Aggregator

வடக்கு கிழக்கில் வெறுமையாக இருக்கும் நிலங்கள் சிங்கள குடியேற்றங்களை உள் இழுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது - முன்னாள் எம்பி சந்திரகுமார்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

27 JUL, 2025 | 05:05 PM

image

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள  குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில்  1983 கறுப்பு ஜூலையில் வெளிக்கடையில் சிறையில்  படுகொலைப்பட்டவர்களின்  நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 யூலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நாள். அதற்கும் முன்னரும் இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டு  ஒடுக்கப்பட வேண்டும் என சிந்தனையில்தான் ஆட்சியில் இருந்தார்கள்  ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஜே ஆர்.ஜெயவர்தனாதான்.

அண்மையில் புகையிரதத்தில் ஒரு குழு சகோதாரத்துவ கோசத்தடன் வந்தனர். இதனை பார்த்த எனக்கு இப்பவும் நினைவில் இருக்கிறது. அன்று புகையிரதத்தில் வந்த சிறில் மத்யூவின் காடையர்கள் குழு யாழ் நகரை அழித்தது.

அன்று ஜே ஆர் சொன்னார், தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டவர்கள் ஜேவிபியினர்தான் என்று. ஆகவே நான் நினைக்கின்றேன். அன்று இருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

1983 இற்கு பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகவும், அதன் இராணுவத்திற்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரித்தது. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அங்குதான் அவர்களுக்கு பாதுகாப்பு என உணர்த்தியதும்1983 தான்.

வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் குறிப்பாக எதுவுமே அறியாத மலையக மக்கள் சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு நோக்கி வந்தார்கள். அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு என கருத்தினார்கள்.

இந்த நிலைமைகள் தான்  வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது.

ஜனநாயக் போராட்டம் பின்னர் 30 வருட ஆயுத போராட்டம் அதற்கு பின்னராக இந்த15 வருட காலத்தில் நாம் பல அனுபவங்களை சந்தித்திருக்கின்றோம்.ஆனால் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னேற போகின்றோமாக என்றால் அது சந்தேகத்திற்குரியதே. தமிழ் அரசியலின் பலவீனம் இதுதான்.

இனத்தின் நலன் கருத்தி நாம் ஒரணியில் இணைவது கிடையாது அப்படி யாரேனும் இணைந்தால் அதனை எப்படி சீர்குலைக்கலாம் என சிலர் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்பார்கள். கடந்த கால போராட்ட வரலாறுகள் தெரியாத பலர்தான்  இன்று புதிய வரலாறுகளை  எழுதுகின்றார்கள்.

சிலர் கையில் கமரா இருந்தால் போதும்  எதையும் எழுதலாம் என்ற நிலைமை தற்போது  உருவாகியுள்ளது. யாரும் யாரையும்  துரோகி என முத்திரை குத்தி சமூக வலைத்தளங்களில்  பரப்புரை செய்கின்றார்கள் அதனை நம்பும் ஒரு பகுதியினரும் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தமிழ் தரப்பின் பலவீனத்தால் தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் ஒத்த கருத்துடன் நிற்கபோவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதனையே மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கம் அவர்களும் குறிப்பிட்டிருந்தார்.  ஒற்றுமையை குலைப்பவர்கள் எங்களுக்குள்தான் இருக்கின்றார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து  தமிழ் மக்களின் நலன்கருத்தி தமிழ் மக்கள் கௌரவமாகவும், நிம்மதியாகவும்  சுயாதீனமாகவும் வாழக்கூடிய  சூழலை நோக்கி செல்ல வேண்டும்.

இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எங்கள் எல்லோருக்கும் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அமைய  வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் இனி அதற்கான சூழல் இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். ஆயுத போராட்டத்தில்  ஒரு  சிறு  கீறிலை கூட சந்திக்காதவர்கள்  இன்று மற்றவர்களை  துரோகி என்றார்கள். ஏமாற்று அரசியலை செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் விமோசனத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை.

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள  குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது.  தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தரப்பினர்கள் உண்மையாகவே அதற்கு எதிராகவே செயற்பட்டிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே நாம்  ஆதாவது  தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும். நாம் யாதார்த்திற்கு ஏற்ப எங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே  இன விடுதலைக்காக தங்களை இழந்த எங்களது மூத்த தலைவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும் எனத் தெரிவித்தார்.

3ac53dd5-6d67-47c0-96b0-00ee2c8d0559.jpga1356ec7-af17-496e-9a7f-cb20cbda696c.jpg

https://www.virakesari.lk/article/221096

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்

1 month 3 weeks ago
27 JUL, 2025 | 10:52 AM அவசரமருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் வான்வழியாக போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் ஆகியொருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதனை தெரிவித்துள்ள அவர் அவசரகிசிச்சை தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் போடுவது போன்றவற்றை ஜோர்தானுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இஸ்ரேல் காசாவில் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலை பயங்கரமானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை பிரிட்டன் முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். காசாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து பிரிட்டிஸ் மக்கள் மனவேதனையில் உள்ளனர் என்பது எனக்கு தெரியும், காசாவில் காணப்படும் பட்டினிநிலையை காண்பிக்கும் படங்கள் மிகவும் பயங்கரமானவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார். அவசரமாக மருத்துவஉதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றோம்,அதிகளவு பாலஸ்தீன சிறுவர்களை பிரிட்டனிற்கு விசேட சிகிச்சைக்காக கொண்டு செல்லவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221045

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்

1 month 3 weeks ago

27 JUL, 2025 | 10:52 AM

image

அவசரமருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை பிரிட்டன் வான்வழியாக போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் ஆகியொருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இதனை தெரிவித்துள்ள அவர் அவசரகிசிச்சை தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவது மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் போடுவது போன்றவற்றை ஜோர்தானுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இஸ்ரேல் காசாவில் ஏற்படுத்தியுள்ள பட்டினி நிலை பயங்கரமானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை பிரிட்டன் முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து பிரிட்டிஸ் மக்கள் மனவேதனையில் உள்ளனர் என்பது எனக்கு தெரியும், காசாவில் காணப்படும் பட்டினிநிலையை காண்பிக்கும் படங்கள் மிகவும் பயங்கரமானவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அவசரமாக மருத்துவஉதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றோம்,அதிகளவு பாலஸ்தீன சிறுவர்களை பிரிட்டனிற்கு விசேட சிகிச்சைக்காக கொண்டு செல்லவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221045

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
ஏன் தமிழ்சிறி க்குப் பயத்தில் இப்படி நேரடிப் பதில் சொல்லாமல் சுத்தி வளைக்கிறீர்கள்😂? தற்போது 30 வயதான ஒருவருக்கு 2009 இல் 14 வயது (6 வயது என்பது தமிழ்சிறியின் "கவுண்டமணிக் கணக்கு"😎)! இறுதி யுத்த காலத்தில் 14 வயது என்பது பயிற்சி எடுக்கும் வயதாகவும் வன்னியில் இருந்திருக்கிறது. 6 மாதம் பயிற்சி கொடுத்த பின்னர் முன்னரங்கில் புலிகள் தங்கள் போராளிகளை விட்டது நீங்கள் கடைசியாக இலங்கையில் இருந்து கிளம்பும் போது இருந்த நிலை. 2009 இல் ஒரு நாள் இரு நாள் பயிற்சியோடு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு முன்னரங்கில் பீரங்கித் தீனி (canon fodder) யாக விடப் பட்டோர் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் தெரியாத மாதிரி நடித்தால் தானே "தேசியப் பற்றாளர்" விருது கிடைக்கும்😂?

