Aggregator

ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!

1 month 3 weeks ago
அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
எங்கள் உறவுகளில், தெரிந்தவர்கள், ஊரவர்கள் என்கிற வட்டத்தில் கூட பலர் சிங்கள பெண்களை, ஆண்களை செய்து வாழ்ந்தும் கெட்டும் இருக்கிறார்கள். இங்கு களத்தில் கூட சிலர் இருக்கலாம். அதில் சிங்களத்துக்கு அநிஞாயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே அதிகம். யாருக்காவது வக்காலத்து வாங்கலாம், ஆனால் நீதிக்கு புறம்பாக, பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது சரியல்ல, வக்கிரம்.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
படத்தில் விமானத்துடன் நிற்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை அவர் உறவினரோ அல்லது அப்பாவோ அதை செய்தியாக போட்டவர் தாழ்வு மனப்பான்மை சிக்கலால் பாதிக்கபட்டவர்.

சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு

1 month 3 weeks ago
இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள்; தங்கள் போரினை நிஞாயப்படுத்தி, மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, ஆதரவைப்பெறவும், சர்வதேச நாடுகளிடம் நிதி, அனுதாபம், ஆலோசனைகளை பெறவும் நிகழ்த்தப்பட்டன. பொன்சேகாவே கூறியிருந்தார், தன்மீதும் கோத்தா மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டவும் போரின் தாக்குதலை அதிகரிக்கவும் செய்யபட்ட தந்திரம் என்று. இன்னும் பல எதிர்பார்க்கிறோம்! இதில் முஸ்லிமகளின் பங்கும் வெளிவர வேண்டும். வானுயர உயர்த்தப்பட்டு பாராட்டப்பட்டவர்கள் பாதாளம் வரை தாழ்த்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த அழிவு வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். இல்லையேல், மௌனமாக்கப்பட வாய்ப்புண்டு. இன்னும் சிறிது நேரத்தில் உதயன் கம்மன் பில கூப்பாடு போட்டுகொண்டு வருவார் சிங்களத்தை துயிலெழுப்ப.

இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி

1 month 3 weeks ago
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
அவருக்கு தெரியுமோ இல்லையோ - அது அவர் தன் தொழில் தகமை, வாய்புகள் பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்திருப்பார் என நம்பலாம். இன்னும் ஒரு விடயத்தைதுயும் நீங்கள் தெரிந்து கொள்ள என சொல்கிறேன். இதே போல இலகுரக விமானங்களை ஒரு பொழுதுபோக்காக பறக்கும் தமிழ் ஆட்கள் கூட உள்ளார்கள். ஒரு சின்ன விமானத்தின் உரிமையை, அதன் பராமரிப்பை பலர் சேர்ந்து ஒரு சிண்டிகேட் போல வாங்கி கொள்வது, பின்னர் விமான லைசன்ஸ் பெற்று கொண்டு, இந்த விமானத்தில் அவர்களுக்குரிய நேர்ந்த்தில் பறப்பது. இப்படி இந்த வகை விமான ஓட்டி லைசன்ஸ் பெறுவது என்பது ஒன்றும் செய்தி வரும் அளவு சாதனை அல்ல. 🤣 கோஷான், ஜஸ்டின் உங்களை எதிர்த்தால் - ஜேர்மனியில் இருந்து உங்களுக்கு வாழ்த்து கராண்டீட்🤣.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்தான முற்றான விலக்கு எனும் கொள்கை 2005 ஆம் ஆண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை முதல் மிக அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள் வரை பல படுகொலைகள் மற்றும் வன்முறைகளுடன் நேரடியான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும்கூட இன்றுவரை பிள்ளையானினால் அரசியலில் தொடர்ச்சியாகத் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்க முடிவது குறித்து அநுருத்த கேள்வியெழுப்புகிறார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையினையடுத்து 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் 2020 ஆம் ஆண்டு முக்கிய சாட்சியம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமையினையடுத்து சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். பின்னாட்களில் பிள்ளையானை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் குறித்து அவ்வப்போது விசாரித்திருந்த‌போதிலும் ஒருபோதும் அவர்மீது சட்டபூர்வாமான குற்றச்சாட்டினைப் பதியவில்லை. "பிள்ளையான் போன்ற நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களிடம் வெகு சாதாரணமாக நட்புப் பாராட்டி வரும் நிலையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும். மேலும் நீதி என்பது வசதிக்காகப் பாவிக்கப்படும் கருவியாகவே தெரியும்" என்றும் அவர் கூறுகிறார். அநுருத்தவின் அறிக்கையூடாக எழுப்பப்படும் கேள்விகள். குறிப்பாக கெப்பிட்டிக்கொல்லாவைப் படுகொலைகள் குறித்த அன்றைய அரசின் வெளிப்படுத்தலினை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிக்கையில் எழுதிய ரொஜர் ஞானேந்திரன், "பட்டப்பகலில், முற்றான இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களப் பிரதேசத்தினுள், அதிலும் 45 நிமிட நேரத்திற்கு முன்னர்தான் இராணுவத்தினரால் சல்லடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வீதியின் ஓரத்தில் கிளேமோர்க் குண்டுகளை வெடிக்கவைப்பதென்பது புலிகளுக்குச் சாத்தியமானதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், அரச இராணுவத்தினரால் அல்லது அவர்களால் இயக்கப்படும் இன்னொரு குழுவினரால் அன்றி இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று அவ்வறிக்கை அன்று கூறியிருந்தது. தாக்குதல் நடந்தவிடத்திற்கு மகிந்த அதிரடியாகப் பிரசன்னமாகியிருந்தமை, கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கிற்கான செயற்பாடுகள் உடனடியாகவே செய்துகொடுக்கப்பட்டமை, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாகவே சர்வதேச ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை, தாக்குதல் நடந்த மறுகணமே வன்னியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரமான விமானக் குண்டுவிச்சு என்பவற்றைப் பார்க்கும்போது இத்தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலிகள் மீது வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தலினை கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலைத் தானே நடத்தியதன் மூலம் அரசு செய்துகொண்டது. "மேலும், இப்படுகொலைக்கான பழியினை புலிகள் மீது போட்டுவிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இத்தாக்குதலுக்கான சாட்சியங்களை முன்வைப்பதை விடுத்து, "சிங்கள மக்களைக் கொல்லும் தேவையும், அதனைச் செய்யும் ஆற்றலும் புலிகளுக்கு மட்டுமே இருப்பதால், இத்தாக்குதலினை அவர்களே செய்தார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தமையானது புலிகள் மீதான சந்தேகம் என்பது எவ்வித விசாரணைக்கும் அப்பாற்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது என்பதைத்தான் காட்டுகின்றது.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
