Aggregator
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
கருத்து படங்கள்
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!

இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!
இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும்.
மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு
இலங்கையின் தேசிய முயற்சிகள் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன - இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவிப்பு
24 Nov, 2025 | 10:02 AM
![]()
(நமது நிருபர்)
சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.
இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது.
14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது.
நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன.
எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும், ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார்.

நவம்பர் 2025 - இன்றைய வானிலை
பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
Published By: Digital Desk 3
24 Nov, 2025 | 09:20 AM
![]()
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.