வான்பொருள்களை கருந்துளை விழுங்குவது எப்படி? - ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள்

1 month 3 weeks ago

கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

GRS 1915+105 கருந்துளை பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறைகொண்டது.

ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஐஐடி கௌஹாத்தி, ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கருந்துளைகள் பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் GRS 1915+105 கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன?

இந்திய விஞ்ஞானிகள் உணர்ந்த கருந்துளையின் சமிக்ஞைகள்

ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் முடியும்போது அது தனக்குள்ளேயே சுருங்கி கருந்துளையாக உருவெடுக்கிறது. அதீத ஈர்ப்பு விசை காரணமாக, ஒளியைக்கூட அவை விழுங்கிவிடும். எனவே, கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பொதுவாக, பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது அவற்றில் இருந்து கருந்துளைகள் உருவாகின்றன.

கருந்துளைகளின் விடுபடு திசைவேகம் (Escape Velocity), ஒளியின் வேகத்தைவிட சற்று அதிகம் என்பதால், அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்ப முடியாது. எனவே, கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது.

ஆனால், கருந்துளையால் விழுங்கப்படும் வான்பொருட்கள் மிகவும் சூடாகி, எக்ஸ்ரே கதிர்களை வெளியிடுகின்றன. அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை அவதானிப்பதன் மூலம் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற வான் பொருட்களில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், அவை விழுங்கும் வான் பொருட்கள் வெப்பமடைந்து, எக்ஸ் கதிர்களை வெளியிடும். அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

அத்தகைய ஆய்வு ஒன்றை, GRS 1915+105 கருந்துளையில் ஆஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி மூலமாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கருந்துளை சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறை கொண்டது. அதன் சுழற்சி வேகமும் சூரியனைவிடப் பல மடங்கு அதிகம். அதை ஆய்வு செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகளை' பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளை ஆய்வில் மிக முக்கியமானது என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

GRS 1915+105 கருந்துளையில் விஞ்ஞானிகள் கண்டது என்ன?

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சில நூறு நொடிகளுக்கு ஒருமுறை, பிரகாசமாக, மங்கலாக என மாறிக்கொண்டே இருந்தது. ஒளி பிரகாசமாக இருக்கும்போது அதில் ஒரு நொடிக்கு 70 மினுமினுப்புகள் உருவாவதும், மங்கும்போது அது மறைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

GRS 1915+105 கருந்துளையை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறது.

கருந்துளைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவை வான்பொருட்களை விழுங்கும்போது உருவாகும் எக்ஸ் கதிர்கள் மூலம் அவற்றை அவதானிக்க முடியும் என்று முன்னமே பார்த்தோம்.

அந்த எக்ஸ் கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சிறிது நேரத்திற்குப் பிரகாசமாக, சிறிது நேரத்திற்கு மங்கலாக என மாறிக்கொண்டே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாற்றம் ஒவ்வொரு சில நூறு நொடிகளுக்கும் நடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மேலும், எக்ஸ்-ரே ஒளி பிரகாசமாக இருக்கும்போது மினுமினுப்புகள் உருவாவதும், மங்கலாக இருக்கும்போது மறைவதும் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஒரு நொடிக்கு சுமார் 70 முறை என்ற அளவுக்கு அதிவேகமாக மின்னுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவற்றை கருந்துளையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகள்' என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் வெப்பம் மற்றும் ஆற்றல் மிக்க வாயு மேகம் உள்ளது. அதுவே, எக்ஸ்-ரே ஒளியில் உருவாகும் மினுமினுப்புக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ்-ரே ஒளி இவ்வாறு அதிவேகமாக மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் மிகவும் வெப்பமான, ஆற்றல் மிக்க வாயு மேகம் இருக்கிறது. அதுவே, அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின்படி, "கருந்துளை பிரகாசமான கட்டத்தில் இருக்கும்போது, கொரோனா படலம் சிறியதாக, அதீத வெப்பத்துடன் இருக்கும். அதுதான், எக்ஸ்-ரே ஒளியில் அதிவேக மினுமினுப்புகளை உருவாக்குகிறது.

இதற்கு மாறாக, எக்ஸ்-ரே ஒளி மங்கலாக இருந்த நேரத்தில், கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ச்சியடைகிறது. ஆகையால், மினுமினுப்புகள் ஏற்படுவதில்லை."

GRS 1915+105 கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மங்கும்போது கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ந்துள்ளது.  அதற்கு மாறாக, ஒளி பிரகாசமாக இருக்கையில், கொரோனா படலம் சிறிதாக, அதீத வெப்பத்துடன் இருந்தது. அதுவே மினுமினுப்புகள் உருவாகக் காரணம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. ஒளியைக்கூட விட்டுவைக்காத கருந்துளையின் இயக்கம் மற்றும் அது தனது சுற்றுப்புறத்துடன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது.

"இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதோடு, மனித இனம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் என்பது என்ன?

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது, கருந்துளைகள், நட்சத்திரங்கள் போன்ற வான் பொருட்களை ஆய்வு செய்வதற்காக 2015ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவியது.

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது நட்சத்திரங்கள், கருந்துளைகள், விண்மீன் திரள்கள் போன்ற வான்பொருட்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

இது இஸ்ரோவால், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் எடை சுமார் 1,515 கிலோ. அது பூமியில் இருந்து சுமார் 650கி.மீ. உயரத்தில் நிலைகொண்டு சுற்றி வருகிறது.

ஒரே நேரத்தில் புறஊதாக் கதிர், எக்ஸ்-கதிர், காமா கதிர் எனப் பல வடிவங்களில் விண்வெளியைக் கவனிக்க முடியும் என்பது ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் தனிச்சிறப்பு.

இந்தக் கதிர்களை வெறும் கண்களால் காண இயலாது என்றாலும், அவை பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன.

விண்வெளியில் காணப்படும் வான் பொருட்களைப் படம் பிடிக்கவும், அவற்றின் பிரகாசம் மற்றும் நிறத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஆராயவும் உதவக் கூடிய ஐந்து கருவிகள் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியில் இருக்கின்றன.

அவற்றின் உதவியுடன், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளை அவதானித்து, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு மற்றும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பன பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்திய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05ej664er5o

வான்பொருள்களை கருந்துளை விழுங்குவது எப்படி? - ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள்

