Aggregator

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 month 3 weeks ago
கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! July 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு சரியாக 42 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை. 1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு ‘வசதியாக’ அமைந்தது. இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகத்தான் இருக்கிறது என்று எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். அரசாங்கத்தின் மனநிலை: கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983) லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று ஜெயவர்தன கூறினார். அந்த நேர்காணலுக்கு பெருமுக்கியத்துவம் கொடுத்து (17 ஜூலை 1983) அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகை மறுபிரசுரம் செய்தது.. ஜெயவர்தனவின் அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது. தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை. உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்க முடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது. அதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறுப்பு ஜூலைக்கு என்றென்றும் மறையாத — பித்தியேகமான எதிர்மறைக் குறியீடு ஒன்று இருக்கிறது. கறுப்பு ஜூலை வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி: வன்செயல்கள் மூண்டு நான்கு நாட்களுக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை அரச தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை. வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பல சம்பவங்களில் அவர்களே முன்னின்று வன்செயலிலும் ஈடுபட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள், பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விட்டார்கள். வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார். வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக கடுமையான உத்தரவுகளை ஏன் பிறப்பிக்கவில்லை என்று ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர், “மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்துநிறுத்த முடியாது. வளைந்துகொடுக்க மாத்திரமே எம்மால் முடியும். கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்து கொடுத்த மரங்கள் வழமை நிலைக்கு வரும்” என்று எந்த விதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பதிலளித்ததாக பல பிரதர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அண்மையில் காலமான மிகவும் மூத்த நிருவாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் “Rendering unto Caeser” என்ற தலைப்பிலான தனது சுயசரிதையில் கூறியிருந்தார். ஜெயவர்தனவின் அந்தப் பதில் தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், நீண்டகால அனுபவம்கொண்ட விவேகமிக்க அரசியல் தலைவரிடமிருந்து வந்த பதில் என்று நினைத்துக் கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருந்தார். வெலிக்கடை தமிழ்க் கைதிகள் படுகொலை கொழும்பில் வன்செயல்கள் முழு அளவில் பரவத் தொடங்கிய முதல் நாளான 25 ஜூலை 1983 (திங்கட்கிழமை) வெலிக்டைச் சிறைச்சாலையில் முதலில் இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினாலும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவது தடவையாக ஜூலை 27 அதே சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து மொத்தமாக 53 தமிழ்க் கைதிகள் பலியாகினர். வன்செயல்கள் தணிந்து முதற்தடவையாக 4 ஆகஸட் 1983 பாராளுமன்றம் கூடியபோது சிறைச்சாலைப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன. அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார். கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை. மன்னிப்புக் கோரிய சந்திரிகா பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கறுப்பு ஜூலையின் 21 வது வருட நினைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தியத்தலையீடு இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். நரசிம்மராவ் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலை புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. 1984 அக்டோபர் 31 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்தார். தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக அன்றைய தினமே பதவியேற்ற மகன் ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டனம் செய்து “இந்த பைத்தியக் காரத்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள்”( Stop this madness ) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதுமே கண்டிக்காத, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்காத ஜெயவர்தன திருமதி காந்தியின் கொலைக்கு பின்னரான தன்னியல்பான வன்செயல்களையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் ஒப்பிடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை. கறுப்பு ஜூலைக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் (மலையக தமிழர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டது) கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் ஒரு தடவை கருத்து வெளியிட்டபோது “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர் நடவடிக்கைகளே” (Peace process are war by other means) என்று மிகவும் பொருத்தமான முறையில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம். போர்ப்பிரமை சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது உகந்ததாக இருக்கும். 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர். அந்த வன்செயல் நாட்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர்” என்று கூறினார். அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப் போட்டுக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க் காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார். தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுப்பதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு. இராணுவத்தீர்வு இலங்கையின் சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர, இராணுவத்தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன் முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சில் போர் தீவிரப்படுத்தப்படுவத உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்ச போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார். பேரினவாத அரசியலின் தோல்வி. இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியை பறைசாற்றியது. ஆனால், நாட்டுக்கு அழிவைத் தந்த அதே பாதையிலேயே — பேரினவாதத்தின் மூலமாக மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று இன்னமும் நம்பவதை அவர்களின் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பெ்ருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திய முக்கிய படிப்பினையாகும். கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் இனவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் தலையெடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் தற்போது யாழ்ப்பாணம் செம்மணியில் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கள் இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பெருமளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் அந்த புதைகுழிகள் தொடர்பில் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதுடன் மீண்டும் இனக் கலவரங்கள் மூளக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இத்தகைய பிரசாரங்களின் முன்னரங்கத்தில் நிற்கிறார்கள். இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஓயாது சூளுரைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் இனக்கலவரங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் எச்சரிக்கை செய்யும் இந்த இனவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. 13 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு இதே இனவாதிகள் முன்னரும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்றும் சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள். இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்கு பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் எந்த படிப்பினையையும் பெறவில்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினாறாவது வருடமாகும். இந்த கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம் பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறி்ப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அவற்றில் சில அமைப்புக்கள் இலங்கையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு ஊக்கம் கொடுக்கின்ற ஒரு நிலைவரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த புலம்பெயர்ந்த சக்திகள் தமிழ்த் தேசியவாத அரசியல் களம் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல் மயப்படத்தக்கதாக நிதியுதவிகளையும் அள்ளி வீசுகின்றன. நிலைவரத்துக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளில் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயற்பாடுகளுக்கும் வெளியில் இருந்து பணம் வருகிறது. வடக்கு,கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்கு பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது. கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 38 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதி செய்துகொண்டன . இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடு்க்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்கள் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றை வலியுறுத்தினார். ஆனால், எந்த ஆட்சியாளரும் அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு சில முயற்சிகளை எடுத்து சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் ஒருசில தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்நகரில் ஒரு தைப்பொங்கல் விழாவில் வைத்து அவர் அறிவித்தார். பொலிஸ் இல்லாத பதின்மூன்று ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பதின்மூன்றைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தார். அதை தமிழ்க்கட்சிகள் அடியோடு நிராகரித்ததை தொடர்ந்து இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு சிக்கலாகவே இருக்கிறது. கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த வருடம் மக்களின் அமோக ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேசிய இனப்பிரச்சினையை பொறுத்தவரை, மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்ட முறையில் சிந்தித்துச் செயற்படத் தயாராக இல்லை. தங்களது பழைய கொள்கைகளில் பலவற்றை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவாக மாற்றிவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்று முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்ளைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனால், இன்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் தலைவர் திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஆனால், இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் இந்திய அரசாங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைக்கு இணங்குவதற்கு தயாராயில்லை. 13 வது திருத்தம் தொடர்பாக சர்ச்சை மூண்ட ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியில் இருந்த திசாநாயக்க, “மாகாணசபைகள் கூட தமிழ் மக்கள் போராட்டத்தின் மூலமாகப் பெற்றவையே. தங்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் 13 வது திருத்தத்தைப் பற்றி பேசுவதே இல்லை. தென்னிலங்கை தேசாயவாத சக்திகளிடமிருந்து தனிமைப்பட ஜனாதிபதி விரும்பவில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் வரை, மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணம். 2024 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு முன்னென்றும் இல்லாத வகையில் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை விளங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க முன்வருவதாக இல்லை. சகல இனங்களையும் சமூகங்களையும் சமத்துவமான முறையில் நடத்துவது என்பது மேலோட்டமாக நோக்குகையில் உன்னதமான கோட்பாடாக தெரியும். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டால் மாத்திரமே ‘சகலருக்கும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டை தமிழ் மக்களால் திரும்பிப் பார்க்க முடியும் என்பதை ஜனாதிபதி திசநாயக்க உட்பட அரசாங்க தலைவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இலங்கையின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் முன்னைய தவறான போக்குகளில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கும் ஆரோக்கியமான கொள்கையை கடைப்பிடிக்க முன்வராத பட்சத்தில் முறைமை மாற்றம், புதிய அரசியல் கலாசாரம் என்பதெல்லாம் வெற்றுச் சுலோகங்களாகவே இறுதியில் முடியும். கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! https://arangamnews.com/?p=12182

