Aggregator

இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

1 month 3 weeks ago

Published By: VISHNU

24 JUL, 2025 | 02:06 AM

image

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும்.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் அடங்கும்.

முன்னர் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், 2023 இல் அந்த புதைகுழியில் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 18ஆவது நாளான ஜூலை 23 புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார்.

"புதிதாக ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களும் மொத்தமாக 20 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 67 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன."

நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின.

https://www.virakesari.lk/article/220770

ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்!

1 month 3 weeks ago
ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்! adminJuly 24, 2025 இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார். இதேவேளை தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புவதாகவும், தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு தமது அரசுக்கு உள்ள நிலையில் அதனை நோக்கி பயணிப்பதாகவும் வலியுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நல்லிணக்கம் நோக்கிய விரிவான பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/218299/

ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்!

1 month 3 weeks ago

ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்!

adminJuly 24, 2025

Bimal.jpg?fit=1170%2C780&ssl=1

இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட  அவர், மாகாணசபைத் தேர்தல் 2026 ஆரம்பத்தில் இடம்பெறும் எனவும்  கூறியுள்ளார்.

இதேவேளை  தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என உறுதியாக நம்புவதாகவும், தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு தமது அரசுக்கு உள்ள நிலையில் அதனை நோக்கி பயணிப்பதாகவும் வலியுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நல்லிணக்கம் நோக்கிய விரிவான பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://globaltamilnews.net/2025/218299/

