Aggregator
வவுனியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள்: ஒரு யானை பலி
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.
மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-வவுனியா தீபன்-
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
நாளை, வடகிழக்கில் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாளை, வடகிழக்கில் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
25 JUL, 2025 | 01:23 PM
நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.
உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை சர்வதேச விசாரணை பொறிமுறையை " கோரி நாளை இலங்கையின் வடக்கு - கிழக்கு எங்கும் இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 'மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு' கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு போாராட்டம்.
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்
வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
”வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.
ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொடர்புடைய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் கூறினார்.
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார்.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையுடன் இந்தக் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என்று கூறினார்.
மூத்த நடிகர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கரகோஷம் சபையில் எழுந்தது.
கமல்ஹாசன் மாநிலங்களவையில் நுழைந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏனெனில் அவர் முதல் முறையாக தேசிய சட்டமன்றப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
69 வயதான அரசியல்வாதி ஜூன் 12 அன்று திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஊழல், கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தனது கட்சியைத் தொடங்கினார்.
2019 மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பின்னர் அவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.