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு! — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 month 3 weeks ago

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

July 23, 2025

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

— வீரகத்தி தனபாலசிங்கம் —

   இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு  சரியாக 42 வருடங்கள்  உருண்டோடி விட்டன.

   ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை.

   1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன  அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும்   தமிழ் மக்களுக்கு எதிராக  நடத்துவதற்கு  ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த  வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு  ‘வசதியாக’ அமைந்தது.

   இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகத்தான் இருக்கிறது என்று எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.

  அரசாங்கத்தின் மனநிலை:

   கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983)  லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

  “இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று ஜெயவர்தன கூறினார். 

அந்த நேர்காணலுக்கு பெருமுக்கியத்துவம் கொடுத்து (17 ஜூலை 1983) அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகை மறுபிரசுரம் செய்தது..

 ஜெயவர்தனவின்  அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள்  நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.

தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை.

   உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்க முடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது. அதனால்  இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறுப்பு ஜூலைக்கு என்றென்றும் மறையாத —  பித்தியேகமான  எதிர்மறைக் குறியீடு ஒன்று  இருக்கிறது.

   கறுப்பு ஜூலை வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.

  வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி: 

   வன்செயல்கள் மூண்டு நான்கு நாட்களுக்கு  பிறகு ஜூலை 28  வியாழக்கிழமை அரச  தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர,  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை.

  வன்செயல்களை உடனடியாகக்  கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பல சம்பவங்களில் அவர்களே முன்னின்று  வன்செயலிலும் ஈடுபட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள், பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று  தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விட்டார்கள்.

   வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு  விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார்.

வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக கடுமையான  உத்தரவுகளை  ஏன் பிறப்பிக்கவில்லை  என்று  ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர், “மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்துநிறுத்த முடியாது.  வளைந்துகொடுக்க மாத்திரமே எம்மால் முடியும். கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்து கொடுத்த மரங்கள் வழமை நிலைக்கு வரும்” என்று எந்த விதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பதிலளித்ததாக பல பிரதர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய  அண்மையில் காலமான மிகவும் மூத்த நிருவாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் “Rendering unto Caeser” என்ற தலைப்பிலான தனது சுயசரிதையில் கூறியிருந்தார்.

ஜெயவர்தனவின் அந்தப் பதில் தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், நீண்டகால அனுபவம்கொண்ட விவேகமிக்க அரசியல் தலைவரிடமிருந்து வந்த பதில் என்று நினைத்துக் கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருந்தார்.

வெலிக்கடை தமிழ்க் கைதிகள் படுகொலை 

கொழும்பில் வன்செயல்கள் முழு அளவில் பரவத் தொடங்கிய முதல் நாளான 25 ஜூலை 1983 (திங்கட்கிழமை) வெலிக்டைச் சிறைச்சாலையில் முதலில் இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினாலும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவது தடவையாக ஜூலை 27 அதே சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து மொத்தமாக 53  தமிழ்க் கைதிகள் பலியாகினர்.