இத்தாக்குதல்களால் பயனடைந்தது யார்? இத்தாக்குதல்களை யார் நடத்தினார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, இத்தாக்குதல்களால் பயன்பெற்றது யாரென்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று வாசகர்களிடம் அவர் கோருகிறார் . "மகிந்தவைப் பொறுத்தவரை இத்தாக்குதல்கள் சிங்களத் தேசியவாதத்தினை உருவேற்றி விட்டதுடன், அவரது கனவான முற்றான போர் மூலம் தீர்க்கமான வெற்றி எனும் குறிக்கோளிற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆதரவினை பெருமளவில் திரட்ட முடிந்திருந்தது". "பிள்ளையானையும் அவரது துணை ராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரையில் இத்தாக்குதல்கள் அவர்களை மகிந்தவிற்கு மிகவும் விசுவாசமானவர்கள் எனும் அந்தஸ்த்தினை வழங்கியதுடன், அவர்களுக்கான அரசியல் நியாயப்பட்டினையும் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது". "ஆனால் புலிகளைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு சர்வதேசத்தில் இருந்த நியாயப்பட்டினையும், அனுதாபத்தினையும் இத்தாக்குதல்கள் கடுமையாகச் சிதைவடையச் செய்திருந்ததுடன், அரசுசார்பான நிலைப்பாட்டினை சர்வதேசம் எடுக்கவும் காரணமாகியிருந்தது". இத்தாக்குதல்களில் பிள்ளையான் ஆற்றியிருக்கும் பங்கு என்பது அவரது திடீர் அரசியல் எழுச்சியுடனும், மகிந்தவின் மீள்வருகையின் பின்னர் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் அந்தஸ்த்தினைப் பெற்றுக்கொண்டதுடனும் இணைத்துப் பார்க்கப்படல் அவசியம் என்று அநுருத்த கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு கொழும்பு உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் பிள்ளையானின் ஒருங்கிணைப்புச் செயலாளரைப் படுகொலை செய்தது, பிள்ளையானை ஒரு காலத்தில் வளர்த்துவிட்டதுமான அதே அரச புலநாய்வுக்கட்டமைப்பு தான் என்று கருதும் அநுருத்தை, அப்படுகொலையின் மூலம் அது பிள்ளையானுக்கு வழங்கிய செய்தி , "நீ எனக்குக் கீழ் சேவை செய்யலாம், ஆனால் ஒருபோதும் என்னை மீறி நடக்கமுடியாது" என்பதுதான் என்றும் அநுருத்த கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
2006 ஆம் ஆண்டு வைகாசியில் வெலிக்கந்தைப் பகுதியில் வயல்களில் வேலைசெய்த 13 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதேயாண்டு ஆனியில் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் ஆகியவற்றில் சுமார் 75 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இலங்கையில் அப்போது இடபெற்றுவந்த போரிற்கான சர்வதேசத்தினதும், உள்நாட்டினதும் நிலைப்பாடுகளை தீர்மானித்த மிக முக்கியமான சம்பவங்கள் என்று இவற்றைக் கூறினால் அது மிகையாகாது. இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிவித்திருந்தபோதிலும், இத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை அன்றிருந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவினால் அழுத்தம் திருத்தமாக வழங்க முடியாது போயிருந்தது. ஆனாலும், அநுருத்த இதுபற்றிக் கூறுகையில், அக்காலத்தில் இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் பிரமுகர்களான கருணா மற்றும் பிள்ளையானின் செயற்பாடுகள் இத்தாக்குதல்களின் பின்னால் இருந்திருக்கின்றன என்று சந்தேகிக்கின்றார். மிகவும் பாதுகாப்பானதும், இராணுவ மயப்படுத்தப்பட்டதுமான சிங்களப் பிரதேசங்களுக்குள் இராணுவத்தினரினதும், அவர்களோடு சேர்ந்தியங்கும் கருணா ‍ பிள்ளையான் ஆயுதத் தாரிகளினதும் அனுமதியின்றியோ, அவர்களின் ஆதரவு இன்றியோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலோ புலிகளாலோ அல்லது வேறு எவராலுமோ இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதென்பது மிகவும் கடிணமானது என்று அவர் வாதிடுகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இயக்குநர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி 2006 ஆம் ஆண்டு சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களான கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான கிளேமோர் தாக்குதல் மற்றும் வெலிக்கந்தை விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து அன்றைய அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் குறித்து தமக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இத்தாக்குதல்களின் பின்னணியில் அரச உயர்மட்டத்தின் சில புள்ளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் போன்றோர் இருக்கலாம் என்று கூறியிருப்பதுடன், இத்தாக்குதல்களால் புலிகள் அடைந்த நலன்களைக் காட்டிலும் மகிந்தவும் பிள்ளையானும் மிக அதிகளவான நலன்களை அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். "எல்லையோர பிரதேசத்தின் பேய்கள்" எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது குற்றங்களுக்கான தண்டனைகள் அனைத்திலும் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பிள்ளையானின் வன்முறைகள் குறித்து பேசியிருக்கும் அநுருத்த, இப்படுகொலைகளுக்கான காரணத்தை ஆராய்வதோடு இக்கொலைகளை நீண்டகாலமாகவே மகிந்த அரசு புலிகள் மீது சுமத்தியிருந்தமை குறித்தும் தனது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறார். ஜனாதிபதி அநுரவின் சர்வதேச ஊடகத்துறையின் இயக்குநராகவும், மூலோபாய தொலைத்தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும் அநுருத்தை மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. "இப்படுகொலைகள் இரண்டுமே உடனடியாக புலிகள் மீது சுமத்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அப்போது வரிந்திருந்த முற்றான போர் எனும் முயற்சிக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் காரணியாக இத்தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனாலும் இருபது வருடங்களுக்குப் பின்னர் மகிந்தவின் இத்தாக்குதல்கள் தொடர்பான விவரணங்கள் மீது மிகக் கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது.இத்தாக்குதல்களை உண்மையாகவே திட்டமிட்டது யார்? போரிற்குப் பின்னரான அரசியல் கட்டமைப்பில் இக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் த‌ண்டணைக்குப் பதிலாக அரசியற் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது எங்கணம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

