Aggregator

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை

1 month 3 weeks ago

21 Nov, 2025 | 06:19 PM

image

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மழையையும் பாராமல் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார் கம்பனிகளுக்கு  சூரிய மின்சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி, குறித்த திட்டத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி என கூறி அடாத்தாக விவசாயிகளை வெளியேற்றி இதனை செய்து வருகின்றனர்.

800 ஏக்கர் அளவில் காணி சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலையில் குறித்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

அபகரிக்கப்பட்ட காணியை மீளத் தருமாறும் அல்லது மாற்றீடாக காணிகளை விவசாய செய்கைக்காக வழங்குமாறும் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் செயலகம் வரை முன்னெடுத்த போதிலும் தீர்வு வழங்கப்படாமை குறத்து மன வேதனை அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

1972ஆம் ஆண்டு முதல் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையை முன்னெடுத்து வந்த முத்து நகர் விவசாயிகள், வீதியில் வெயில் மழையிலும் போராடி வருவது, மக்களை கஷ்டத்துக்குள் தள்ளும் ஆட்சியாக இது விளங்குகிறது என்பதை உணர்த்துகிறது.  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். 

எனவே முத்து நகர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது ; முத்து நகரில் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும் விவசாயிகள் எச்சரிக்கை | Virakesari.lk

பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள்

1 month 3 weeks ago

21 Nov, 2025 | 06:12 PM

image

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம்,  கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை (21) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவின் அவ்விடத்திற்கு விரைந்து வருகை தந்த தொல்பொருள் திணைக்களத்தினரை துரத்தியடித்தியுள்ளர்.

1001101274.jpg

இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர். இதன்போது கருத்தத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன்.

1001101271.jpg

போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம், ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

1001101272.jpg

இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள் பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தும் இடுப்பதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் தற்போது கூறுகின்றார்கள் 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள். அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள் அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்தோம்.

வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன. அதுபோன்றுதான் அண்மையில் திருவோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது. எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும் நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிதும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார். பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்கள் உருவாகி இருக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ உள்ளுராட்சி சபைகளுக்கோ இனியாவது அனுப்பாமல் விட்டு எமது தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு எமது தமிழரசுக் கட்சிதான் என்றும் கடைசி வரைக்கும் நிற்கும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன்.

இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம். எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவி சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும்சாதித்துவிட முடியாது. மக்களின் பலத்தினால் நாம் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம்.

எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும் பிரதேச சபையினுடைய வீதியிலே பதாகைலையோ எதுவிலோ வேலை திட்டங்களோ மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் அனுமதியைப் பெற வேண்டும். எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தி அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என்ன அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் போன்ற தகவல்களை நாம் முன் வைத்திருக்கின்றோம் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசானர் வி.மதிமேனன் தெரிவித்தார்.

பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள் | Virakesari.lk

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!

1 month 3 weeks ago
1000 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனாலும் பெரியதொரு கூட்டமே வந்துள்ளது போல தெரிகிறது. எத்தனை தலைகள் என்று எந்த ஊடகமாவது கணக்கெடுத்துள்ளதா?

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
வித்தியாசம் உள்ளது தான். அது, அன்று வாழ்ந்த மக்களை ஏமாற்ற நன்றாகப் பயன்பட்டது. இது, அன்றைய தீர்மானத்தை நம்பியதால் நாய்படா பாடு பட்டு பட்டுத் தெளிந்த, இன்று வாழும் மக்களையும் ஏமாற்ற முயற்சி செய்கிறது. ஒற்றுமை, இரண்டாலும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

1 month 3 weeks ago
யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி 21 Nov, 2025 | 04:52 PM மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/231025

