Aggregator

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை

1 month 2 weeks ago
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்? முதல் 10 இடங்களில், ஓமன் மட்டுமே ஐரோப்பிய நாடு இல்லாத நாடு ஆகும். இந்த பட்டியலில், 124.4 புள்ளிகளுடன் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும், அதிக அளவிலான மாசுபாடு, மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரப் பராமரிப்பில் சீரற்ற அணுகல், கடுமையான நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன. 105.7 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 76வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் இலங்கை மோசமான வாழ்க்கை தரமுள்ள நாடுகளின் பட்டியலில், 15.6 புள்ளிகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. வெனிசுலா 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும் உள்ளது. இதில், 82.8 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய பொருளாதார மீட்சி, நிலையான வாழ்க்கை தரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் வாழ்க்கை தரம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேவேளையில், அதிக கடன், பண வீக்கம் ஆகியவை மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை பாதிக்கின்றன. எகிப்து 5வது இடத்திலும், ஈரான் 6வது இடத்திலும், பெரு 7வது இடத்திலும், கென்யா 8வது இடத்திலும், வியட்நாம் 9வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் உள்ளது. Lankasri Newsமோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை...மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numb...

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை

1 month 2 weeks ago

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது.

சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள்

Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. 

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை | Countries With Best And Worst Quality Of Life 2025

இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. 

அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்?

அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்?

முதல் 10 இடங்களில், ஓமன் மட்டுமே ஐரோப்பிய நாடு இல்லாத நாடு ஆகும். 

இந்த பட்டியலில், 124.4 புள்ளிகளுடன் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. 

உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும், அதிக அளவிலான மாசுபாடு, மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரப் பராமரிப்பில் சீரற்ற அணுகல், கடுமையான நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன. 

105.7 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 76வது இடத்தில் உள்ளது. 

4வது இடத்தில் இலங்கை

மோசமான வாழ்க்கை தரமுள்ள நாடுகளின் பட்டியலில், 15.6 புள்ளிகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது.

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை | Countries With Best And Worst Quality Of Life 2025

வெனிசுலா 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும் உள்ளது.

இதில், 82.8 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்திய பொருளாதார மீட்சி, நிலையான வாழ்க்கை தரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் வாழ்க்கை தரம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேவேளையில், அதிக கடன், பண வீக்கம் ஆகியவை மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை பாதிக்கின்றன. 

எகிப்து 5வது இடத்திலும், ஈரான் 6வது இடத்திலும், பெரு 7வது இடத்திலும், கென்யா 8வது இடத்திலும், வியட்நாம் 9வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் உள்ளது. 

Lankasri News
No image previewமோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை...
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numb...

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 2 weeks ago
தோழரே நான் எங்கு திரு.ராமசந்திரன் அவர்களை சீமானோடு ஒப்பீடு செய்தேன் ..? அரசு நிலத்தை தாரை வார்த்தது வள்ளல் குணமா..? அன்றைய சாராய வியாபாரிகள் கல்வி தந்தையாக மாற ஏரி குளம் குட்டை அனைத்தையும் பட்டா போட்டு தன் கையாட்களுக்கு தானமாக கொடுத்தவர் தான் திரு.ராமசந்திரன். ஜேப்பியார்/ராமசந்திரா மருத்துவமனை. ஜெக்தரட்சிகன் எ.வ வேலு வேலூர் விசுவநாதன் இவர்கள் எல்லாம் . ஆக இன்றைய சென்னை இன்று தனியார் கல்வி மையம் ஆனதிற்கு காரணம் திரு.ராமசந்திரன் மறுபுறம் சென்னை பெருவெள்ளத்தத்தளிப்புக்கு காரணம் திரு.ராமசந்திரன் அவர்களே. மறுக்க முடியுமா? "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" மனிதர்களுக்கு குறைகளும் உண்டு;முழுதும் நிறைகளே இருந்தால் தெய்வமே..? குறைகளை விட நல்லவைகள் அதிகம் இருந்தால் நல்லவராக தெரிகிறார் அவ்வளவே ..

சமையல் செய்முறைகள் சில

1 month 2 weeks ago
5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்.. 1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும். 2. 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். --- 2. மசாலா நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். 2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும். 3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். 4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். --- 3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 கருவேப்பிலை – 1 கைப்பிடி மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும். 2. மீனை அதில் ஊறவைக்கவும். 3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும். 4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார். --- 4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy) பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – ஆழ்வறுக்க செய்முறை: 1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும். 2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும். 3. சூடாக சாப்பிட அருமை. --- 5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் கொத்தமல்லி இலை – ½ கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிதளவு பூண்டு – 4 பல் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். 2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். 4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும். தமிழ்நாடு ரெசிப்பீஸ்

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

1 month 2 weeks ago
சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் அல்லவா? வரலாறு என்றால் பேராதனையில் இருந்த பத்மநாதன் அல்லது யாழ் பல்கலை புஷ்பரட்ணம். புஷ்பரட்ணம் இந்த மறைப்பைச் செய்யக் கூடியவராகத் தெரியவில்லை.

ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!