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
மான்செஸ்டர் டெஸ்டில் நிரூபித்த சாய் சுதர்சன் - தடுமாறும் இந்தியா மீண்டெழ என்ன வாய்ப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். கட்டுரை தகவல் தினேஷ் குமார் கிரிக்கெட் விமர்சகர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது? சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு டெஸ்டும் நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட்களில் இருந்த விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும், நேற்று தொடங்கிய மான்செஸ்டர் டெஸ்டிலும் பார்க்க முடிகிறது. இரண்டும் சம பலமுள்ள அணிகள் என்பதை ஒவ்வொரு செஷனும் நிரூபித்தன. ஸ்லோ ஓவர் ரேட், ஸ்லிப் திசையில் இருந்து பறக்கும் சீண்டல்கள், பந்த்தின் தலைசுற்ற வைக்கும் சிக்சர், சாதுர்யமான ஸ்டோக்ஸ் கேப்டன்சி என இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு தேவையான எல்லா மசாலாக்களும் நேற்றைய நாளில் இருந்தன. அணியில் மாற்றத்தோடு களம் இறங்கிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த் வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார். ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் எடுத்த அணி, இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. ஆனாலும், சென்டிமென்ட் பார்க்காமல் இங்கிலாந்து கேப்டன் ரிஸ்க் எடுத்து இந்தியாவை பேட் செய்ய பணித்தார். குல்தீப் வருவார், கருண் நாயர் தன் இடத்தை தக்கவைப்பார் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பிய நிலையில், கருணை நீக்கி, சாய் சுதர்சனை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்ததுடன், பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் இடத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷார்துலை ஆடவைத்தது இந்தியா. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 5 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் இந்தியா களமிறங்கியது. எதிர்பார்த்தது போலவே, ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்தான் டாஸ் வென்றார் நிதானத்தை கடைபிடித்த இந்திய பேட்டர்கள் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் ஓரளவுக்கு தட்டையானது என்றாலும், தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி பிரமாதமாக பந்துவீசியது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் தொடர்ச்சியாக எட்டு ஓவர்கள் கட்டுப்பாடுடன் வீசினார். கடந்த டெஸ்டின் நாயகன் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வழக்கமான வேகம் இல்லை. ஆனாலும் துல்லியம் குறையாமல் பந்துவீசினார். இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஆர்ச்சரை முடிந்தவரைக்கும் எதிர்கொள்ளாமல் ஜெய்ஸ்வால் தவிர்த்தார். முதல் செஷனில் ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுலே எதிர்கொண்டார். ராகுலின் பேட்டிங் இந்திய அணிக்கு ஒரு உத்தரவாதத்தை நம்பிக்கையை கொடுக்கும்படி இருந்தது. தன் எல்லைக்கு வரும் பந்துகளை தவிர, எந்த பந்தையும் அவர் சீண்டவில்லை. அதேசமயம், ஹாஃப் வாலியாக (Half volley) கிடைத்த பந்துகளையும் அரைக்குழியாக கிடைத்த பந்துகளையும் தண்டிக்க அவர் தயங்கவில்லை. நேற்றைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் ராகுல் பாணியில் பேட் செய்ததை பார்க்க முடிந்தது. உள்ளே வரும் பந்துகளை தடுப்பது; வெளியே செல்லும் தவறான பந்துகளை தண்டிப்பது. இதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் தாரக மந்திரம். லார்ட்ஸ் டெஸ்டில் தவறான ஷாட் விளையாடியதற்காக விமர்சிக்கப்பட்ட ஜெய்ஸ்வால், நேற்று தொடக்கத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர். இன்னிங்ஸை கொஞ்சம் நிலைநிறுத்தியவுடன் தைரியமாக ரன் குவித்தார். நன்றாக செட்டில் ஆனபிறகு விக்கெட்டை இழப்பது என்பது இந்த தொடர் முழுக்கவே இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. அது நேற்றும் தொடர்ந்தது தான் துரதிர்ஷ்டம். Drinks இடைவேளைக்கு முன்னும் பின்னும் விக்கெட்டை இழக்காத இந்தியா, உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை இழந்தது. பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், பெரும் முதலைகளை எல்லாம் சமாளித்துவிட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் மறுவருகை நிகழ்த்திய டாசன் பந்துவீச்சில் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார் முதல் அரை சதத்தை பதிவு செய்த சாய் சுதர்சன் ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு சுதாகரித்து கொண்டார். 