Aggregator

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

1 month 2 weeks ago
தாங்கள் வைத்த நெருப்பு மூண்டு எரியவில்லையே என்கிற ஏமாற்றம் சஜித்துக்கு. அதனால் அதை மீண்டும் மீண்டும் ஊதுகிறார். இனவாதத்தை தூண்ட பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாம். யார் அவசரமாக சிலையை நிறுவியது? யாருமே இனவாதம் பேசவுமில்லை, தூண்டவுமில்லை. தாங்களே இனவாதத்தை தூண்ட செய்துவிட்டு, அது தூண்டவில்லை என்பதற்காக சஜித் பேசிப்பேசி தூண்டுகிறார். புத்தரை அந்த இடத்திலிருந்து எடுத்தது பிழையென்கிறார், வைத்தபின்னும் பிழையென்கிறார். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க்கிறார். நினைத்தது நடக்கவில்லையேயென்கிற பொருமல். இன்னொன்றும் சொல்கிறார், பௌத்தத்துக்கு முன்னுரிமையாம், அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் சம உரிமையாம். அப்படியெனில் பௌத்தத்துக்கு எப்படி முன்னுரிமை? இவர்களெல்லாம் ஜனாதிபதியானால் நாடு எங்கே போகும்? தமது திறமை தெரியாமல் ஜனாதிபதிகனவு. எல்லோரின் கனவிலும் மண்ணள்ளி வைக்கப்போகிறார் அனுரா, ஜனாதிபதி முறை ஒழிப்பு!

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

1 month 2 weeks ago
ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர் என்றபடியால் இந்திய பெரியவர்கள் தீர்க்க தரிசனத்துடன் கடவுளுக்கு செய்த பாதுகாப்பு ஏற்பாடு தான் பெண்கள் உள் நுழைய முடியாது மற்றது பெண்களுக்கு மாதவிடாய் வரும். அந்த முடிவை நீதிமன்றம் அவமதித்ததால் தான் இப்படி 😭

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ..........! தமிழ் பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : சோனு நிகம் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும் ஆண் : கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும் ஆண் : விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே பெண் : வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் பெண் : உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஓ… தோள் சாய்கிறேன் ஆண் : இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை பெண் : முதல்முறை இந்த இளமையின் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை ஆண் : குடையோடு நான் போனேன் வழியினில் ஏனோ நனைகின்றேன் பெண் : கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன் ஆண் : என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய் ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை ஆண் : உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே பெண் : உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே ஆண் : என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் ........! --- விழியில் உன் விழியில் ---

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 2 weeks ago
இந்த நிகள்வின் ஆரம்ப நாளன்று இளங்குமரன் எம் பியின் பேட்டி ஒன்று ஒரு தமிழ் யுரியுப்பில் இருந்தது.யாராவது எந்த யுரியுப் என்று சொல்ல முடியுமா.

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

1 month 2 weeks ago
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453670

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

1 month 2 weeks ago

New-Project-184.jpg?resize=750%2C375&ssl

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும்.

மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1453670

பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!

1 month 2 weeks ago
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் பதிலடி கொடுத்து, வளாகத்திற்குள் இருந்த மூன்று தாக்குதல்காரர்களை சுட்டுக் கொன்றனர். இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453698

