before capturing the throne after killing seven of his maternal uncles. Pakunda was crowned when he was thirty seven years age. See comments on Pakunda under the related Mahavamsa chapter. He ruled for seventy years. He must be at the least one hundred and seven years of age when he died; very long span of life! It is said that, 11-4, Pakunda enjoyed sovereignty over men and Yakkhas, 11-4. The Buddha, as per chapter 1, sent Yakkhas to another island Giridipa. We have to assume now that Giridipa is not another island but the hilly area (Giri) in the central part of Lanka; otherwise, Yakkhas would not have been there to rule over. Furthermore, the concept of sovereignty over Yakkhas is confusing. No one has sovereignty over animals or sub-humans as they do not understand it. Sovereignty is a political concept invented for human beings. Yakkhas must be humans whom the author of the Dipavamsa unhappy with based on their faith. Mutasiva was the only son of Pakunda, and he ruled for sixty years; another long reign. However, his rule of sixty years is simply passed over without any detail about his long rule. When his second son Tissa ascended to the throne after him, Many miracles happened on the coronation of Tissa along with many treasures. Tissa and Asoka never met each other, but they are said to be very intimate friends. It is not explained how this intimacy developed between persons living more than a thousand five hundred miles apart in those primitive days. Though Sinhalese fondly adopted the name Tissa, the name had long been in vogue more than two millenniums from Bengal to Tamil Nadu as well as in Ceylon. For example, The famous Keezadi archaeological excavation in Tamil Nadu during the period 2014 to 2015 brought forth the name Tissa on artefacts of more than two thousand years old. It will be shown later that the Buddhism came to Tamil country first and then to Sri Lanka by ferry shortly after. Mahinda flying like kings of swan is a fairy tale for the consumption of the naive pious. Tissa (Devanampiyatissa) sent the precious items to Asoka as present. In turn, Asoka sent him items for his second coronation. It is very strange that Devanampiyatissa had second coronation in about six months after his first coronation. Mahinda Thera came to Lanka with his companions to propagate the faith of the Buddha thirty days after the second coronation of Tissa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 49 தொடரும் / Will follow துளி/DROP: 1911 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 48] https://www.facebook.com/groups/978753388866632/posts/32517648617883698/?