வன்செயல்கள் தணிந்து முதற்தடவையாக 4 ஆகஸட் 1983 பாராளுமன்றம் கூடியபோது சிறைச்சாலைப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன.  அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.

   கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.

  மன்னிப்புக் கோரிய சந்திரிகா 

   பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

 கறுப்பு ஜூலையின் 21 வது வருட நினைவை முன்னிட்டு  கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும்  இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

  இந்தியத்தலையீடு

   இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்திய  பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார்.  

  நரசிம்மராவ் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலை புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்  கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. 

1984 அக்டோபர் 31 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்தார்.

தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக  அன்றைய தினமே  பதவியேற்ற மகன் ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டனம் செய்து “இந்த பைத்தியக் காரத்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள்”( Stop this madness ) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதுமே கண்டிக்காத, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்காத ஜெயவர்தன திருமதி காந்தியின் கொலைக்கு பின்னரான  தன்னியல்பான  வன்செயல்களையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் ஒப்பிடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.

  கறுப்பு ஜூலைக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த  இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் (மலையக தமிழர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டது) கூட்டம்  ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24  மணித்தியாலங்களுக்குள்  தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

   கறுப்பு ஜூலைக்கு  பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில்  ஒரு தடவை கருத்து வெளியிட்டபோது “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர் நடவடிக்கைகளே” (Peace process are war by other means) என்று  மிகவும் பொருத்தமான முறையில்  குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம்.

 போர்ப்பிரமை 

   சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது உகந்ததாக  இருக்கும்.

  1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற  அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்.

அந்த வன்செயல் நாட்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர்” என்று கூறினார்.

  அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர்  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க  சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள். 

  அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப் போட்டுக்கொண்டு  பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க் காயங்களே” (Honourable Wounds of War)  என்று பண்டாரநாயக்க பேசினார்.

  தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுப்பதற்கு  வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு  போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது இதன் மூலம்  தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு.

 இராணுவத்தீர்வு 

  இலங்கையின் சகல   ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர,  இராணுவத்தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டே  சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன் முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சில் போர் தீவிரப்படுத்தப்படுவத உறுதிசெய்ததையே  காணக்கூடியதாக இருந்தது.

 சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்ச போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.

பேரினவாத அரசியலின் தோல்வி.

 இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியை பறைசாற்றியது. ஆனால், நாட்டுக்கு அழிவைத் தந்த அதே பாதையிலேயே — பேரினவாதத்தின் மூலமாக மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று இன்னமும் நம்பவதை  அவர்களின் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பேச்சுக்கள் மற்றும்  நடவடிக்கைகள் மூலம்  காணக்கூடியதாக இருக்கிறது. 

  நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு  காணாத படுமோசமான பெ்ருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திய  முக்கிய படிப்பினையாகும்.

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் இனவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் தலையெடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றன. 

  மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள் 

தற்போது யாழ்ப்பாணம் செம்மணியில் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கள் இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பெருமளவில் கவனத்தை  ஈர்த்திருக்கும் தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் அந்த புதைகுழிகள் தொடர்பில்   இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதுடன் மீண்டும் இனக் கலவரங்கள்  மூளக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இத்தகைய பிரசாரங்களின்  முன்னரங்கத்தில் நிற்கிறார்கள். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஓயாது சூளுரைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும்  இனக்கலவரங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் எச்சரிக்கை செய்யும் இந்த இனவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. 

13 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு 

  இதே இனவாதிகள்  முன்னரும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்றும் சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும்  பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள்.

   இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்கு பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால  அரசியல் நெருக்கடிகளில்  இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும்  எந்த படிப்பினையையும் பெறவில்லை. 

  தமிழ் மக்களின் இன்றைய நிலை 

   உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினாறாவது  வருடமாகும். இந்த கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது?  நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும்  வட அமெரிக்காவுக்கும் புலம் பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு  பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள்.

    இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத்   தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள்  எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள்  மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறி்ப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அவற்றில் சில அமைப்புக்கள் இலங்கையில் சில  தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு ஊக்கம் கொடுக்கின்ற ஒரு நிலைவரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்த புலம்பெயர்ந்த சக்திகள் தமிழ்த் தேசியவாத அரசியல் களம் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல் மயப்படத்தக்கதாக நிதியுதவிகளையும் அள்ளி வீசுகின்றன. நிலைவரத்துக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளில் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயற்பாடுகளுக்கும் வெளியில் இருந்து பணம் வருகிறது. 

  வடக்கு,கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்கு பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில்  இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன.  தமிழ் மக்களின் பாரம்பரிய  பிரதேசங்களில்  குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

   தொல்பொருள் ஆராய்ச்சி,  வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது.

   கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 38  வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்  படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதி செய்துகொண்டன .

  இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

 பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடு்க்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும். 

   தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலஞ்சென்ற  இரா.சம்பந்தன் அவர்கள்  அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றை வலியுறுத்தினார். ஆனால், எந்த ஆட்சியாளரும்  அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை. 

   ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு சில முயற்சிகளை எடுத்து சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் ஒருசில தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்நகரில் ஒரு தைப்பொங்கல் விழாவில் வைத்து அவர்  அறிவித்தார். 

  பொலிஸ் இல்லாத பதின்மூன்று 

   ஆனால்,  தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர்  பதின்மூன்றைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பம் ஒன்றில்  பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தார். அதை தமிழ்க்கட்சிகள் அடியோடு நிராகரித்ததை தொடர்ந்து 

 இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு சிக்கலாகவே இருக்கிறது. 

  கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக்  காண வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 

  கடந்த வருடம் மக்களின்  அமோக ஆதரவுடன்  அதிகாரத்துக்கு வந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்  தேசிய இனப்பிரச்சினையை பொறுத்தவரை, மக்களால்  நிராகரிக்கப்பட்ட  பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்ட முறையில் சிந்தித்துச் செயற்படத் தயாராக இல்லை. தங்களது பழைய கொள்கைகளில் பலவற்றை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவாக மாற்றிவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. 

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்று முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்ளைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனால், இன்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் தலைவர் திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஆனால், இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் இந்திய அரசாங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைக்கு இணங்குவதற்கு தயாராயில்லை. 

13 வது திருத்தம் தொடர்பாக சர்ச்சை மூண்ட ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியில் இருந்த திசாநாயக்க, “மாகாணசபைகள் கூட தமிழ் மக்கள் போராட்டத்தின் மூலமாகப் பெற்றவையே.  தங்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் 13 வது திருத்தத்தைப் பற்றி பேசுவதே இல்லை. தென்னிலங்கை தேசாயவாத சக்திகளிடமிருந்து தனிமைப்பட ஜனாதிபதி விரும்பவில்லை. 

புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் வரை, மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணம். 2024  பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தேசிய மக்கள் சக்திக்கு முன்னென்றும் இல்லாத வகையில்  பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை விளங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க முன்வருவதாக இல்லை.

சகல இனங்களையும் சமூகங்களையும் சமத்துவமான முறையில் நடத்துவது என்பது மேலோட்டமாக நோக்குகையில் உன்னதமான கோட்பாடாக தெரியும். ஆனால்,  வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டால் மாத்திரமே ‘சகலருக்கும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டை தமிழ் மக்களால் திரும்பிப் பார்க்க முடியும் என்பதை ஜனாதிபதி திசநாயக்க உட்பட அரசாங்க தலைவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப்போவதாக  மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இலங்கையின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் முன்னைய தவறான போக்குகளில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கும் ஆரோக்கியமான கொள்கையை கடைப்பிடிக்க முன்வராத பட்சத்தில் முறைமை மாற்றம்,  புதிய அரசியல் கலாசாரம் என்பதெல்லாம் வெற்றுச் சுலோகங்களாகவே இறுதியில் முடியும். 

கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! 

https://arangamnews.com/?p=12182

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

1 month 3 weeks ago
காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் அந்தப் பகுதிகளுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புபட்டு காசா மருத்துவமனைகளில் பத்து பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இடம்பெற்ற பட்டினிச் சாவு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 80 சிறுவர்கள் உள்ளனர். காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் பட்டினி மற்றும் தாகம் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காசாவில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் அத்னன் அபூ ஹஸ்னா குறிப்பிட்டுள்ளார். காசாவில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ‘நானும் எனது குழந்தைகளும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கிறோம்’ என்று காசாவின் சந்தை விற்பனையாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘காசாவில் உள்ள அனைவரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றும் அபூ அலா என்ற அந்த விற்பனையாளர் குறிப்பிட்டார். தெற்கு காசா நகரின் நாசர் வைத்தியசாலையைச் சேர்ந்த கனடா நாட்டு மருத்துவரான டைட்ரே நுனான், உணவுப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்களையும் பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ‘தமது பணி நேரத்தில் எமது தாதியர்கள் நிற்பதற்குக் கூட பலமில்லாமல் உள்ளனர். மனித உயிர்வாழ்வுக்குத் தேவையான மிக அடிப்படையான தரநிலையைக் கூட இங்கு பூர்த்தி செய்ய முடியவில்லை’ என்று அவர் பி.பி.சி. இற்கு குறிப்பிட்டார். இதனிடையே காசாவில் பட்டினி நிலையை எச்சரித்தும் அதற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தும் 100இற்கு அதிகமான சர்வதேச தொண்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு, சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு மற்றும் ஒக்ஸ்பேம் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்ட அமைப்புகளில் அடங்குகின்றன. காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து ஐ.நா தலைமையிலான உதவிகள் செல்வதற்கு அனைத்து எல்லைகளும் திறக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் சர்ச்சைக்குரிய முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குக் காத்திருந்த பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். தெற்கு காசாவில் இருவேறு உதவி விநியோக நிலைகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய படைகளின்; தாக்குதல்களில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பீ, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் உதவி விநியோக நிலையம் ஒன்றுக்கு அருகே இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 534 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிந்த கட்டடங்களில் மீட்கப்பட்ட 13 சடலங்களும் இருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை இஸ்ரேலியப் படை தடுப்பதன் காரணமாக பலரும் இடிபாடுகளில் சிக்கி உதவிகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.thinakaran.lk/2025/07/24/world/142011/காசாவில்-மேலும்-10-பேர்-பட்/

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

1 month 3 weeks ago

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம்

- உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

sachinthaJuly 24, 2025

6000.jpg?width=465&dpr=2&s=none&crop=non

காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் அந்தப் பகுதிகளுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புபட்டு காசா மருத்துவமனைகளில் பத்து பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இடம்பெற்ற பட்டினிச் சாவு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 80 சிறுவர்கள் உள்ளனர்.

காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் பட்டினி மற்றும் தாகம் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காசாவில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் அத்னன் அபூ ஹஸ்னா குறிப்பிட்டுள்ளார். காசாவில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

‘நானும் எனது குழந்தைகளும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கிறோம்’ என்று காசாவின் சந்தை விற்பனையாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘காசாவில் உள்ள அனைவரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றும் அபூ அலா என்ற அந்த விற்பனையாளர் குறிப்பிட்டார்.

