Aggregator

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி!

1 month 3 weeks ago
இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி! இந்த வருடத்தின் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார். புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440561

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி!

1 month 3 weeks ago

1676463966-APEKSHA6.jpg?resize=650%2C375

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி!

இந்த வருடத்தின் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி நேற்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440561

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago
ரஷ்ய விமான விபத்து தொடர்பான அப்டேட்! தொலைதூர கிழக்கு அமுர் பகுதியில் அதன் இலக்கிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை ரஷ்ய மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்காரா ஏர்லைன்ஸின் An-24 விமானம், 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், பிளாகோவெஷ்சென்ஸ்கில் இருந்து சீன எல்லைக்கு அருகில் புறப்பட்டு, டின்டா விமான நிலையத்தை நெருங்கியபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு ரேடார் திரைகளில் இருந்து மறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ரஷ்ய சிவில் விமான ஹெலிகொப்டர் விமானத்தின் உடற்பகுதி எரிவதைக் கண்டதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்ததாக நம்பப்படவில்லை என்றும் அது தகவல் வெளியிட்டது. இதனிடையே, விமானத்தில் இருந்தவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர் என்று அமுரின் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் கூறினார். டின்டாவிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலைப்பாதையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமுரின் சிவில் பாதுகாப்பு மையம் தெரிவித்ததாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என்று தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் அடர்ந்த வனப்பகுதியில் எரியும் விமானத்தின் சிதைபாங்களை காட்டுகின்றன. விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்காரா ஏர்லைன்ஸ் அன்டோனோவ் 24 விமானம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையானது என்றும், கடந்த காலங்களில் இதற்கு சிக்கல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானம் அண்மைய தொழில்நுட்ப பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், 2018 முதல் நான்கு விபத்து சம்பவங்களில் சிக்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தது. https://athavannews.com/2025/1440493

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா!

1 month 3 weeks ago
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா! பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது. அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது. அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1440503

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு! ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அன்டோனோவ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் உயிரிழந்ததாக அவசரகால அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு துயர சமிக்ஞையை வெளியிடவில்லை அல்லது எந்த தொழில்நுட்ப சிக்கல்களையும் தெரிவிக்கவில்லை என்று அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்தவிமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440469

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago

world_48624401.jpg?resize=750%2C375&ssl=

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அன்டோனோவ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் உயிரிழந்ததாக அவசரகால அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு துயர சமிக்ஞையை வெளியிடவில்லை அல்லது எந்த தொழில்நுட்ப சிக்கல்களையும் தெரிவிக்கவில்லை என்று அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்தவிமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள்  தீவிரமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440469

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
நேற்று கம்மன்பில சொல்லியிருக்கிறார், அதாவது வெகு விரைவில் செம்மணி புதைகுழியிலிருந்து இராணுவத்தினரின் இலக்க தகடு வெளிவருமாம். எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நகருகிறது என்பது உண்மை. முஸ்லிம்களை காக்க ஆயுதம் தாருங்கள், செம்மணியில் இராணுவத்தினரின் உடல்கள் என்று அடம் பிடித்தார், இப்போ இராணுவத்தகடு வெளிவருமாம். இராணுவத்தினரை வைத்து தம்மையும் அரசியலையும் பாதுகாக்க முனைகின்றனர். இராணுவ புலனாய்வினர் நாட்டை காப்பாற்றினர், இராணுவம் போரிட்டது என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் போது, புலனாய்வுப்பிரிவே நாட்டில் பிரிவினையையும் அழிவுகளையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர் எனும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் போது, நிலைமையை உணராமல் உளறுது சில பூச்சியங்கள்.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
என்னைய்யா வர்த்தக விமானி என்பது காற்றாடி இயந்திரத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை என கூறினீர்கள். எனக்கு அதை வாசிக்க வெள்ளை ஆடை அணிந்துகொண்டு நுளம்பு புகை அடிப்பவர்தான் நினைவில் வந்தார். இதற்கு மேல் விமானத்துறை பற்றி சிறப்பாக யாராவது விபரிக்க முடியுமா? எதிர்கால சந்ததியிடம் யாராவது விமானி ஆக விருப்பமா என்று கேட்டால் பய பிள்ளைகள் பின்னங்கால்கள் பிடரியில அடிக்க திரும்பி பார்க்காமல் ஓட்டம் தான் எடுப்பாங்கள் போல.

