Aggregator

தொதல் அல்வா.

1 month 3 weeks ago

images?q=tbn:ANd9GcQGxxLCdbr6CmGQVELI3Wl

ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா?


இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன்.


நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர்.


தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க.

இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர்.

படித்ததில் பிடித்தது.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

1 month 3 weeks ago
என்ன செய்யிறது... சின்னனிலை கரட் சாப்பிடச் சொன்னவை. 🥕 நான்தான்... அதை சாப்பிடாமல் விட்டதால் வந்த வினை. 😂

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

1 month 3 weeks ago
அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂 ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம். உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான். இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

1 month 3 weeks ago
கால்தான் போச்சுது என்று பார்த்தால் கண்ணும் போச்சா.🫣

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

1 month 3 weeks ago
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்றால் என்ன? Published By: RAJEEBAN 25 JUL, 2025 | 03:19 PM bbc பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிப்பது பெரும்பாலும் குறியீட்டு ரீதியான ஆனால் ஆழமான அரசியல் நடவடிக்கையாக காணப்படுகின்றது. இது ஒரு வலுவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது - மத்திய கிழக்கில் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இரு அரசு தீர்வு இஸ்ரேல் அரசுடன் ஒரு பாலஸ்தீன அரசு. பிரான்ஸ் போன்ற ஒரு பெரிய ஐரோப்பிய சக்தி இந்த நடவடிக்கையை எடுக்கும்போது அது பாலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமை உள்ளதை வெளிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு அவர்களின் பல தசாப்த கால ஆசை ஒரு நாள் வெற்றிபெறும் என்ற மங்கிப்போகும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஆனால் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் திட்டவட்டமானது - பாலஸ்தீன அரசு என்பது அதனிடம் இல்லை. மே 2024 இல் ஸ்பெயின் நோர்வே மற்றும் அயர்லாந்தைத் தொடர்ந்து பிரான்சின் நடவடிக்கை இஸ்ரேலின் எதிர்ப்பை கடினமாக்கியுள்ளது மற்றும் எதிர்கால பாலஸ்தீன அரசின் நிலமான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. அதனால்தான் பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர் "மிகப் பெரிய தாக்கத்தை" ஏற்படுத்தும் போது மட்டுமே இங்கிலாந்து அதைச் செய்யும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால் பாலஸ்தீனிய துன்பம் தீவிரமடைந்து தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போது பிரிட்டன் மற்றும் பிற உலக சக்திகள் மீது - அது மிகவும் தாமதமாகிவிடும் முன் - ஒரு நிலைப்பாட்டை எடுக்க அழுத்தம் அதிகரிக்கிறது. காலம்தான் எல்லாமே என்று அடிக்கடி கூறப்படுகிறது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் பல மாதங்களாக சூசகமாக கூறி வந்தது. காசாவில் நிலவும் அவநம்பிக்கையான சூழ்நிலை குறித்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதைத் தடுக்க முடியாததால் உலக வல்லரசுகளிடையே ஆழ்ந்த விரக்திக்கு மத்தியில் இறுதியாக தனது நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துள்ளது. செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த நடவடிக்கையை முறையாக எடுக்கும்போது மற்ற உலக வல்லரசுகள் அதன் வழியைப் பின்பற்றும் என்று பிரான்ஸ் நம்புகிறது. நிச்சயமாக பெரும்பாலான நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன; மே 2024 இல் ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வேயும் அங்கீகரித்தன. பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஜி7 அமைப்பின் முதல் உறுப்பினர். பிபிசி ரேடியோ 4 இன் தி வேர்ல்ட் டுநைட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் இதை ஒரு "பெரிய அறிவிப்பு" என்று கூறினார். இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கிறது அங்கீகாரத்தை "பயங்கரவாதத்திற்கான வெகுமதி" என்று கண்டிக்கிறது. அமெரிக்காவிற்கும் இந்த நேரம் தவறானது மற்றும் "பொறுப்பற்றது". ஆனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் நாளுக்கு நாள் இருண்டதாகத் தோன்றுவதால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் சில இராஜதந்திர ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இப்போது அதிகரித்து வருகிறது. https://www.virakesari.lk/article/220918

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 month 3 weeks ago

கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:44 PM

image

சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர்.

வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர்.

கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள்.

srinath_3.jpg

அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம்.

என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின்  சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.

நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள்.

அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம்.

அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும்  சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். 

எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில்  எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன்.

காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில்  ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - 

நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை.

இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன்.

ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார்.

எனது நகரான வாதுவையில்  தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள்  அன்பாக நட்புடன் பழகுபவர்கள்.

அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார்.

பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது,

ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற  தகவல் எனக்கு கிடைத்தது,

அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன.

அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார்.

25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன.

ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு  கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார்.

மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது.

வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும்.

ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம்,

13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள்,

நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த  சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள்.

அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம்.

ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்,

இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம்.

கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல்.

நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும்  அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக  வெட்கப்படுகின்றோம்.

https://www.virakesari.lk/article/220703

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 month 3 weeks ago
கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:44 PM சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர். வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர். கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள். அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம். என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின் சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது. நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார். அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள். அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம். அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும் சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில் எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன். காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில் ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை. இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன். ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார். எனது நகரான வாதுவையில் தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள் அன்பாக நட்புடன் பழகுபவர்கள். அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார். பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது, ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது, அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார். 25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன. ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார். மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது. வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும். ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம், 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள், நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள். அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள். தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம். ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம், இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம். கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல். நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும் அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக வெட்கப்படுகின்றோம். https://www.virakesari.lk/article/220703

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

1 month 3 weeks ago
போதைப் பொருள் கடத்திய இந்த கனடா பிரஜை... சிங்களம் அல்லது முஸ்லீம் போலுள்ளது. அதுதான்... அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளார்கள். தமிழன் என்றால்... பெயர், ஊர், திருமணம் ஆனவர் என்றால் மனைவியின் பெயர், பிள்ளைகளின் பெயர், கனடா விலாசத்துடன், ஊர் விலாசத்தையும் சேர்த்தே பிரசுரித்து சுய இன்பம் காண்பார்கள், இந்த கிலிசு கெட்ட ஊடகங்கள்.