தெற்கு காசா நகரின் நாசர் வைத்தியசாலையைச் சேர்ந்த கனடா நாட்டு மருத்துவரான டைட்ரே நுனான், உணவுப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்களையும் பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ‘தமது பணி நேரத்தில் எமது தாதியர்கள் நிற்பதற்குக் கூட பலமில்லாமல் உள்ளனர். மனித உயிர்வாழ்வுக்குத் தேவையான மிக அடிப்படையான தரநிலையைக் கூட இங்கு பூர்த்தி செய்ய முடியவில்லை’ என்று அவர் பி.பி.சி. இற்கு குறிப்பிட்டார்.

இதனிடையே காசாவில் பட்டினி நிலையை எச்சரித்தும் அதற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தும் 100இற்கு அதிகமான சர்வதேச தொண்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு, சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு மற்றும் ஒக்ஸ்பேம் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்ட அமைப்புகளில் அடங்குகின்றன. காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து ஐ.நா தலைமையிலான உதவிகள் செல்வதற்கு அனைத்து எல்லைகளும் திறக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் சர்ச்சைக்குரிய முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குக் காத்திருந்த பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

தெற்கு காசாவில் இருவேறு உதவி விநியோக நிலைகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய படைகளின்; தாக்குதல்களில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பீ, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் உதவி விநியோக நிலையம் ஒன்றுக்கு அருகே இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 534 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிந்த கட்டடங்களில் மீட்கப்பட்ட 13 சடலங்களும் இருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை இஸ்ரேலியப் படை தடுப்பதன் காரணமாக பலரும் இடிபாடுகளில் சிக்கி உதவிகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.thinakaran.lk/2025/07/24/world/142011/காசாவில்-மேலும்-10-பேர்-பட்/

மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்!

1 month 3 weeks ago
மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்! Vhg ஜூலை 23, 2025 மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விஷனம் தெரிவிக்கின்றனர். வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் அவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை குரங்கு கடிக்கு 6 பேர் உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்தபோதும் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன் மாமரம், பலா மரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகிறது. அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருவதுடன் வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதை அடுத்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய துடன் அச்சத்தில் உள்ளதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர். https://www.battinatham.com/2025/07/blog-post_114.html

மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்!

1 month 3 weeks ago

மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து ஆறு பெண்களுக்கு படுகாயம்!

Vhg ஜூலை 23, 2025

1000550488.webp.webp

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் அவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை குரங்கு கடிக்கு 6 பேர் உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்தபோதும் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன் மாமரம், பலா மரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகிறது.

அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருவதுடன் வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதை அடுத்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய துடன் அச்சத்தில் உள்ளதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://www.battinatham.com/2025/07/blog-post_114.html

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

1 month 3 weeks ago
மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220785

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

1 month 3 weeks ago

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

Published By: Rajeeban

24 Jul, 2025 | 10:54 AM

image

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220785

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் இராணுவ மோதல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது. கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் திகதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து இராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் ஏற்பட்டது. https://adaderanatamil.lk/news/cmdgx074l01knqp4k5oziu37l