1 month 3 weeks ago
பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஐஐடி கௌஹாத்தி, ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கருந்துளைகள் பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் GRS 1915+105 கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன? இந்திய விஞ்ஞானிகள் உணர்ந்த கருந்துளையின் சமிக்ஞைகள் பொதுவாக, பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது அவற்றில் இருந்து கருந்துளைகள் உருவாகின்றன. கருந்துளைகளின் விடுபடு திசைவேகம் (Escape Velocity), ஒளியின் வேகத்தைவிட சற்று அதிகம் என்பதால், அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்ப முடியாது. எனவே, கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், கருந்துளையால் விழுங்கப்படும் வான்பொருட்கள் மிகவும் சூடாகி, எக்ஸ்ரே கதிர்களை வெளியிடுகின்றன. அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும். கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை அவதானிப்பதன் மூலம் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற வான் பொருட்களில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர். அத்தகைய ஆய்வு ஒன்றை, GRS 1915+105 கருந்துளையில் ஆஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி மூலமாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கருந்துளை சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறை கொண்டது. அதன் சுழற்சி வேகமும் சூரியனைவிடப் பல மடங்கு அதிகம். அதை ஆய்வு செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகளை' பதிவு செய்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளை ஆய்வில் மிக முக்கியமானது என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. GRS 1915+105 கருந்துளையில் விஞ்ஞானிகள் கண்டது என்ன? GRS 1915+105 கருந்துளையை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறது. கருந்துளைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவை வான்பொருட்களை விழுங்கும்போது உருவாகும் எக்ஸ் கதிர்கள் மூலம் அவற்றை அவதானிக்க முடியும் என்று முன்னமே பார்த்தோம். அந்த எக்ஸ் கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சிறிது நேரத்திற்குப் பிரகாசமாக, சிறிது நேரத்திற்கு மங்கலாக என மாறிக்கொண்டே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாற்றம் ஒவ்வொரு சில நூறு நொடிகளுக்கும் நடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும், எக்ஸ்-ரே ஒளி பிரகாசமாக இருக்கும்போது மினுமினுப்புகள் உருவாவதும், மங்கலாக இருக்கும்போது மறைவதும் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஒரு நொடிக்கு சுமார் 70 முறை என்ற அளவுக்கு அதிவேகமாக மின்னுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இவற்றை கருந்துளையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகள்' என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர். கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மின்னுவது ஏன்? GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ்-ரே ஒளி இவ்வாறு அதிவேகமாக மின்னுவது ஏன்? கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் மிகவும் வெப்பமான, ஆற்றல் மிக்க வாயு மேகம் இருக்கிறது. அதுவே, அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த ஆய்வின்படி, "கருந்துளை பிரகாசமான கட்டத்தில் இருக்கும்போது, கொரோனா படலம் சிறியதாக, அதீத வெப்பத்துடன் இருக்கும். அதுதான், எக்ஸ்-ரே ஒளியில் அதிவேக மினுமினுப்புகளை உருவாக்குகிறது. இதற்கு மாறாக, எக்ஸ்-ரே ஒளி மங்கலாக இருந்த நேரத்தில், கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ச்சியடைகிறது. ஆகையால், மினுமினுப்புகள் ஏற்படுவதில்லை." இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. ஒளியைக்கூட விட்டுவைக்காத கருந்துளையின் இயக்கம் மற்றும் அது தனது சுற்றுப்புறத்துடன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது. "இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதோடு, மனித இனம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ரோசாட் என்பது என்ன? ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது நட்சத்திரங்கள், கருந்துளைகள், விண்மீன் திரள்கள் போன்ற வான்பொருட்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இது இஸ்ரோவால், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் எடை சுமார் 1,515 கிலோ. அது பூமியில் இருந்து சுமார் 650கி.மீ. உயரத்தில் நிலைகொண்டு சுற்றி வருகிறது. ஒரே நேரத்தில் புறஊதாக் கதிர், எக்ஸ்-கதிர், காமா கதிர் எனப் பல வடிவங்களில் விண்வெளியைக் கவனிக்க முடியும் என்பது ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் தனிச்சிறப்பு. இந்தக் கதிர்களை வெறும் கண்களால் காண இயலாது என்றாலும், அவை பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன. விண்வெளியில் காணப்படும் வான் பொருட்களைப் படம் பிடிக்கவும், அவற்றின் பிரகாசம் மற்றும் நிறத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஆராயவும் உதவக் கூடிய ஐந்து கருவிகள் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியில் இருக்கின்றன. அவற்றின் உதவியுடன், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளை அவதானித்து, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு மற்றும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பன பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்திய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05ej664er5o

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 03:16 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழிகளில், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) புதிய எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்று புதிதாக எலும்புக்கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 7 நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுகள், நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல - 01” மற்றும் “இல - 02” என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 22வது நாளாக பணி முன்னெடுக்கப்பட்டது. கடந்த 7 நாட்களில் 36 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 101 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 95 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளுடன் இருந்த ஒரு பொலித்தீன் பை, மேலதிக ஆய்விற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221080

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

1 month 3 weeks ago
இது சரியான தகவல் அல்ல. "அம்மாள் வருத்தம்" என்று நாம் அழைக்கும் Pox வைரசுகளால் ஏற்படும் நோயை மனிதரில் உருவாக்கும் வைரஸ் குடும்பம், மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளிலும் மனிதரில் போன்றே பொக்களங்கள் போடும் நோயை உருவாக்குகிறது. பெரியம்மை (Smallpox) நோயை 80 களில் உலகில் இருந்து ஒழித்தார்கள். இந்த பெரியம்மை நோய் ஒழிப்பிற்குக் காரணமான முதலாவது தடுப்பூசி தயாரிக்கப் பட்டது, மாடுகளில் நோய் ஏற்படுத்தும் அம்மை நோய் (Cowpox) வைரசில் இருந்து தான். எனவே, 1980 ஓடு அம்மாள் மனிதர்களில் வருவதும் நின்று விட்டது!

இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர். 7 மணி நேரங்களுக்கு முன்னர் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும். ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர். கோனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான். கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 2 வீராங்கனைகள் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். திவ்யா தேஷ்முக், இந்த தொடரில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளார். உலக சாம்பியனுடன் போட்டியிடுவது யார் என்பது கேண்டிடேட்ஸ் தொடரில் தீர்மானிக்கப்படும். பட்டத்தை வெல்லப் போவது யார் ? ஹம்பிக்கும் திவ்யாவுக்கும் இடையில் பட்டத்தை வெல்வதற்கான போட்டி என்பது, இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது. திவ்யா தனக்கு எதிராக விளையாடப் போகும் ஹம்பியின் வயதில் பாதி வயதே உடையவர். அதாவது, ஹம்பிக்கு 38 வயது, திவ்யாவுக்கு 19 வயது. 2014-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட ஹம்பிக்கு , அஹானா என்ற மகள் உள்ளார். அஹானா பிறந்த பிறகு அவர் இரண்டு ஆண்டுகள் போட்டியில் இருந்து விலகி இருந்தார். ஹம்பி நீண்ட காலமாக சதுரங்க போட்டிகளில் விளையாடி வந்தாலும், அவரது மகள் பிறந்த பிறகுதான் அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2017 இல் அவரது மகள் பிறந்த பிறகு, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலக ரேபிட் செஸ் பட்டங்களை வென்றார் ஹம்பி. இப்போது சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் தருவாயில் உள்ளார். மோசமான சூழல் காரணமாக ஓய்வு பெற நினைக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதாகவும், அது தன்னை தொடர்ந்து விளையாடத் தூண்டுவதாகவும் கூறுகிறார் ஹம்பி . கடந்த வருடம் தனது 37 வயதில் ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் பெரிதாக வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், உலக ரேபிட் செஸ் பட்டத்தை வென்ற பிறகு, ஹம்பி தனது சதுரங்க பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்தார். ஹம்பி போராட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹம்பி 2002 ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனதன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இந்த சாதனையை 2008 ஆம் ஆண்டு சீனாவின் ஹூ யிஃபான் முறியடித்தார். கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளைத் தோற்கடித்தனர். ஆனால் திவ்யாவை எதிர்த்து வெற்றி பெற, ஹம்பி போராட வேண்டியிருந்தது. ஹம்பி தற்போதைய உலக ரேபிட் சாம்பியனாக உள்ளார். ஆனால் ஆரம்ப ரேபிட் ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாமல் சீனாவின் டிங்ஜி லீக்கு எதிராக தோல்வியடைந்தார். கடைசி ரேபிட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஹம்பி போட்டியை 'டை பிரேக்கர்ஸ்' எனப்படும் பிளிட்ஸ் ஆட்டங்களுக்கு கொண்டு சென்றார். இந்தப் போட்டிகளில் ஹம்பி முழு நம்பிக்கையுடன் விளையாடியதைக் காண முடிந்தது. இரண்டு ஆட்டங்களிலும் வென்ற ஹம்பி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு பொன்னான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திவ்யா தேஷ்முக் 2013 ஆம் ஆண்டு தனது ஏழு வயதில் சாதனை படைத்தார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு பேசிய கோனேரு ஹம்பி, "இந்திய சதுரங்க வரலாற்றுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் திவ்யா மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டி மிகவும் கடினமாக இருக்கும்" என்றார். மேலும் "டிங்ஜிக்கு எதிரான ரேபிட் செஸ் போட்டியின் ஆரம்பப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. என்னால் நன்றாக விளையாட முடியவில்லை. ஆனால் பிளிட்ஸ் விளையாட்டுகளில் நான் முழு நம்பிக்கையுடன் விளையாடினேன்" என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், கோனேரு ஹம்பி பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்றார். சாதனை படைத்த திவ்யா திவ்யாவின் சதுரங்கப் பயணம் சாதனைகளால் நிறைந்தது. அவர் 2013 ஆம் ஆண்டு 7 வயதில் பெண்கள் ஃபிடே (FIDE) மாஸ்டர் ஆனார். இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குச் சொந்தமானது. ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் திவ்யா பெற்றார். இதன் மூலம், 34 ஆண்டு வரலாற்றில் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார் திவ்யா . அது மட்டுமின்றி, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அவர் நெருங்கியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு அவருக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை. அவ்வாறு வெற்றி பெற்றால், கிராண்ட்மாஸ்டரான நான்காவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் திவ்யா படைப்பார். இதற்கு முன்பு, கோனேரு ஹம்பி, டி. ஹரிகா மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு ஆகியோர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய பெண்கள். திவ்யா சதுரங்க வீராங்கனையானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2012 ஆம் ஆண்டு தேசிய சதுரங்கப் போட்டியில் திவ்யா 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பட்டத்தை வென்றார். தற்செயலாகவே தாம் சதுரங்க வீராங்கனை ஆனதாக திவ்யா கூறுகிறார். "என் அக்கா பூப்பந்து விளையாடுவாள், என் பெற்றோர் அக்காவுடன் செல்வார்கள். அப்போது எனக்கு நான்கு-ஐந்து வயது இருக்கும், நானும் அவளுடன் செல்ல ஆரம்பித்தேன். நானும் பூப்பந்து விளையாட முயற்சித்தேன், ஆனால் வலையை கூட எட்ட முடியவில்லை. அதே ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அதனைப் பார்க்கத் தொடங்கினேன்" என்று திவ்யா தெரிவித்தார். சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும் ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். திவ்யாவின் சகோதரி சிறிது காலத்திற்குப் பிறகு பூப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார், ஆனால் அவரது அர்ப்பணிப்பால், திவ்யா இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் எட்டாத நிலையை அடையப் போகிறார். சதுரங்கத்தின் மீதான திவ்யாவின் ஆர்வத்தைக் கண்டு, அவரது தந்தை ஜிதேந்திராவும் தாய் நம்ரதாவும் நாக்பூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சதுரங்க அகாடமியில் அவரது பெயரைப் பதிவு செய்தனர். இரண்டு வருட பயிற்சியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய திவ்யா, 2012 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பட்டம் வென்றார். இதன் பிறகு, திவ்யாவுக்கு வெற்றிமேல் வெற்றிதான். அதன் நீட்சியாக, சர்வதேச சதுரங்க அரங்கில் பிரகாசிக்கத் தொடங்கினார். 'ஆனந்தின் குறிப்புகள் எனக்கு சரியான திசையைக் கண்டறிய உதவின' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சாதனை திவ்யாவுக்கு மிகப்பெரியது என்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். 2020 ஆம் ஆண்டு வாக்கில், இந்திய ஒலிம்பியாட் அணியின் உறுப்பினரான திவ்யா, நாட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்பட்டார். இதனால் விளைந்த நன்மையாக, விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து அவருக்கு தொடர்ந்து குறிப்புகள் கிடைக்கத் தொடங்கின. அவரது விளையாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், அவர் முதலில் 2023 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். பின்னர் சர்வதேச மாஸ்டர் ஆனார். இப்போது அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் தருவாயில் இருக்கிறார். "இது ஒரு மிகப்பெரிய சாதனை. உண்மை என்னவென்றால், அவர் ஜு ஜினர், டான் சோங்ஜி மற்றும் ஹரிகா போன்ற சிறந்த வீராங்கனைகளை தோற்கடித்துள்ளார். திவ்யா சிறந்த ஆற்றல் கொண்ட வீராங்கனை. எனவே இது எதிர்பாராதது அல்ல. மக்கள் இதை அவரிடமிருந்து எதிர்பார்த்தனர், அதை அவர் நிரூபித்துள்ளார்" என்று திவ்யாவைப் பற்றி விஸ்வநாதன் ஆனந்த் கூறுகிறார். இந்திய சதுரங்கத்தின் பொற்காலம் கடந்த சில வருடங்களாக இந்திய சதுரங்கம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. விஸ்வநாதன் ஆனந்த் பல முறை உலகளவில் பட்டங்களை வென்று சதுரங்க உலகில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளார் என்பது உண்மை தான். கடந்த ஆண்டு, இந்திய சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக, டி. குகேஷ், அர்ஜுன் எரிகேசி, ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் ஆகிய நான்கு வீரர்கள் உலக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் வந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக இரட்டை தங்கம் வென்றது. அப்போது, ஆனந்துக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை டி. குகேஷ் பெற்றார். இப்போது திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் புதிய வரலாற்றை உருவாக்கும் தருணம். 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இருவரும் இன்று மீண்டும் மோதுகிறார்கள். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். மாறாக ஆட்டம் டிராவில் முடிந்தால், டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். யார் வெற்றி பெற்றாலும், இந்தியா நிச்சயமாக தலை நிமிர்ந்து நிற்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyrg2jrp9eo

இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை

1 month 3 weeks ago

கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

கட்டுரை தகவல்

  • மனோஜ் சதுர்வேதி

  • பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்.

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும்.

ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கோனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான்.

கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 2 வீராங்கனைகள் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். திவ்யா தேஷ்முக், இந்த தொடரில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளார்.

உலக சாம்பியனுடன் போட்டியிடுவது யார் என்பது கேண்டிடேட்ஸ் தொடரில் தீர்மானிக்கப்படும்.

பட்டத்தை வெல்லப் போவது யார் ?

ஹம்பிக்கும் திவ்யாவுக்கும் இடையில் பட்டத்தை வெல்வதற்கான போட்டி என்பது, இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

திவ்யா தனக்கு எதிராக விளையாடப் போகும் ஹம்பியின் வயதில் பாதி வயதே உடையவர். அதாவது, ஹம்பிக்கு 38 வயது, திவ்யாவுக்கு 19 வயது.

