Aggregator

செல்போன் பயன்பாடு உங்கள் உறவுகளை பாதிக்கிறதா? தவிர்க்க எளியதொரு வழி

1 month 3 weeks ago

phubbing

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • யாஸ்மின் ரூஃபோ

  • பிபிசி நியூஸ்

  • 18 நவம்பர் 2025

நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை.

இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் - உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது.

இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் வளர்ந்த குழங்தைகளின் சுய மரியாதையை குறைப்பது எனப் பல வழிகளில் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

சுயக்கட்டுப்பாடு இல்லாததைப் பற்றி உங்களை நீங்களே குறைக் கூறுவதற்குப் பதிலாக, நாம் சாதனங்களை எப்போது எடுப்பது என்ற நோக்கத்துடன் செயல்படுவதில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு உளவியலாளர் கூறுகிறார்.

phubbing

பட மூலாதாரம், Getty Images

எளியதொரு வழி என்ன?

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான கெய்டலின் ரெகெர், நீங்கள் மற்றவருடன் இருக்கும்போது இயந்திரத்தனமாக ஃபோனை எடுப்பதைத் தடுக்க ஒரு எளிய வழியைப் பரிந்துரைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் ஃபோனை எடுக்க முற்படும்போது, ஏன் அதைச் செய்கிறீர்கள் என்பதை மற்றவரிடம் சொல்லுங்கள், முடித்தவுடன், அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் அவர்களிடம் கவனத்தை செலுத்துங்கள்.

இது மிகவும் எளிதானதாகத் தோன்றலாம், ஆனால் ரெகெர், 'வுமன்ஸ் ஹவர்' (Woman's Hour) நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தச் சிறிய மாற்றம் நமது நடத்தையை மாற்ற உதவும் என்கிறார்.

ஏனென்றால் நாம் பெரும்பாலும் சிந்திக்காமல் மெசேஜ்களை பார்க்கிறோம், நோட்டிஃபிகேஷன்களைத் தள்ளுகிறோம் அல்லது "விரைவாக ஏதாவது ஒன்றைத் தேடுகிறோம்."

இங்கு வெளிப்படையாக இருப்பதுதான் முக்கியம். எனவே, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு மெசேஜ் வந்தால், நீங்கள் உங்களுடன் இருப்பவரிடம் அல்லது குழுவினரிடம், "நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும், அதன் பிறகு உங்கள் மீது என் கவனம் இருக்கும்" என்று கூற வேண்டும்.

"நான் எனது ரயில் நேரத்தைச் சரிபார்க்க வேண்டும்" அல்லது "நான் என் அம்மாவுக்குப் பதிலளிக்கிறேன்" என்று குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் ஃபோனைச் பார்க்கும் தன்னியக்கப் பழக்கத்தைத் தடுக்கிறீர்கள், மேலும் உங்கள் அருகில் இருப்பவருக்கு அவர் இன்னும் முக்கியமானவர்தான் என்ற செய்தியையும் இது தருகிறது.

"இது மற்றவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வதைத் தடுக்கிறது," என்று ரெகெர் கூறுகிறார்.

"மேலும், இது உங்களை பொறுப்புடையவராக வைத்திருக்கிறது, ஏனெனில் நீங்கள் மற்ற செயலிகள் அல்லது முடிவில்லாத ஸ்க்ரோலிங்கில் செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளது."

இதைச் செய்வது உங்கள் உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.

phubbing

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு சொல்வது என்ன?

சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் இணைப் பேராசிரியரான கிளாரி ஹார்ட், உறவுகள் மற்றும் ஃபோன் பயன்பாடு குறித்து 196 நபர்களிடம் பேசிய ஒரு ஆய்வுக்குத் தலைமை தாங்கினார்.

ஒட்டுமொத்தமாக, நீங்கள் எவ்வளவு அதிகமாக ஃப்பப்பிங் (Phubbing) செய்யப்படுவதாக உணர்கிறீர்களோ, அவ்வளவு மோசமாக உங்கள் உறவு இருக்க வாய்ப்புள்ளது என்று முடிவுகள் காட்டின.