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து

1 month 3 weeks ago
21 Nov, 2025 | 03:18 PM நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இவ்விடயம் குறித்து உறுப்பினர் கார்த்தீபனால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், குறிகாட்டுவான் நயினாதீவு இடையேயான கடற் போக்குவரத்து சேவையை சீரமைப்பது அவசியமாகும். குறிப்பாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் போக்குவரத்து மார்க்கமாக இருக்கும் இந்த படகுப் போக்குவரத்து சேவையை தனியார் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக 45 இற்கும் சற்று அதிக படகுகள் சேவையை முன்னெடுக்கின்றன. ஆனால் குறித்த சேவையை முன்னெடுக்கும் படகுகள் சங்கம் சட்டபூர்வமான ஒன்றல்ல. அத்துடன் படகுகளும் சேவைக்கு உகந்த தரத்தில் இருப்பதில்லை என்றும், அவை தரச் சான்றிதள் எடுக்காது சேவையை முன்னெடுக்கின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் வலுவாக இருக்கின்றன. மேலும் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம், படகுச் சேவைக்கான வரி உள்ளிட்டவையும் முறையாக அறவிடபடுவதாக தெரியவில்லை. எனவே, படகுகளின் தரம், கட்டண அறவீடு, வரி அறவீடு, சங்கம் மற்றும் படகுகளின் பதிவுகள் என்பவற்றை ஒரு முறையான பொறிமுறையை உருவாக்கி மக்களுக்கான போக்குவரத்து சேவையை பாதுகாப்பானதாக முன்னெடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறித்த விடையத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட சபையின் உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேறு இடங்களில் இருந்து வரும் படகுகளுக்கும் வரி அறவீடு செய்யப்படும் என்றும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231013

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து

1 month 3 weeks ago

21 Nov, 2025 | 03:18 PM

image

நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இவ்விடயம் குறித்து உறுப்பினர் கார்த்தீபனால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

குறிகாட்டுவான் நயினாதீவு இடையேயான கடற் போக்குவரத்து சேவையை சீரமைப்பது அவசியமாகும்.

குறிப்பாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் போக்குவரத்து மார்க்கமாக இருக்கும் இந்த படகுப் போக்குவரத்து சேவையை தனியார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக 45 இற்கும் சற்று அதிக படகுகள் சேவையை முன்னெடுக்கின்றன.

ஆனால் குறித்த சேவையை முன்னெடுக்கும் படகுகள் சங்கம் சட்டபூர்வமான ஒன்றல்ல. அத்துடன் படகுகளும் சேவைக்கு உகந்த தரத்தில் இருப்பதில்லை என்றும், அவை தரச் சான்றிதள் எடுக்காது சேவையை முன்னெடுக்கின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் வலுவாக இருக்கின்றன.

மேலும் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம், படகுச் சேவைக்கான வரி உள்ளிட்டவையும் முறையாக அறவிடபடுவதாக தெரியவில்லை.

எனவே, படகுகளின் தரம், கட்டண அறவீடு, வரி அறவீடு, சங்கம் மற்றும் படகுகளின் பதிவுகள் என்பவற்றை ஒரு முறையான பொறிமுறையை உருவாக்கி மக்களுக்கான போக்குவரத்து சேவையை பாதுகாப்பானதாக முன்னெடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறித்த விடையத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட சபையின் உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில் அது தொடர்பில்  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேறு இடங்களில் இருந்து வரும் படகுகளுக்கும் வரி அறவீடு செய்யப்படும் என்றும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/231013

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்) 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. "விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்," என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியில், ஏபி செய்தி முகமை, "துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. விபத்து நடந்தபோது, விமான நிலையத்தில் புகைமூட்டம் எழுந்தது, சைரன்கள் ஒலித்தன," என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் தேஜஸ் போர் விமானத்தின் சிறப்பு தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் மற்றும் எதிரி ரேடாரை தவிர்க்கும் திறன் கொண்டது. இது சுகோய் விமானத்தைப் போலவே, அதே எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக்கூடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை 2027இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு அவை வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn8el5nzp22o

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

1 month 3 weeks ago

துபை விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்)

24 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

"விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்," என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியில், ஏபி செய்தி முகமை, "துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. விபத்து நடந்தபோது, விமான நிலையத்தில் புகைமூட்டம் எழுந்தது, சைரன்கள் ஒலித்தன," என்று குறிப்பிட்டுள்ளது.

