Aggregator

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
தாய்லாந்து கம்போடிய படையினர் எல்லையில் மோதல் - விமான தாக்குதல்கள் 24 JUL, 2025 | 12:03 PM தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது. தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தாய்லாந்து அதிகாரிகள் எல்லையில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன. தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன. இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/220795

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

1 month 3 weeks ago
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம் 24 JUL, 2025 | 05:41 PM நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று வியாழக்கிழமை (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள "விடுதலை விருட்சத்துக்கான " விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது. இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய "துருவேறும் கைவிலங்கு" நூல் அறிமுகமும் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. இன்றைய தினம் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளையும் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/220848

அப்பாவை விடுதலை செய்யுமாறு எல்லா அரசாங்கங்களையும் கேட்டுள்ளோம் - இந்த அரசாவது விடுதலை செய்யவேண்டும் - ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்

1 month 3 weeks ago
இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகனை விடுதலை செய்யுங்கள் - ஆனந்த சுதாகரனின் தாயார் 24 JUL, 2025 | 07:19 PM இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சிறைக் கூடங்களை காட்சிப்படுத்தப்பட்டு சிறையிலுள்ளவர்களின் உறவுகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர் மேலும் தெரிவித்ததாவது, நான் கடைசியாக ஜூலை மாதம் 17ம் திகதி அவரை போய்பார்த்துவிட்டு வந்தனான், அவருக்கு வழக்கு நடந்துகொண்டிருக்கு, வழக்கில் என்ன முடிவு வரும் என்று தெரியாது. அவருக்கு ஒரு நல்ல முடிவு வரும் என சொல்லியிருக்கினம், ஆனால் எனது மகன் இல்லாமல் கஷ்டம், நான்தான் இந்த பிள்ளைகளை படிப்பித்து வளர்த்துக்கொண்டிருக்கின்றன், இனி எனக்கு வயசும் போயிட்டுது. கண்ணும் விளக்கமில்லை, நெடுக வருத்தம். ஆனமுறையிலை, இவர்களிற்கு எந்தவொரு உதவியும் வேண்டாம், அப்பாவின் ஆதரவுதான்வேண்டும். எனக்கு இருப்பது ஒரேயொரு மகன்தான், அவரை விட்டால் வேறு பிள்ளைகளும் இல்லை, அதனால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என கோரித்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன். இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும், அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும். ஆனந்த சுதாகரன் தற்போது உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரை கொண்டுபோய் போகம்பரை சிறைச்சாலையில் வைத்திருக்கினம், 15 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் இருந்தவர். தற்போது போகம்பரை சிறைச்சாலையில் உரிய வசதிகள் இல்லை, கடும் மன அழுத்தத்தில் சிக்குண்டவர் போல காணப்படுகின்றார், பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது. கடந்த 19 ம் திகதி அவரை பார்த்துவிட்டு வந்தேன், அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் தெரிவித்தார். அது எனக்கு பெரும் மனகுழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. யாரை கேட்பது என தெரியவில்லை. மனித உரிமை குழுவிடம் தெரிவித்தேன். அவர்கள் தற்போதுதானே வழக்கு முடிந்தது அடிக்கடி போய்வராதீர்கள் உங்களிற்கு தூரம் என்றார்கள். தூரம் என்பதற்காக என்னால் விட்டுவிட்டு இருக்க முடியாது, மனக்குழப்பமாக உள்ளது பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் இல்லாத நிலையில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் தாய்பாசமோ தந்தை பாசமோ இல்லாமல் இருக்கின்றார்கள், அன்பாய் அரவணைக்க யாரும் இல்லை. https://www.virakesari.lk/article/220866

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி : இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு Published By: VISHNU 24 JUL, 2025 | 07:21 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அகழ்வு பணிகள் தொடர்பாக வியாழக்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து இன்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நாளில் புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாளை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரும். சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/220867

அப்பாவை விடுதலை செய்யுமாறு எல்லா அரசாங்கங்களையும் கேட்டுள்ளோம் - இந்த அரசாவது விடுதலை செய்யவேண்டும் - ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்

1 month 3 weeks ago
24 JUL, 2025 | 08:45 PM அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது, நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள். நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை. இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம், அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை. ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது, எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது, நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம். இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/220871

அப்பாவை விடுதலை செய்யுமாறு எல்லா அரசாங்கங்களையும் கேட்டுள்ளோம் - இந்த அரசாவது விடுதலை செய்யவேண்டும் - ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்

1 month 3 weeks ago

24 JUL, 2025 | 08:45 PM

image

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது,

நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள்.

நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை.

இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என  கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம், அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை.

ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது,

எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது, நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம். இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும்.

https://www.virakesari.lk/article/220871

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
1- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி சந்தோசம் திருப்பி மற்றும் சந்ததி பற்றிய தூர நோக்கு இருக்கும். எனது சந்ததி விருத்தி சார்ந்த பயமே அவனை தடுக்க காரணம் 2- அது பரதேசி வாழ்க்கை அல்ல அது வேறு ஓர் வாழ்க்கை பரிமானம். எமது அடுத்த அடுத்த தலைமுறை அதற்குள் தான் பயணிக்கும். என்னால் முடிந்த வரை ஒரு தலைமுறையை தள்ளிவிட்டு உள்ளேன். அவ்வளவு தான்.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
விசுகர் ஏற்கனவே தன் பிள்ளைகளின் ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் பற்றிப் பெருமைப் படும் ஒரு தந்தை தான். அவர் மட்டுமா? நாம் எல்லோரும் அப்படித் தான். ஆனால், அதைப் பற்றியா இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்? இதை ஏன் பத்திரிகையில், அல்லது இணைய செய்தித் தளத்தில் போட வேண்டிய தேவை வருகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிப் பட்ட விருப்பு, வெறுப்பு என்று கடந்து போகலாம். ஆனால், இது கருத்துக் களம், எனவே வாழ்த்தும் சொல்லி விட்டு, "இது பெரிய செய்தி அல்ல" என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். மற்றபடி , அனுஜன் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை. அவர் படிப்படியாக முன்னேறி, அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அமெரிக்க Naval Academy இல் பயிற்சி விமானியாகி, விண்கலத்தைச் செலுத்தும் விண்வெளி வீரராகவும் வரக் கூடும். அது செய்தியாகும்! அப்படி வளர வேண்டுமென்பது தான் எங்கள் வாழ்த்தும்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் ; மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 04:30 PM கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/220836

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் ; மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

24 JUL, 2025 | 04:30 PM

image

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது.

IMG_5663.jpeg

IMG_5673.jpegIMG_5659.jpeg

https://www.virakesari.lk/article/220836

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

1 month 3 weeks ago

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார்.

சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன?

பெண் வழக்கறிஞரின் புகார்

சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார்.

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

"இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

"இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது?

ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார்.

மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார்.

இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது.

"ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார்.

இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன்.

"அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

"இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார்.

தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா?

"பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

"இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன."

ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்."

இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன்.

"ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன."

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை."

இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார்.

"இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா?

பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

"குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார். சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன? பெண் வழக்கறிஞரின் புகார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். "இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். "இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது? ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார். மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார். இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது. "ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார். இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார். சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன். "அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. "இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார். அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார். தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா? "பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன். "இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன." ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்." இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன். "ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன." பட மூலாதாரம்,GETTY IMAGES இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை." இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார். இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார். "இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா? பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். "குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார். பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
தகவலுக்கு நன்றி ஐயனே. கட்டுரைகள் எழுதும் போது ஆதாரங்கள் இணைத்தல் தகவல்கள் சரிபார்ப்பிற்கு உதவியாக இருக்கும். நன்றி

"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு]

1 month 3 weeks ago
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு] எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into fragments by domestic walls; Where words come out from the depth of truth; Where tireless striving stretches its arms towards perfection; Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action-- Into that heaven of freedom, my father, let my country awake.” (இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore வங்காள மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali))

