Aggregator

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

1 month 3 weeks ago
யூதர்கள் பலஸ்தீனியர்களை அழித்தொழிக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை மனித நேயமில்லாமல் செய்கின்றார்கள். யூதர்கள் ஹிட்லரிடம் அடிவாங்கியும் திருந்தவில்லை.மனிதாபிமானமும் பிறக்கவில்லை.

எனது மரணச்சடங்கு.🖤

1 month 3 weeks ago
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அதே போல் விருப்பு வாக்கு அளித்தமைக்கும்,விருப்பு வாக்கு அளித்தவர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது யாவரும் அறிந்ததுதான்.ஆனால் மனித இனத்திற்கு மட்டும் நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் இறுதிச்சடங்குகள் வேறுபடும்.பல இடங்களில் அது ஒரு நாடக மேடை போல் தோன்றும்.இல்லை இல்லை அது நாடக மேடையேதான்.பல சிவாஜிகணேசன்கள், பல வாழ்வே மாயம் ஸ்ரீபிரியாக்கள் ஸ்ரீதேவிகள்,கௌரவம் பண்டரிபாய் கூட்டம் என இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றேன்.🙂 https://youtu.be/UsZwf3BHys8

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். யாழ்களமும் முன்பு அதிகமாக இன்பம் சேர்த்து விட்டதோ? அதனால்தான் வினை வந்ததோ??.🤔

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
எனது சகோதரர்கள், அவர்களின் நண்பர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் வன்னியிற்தான் படித்து கல்விப்பொதுத்தராதரம் சாதாரணத்தில் சித்தியெய்தி உயர்தரம் போனார்கள். அவ்வாறே அங்கு பாடசாலைகளும் நடந்தன. அவரவர் தாம் அறிந்ததை வைத்து சிங்களத்திற்கு வெள்ளை அடிக்கிறார்கள். தாய்மொழிப்பற்று அது. அதற்காக நாங்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. தமிழ்ப்பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவும் எதிர்கால சந்ததியை அழிக்க வேண்டுமென்றும் பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் என்று திரும்பிய இடமெல்லாம் கொட்டினவர்கள் தான். இருந்தாலும் பிள்ளைகள் படித்து பல்கலைக்கழகமும் போயிருக்கிறார்கள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
எல்லாம் ஜியோ ரூட் விட்ட கட்சினால் வந்த வினை! தெரியாமலா சொன்னார்கள் catches win Matches என்று!! அந்த ஒரு கேட்ச் இந்த மட்சை மட்டுமல்லாமல் தொடரையே மாற்றிவிட்டது!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் ஆண் : கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன் ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன் ஆண் : காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் ஆண் : கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்! ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள் ஆண் : கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை வரவில்லையடா ......... ! --- எந்த ஊர் என்றவனே ---

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
என்ன இணையவன் உங்களுக்கு தமிழ் புரிதலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அல்லது ஒரு சிலர்தான் கருத்து எழுதவேண்டும் என்று நினைக்கிறீர்களா? மொரட்டுவ எந்திரிக்கும், கிளிநொச்சி கால்நடைக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? அவர்கள் செய்ததெல்லாம் சரி என நிறுவத்தான் இங்கு சிலரை இறக்கியிருக்கிறார்களே!!

வவுணதீவில் மறைந்த இரா.சம்பந்தனின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி

1 month 3 weeks ago
Published By: VISHNU 28 JUL, 2025 | 06:06 AM மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/221120

வவுணதீவில் மறைந்த இரா.சம்பந்தனின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி

1 month 3 weeks ago

Published By: VISHNU

28 JUL, 2025 | 06:06 AM

image

மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது.