2014-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட ஹம்பிக்கு , அஹானா என்ற மகள் உள்ளார். அஹானா பிறந்த பிறகு அவர் இரண்டு ஆண்டுகள் போட்டியில் இருந்து விலகி இருந்தார்.

ஹம்பி நீண்ட காலமாக சதுரங்க போட்டிகளில் விளையாடி வந்தாலும், அவரது மகள் பிறந்த பிறகுதான் அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

2017 இல் அவரது மகள் பிறந்த பிறகு, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலக ரேபிட் செஸ் பட்டங்களை வென்றார் ஹம்பி.

இப்போது சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் தருவாயில் உள்ளார்.

மோசமான சூழல் காரணமாக ஓய்வு பெற நினைக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதாகவும், அது தன்னை தொடர்ந்து விளையாடத் தூண்டுவதாகவும் கூறுகிறார் ஹம்பி .

கடந்த வருடம் தனது 37 வயதில் ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் பெரிதாக வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், உலக ரேபிட் செஸ் பட்டத்தை வென்ற பிறகு, ஹம்பி தனது சதுரங்க பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஹம்பி போராட்டம்

ஹம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹம்பி 2002 ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனதன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இந்த சாதனையை 2008 ஆம் ஆண்டு சீனாவின் ஹூ யிஃபான் முறியடித்தார்.

கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளைத் தோற்கடித்தனர்.

ஆனால் திவ்யாவை எதிர்த்து வெற்றி பெற, ஹம்பி போராட வேண்டியிருந்தது.

ஹம்பி தற்போதைய உலக ரேபிட் சாம்பியனாக உள்ளார். ஆனால் ஆரம்ப ரேபிட் ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாமல் சீனாவின் டிங்ஜி லீக்கு எதிராக தோல்வியடைந்தார்.

கடைசி ரேபிட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஹம்பி போட்டியை 'டை பிரேக்கர்ஸ்' எனப்படும் பிளிட்ஸ் ஆட்டங்களுக்கு கொண்டு சென்றார்.

இந்தப் போட்டிகளில் ஹம்பி முழு நம்பிக்கையுடன் விளையாடியதைக் காண முடிந்தது. இரண்டு ஆட்டங்களிலும் வென்ற ஹம்பி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு பொன்னான வாய்ப்பு

திவ்யா தேஷ்முக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திவ்யா தேஷ்முக் 2013 ஆம் ஆண்டு தனது ஏழு வயதில் சாதனை படைத்தார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு பேசிய கோனேரு ஹம்பி, "இந்திய சதுரங்க வரலாற்றுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் திவ்யா மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டி மிகவும் கடினமாக இருக்கும்" என்றார்.

மேலும் "டிங்ஜிக்கு எதிரான ரேபிட் செஸ் போட்டியின் ஆரம்பப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. என்னால் நன்றாக விளையாட முடியவில்லை. ஆனால் பிளிட்ஸ் விளையாட்டுகளில் நான் முழு நம்பிக்கையுடன் விளையாடினேன்" என்றும் கூறினார்.

கோனேரு ஹம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், கோனேரு ஹம்பி பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்றார்.

சாதனை படைத்த திவ்யா

திவ்யாவின் சதுரங்கப் பயணம் சாதனைகளால் நிறைந்தது.

அவர் 2013 ஆம் ஆண்டு 7 வயதில் பெண்கள் ஃபிடே (FIDE) மாஸ்டர் ஆனார். இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குச் சொந்தமானது.

ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் திவ்யா பெற்றார்.

இதன் மூலம், 34 ஆண்டு வரலாற்றில் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார் திவ்யா .

அது மட்டுமின்றி, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அவர் நெருங்கியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு அவருக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.

அவ்வாறு வெற்றி பெற்றால், கிராண்ட்மாஸ்டரான நான்காவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் திவ்யா படைப்பார்.

இதற்கு முன்பு, கோனேரு ஹம்பி, டி. ஹரிகா மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு ஆகியோர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய பெண்கள்.

திவ்யா சதுரங்க வீராங்கனையானது எப்படி?

சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும்  ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2012 ஆம் ஆண்டு தேசிய சதுரங்கப் போட்டியில் திவ்யா 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பட்டத்தை வென்றார்.

தற்செயலாகவே தாம் சதுரங்க வீராங்கனை ஆனதாக திவ்யா கூறுகிறார்.

"என் அக்கா பூப்பந்து விளையாடுவாள், என் பெற்றோர் அக்காவுடன் செல்வார்கள். அப்போது எனக்கு நான்கு-ஐந்து வயது இருக்கும், நானும் அவளுடன் செல்ல ஆரம்பித்தேன். நானும் பூப்பந்து விளையாட முயற்சித்தேன், ஆனால் வலையை கூட எட்ட முடியவில்லை. அதே ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அதனைப் பார்க்கத் தொடங்கினேன்" என்று திவ்யா தெரிவித்தார்.

சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும் ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

திவ்யாவின் சகோதரி சிறிது காலத்திற்குப் பிறகு பூப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார், ஆனால் அவரது அர்ப்பணிப்பால், திவ்யா இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் எட்டாத நிலையை அடையப் போகிறார்.

சதுரங்கத்தின் மீதான திவ்யாவின் ஆர்வத்தைக் கண்டு, அவரது தந்தை ஜிதேந்திராவும் தாய் நம்ரதாவும் நாக்பூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சதுரங்க அகாடமியில் அவரது பெயரைப் பதிவு செய்தனர்.

இரண்டு வருட பயிற்சியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய திவ்யா, 2012 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பட்டம் வென்றார்.

இதன் பிறகு, திவ்யாவுக்கு வெற்றிமேல் வெற்றிதான். அதன் நீட்சியாக, சர்வதேச சதுரங்க அரங்கில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

'ஆனந்தின் குறிப்புகள் எனக்கு சரியான திசையைக் கண்டறிய உதவின'

விஸ்வநாதன் ஆனந்த்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த சாதனை திவ்யாவுக்கு மிகப்பெரியது என்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

2020 ஆம் ஆண்டு வாக்கில், இந்திய ஒலிம்பியாட் அணியின் உறுப்பினரான திவ்யா, நாட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.

இதனால் விளைந்த நன்மையாக, விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து அவருக்கு தொடர்ந்து குறிப்புகள் கிடைக்கத் தொடங்கின.

அவரது விளையாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், அவர் முதலில் 2023 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். பின்னர் சர்வதேச மாஸ்டர் ஆனார்.

இப்போது அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் தருவாயில் இருக்கிறார்.

"இது ஒரு மிகப்பெரிய சாதனை. உண்மை என்னவென்றால், அவர் ஜு ஜினர், டான் சோங்ஜி மற்றும் ஹரிகா போன்ற சிறந்த வீராங்கனைகளை தோற்கடித்துள்ளார். திவ்யா சிறந்த ஆற்றல் கொண்ட வீராங்கனை. எனவே இது எதிர்பாராதது அல்ல. மக்கள் இதை அவரிடமிருந்து எதிர்பார்த்தனர், அதை அவர் நிரூபித்துள்ளார்" என்று திவ்யாவைப் பற்றி விஸ்வநாதன் ஆனந்த் கூறுகிறார்.

இந்திய சதுரங்கத்தின் பொற்காலம்

கடந்த சில வருடங்களாக இந்திய சதுரங்கம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் பல முறை உலகளவில் பட்டங்களை வென்று சதுரங்க உலகில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளார் என்பது உண்மை தான்.

