1 month 3 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள்!
1 month 3 weeks ago
ஜனாதிபதி அலுவலகத் தலைவர் யெர்மக் பதவி விலக வேண்டும் என்று மக்கள் சேவகர் எம்.பி. கூறுகிறார் Tetyana Oliynyk - 18 நவம்பர், 21:01 ஃபெடிர் வெனிஸ்லாவ்ஸ்கி. புகைப்படம்: மக்கள் கட்சியின் சேவகர் 33792 வது எரிசக்தித் துறையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதி அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் பதவி விலக வேண்டும் என்று மக்கள் சேவகர் பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஃபெடிர் வெனிஸ்லாவ்ஸ்கி கூறியுள்ளார். மூலம்: வெனிஸ்லாவ்ஸ்கி ரேடியோ லிபர்ட்டியில் நேரடியாகப் பேசுகிறார் விவரங்கள்: "யெர்மக் வெளியேற வேண்டும்" என்று மக்கள் சேவகர் கட்சிக்குள் விவாதங்கள் நடந்ததாக வெனிஸ்லாவ்ஸ்கி கூறினார், இருப்பினும் இறுதி முடிவு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது. மேற்கோள்: "ஜனாதிபதி ஆண்ட்ரி யெர்மக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் கோரவில்லை, ஆனால் இந்த வழக்கில் யெர்மக்கின் ராஜினாமா அரசாங்கத்தைச் சுற்றியுள்ள சில பரபரப்பை நிச்சயமாகத் தணிக்கும் என்று நான் நம்புகிறேன் [அமைச்சர்கள் பதவி நீக்கம் குறித்த உக்ரேனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பைக் குறிப்பிடுகையில் - பதிப்பு.]. ஜனாதிபதி அலுவலகத்தில் சில வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் பெரும்பாலும் அமைக்கப்பட்டது என்பது இரகசியமல்ல - அது ஜனாதிபதியால் தானாக அங்கீகரிக்கப்பட்டதா அல்லது கூட்டு முடிவெடுப்பதன் மூலமா என்பது எனக்குத் தெரியாது, ஏனெனில் அந்தத் தகவல் என்னிடம் இல்லை. உண்மையில், இன்று மக்கள் சேவகர் எம்.பி.க்களிடையே யெர்மக் விலக வேண்டும் என்று பல உரையாடல்கள் நடந்தன, ஆனால் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவரை நியமிப்பது குறித்த முடிவு ஜனாதிபதியின் முடிவு. அவர் திரும்பி வந்து அதை அறிவிக்கும்போது அவர் என்ன முடிவை எடுப்பார் என்று பார்ப்போம். மேலும் விவரங்கள்: யெர்மக்கின் ராஜினாமா பற்றிய பேச்சுக்கான தூண்டுதலுக்கு ஹோலோஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் குரல் கொடுத்த தகவல்களே காரணம் என்று வெனிஸ்லாவ்ஸ்கி கூறினார். மிடாஸ் விசாரணையின் ஒரு பகுதியாக உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு பணியகம் (NABU) வெளியிட்ட டேப்களில் "அலி பாபா" என்று குறிப்பிடப்பட்ட நபர் ஆண்ட்ரி யெர்மக் என்று அவர் கூறினார் . NABU இந்தத் தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, ஆனால் முன்னதாக உக்ரைனின் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் (SAPO) தலைவரான ஒலெக்சாண்டர் கிளைமென்கோ, "ஒரு குறிப்பிட்ட 'அலி பாபா' கூட்டங்களை நடத்தி NABU மற்றும் SAPO மீது அழுத்தம் கொடுக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறார்" என்று கூறினார். பின்னணி: NABUவின் உயர்மட்ட மிடாஸ் விசாரணையைத் தொடர்ந்து, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நெருக்கமான அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் ஆண்ட்ரி யெர்மக்கை பதவி நீக்கம் செய்யுமாறு அவருக்கு ஆலோசனை வழங்குவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது . https://www.pravda.com.ua/eng/news/2025/11/18/8007909/
1 month 3 weeks ago
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!
1 month 3 weeks ago
மானம் கெட்ட சுமந்திரன். கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி. பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
1 month 3 weeks ago
மானம் கெட்ட சுமந்திரன்.
கர்ச்சிக்கும் கறுப்பு பட்டி கருணாநிதி.
பழைய காலத்து மித்திரன் பத்திரிகை பார்த்த மாதிரி இருந்தது.
