1 month 3 weeks ago
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்பதால் அவரை அவர்களே இருக்கமுடியும். அதற்கான பயிற்சி மற்றும் செயற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கி இருக்கவேண்டும்.
1 month 3 weeks ago
டென்மார்க் காரர் இப்போது பேனையை தூக்கி எறிந்து பிடித்து செய்தி வாசிப்பதில் பிசியாக இருக்கிறார்🤣 அவரது குறும்படம் ஒன்றின் தெரிவின் போது அவருக்கு பலமாக குட்ட வேண்டியதாயிற்று. அப்புறம் வரதரின் மகளும் தான் தான் முதலாவது ஈழத்து விமானி என்று சொன்னதாக ஞாபகம்.
1 month 3 weeks ago
சில வருடங்களின் முன், டென்மார்க்கிலிருந்து இதே போல ஒரு செய்தி வந்திருந்தது. 'விமான ஓட்டியான முதல் ஈழத்து தமிழ் பெண்...........' என்பது போன்ற ஒரு தலைப்புடன். அந்தப் பெண்ணின் தந்தை தெரிந்தவர், ஊரில் ஆசிரியராக இருந்தவர். அவர் ஒன்றோ இரண்டு முழு நீள சினிமா படங்களும் எடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஊரில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தவர். சில காலமாக அவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. பின்னர் எந்த செய்தியும் வரவில்லை/தெரியவில்லை. அதற்கு சில வருடங்களின் முன் பிரித்தானியாவில் தனது மகன் விமான ஓட்டியாக இருப்பதாக ஒருவர் சொன்னார். அமெரிக்கா கூட வந்து போவதாகச் சொன்னார். ஆனாலும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. இங்கு நான் இருக்கும் அதே ஊரில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் விமான ஓட்டியாக இருக்கின்றார். பெரிதாக பழக்கம் இல்லை. எங்காவது கண்டால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே. பல வருடங்களின் முன் இங்கு இருக்கும் ஒரு சிறிய கல்லூரியில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் மகன் வந்து இந்த துறையில் படித்துக் கொண்டிருந்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. தினக்குரலோ அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிகையில் பெரிதாக படங்களுடன் செய்தி வந்திருந்தது. ஒரு பெரிய விளம்பரம் போன்றே அது தெரிந்தது. அந்தக் கல்லூரி, படிப்பு எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிது இல்லை, ஆனாலும் எதிர்கால அரசியலுக்காக செய்கின்றார்கள் போல என்று நினைத்தேன். அவர் இன்னமும் ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை போல.
1 month 3 weeks ago
அந்தாள் அப்பாவி மனைவி சொல் தட்டாமல் பழகிவிட்டது. என்ன செய்யும்?🤣
1 month 3 weeks ago
கடன் என்பது பலவீனமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும் இல்லை. அதுவே ஒரு நாட்டின் பலமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வட்டி மற்றும் முதல் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கடன் ஒரு நாட்டுக்கு சுமை ஆகின்றதா அல்லது அதன் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகின்றதா என்று தீர்மானிக்க முடியும். தனிநபர் சராசரி வருமானமும், முழு நாட்டின் செல்வத்தின் பரம்பல் விகிதங்களும் மக்களின் வருமானத்தை ஓரளவு சரியாகக் குறிக்கும். வருமானமும், வாழ்க்கை தரமும் நேர் விகிதமானதாக இருக்க வேண்டும் என்றில்லை, உதாரணம்: அமெரிக்கா. அதே நேரத்தில் இந்தியா போன்ற ஒரு தேசம் எவ்வளவு சமச்சீர் அற்றது என்று அறிந்து கொள்ள இந்தக் குறியீடுகள் உதவியாக இருக்கின்றன.
1 month 3 weeks ago
நானும் இதனை கவனித்தேன் ஆனால் சான்றோன் எனக்கேட்ட தாய் என்று கடந்து சென்றேன் .
1 month 3 weeks ago
என்ன ஒரு அன்பு கலந்த அக்கறை. 🙂👍🏽
1 month 3 weeks ago
GDP படி பார்த்தால் இந்தப் பட்டியல் சரி. நான்காவது நிரலில் இருக்கும் GDP per capita படி பார்த்தால், சுவிஸ் முதலாமிடம், நோர்வே மூன்றாமிடம் (அமெரிக்காவிற்கு அடுத்து). கடஞ்சா சொல்வது போல இது ஒரு பரிமாணத்தை மட்டும் காட்டும் ஒரு அளவீடு. ஒரு தேசத்தின் பல பரிமாணங்களைக் கருதி எடுக்கப் படும் அளவீடு மனித அபிவிருத்திச் சுட்டெண் (HDI) எனப்படுகிறது. HDI படி பார்த்தால், முதலிடம் ஐஸ்லாந்து, அமெரிக்காவிற்குப் 17 வது இடம். இந்தியா 130 வது இடம், இலங்கையின் 89 வது இடத்திலும் கீழே தான் இந்தியா😂! https://hdr.undp.org/data-center/country-insights#/ranks
1 month 3 weeks ago
வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
ஏன் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே இதில் இடம் பெறவில்லை. ரசியா???🤣
1 month 3 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள் ......... !
1 month 3 weeks ago
இதில் என்ன விடயமென்றால்...பிள்ளைகளுக்கு....இதுபற்றி அறவே தெரியாது...
1 month 3 weeks ago
gdp அளவீடு முறை வேறு பல பலம் / பலவீனங்களை மறைகிறது. உ.ம். ஆக அமெரிக்காவின் பெரிய வெளிக்கடன், சீனாவின் மிக குறைந்த கடன். அத்தத்துடன், கேந்திர முக்கியத்துவத்தில் சீன (அல்லது மற்ற நாடுகள் ) அடைந்துள்ள முன்னேற்றம், முடக்க, பின்தங்கிய நிலை போன்றவை.
1 month 3 weeks ago
ஆண் சிங்கம் இன்னொரு ஆணுக்கும் தன் துணைக்கும் பிறந்த குட்டிகளை கொல்லும். சில சமயம் தன் குட்டிகளை கூட என நினைக்கிறேன். அதேபோல் ஏனைய சில மிருகங்களிடமும் குட்டிகளை கொல்லும் வழக்கம் உண்டு. அத்துடன், பிறப்பின் போதே குட்டிகளை கைவிடும் உயிரினங்களும் உண்டு. பென்குவின் போல உறைபனியில் நின்றபடி, ஆண் அதன் குஞ்சுகளை அடைகாக்கும் இனக்களும் உண்டு. பொதுப்படையாக “மிருகங்கள் கூட செய்யாது” என்பது ஒரு பேச்சுக்காக சொல்வது மட்டுமே.
1 month 3 weeks ago
செம்மணி புதைகுழியில் இன்று.. குழந்தையின் பால் போச்சி, 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம்.com
1 month 3 weeks ago
வேற என்ன. அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம். அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.
1 month 3 weeks ago
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள்! Published By: VISHNU 22 JUL, 2025 | 07:12 PM யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220671
1 month 3 weeks ago
அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
1 month 3 weeks ago
Published By: VISHNU 22 JUL, 2025 | 05:51 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும். 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220665