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

1 month 3 weeks ago
செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா? ஏம்.எஸ்.எம்.ஐயூப் பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன. 1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன. தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்லை. ஆயினும், சில தமிழ் பத்திரிகைகள் மறைமுகமாக அக்கொலைகளை அம்பலப்படுத்தின. ஒரு தமிழ் பத்திரிகை கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ விபரம் என ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், கொல்லப்பட்டவர்களின் வயது விபரமும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிறுவர்களும் கொல்லப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. பயங்கரவாதிகள் யார் என்பதும் அம்பலமாகியது. இப்போது செம்மணி மயானத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளிலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இதுவும் சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு மறுக்க முடியாத சான்றாகும். செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் யாருடையவை என்பதைப் பற்றி தெற்கில் சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் கடற்படை அதிகாரியும் அமைச்சருமான சரத் வீரசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் விசித்திரமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதேவேளை, அவை இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என்றும் மற்றொரு கருத்தும் வெளியிடப்படுகிறது.கடந்த மாத இறுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கும் சென்று அங்கு அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அவரை அங்கு செல்ல அனுமதித்ததையிட்டு விமல் வீரவன்ச அரசாங்கத்தைக் குறை கூறியிருந்தார். இது அவர்களது வாதத்துக்கே முரணானதாகும். இந்த எலும்புகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என்றால், ஐ.நா. உயர்ஸ்தானிகர் அங்கு செல்வதை அவர்கள் ஏன் குறை கூற வேண்டும்? செம்மணி 1990களில் இருந்தே அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது, பொது மக்கள் அதனை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதைப் பற்றி கதை சொல்லும் இடமாக இருக்கிறது. அக் காலத்தில் அங்கு இராணுவத்தின் சோதனைச் சாவடியொன்று இருந்தது. அந்த இடத்தில் தான் கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவர் கடத்திக் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, தான் இந்த இடத்தில் சுமார் 600 பொது மக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்று சோமரத்ன ராஜபக்‌ஷ என்ற இராணுவ அதிகாரி கூறியிருந்தார். ஆயினும், அதன் பின்னர் அதைப் பற்றி பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.1995இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, யாழ். குடாநாடு ஏறத்தாழ முழுவதுமாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலையில், குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக அவ்வாண்டு இராணுவத்தினர் ‘ரிவிரெச’ என்ற படை நடவடிக்கையை மேற்கொண்டனர். அக்காலத்தில் குடாநாட்டைச் சேர்ந்த 500க்கும் 600க்கும் இடைப்பட்டோர் காணாமற் போனதாக சிறிது காலத்துக்குப் பின்னர் கூறப்பட்டது. அத்தகவலும் சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியமும் பொருத்தமாக இருக்கிறது. இலங்கையில் செம்மணியில் மட்டும் கூட்டுக் கொலைகள் இடம்பெறவில்லை. அதேவேளை, அரச படைகள் மட்டும் தான் கூட்டுக் கொலைகளைச் செய்தார்கள் என்று கூறவும் முடியாது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, இந்தியப் படைகள், புலிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படை ஆகிய அனைவரும் கூட்டுக் கொலைகளுக்காகக் கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அச்சம்பவங்களில் பலவற்றில் தடயங்கள் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போதே கூட்டுக் கொலைகள் முதன் முதலில் இடம்பெற்றன. தெனியாய, கேகாலை போன்ற பல பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் மனித உரிமை அமைப்புக்களில் செயற்பாடுகள் மிகக் குறைந்ததாகவே இருந்தமையினால் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியன அறிக்கையிடப்படவில்லை. ஆங்காங்கே ‘டயர்’ போட்டு சடலங்களை எரித்த கதைகள் மற்றும் ஆறுகளில் சடலங்கள் மிதந்த கதைகள் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தன. பிரிவினைவாத போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கூட்டுக் கொலை 1984 செப்டெம்பர் 10ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளத்திலேயே இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு பூவரசங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 47 பயணிகளில் 15 பேர் அவ்விடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இராணுவத்தினரையே அப்பத்திரிகைகள் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தன. இதனையடுத்து, தமிழ் ஆயுத குழுக்களும் அதே ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முதல் சாதாரண மக்களைத் தாக்கின. 1984ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘டொலர் பார்ம்’ மற்றும் ‘கென்ட் பார்ம்’ என்ற இரண்டு பெரும்பான்மையின குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 62 சாதாரண மக்கள் உள்ளிட்ட மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அடுத்த நாள் அதாவது டிசெம்பர் 1ஆம் திகதி அதே மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பெரும்பான்மை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். புலிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அதே மாதம் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தாக்கி சுமார் 100 தமிழர்கள் வரை கொன்றதாகக் கூறப்பட்டது. இவ்வாறு அடுத்து வந்த வருடங்களில் இரு சாராரும் வடக்கு கிழக்கில் ஏட்டிக்குப்போட்டியாக கிராமங்களைத் தாக்கியுள்ளனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வந்த இந்தியப் படையினர், ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களும் பல இடங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டு சாதாரண மக்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட வருடமாகும். கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் மற்றும் ஒண்டாச்சிமடத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகளே அத்தாக்குதல்களை நடத்தினர். 1980களில் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் அதிகமானோர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர, கம்பஹ மாவட்டத்தில் வனவாசல போன்ற இடங்களில் புதைகுழிகளில் கூட்டாகப் பலர் புதைக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு காலங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்ட போதிலும், சகல கொலைகளைப் பற்றியும் கூட்டுப் புதைகுழிகள் போன்ற தடையங்கள் காணக்கூடியதாக இல்லை. அதேபோல, பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றைப் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை.சர்வதேச நெருக்குதல் காரணமாகப் பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்களைப் பற்றி ஆணைக்குழுக்களை நியமித்தன. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலங்களில் தெற்கில் 60,000க்கு அதிகமானோர் காணாமற்போனதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென பிரேமதாச ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதனையடுத்து, வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் அதே விடயத்துக்காக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றொன்றை நியமித்தார். குறித்த சகல ஆணைக்குழுக்களும் ஊரையும் உலகையும் ஏமாற்றம் உத்திகள் என்பது இப்போது நிரூபனமாகி விட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனித உரிமை விடயத்தில் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்தார். அரசாங்கத்தின் போர் வீரர் தின வைபவங்களில் கலந்துகொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை. பின்னர் அதில் கலந்துகொண்டாலும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலல்லாது, அவர் நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அங்கு உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் செம்மணிக்குச் செல்ல அவரது அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்கவில்லை. ஆயினும், மனித உரிமை விடயத்தில் நிர்ணயகரமான முறையில் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் காலம் தான் கூறும். ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பான்மை சமூகம் அடுத்த தேர்தலில் அவரை தூக்கி எறிந்துவிடும். அவர் அந்த அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராவாரா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செம்மணி-விடயத்தில்-அனுர-உறுதியாக-இருப்பாரா/91-361619

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

1 month 3 weeks ago

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

ஏம்.எஸ்.எம்.ஐயூப்

பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன.

1984 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்ததை அடுத்து யாழ். நகரில் நூற்றுக் கணக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்நாட்களில் செய்தித் தணிக்கை கடுமையாக அமுலில் இருந்ததால் இவ்விபரங்கள் வெளியே வரவில்லை. அக்காலத்தில் பத்திரிகைகளும் அரச வானொலியும் மட்டுமே ஊடகங்களாக இருந்தன.

தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும், அது தென் பகுதியை மையமாகக்கொண்டு இயங்கியது. இணையத்தளங்கள் இருக்கவில்லை.

ஆயினும், சில தமிழ் பத்திரிகைகள் மறைமுகமாக அக்கொலைகளை அம்பலப்படுத்தின. ஒரு தமிழ் பத்திரிகை கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ விபரம் என ஒரு பட்டியலை வெளியிட்டது.

அதில், கொல்லப்பட்டவர்களின் வயது விபரமும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிறுவர்களும் கொல்லப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. பயங்கரவாதிகள் யார் என்பதும் அம்பலமாகியது.

