Aggregator

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
வருசாவருசம் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று ஓடிய தீர்வு படத்தை விட இந்த படம் கடும் படமாகவல்லவோ இருக்கு, மூண்டு வருசத்திற்கொரு தரம் ஓடுது

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

1 month 3 weeks ago
புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேசச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்தனர். அப்படியான சேவைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால். இதன்பின்னர் ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள். பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்த்தனவுக்காக அல்ல. உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். எமது இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்காக முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம்முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போது என்னை 'இரத்தப் பிசாசு' என்று முத்திரை குத்தினார்கள். அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தான் நாடு சரியான திசைக்கு வரும்வரை போராடினோம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என்பது போன்று காண்பிக்க முனைகின்றனர். இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன- என்றார். https://newuthayan.com/article/புலிகளின்_விருப்பங்களை_நிறைவேற்றுவதற்குச்_சதி;_கதறுகின்றார்_கம்மன்பில

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

1 month 3 weeks ago

புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்குச் சதி; கதறுகின்றார் கம்மன்பில

598180174.jpeg

இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேசச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-  இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களைப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்தனர். அப்படியான சேவைகளை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டால். இதன்பின்னர் ஆயிரம் குண்டுகள் வெடித்தாலும் தகவல்களை வெளியிட புலனாய்வாளர்கள் முன்வரமாட்டார்கள்.

பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலந்த ஜயவர்த்தனவுக்காக அல்ல. உண்மை மற்றும் நீதிக்காகவே நான் குரல் கொடுக்கின்றேன். எமது இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீதி மற்றும் உண்மைக்காக முன்னிலையாகும் பொறுப்பு என்பன எம்முன் உள்ளன. அதற்காக நாம் முன்னிலையாவோம். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போது என்னை 'இரத்தப் பிசாசு' என்று முத்திரை குத்தினார்கள். அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தான் நாடு சரியான திசைக்கு வரும்வரை போராடினோம்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினர் உள்ளனர் என்பது போன்று காண்பிக்க முனைகின்றனர். இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என புலிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன- என்றார்.

https://newuthayan.com/article/புலிகளின்_விருப்பங்களை_நிறைவேற்றுவதற்குச்_சதி;_கதறுகின்றார்_கம்மன்பில

மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

1 month 3 weeks ago
மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்! யாழ்ப்பாணம் - வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன. அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது. அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர். அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டும்_இராணுவ_தேவைக்காக_சுவீகரிக்கப்படவுள்ள_காணிகள்!

மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

1 month 3 weeks ago

மீண்டும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள்!

1238380890.jpeg

யாழ்ப்பாணம் - வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன

ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம் கையளித்து வந்துள்ளன.

அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணியாகவே காணப்படுகிறது.

அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர்.

அவர்கள் தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

https://newuthayan.com/article/மீண்டும்_இராணுவ_தேவைக்காக_சுவீகரிக்கப்படவுள்ள_காணிகள்!

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

1 month 3 weeks ago
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! பயங்கரவாதி ஷாகறான். கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018): 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ் (28, கல்முனை) மற்றும் வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன (35, காலி) ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ் அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உண்மை வெளிச்சத்திற்கு வந்த வழி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போதுதான், வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் தாக்குதல்களைத் திசைதிருப்பி, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பழிசுமத்துவதற்காகப் போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகள் முன்னின்று செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு மோட்டார் சைக்கிள் ஜக்கெட் சம்பவ இடத்திற்கு அருகே மறைத்து வைக்கப்பட்டு, அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது. தற்போதைய கைது மற்றும் விசாரணைகள்: படுகொலைச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடிமறைத்து, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றத்தைச் சுமத்தப்பட்டதை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவரும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கைது, வவுணதீவு இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Liked Tamil AB Amam ######### @satan, @alvayan, @goshan_che, @ஈழப்பிரியன், @கிருபன் , @Paanch , @ஏராளன் , @விசுகு, @குமாரசாமி, @ரசோதரன், @பெருமாள், @புலவர் , @ரஞ்சித் , @நன்னிச் சோழன் , @Sasi_varnam , @நியாயம் , @suvy , @நிழலி, @இணையவன் , @vasee, @அக்னியஷ்த்ரா , @உடையார் , @தனிக்காட்டு ராஜா

மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

1 month 3 weeks ago
மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை! வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440170

மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

1 month 3 weeks ago

maldives-and-sri-lanka-two-footage-27005

மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440170

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
டிபிக்கல் தமிழ் மனப்பான்மையைப் பற்றித் தான் இங்கே குறிப்பிடப்படுகிறது அது எவ்வாறிருக்கின்றது என அறிய வேண்டுமெனில் பார்க்க .. மாதவன் நடித்த Aap Jaisa Koi (2025)..

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
எங்கட யாழ்கள கலைஞனும் இப்ப விமானி ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன்.கனடா உறவுகளுக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
இந்த தம்பியின் செய்தி தமிழ்வின். ஐபிசி ஆகியவற்றிலும் வந்தது. தமிழ் சமூகத்தை பொறுத்தவரை இது முக்கிய செய்திதான். வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி ஆகியோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது எமது சமூகத்தில் எத்தனை விமானிகள் உள்ளனர் என்று பார்த்தால்.. அங்கை ஒருவர் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை.. இந்த அளவில்தான் விமானிகளின் பிரசன்னம் உள்ளது. அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும். வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது. எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.

சுமந்திரன் தவறானவர் என சாணக்கியன் பகீர் தகவல்! மூடிய சமையலறையில் சுமந்திரன் விசேட சந்திப்பு

1 month 3 weeks ago
முன்னர் பிரித்தானியாவில் சுரேன் என்று அழைக்கப்படுபவர் சுமந்திரனின் எடுபிடியாக இருந்து மூடிய அறைக்குள் ஆலோசனைகள் நடந்தன. இப்போ, கட்சியை மாற்றி அமைத்ததுபோல் அந்த அணியை மாற்றி அமைக்க சென்றிருப்பார் போலுள்ளது. ஊரில், தெருக்கோடியெங்கும் கோட்டு ஸூட்டோடு காட்சியளித்து அலைபவர், அங்கே சமயலறையில் சமையற்காரன், தனது சமையல் பற்றி விளக்குவது, விவரிப்பதுபோல் ஒரு படம். எப்பிடியிருந்த சுமந்திரனா இப்படி?

குரோதம் கொண்டு வந்த ரயிலில் இப்போது சகோதரத்துவம் சுமந்து வருகிறோம் – மகேஷ் அம்பேபிட்டிய