கடந்த ஆண்டு, இந்திய சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக, டி. குகேஷ், அர்ஜுன் எரிகேசி, ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் ஆகிய நான்கு வீரர்கள் உலக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக இரட்டை தங்கம் வென்றது. அப்போது, ஆனந்துக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை டி. குகேஷ் பெற்றார்.

இப்போது திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் புதிய வரலாற்றை உருவாக்கும் தருணம்.

'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இருவரும் இன்று மீண்டும் மோதுகிறார்கள். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். மாறாக ஆட்டம் டிராவில் முடிந்தால், டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

யார் வெற்றி பெற்றாலும், இந்தியா நிச்சயமாக தலை நிமிர்ந்து நிற்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyrg2jrp9eo

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

1 month 3 weeks ago
27 JUL, 2025 | 01:19 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திர சிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று சனிக்கிழமை (26) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஓட்டுண்ணியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. முருகானந்தன், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். குமரன் மற்றும் சத்திர சிகிச்சையியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கோபிசங்கர் ஆகியாரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் ஆடிப்படையிலேயே கலாநிதி ஏ. முருகானந்தன் ஓட்டுண்ணியலில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். குமரன் குடும்ப மருத்துவத்தில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். கோபிசங்கர் சத்திர சிகிச்சையியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221065

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

1 month 3 weeks ago

27 JUL, 2025 | 01:19 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திர சிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று சனிக்கிழமை (26) ஒப்புதல் வழங்கியது.  

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஓட்டுண்ணியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி ஏ. முருகானந்தன், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். குமரன் மற்றும் சத்திர சிகிச்சையியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்  கலாநிதி எஸ். கோபிசங்கர் ஆகியாரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.  

அவற்றின் ஆடிப்படையிலேயே கலாநிதி ஏ. முருகானந்தன் ஓட்டுண்ணியலில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். குமரன் குடும்ப மருத்துவத்தில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். கோபிசங்கர்  சத்திர சிகிச்சையியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/221065

'கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே மனித புதைகுழிகள் வெளிப்படுத்தியுள்ளன" - செம்மணி மனித புதைகுழி அகழ்வை பார்வையிட்ட கஜேந்திரகுமார்

1 month 3 weeks ago
Published By: RAJEEBAN 27 JUL, 2025 | 11:28 AM கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம். அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்தி இது கிருஷாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சோமரட்ண ராஜபக்ச எரிச்சலால், அரசாங்கத்தின் மீதான கோபத்தில் சொன்ன பொய் என்ற கோணத்தில் உலகையே நம்பவைத்ததுதான் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் காணப்படுகின்றது. போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதியிலே இடம்பெற்ற இனஅழிப்பை கூட மூடிமறைத்து ஒரு உள்ளக விசாரணை என்ற பெயரிலே, அதனையும் படிப்படியாக குறைத்து அதனையும் உண்மையும், நல்லிணக்க ஆணைக்குழுவுடன், எந்தவித குற்றவியல் விசாரணைகளையும் நடத்தாமல் மூடிமறைப்பதை தான் மாறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் செய்துகொண்டிருந்தது. முற்றுமுழுதாக மறைப்பதற்கான ஒரு முயற்சியை சர்வதேச சமூகமும் சேர்ந்து செய்து வந்த செயலில்தான் இந்த செம்மணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை செம்மணி கண்டுபிடிப்பு இரண்டு விடயங்களிற்கு முக்கியமானது. ஒன்று இன அழிப்பிற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம், கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது . அது ஒரு குறிப்பிட்ட சம்பவம் மாத்திரமல்ல, அது தொடர்ச்சியாக காலம்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. செம்மணியொன்று, முல்லைத்தீவிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, மன்னார் இவை எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் , கூட்டாக அழிக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் மனோநிலையையே இவை வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் விசாரணைகளை இறுதிப்போரின் இறுதிகாலகட்டத்துடன் மட்டுப்படுத்த முயல்கின்ற நிலையில் செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது, நீதியானது இல்லை என்பதை சொல்லிநிற்கின்றது, நிரூபித்திருக்கின்றது. அனைத்து கோணங்களிலும் நாங்கள் பார்க்கின்ற போது தமிழர்களின் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தேடுகின்ற இந்த போராட்டத்தினை நாங்கள் அவதானிக்கின்ற போது செம்மணி ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும். உண்மையிலேயே நாங்கள் கிருபாகரனிற்கும் நன்றி சொல்லவேண்டும். அவர் இந்த விடயத்தை எங்களிற்கு சொன்னது மாத்திரமல்ல, அவர் அரியாலை பகுதியை சார்ந்தவர் என்ற அடிப்படையிலே அந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற அடிப்படையில் இது செம்மணியின் ஒரு அங்கம் என்பதை எங்களிடம் ஆணித்தரமாக சொன்ன இடத்தில்தான் அவர் அந்தவிடயத்தை எடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்து - தனக்கு எத்தனையோ அச்சுறுத்தல் வரக்கூடிய நிலையில்தான் அவர் இதனை செய்தவர். அதன் இன்னுமொரு பரிமாணமாக நாங்கள் இந்த செம்மணியின் முழுமையான விசாரணையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்வதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம். https://www.virakesari.lk/article/221051

'கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே மனித புதைகுழிகள் வெளிப்படுத்தியுள்ளன" - செம்மணி மனித புதைகுழி அகழ்வை பார்வையிட்ட கஜேந்திரகுமார்

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN

27 JUL, 2025 | 11:28 AM

image

கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன.

இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம்.

அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை பயன்படுத்தி இது கிருஷாந்தி குமாரசுவாமி கொலைவழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சோமரட்ண ராஜபக்ச எரிச்சலால், அரசாங்கத்தின் மீதான கோபத்தில் சொன்ன பொய் என்ற கோணத்தில் உலகையே நம்பவைத்ததுதான் அன்றைய காலத்திலிருந்து இன்றுவரைக்கும் காணப்படுகின்றது.

போர் நடைபெற்ற கடைசிக்காலப்பகுதியிலே இடம்பெற்ற இனஅழிப்பை கூட மூடிமறைத்து ஒரு உள்ளக விசாரணை என்ற பெயரிலே, அதனையும் படிப்படியாக குறைத்து அதனையும் உண்மையும், நல்லிணக்க ஆணைக்குழுவுடன், எந்தவித குற்றவியல் விசாரணைகளையும் நடத்தாமல் மூடிமறைப்பதை தான் மாறிவந்த ஒவ்வொரு அரசாங்கமும் செய்துகொண்டிருந்தது.

முற்றுமுழுதாக மறைப்பதற்கான ஒரு முயற்சியை சர்வதேச சமூகமும் சேர்ந்து செய்து வந்த செயலில்தான் இந்த செம்மணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தவரை செம்மணி கண்டுபிடிப்பு இரண்டு விடயங்களிற்கு முக்கியமானது.

ஒன்று இன அழிப்பிற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம், கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது .

அது ஒரு குறிப்பிட்ட சம்பவம் மாத்திரமல்ல, அது தொடர்ச்சியாக காலம்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

செம்மணியொன்று, முல்லைத்தீவிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி, மன்னார் இவை எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் , கூட்டாக அழிக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் மனோநிலையையே இவை வெளிப்படுத்தியுள்ளன.

