Aggregator

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

1 month 3 weeks ago
அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே? இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடும் பாரத் அணி 86 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்துள்ளது! இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்சை விட 225 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இருப்பது 4 செஸன்கள் அதாவது கிட்டத்தட்ட 120 ஓவர்கள். இந்த 225 ஓட்டங்களை ஓவருக்கு 4 ஓட்டங்கள் படி அடித்தாலும் 2 செஸன்கள் தேவை நாளை மதியம் வரை ஆடவேண்டும். மீதம் இருக்கும் இரண்டு செஸன்களில் ஒரு செஸன் ஆடி ஒரு 100 ஓட்டங்கள் லீட் எடுத்தாலும் பாரத் வெல்ல முடியாது. 30 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தின் 10 விக்கட்டுகளையும் வீழ்த்த முடியாது!

யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது

1 month 3 weeks ago
26 JUL, 2025 | 05:08 PM யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221007 NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.

யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது

1 month 3 weeks ago

26 JUL, 2025 | 05:08 PM

image

யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். 

பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர்.

அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் 

சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர். 

கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

4__1_.jpg

4__3_.jpg

https://www.virakesari.lk/article/221007

NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.

காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

1 month 3 weeks ago
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது. வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது. காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின. "காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர். மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர். "பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார். "என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார். "ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார். அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார். 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது. பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது. அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo

காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

1 month 3 weeks ago

காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு

காஸா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

கட்டுரை தகவல்

  • மையா டேவிஸ்

  • பிபிசி செய்திகள்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது.

வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார்.

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பல நாட்களாக உணவின்றி தவிக்கின்றனர் என்று எச்சரித்துள்ள ஐ.நா.

பட மூலாதாரம்,REUTERS

காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது.

காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின.

"காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர்.

மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.

"பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார்.

காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பல நாட்களாக உணவின்றி தவிக்கின்றனர் என்று எச்சரித்துள்ள ஐ.நா.

பட மூலாதாரம்,EPA

2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார்.

"என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார்.

"ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார்.

அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார்.

2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது.

மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது.

பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.

காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது.

அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

1 month 3 weeks ago
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டம் அறிமுகம் 24 July 2025 கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்: * கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: "ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார். * க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். * அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். * வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். * ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். * முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். * ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஊடகப் பிரிவு https://tamil.news.lk/current-affairs/kalviyai-alavitum-parampariyap-paritcai-muraikku-marraka-tokuti-murai-module-kalvit-tittattai-arimukam

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

1 month 3 weeks ago
கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் செம்மணியை அணுகவேண்டும் - உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 26 JUL, 2025 | 08:00 PM கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என்ற பார்வை எனக்கு இருக்கின்றது. 300 முதல் 600 வரையிலான பேரை கொலை செய்து எங்களிடம் மேலதிகாரிகள் தருவார்கள் - தந்தார்கள், இங்கு கொண்டுவந்து அவர்களை புதைத்திருக்கின்றோம் என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் சர்வதே மன்னிப்புச்சபை போன்றன மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 99ம் ஆண்டு வரையிலே அகழ்வு பணியை மேற்கொண்டு சுமார் 19 எலும்புக்கூடுகளை அப்போதே கண்டுபிடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி இன்று கட்டிடங்களிற்கான அகழ்வு வேலை இடம்பெற்றபோது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கான வழக்குதொடுக்கப்பட்டு பின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்றுவரை 90 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு இனஅழிப்பின் சான்றாக, ஒரு இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் பார்க்கவேண்டும் - பல சிங்கள சகோதரர்கள் எங்களுடன் பேசும்போது, தர்க்கம் செய்யும்போது விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள். அதுவல்ல இங்கு பிரச்சினை, விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது, பாதுகாப்பு படையினர் என்ற பெயரிலே மக்களை பாதுகாக்க வந்தவர்கள் கொலை செய்திருந்தால், அது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டிலே இராணுவீரர்கள் வெற்றிவீரர்களாக அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதேநாட்டின் பிரஜைகளை கொன்றொழித்தவர்களை எவ்வாறு வெற்றிவீரர்களாக கொண்டாடுவது என்ற கேள்வி ஒரு சமூகத்திற்கு இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் சோமரட்ண ராஜபக்ச உயிரோடு இருக்கின்றார், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள், அவர்களிற்கு எல்லாம் தலைமை தாங்ககூடிய, முப்படை தளபதியாக இன்றைய ஜனாதிபதியிருக்கின்றார், எனவே இதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இந்த பாரிய குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், இதற்காக உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை என தமிழ் மக்களாகிய நாங்கள் உணர்கின்றோம், இங்கிருக்கும் மலையக சகோதரர்கள் அதனை உணர்கின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதி விசாரணையொன்று அவசியம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/221027