இதயங்களின் மொழி

1 month 3 weeks ago
இதயங்களின் மொழி -------------------------------- அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. என்னை விட பத்து வயதுகள் குறைந்த என்னுடன் வேலை செய்த நண்பன் ஒருவனுக்கு சில வருடங்களின் முன் திடீரென்று இப்படி ஆகியது. அவனுக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் என்றே சொன்னார்கள், ஆனால் அவனுக்கும் நான்கு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. நண்பனை அடுத்த அடுத்த நாட்களிலேயே மருத்துவமனையில் போய் பார்த்தேன். 'இனி என்ன.......... எல்லாமே முடிந்து விட்டது............ எவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..............' என்ற கவலையுடன் சொல்லிக் கொண்டே தயிர் போல ஏதோ ஒன்றை சாப்பிட முயன்று கொண்டிருந்தான். அவனிடம் திட்டங்களுக்கு என்றும் குறைவே இருந்ததில்லை. ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு இருக்கும் திட்டங்கள் அளவுக்கு அவனிடம் திட்டங்கள் எப்போதும் இருக்கும். குடும்பம், குழந்தைகள், வேலை, நண்பர்கள்,சமூகம் இவற்றை விட இன்னும் சிலவும் இருக்கும். உதாரணமாக, ஒரு தடவை ஒரு குறும்படம் எடுப்பதாகச் சொல்லியிருந்தான். வேலை செய்யும் இடத்தில் பலரும் அது ஒரு நல்ல திட்டம் என்றனர். நானும், இன்னொரு நண்பனும் சிரித்துவிட்டோம். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு............' என்பது போல ஒரு தலைப்பைச் சொன்னான். சிரித்திருக்க கூடாது தான், ஆனால் தலைப்பை அவன் சொன்னவுடன் அதுவாக களுக்கென்று வெளியே வந்துவிட்டது. அவன் இந்த சினிமாத் துறையில் ஒரு நாற்பது வருடங்கள் பின்னுக்கு நின்று கொண்டிருந்தான். பின்னர் கதையும் முடிவாகியது. சிரித்த எங்கள் இருவருக்கும் எந்தப் பாத்திரங்களும் கொடுக்கப்படவில்லை. அவனுக்கு இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது என்றால், தமிழ்ச்சினிமாவின் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராலேயே அவனுக்கு இந்த ஆர்வம் வந்திருந்தது. அந்த இயக்குனரும் நண்பனும் தமிழ்நாட்டில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இயக்குனர் நண்பனை விட ஓரிரு வயதுகளே அதிகமானவர், ஒன்றாகவே பாடசாலை போய் வந்தவர்கள். 'அவனே இயக்குனராகி கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றான். நான் ஆகக் கூடாதா...........................' என்ற உந்துதலே ஒரு குறும்படம் எடுக்கும் நிலைக்கு நண்பனைத் தள்ளியது. இந்த எண்ணத்திற்கும், கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட நண்பனின் நாலாவது அடைப்புக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஒரு நாட்டின் பல திட்டங்கள் போலவே அவனது குறும்படம் எடுக்கு திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் அவன் வேறு சில புதிய திட்டங்களுடன் இருக்கும் போதே இப்படி ஆகியது. அண்ணன் இப்படியானவர் இல்லை. அண்ணனும் நானும் இருபது, இருபத்தைந்து வருடங்களாக உருண்டு பிரண்டு கொண்டிருக்கின்றோம். அந்த நாட்களில் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் சிலர் அருகிலிருக்கும் இடமொன்றில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு எவரையும் சேர்ப்பதில்லை. ஆனால் அண்ணனையும், என்னையும் சேர்த்தார்கள். எப்படி எங்களைச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. அங்கு விளையாடும் போது இருவருக்கும் ஒரே பெயர் தான். அண்ணனின் பெயரில் ஒரு ஆங்கிலத்தன்மை இருப்பதால், அந்தப் பெயரே இருவருக்கும் என்றாகியது. பின்னர் இந்தியர்கள் மட்டும் விளையாடும் ஒரு இடத்திற்கும் போனோம். அவர்களும் எங்களைச் சேர்த்தார்கள். எங்கள் இருவரையும் அண்ணன் - தம்பி என்றே அவர்கள் இன்றும் சொல்கின்றனர். அந்த வியட்நாமியர்கள் எங்களை