சர்வதேச சமூகம் விசாரணைகளை இறுதிப்போரின் இறுதிகாலகட்டத்துடன் மட்டுப்படுத்த முயல்கின்ற நிலையில் செம்மணி மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட  அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணைகளை மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது, நீதியானது இல்லை என்பதை சொல்லிநிற்கின்றது, நிரூபித்திருக்கின்றது.

அனைத்து கோணங்களிலும் நாங்கள் பார்க்கின்ற போது தமிழர்களின் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை தேடுகின்ற இந்த போராட்டத்தினை நாங்கள் அவதானிக்கின்ற போது செம்மணி ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும்.

உண்மையிலேயே நாங்கள் கிருபாகரனிற்கும் நன்றி சொல்லவேண்டும்.

அவர் இந்த விடயத்தை எங்களிற்கு சொன்னது மாத்திரமல்ல, அவர் அரியாலை பகுதியை சார்ந்தவர் என்ற அடிப்படையிலே அந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற அடிப்படையில் இது செம்மணியின் ஒரு அங்கம் என்பதை எங்களிடம் ஆணித்தரமாக சொன்ன இடத்தில்தான் அவர் அந்தவிடயத்தை எடுத்து பொலிஸிற்கு முறைப்பாடு செய்து - தனக்கு எத்தனையோ அச்சுறுத்தல் வரக்கூடிய நிலையில்தான் அவர் இதனை செய்தவர்.

அதன் இன்னுமொரு பரிமாணமாக நாங்கள் இந்த செம்மணியின் முழுமையான விசாரணையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்வதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் நாங்கள் எங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்.

https://www.virakesari.lk/article/221051

நாகப்பாம்பை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை : ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டது கட்டுரை தகவல் சீடூ திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர். கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த வித்தியாசமான சம்பவம், பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைநகர் பெட்டியாவில் நடைபெற்றது. பெட்டியாவின் மஜ்ஹௌலியா தொகுதியில் மோச்சி பங்கட்வா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், சுனில் ஷா என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சுனில் ஷாவின் ஒரு வயது மகன் கோவிந்த் குமார், இந்த குழந்தை தான் பாம்பைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. கோவிந்த் குமாரின் பாட்டி மதிசரி தேவி கூறுகையில், "கோவிந்தின் அம்மா வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்தார். விறகுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது விறகுகளுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்தது. அங்கே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த கோவிந்த் பாம்பைப் பார்த்ததும், அதைப் பிடித்து கடித்துவிட்டான். அப்போதுதான் நாங்கள் அதைக் கவனித்தோம். அது ஒரு நாகப்பாம்பு." "பாம்பை பிடித்து கடித்த சிறிது நேரத்தில் குழந்தை கோவிந்துக்கு மயக்கம் வந்துவிட்டது. நாங்கள் குழந்தையை உடனடியாக மஜௌலியா ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெட்டியா மருத்துவமனைக்கு (அரசு மருத்துவக் கல்லூரி, GMCH) அனுப்பி வைத்தார்கள். குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது." மஞ்சோலியாவின் உள்ளூர் பத்திரிகையாளர் நயாஸ் கூறுகையில், "மருத்துவமனையில் இருந்து அந்தக் குழந்தை சனிக்கிழமை (2025, ஜூலை 26) மாலை வீடு திரும்பியது. இந்த அதிசய சம்பவத்தைப் பற்றி தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. ஆடி மாதத்தில் பாம்புகள் வெளியே வருவது வழக்கம், அப்போது பாம்புக் கடி தொடர்பான சம்பவங்களும் நடைபெறும். ஆனால் இதுபோன்ற சம்பவம் எங்கள் பகுதியில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு,பாம்பைக் கடித்த குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது காரணம் என்ன? குழந்தை கோவிந்த் குமார் சம்பவத்தன்று (2025, ஜூலை 24) மாலை பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குமார் சௌரப், குழந்தை மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். "குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தபோது, குழந்தையின் முகம் வீங்கியிருந்தது. அதிலும் வாயைச் சுற்றி நன்றாகவே வீக்கம் இருந்தது. பாம்பை, அதன் வாய்க்கு அருகில் கடித்த குழந்தை, பாம்பின் ஒரு சிறு பகுதியை சாப்பிட்டுவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்," என்று அவர் கூறுகிறார். "அந்த சமயத்தில் என்முன் இரண்டு குழந்தை நோயாளிகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை நாகப்பாம்பை கடித்துவிட்டது, அடுத்து மற்றொரு குழந்தையை நச்சுள்ள பாம்பு கடித்துவிட்டது. இருவேறு விதமான சிகிச்சை அளித்த மறக்கமுடியாத சந்தர்ப்பம் அது. சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளனர்." "ஒரு நாகப்பாம்பு மனிதனைக் கடிக்கும்போது, அதன் நச்சு நம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் நுழையும் விஷம் நியூரோடாக்சிசிட்டியை ஏற்படுத்துகிறது, இது நமது நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று டாக்டர் குமார் சௌரப் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,கோப்புப்படம் "மனிதன் விஷமுள்ள பாம்பைக் கடிக்கும்போது, அதன் நச்சு வாய் வழியாக நமது செரிமான அமைப்பை நேரடியாக சென்றடைகிறது. மனித உடல் அந்த விஷத்தை நடுநிலையாக்கி நச்சை வெளியேறுகிறது. அதாவது, மனிதர்களை பாம்பு கடித்தாலும், மனிதன் பாம்பைக் கடித்தாலும், இரு சந்தர்பங்களிலும் விஷம் வேலை செய்யும். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, மற்றொன்றில் மனித உடல் விஷத்தை நடுநிலையாக்குகிறது" என்று மருத்துவர் சௌரப் விளக்கமளித்தார். இருப்பினும், ஒரு மனிதன் பாம்பைக் கடித்தால், அது மோசமான விளைவையும் ஏற்படுத்தலாம் என்று டாக்டர் குமார் சௌரப் கூறுகிறார். "ஒரு மனிதன் பாம்பைக் கடிக்கும்போது, அவரின் உணவுக் குழாயில் அல்சர் போன்ற பிரச்னை இருந்தால் அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் நிலைமை மோசமடையக்கூடும்" என்று டாக்டர் குமார் சௌரப் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மழைக்காலத்தில் பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் 'பாம்புக் கடி தலைநகரம்' மழைக்காலத்தில் பாம்புக் கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர். இவற்றில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதன் காரணமாக, இந்தியா 'உலகின் பாம்பு தலைநகரம்' என்ற குறிச்சொல்லைப் பெற்றுள்ளது. பீகார் மாநில சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) தரவுகளின்படி, ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை, பாம்பு கடியால் மாநிலத்தில் 934 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், பாம்புக் கடி காரணமாக 17,859 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர். ஆனால் மத்திய அரசின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 'குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது'. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்களில், மிகக் குறைந்த அளவிலான நோயாளிகளே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகிறது. மேலும், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளில் 70 சதவீதம் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyl8q4rypo

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 3 weeks ago
இப்படியல்லாம் படித்திருக்கிறான் , கணக்கு வாத்தியாருக்குத்தான் ஒன்னும் புரியல்ல ....... பெயிலாக்கிப் போட்டார் ....... ! 😀