1 month 3 weeks ago
உண்மை. தான். இப்போ. பாவிப்பது. வேறு. எழுத்து முத்தி. பாவித்தது. நல்லது. அது. இந்ந. நான் ஏதோ. எனக்கு. தெரியாத. பிழையை. விட்டு. விட்டேன். அழிந்து. விட்டது. மகன் தான். எங்களுடன். இருக்கிறான். அவனை. பல. தடவை. கும்பிட்டு. மன்றாடித். தான். இப்ப. பாவிப்பது. கிடைத்தது. அது. தன்பட்டில். முற்றுப்புள்ளி. வைக்குது. பார்ப்போம். திருத்த. முயற்ச்க்கிறேன். நன்றி வணக்கம்.
1 month 3 weeks ago
தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை. சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள். போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.
1 month 3 weeks ago
கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.
1 month 3 weeks ago
யாழ்கள அனுர காவடிகளுக்கான பதிலா அது?👆 அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் தம் நலனுக்காக காவடி எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நேர்த்தி நிறைவேறும் வரை.... நான் கருத்து வெற்றிக்காக கருத்து எழுதுபவனல்ல. இன்றைய யதார்த்தம் எதுவோ அதுவே தகும்.
1 month 3 weeks ago
பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
1 month 3 weeks ago
பனையின் கவலை!
**********************
என் மண்ணைப் பற்றி
பிடித்ததனால்
மரமாக நிற்கின்றேன்
பிள்ளைகளை
மாடுழக்கி தோலுரித்து
பற்களால்- உதிரக்கழி
உறிஞ்சி தூக்கியெறிய
வந்தவனோ
பனம் பாத்தியென்று
மண்தோண்டி
மூடிச்சென்றான்.
நாளை வடலியாக
வளருமென்ற
நம்பிக்கையில்தான்
நான் வாழுகின்றேன்.
-பசுவூர்க்கோபி.
1 month 3 weeks ago
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
1 month 3 weeks ago
என்னை. பொறுத்த மட்டில். சாவகச்சேரி. எனது. தொகுதி. அந்த மக்கள. என்னுடைய. சிறு வயதிலிருந்து. இங்கே வரும்வரை. கிட்டத்தட்ட. 27. ஆண்டுகளாக. பெரும்பான்மையாக. தமிழரசுக் கட்சியை. ஆதரித்து வந்துள்ளார்கள். ஏன். நான். கூட. எங்கள். இரத்தினம். நவரத்தினம். தேர்தல். காலங்களில் இப்படி பல. கோஷங்களை. எழுப்பி. உள்ளோம். என்ன. பலன ? அந்த. மக்கள். வேறு. வழியின்றித். தான். அர்ச்சுனாவை. தெரிவு. செய்தார்கள். இங்கே. தமிழரசு. கட்சிக்கு. ஒரு. செய்தி சொல்லப்பட்டுள்ளது. நீங்கள். ஒழுங்ககா. இல்லாவிடில். எந்த. விடுகாலிக்கும். நாங்கள். எங்களது. வாக்கைப். போடுவோம். இந்த. துணிவு. மற்றைய. தொகுதி. மக்களுக்கு. இல்லை என்பது. கவலையான. விடயம் அர்ச்சுனாவை. தெரிவு. செய்ததால். எந்த. நட்டமும் இல்லை. அவரது. இடத்துக்கு வேறு நபர். தெரிவு. செய்யப்பட்டாலும் அந்த. நபரும் எதுவுமே. செய்திருக்க. மாட்டார். பதவியைப் பற்றிக் கவலைப்படமால். பாரளுமன்றத்தில். கதைக்கிறார் இல்லையா. ? அது. பிழையாகவுமிருக்கலாம். சரியாகவுமிருக்கலாம். அவர். பயப்படமால். மூன்று மொழிகளிளும். கதைக்கிறார். மற்றைய. தமிழ். பாரளுமன்ற. உறுப்பினர்கள். அனைவரும். பயத்தவர்கள். பதவி. பறிக்கப்படும். ்்்சட்டம். பாயும். என்று. பயத்தவர்கள். எந்த ஒரு விடயத்திலும். சாதிக்க. முடியாது. அவரால் அடக்கி ஒடுங்கி. இருக்கவும் நீங்கள் விரும்புவது போல். நடக்கும். முடியும் தமிழரசு கட்சியல் அல்லது. தமிழ். காங்கிரஸ். இல்லை ஜே வி பி. உடன் மகிந்தவின். கட்சியில். இணைய. முடியும். செய்யவில்லை. ஏன். அவன். ஒரு பைத்தியம். எங்கள். இலங்கை. பாரளுமன்றத்தில். இருப்பவர்கள். பைத்தியமாகத். தான் இருப்பார்கள் எதுவும் செய்யமால் தொடர்ந்தும் பல. தமிழர்கள். பாரளுமன்றம். போகிறார்கள். ஏன் எதுவும். செய்ய. முடியாது. என்று தெரிந்தும். போக. வேண்டும். இவர்களுக்கு ஏன்வாக்கு. போட. வேண்டும் ? அர்ச்சுனாவை. ஏன். பேசுகிறீர்கள். ? அவர். ஒரு வருடத்தில். பேசிய. பேச்சுக்களை. 