இப்போது செம்மணி மயானத்தில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளிலும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இதுவும் சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு மறுக்க முடியாத சான்றாகும்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் யாருடையவை என்பதைப் பற்றி தெற்கில் சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் கடற்படை அதிகாரியும் அமைச்சருமான சரத் வீரசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் விசித்திரமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று அவர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அவை இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என்றும் மற்றொரு கருத்தும் வெளியிடப்படுகிறது.கடந்த மாத இறுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, செம்மணிக்கும் சென்று அங்கு அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார்.

அவரை அங்கு செல்ல அனுமதித்ததையிட்டு விமல் வீரவன்ச அரசாங்கத்தைக் குறை கூறியிருந்தார். இது அவர்களது வாதத்துக்கே முரணானதாகும். இந்த எலும்புகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என்றால், ஐ.நா. உயர்ஸ்தானிகர் அங்கு செல்வதை அவர்கள் ஏன் குறை கூற வேண்டும்?

செம்மணி 1990களில் இருந்தே அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது, பொது மக்கள் அதனை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதைப் பற்றி கதை சொல்லும் இடமாக இருக்கிறது. அக் காலத்தில் அங்கு இராணுவத்தின் சோதனைச் சாவடியொன்று இருந்தது.

 அந்த இடத்தில் தான் கிருசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலை மாணவி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவர் கடத்திக் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, தான் இந்த இடத்தில் சுமார் 600 பொது மக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்று சோமரத்ன ராஜபக்‌ஷ என்ற இராணுவ அதிகாரி கூறியிருந்தார்.

ஆயினும், அதன் பின்னர் அதைப் பற்றி பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.1995இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, யாழ். குடாநாடு ஏறத்தாழ முழுவதுமாக புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலையில், குடாநாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக அவ்வாண்டு இராணுவத்தினர் ‘ரிவிரெச’ என்ற படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அக்காலத்தில் குடாநாட்டைச் சேர்ந்த 500க்கும் 600க்கும் இடைப்பட்டோர் காணாமற் போனதாக சிறிது காலத்துக்குப் பின்னர் கூறப்பட்டது. அத்தகவலும் சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியமும் பொருத்தமாக இருக்கிறது.

இலங்கையில் செம்மணியில் மட்டும் கூட்டுக் கொலைகள் இடம்பெறவில்லை. அதேவேளை, அரச படைகள் மட்டும் தான் கூட்டுக் கொலைகளைச் செய்தார்கள் என்று கூறவும் முடியாது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப் படை, இந்தியப் படைகள், புலிகள் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படை ஆகிய அனைவரும் கூட்டுக் கொலைகளுக்காகக் கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அச்சம்பவங்களில் பலவற்றில் தடயங்கள் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போதே கூட்டுக் கொலைகள் முதன் முதலில் இடம்பெற்றன.

தெனியாய, கேகாலை போன்ற பல பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றன. அக்காலத்தில் மனித உரிமை அமைப்புக்களில் செயற்பாடுகள் மிகக் குறைந்ததாகவே இருந்தமையினால் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியன அறிக்கையிடப்படவில்லை.

ஆங்காங்கே ‘டயர்’ போட்டு சடலங்களை எரித்த கதைகள் மற்றும் ஆறுகளில் சடலங்கள் மிதந்த கதைகள் மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தன.
பிரிவினைவாத போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கூட்டுக் கொலை 1984 செப்டெம்பர் 10ஆம் திகதி வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளத்திலேயே இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்று ரம்பேவ என்னுமிடத்தில் வழிமறிக்கப்பட்டு பூவரசங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த 47 பயணிகளில் 15 பேர் அவ்விடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இராணுவத்தினரையே அப்பத்திரிகைகள் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருந்தன.
இதனையடுத்து, தமிழ் ஆயுத குழுக்களும் அதே ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முதல் சாதாரண மக்களைத் தாக்கின.

1984ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘டொலர் பார்ம்’ மற்றும் ‘கென்ட் பார்ம்’ என்ற இரண்டு பெரும்பான்மையின குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 62 சாதாரண மக்கள் உள்ளிட்ட மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

அடுத்த நாள் அதாவது டிசெம்பர் 1ஆம் திகதி அதே மாவட்டத்தில் கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு மீனவ கிராமங்கள் தாக்கப்பட்டு 11 பெரும்பான்மை இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். புலிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 
அதே மாதம் இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தாக்கி சுமார் 100 தமிழர்கள் வரை கொன்றதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு அடுத்து வந்த வருடங்களில் இரு சாராரும் வடக்கு கிழக்கில் ஏட்டிக்குப்போட்டியாக கிராமங்களைத் தாக்கியுள்ளனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு வந்த இந்தியப் படையினர், ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களும் பல இடங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டனர்.

1990ஆம் ஆண்டு சாதாரண மக்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட வருடமாகும். கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் மற்றும் ஒண்டாச்சிமடத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். புலிகளே அத்தாக்குதல்களை நடத்தினர்.

1980களில் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் அதிகமானோர் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொழும்பு மாவட்டத்தில் ஹோகந்தர, கம்பஹ மாவட்டத்தில் வனவாசல போன்ற இடங்களில் புதைகுழிகளில் கூட்டாகப் பலர் புதைக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் பல்வேறு காலங்களில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்ட போதிலும், சகல கொலைகளைப் பற்றியும் கூட்டுப் புதைகுழிகள் போன்ற தடையங்கள் காணக்கூடியதாக இல்லை.