20 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறிவிட்டார். கால்பக்கம் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் சாய் சுதர்சனுக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் துலக்கமாக வெளிப்பட்டது. அவருடைய தலை ஆஃப் சைடில் சாய்ந்து விடுவதே இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம். முதல் டெஸ்டிலும் இதே முறையில் அவர் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எப்படி ஒரு இன்னிங்ஸை கட்டமைப்பது என்ற வித்தையை தெரிந்துவைத்துள்ளார் அவர். ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார். டெக்னிக்கலாக சில பிரச்னைகள் இருந்தாலும் சுதர்சனின் மனத்திட்பம் (Temperament) நேற்றைய இன்னிங்ஸ் முழுக்க நேர்மறையாக இருந்தது. சுதர்சனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடுவதிலும் இருந்த சுணக்கம் வெளிப்பட்டது. கடைசியில் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்திலேயே ஆட்டமிழந்தார். சுதர்சன் விளையாடும் போது, ஆட்டத்துக்கு முந்தைய நாள் அவர் யாருமற்ற மைதானத்தில், தன்னந்தனியாக நிழல் பயிற்சியில் (Shadow practice) ஈடுபட்டதை டிவியில் காட்டினார்கள். இந்தப் பயிற்சியின் பெயர், விசுவலைசேஷன் (Visualisation). விசுவலைசேஷன் என்பதை ஒரு வீரர் களத்தில் நிகழ்ப்போவதை மனதளவில் காட்சிப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் ஆகும் ஒருவித முன்தயாரிப்பு எனலாம். கிரிக்கெட்டில் முக்கியமான சூழல்கள் குறித்த ஆழமான அனுபவங்களை நேரடியாக அத்தகைய களத்தில் பங்குபெறாவிட்டாலும் கூட 'விசுவலைசேஷன்' மூலமாக ஒருவரால் பெற முடியும் என்கிறார்கள் ஸ்போர்ட்ஸ் சைக்காலாஜிஸ்ட்கள். சாய் சுதர்சன் மட்டுமல்ல நிறைய உச்ச நட்சத்திரங்கள் ஏதோவொரு வடிவத்தில் விசுவலைசேஷன் டெக்னிக்கை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதுபோன்ற முன் தயாரிப்புகளும் நேர்மறையான சிந்தனையும்தான் சுதர்சனை தனித்துக் காட்டுகின்றன. டெக்னிக்கலாக கருண் நாயர் சுதர்சனை விட வலுவானவர் என்றபோதும், மனத்திட்பத்தில் (Temperement) அவர் பலவீனமாக இருப்பதாலேயே, சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை தன்பக்கம் திருப்பிய இங்கிலாந்து அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில், ஆக்ரோசமாக இன்னிங்ஸை ஆரம்பித்தாலும், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பந்தை கவனிக்காமல் பேட்டை உயர்த்தி LBW முறையில் ஆட்டமிழந்தார். லார்ட்ஸ் டெஸ்டிலும் கவனத்தை இழந்து இப்படி ஒரு ஒன்றுமற்ற பந்துக்கு இரையனார் என்பதை பார்த்தோம். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பிராட்மேனின் (974) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், தன் ஃபார்மை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறார். கடந்த டெஸ்டில் இதுபோன்றதொரு பந்தில்தான் (Nip backer) ராகுல் விக்கெட்டை ஸ்டோக்ஸ் கைப்பற்றினார். கிரீஸை நன்றாக பயன்படுத்தி ஸ்டோக்ஸ் வீசும் இந்தப் பந்தை சரியாக கணித்து விளையாடுவது எளிதல்ல. ஆனால், கில் ஆட்டமிழந்தது அவர் கவனம் ஆட்டத்தில் இல்லை என்பது போலிருந்தது. முதல் செஷனை இந்தியா கைப்பற்றிய நிலையில் உணவு, தேநீர் இடைவேளைக்கு நடுவில் 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இரண்டாவது செசனை தன்வசப்படுத்தியது. இன்னிங்ஸ் நல்ல வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வோக்ஸ் பந்தில் ஒரு ஆபத்தான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்பார்த்து, பந்தை நேராக காலில் வாங்கி அடிபட்டு களத்தை விட்டு சென்றார் பந்த். அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால், இந்தியா ஆட்ட நேர முடிவில் இன்னும் வலுவான நிலையில் இருந்திருக்கும். காயத்தின் தன்மை மோசமாக இருக்கும் பட்சத்தில், இரண்டாம் நாள் பந்த் பேட்டிங் செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த டெஸ்ட், தொடரின் போக்கையே மாற்றும் தன்மை கொண்டதாக இப்போது பந்த்தின் காயம் மாறியுள்ளது. ஆனாலும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானத்தில் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தின் தன்மையை புரிந்துகொண்டு, மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். குறிப்பாக கில், சுதர்சன் என முக்கிய விக்கெட்களை, முக்கியமான கட்டத்தில் எடுத்துக்கொடுத்து ஆட்டத்தை ஸ்டோக்ஸ் சுவாரயப்படுத்தினார். நாளை புதிய பந்தில் இந்தியா சமாளித்து விளையாடி, மதிய உணவு இடைவேளை வரை தாண்டிவிட்டால், ஒரு வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். இந்தியாவின் கைக்கு வந்திருக்க வேண்டிய முதல் நாள் ஆட்டம், பந்த்துக்கு ஏற்பட்ட காயத்தால், எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. நாளை யார் கை ஓங்குமென பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx25n8rlrlo