30. ஆண்டுகளுக்கு. மேல். பாரளுமன்றம். போனவார்கள். பேசியதில்லை. குறிப்பு. ்்்்குழந்தைகள் உடன். நடக்க. மாட்டார்கள் விழுந்து. விழுந்து. தான். சரியாகநடக்கப். பழக முடியும் கார். ஒடப் பழகுவது கூட. பிழை விட்டுதான். பழகிறோம். ்்்இப்படியாக. ஒவ்வொரு. விடயமும். செயல்களும் பிழை விட்டு. பிழை விட்டு தான். சரியாக. செய்யமுடியும். இலங்கைபாரளுமன்றத்தில். இயற்றப்பட்ட ஒரு. நல்ல. சட்டத்தை. சொல்லுங்கள். பார்ப்போம் சிங்களவருக்கு. அல்லது தமிழருக்கு இல்லை. முஸ்லிகளுக்கு. ஒரு. நல்ல. சட்டம்் இயற்றப்பட்டுள்ளதா. ? இல்லை. எனவே. இந்த. மன்றத்தில்் எப்படியும். கதைக்கலாம். அர்ச்சுனா. கதைப்பதைப் பார்த்து மற்றவர்களில் பயம். களையப்பட. வேண்டும். இல்லாமால். போகும்
1 month 3 weeks ago
இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும். இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!
1 month 3 weeks ago
அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு. அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற. எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.
1 month 3 weeks ago
In the U.S., about 41.7 million people received benefits from the Supplemental Nutrition Assistance Program (SNAP) on average per month during fiscal year 2024 — about 12.3% of the population. இலங்கையிலும் ஏதோ ஒரு பெயரில் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். மத்திலுள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகள் சிகப்பு கட்சிக்கு வாக்கைப் போடுகிறார்கள். இந்த தடவை கொஞ்சம் மாட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கான மருத்துவ காப்புறுதியையும் மாற்றுகிறார். இதன் தாக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரியும்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
அமெரிக்காவின் அவலம் அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானியத்தை ரத்து பண்ணிவிடும் என வையுங்கள். நீங்கள் எங்கே போவீர்கள்? ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மாதத்துக்கான செலவையெல்லாம் நடத்திவிட முடியுமா? முடியாது. இப்போது மக்கள் மிக மலிவான பொருட்களை மட்டும் வாங்கி அதையே மூன்றுவேளைகளும் உண்கிறார்கள். அதுவும் கிடைக்காதபோது வீட்டுக்குள் பசியுடன் காத்திருக்கிறார்கள். இதைக் குறித்து கார்டியன் இதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாட்கணக்காக பாக்கெட்டில் கிடைக்கும் ஒரே துரித உணவைச் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், சத்தான உணவுகளை கண்ணிலே பார்க்க இயலாது என ஒருவர் அதில் பேட்டியளித்திருக்கிறார். "ஆரம்பத்தில் ஸ்னேப் அட்டையைப் பயன்படுத்தவே கூச்சமாக இருந்தது, யாராவது பார்த்தால் கௌரவம் போய்விடுமே என ஒதுங்கி நடப்பேன், ஆனால் ஊரில் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்னரே நான் இயல்பானேன். நாங்கள் இப்போதெல்லாம் பரஸ்பரம் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறோம்." என்கிறார் அவர். யோசித்துப் பார்த்தால் நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்குவதற்கோ அரசு தரும் உரிமைத் தொகையைப் பெறுவதற்கோ நாம் கூச்சப்படுவதில்லை. அது 'நியாயமானது' எனும் உணர்வு நமக்கு உள்ளதைப் போல வலதுசாரி முதலீட்டிய நாடான அமெரிக்காவில் இல்லை. அங்கு 'ஏழ்மையை' ஒரு சமூக அநீதியாகக் காணும் புரிதல் குறைவு. தோல்வியுற்றவர்களே ஏழைகள் என்பதே அவர்களின் விழுமியம். ஸ்னேப் நிர்வாகி ஒருவர் சொல்வதாக மற்றொரு கார்டியன் கட்டுரையில் சொல்கிறார்கள்: "ஸ்னேப் தொகையை அரசு