Aggregator

52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் ஆந்திராவிற்கு நாடு கடத்தப்பட்டனர்

1 month 1 week ago

Published By: Digital Desk 1

28 Sep, 2025 | 03:10 PM

image

யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது.

நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையிடம் மீனவர்களை ஒப்படைத்தது.

அங்கிருந்து அவர்கள் காக்கிநாடாவுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் ஒரு இரண்டாம் நிலை இழுவைமடி மீன்பிடி படகு வாங்க நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தனர்.

ஆனால் வீடு திரும்பும் போது, தொழினுட்ப கோளாறு காரணமாக இலங்கை நீரில் மிதந்ததாக அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை கடற்படை மீனவர்களைக் கைது செய்தது.

அதன் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாண நீதிமன்றம் ஆந்திர மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவர்கள் திரும்புவதற்கான முயற்சிகளைத் ஆரம்பித்தது.

இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையின் ஆதரவுடனும், நான்கு மீனவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியதாகவும் உயர் ஸ்தானிகராலயம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226327

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
கரூரில் 40 பேர் பலி: கூட்ட நெரிசலுக்கு பிறகு என்ன நடந்தது? நிழலாக உறைந்த நிஜங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சி 28 செப்டெம்பர் 2025, 09:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்சை சூழ்ந்துள்ள கூட்டம் படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ரவி என்கிற கட்டடப் பொறியாளரும் ஒருவர். இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடிய நிலையில் சிலர் துக்கம் தாளாமல் அழுதனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் சிக்கிய பலரது உடைமைகள் சிதறிக் கிடக்கும் காட்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் தனது உறவுகளை இழந்த குடும்பத்தினர் துக்கம் தாங்க முடியாமல் உடைந்து அழுதனர். படக்குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காலணிகள் பரவிக் கிடக்கின்றன. படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் தற்போதைய கழுகுப் பார்வை காட்சி. போக்குவரத்து இயல்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20lgdw2vqo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
அட . ......இதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை ........(41) வது கேள்வியை சரியாய் பார்க்காமல் கெத்தாய் பதில் போட்டு விட்டேன் ........ஒருவர் 200 ஓட்டங்கள் அடிப்பாரா என்று . .......அது தவறு , ஒரு அணி சுலபமாய் 200 அடிக்கும் . ........! அதுக்காக அதை திருத்த முடியுமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் .......ஏனென்றால் படிக்கும் போதும் சரி இப்பவும் சரி நான் எப்போதும் திருந்தப் போவதில்லை . .......! 😪

உணவு செய்முறையை ரசிப்போம் !

1 month 1 week ago
சுவியர்... வாழைப் பூவின் நரம்பு எடுக்கின்ற ரெக்னிக் அருமை. (காணொளியின் 3:30´வது வினாடியில் உள்ளது.) அடுத்தமுறை வாழைப்பூ வாங்கும் போது இதே முறையில் செய்து பார்க்க வேண்டும்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு! த. வெ. க தலைவர் விஜய்! தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று (27) நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 இலட்சம் ரூபாவும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த கரூர் மாநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448756