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29 ஆரம்பம்

1 month 3 weeks ago
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதியில் பரப்புவதற்கான மணலை வழங்குவதில் இடர்ப்பாடு - அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை 24 JUL, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அவ்வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவை முன்னிட்டு அடியவர்களின் நன்மை கருதி வீதிக்கு மணல் பரப்புவது வழக்கம். இந்த ஆண்டு மணல் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என அறிகிறோம். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகள் செய்யும் திருவீதி தார்வீதியாக உள்ளது. உடனடியாக மணல் வழங்குவதற்கான ஏற்பாட்டை பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யவேண்டும். இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும். காலந்தோறும் நான்கு வீதியும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து தெய்வீகமாக நடைபெறும் திருவிழாச் சிறப்பை பேணுவதற்கு அனைவரும் உடன் அக்கறை எடுங்கள். இந்து சமய திணைக்களம், சமய விவகார அமைச்சு இத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பல ஆயிரம் மக்கள் கூடும் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக் கால ஒழுங்குகளை பேண உதவுங்கள். இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்தவர்களும் கூடிய அக்கறை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் அனைவரது கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/220835

விவசாயத்தை தடை செய்யும் வன ஜீவராசிகள் திணைக்கள எல்லைக்கற்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் - தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 24 JUL, 2025 | 03:55 PM திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள வீரஞ்சோலை கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்களம் நாட்டியுள்ள எல்லைக்கற்கள் காரணமாக, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தோழர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வியாழக்கிழமை (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது: "குச்சவெளி பிரதேசத்தின் வீரஞ்சோலை பகுதியில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னிச்சையாக எல்லைக்கற்களை நாட்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், விவசாயத்தின் வழியே தங்களது குடும்பத்தை நடத்தி வரும் இக்கிராம மக்கள் மீதான இச்செயல் அநீதியானதொரு நடவடிக்கை எனவும், எல்லைக்கற்களை அகற்றி, விவசாய நடவடிக்கைகள் தொடர சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/220830

விவசாயத்தை தடை செய்யும் வன ஜீவராசிகள் திணைக்கள எல்லைக்கற்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் - தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

24 JUL, 2025 | 03:55 PM

image

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள வீரஞ்சோலை கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்களம் நாட்டியுள்ள எல்லைக்கற்கள் காரணமாக, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் தோழர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வியாழக்கிழமை (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது:

"குச்சவெளி பிரதேசத்தின் வீரஞ்சோலை பகுதியில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மக்களின் நிலங்களில் வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னிச்சையாக எல்லைக்கற்களை நாட்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், விவசாயத்தின் வழியே தங்களது குடும்பத்தை நடத்தி வரும் இக்கிராம மக்கள் மீதான இச்செயல் அநீதியானதொரு நடவடிக்கை எனவும், எல்லைக்கற்களை அகற்றி, விவசாய நடவடிக்கைகள் தொடர சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

20250724_092804.jpg

https://www.virakesari.lk/article/220830

உலக வரைபடத்தில் இல்லாத நாடுகளுக்கு தூதரகம் - டெல்லி அருகே நடந்த 'மேற்கு ஆர்க்டிகா' மோசடி