098427de-44ae-4184-92a5-f7934e727fa1.jpe

f5ee3adc-9285-4fcc-a7ef-f3aa86e9d09d.jpe

e34a96ae-602b-42d3-86c5-a0014da3dc5c.jpe

d2ffaf55-f4b9-46af-b78b-e3655bde7413.jpe

c42faed7-69b5-4a21-8139-b2b0c320d074.jpe

a3bff3e4-96e6-46d4-8e8e-a36bad89f17a.jpe

20237447-feb5-4566-85bd-88b5307b8c7c.jpe

2923d63b-7b7b-4d90-b62a-c617a1322f20.jpe

88df6d77-3b16-4245-bb58-59d28b32117a.jpe

4f3e0777-9f59-4d1c-9fae-46255306c2c6.jpe

3e68c319-a026-4980-acca-893402991193.jpe

1bcabf7d-c5d5-4712-8db8-a45086985233.jpe

1b25ffb9-d54f-422d-8388-0e5d99202126.jpe

0c1d761d-f649-4969-b321-f5dcda7c5534.jpe

0baed034-7314-4a9f-bba4-ca48c60fd3b1.jpe

https://www.virakesari.lk/article/221120

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அமைத்த பிரமாண்ட ஏரி தற்போது எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு

1 month 3 weeks ago

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 27 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன?

அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும்.

ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி.

கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார்.

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.

இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது.

அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன்.

இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று...

இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.

கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன.

திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல்.

ஷார்ட் வீடியோ

Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07

01:07

p0lsh9xj.jpg.webp

காணொளிக் குறிப்பு,

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார்.

"உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை.

அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது.

"அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன.

மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.."

ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி, gangai konda cholapuram, கங்கை கொண்ட சோழபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில்

இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார்.

இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல்.

மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது.

ஷார்ட் வீடியோ

Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20

01:20

p0lshdm8.jpg.webp

காணொளிக் குறிப்பு,

"இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன்.

"இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்."

கங்கை கொண்ட சோழீஸ்வரம், gangai konda cholapuram, கங்கை கொண்ட சோழபுரம்

ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன்.

இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அமைத்த பிரமாண்ட ஏரி தற்போது எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன? அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும். ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி. கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார். அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது. அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன். இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று... இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார். கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன. திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல். ஷார்ட் வீடியோ Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07 01:07 காணொளிக் குறிப்பு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார். "உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது. "அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன. மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில் இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். "எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல். மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது. ஷார்ட் வீடியோ Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20 01:20 காணொளிக் குறிப்பு, "இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன். ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார். இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன். "இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்." ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன். இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் - ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும். இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது. அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இணை லார்ட்ஸ் டெஸ்டில் சதத்தின் மேல் கண்வைத்து கவனத்தை தொலைத்த, ராகுல் முதல் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்தை எடுக்கும் வரை, டாசனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீசியது பாராட்டத்தக்க நகர்வு. தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் நலனுக்காக, பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தில் தனது முழு சக்தியையும் இறக்கி, பந்துவீச துணிந்தார். வெற்றி தோல்விகளை கடந்து, ஸ்டோக்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த தன்னலமற்ற தலைமைத்துவம்தான் காரணம். உண்மையில், நேற்று ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியிலும் இல்லை. ஒவ்வொரு பந்தையும் வீசி முடித்த பிறகு, தோளை பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும், உயிரைக் கொடுத்து வீசி, சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். சதத்தை தவறவிட்டாலும் ராகுலின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சிறந்த இன்னிங்ஸை விளையாடிய சுந்தர் ராகுல் விக்கெட்டை கைப்பற்றியது ஒரு அற்புதமான பந்து. ஷார்ட் ஆஃப் த லெந்த்தில் வீசப்பட்ட பந்து, இவ்வளவு தாழ்வாக உள்ளே நுழைந்து கால்காப்பை தாக்கும் என கனவிலும் ராகுல் நினைத்திருக்க மாட்டார். அதற்கு முந்தைய பந்து, கிட்டத்தட்ட அதே லெந்த்தில் இருந்து அதீதமாக எகிறியது ராகுலின் மனதில் நின்றிருக்கக் கூடும். ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கில்லுடன் கைக்கோர்த்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். இடக்கை பேட்ஸ்மேனான சுந்தருக்கு எதிராக ஆடுகளத்தில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி டாசன் வீசினார். இதைத் தடுக்கும் விதமாக, டாசன் பந்தில் சுந்தருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கில்லே பெரும்பாலான பந்துகளை விளையாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. இந்திய டெஸ்டில் கில் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான்காம் நாளில் 41 ரன்களில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். நேற்று ஸ்டோக்ஸ் பந்தில் 81 ரன்களில் இருந்தபோது கவர் திசையில் கொடுத்து வாய்ப்பை, போப் கோட்டைவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கில், இந்த தொடரின் நான்காவது சதத்தை விளாசினார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்(4) குவித்த கவாஸ்கர், கோலி சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த பிராட்மேனின் சாதனையையும் கில் சமன் செய்தார். சதத்தை எட்டிய பிறகு ஏற்பட்ட கவனச்சிதறலில், ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை நீட்டி கில் ஆட்டமிழந்தார். பொதுவாக ஆர்ச்சர், வலக்கை பேட்ஸ்மேனுக்கு உள்ளேதான் பந்தை எடுத்துக்கொண்டு வருவார். ஆனால், அந்தப் பந்தை தனது மணிக்கட்டை பயன்படுத்தி வெளியே கொண்டுசென்றார். அதை கில் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். சரணடையாத இந்திய அணி கில் விக்கெட்டுக்கு பிறகு, இந்தியா எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர்–ஜடேஜா இணை, எவ்வித தவறுக்கும் இடம்கொடுக்காமல் மிகக் கவனமாக விளையாடி, ஒவ்வொரு அரைமணி நேரமாக ஆட்டத்தை நகர்த்தி சென்றது. வாஷிங்டன் சுந்தர், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே அபாரமான டெக்னிக்குடன் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகத்தை சமாளித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் பந்தில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஹூக் ஷாட்டை ஞாபகப்படுத்தியது. அப்போதிருந்தே தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, சுந்தரை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவருடைய திறமையை அங்கீகரித்ததாக தெரியவில்லை. இன்று கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் உடலையும் கால்களையும் நன்றாக நீட்டி, சுழற்பந்து வீச்சையும் பிரமாதமாக விளையாடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜடேஜா, நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் 6 அல்லது அதற்கும் கீழான வரையில் பேட் செய்து, 9 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் கடந்த எதிரணி வீரர் என்ற கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்தார். இந்த தொடர் முழுக்கவே இரண்டாவது இன்னிங்ஸ்களில் ஜடேஜாவை இங்கிலாந்து அணியால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என்பது அவர் எப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று. ஆனாலும், ஆங்கில ஊடகங்கள் ஸ்டோக்ஸ் பெயரைத் தான் தொடர்ந்து உச்சரிக்கின்றன. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில், ஜடேஜா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சுந்தர்–ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத இயலாமையால் இங்கிலாந்து அணியினர் வாய்ச்சவடாலில் இறங்கினர். முதலில் ஸ்கோரை சமன் செய்து, இன்னிங்ஸ் தோல்வியை வாய்ப்பில்லாமல் ஆக்கிய பிறகு, நம்பிக்கையுடன் அவர்கள் அடித்து விளையாட தொடங்கினர். இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? அவர்கள் இருவரின் நேர்மறையான ஆட்டம், இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என ஸ்டோக்ஸ் இறங்கிவந்து கேட்டபோது, இந்திய கேப்டன் கில் இசைவு தெரிவிக்கவில்லை. சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்த போதும், இந்திய அணிக்கு வேறு வியூகமும் இருந்தது. ஏற்கெனவே, உடல் சோர்வில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் பந்துவீசி ஓய்ந்து போகட்டும் என இந்தியா நினைத்திருக்கலாம். இந்தியாவின் மறுப்பு, ஸ்டோக்ஸ் உள்பட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது என்பதை பாடிலைன் பந்துவீச்சை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி எப்படி மறந்தது என தெரியவில்லை. சுந்தர்–ஜடேஜா இணை, 334 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி, 203 ரன்களை குவித்தது, இருவரும் சதம் அடித்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதலாக இந்த சதம் நிச்சயம் அமைந்திருக்கும். ஓவல் டெஸ்ட், இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களைத்துப் போயுள்ளனர். பும்ரா உள்பட இந்தியாவின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடற்தகுதியில் உள்ளனர். இந்தியா 2-1 என தொடரில் பின்தங்கி இருந்தாலும், மான்செஸ்டர் டெஸ்டில் இந்தியா விளையாடிய விதம், உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்டில் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராவோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kzdgd7zjxo