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
தாய்லாந்து, கம்போடியா மோதலின் பின்னணி என்ன? போர் மூளும் ஆபத்தா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போடியாவின் ஒடார் மீஞ்சே மாகாணத்தின் ஒரு தெருவில் ரஷ்ய தயாரிப்பான பிஎம்-21 ராக்கெட் லாஞ்சரை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம் கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & கேவின் பட்லர் பிபிசி நியூஸ் 38 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து, கம்போடியா இடையே நிலவும் தொடர் பதற்றம் வியாழக்கிழமையன்று (ஜூலை 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. அதன் விளைவாகக் குறைந்தபட்சம் 12 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கம்போடியா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா, எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த மோதல் தொடங்கியதற்குக் காரணம் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. கம்போடியா ஏவுகணைகளை ஏவியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. கம்போடியாவின் ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதல் எப்படி ஏற்பட்டது? அது போராக உருவெடுக்கும் ஆபத்து உள்ளதா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, எல்லையை ஒட்டிய பகுதியில் ஜூலையில் சண்டை தொடங்கியது பதற்றத்திற்கு காரணம் என்ன? இது சமீபத்தில் தொடங்கிய சச்சரவு இல்லை. தாய்லாந்து, கம்போடியா இடையிலான சர்ச்சை ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. அதாவது, கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது. ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக பதிவு செய்வதற்கு கம்போடியா முயன்றதே அதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது நடந்த மோதல்களில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம், மோதலில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது. அண்மை வாரங்களில் இரு தரப்பு எல்லைகளிலும் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளன. அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கூறுவது என்ன? பட மூலாதாரம்,BBC/LULU LUO படக்குறிப்பு, ஜோய் ஃபாசுவன் தனது இரு பேரக் குழந்தைகளுடன் தாய்லாந்தின் சுரின் மாகாண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வேறு வேறு விளக்கங்களை அளித்துள்ளன. வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:30 மணிக்கு எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது. அதன் பின்னர், "ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர். தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை" என தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு, கம்போடிய வீரர்கள் காலை சுமார் 08:20 மணிக்கு தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார். பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாக கம்போடியா மீது தாய்லாந்து குற்றம் சுமத்தியுள்ளது. தாய்லாந்தை குற்றம் சாட்டும் கம்போடியா ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் காலை 06:30 மணிக்கு மோதலைத் தொடங்கியதாக கம்போடியா கூறுகிறது. அதாவது, முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் பின்னர் "தாய்லாந்து வீரர்கள் காலை 7:00 மணிக்குப் பிறகு ஒரு டிரோனை செலுத்தியதாகவும், சுமார் 08:30 மணிக்கு வானத்தை நோக்கி சுட்டதாகவும்" கம்போடியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோசியாட்டா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES காலை 08:46 மணிக்கு, தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், "அதனால், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை" என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவற்றோடு, தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சோசியாட்டா குற்றம் சாட்டினார். தாய்லாந்து, கம்போடியா இடையே போர் வெடிக்குமா? கம்போடியாவுடனான பிரச்னை "நுட்பமானது" என்றும், அதைக் கவனமாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுத் தீர்க்க வேண்டும் என்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறினார். இந்தப் பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், "ஆயுதப் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் படை மூலம் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மனெட் கூறினார். கடந்த காலங்களில் தீவிரமான துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று இருந்தாலும் பதற்றம் விரைவிலேயே தணிக்கப்பட்டது. அதே பாதை மீண்டும் தேர்வு செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் ஜோனதன ஹெட் கருதுகிறார். அதேவேளையில், தற்போது இந்த சண்டையில் இருந்து நம்பிக்கையுடன் பின்வாங்கத் துணியும் தலைவர்கள் இருதரப்பிலும் இல்லை என்றும் அவர் எச்சரிக்கிறார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு செல்வது பாதுகாப்பானதா? தற்போது வரை இந்த மோதல் குறிப்பிட்ட ஒரு பகுயில் மட்டுமே நடைபெறுகிறது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளை இந்தப் பகுதியில் "குறிப்பாக பிரேஹ் விஹேர் கோவில், தா இக்வை கோவில், தா முயென் தோம் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கவனம்" செலுத்துமாறு ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தாய்லாந்து எல்லையைத் தவிர்க்கும்படி கம்போடியாவில் இருக்கும் தனது குடிமக்களை சீனா வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4e4z94129o

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

1 month 3 weeks ago
நாடாளுமன்றத்திலும் "இந்தியன்" திரைப்படத்தை ஒளிபரப்பி அங்கிருக்கும் ஊழல்வாதிகளை வெருட்ட வேண்டும்.🤣

இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்

1 month 3 weeks ago
Published By: VISHNU 20 JUL, 2025 | 06:08 PM ஆர்.சேது­ராமன் இலங்­கையில் முத­லீடு செய்­வதில், ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் உட்­பட அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, ஊழலை ஒழிப்­பதும் நல்­லாட்­சியும் அவ­சி­ய­மான முன்­நி­பந்­த­னை­களாக உள்­ளன என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா அண்மையில் கூறி­யுள்ளார். வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு இலங்கை தீவி­ர­மாக முயன்­று­வரும் நிலையில், ஜப்­பா­னிய தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடை­பெற்ற 4 ஆவது ஜப்­பா­னிய –இலங்கை பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு கொள்கை உரை­யா­ட­லின்­போது அவர் இதனை கூறினார். ஜப்பான் வெளி­யு­றவு பிரதி உதவி அமைச்­சரும், ஜப்­பா­னிய சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு பணி­ய­கத்தின் இஷி­சுகி ஹிடியோ, இலங்கை நிதி­ய­மைச்சின் புதிய செய­லாளர் கலா­நிதி ஹர்­ஷன சூரி­யப்­பெ­ரும ஆகியோர் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் நடை­பெற்­றி­ருந்­தது. இலங்­கையில் ஊழலால் பாதிக்­கப்­பட்ட ஜப்பான் இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு நீண்­ட ­கா­ல­மாக கைகொ­டுத்­து­வரும் ஜப்பான், இலங்­கையில் ஊழல்­களை ஒழிக்க வேண்­டி­யதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கி­றது. ஊழல் ஒழிப்­புக்­காக பல்­வேறு உத­வி­க­ளையும் இலங்­கைக்கு ஜப்பான் வழங்­கி­வ­ரு­கி­றது. கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃ­பைண்டர் அறக்­கட்­டளை ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா, இலங்­கையில் நில­விய ஊழல்­களால் பாதிக்­கப்­பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்­ள­தாக குமு­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இலங்­கையில் முத­லீ­டு­களைச் செய்­வதில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கவும் கடந்த காலங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அகியோ இசோ­மாட்­டா­வுக்கு முன்னர், இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பதவி வகித்த மிஸு­கோஷி ஹிடேக்­கியும் இலங்­கையில் ஊழல்­களால் ஏற்­படும் பாதிப்­புகள் குறித்து பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கருத்து தெரி­வித்­தி­ருந்தார். கோட்­டா­பய ராஜ­பக் ஷ காலத்தில், ஜப்­பா­னிய நிறு­வ­ன­மொன்­றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதே­வேளை, சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான ஜப்­பா­னிய முக­வ­ரத்தின் (ஜெய்க்கா) உத­வி­யுடன் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான, இலகு ரயில் திட்­டத்தை கோட்­டா­பய ராஜ­பக் ஷ அர­சாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு ­த­லை­பட்­ச­மாக இரத்து செய்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இது குறித்து ஜப்பான் கடும் அதி­ருப்தி கொண்­டி­ருந்­தது. அதன்பின் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் ஜப்­பா­னிய உத­வி­யு­ட­னான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முடங்­கி­யி­ருந்­தன. 2023 மே மாதம் அப்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க டோக்­கி­யோ­வுக்கு விஜயம் செய்து ஜப்­பா­னிய பிர­தமர் பூமியோ கிஷி­டாவை சந்­தித்­த­போது, மேற்­படி திட்டம் இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்­காக இலங்கை சார்பில் மன்­னிப்பு கோரினார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு 2 மாதங்­க­ளுக்கு முன்னர், இலங்­கையில் 11 அபி­வி­ருத்தித் திட்­டப்­ப­ணி­களை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது. அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன், இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் மீள ஆரம்­பிக்­கப்­படும் என்­பதை அப்­போ­தைய ஜப்­பா­னிய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி மீள உறு­திப்­ப­டுத்­தினார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஒக்­டோபர் முற்­ப­கு­தியில் 'ஜப்­பா­னிய அபி­வி­ருத்தி வர­லாறும் இலங்­கைக்­கான செய்­தி­களும்' என்ற தலைப்பில் சொற்­பொ­ழி­வு­வொன்றை நிகழ்த்­திய அப்­போ­தைய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி, இலங்­கையின் ஊழல்­களை பற்­றிய தனது அவ­தா­னிப்பை வெளி­யிட்டார். 