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தேஜஸ் போர் விமானத்தின் சிறப்பு

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் மற்றும் எதிரி ரேடாரை தவிர்க்கும் திறன் கொண்டது. இது சுகோய் விமானத்தைப் போலவே, அதே எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக்கூடியது.

இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை 2027இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு அவை வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn8el5nzp22o

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!

1 month 3 weeks ago
நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 04:29 PM ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன. சமகி ஜன பலவேகய (SJB), சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (NFF) ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231024

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி

1 month 3 weeks ago

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் மாவட்டங்களில் கனமழை

RAIN ALERT

பட மூலாதாரம், Getty Images

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவ. 22) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நாட்களில் தொடர்ந்து வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடையும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும். அதற்கு அடுத்த 48 மணி நேரங்களில் அது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரமடையக் கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A1faae534-6770-45b4-85eb-1bff1338e180#asset:1faae534-6770-45b4-85eb-1bff1338e180

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி

1 month 3 weeks ago
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் மாவட்டங்களில் கனமழை பட மூலாதாரம், Getty Images தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (நவ. 22) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நாட்களில் தொடர்ந்து வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடையும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும். அதற்கு அடுத்த 48 மணி நேரங்களில் அது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரமடையக் கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A1faae534-6770-45b4-85eb-1bff1338e180#asset:1faae534-6770-45b4-85eb-1bff1338e180

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

1 month 3 weeks ago
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம் 21 Nov, 2025 | 12:14 PM தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21) வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது. சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இதனிடையே சனிக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளர்கள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230993

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
1978 ல் அமெரிக்க மாநிலமான மசாசூசெற் தமிழீழ பிரகடனம் செய்திதை அன்று கொண்டாடினோம். அந்த பிரகடனம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்கு உதவியதா? தமிழர் பேரழிவை தடுக்க உதவியதா?

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

1 month 3 weeks ago
இது நிகழ வேண்டுமென எதிர்பார்த்தே இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. இப்போ, அதன் சூத்திர தாரிகள் கைது செய்யப்படலாமென அறிந்தவுடன், தமிழ் முஸ்லீம் மக்களுடன் எங்களுக்கு பிரச்சனையில்லை, போலீசாரே தம்முடன் மோதியதாக இதனுடன் சம்பந்தப்பட்ட பிக்கு அறிக்கை விடுகிறார்.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
சில நாடுகளில் இல்லாத புலிகளுக்கு தடை அறிவிக்கிறார்கள். இப்போ, கனடாத்தூதுவருக்கு கஸ்ர காலம். பக்கத்துவீட்டு சகுனிக்கு வயிறு எரியப்போகிறதே. தான் செய்ய மறுத்ததை, இல்லாமற் செய்ததை கனடா செய்து விட்டது என்கிற கடுப்பு அதற்கு.

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

1 month 3 weeks ago
சாத்தானுக்கு இப்போ அட்டமத்தில சனியனாம். நீங்கள் பயப்படாமல் விசாரித்து பெறுபேற்றை கையோடேயே கொண்டுவாருங்கள். அனுரா தாராளமாக வாங்கிப்பார்ப்பார். அவர் அறியாத விடயமா நாடுமுழுவதும் பேசப்படுகிறது. ஆனால் நாமலோ அவர் சார்ந்தவர்களோ மறுப்புத்தெரிவிக்கவில்லை. அப்போ, விஷயம் உண்மைதான். அந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் உள்நாட்டிலேயே படிக்காமல், யாரோ இவருக்காக பரீட்சை எழுத, இது தாஜுதீனை போட்டுத்தள்ள ஓடித்திரிந்ததும், பாதாள போதைப்பொருள் கடத்தற்காரரிடம் கப்பம் பெற்று சொத்து சேர்த்ததும் தான் செய்த வேலை. ஒரு சட்டத்தரணிக்கு இப்படியான வேலைகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியாதா? அதெல்லாம் தெரியாத இவர், தன்பெயரில் உள்ள சொத்து எனக்காட்டி விட்டு பின், அது மனைவியின் சொத்து என்கிறார். மனைவியின் சொத்து என்றால் ஏன் தன் பெயரில் காட்டினார்?