1 month 2 weeks ago
உங்களுடைய "விரும்பி ஏற்ற கோமா" வைப் பற்றியா பேசுகிறீர்கள்😎? அவருக்கு அந்த நேரம் ஆயுதங்களுடன் திரிந்த எல்லோருடனும் முரண்பாடு இருந்தது. ஆனால், சாட்சிகள், சந்தர்ப்பங்கள் வைத்து அவர்கள் அன்று முதல் தெரிவித்து வருவது புலிகளின் ஆயுததாரி கொன்றார் என்று தான். இடையில், புலிகளின் பிஸ்ரல் குழுவிடம் இருந்து தான் தப்பிக் கொள்ள அற்புதன் என்ற ஒருவர் மட்டும் இன்னொரு அமைப்பைக் கைகாட்டி விட்டதால், "பெயின்ற் வாளி" ரீம் அதைத் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு செப்ரெம்பரிலும், புலிகள் நினவு கூராமல் தடை செய்த ராஜினியின் நினைவு தினத்திற்கு அண்மையாக இத்தகைய பெயின்ற் வாளிகள் வெளியே வந்து மீண்டும் நித்திரைக்குப் போய் விடுவது வழமை😂!

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

1 month 2 weeks ago
பேராசிரியர் சிவத்தம்பியாக இருக்கலாம் என ஊகித்தேன். பாட புத்தகங்களில் உள்ளவை தான் வளரும் சந்ததியில் பதியும். பொதுத் தளங்களில் இருப்பதை ஒருசிலரே கவனிப்பார்கள்.

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

1 month 2 weeks ago
பெயரைச் சுட்டிக் காட்டாமல் எழுதியிருக்கிறார், வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை😂. பேராசிரியர் பத்மநாதனாக இருக்குமென ஊகிக்கிறேன். அவர் தான் பாடநூலாக்கக் குழுவில் இருந்தார். இது தான் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் அந்த சிவன் பார்வதி சிலை பற்றிய கட்டுரை. https://amazinglanka.com/wp/shiva-kovil-no-1/ இவற்றைப் பாடப் புத்தகத்திலும், பேராசிரியரின் (யாரும் வாசிக்காத) புத்தகத்திலும் மறைத்து என்ன பயன்? பொதுத் தளங்களில் இந்தச் சிலை பற்றிய உண்மையான வரலாறு இருக்கிறது. இதை மறைக்க இயலாது.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 2 weeks ago
பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார். இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தெருத்தெருவாக திரியும் நேரத்தில் 84 வயதுவரை வேலை செய்துள்ளார். அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.

குட்டிக் கதைகள்.

1 month 2 weeks ago
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார். அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 👩‍❤️‍💋‍👨பேசும் கவிதைகள்💞 Tamil Kavithai ·

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month 2 weeks ago
ரசிக்கக் கூடியவர்களுக்கு ஏற்ராற் போல்தான் பாடல்களும் கிடைக்கின்றன கவி . ..... பக்கத்தில் உள்ளேன் ஐயாவின் பக்கத்திலும் நல்ல நல்ல பாடல் வரிகள் உண்டு . ..... பாடல் கேட்கும் போது இல்லாத சுகம் வாசிக்கும் போது கிடைக்கும் ..........இந்த பகுதியை ஆரம்பித்து வைத்த நிழலிக்கு நன்றி . ......! 😂

யாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டுப்பிரசுரம்

1 month 2 weeks ago
யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர் அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர். தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம்“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilwinயாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டு...யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்...

யாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டுப்பிரசுரம்

1 month 2 weeks ago

யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர்

அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.

இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர்.

தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம்“ என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilwin
No image previewயாழில் தீலிபனின் நிகழ்வில் குழப்பம் : சர்ச்சையாகிய துண்டு...
யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்...

மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை

1 month 2 weeks ago
இங்கு தாதி தானே முடிவெடுத்து சிறுமியின் கையை வெட்டி அகற்றி உள்ளாரா ? யாரோ ஒரு பெரிய வைத்தியரின் அனுமதி இல்லாமல் இவ்வாறு நடக்க சந்தர்ப்பம் உள்ளதா ? அந்த பெரிய வைத்தியர் தனியார் வைத்திய சாலைக்கு பகுதி நேரமாக கடமை ஆற்ற சென்று இருப்பார் முதலில் அவரைத்தான் பிடித்து தண்டிக்கணும் . இங்கு கூட இந்தியாவில் இருந்து அரைகுறை தாதிய அறிவுடன் மலையாளிகள் வந்து அனேகமா அவர்களுக்கு cannula எப்படி போடுவது எப்படி flush செய்வது என்பது புரியாமல் நோயாளிகளின் கைகளை கார்ட்டூன் படங்களில் வரும் மனிதர்கள் போல் வீங்க வைத்து இருப்பார்கள் பின்பு எப்படி சரி செய்கிறார்கள் என்று தெரியவில்லை கோமாவில் இருக்கும் நண்பனை பார்க்க செல்லும்போது ஆறுதலாக இருந்து பார்க்கணும் . இந்த சிறுமிக்கும் cannula வில் சரியாக flush செய்யாமல் விட்டதின் விளைவு காரணமாக பிழையான முடிவு எடுத்துள்ளார்கள் என்று கேள்வி . அரைகுறை அறிவு பண ஆசை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகை ஒடித்து தள்ளி விட்டது .இனிமேலும் பணம் பணம் என்று பாயும் வைத்தியர்கள் திருந்துவார்களா ?