இந்தியர்களுடன் விளையாடக்கூடாது என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன காரணம் அந்த இந்தியர்களுக்கு சுத்தமாக விளையாடவே தெரியாது, அவர்களுடன் விளையாடினால் நாங்கள் உருப்படவே மாட்டோம் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும் இலங்கையர்கள் என்று அந்த வியட்நாமியர்களுக்கு தெரியும். அவர்கள் இலங்கையில் இருக்கும் மதங்கள் பற்றியும், மொழிகள் பற்றியும், குறிப்பாக பாளி மொழி பற்றியும் என்னிடம் தகவல்களை கேட்டறிந்து இருக்கின்றார்கள். பா-ளி என்ற இரண்டு எழுத்துகளை தவிர வேறு எதுவும் தெரியாத நான் சமஸ்கிருதத்தில் இருப்பவை எல்லாவற்றையும் பாளியில் இருப்பவை என்று மாற்றி ஒரு விளையாட்டுக்காக சொன்னேன். பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவர் சொன்னது அப்படியே இதயத்தில் தங்கி நிற்கின்றது. பின்னர் நாங்களே ஒன்றை ஆரம்பித்து, எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் சேர்த்து விளையாட ஆரம்பித்தோம். பல நாட்டவர்கள், பல இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடினோம். ஒரு தடவை இரு பெண் பிள்ளைகள் வந்தார்கள். ஏதோ கல்லூரி விடுமுறைக் காலம் போல. நாங்கள் நாலைந்து பேர்கள் நின்றோம். அவர்கள் இருவரும் ஒரு பக்கமும், நாங்கள் மற்ற பக்கமும் என்றார்கள். அவர்களை இலகுவாக அடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு ஐந்து நிமிடங்களிலேயே நிலைமையின் தீவிரம் விளங்கியது. அந்த இரு பெண் பிள்ளைகளும் மனிதர்கள் இல்லை. எங்களை அடித்து துவைத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். முடிந்த பின், 'நீங்கள் நல்லாவே விளையாடுகின்றீர்கள்.............' என்று அவர்கள் சொன்ன போது வலி அதிகமாக இருந்தது. அன்று கூட முதலாவது அடைப்பு வந்திருக்கலாம். எல்லாம் சரி, இப்படி வருடம் முழுவதும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் இதயத்தில் அடைப்புகள் வருமா என்ற கேள்வி இங்கே வரக்கூடும். இன்னும் சில காரணிகளும் இருக்கின்றன என்பார்கள் மருத்துவர்கள். அயலவர் ஒருவர், மருத்துவர்கள் சொல்லும் எக் காரணிகளும் இல்லாதவர். மிகவும் அமைதியானவர், பக்தியாவனர், ஒழுக்கமானவர். சில மாதங்களின் முன் அவருக்கும் திடீரென்று நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு, மூன்று அடைப்புகள் இருப்பதாக அறிந்து, உடனேயே சத்திர சிகிச்சை செய்தனர். அவருக்கும் உள்ளே நான்கு அடைப்புகள் இருந்தன. அவருடைய தீராத கவலை அவருக்கு இது எப்படி வந்தது என்பதே. அந்த அதிர்ச்சியில் இருந்து, அவருக்கு இது எப்படி வந்தது என்னும் அந்த அதிர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாகவே மீண்டு வந்து கொண்டிருக்கின்றார். மிகவும் நெருக்கமான இன்னொருவர். அவரை ஒரு பூரணமான மனிதன் என்றே சொல்லவேண்டும். பூரணத்திற்கும் ஒரு நாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. பூரணம் நம்பவே இல்லை. அவர் தமிழ்ச்சினிமா அதிகமாக பார்க்கின்றவரும் கூட. அதனால் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கை வேறு யாருடையதோ, தன்னுடைய பெயரை தவறுதலாகப் போட்டு விட்டார்கள் என்று அடம்பிடித்தார். அதையே எனக்கும் சொன்னார். மருத்துவர்கள் ஆங்கிலேயர்கள், இந்தச் சினிமாக் கதையை பொருட்படுத்தாமல், ஆளைப் படுக்க வைத்து வெட்டி ஒட்டினார்கள். 'எனக்கும் இது வந்து விட்டதோ..............' என்ற அதிர்ச்சி பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது போல. பூச்சியத்துக்கும் வரும், பூரணத்துக்கும் வரும் என்று இருந்தால், அடைப்புகள் வந்த பின் வரப் போகின்ற அதிர்ச்சியை குறைக்கலாம். 