அதேபோல, பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அவற்றைப் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை.சர்வதேச நெருக்குதல் காரணமாகப் பல அரசாங்கங்கள் காணாமற்போனோர்களைப் பற்றி ஆணைக்குழுக்களை நியமித்தன.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலங்களில் தெற்கில் 60,000க்கு அதிகமானோர் காணாமற்போனதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கென பிரேமதாச ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இதனையடுத்து, வந்த ஜனாதிபதி சந்திரிகாவும் அதே விடயத்துக்காக மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றொன்றை நியமித்தார். குறித்த சகல ஆணைக்குழுக்களும் ஊரையும் உலகையும் ஏமாற்றம் உத்திகள் என்பது இப்போது நிரூபனமாகி விட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனித உரிமை விடயத்தில் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்தார். அரசாங்கத்தின் போர் வீரர் தின வைபவங்களில் கலந்துகொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பவில்லை.

பின்னர் அதில் கலந்துகொண்டாலும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலல்லாது, அவர் நல்லிணக்கத்தை வலியுறுத்தியே அங்கு உரையாற்றினார். ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகர் செம்மணிக்குச் செல்ல அவரது அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்கவில்லை.

ஆயினும், மனித உரிமை விடயத்தில் நிர்ணயகரமான முறையில் அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதைக் காலம் தான் கூறும். ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் பெரும்பான்மை சமூகம் அடுத்த தேர்தலில் அவரை தூக்கி எறிந்துவிடும்.

அவர் அந்த அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராவாரா என்பது காலம் போகப் போகத் தான் தெரிய வரும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செம்மணி-விடயத்தில்-அனுர-உறுதியாக-இருப்பாரா/91-361619

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

1 month 3 weeks ago
கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து! கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது - இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும். இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப் நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம். https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலை_இலங்கையின்_வரலாற்றில்_ஒரு_சோகமான_பகுதி__-_கனடா_பிரதமர்_கருத்து!

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

1 month 3 weeks ago

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

459542465.jpg

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்  குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது - இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.

இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப்  நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம்.

https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலை_இலங்கையின்_வரலாற்றில்_ஒரு_சோகமான_பகுதி__-_கனடா_பிரதமர்_கருத்து!

மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு

1 month 3 weeks ago
மூளாய் கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது! Published By: VISHNU 24 JUL, 2025 | 02:22 AM மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை (23) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் புதன்கிழமை (23) அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220772

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி. பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோவில் விவகாரத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இருநாட்டு வீரர்களும் பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளனர். மேலும் தூதரக அதிகாரிகளை வெளியேற தாய்லாந்து, கம்போடியா அரசுகள் உத்தரவிட்டுள்ளன. Read more at: https://tamil.oneindia.com/news/international/clash-erupts-between-thailand-and-cambodia-722881.html

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 month 3 weeks ago

screenshot2362-down-1753335056.jpg

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி.
பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோவில் விவகாரத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இருநாட்டு வீரர்களும் பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளனர். மேலும் தூதரக அதிகாரிகளை வெளியேற தாய்லாந்து, கம்போடியா அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/clash-erupts-between-thailand-and-cambodia-722881.html

யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா!

1 month 3 weeks ago
யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா! adminJuly 24, 2025 இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் திணைக்கள யாழ் கோட்டை பொறுப்பு அதிகாரி கபிலன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான மார்க்கண்டு அருட்சந்திரன் ,விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளரும் அஜந்தா சுப்பிரமணியம் , மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் ஆகியோருக்கு யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பு வாய்ந்த அதிகாரி கவிதா ,யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் சர்வேஸ்வரா ஐயர் பத்மநாதன் ,யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் சாந்தினி அருளானந்தன் , தொல்லியல் திணைக்கள உதவி பணிப்பாளர் பந்துலஜீவ, மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் தர்மகீர்த்தி , வடமாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் யசோதரா ,யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2025/218295/ தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றது! adminJuly 24, 2025 தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23.07.25) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது வரலாற்று தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை . மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது. ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளது. காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருகிறது. ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள். மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது. எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218299/

யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா!

1 month 3 weeks ago

யாழ்ப்பாணத்தில் தொல்லியல் தின விழா!

adminJuly 24, 2025

522885777_1272046774320573_2457112237575

இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் திணைக்கள யாழ் கோட்டை பொறுப்பு அதிகாரி கபிலன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான  மார்க்கண்டு அருட்சந்திரன்  ,விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளரும்
அஜந்தா சுப்பிரமணியம்  , மரபுரிமை   தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான  பாலயோகஸ்தினி சிவயோகநாதன்  ஆகியோருக்கு யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , நகர அபிவிருத்தி அதிகாரசபை  பொறுப்பு வாய்ந்த அதிகாரி கவிதா ,யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர்  சர்வேஸ்வரா ஐயர் பத்மநாதன் ,யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் சாந்தினி அருளானந்தன் , தொல்லியல் திணைக்கள உதவி பணிப்பாளர் பந்துலஜீவ, மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் தர்மகீர்த்தி , வடமாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் யசோதரா ,யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

https://globaltamilnews.net/2025/218295/

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றது!

adminJuly 24, 2025

1-3.jpg?fit=1170%2C658&ssl=1

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று  போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23.07.25) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது வரலாற்று தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி  மிக்கவை . மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது.

ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளது. காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருகிறது.

ஒரு வாழும் கோட்டையாக  யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம்  தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.

மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று  போகின்ற தன்மை காணப்படுகிறது.

மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை  உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது.

எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/218299/

இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

1 month 3 weeks ago
Published By: VISHNU 24 JUL, 2025 | 02:06 AM நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும். 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் அடங்கும். முன்னர் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், 2023 இல் அந்த புதைகுழியில் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 18ஆவது நாளான ஜூலை 23 புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார். "புதிதாக ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களும் மொத்தமாக 20 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 67 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன." நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின. https://www.virakesari.lk/article/220770