'இலங்­கைக்கு நான் வந்­தது முதல் அவ­தா­னித்­ததில் இருந்து, இலங்­கையில் ஊழல் தொடர்பில் இரு விட­யங்­களை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். முத­லா­வ­தாக, ஊழ­லா­னது தலை­வர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு கார­ண­மா­கி­றது. தலை­வர்கள் ஊழலில் ஈடு­ப­டும்­போது மக்கள் நாட்டின் பொறுப்­புள்ள குடி­மக்­க­ளாக இருப்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­வதை அது தடுக்­கி­றது. இது வரி செலுத்­து­வோ­ருக்கு வரி ஏய்ப்பு செய்ய வச­தி­யான சாக்­குப்­போக்­கு­களை வழங்­கு­கி­றது. இரண்­டா­வ­தாக, இலங்கை வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்க விரும்­பும்­போது இது மிகவும் தீங்கு விளை­விக்­கி­றது' என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 'ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் அவற்றின் கடப்­பா­டு­களை இறுக்­க­மாக பின்­பற்றி வரு­கின்­றன அதனால் அவை இலஞ்சம் வழங்­க­மாட்டா. இலங்­கையில் ஊழல் கலா­சாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்­பா­னிய முத­லீ­டுகள் வரு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை' எனவும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார். ஊழலை ஒழிப்­ப­தற்கு உறு­தி ­பூண்­டுள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை நாட்டின் புதிய தலை­வ­ராக இலங்கை மக்கள் தெரி­வு­செய்­துள்ள நிலையில், நீண்­ட­ கா­ல­மாக நாட்டை சீர்­கு­லைத்துள்ள ஊழலை ஒழிப்­ப­தற்கு அரிய வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்­டேக்கி அப்­போது கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பத­வி­யேற்ற அக்­கியோ இசோ­மாட்­டாவும், இலங்­கையில் ஊழல்­களின் பாதிப்­புகள் குறித்து கார­சா­ர­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார். ஊழல் ஒழிப்­புக்­காக 2.5 மில்­லியன் டொலர் உதவி ஊழலை ஒழிப்­ப­தற்கு உதவும் ஜப்­பானின் திட்­டங்­களின் வரி­சையில், இலங்­கையில் ஊழல் எதிர்ப்பு பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­தவும், பொது நிர்­வா­கத்தில் வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்­கவும் மூன்றாண்டுத் திட்­டத்­துக்கு 2.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மானி­யத்தை வழங்கும் ஒப்­பந்­த­மொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. ஐக்­கிய நாடுகள் அபி­விருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி) உத­வி­யுடன் செயல்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டத்­துக்கு ஜப்பான் நிதி அளிக்­கி­றது. இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாண­யக்­கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரண­சிங்க, இலஞ்ச ஊழல்கள் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்களான கே.பி. ராஜ­பக் ஷ, சேதிய குண­சே­கர, ஜனா­தி­பதி செய­லாளர் கலா­நிதி நந்­திக்க கும­நா­யக்க ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு நிறு­வன திறனை மேம்­ப­டுத்­துதல், பொது நிர்­வாகம், முத­லீ­டு­களில் வெளிப்­படைத் தன்­மையை மேம்­ப­டுத்­துதல், திற­மை­யான வழக்கு விசா­ரணை மற்றும் பொது பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், இத்­திட்­ட­ம், நிறு­வ­னங்­களில் ஊழலைத் தடுப்­ப­தற்கு ஆளுகை பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­துதல், விசா­ரணை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­துதல், பங்­கு­தா­ரர்­க­ளி­டையே ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்­துதல், குடி­மக்­களை மேம்­ப­டுத்­துதல், மற்றும் ஊழல் வழக்­குகள் தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களின் தரத்தை வலுப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்­பாக இளை­ஞர்கள், ஊடக வல்­லு­நர்கள் மற்றும் குழந்­தைகள் மத்­தியில் ஊழல் எதிர்ப்பு முயற்­சி­களில் குடி­மக்­களின் ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கவும் முயல்­கி­றது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஐ.நா. அபி­வி­ருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி.) வதி­விடப் பிர­தி­நிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்­கொள்ள தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் ­நி­லையில், ஜப்பனிய அரசு, மக்­களின் தாரா­ள­மான நிதி­யு­த­வி­யுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வு­ட­னான இந்த கூட்­டாண்மை, நல்­லாட்­சியை நோக்­கிய எமது கூட்டு பய­ணத்தில் ஒரு முக்­கிய தரு­ணத்தை குறிக்­கி­றது. இந்தத் திட்­டத்தின் தொடக்கம், நிறு­வ­னங்­களை வலுப்­ப­டுத்­து­வது மட்­டு­மல்ல, இது பொது நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­பது, குடி­மக்­களை மேம்­ப­டுத்­து­வது, அனை­வ­ருக்கும் சம­மான வாய்ப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பா­னது. 2025 – 2029 காலத்­துக்­கான இலங்­கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதன் மூலம், நிலை­யான வளர்ச்­சிக்கு அமைப்பு ரீதி­யான தடை­களை அகற்றி, வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது. பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது. பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது. https://www.virakesari.lk/article/220488

இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்

1 month 3 weeks ago

Published By: VISHNU

20 JUL, 2025 | 06:08 PM

image

ஆர்.சேது­ராமன்

இலங்­கையில் முத­லீடு செய்­வதில், ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் உட்­பட  அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, ஊழலை ஒழிப்­பதும் நல்­லாட்­சியும் அவ­சி­ய­மான முன்­நி­பந்­த­னை­களாக உள்­ளன என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா அண்மையில் கூறி­யுள்ளார்.

வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு இலங்கை தீவி­ர­மாக முயன்­று­வரும் நிலையில், ஜப்­பா­னிய தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடை­பெற்ற 4 ஆவது ஜப்­பா­னிய –இலங்கை  பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு கொள்கை உரை­யா­ட­லின்­போது அவர் இதனை கூறினார்.

ஜப்பான் வெளி­யு­றவு பிரதி உதவி அமைச்­சரும், ஜப்­பா­னிய சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு பணி­ய­கத்தின் இஷி­சுகி ஹிடியோ, இலங்கை நிதி­ய­மைச்சின் புதிய செய­லாளர்  கலா­நிதி ஹர்­ஷன சூரி­யப்­பெ­ரும ஆகியோர் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் நடை­பெற்­றி­ருந்­தது.

இலங்­கையில் ஊழலால் பாதிக்­கப்­பட்ட ஜப்பான்

இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு நீண்­ட  ­கா­ல­மாக கைகொ­டுத்­து­வரும்   ஜப்பான், இலங்­கையில் ஊழல்­களை ஒழிக்க வேண்­டி­யதை  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கி­றது. ஊழல் ஒழிப்­புக்­காக பல்­வேறு உத­வி­க­ளையும் இலங்­கைக்கு ஜப்பான் வழங்­கி­வ­ரு­கி­றது.

கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃ­பைண்டர் அறக்­கட்­டளை ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா, இலங்­கையில் நில­விய ஊழல்­களால் பாதிக்­கப்­பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்­ள­தாக குமு­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் முத­லீ­டு­களைச் செய்­வதில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கவும் கடந்த காலங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அகியோ இசோ­மாட்­டா­வுக்கு முன்னர், இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பதவி வகித்த மிஸு­கோஷி ஹிடேக்­கியும் இலங்­கையில் ஊழல்­களால் ஏற்­படும் பாதிப்­புகள்  குறித்து பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

கோட்­டா­பய ராஜ­பக் ஷ காலத்தில், ஜப்­பா­னிய நிறு­வ­ன­மொன்­றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை, சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான ஜப்­பா­னிய முக­வ­ரத்தின் (ஜெய்க்கா) உத­வி­யுடன் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான, இலகு ரயில் திட்­டத்தை கோட்­டா­பய ராஜ­பக் ஷ அர­சாங்கம் 2021 ஆம் ஆண்டில்  ஒரு ­த­லை­பட்­ச­மாக இரத்து செய்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இது குறித்து ஜப்பான் கடும் அதி­ருப்தி கொண்­டி­ருந்­தது. அதன்பின் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் ஜப்­பா­னிய உத­வி­யு­ட­னான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முடங்­கி­யி­ருந்­தன.