"எல்லோரும் ஒரே மாதிரி எதிர்வினையாற்றுவதில்லை," என்று ஹார்ட் கூறுகிறார். "இது ஆளுமையைப் பொறுத்தது, ஆனால் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவுடன், அது பதிலடி கொடுப்பதைத் தூண்டலாம்.''

"அவர்களும் தங்கள் சொந்த ஃபோனை எடுக்கிறார்கள், அப்போதுதான் இது ஒரு ஆபத்தான சுழலாக மாறுகிறது, ஏனெனில் ஒவ்வொரு துணையும் திரையில் உள்ளதைவிடத் தாங்கள் மதிப்பற்றவர்களாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள்."

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஃப்பப்பிங் செய்யும்போது, நீங்கள் தொடர்பை இழக்கிறீர்கள்.

திரையைப் பார்ப்பதற்காக குடும்பத்தினர்/நண்பர்கள் சூழ்ந்த ஒரு தருணத்தை விட்டு நீங்கள் விலகிய பிறகு அதே தருணத்திற்கு திரும்புவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2le378j02o

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி - நியூசிலாந்துப் பெண்

1 month 3 weeks ago
19 Nov, 2025 | 04:14 PM என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அறுகம்குடா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் குறித்த வெளிநாட்டு பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் சேட்டையில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் இது தொடர்பில் கடிதம் ஊடாக பொலிஸில் முறைப்பாடு அளித்தார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனக்கு நேர்ந்த விடயத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை மக்களுக்கும் பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு அல்லது மக்களின் பண்பைப் பிரதிபலிக்காது எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். தான் தனியாக சுற்றுலா பயணங்களை மேற்கொண்டதாகவும் இலங்கை மக்கள் பல வழிகளில் தனக்கு உதவியதாகவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். இலங்கை என்பது பயணம் செய்வதற்கு மிகவும் அற்புதமான ஒரு நாடு எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். ஒரு தனிநபரின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த நாட்டையும் பெண்களின் பாதுகாப்பையும் வரையறுக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் உலகில் எங்கும் நடக்கக்கூடும் என அந்த நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230816

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி - நியூசிலாந்துப் பெண்

1 month 3 weeks ago

19 Nov, 2025 | 04:14 PM

image

என்னிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்ட  இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை  பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அறுகம்குடா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் குறித்த வெளிநாட்டு பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் சேட்டையில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. 

பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் இது தொடர்பில் கடிதம் ஊடாக பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனக்கு நேர்ந்த விடயத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை மக்களுக்கும் பொலிஸாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்பு அல்லது மக்களின் பண்பைப் பிரதிபலிக்காது எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் தனியாக சுற்றுலா பயணங்களை மேற்கொண்டதாகவும் இலங்கை மக்கள் பல வழிகளில் தனக்கு உதவியதாகவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

இலங்கை என்பது பயணம் செய்வதற்கு மிகவும் அற்புதமான ஒரு நாடு எனவும் நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

ஒரு தனிநபரின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த நாட்டையும் பெண்களின் பாதுகாப்பையும் வரையறுக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் உலகில் எங்கும் நடக்கக்கூடும் என அந்த நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/230816

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?

தன்னறம்

1 month 3 weeks ago
வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக முன்னதாகவே போய்விடுவார்கள். அவர்கள் போகும்வரை மனைவி துணை நிற்பாள். பெண்கள்தான் தனித்துப் போவார்கள். ஆனாலும் நீங்கள் குறிப்பிடுவது போல் ‘மனம்’தான் காரணம். எதையும் ஏற்றுக் கொள்வதும், இன்னும் வாழ்க்கை இருக்கின்றது என்பதும்தான் சிறந்தது. இந்த விடயத்தில் உங்களைப் போலவே கண்ணதாசனும் கோழியைத்தான் உதாரணம் காட்டுகின்றார். “பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..”