நிறுத்திவிட்டது. கடைசி சில்லறைக் காசையும் பயன்படுத்திவிட்டோம். இப்படியே போனால் எங்களுக்கு சாப்பிட பூனை உணவு மட்டும்தான் மீதமிருக்கும்." டிரம்ப் அடிப்படையில் ஏழைகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு எதிரானவர். ஆனால் இந்த ஏழைகளே இவர்களுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது (உங்கள் பணத்தையெல்லாம் வந்தேறிகளான இஸ்லாமியர், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், கம்யூனிஸ ஆதரவாளர்களான முற்போக்காளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்லி ஏமாற்றி வாக்குகளை அவர் அள்ளிவிடுகிறார்.) அவர் ஏற்கனவே பேசியபடி ஸ்னேப்புக்கான நிதியை நிறுத்திவிட்டார். நீதிமன்றம் தலையிட்டு வலியுறுத்தியபடி அவர் சிறிது தொகையை மட்டும் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனிடையே அங்கே பட்டினி கிடக்கும் மாத வருமானத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம்மூரில் விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கிறார்கள். அங்கு அதுவும் இல்லை. பட்டினிதான். இப்போதும்கூட இதனால் மக்களுக்கு டிரம்ப் மீது கோபம் வந்து கலகம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வந்தேறிகள்தாம் என்று சொல்லி அவர்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடுவார். இந்தியா அமெரிக்காவை விட பல மடங்கு மேலானது எனும் உணர்வு எனக்கு ஒருநாள் வரும் என நான் கற்பனையே பண்ணியிருக்கவில்லை. இங்கு உங்களுக்கு மாத வருமான வேலை இருந்தாலே போதும், மூன்று வேளையும் உணவுக்குப் பஞ்சமில்லை. வேலையும் இருக்க வீடும் இல்லாத தெருவில் வாழும் பெண்களுக்கு கூட கர்நாடகாவில் அரசு விடுதியை நடத்துகிறது. மாநில அரசுகள் பெண்களுக்கு மாதமாதம் உரிமைத்தொகை கொடுப்பது தேர்தல் யுக்தியாகிவிட்டது. சலுகையையோ மானியத்தொகையையோ உரிமைத்தொகைகளையோ அரசோ கட்சிகளோ அவமதிப்பதில்லை. ஏழ்மை குறித்த குற்றவுணர்வு மேல்மத்திய, மேல்வர்க்கத்திடம் தாராளமாக உள்ளது. என்னதான் குப்பைக்கூளமாக, மதவெறியர்களாக, ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாம் இருந்தாலும் அடிப்படையான பாதுகாப்பு வலையொன்றை வைத்திருக்கிறோம். நான் கடந்த மாதம் வயநாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டின் முன்பு பத்து பெண்கள் சீருடை அணிந்து சீரமைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், பொதுமக்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்பட்டால் அரசிடம் விண்ணப்பித்து இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அரசின் முகமையில் இவர்கள் வருவதால் அடிப்படைப் பாதுகாப்பு உண்டு. உடலுழைப்பு வேலைகளுக்கு அங்கு ஆள் கிடைக்காத நிலையில் இதனால் பொதுமக்களும் பயன்பெறுகிறார்கள். தனியாரிடம் உழைப்பாளிகளைப் பணயம் வைக்காமல் அரசு தொழில் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல உதாரணம் இது. வாக்குகளைத் திருடித்திருடி பாஜக இன்னும் பத்திருபது ஆண்டுகள் ஆண்டாலும் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டே ஏழையாகவும் பரதேசியாகவும் இருக்கும் நிலை இந்தியர்களுக்கு வரப்போவதில்லை. இந்த பாதுகாப்பு நடைமுறைகளும் கட்டமைப்பும் இல்லாததாலே அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித்ததும் எளிய மக்களும் மத்திய் வர்க்கமும் தெருவுக்கு வருகிறார்கள். முதலீட்டிய-சார்பு சமூகங்கள் பெங்களூர் நகராட்சி போடும் சாலையைப் போன்றவை. எப்போது அது உடைந்து வாகனம் உள்ளே போகும் எனத் தெரியாது. Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/11/blog-post_18.html @Justin , @ஈழப்பிரியன் அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!