விண்வெளியின் விளிம்புக்கே சென்று குதித்து சாதித்தவர் பாராகிளைடிங் செய்த போது மரணம்

1 month 3 weeks ago
23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர். ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான். தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார். 1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார். அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார். 'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8mgdrp12no

விண்வெளியின் விளிம்புக்கே சென்று குதித்து சாதித்தவர் பாராகிளைடிங் செய்த போது மரணம்

1 month 3 weeks ago

23 ஜூலை 2025

விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார்.

56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர்.

ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான்.

தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார்.

1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார்.

அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.

வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார்.

'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.

சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8mgdrp12no

நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்!

1 month 3 weeks ago
நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்! நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார். https://athavannews.com/2025/1440379

நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்!

1 month 3 weeks ago

New-Project-291.jpg?resize=750%2C375&ssl

நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்!

நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1440379

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!

1 month 3 weeks ago
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும். இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது. கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440376

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!

1 month 3 weeks ago

New-Project-290.jpg?resize=750%2C375&ssl

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்!

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர்.

இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

CODSL.webp?ssl=1

1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும்.

இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது.

கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440376

இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்!

1 month 3 weeks ago
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், மன்னர் சார்லஸையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் செழிப்பு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் இதன்போது கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளின் தயாரிப்புகளை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்க அல்லது குறைக்கும் முயற்சிகளை பிரதமர் மோடியின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு தரப்பினரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தக அளவை இலக்காகக் கொண்டுள்ளனர். 2023–24 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 55 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியது. இதுவரை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ள இங்கிலாந்து இந்தியாவின் ஆறாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 1,000 இந்திய நிறுவனங்கள் சுமார் 1,00,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இங்கிலாந்தில் இந்திய முதலீடுகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவது முறையாக இந்த பயணம் அமைந்துள்ளது. அவர் இதற்கு முன்பு 2015, 2018 மற்றும் 2021 இல் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டிற்காக விஜயம் செய்திருந்தார். கடந்த ஆண்டில், மோடியும் ஸ்டார்மரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர் – முதலில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 உச்சிமாநாட்டிலும், அண்மையில் ஜூன் மாதம் கனடாவின் கனனாஸ்கிஸில் நடந்த G7 உச்சிமாநாட்டிலும் சந்தித்துள்ளனர். https://athavannews.com/2025/1440382

கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

1 month 3 weeks ago

vaikoo.jpg?resize=740%2C375&ssl=1

கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து வைகோ  மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால்  இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன.  இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.   அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.  அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்  மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும்  வைகோ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1440330

கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

1 month 3 weeks ago
கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் வைகோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440330

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
இந்த செய்திகளுக்கான மூலம் இருந்தால் பகிர்வும் ஐயனே

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
முப்பத்தியொண்ணு புள்ளி மூணு நாலு ஏழு பர்சண்ட்டுங்க .. 😀 (31.347%)

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

1 month 3 weeks ago
இந்த சொறியனுக்கே இலங்கை சட்டம் நீதியில் நம்பிக்கை இல்லையென்றால், இவற்றால், இவர்களால் பாதிக்கப்பட்ட நமக்கு இந்த நீதித்துறையில், நீதி கிடைக்குமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்வதேசம் எப்படி உள்ளூர் விசாரணையை சிபாரிசு செய்யவோ, ஊக்கப்படுத்தவோ முடியும்? அனுர இந்த விசாரணைகள் மூலம் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி தமது செல்வாக்கை மீள எழுப்பவும், தாமே யுத்த குற்றங்களை விசாரிக்க முடியுமென நிரூபிக்க முயற்சிக்கிறார். அவரால் இவர்களை விசாரித்து தண்டிக்க முடியுமென்றால், சர்வதேசம் தண்டிப்பதற்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்? அடுத்த ஐ .நா. தொடருக்கு முன் தடபுடலாக விசாரணையை ஆரம்பித்து, தம்மால் முடியுமென காட்ட முனைப்பு நடைபெறுகிறது. ஆனால் தண்டனை என்பது சாத்தியமா? அது இருக்க, தாம் அகப்படுமுன் கத்தி கூச்சல் போட்டு விசாரணைகளை தடுத்து விட்டால், தாம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குற்றவாளிகளின் கற்பனை.