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
தாய்லாந்து - கம்போடியா மோதலின் மையமாக உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான 'சிவன் கோவில்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில் 26 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025 தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ மோதலில் இதுவரை குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை (2025, ஜூலை 25) காலை முதல் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. கம்போடியாவின் ராணுவ தளத்தின் மீது வான்வழி குண்டுவீச்சு நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளான தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது. இந்த சிக்கலானது, 2008ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஒன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்றபோது பதற்றமாக மாறியது. சிவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக மாற்றுவதற்கு தாய்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டதில், இரு தரப்பிலும் பல வீரர்களும் பொதுமக்களும் இறந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தன. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தாய்லாந்திலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதை கம்போடியா தடை செய்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் துண்டித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைபலத்தை அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Play video, "தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் ஏன்? அடுத்து என்ன நடக்கும்?", கால அளவு 3,25 03:25 காணொளிக் குறிப்பு, சிவன் கோவிலின் ஆயிரம் ஆண்டு வரலாறு கம்போடியாவின் சமவெளிகளில் உயரமான பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ள ப்ரே விஹார் கோயில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்கிறது யுனெஸ்கோ. இந்தக் கோவில் கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. 11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தின் பிரதான கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டில் அங்கு உருவாக்கப்பட்ட துறவி மடம் ஒன்றே பிற்காலத்தில் மிகப்பெரிய ஆலயமாக கட்டப்பட்டது என்று ஆலய வரலாறு கூறுகிறது. தொலைதூர இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் செதுக்கப்பட்ட கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ப்ரே விஹார் கோவில் தகராறில் சர்வதேச நீதிமன்றம் 1962 ஜூன் 15 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. தனது பிரதேசத்தில் ப்ரே விஹார் கோவில் இடிபாடுகள் இருக்கும் ஒரு பகுதியை தாய்லாந்து ஆக்கிரமித்துள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் கம்போடியா புகார் அளித்திருந்தது. இந்த இடம், கம்போடிய மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கியமான மதத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தக் கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து முடிவெடுக்கவும், 1954 முதல் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தாய்லாந்து படைகளை திரும்பப் பெற உத்தரவிட கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது கம்போடியா. நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு எதிராக தாய்லாந்து முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்தது, அவை நீதிமன்றத்தால் 1961 மே 26 அன்று நிராகரிக்கப்பட்டன. 1962 ஜூன் 15 அன்று அதன் இறுதித் தீர்ப்பில், 1904 ஆம் ஆண்டு பிராங்கோ-சியாமிஸ் ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய பகுதியை நீர்நிலைக் கோட்டின்படி வரையறுத்ததாகக் கூறியது. மேலும் கூட்டு எல்லை நிர்ணய ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வரைபடம், கம்போடியாவின் எல்லைக்குள் கோயிலைக் காட்டியது. இந்த வரைபடத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தாய்லாந்து வாதிட்டது. மேலும், ''இந்த வரைபடத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை வரைபடத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அது தவறான எண்ணத்திலேயே செய்யப்பட்டிருக்கும்'' என்று தாய்லாந்து வாதிட்டது இருப்பினும், தாய்லாந்து உண்மையிலுமே அந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டதாகவும், கோயில் கம்போடிய எல்லைக்குள் அமைந்துள்ளது என்றும் நீதிமன்றம் முடிவு செய்தது. அத்துடன், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவ அல்லது காவல்துறை துருப்புக்கள் அனைத்தையும் தாய்லாந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், 1954க்குப் பிறகு ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்ட அனைத்தையும் கம்போடியாவிற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய மோதல் போராக மாறக்கூடும் என்று தாய்லாந்து எச்சரிக்கிறது எச்சரிக்கை விடுத்த தாய்லாந்து - காரணம் என்ன? எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, கம்போடியாவிலிருந்து தனது தூதரை தாய்லாந்து திரும்ப அழைத்துக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வியாழக்கிழமை, தாய்லாந்தும் கம்போடியாவும் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. எல்லைக்கு அருகே தாய்லாந்து துருப்புக்களைக் கண்காணிக்க கம்போடிய ராணுவம் டிரோன்களை நிறுத்தியபோது மோதல் தொடங்கியதாக தாய்லாந்து கூறுகிறது. தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் 'போராக உருவெடுக்கக்கூடும்' என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கம்போடியா ஷெல் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. ராக்கெட்டுகள் வீசப்படும் எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களையும் காலி செய்துள்ளது. பொதுமக்கள் மீது கிளஸ்டர் வெடிமருந்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிளஸ்டர் வெடிமருந்துகளைப் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் தாய்லாந்து கிளஸ்டர் வெடிமருந்துகளை பயன்படுத்துவதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாய்லாந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியை காக்க வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச நாடுகள் "விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்" என இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. "தாய்லாந்து-கம்போடியா எல்லையில் வன்முறை அதிகரிப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் கவலைகளை அதிகரிக்கின்றன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் வழக்கமான ஊடக சந்திப்பு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். கம்போடியா மற்றும் தாய்லாந்துடன் அரசியல் மற்றும் உத்தி ரீதியிலான உறவுகளைக் கொண்டுள்ள சீனா, மோதல் குறித்து "ஆழ்ந்த கவலை" கொண்டிருப்பதாகக் கூறியது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இரு நாடுகளிடமும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c741j3pyeldo

இலங்கையில் முதல் அணுமின் நிலையத்திற்கான 5 தளங்கள்

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 11:30 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழுவில் பல்கேரியா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் உள்ளடங்கியுள்ளனர். அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் குறிப்பிட்டது. குறிப்பாக, உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கியுள்ளது. மேலும் 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது. இலங்கையின் அணுசக்தி முயற்சி முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அணுசக்தித் திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எரிசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி அதிகாரச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை மன்றம் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221050

இலங்கையில் முதல் அணுமின் நிலையத்திற்கான 5 தளங்கள்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

27 JUL, 2025 | 11:30 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழுவில் பல்கேரியா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் குறிப்பிட்டது. குறிப்பாக, உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும்  உருவாக்கியுள்ளது. மேலும் 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது.

இலங்கையின் அணுசக்தி முயற்சி முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில்  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அணுசக்தித் திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எரிசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி அதிகாரச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை மன்றம் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221050

இந்தியப் பெருங்கடல் அமைதிக்கான பிராந்தியம் - ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவுரை

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 12:41 PM (லியோ நிரோஷ தர்ஷன்) தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அவற்றால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை விவரித்த அவர், உலகளாவிய மோதல்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்டார். தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது என்றார். மேலும், சமீபத்திய ஈரானிய-இஸ்ரேலிய மோதலைக் குறிப்பிட்ட அவர், எமது பிராந்தியத்திற்குள் ஊடுறுவி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எந்தவொரு நாடும் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதோ அல்லது கையாள்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல. அணு ஆயுதப் பரவல் தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு, 'அவ்வாறானதொரு நிலையில் ஈரான் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே ஈரான் மீது தீர்மானத்தை எடுத்தது யார்?' எனக் கேள்வி எழுப்பினார். இது, சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான அல்லது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டையும், பிராந்திய இறைமை குறித்த அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் வர்த்தகச் சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க அடிகோடிட்டு காட்டினார். அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டிய சூழலில் உள்ளன. இது, இலங்கையும் அமெரிக்காவுடன் வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். வர்த்தகத் தடைகள் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்பதையும், புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்துக்கள், உலகளாவிய மோதல்கள், அணு ஆயுதப் பரவல் மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் ஆகியவை இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இலங்கையின் வெளிப்படையான கவலைகளை பிரதிபலிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதி மண்டலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் உள்ளது. https://www.virakesari.lk/article/221041