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

1 month 3 weeks ago
உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி யஸ்ரின் அவர்களே!🙏 1980ல் நான் பிறந்த மண்ணை விட்டுப் பறந்துவிட்டேன். எனக்கு குடியகல அனுமதி தந்தவர்கள் அம்மாளுக்குத் தர மறுத்துவிட்டார்கள் அதனால் தப்பிவிட்டேன் என எண்ணுகிறேன்.🤔

மாரீசன் விமர்சனம்: மீண்டும் இணைந்த வடிவேலு, ஃபகத் ஃபாசில் - படம் எப்படி இருக்கிறது?

1 month 3 weeks ago
மாரீசன் : விமர்சனம்! 26 Jul 2025, 4:58 PM திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ மாற்றியமைத்திருக்கலாம்..! ‘சூப்பரா நடிக்குறாங்க’ என்று சொல்லக்கூடிய இரண்டு நடிப்புக்கலைஞர்கள் ஒரே பிரேமில் தோன்றினால் எப்படியிருக்கும்? அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு எப்படிப்பட்டதாக அமையும்? அது போன்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியது ‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல். டீசர், ட்ரெய்லர் போன்றவற்றைத் தந்து அந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைக்க, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சரி, எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிற வகையில் ‘மாரீசன்’ உள்ளதா? எதிர்பாராத சந்திப்பு! எதிரும்புதிருமான இரண்டு மனிதர்கள். இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாகச் சில மணி நேரங்கள், நாட்கள் பயணிக்க நேர்கிறது. அந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? அவர்களது எதிர்பாராத சந்திப்பு நடக்கக் காரணமானது எது? இதற்கான பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதே ‘மாரீசன்’ படத்தின் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சிலரது மனங்களில் விரிந்திருக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு புள்ளியில் தொடங்கி மேற்சொன்னவாறே திரையில் கதை விரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி. ‘மாயமான்’ போன்று தோற்றமளிக்கிற மேற்சொன்ன கதைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒன்றாகப் பயணிக்கிற அந்த இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்? யார் உண்மையை மறைக்கிறார்? இருவரில் யார் நல்லவர் என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இரண்டாம் பாதி. இந்தக் கதையில் அல்சைமர்ஸ் எனும் மறதி நோயில் அவதிப்படுகிற வேலாயுதம் பிள்ளை எனும் நபராக நமக்கு அறிமுகமாகிறார் வடிவேலு. அவரைத் தற்செயலாகச் சந்திக்கிற ஒரு திருடனாக, தயாளன் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பகத் பாசில். இப்போது, ‘மாரீசன்’ படம் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் தானாக மேலெழும். ஏதோ ஒரு விஷயம் இதில் மறைந்திருப்பதாக அல்லது சொல்லாமல் தவிர்க்கப்பட்டதாக உணர வைக்கும். அது, இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது. முழுமையாகப் படத்தைக் கண்டபிறகு, முதல் பாதியுடன் இரண்டாம் பாதியைப் பொருத்திப் பார்க்க முடிந்தவர்களுக்கு இப்படைப்பு பிடித்துப் போகும். ‘மாரீசன்’னின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது. ’கொஞ்சம்’ வித்தியாசமான அனுபவம்! ‘மாரீசன்’ படம் குறித்துச் சிலாகித்தாலும், இகழ்ந்தாலும் அதில் இருக்கிற சில அம்சங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கும். அவற்றில் சில ‘ஸ்பாய்லர்’களாகவும் இருக்கக்கூடும். அது வேண்டாமே என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம். அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுகிற ஒரு பாத்திரம், அதனை ஏமாற்ற முனைகிற இன்னொரு பாத்திரம். இவற்றைக் கொண்டு நகைச்சுவையையும் செண்டிமெண்ட்டையும் வாரி இறைத்திருக்க முடியும். ஆனால், எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி இரண்டையுமே மிகக் குறைந்த அளவில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெள்ளைத்தாளில் ஆங்காங்கே எழுதுகோலை நகர்த்திச் சில புள்ளிகளை இட்டு, அந்த புள்ளிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு வரைபடம் தென்படுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார். அப்படியொரு உத்தியைச் செயல்படுத்தும்போது, திரைக்கதையில் அப்புள்ளிகளை அழுத்தமாகத் தெரியுமாறு பதிக்க வேண்டும். இரண்டாம் பாதியை முதல் பாதியோடு சரியாகப் பொருந்துகிற வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்க வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யத் தவறியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூட்டணி. அதேநேரத்தில், வழக்கமானதொரு கதை சொல்லலைத் தவிர்த்திருக்கின்றனர். கொஞ்சம் முயன்றிருந்தால், இதனைப் பரபரப்புமிக்க ‘காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆகவும் மாற்றியிருக்க முடியும். அவ்வாறு ஆக்கியிருந்தால், இப்படம் டாம்க்ரூஸ், ஜேமி பாக்ஸ் நடித்த ஆங்கிலப் படமான ‘கொலேட்டரல்’ போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கும். ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்க் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைத்து தான் விரும்பியவாறு திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர். ’ஃபா ஃபா’ மற்றும் ‘மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் பகத் பாசில் ’மிக இயல்பாக’த் தோன்றியிருக்கிறார். அதுவே வடிவேலுவின் பாத்திரம் ‘புதிரானது’ என்ற எண்ணத்தை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்தும். அதற்கேற்ப, அவரும் ‘மிகச்சரியாக’ நடித்திருக்கிறார். இவர்களது நடிப்பு ‘அபாரமாக’ இருப்பதாலேயே முதல் பாதி மெதுவாக நகர்வது நமக்கு அயர்ச்சியைத் தருவதில்லை. இரண்டாம் பாதியில் அவர்களது நடிப்பு ‘வழக்கமான தமிழ் சினிமா நாயர்களையே’ முன்னிறுத்துகிறது. அது மட்டுமே நமக்கு ஏமாற்றம் தருகிறது. இதர பாத்திரங்களில் நடித்திருக்கிற சித்தாரா, கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா ஆகியோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனைக் கொஞ்சம் உற்றுநோக்கியிருக்கலாம். இந்தக் கதையில் பகத் பாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணிக்காவிட்டால்தான் என்ன என்ற கேள்விக்கான பதிலாக விவேக் பிரசன்னா பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனைக் கவனமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி – சுதீஷ் சங்கர் கூட்டணியானது ‘மாரீசன்’னில் பகத் பாசிலையும் வடிவேலுவையும் ஒரே பிரேமில் காட்டி, அவர்களது செம்மையான நடிப்புத் திறமையைக் காட்ட முனைந்திருக்கிறது. அதில் வெற்றி கண்டிருக்கிறது. அதேநேரத்தில், தமிழ் திரை வரலாற்றில் இடம்பெறுகிற ஒரு ‘காம்போ’வாக, அதற்கேற்ற நேர்த்தியான கதை சொல்லல் கொண்டதாக ஆக்கியிருந்தால் ‘மாரீசன்’ படத்தின் உயரம் பல மடங்கு மேலேறியிருக்கும். அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவம்’ என்ற எல்லையோடு நின்றிருக்கிறது ‘மாரீசன்’. வடிவேலு, பகத் பாசில் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்..! https://minnambalam.com/vadivelu-fafa-maareesan-review-july-25/

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் - இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

1 month 3 weeks ago
27 JUL, 2025 | 11:50 AM மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221055

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் - இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

1 month 3 weeks ago

27 JUL, 2025 | 11:50 AM

image

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/221055