Aggregator
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
ஒரு பயணமும் சில கதைகளும்
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
-------------------------------------------------------------------

மேய்ந்து கொண்டும்
சாணம் இட்டும்
புரண்டு விட்டு
சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும்
ஆநிரைகளைப் பார்க்க
கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள்
அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று
குட்டிகளுடனும் கருக்களுடனும்
ஆடாமல் அசையாமல்
கடவுள் வரும் வழியில்
ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன
நாள் முழுதும்
காவலர்களுடன் வரும் கடவுள்கள்
கையை அசைப்பார்கள்
எழுதி வைத்து வாசிப்பார்கள்
இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள்
மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள்
கடவுள்களின் முன்னேயே
ஏதோ நடந்து
ஆநிரைகள் சில
குட்டிகள் சில
கருக்களில் சில
எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று
இறந்து போகின்றன
அன்று வந்த கடவுள்
ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார்
மிச்சமான கடவுள்கள்
தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே
கொன்று குவித்தது என்கின்றார்கள்
கடவுள்களின் போதகர்களும்
தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள்
இது தான் தருணம் என்று
ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம்
'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன
எரியாமல் நசியாமல் மூச்சுடன்
இன்று உயிர் தப்பிய ஆநிரைகள்
அடுத்த கடவுள் வருகையிலும்
இன்று தப்பிய ஆநிரைகள் சில
இறக்கப் போகின்றன
சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.