1 month 3 weeks ago
செம்மணி மனித எலும்புகள் வெளிக்கிளம்பியதுதான் தாமதம், சகோதரத்துவமும் முளை விடுகிறது. இது ஒன்றும் கிழட்டுப்புலி, தருப்பை காப்பை ஏந்திய கதையில்லைத்தானே? இனிமேல் சண்டித்தனம் காட்ட முடியாதென்றால் அணைத்து குத்த வேண்டியது. இது இனத்தின் பாரம்பரியம். இத்தனை அழிவுகள் நம் இனத்துக்கு நடக்கும்போது, இவர்களும் நாட்டில், பாராளுமன்றத்தில், பதவிகளில் இருந்து ஆதரவு கொடுத்திருந்தார்கள். தமிழருக்காக அனுதாபத்தை கூட வெளிப்படுத்த வில்லையே இந்த செம்மணி விவகாரம் வெளிவரும்வரை. ஐ .நா வில் அப்படியொன்றும் நடக்கவில்லை, இனஅழிப்பு என்று யாராவது கதைத்தால் சட்டம் பாயும் என்று வேறு அச்சுறுத்தினார்களே? நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் எங்கள் நிலங்களை மீள அளியுங்கள், தடைகளை நீக்குங்கள், தேவையற்ற விகாரைகளை அகற்றுங்கள், நமது நிலங்களை ஆக்கிரமித்திருந்து சமூக சீர்கேடுகளை உருவாக்கும் இராணுவத்தினரை மீளப்பெறுங்கள், சம உரிமையை தாருங்கள், உங்களை நாங்கள் நம்புகிறோம். இங்கு ஒன்று, தெற்கில் வேறொன்று கூறி இரு பகுதி மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
"இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை."எங்கும் நாம் சொல்லும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் திருமணங்கள், நாங்கள் சொல்லும் காரணங்களுக்குள் அடங்காது. எமது சமூகத்திலும் சாதி, சமயம் பாராமல், சீதனம் வாங்காமல் தாங்களே விரும்பியும், பெற்றோர் பார்த்தும் செய்துவைத்த திருமணங்கள் உண்டு. அப்போ சிலர் சொல்லிக்கொண்டனர்; பெண் கிடைக்காததால் அவ்வாறு செய்து கொண்டனர், ஆணில் ஏதோ குறையுண்டு. இவ்வாறு பல காரணங்கள் சொல்லிக்கொண்டனர். எனக்கு தெரிந்து அப்போது போலீசாக இருந்த ஒரு சிங்களவர், தாதியாக பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண்ணை விரும்பி திருமணம் செய்திருந்தார். அவர் ஒருதடவை தன் குடும்பத்தை பார்த்து குடும்ப சொத்தில் தனது பாகத்தை பெற சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார். அன்று போர் நடக்கும் போது, கோத்தா சொன்னார் என நினைக்கிறன். "தமிழ் இளைஞரின் உடல்கள் கடல் மீன்களுக்கு, பெண்கள் உடல் சிங்கள இளைஞருக்கு." போரிலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், நிலங்கள், பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. நாம் ஏதோ நல்ல மாற்றம் நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறோம். ஏன் சிங்கள தம்பதியினர் விவாகரத்து பெறவில்லையா? கள்ள தொடர்பு வைத்து காதலியையோ மனைவியையோ கொலை செய்யவில்லையா?

சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை]