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 2 weeks ago
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு! ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான அமெரிக்க முன்மொழிவைப் பற்றி விவாதித்த பின்னர் மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே அவர்கள் வழங்கினர். இந்த திட்டம் மொஸ்கோவிற்கு மிகவும் இணக்கமானதாக இருப்பதாக வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பலரிடையே கவலையைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மிகக் குறைந்த தகவல்களையே அவர் வழங்கினார். இந்தத் திட்டத்திற்கு உக்ரேன் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் குறைத்து மதிப்பிட்டார். அதிகாரிகள் விரைவில் மோலை நிறுத்தப்படுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும், அதிகாரிகள் திங்கள்கிழமை (24) மற்றும் அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் கூறினார். உயர் மட்ட அதிகாரிகள் இறுதியில் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் வரையப்பட்ட 28-புள்ளி திட்டம் உக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தனது நாடு தனது இறையாண்மை உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் அதற்குத் தேவையான அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு கடுமையான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர், தனது மக்கள் தங்கள் வீட்டை (நாட்டை) எப்போதும் பாதுகாப்பார்கள் என்றும் சபதம் செய்தார். ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக நிராகரித்த பல ரஷ்ய கோரிக்கைகளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்கிறது, இதில் பெரிய பகுதிகளை விட்டுக்கொடுப்பதும் அடங்கும். அதேநேரம், முன்னதாக, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு வியாழக்கிழமை காலக்கெடுவை ட்ரம்ப் நிர்ணயித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூபியோ அந்த காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினார். இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஜெலென்ஸ்கி இந்த வாரம் விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1453677

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

1 month 2 weeks ago
தொண்டைமானுக்கு.... யாருடன் ஜாலியாக இருப்பது, யாரை திருமணம் செய்வது என்பதில்... கொஞ்சம் கவனமாகவே இருந்திருப்பார். ஏனென்றால்... அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். வரும் வாரிசையும் சிந்தித்து இருப்பார். 😂

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 2 weeks ago
செலென்ஸ்கி மைண்ட் வாய்ஸ்: "எப்பிடி இருந்த நான், இப்பிடியாயிட்டேன்". 🤣

இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது. 14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன. எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும், ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/231259

இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு

1 month 2 weeks ago

24 Nov, 2025 | 10:02 AM

image

(நமது நிருபர்)

சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின்  ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது.  அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக  முன்னெடுத்து வருகின்றார்.

இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது.

14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. 

நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன.

எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும்,  ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. 

இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார்.

02.jpg

https://www.virakesari.lk/article/231259

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

1 month 2 weeks ago
இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை! Nov 24, 2025 - 06:15 AM நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmicfe86c01x2o29n0b9urn8c

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான், பந்துவீச்சில் தாரிக் அபாரம், மும்முனை ரி20 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் Published By: Vishnu 24 Nov, 2025 | 12:10 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டி மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. பாபர் அஸாம், சாஹிப்ஸதா பர்ஹான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் உஸ்மான் தாஹிர் பதிவுசெய்த ஹெட் - ட்ரிக்கும் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் சய்ம் அயூப் (13) ஆட்டம் இழந்தார். ஆனால், சாஹிப்ஸதா பர்ஹான், முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலப்படுத்தினர். சாஹிப்ஸதா 41 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 52 பந்துகளில் 7 பவண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களையும் பெற்றனர். பக்கார் ஸமான் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், சிக்கந்தர் ராஸா (23), ரெயான் பேர்ல் ஆகிய இருவரும் ஸிம்பாப்வேயை மீட்டெடுக்க முயற்சித்தனர். சிக்கந்தர் ராஸா ஆட்டம் இழந்த பின்னர் வரிசையாக விக்கெட்கள் சரிந்தன. இதனிடையே 10ஆவது ஓவரில் உஸ்மான் தாரிக் தனது 2, 3, 4ஆவது பந்துகளில் டோனி முனியொங்கா, டஷிங்கா முசேக்கிவா, வொஷிங்டன் மஸகட்ஸா ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவுசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார். ஆனால், ரெயால் பேர்ல் தனி ஒருவராகத் திறமையை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231237

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

1 month 2 weeks ago
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 09:20 AM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/231256

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

1 month 2 weeks ago

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

Published By: Digital Desk 3

24 Nov, 2025 | 09:20 AM

image

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம்  ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும்  இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.

WhatsApp_Image_2025-11-23_at_7.33.35_PM.

WhatsApp_Image_2025-11-23_at_7.33.34_PM.

https://www.virakesari.lk/article/231256

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

1 month 2 weeks ago
யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை Nov 24, 2025 - 06:51 AM சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு - காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும். அதுபோல பி.ப 6.20 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmicgotnt01x3o29nhdf05joh