'எல்லாமே முடிந்து விட்டது........' என்று ஒரேயடியாக ஒதுங்கி வாழவும் தேவையில்லை என்று நினைக்கின்றேன். மீண்டு வந்துவிடலாம். ஒரு தடவை இந்தியா போயிருந்த போது என்னுடன் ஊரில் வகுப்பில் படித்த ஒருவர் வந்து கதைத்துக் கொண்டிருந்தார். திரும்பி எப்போது போகின்றீர்கள் என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்லும் முன்பு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை எதேச்சையாகப் பார்த்தேன். நீங்கள் வெளிநாடுகளில் நேரத்துடன் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார் அவர். அவர் சொன்னதும் சரியே என்று தோன்றியது. அல்லாவிட்டால் நான் ஏன் அந்தக் கடிகாரத்தைப் பார்த்திருக்கவேண்டும். ஆனால் சில மாதங்களில் அவர் மாரடைப்பால் இறந்து போனார் என்ற செய்தி கிடைத்தது. மிகவும் கவலையாகப் போனது. இவை என்னவென்று இன்றும் புரியவில்லை. அண்ணனுக்கு இந்த ஆறுதல் வார்த்தைகள் தேவையில்லை. அவர் தான் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லுகின்றார். சிகிச்சையின் முன் தலைமை சத்திர சிகிச்சை நிபுணர் சிலவற்றை சாதாரணமாக, கதையோடு கதையாக சொல்வது போல சொல்லியிருக்கின்றார். சத்திரசிகிச்சையின் முன் சுவாசப்பைகளை செயலிழக்க செய்வோம், அவை சிகிச்சையின் பின் மீண்டும் செயல்படும் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கின்றார். இதையே தான் இதயத்துக்கும் சொல்லியிருக்கின்றார். ஆனால் அந்த நிபுணர் இவற்றை சொன்ன விதம் அரவமற்றது, தீணடாதது. இவற்றை தெளிவாக தனித்தனியாக நிற்பாட்டி நிற்பாட்டிச் சொன்னால், உங்களின் சிகிச்சையும் நீங்களும் என்று விட்டுவிட்டு ஓடுபவர்களும் இருப்பார்கள். 'அலையும் நீரே........' என்பார்கள். அதாவது வாழ்க்கையில் எல்லாமே அதே வாழ்க்கை தான், அலை கூட அதே நீர் தான் என்பது போல. இப்படி சில தத்துவத்துங்களுடன் தத்துப்பித்தென்று இருந்தாலும், அந்த தலைமை சத்திர சிகிச்சை நிபுணரின் கடைசி நேர வார்த்தைகள் இடையிடயே நினைவில் வந்து துணுக்குற வைக்கின்றன. என்றோ ஒரு நாள் எனக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாக அவர்கள் சொல்லக்கூடும். 'நான்காகக் கூட இருக்கும்..................' என்று நானும் ஒன்றை கதையோடு கதையாக அந்த நிபுணர்களுக்கு சொல்லுவதாக இருக்கின்றேன்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 3 weeks ago
படங்கள் எதுவும் இங்கு பதியமுடியாமல் இருப்பதால், என் வலைத்தளத்தில் பதிவிட்டதின் லிங்க் கீழே தருகிறேன் , முழுமையாக பொருத்தமான படங்களுடன் பார்க்க, நன்றி "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English பகுதி Part: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/29968431062805479/? பகுதி Part: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/30013577051624213/? பகுதி Part: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/30068518139463437/? பகுதி Part: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/30105666255748625/? பகுதி Part: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/30161651290150121/? பகுதி Part: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/30204580629190520/? பகுதி Part: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/30260658360249413/? பகுதி Part: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/30300043636310885/? பகுதி Part: 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/30356005957381319/? பகுதி Part: 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/30399336926381555/? பகுதி Part: 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/30456053434043237/? பகுதி Part: 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/30483223777992869/? பகுதி Part: 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/30526502570331656/?