1 month 3 weeks ago
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாணவி அருந்ததி. அவர்களின் காதல் அமைதியாக அங்கே இரண்டு ஆண்டுகளாக பூத்து குலுங்கின. திருமண மேடையில் இன்னும் அருந்ததி பார்க்கவில்லை என்றாலும், தினம் அருந்ததியை பார்த்தவண்ணம் தான் பிரதீபன் இருந்தான். அவர்கள் பல்கலைக்கழக வாளாவிலும், பூந்தோட்டத்திலும் நூலகத்திலும், உணவகத்திலும் சந்திக்கத் தவறுவதில்லை. அவர்கள் இலக்கியம் பேசிக் கொண்டே காதல் வளர்த்தார்கள். பாவேந்தர் பாரதியையும் பாரதிதாசனையும் படித்து, அதில் அரசியல் காணும் பிரதீபனுக்கும், சங்க இலக்கியத்தை நயமாக வாசித்து அதில் காதல் சுவை காணும் அருந்ததிக்கும் இடையில் பசுமைக் காதல் வளர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் நீதியைக் கனவு கண்டான். அவள் இன்பக் காதலைக் கனவு கண்டாள். என்றாலும் ஒன்றாக, அவர்கள் சமமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள். ஆனால் வரலாற்றில் ஜூலை 23 இல், வேறு திட்டங்கள் இருந்தது அவர்கள் இருவருக்கும் தெரியாது! ஜூலை 23 ஆம் தேதி, சில அரசுக்கு எதிரான தமிழ் இளைஞர்களால், 13 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி இடி முழக்கம் போல வெடித்தது. அதைத் தொடர்ந்து வந்தது துக்கம் அல்ல - மாறாக அரசால் திட்டமிடப்பட்ட பழிவாங்கல். அருந்ததியும் பிரதீபனும் அமைதியான இரவு உணவிலிருந்து திரும்பி வந்தபோது, வீதிகள் போர்க்களங்களாக மாறின. வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தடிகளுடன், கையில் தீப்பிழம்புகளையும், கண்களில் வெறுப்பையும் ஏந்திய சிங்கள கும்பல்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகங்களைப் போல தமிழ் வீடுகளை வேட்டையாடினர். அவர்களின் தங்குமிடம், அவர்களின் புகலிடம் தீக்கிரையாக்கப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்துக்குள் 3,000 உயிர்கள். 18,000 வீடுகள். 5,000 வியாபாரங்கள். நெருப்பு மட்டுமல்ல, கலங்காத மௌனமும் எரிந்தது. மகாவம்சத்தில் ஒரு கதை இருக்கிறது. 'கர்ப்ப பெண்ணான, ராணி விகாரமகாதேவிக்கு விசித்திரமான ஆசைகள் ஏற்பட்டன. தமிழ் மன்னன் எல்லாளனுடைய வீரர்களிலே முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரை, வெட்டுண்ட அந்த தலை மீது நின்று கொண்டு குடிக்க வேண்டும் அது என்கிறது' மகாவம்சம் அத்தியாயம் 22 - 44 & 45 . அந்தக் காடையர் கூட்டத்தை கண்ட இருவருக்கும், அவர்களின் 'கொடூர அவா' எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். என்றாலும் அவர்களைச் சிக்கவைத்து விட்டன. பிரதீபனைத் துரத்தி, சாலையில் பாய்ந்து பிடித்து, சாலையின் நடுவில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். அவன் மார்பில் ஒரு டயர் சுற்றிப் போட்டு, மண்ணெண்ணெய் நனைந்த துணியால் எரிக்கப்பட்டது. அவனுடைய அலறல் சத்தம் அவள் கதை அடைத்தது. அருந்ததி தானும் விழ முயன்றால். ஆனால், அவர்களில் இருவர் அவளை பிடித்து ஏதேதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவள் தவித்து கண்ணீர் சிந்தியபடி துடித்துக் கொண்டு நின்றாள். அவர்கள் சிரித்தார்கள். பத்தினி தெய்வம் என்று இன்னும் இலங்கையில், சிங்களவர் உட்பட, வழிபாடும் கண்ணகி போல் அவள் கண்கள் சிவந்து எரிந்து கொண்டு இருந்தன. அவர்களுக்கு அவளின் கண்ணைப்பற்றி, பெண்மை பற்றி பிரச்சனை இல்லை. அவளின் உடலுக்காக ஒன்றின்பின் ஒன்றாக மிருகங்களாக வரிசையில், பிரதீபனின் உடல் எரிந்து முடியுமட்டும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்தனர். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” என்றார் வள்ளுவர்' ஆனால் மிருகங்களுக்கு அது தெரியப்போவதில்லை. அவர்களின் காம அவசரத்தில், அவளின் ஆடைகளை கிழித்தனர், பலர் சேர்ந்து கற்பழித்தனர். அவளுடைய தந்தையாக இருக்கும் அளவுக்கு வயதானவர்களால் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். “காதலுக்கு நான்கு கண்கள், கள்வனுக்கு இரண்டு கண்கள், காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அவளின் இலக்கிய வாய் முணுமுணுத்தது! பின்னர் தெஹிவளை கடற்கரையின் மணல் திட்டுகளில், மயக்க நிலையில், அவள் இறந்து விட்டாள் என்று அவளின் உடலை தூக்கி எறிந்தனர். அங்கே வீதி ஓரத்தில் புத்தர் சிலையாக இருந்தார்! இத்தனைக்கும் இலங்கை அரசு எந்த ஊரடங்கு சட்டமோ அல்லது காவல் துறையினரையோ பயன்படுத்த வில்லை. தூண்டி விடப்பட்ட காடையர் கூட்டத்தின் விசித்திரமான ஆசைகள் நிறைவேறட்டும் என்று ஒரு சில நாள் காத்திருந்தது! அங்கு ஆர்ப்பரிக்கும் அலைகள் அவளுடைய முனங்குதலைக் கண்டு, தங்கள் கைகளால் அவளை ஆறுதல் படுத்தின. கதிரவன் தன் கரங்களைப் பரப்ப, காகங்கள் கூடிப் பறக்க அவள் சற்று கண்களைத் திறந்தாள். என்றாலும் அவள் உடம்பால் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் அங்கே கண்மூடிக் கிடந்தாள்! பின்னர், விதி தலையிட்டது. அன்று காலை கடற்கரையில், தன் மனைவியுடன் நடந்து சென்ற கொண்டு இருந்த, நடுத்தர வயது சிங்கள மருத்துவர் டாக்டர் விஜேசிங்கே [විජේසිංහ], இரத்தக்கறை படிந்த, அரைகுறை கிழிந்த உடுப்புடன் ஒரு பெண்ணின் உருவத்தை அலைகளின் மோதலுக் கிடையில் கண்டார். அவரது மனசாட்சி அவரது பயத்தை விட வலிமையானது. அவரும் அவரது இரக்கமுள்ள பள்ளி ஆசிரியரான மனைவி நேத்மியும் [නෙත්මි], அருந்ததியை தமது வீட்டிற்கு காவிச் சென்று, நடுங்கும் கைகளால் அவளது காயங்களைக் கழுவி, அதற்கு ஏற்ற, தன்னிடம் இருந்த முதல் உதவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தார். அதன் பின் அவளுக்குக் கஞ்சி மற்றும் இளநீர் கொடுத்தார்கள். என்றாலும் அவள் பேசவே இல்லை. அவள் தான் யார் என்று, தனக்கு என்ன நடந்தது என்று மூச்சு விடவே இல்லை. அவர்களும் அதைக் கேட்கவில்லை. என்றாலும் அவள் ஒரு தமிழிச்சி என்று மட்டும், அன்று நிலவிய சூழலால் அவர்களுக்கு புரிந்தது. அவர்கள், அவளை ஒரு அப்பாவி இலங்கைப் பெண்ணாக மட்டுமே பார்த்தார்கள். அப்பத்தான் அவளுக்கு புத்தர் இன்னும் வாழ்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது! மூன்று நாட்கள், வீட்டிலேயே அவர்களால் முதலுதவி. உணவு, சுகாதாரம், பாதுகாப்பு என எல்லா வசதியும் இரகசியமாக செய்தனர். பிறகு இறுதியாக, அனைத்துலக கண்களை நிர்வகிக்க அல்லது சரிசெய்ய அரசு தயக்கத்துடன் ஊரடங்கு உத்தரவு கொண்டு வந்ததும், டாக்டர் விஜேசிங்கே தனது மருத்துவமனை சலுகைகளைப் பயன்படுத்தி, அவளை ஒரு தொலைதூர உறவினராகக் காட்டி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்தார். அங்கு, அருந்ததி மெதுவாக குணமடைந்தாள். ஆனால் ஞாபகங்கள் 'மனிதம்' எரிந்த அந்த நிலத்தில் தான் இருந்தன. பிரதீபனின் அழுகையும், தன்னைப்போல பரிதாபமடைந்த பெண்களின் ஓசையும், மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. பல மாதங்களின் பின் அவளுடைய உடல் குணமடைந்தது - ஆனால் அவளுடைய ஆன்மா மட்டும் குணமடையவில்லை. அது இன்னும் எதையெதையோ தேடிக் கொண்டு இருந்தது. பௌத்தத்தில் உள்ள ஐந்து கட்டளைகளில் (பஞ்ச - சீலம்) மூன்றாவது கட்டளை “Kāmesu micchācāra veramaṇī sikkhāpadaṃ samādiyāmi” என்கிறது, அதாவது, “பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து விலகுவதற்கான பயிற்சி விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்கிறது. ஆனால் அவள் அதை நம்பும் நிலையில் அன்று - பிரதீபனை எரித்து, தன்னை அனாதையாக்கி, தன் உடலை கெடுத்த அந்த மிருகங்களை பார்த்த பொழுது, கொடூரத்தை அனுபவித்த பொழுது இருக்கவில்லை. ஆனால் இன்று டாக்டர் குடும்பத்தை பார்த்த பொழுது கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். ஆனால் இன்னும் அவள் சில நேரங்களில் தூக்கத்தில் கத்தினாள். அவள் சில நேரங்களில் கண்ணாடியில் பிரதீபனின் எரியும் கண்களைப் பார்ப்பாள். அவள் திருமணத்தை முற்றிலும் மறுத்தாள். அதுமட்டும் அல்ல, அவள் தன் மேல் இன்று காட்டும் அனுதாபத்தை மறுத்தாள். அவள் நினைவு முழுமையாகத் திரும்பிய போது, அவள் நீதியின் குரலாக எழுந்தாள்! விஜேசிங்கே குடும்பத்தால் சகோதரியாக போற்றப் பட்ட அவள், இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழ்ப் பெண் அருந்ததி பிரதீபன் என்று தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், அவள் ஒரு மனித உரிமை வழக்கறிஞரானாள். அவளது தீ மெதுவாக ஆனால் வலுவாக எரியத் தொடங்கியது! அவள் வெலிக்கடை முதல் செம்மணி வரை, கொக்கடிச்சோலை முதல் முள்ளிவாய்க்கால் வரை வழக்குகளை எதிர்த்துப் போராடினாள். கருப்பு ஜூலையையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த இருண்ட மௌனத்தையோ அவள் ஒருபோதும் மறக்கவில்லை. இன்று ஜூலை 23, 2025. கொழும்பு மீண்டும் வெட்கத்தின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது 62 வயதான அருந்ததி, விஜேசிங்கே குடும்பத்துடன் நடந்து செல்கிறார் - ஒருபுறம் வயதான டாக்டர் விஜேசிங்கே, மற்றும் அவரது பேரன், சட்டக் கல்லூரி மாணவன், மறுபுறம் ஓய்வுபெற்ற ஆசிரியை நேத்மியும் மற்றும் அவரது பேத்தி பாடசாலை மாணவி. "நீதி தாமதமானது இனப்படுகொலை மறுக்கப்பட்டது" என்று எழுதப்பட்ட ஒரு பலகையை சிங்களத்திலும் தமிழிலும் ஏந்தி, அவர்கள் காலி முகத்திடலைக் கடந்து ஜனாதிபதி செயலகத்தின் வாயில்களை நோக்கி நடக்கிறார்கள்! பிரதீபனின் புகைப்படத்தை டாக்டரின் பேத்தி தூக்கி பிடித்துக் கொண்டு இருந்தாள். பேரன் புத்தரின் பஞ்சசீலத்தை காட்சிப் படுத்திக் கொண்டு நடந்தான். கூட்டமும் மெல்ல மெல்ல இணைகிறது. சில சிங்களவர்கள். பல தமிழர்கள். அவள் மனுவைப் படிக்கிறாள். அவள் குரல் நடுங்குகிறது, ஆனால் பயத்துடன் அல்ல. "நாம் எனக்காக மட்டும் நடக்கவில்லை, ஆனால் திரும்பி வராத அனைவருக்காகவும். காதலர்கள் எரிந்ததற்காக, சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக, நமது அவமானத்தைத் தாங்கிய மண்ணுக்காக / I walk not for myself alone, But for all those who never returned. For the lovers burned, the sisters raped, For the sand that holds our shame" அவள் நடைபாதையில் ரோஜாக்களை தூவினாள். அவள் காற்றில் கிசுகிசுத்தாள்: "கருப்பு ஜூலை 1983 இல் முடிவடையவில்லை. ஆனால் நம்பிக்கையும் இன்னும் இல்லை / Black July didn’t end in ’83. But neither did hope.” அங்கு கூடிய எல்லோரும் ஒன்றாக முழக்கமிடடனர்: . "நியாயம் தாமதிக்கப்படும் போது, அது இன அழிப்பு என்றே கருதப்படும் / When justice is delayed, it is considered genocide" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]