2023 மே மாதம் அப்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க டோக்­கி­யோ­வுக்கு விஜயம் செய்து ஜப்­பா­னிய பிர­தமர் பூமியோ கிஷி­டாவை சந்­தித்­த­போது,  மேற்­படி திட்டம் இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்­காக இலங்கை சார்பில் மன்­னிப்பு கோரினார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு 2 மாதங்­க­ளுக்கு முன்னர்,  இலங்­கையில் 11 அபி­வி­ருத்தித் திட்­டப்­ப­ணி­களை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது.

அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன், இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் மீள ஆரம்­பிக்­கப்­படும் என்­பதை  அப்­போ­தைய ஜப்­பா­னிய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி மீள உறு­திப்­ப­டுத்­தினார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஒக்­டோபர் முற்­ப­கு­தியில்  'ஜப்­பா­னிய அபி­வி­ருத்தி வர­லாறும் இலங்­கைக்­கான செய்­தி­களும்' என்ற தலைப்பில் சொற்­பொ­ழி­வு­வொன்றை நிகழ்த்­திய அப்­போ­தைய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி, இலங்­கையின் ஊழல்­களை பற்­றிய தனது அவ­தா­னிப்பை வெளி­யிட்டார்.

'இலங்­கைக்கு நான் வந்­தது முதல் அவ­தா­னித்­ததில் இருந்து, இலங்­கையில் ஊழல் தொடர்பில் இரு விட­யங்­களை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். முத­லா­வ­தாக, ஊழ­லா­னது தலை­வர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு கார­ண­மா­கி­றது.

தலை­வர்கள் ஊழலில் ஈடு­ப­டும்­போது மக்கள் நாட்டின் பொறுப்­புள்ள குடி­மக்­க­ளாக இருப்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­வதை அது தடுக்­கி­றது. இது வரி செலுத்­து­வோ­ருக்கு வரி ஏய்ப்பு செய்ய வச­தி­யான சாக்­குப்­போக்­கு­களை வழங்­கு­கி­றது.

இரண்­டா­வ­தாக, இலங்கை வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்க விரும்­பும்­போது இது மிகவும் தீங்கு விளை­விக்­கி­றது' என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

'ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் அவற்றின்  கடப்­பா­டு­களை இறுக்­க­மாக பின்­பற்றி வரு­கின்­றன அதனால் அவை இலஞ்சம் வழங்­க­மாட்டா. இலங்­கையில் ஊழல் கலா­சாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்­பா­னிய முத­லீ­டுகள் வரு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை' எனவும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

ஊழலை ஒழிப்­ப­தற்கு உறு­தி  ­பூண்­டுள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை நாட்டின் புதிய தலை­வ­ராக இலங்கை மக்கள் தெரி­வு­செய்­துள்ள நிலையில், நீண்­ட­ கா­ல­மாக நாட்டை சீர்­கு­லைத்துள்ள ஊழலை ஒழிப்­ப­தற்கு அரிய வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது எனவும் முன்னாள்  தூதுவர் ஹிட்­டேக்கி அப்­போது கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பத­வி­யேற்ற அக்­கியோ இசோ­மாட்­டாவும், இலங்­கையில் ஊழல்­களின் பாதிப்­புகள் குறித்து கார­சா­ர­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.

ஊழல் ஒழிப்­புக்­காக 2.5 மில்­லியன் டொலர் உதவி

ஊழலை ஒழிப்­ப­தற்கு உதவும் ஜப்­பானின் திட்­டங்­களின் வரி­சையில், இலங்­கையில் ஊழல் எதிர்ப்பு பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­தவும், பொது நிர்­வா­கத்தில் வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்­கவும் மூன்றாண்டுத் திட்­டத்­துக்கு 2.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மானி­யத்தை வழங்கும் ஒப்­பந்­த­மொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

ஐக்­கிய நாடுகள் அபி­விருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி) உத­வி­யுடன் செயல்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டத்­துக்கு ஜப்பான் நிதி அளிக்­கி­றது.  

இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின்  இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர்.  நீதி அமைச்சர் ஹர்ஷா நாண­யக்­கார,  சட்ட மா அதிபர் பாரிந்த ரண­சிங்க, இலஞ்ச ஊழல்கள் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்களான கே.பி. ராஜ­பக் ஷ, சேதிய குண­சே­கர, ஜனா­தி­பதி செய­லாளர் கலா­நிதி நந்­திக்க கும­நா­யக்க   ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு நிறு­வன திறனை மேம்­ப­டுத்­துதல், பொது நிர்­வாகம், முத­லீ­டு­களில் வெளிப்­படைத் தன்­மையை மேம்­ப­டுத்­துதல்,  திற­மை­யான வழக்கு விசா­ரணை மற்றும் பொது பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், இத்­திட்­ட­ம், நிறு­வ­னங்­களில் ஊழலைத் தடுப்­ப­தற்கு ஆளுகை பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­துதல், விசா­ரணை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­துதல், பங்­கு­தா­ரர்­க­ளி­டையே ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்­துதல், குடி­மக்­களை மேம்­ப­டுத்­துதல், மற்றும் ஊழல் வழக்­குகள் தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களின் தரத்தை வலுப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்­பாக இளை­ஞர்கள், ஊடக வல்­லு­நர்கள் மற்றும் குழந்­தைகள் மத்­தியில் ஊழல் எதிர்ப்பு முயற்­சி­களில் குடி­மக்­களின் ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கவும் முயல்­கி­றது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஐ.நா. அபி­வி­ருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி.) வதி­விடப் பிர­தி­நிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்­கொள்ள தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் ­நி­லையில், ஜப்பனிய அரசு, மக்­களின் தாரா­ள­மான நிதி­யு­த­வி­யுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வு­ட­னான இந்த கூட்­டாண்மை, நல்­லாட்­சியை நோக்­கிய எமது கூட்டு பய­ணத்தில் ஒரு முக்­கிய தரு­ணத்தை குறிக்­கி­றது. இந்தத் திட்­டத்தின் தொடக்கம், நிறு­வ­னங்­களை வலுப்­ப­டுத்­து­வது மட்­டு­மல்ல, இது பொது நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­பது, குடி­மக்­களை மேம்­ப­டுத்­து­வது, அனை­வ­ருக்கும் சம­மான வாய்ப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பா­னது. 2025 – 2029 காலத்­துக்­கான இலங்­கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதன் மூலம், நிலை­யான வளர்ச்­சிக்கு அமைப்பு ரீதி­யான தடை­களை அகற்றி, வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது.

பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது.

பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/220488

திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

1 month 3 weeks ago

அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

கட்டுரை தகவல்

  • மாயகிருஷ்ணன் கண்ணன்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது.

இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.

அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.

சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர்.

'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ்.

"கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர்.

கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

"கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன்

அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன்.

கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு

இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyg8l17333o

திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

1 month 3 weeks ago
அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது. இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? சர்ச்சையின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர். 'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ். "கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர். கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார். "கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன். கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார். முகமது பின் துக்ளக்: மக்களை கொடூரமாக மிரட்டி டெல்லியை மொத்தமாக காலி செய்ய வைத்தது ஏன்? கன்வார் யாத்திரை: உ.பி.யில் முஸ்லிம் உணவகங்கள், ஊழியர்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு ஔரங்கசீப் பற்றி எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்சிஇஆர்டி செய்த மாற்றங்களால் சர்ச்சை அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் 'ஏழு வகையறா' யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg8l17333o

இந்தியாவில் பாடசாலை மேற்கூரை இடிந்து விபத்து ; 7 மாணவர்கள் உயிரிழப்பு

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 25 JUL, 2025 | 01:36 PM இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/220911

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

1 month 3 weeks ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது. https://adaderanatamil.lk/news/cmdi5df1o01m2qp4kmm93cckb

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

1 month 3 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார்.

சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

https://adaderanatamil.lk/news/cmdi5df1o01m2qp4kmm93cckb