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 13 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 13 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'பண்டுக அல்லது பண்டுகாபயா' பண்டுவாச (பண்டுவாசுதேவா) வுக்கு பத்து மகன்கள் மற்றும் ஒரு மகள் [சித்ரா / Citta] இருந்தனர். சித்ரா மிகவும் கவர்ச்சிகரமான அழகிய பெண்ணாக இருந்தாள். பண்டுவாச முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் அபய [Abhaya] இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அமிதோதனாரின் பேரன் ஒருவரின் [திகாயுவின் / Dīghāyu] மகன் [திககாமனி / Dighagamani/ காமனி ] பண்டுவாசனின் மகளுடன் [சித்ரா] காதல் தொடர்பு வைத்திருந்தான், மேலும் அபயாவின் முடிசூட்டு விழாவின் போது ஒரு மகன், பண்டுக [Panduka], சித்ராவுக்கு (மகாவம்சத்தின்படி பண்டுகாபயா / Pandukabhaya) பிறந்தான். பண்டுகாவின் மாமா, அபய இறந்தபோது அவனுக்கு இருபது வயது என்றும், அடுத்த பதினேழு ஆண்டுகள் கொள்ளையனாக வாழ்ந்ததாகவும் தீபவம்சம் கூறுகிறது. பின்னர் அவன் தனது தாய் மாமன்கள் ஏழு பேரைக் கொன்று முப்பத்தேழு வயதில் அரியணை ஏறினான். ஆகவே இலங்கையில் பதினேழு ஆண்டுகள் அரசர் இல்லாமல் இருந்தது, ஆனால் ஒரு பிரதிநிதி மன்னருக்குப் பதிலாக நாட்டை நிர்வகித்தார். அதன் பின், பண்டுக நீண்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். தீபவம்சம் பாண்டுகாவை சுமார் ஆறு வசனங்களில் விவரிக்கிறது, ஆனால் மகாவம்சம் இதையே இரண்டு அத்தியாயங்கள், 9 மற்றும் 10 இல் விவரிக்கிறது, இது சுமார் நூற்று முப்பத்தைந்து பாடல்களாக விரிவடைந்து இருக்கிறது. அவர் இறக்கும் போது அவருக்கு நூற்று ஏழு வயது [107 வயது] இருக்க வேண்டும்? என்றாலும் அந்த பழுத்த வயதில் தீவிரமாக ஆட்சி செய்தார் என்று மகாவம்சம் கூறுகிறது. மற்றொரு ஆச்சரியமான நூல் ஆசிரியரின் கண்டுபிடிப்பு? இருப்பினும், இராசவலியில் பண்டுகாபயா 1 மற்றும் பண்டுகாபயா 2 என்ற இரண்டு மன்னர்களின் ஆட்சியில், மொத்தம் நூறு ஆண்டுகாலம் ஆட்சி நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மன்னர்களின் ஆட்சி காலப் பட்டியலைப் பார்க்கவும். தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் உள்ள மன்னர்களின் ஆட்சி கால [இறையாண்மைகளின்] பட்டியல் ஏறக்குறைய ஒத்ததாக உள்ளது. இருப்பினும், பாண்டுகாபயா1 க்குப் பிறகு உள்ள கால அட்டவனையுடன் ஒப்பிடும் போது, இராசவலியாவில் உள்ள பட்டியல், பெயர்கள், ஒழுங்கு மற்றும் ஆட்சியின் நீளம் ஆகியவற்றில் மிகவும் குழப்பம் காணப்படுகிறது. மகாவம்சத்தில் பண்டுவாசுதேவ (தீபவம்சத்தில் பண்டுவாச) முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார், இராசவலியவில் பண்டுவாசுதேவ முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அபய இராசவலியத்தின்படி இருபத்தி இரண்டு ஆண்டுகளும் மற்ற இரண்டு நூலின் வரலாற்றின்படி இருபது ஆண்டுகளும் ஆட்சி செய்தார். மேலே கூறியது போல், இராசவலிய மிகவும் பிற்பகுதியில் தொகுக்கப் பட்டது. மேலும் மற்ற இரண்டு வரலாறுகளிலும் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. பகுண்ட [Pakunda] தீபவம்சத்தில் பண்டுக என்றும் பகுண்டாக [Panduka and Pakundaka] என்றும் அழைக்கப்படுகிறார், ஆனால் மகாவம்சத்தில் பாண்டுகாபயா [Pandukabhaya] என்று அழைக்கப்படுகிறது. சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் இளையகுமாரன் பண்டுவாசதேவ, வியனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டுவாசதேவனின் தாய் ஒரு தமிழிச்சி எனத் தெரியவருகிறது. அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டுகவின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். இதில் இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால், பண்டுகவின் தந்தை, கௌதம புத்தரின் தந்தையின் இளைய சகோதரன், அமிதோதனாரின் பேரன் திகாயுவின் [Dīghāyu] மகன் ஆகும். இதன் மூலம் மீண்டும் புத்தருடன் இலங்கைக்கு இரத்த தொடர்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதாகும். Part: 13 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Panduka or Pandukabhaya' Panduvasa (Panduvasudeva) had ten sons and one daughter, very fascinating girl. Panduvasa reigned for thirty years, and his son Abhaya ruled after him for twenty years. The son of one of the Amitodana’s grandson had affairs with the daughter of Panduvasa, and a son Panduka (Pandukabhaya as per the Mahavamsa) was born, the same time as Abhaya’s consecration. Dipavamsa simply says that Panduka was twenty years when his uncle Abhaya died, and lived as a robber for the next seventeen years. Then he killed seven of his maternal uncles and ascended to the throne at the age of thirty-seven. Lanka was without king for seventeen years, but with a regent. Panduka ruled for lengthy seventy years. The Dipavamsa describes Panduka in about six verses, but the Mahavamsa elaborate the same in two chapters, 9 and 10, running into about one hundred and thirty five verses. He must be one hundred and seven years old [107 years] when he died, ruled actively at that ripe age, another invention. There are, however, two Pandukabhayas, Pandukabhaya1 and Pandukabhaya2, in the Rajavaliya with the combined reign of one hundred years. Refer the List of Sovereigns in this regard. The list of sovereigns in the Dipavamsa and the Mahavamsa is almost similar. However, the list in the Rajavaliya is much confusing when compared with the other two chronicles after thePandukabhaya1, in the names, order and the lengths of reigns. Panduvasudeva in the Mahavamsa (Panduvasa in the Dipavamsa) ruled for thirty years, Panduvasudeva of the Rajavaliya ruled for thirty-two years. Abhaya ruled for twenty-two years as per the Rajavaliya and twenty years as per the other two chronicles. As stated above, the Rajavaliya is composed much later, and differs very much from the other two chronicles. Pakunda is also known as Panduka and Pakundaka in the Dipavamsa, but known as Pandukabhaya in the Mahavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 14 தொடரும் / Will Follow