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220986

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM

image

கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.

ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன.

வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1000570855.jpg

1000570856.jpg

https://www.virakesari.lk/article/220986

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 26 JUL, 2025 | 12:46 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார். தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார். அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார். ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 - 5 விக்.) மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை. ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/220967

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

1 month 3 weeks ago
இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு 25 JUL, 2025 | 12:57 PM புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன் தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர். “மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல் மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220904

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 03:50 PM வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. https://www.virakesari.lk/article/221004

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

26 JUL, 2025 | 03:50 PM

image

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26)  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

WhatsApp_Image_2025-07-26_at_15.13.53.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.57.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.56.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54__1WhatsApp_Image_2025-07-26_at_15.13.58.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.55.jp

https://www.virakesari.lk/article/221004

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

1 month 3 weeks ago
சம்பந்தப்பட்ட குற்றவாளி பொலிஸாரின் ஆயுதத்தை பறித்து போலீசாரை தாக்க முற்பட்டவேளை போலீசார் விரைந்து செயற்பட்டு திருப்பி சுட்டத்தில் தாக்குதலாளி சம்பவ இடத்தில் பலி! காயமடைந்த பொலிசதிகாரி வைத்தியசாலையில் அனுமதி! தடுப்புக்காவலில் இருந்த கைதி மின் கம்பியை கடித்து, உடுத்திருந்த ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை! இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவலிலுள்ள கைதிகளை கொலை செய்து விட்டு பொலிஸார் வழக்கமாக கூறும் காரணங்கள்.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

1 month 3 weeks ago
ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
தாய்லாந்து - கம்போடியா கலவரம், இதுவரை 40 பேர் வரை இருபுறமும் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டவர்கள் காயம், இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்வு! ஜூலை 24ம் திகதி அதிகாலை முதல் ஆரம்பித்த தாய்லாந்து, கம்போடியா எல்லைப்பதற்றம் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையாக மாறி தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் இக்கணம் வரை இடம்பெற்று வருகின்றது. தொடரும் தாக்குதல்கள் காரணமாக, எல்லைப்புறத்தில் வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றதோடு தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்த முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்போடியவிற்கு திரும்பி வருகின்றனர். அத்துடன், கம்போடியாவுடனான எல்லைப்பகுதியில் நேற்று மாலையிலிருந்து தாய்லாந்து இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 817 கிலோ மீற்றர் தூரம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்போடியாவின் வடமேற்கு பகுதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆரம்பித்த துப்பாக்கிச்சூடுகள் தற்போது எல்லையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதோடு, தாய்லாந்தின் F16 விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் கம்போடியாவின் எல்லைப்புற கிராமங்களின் முக்கியமான பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆசியான் (ASEAN) அமைப்பின் ஒத்துழைப்போடு உலக நாடுகளினால் இரு நாடுகளுக்கும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தாய்லாந்து ஆரம்பக்கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இல்லை என அறிவித்துள்ளது. இந்த நிலையில், பதற்ற நிலையை தணித்து சமாதான பேச்சுவார்த்தையை கொண்டுவர கம்போடியா ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தை நாடி நிற்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் இன்னுமே எட்டப்படாமையால் தொடர்ந்து இரு நாடுகளிலும் பதற்றமான போர் சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

1 month 3 weeks ago
காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