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
https://www.facebook.com/share/p/1ZHehqq6fZ/?mibextid=wwXIfrஎச்சரிக்கை - கொலைகாரத் திமுக சந்திரன் ராஜாவின் பதிவு 100% திட்டமிட்ட அரசியல் பலிகள்தான்.ஒரு ஒழுங்கான திட்டம் தெரிகிறது.செந்தில் பாலாஜி உட்பட காவல்துறை அதிகாரிகள் மிக சரியாக 8.15 நிமிடங்களில் அங்கே ஆஜர்..அதாவது மாவட்ட SP மட்டும் அல்ல வெளியே இருந்து உயர் அதிகாரிகள் வரை.. 68 கள்ள சாராய படுகொலைக்கு கள்ள குறிச்சி பக்கம் எட்டி பார்க்காமல் இருந்த ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எழுந்த கலவரத்தின் போது கூட வெளியே தலை காட்டாமல் பதுங்கி இருந்த வயிற்று பலி மகேஸ்..சூத்திரதாரியான செந்தில் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறார்.... துபாய்க்கு பாலிடாயில் சென்றால் அதாவது பெத்தம்மாக்களை மாதத்தில் பலமுறை சந்திக்கச் சென்றாலும் வராத செய்தி குறிப்பு..இன்று குடும்பம் சகிதமாக அதிகமாக ஊடகங்களில் காட்டப்படுகிறது. குறிப்பாக அட்டென்சனுக்காக பாலிடாயில் மகளைக்கூட காட்டுகிறார்கள். திராவிடர்கள் எதிர் பார்த்ததோ ஒன்றிரண்டு பலிகள். அதை தொடர்ந்து விஜய்யை மெளனிக்க வைப்பது .. ஆனால் நிகழ்ந்ததோ..மாபெரும் படுகொலை..! மாவடியன் கோயில் தெரு என்கிற பகுதியில் உள்ள திமுகவின் ரவுடிகளின் தலைமையில்தான் இந்த கலவரம் வித்திடப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். அங்கேதான் முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது... அதை தொடர்ந்து காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.. தொலைக்காட்சிகளின் பல டிரோன் ஷாட்டுகள் அதை உறுதி செய்து இருக்கிறது. அதற்குள் சொல்லி வைத்த மாதிரி திடல் திண்ணி முன்களப்ஸ்கள் ஒரே மாதிரிக் கூவுகிறார்கள்.. ரைட்டப்கள் எழுதுகிறார்கள்.. சரி இப்போது 10 லட்சம் நிவாரணம் பொம்மையார் அறிவிக்கிறார் நேரடியாக களத்திற்கு வருகிறாராம் வாட் நெக்ஸ்ட்.. அல்லு அர்ஜூனை போல விஜய்யை கைது செய்ய போகிறார்களா..? நிச்சயமாக மாட்டார்கள் ,செய்ய முடியாது ஏற்கனவே சாமனியர்கள் இதன் பின்னணி திமுகதான் என்பதை உணர்ந்து காறி உமிழ்கிறார்கள். பொது மக்களின் கோபம் விஜய்யின் மேல்வராமல் திமுகவின் திட்டமிட்ட படுகொலை என்பதாகத்தான் இருக்கிறது. கட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.. ஜெனரேட்டர் வயர் கட் செய்யப்படுகிறது தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படுகிறது... இதையெல்லாம் இயல்பான கூட்ட நெரிசல் என்று சொன்னால் நம்புவதற்கு மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அரசு இயந்திரம் மொத்தமாக செயலிழந்து இருப்பதைத்தான் காட்டுகிறது அதில் உள்ள திட்டமிடல் கொஞ்சம் தட்டையாக அறிவு இருப்பவர்களுக்குக்கூட புரியும்...! ஆக விஜய்யை கைது செய்தாலும் பொம்மையாருக்கு பிரச்சினை.. இனி விஜய் திமுக மிரட்டலுக்கு பயந்து திமுக சார்பு நிலை எடுத்தாலும் அதுவும் எந்தவிதத்திலும் பயன் தராது.. ஆக திராவிடர்களின் கொடூரமான திட்டம் தோல்வியில்தான் முடிந்து இருக்கிறது மக்கள்தான் பலியாடுகள் ஆகி இருக்கிறார்கள்...! பிரதமர்,உள்துறை அமைச்சர் ,ஜனாதிபதி உட்பட அனைவரும் இதை உற்றுக் கவனிக்கிறார்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். காலையில் எடப்பாடியார் வருகிறார்.. CBI விசாரணை நிச்சயமாக கோருகிறார்.. ஓங்கோல் குடும்பத்தின் கடைசி அதிகார பசிக்கான பலியாக இது இருக்கட்டும்.