1 month 3 weeks ago
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபத‌மிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

1 month 3 weeks ago
அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - நீதிமன்ற தீர்ப்பினால் அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு எற்படும் சவால் பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர். அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை ஏன் அமல்படுத்தினார்? பட மூலாதாரம்,PMD SRI LANKA உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது. அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர். இந்த போராட்டம் வலுப்பெற்ற நிலையில், நாட்டில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 09ம் தேதி நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்கள் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவு நோக்கி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்து சென்றார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இவ்வாறான பின்னணியில், அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜீலை மாதம் 13ம் தேதி பதில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரசிங்க, 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அப்போது, பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டிருந்தனர். இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா? இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா? புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை அப்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையிலேயே, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அமல்படுத்திய அவசரகால சட்டம், மனித உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த தீர்ப்பின் ஊடாக ரணிலுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,U.R.D.SILVA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.'' என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார். பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பானது அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு பாரிய சவாலானதாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''அவசரகால சட்டத்தை போராட்ட காலத்தில் அமல்படுத்தியமையினால், பெரும்பாலானோர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதமானது என்ற நிலையிலேயே நீதிமன்றத்தை நாடியிருந்தனர். 2022ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக, 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 12ஃ1 சரத்தின் கீழ் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பலர் கூறியிருந்தனர். ஏனென்றால், இந்த இடத்தில் பாரிய போராட்டங்கள், மக்கள் ஒன்று கூடல்கள் இருக்கவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். மேல் மாகாணத்திற்கு மாத்திரம் அவசரகால சட்டத்தை அமல்படுத்தயிருக்கலாம். நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். எனினும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்படுத்தியமையினாலேயே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த தீர்ப்பின் ஊடாக வழக்கின் கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இல்லாது போவதற்கு ஒன்றும் இல்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ''எனினும், இந்த தீர்ப்பானது அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு மிகவும் முக்கியமானது தீர்ப்பாக அமைகின்றது. அரசாங்கத்தினால் அவசரகால சட்டமொன்றை அமல்படுத்துவதற்கு வரைவுகளை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதனை அமல்படுத்துவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஜனாதிபதி ஒருவர் சரியாக விடயங்களை சரியாக அவதானித்தே இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு தமது தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமல்படுத்த முடியாது. சட்ட மாஅதிபரின் முழுமையாக ஆலோசனைகளை பெற்று, அரசியலமைப்பில் மனித உரிமை மீறப்படாத வகையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தீர்ப்பானது அந்தளவிற்கு பாரதூரமானது.'' என அவர் கூறுகின்றார். நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஒருவரினால் அவசரகால சட்டம் அமலுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அதன் ஊடாக மனித உரிமை மீறப்படுமாக இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அது இல்லாது செய்யப்படும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அத்துடன், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகளில் நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்படாது என கூறிய அவர், அந்த வழக்கில் அரசாங்கம் தோல்வியுறும் பட்சத்தில் வழக்கு கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l437zz04ko

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

1 month 3 weeks ago

அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - நீதிமன்ற தீர்ப்பினால் அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு எற்படும் சவால்

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர்.

அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை ஏன் அமல்படுத்தினார்?

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது.

அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டம் வலுப்பெற்ற நிலையில், நாட்டில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 09ம் தேதி நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்கள் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மாலத்தீவு நோக்கி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்து சென்றார்.

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இவ்வாறான பின்னணியில், அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜீலை மாதம் 13ம் தேதி பதில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரசிங்க, 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அப்போது, பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டிருந்தனர்.

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை அப்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அமல்படுத்திய அவசரகால சட்டம், மனித உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த தீர்ப்பின் ஊடாக ரணிலுக்கு பாதிப்பா?

மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா

பட மூலாதாரம்,U.R.D.SILVA

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா

இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.'' என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.

பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பானது அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு பாரிய சவாலானதாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அவசரகால சட்டத்தை போராட்ட காலத்தில் அமல்படுத்தியமையினால், பெரும்பாலானோர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதமானது என்ற நிலையிலேயே நீதிமன்றத்தை நாடியிருந்தனர். 2022ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக, 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 12ஃ1 சரத்தின் கீழ் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பலர் கூறியிருந்தனர். ஏனென்றால், இந்த இடத்தில் பாரிய போராட்டங்கள், மக்கள் ஒன்று கூடல்கள் இருக்கவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். மேல் மாகாணத்திற்கு மாத்திரம் அவசரகால சட்டத்தை அமல்படுத்தயிருக்கலாம். நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். எனினும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்படுத்தியமையினாலேயே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த தீர்ப்பின் ஊடாக வழக்கின் கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இல்லாது போவதற்கு ஒன்றும் இல்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

பிரதீபா மஹனாமஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

''எனினும், இந்த தீர்ப்பானது அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு மிகவும் முக்கியமானது தீர்ப்பாக அமைகின்றது. அரசாங்கத்தினால் அவசரகால சட்டமொன்றை அமல்படுத்துவதற்கு வரைவுகளை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதனை அமல்படுத்துவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஜனாதிபதி ஒருவர் சரியாக விடயங்களை சரியாக அவதானித்தே இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு தமது தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமல்படுத்த முடியாது. சட்ட மாஅதிபரின் முழுமையாக ஆலோசனைகளை பெற்று, அரசியலமைப்பில் மனித உரிமை மீறப்படாத வகையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தீர்ப்பானது அந்தளவிற்கு பாரதூரமானது.'' என அவர் கூறுகின்றார்.

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஒருவரினால் அவசரகால சட்டம் அமலுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அதன் ஊடாக மனித உரிமை மீறப்படுமாக இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அது இல்லாது செய்யப்படும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகளில் நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்படாது என கூறிய அவர், அந்த வழக்கில் அரசாங்கம் தோல்வியுறும் பட்சத்தில் வழக்கு கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0l437zz04ko

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

1 month 3 weeks ago
வவுணதீவு இரட்டைக் கொலை சம்பவத்திலும்... விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குற்றம் செய்யாதவர்களை மாட்டி விட்டதில்... அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடந்த கொலையின் உண்மை 2025,ம் ஆண்டுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவரை தமிழ் அப்பாவிகளை போட்டு சிங்களவனும், சோனகனும் சித்திரவதை செய்வார்கள்.

"உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

1 month 3 weeks ago
"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலையில் முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர். தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன. காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள். உணவு, சுத்தமான நீர், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றின் விநியோகம் கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள். முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்பதே அது என்கின்றார் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர். உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்துள்ளன. ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய இடம்பெயர்வு உத்தரவு பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது. தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது. போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும் காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும் காசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம், பட்டினி, உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது. உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது." குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர். ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/220714