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
அவசர அவசரமாக பிக்குகளை சந்திக்கிறார் நாமல். எங்கே, வைத்த நெருப்பு புகையோடு அணைந்து விடப்போகிறதோ, அதை முளாசி எரியப்பண்ண எதை ஊற்றவேண்டுமென ஆலோசிக்கிறார். சஜித் புத்தரை வெளியேற்றியது தவறென்றார், இப்போ அவரை அரியணையில் ஏற்றி வைத்தாயிற்று, அப்பவும் குற்றம் சுமத்துகிறார். தூஷண பிக்கர் சொல்லுறார், தாங்கள் மகிந்தாவுக்காக காவி தரித்தவர்களாம். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. மக்கள் போய் அவரின் காலைத்தொட்டு வணங்குகிறார்கள். எவ்வளவு அபத்தம்? அடாத்தாக புத்தரை நிறுவிப்போட்டு, பிரித் ஓது துகள். பற்றி எரிய வேண்டும் என்று ஓதுதுகளா? அனுரா, இதில் விட்டுக்கொடுத்தால் அவர்கள் பிக்குகளை வைத்து கலவரம் செய்வார்கள், அனுரா எல்லாவற்றிலும் அடிபணிந்து போயே தீரவேண்டும். முதலிலேயே சரியான நடவடிக்கை எடுத்தால், பின் இப்படியான சொறிச் சேட்டை செய்யத்தயங்குவார்கள். இவர் செய்திருக்க வேண்டியது; புத்தரை வைத்து, நெருப்பு வைத்தவர்களை கைது செய்து, பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவர்களை விகாரைக்குள் அடங்கியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வீட்டுக்கனுப்ப வேண்டும். இவர்களுக்கு ஒரு கொள்கையில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒழுக்கமில்லை, தலைமை இல்லை, கேள்வியில்லை, பொறுப்பு இல்லை, அன்பு கருணையில்லை. துறவிகள் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி, நாட்டை எரித்து, வயிறு வளக்குதுகள்.வெட்கமில்லாமல், மஹிந்தவுக்காக காவி உடுத்தினோம் என்று பகிரங்கமாக ஒரு பிக்கு சொல்லுது, இதுகளை பின்பற்ற ஒரு கூட்டம். அனுரா பிக்குகளின் காலில் விழுந்து அவர்களுக்குப் பின்னாலுள்ள தோத்துப்போன அரசியல் வாதிகளிடம் சரணடைந்து விட்டார். இனிமேல் இவர் சாதிப்பது கஸ்ரம். உடனேயே பிக்குகளை கைது செய்திருந்தால் மற்றவர்கள் பின்வாங்கியிருப்பர்.