தமிழர்கள் இந்தக் குடும்பத்தின் கொடூர அதிகார பசியில் இருந்து தப்பிக்க வேண்டும்...! 2009 ல் லட்சக்கணக்கான உலக தமிழர்கள் அழிக்க படுவதற்குக் காரணம் துணைபோன திமுக. கடந்த நான்கு வருடத்தில் விமான கண்காட்சியில் 5 பேர் பலி கள்ளக்குறிச்சியில் 68 பேர் பலி என்று தொடர்ந்து தமிழகத்தில் பலிகளை அரங்கேற்றுகிறார்கள்..! இதில் வேடிக்கை என்னவென்றால் அதே அருணா ஜெகதீசன் குழு விசாரணைக்கு உத்தரவாம் . அவர் குற்றவாளி என்று சொன்ன அதிகாரிக்குத்தான் திமுகவினர் பதவி உயர்வு கொடுத்தார்கள்.காலக்கொடுமை ஆக தீய திராவிடர்களின் திட்டங்கள் நெல் முனையளவும் பலிக்கவில்லை.அப்பாவிகளுக்கு ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே கொடூரமானது.மத்திய ஒன்றிய அரசு இந்த விடயத்திலும் அமைதியாக கடந்து சென்றால்...அவர்கள் தமிழ் நாட்டில் பிஜேபி என்கிற கட்சி எந்த காலத்திலும் மக்களின் நம்பகத்தன்மையை அடைய போவதில்லை. நிச்சயமாக காவல்துறை அமைச்சர் மீதும் தமிழ் நாட்டு உள்துறை அமைச்சர் மீதும் மத்திய அரசு உடனடியாக விசாரணக்கு உட்படுத்தபட வேண்டும்..! இங்கே நிகழ்ந்து இருப்பது மிகப்பெரிய மனித சூறையாடல். நீதிமன்றம் தன்னார்வமாக முன்வந்து CBI விசாரணக்கு உத்தரவிடவேண்டும்..! திராவிடர்களின் அத்தனை கருணாநிதித்தனமும்..செந்தில் பாலாஜி போன்ற அயோக்கிய அரசியல் அடியாட்களின் வேடமும் கலைய வேண்டும்.. தமிழர்கள் ஒன்றும் அரசியல் பலியாடுகள் அல்ல என்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எற்பட வேண்டும்..! விஜய் போன்றவர்கள் அரசியல் செய்யும் முன்பு ...தன்னோடு இருக்கும் டபுள் ஏஜெண்டுகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் திமுகவின் கையாள்களான புஸி,ஆதவ் ரெட்டி யெல்லாம் முட்டு சந்தில் தான் கொண்டு வந்து விடுவார்கள் என்று பல முறை எழுதி இருக்கிறேன் இதுதான் அந்த முட்டு சந்து..! விஜய் ஓடி ஒழியாமல் தைரியமாக இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது..! இல்லாவிட்டால் அரசியல் துறவறம் போவது விஜய்யை நம்பும் அப்பாவி மக்களுக்கு நல்லது.. பின்குறிப்பு: திமுக கையில் அதிகாரம் இருப்பது தமிழர்கள் தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் தற்கொலைக்குச் சமம். விஜைக்கு இக்கட்டான நேரத்தில் எல்லாம் சீமான் தோள் கொடுக்கிறார்.அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்ஆனால் உற்ற நேரத்தில் தோள் கொடுக்க வேண்டும்.

“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்

1 month 1 week ago
“ஏக்கிய இராச்சிய” அரசியலை முன்னெடுத்த தமிழ் அரசியல் வாதிகள் வெளிப்படையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை. நாங்கள் இலங்கையில் நடக்கின்ற அரசியல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். (விஜய்க்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எங்கள் அரசியலுக்கு நாங்கள் கொடுப்பது இல்லை என்று ஒரு கவலை)

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
[ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ] சரியான கருத்து