1 month 3 weeks ago
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். "மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில 'நாடுகளின்' தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வாகனங்களில் தூதரக ரீதியிலான, போலியான எண் தகடுகள் இருந்தன, அவை எந்த அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை" என்று எஸ்டிஎஃப் எஸ்எஸ்பி சுஷில் குலே தெரிவித்தார். ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற நபர் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போலி தூதரகத்தை நடத்தி வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இதுபோன்ற போலி எண்களைக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மீட்கப்பட்ட முத்திரைகள், போலி பான் அட்டைகள் மற்றும் போலி புகைப்படங்கள் "குற்றம் சாட்டப்பட்டவர் காஜியாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே கூறினார். மேலும், "அவர் மக்களிடம் பிரபலமாகவும், அவர்களை ஏமாற்றவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம், அவர் பல பிரமுகர்களுடன் நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டார்" என்றும் எஸ்எஸ்பி சுஷில் தெரிவித்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடி நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான ஏராளமான பொருட்களையும், போலியான பொருட்களையும் சிறப்புப் படையினர் மீட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பின்வருவன அடங்கும்: போலி தூதரக எண் தகடுகள் கொண்ட நான்கு வாகனங்கள் 12 வெவ்வேறு சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் இரண்டு போலி பான் கார்டுகள் 34 வெவ்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் போலி முத்திரைகள் இரண்டு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் ரொக்கமாக 44 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பல நாடுகளின் நாணயங்கள் கூடுதலாக 18 போலி எண் தகடுகள் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் ஹர்ஷ் வர்தன் 2011 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை பதிவுகள் கூறுகின்றன. "அப்போது, அவரிடமிருந்து செயற்கைக்கோள் மூலம் பயன்படுத்தப்படும் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டது, பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்று எஸ்எஸ்பி சுஷில் குலே குறிப்பிட்டார். தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது காஜியாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள், போலி ஆவணங்களை வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு ஆர்க்டிகா என்றால் என்ன? பட மூலாதாரம், HTTPS://WWW.WESTARCTICA.INFO/ படக்குறிப்பு, மேற்கு ஆர்க்டிகா என்று அழைக்கப்படும் நாட்டின் கொடி இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மேற்கு ஆர்க்டிகாவும் பேசுபொருளாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தன் தான் தூதராக இருப்பதாகக் கூறி வந்த நாடுகளில் ஒன்று மேற்கு ஆர்க்டிகா. முதலில் கேட்கும்போது அது ஒரு சிறிய அல்லது தொலைதூரத்தில் உள்ள நாடு எனத் தோன்றலாம். ஆனால் மேற்கு ஆர்க்டிகா என்பது 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியான டிராவிஸ் மெக்கென்ரி என்பவரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடு. இது தனக்கென ஒரு வலைத்தளம், கொடி, சின்னம் மற்றும் நாணயத்தைக் கொண்டுள்ளது. எந்த நாடும் முறையான உரிமை கோராத, அண்டார்டிகாவின் பனி சூழ்ந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, இது தன்னை விவரிக்கிறது. இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கம் என்றும் வெஸ்ட் ஆர்க்டிகாவின் வலைதளம் கூறுகிறது. 'தூதர்', 'குடியுரிமை' மற்றும் 'கௌரவப் பட்டங்கள்' போன்ற பதவிகளையும் வெஸ்ட் ஆர்க்டிகா வழங்குகிறது. ஆனால், உலகின் எந்தவொரு நாடும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையும் அதை ஒரு உண்மையான நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த 'நாட்டின்' அரசாங்கம் கிராண்ட் டியூக் டிராவிஸால் தலைமை தாங்கப்படுகிறது என்றும், அவருக்கு ஒரு பிரதமரும், ஒரு 'ராயல் கவுன்சிலும்' உதவி செய்கின்றனர் என்றும் மேற்கு ஆர்க்டிகாவின் வலைதளம் குறிப்பிடுகிறது. இது தவிர, மேற்கு ஆர்க்டிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களை விளக்குவதற்கு 'கிராண்ட் டூகல் கோர்ட்' என்ற ஒரு நிறுவனமும் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, தங்களது அறிவு, நேரம் மற்றும் திறன்களை பங்களிக்கும் நபர்களை அந்த வலைதளம் 'உறுப்பினர்கள்' என்று விவரிக்கிறது. ஆனால், இவை அனைத்தும் டிஜிட்டல் மற்றும் குறியீட்டு கட்டமைப்புகளில் மட்டுமே இயங்குகின்றன. நிஜத்தில் அவற்றுக்கு எந்தவொரு சட்ட ரீதியான அல்லது ராஜ்ஜிய அங்கீகாரமும் கிடையாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தனுடன், மேற்கு ஆர்க்டிக்காவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2nnjwqp2o

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
மகன் ஆசைப்படுகின்றானே என அப்போது நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள் என வைப்போம். உங்கள் மகன் வர்த்தக விமானி ஆகும் போது மகிழ்ச்சி அடைவீர்களா இல்லையா? உங்கள் மகன் ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக வேலை பார்த்தால் பெருமைப்படுவீர்களா இல்லையா? விமானிகளுக்கு பிள்ளைகள், குடும்பம் இல்லை பரதேசி வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பது எனக்கு தெரியவில்லை.