நீ இயந்திரம் நான் பிரேக்

1 month 3 weeks ago
உண்மைதான் குமாரசாமி, இன்றைய பத்திரிகைச் செய்திகள் இப்படியாக இருக்கின்றன இரட்டையர்கள், தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடித்துக் கொள்ள விரும்புவதாக ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தார்கள். அவர்களது மரணம் தற்கொலை என இப்போது Society for Humane Dying மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த அமைப்பின் வழக்கறிஞர் ஒருவரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45B பகுதி: 45 B / பின் இணைப்பு - தீபவம்சம் / 'அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை சொல்லவது என்ன?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] அசோக மன்னனின் பதின்மூன்றாவது ஆணை: இந்த அசோகன் ஆணையில், இந்தியாவின் பேரரசர் அசோகர் மற்றும் அவரது யோசனையான "தம்மத்தால் வெற்றி" பெறுவது பற்றி, அதாவது, போரை விட நீதி மற்றும் தார்மீக மதிப்புகள் மூலம் மக்களை வெல்வது பற்றிப் பேசுகிறது. அன்பு, கருணை மற்றும் நல்ல ஒழுக்க விழுமியங்களைப் பரப்புவதே மக்களை வெல்வதற்கான சிறந்த வழி என்று அசோகர் நம்பினார். அவர் தனது தருமத்தின் [தம்மத்தின்] செய்தி தனது சொந்த பேரரசுக்குப் அப்பால் பரவியுள்ளது என்று கூறுகிறார். இது எல்லைப் பகுதிகளையும், அறுநூறு யோசனைத் தொலைவில் உள்ள கிரேக்க மன்னர் அந்தியோகஸ் ஆட்சிக்கும் சென்றுள்ளது. அத்துடன், இதனால், டோலமி, ஆன்டிகோனோஸ், மாகாஸ் மற்றும் அலெக்சாண்டர் [Ptolemy, Antigonos, Magas and Alexander] ஆகிய நான்கு கிரேக்க மன்னர்களால் ஆளப்பட்ட நாடுகளுக்கு அவரது போதனைகள் சென்றடைந்ததாகவும் அசோகர் குறிப்பிடுகிறார். அதே போல, தெற்கே சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் தாமிரபரணி வரையிலும் அது (தம்மத்தால் கைப்பற்றப்பட்டது) வென்றுள்ளது என்கிறார். யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்துவேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது நவீனகால சிரியா, துருக்கி, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்ட கிரேக்க மன்னன் மூன்றாம் அந்தியோகஸ் பற்றி பேசுகிறது. அவரது தலைநகரம் அந்தியோக்கி (இன்றைய துருக்கியில்) இருந்தது. அவரது பேரரசு அசோகரின் மௌரியப் பேரரசுக்கு நெருக்கமாக, மேற்கில் மத்திய தரைக்கடல் கடற்கரையிலிருந்து கிழக்கில் சிந்து நதி வரை நீண்டு, அண்டை நாடாக இருந்தது, அதனால்தான் அசோகர் தனது தர்மத்தின் பரவலைப் பற்றி பேசும்போது அவரைக் குறிப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க. பண்டைய கிரேக்கரால் வரையப்பட்ட உலக வரைபடத்தில் (தொலெமி அல்லது தாலமி (Ptolemy) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியசு தொலெமாயெசு, கிபி 150ல் எழுதப்பட்ட ஜியோகிரபிக்கா என்னும் புவியியல் தொடர்பான நூல் / Claudius Ptolemaeus "Geographia", 150 CE), இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரிய தீவு கிரேக்கர்களால் "Taprobane" என்று குறிப்பிடப்படுகிறது, இது நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கை தீவு என்று அடையாளப் படுத்துகிறார்கள். இந்த சொல், தாமிரபரணி யில் இருந்து பெறப்பட்டது என்று ஊகிக்கிறார்கள். இருப்பினும், வி ஏ ஸ்மித்தின் சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி (Shahbaz Garhi, or Shahbazgarhi) உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் [English translation of the Shahbazgarhi text by V A Smith], தாமிரபரிணி (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) என்பது தமிழ்நாட்டில் ஒரு நதியாகக் காணப்படுகிறது.- சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் தாமிரபரிணி வரை [நதி] என்று இருக்கிறது. / இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் வழியாகப் பாயும் ஒரு நதியின் பெயர் இது. சமஸ்கிருத வார்த்தைகளான தம்ரா (Tamra / செம்பு) மற்றும் பர்ணி (parni / இலை) ஆகியவற்றிலிருந்து இந்த பெயர் வந்தது. இந்த நதி இந்துக்களால் புனிதமாகவும் கருதப்படுகிறது. சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி அசோகரின் கல்வெட்டுகள் கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 293 மீட்டர் (964 அடி) உயரத்தில் உள்ளது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 46 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45B https://www.facebook.com/groups/978753388866632/posts/32442451962070031/?

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month 3 weeks ago
எதிரணியினரை வார்த்தைகளால் தாக்குவதில் அவுஸ்ரேலியர்கள் மோசமானவர்கள், அவர்களின் நோக்கம் ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதே ஆகும், இந்தியணியினரின் இந்த உருவக கேலி நடவடிக்கை ஆட்டக்காரரின் கவனத்தினை சிதறடிப்பதற்காக செய்யப்படவில்லை, ரிவியு செய்யாப்படும் போது தமக்குள் பேசுவதாக உள்ளது, பொதுவாக வார்த்தை தாக்குதலே ஒரு மோசமான விடயமாக இருக்கும் போது இந்தியணியினர் செய்த இந்த செயல் மற்றும் அண்மையில் பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்காமல் சென்றது (பிறகு எதற்காக அந்த அணியினருடன் விளையாடுகிறார்கள்) பாகிஸ்தான் பிரதிநிதியிடமிருந்து கோப்பையினை வாங்க மறுத்ததென இந்தியணியின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக மாறுகிறது, இத்தனைக்கும் சொந்த நாட்டிலேயே உதைவாங்குகிறார்கள். இந்த கட்டுரையின் ஆரம்ப்பத்திலிருந்து மீண்டும் மீண்டும் உருவக கேலியினை எதோ ஒரு வகையில் நியாயப்படுத்துவது போல காணப்படுகிறது, பாகிஸ்தான் வீரர் ஒருவர் சென்னையில் சிறப்பாக விளையாடியமைக்காக சென்னை இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்தார்கள் என கூறுகிறார்கள், நியுசிலாந்து இரசிகர்கள் எதிரணி வீரர் 100 எட்டும் நிலையில் ஒட்டு மொத்த மைதானமும் தமது அணியினை கைவிட்டு எதிரணி வீரருக்கு பின்னால் அணி திரளும் போது பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும், அந்த மனிதர்களின் பண்பு முன்மாதிரியாக அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும், விளையாட்டுகளில் தேசப்பற்று இருப்பதில் தப்பில்லை ஆனால் வெறுப்பை கடத்துவது அந்த விளையாட்டினை அவமதிப்பதாகும்.

இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!

1 month 3 weeks ago
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்! யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் அவர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். பெற்றோர் பருத்தித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. https://newuthayan.com/article/இளம்__குடும்பஸ்தர்_கொலை_தொடர்பில்__பொலிஸாரிடம்_சிக்கிய_தடயங்கள்!#google_vignette

இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!

1 month 3 weeks ago

இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!

324862876.png

யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர்  வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள்  அவர் மீது  கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும்  ஒரு குற்றவாளியின்  ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.  பெற்றோர் பருத்தித்துறை மருத்துவமனைக்கு  கொண்டு  சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.  

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.  உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை  உருவாக்கியுள்ளது.

https://newuthayan.com/article/இளம்__குடும்பஸ்தர்_கொலை_தொடர்பில்__பொலிஸாரிடம்_சிக்கிய_தடயங்கள்!#google_vignette

”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன

1 month 3 weeks ago
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸார், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித் அவர் மேலும் குறிப்பிடுகையில், சில பேர் இணைந்து செயல்படுத்த முயன்ற இனவாத அரசியலை தோற்கடிக்க தலையிட்ட திருகோணமலை மாவட்ட அனைத்து மூத்த பிக்குமார்கள் மற்றும் மத தலைவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதேபோல், வெளியிலிருந்து வந்த சிறிய குழுவொன்று திருகோணமலையின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சித்ததை உணர்ந்து அந்த தருணத்தில் அதற்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற திருகோணமலை மக்களைப் பற்றி நான் உண்மையிலே சந்தோசமடைகிறேன். மேலும் இந்த சம்பவத்தை இன மோதலாக மாற்ற முயன்ற இனவாத அரசியல்வாதிகளின் ஊக்குவிப்புகளுக்கு இரையாகாமல், அமைதியாக செயல்பட்ட சிங்கள, தமிழ் சகோதர சகோதரிகளின் செயல் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். திருகோணமலை என்பது ஒரு வானவில் போல அழகான நகரம். அதன் அழகு புலப்படும் தருணம் அனைத்து நிறங்களும் ஒன்றாகத் தெரிவதிலேயே உள்ளது. நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்து நடத்திய கலந்துரையாடலி சில முடிவுகள் எட்டப்பட்டன, அதில் புத்தர் சிலையை விகாரைக்கு சொந்தமான குறித்த இடத்தில் வைப்பது, விகாரஸ்தானத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடங்கள் இருந்த நிலத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் எல்லை குறியீடுகள் வைப்பது, அந்த நிலம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்கும் திருகோணமலை நகரம் நகர அபிவிருத்தி ஆணையத்திற்கும் உட்பட்ட பகுதியாக இருப்பதால், எந்தக் கட்டிடம் அமைக்க வேண்டுமானாலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்று சட்ட பிரச்சினைகளை தவிர்ப்பது ஆகய முடிவுகள் எட்டப்பட்டன. திருகோணமலைக்கு தலைமை வழங்குவது என்பது உண்மையில் சவாலான பொறுப்பாகும். ஏனைய மாவட்டங்களிலிருந்து மாறுபட்டு, திருகோணமலையில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதும் அனைத்து கலாச்சரத்தையும் பின்பற்றுவோரின் விதிமுறைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்பதும் இதற்க்கு காரணமாகும். நாங்கள் கண்ட பழைய அரசியல் என்பது இனத்தின் படி மக்களை பிரித்து ஆழ்ந்த அரசியலாகும். ஆனால் அந்த ஆட்சி எமக்கு விட்டுச்சென்ற இனவாதத்தின் பின்விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் ஆட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று அல்லாமல், “திருகோணமலையின் மக்கள்” என்று அனைவரையும் மதிக்கும் ஆட்சியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். அவர்களின் கலாச்சார அடையாளங்களில் வேறுபாடே ஏற்றுக்கொண்டு, எல்லா மதத்தையும் மதிக்கின்ற ஓர் தினசரி வாழ்வை நிலைநாட்டுவதே எங்கள் பயணமாகும். இந்த பாதையை தனிப்பட்ட அரசியல் நலத்திற்காக எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார். https://www.samakalam.com/திருகோணமலையை-நேசிப்பவர/