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
விடுதலைப்புலிகள் மீண்டும் நாட்டில் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று பிரச்சனையை திசை திருப்புவது, அல்லது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிள்ளையானை போட்டுத்தள்ளி அதை புலிகளின்மேல் சுமத்துவது, ஏதோ ஒரு பயங்கரத்திடம் தீட்டப்பட்டிருக்கிறது இதன் பின்னணியில். இப்போ எதிரிகளுக்கு எதிராக நாளாந்தம் சாட்சிகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிழக்கில் ஊர்காவல் படை, ஹிஸ்புல்லா செய்த அட்டூழியங்களும் வருகின்றன. என்ன செய்து தம்மை காப்பாற்றலாம் என்கிற நிலையில் பலர் அறிவிழந்து விசர் பிடித்த ந** போல ஓடுகிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்க அதன் ஏவல்களும், இந உணர்வாளர்களும் சிலதை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். புலிகள் சிறாரை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று குற்றம் சுமத்தியவர்கள், செம்மணியில் பொம்மைகளோடும் பள்ளி பைகளோடும் இணைந்த சிறுவர்களின் உடல்களை இராணுவத்தினரின் உடல்கள் என்று உரிமை கொண்டாடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளலாம்? சிங்களம் எது வேண்டுமானாலும் சொல்லும் செய்யும். அதனை சார்ந்தவர்களும் அதனை ஆமோதிப்பார்கள். இங்கு வயது முக்கியமல்ல அதன் பின்னால் உள்ள செயலே முக்கியம்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

1 month 3 weeks ago
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் பலஸ்தீனைத் தனியரசாக பிரான்ஸ் அங்கீகரிப்பதாக அறிவிக்கப் போவதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.