”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன

1 month 3 weeks ago

”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன

திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள்  இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும்  திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸார், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சில பேர் இணைந்து செயல்படுத்த முயன்ற இனவாத அரசியலை தோற்கடிக்க தலையிட்ட திருகோணமலை மாவட்ட அனைத்து மூத்த பிக்குமார்கள் மற்றும் மத தலைவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

அதேபோல், வெளியிலிருந்து வந்த சிறிய குழுவொன்று திருகோணமலையின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சித்ததை உணர்ந்து அந்த தருணத்தில் அதற்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற திருகோணமலை மக்களைப் பற்றி நான் உண்மையிலே சந்தோசமடைகிறேன்.

மேலும் இந்த சம்பவத்தை இன மோதலாக மாற்ற முயன்ற இனவாத அரசியல்வாதிகளின் ஊக்குவிப்புகளுக்கு இரையாகாமல், அமைதியாக செயல்பட்ட சிங்கள, தமிழ் சகோதர சகோதரிகளின் செயல் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

திருகோணமலை என்பது ஒரு வானவில் போல அழகான நகரம். அதன் அழகு புலப்படும் தருணம் அனைத்து நிறங்களும் ஒன்றாகத் தெரிவதிலேயே உள்ளது.

நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்து நடத்திய கலந்துரையாடலி சில முடிவுகள் எட்டப்பட்டன, அதில் புத்தர் சிலையை விகாரைக்கு சொந்தமான குறித்த இடத்தில் வைப்பது, விகாரஸ்தானத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடங்கள் இருந்த நிலத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் எல்லை குறியீடுகள் வைப்பது, அந்த நிலம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்கும் திருகோணமலை நகரம் நகர அபிவிருத்தி ஆணையத்திற்கும் உட்பட்ட பகுதியாக இருப்பதால், எந்தக் கட்டிடம் அமைக்க வேண்டுமானாலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்று சட்ட பிரச்சினைகளை தவிர்ப்பது ஆகய முடிவுகள் எட்டப்பட்டன.

திருகோணமலைக்கு தலைமை வழங்குவது என்பது உண்மையில் சவாலான பொறுப்பாகும். ஏனைய மாவட்டங்களிலிருந்து மாறுபட்டு, திருகோணமலையில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதும் அனைத்து கலாச்சரத்தையும் பின்பற்றுவோரின் விதிமுறைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்பதும் இதற்க்கு காரணமாகும்.

நாங்கள்  கண்ட பழைய அரசியல் என்பது இனத்தின் படி மக்களை பிரித்து ஆழ்ந்த அரசியலாகும். ஆனால் அந்த ஆட்சி எமக்கு விட்டுச்சென்ற இனவாதத்தின் பின்விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் ஆட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று அல்லாமல், “திருகோணமலையின் மக்கள்” என்று அனைவரையும் மதிக்கும் ஆட்சியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். அவர்களின் கலாச்சார அடையாளங்களில் வேறுபாடே ஏற்றுக்கொண்டு, எல்லா மதத்தையும் மதிக்கின்ற ஓர் தினசரி வாழ்வை நிலைநாட்டுவதே எங்கள் பயணமாகும். இந்த பாதையை தனிப்பட்ட அரசியல் நலத்திற்காக எப்போதும் விட்டுக்கொடுக்க  மாட்டேன் என தெரிவித்தார்.

https://www.samakalam.com/திருகோணமலையை-நேசிப்பவர/

நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!

1 month 3 weeks ago
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்! adminNovember 19, 2025 தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரவப்பட்டு வருகிறது. https://globaltamilnews.net/2025/222813/