1 month 3 weeks ago
பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு! பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடாத்தப்படும். பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில் ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர். இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440653
1 month 3 weeks ago

பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!
பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடாத்தப்படும்.
பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில் ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர்.
இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1440653
1 month 3 weeks ago
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1440698
1 month 3 weeks ago

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
https://athavannews.com/2025/1440698
1 month 3 weeks ago
இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்! இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1440703
1 month 3 weeks ago

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!
இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
https://athavannews.com/2025/1440703
1 month 3 weeks ago
AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440629
1 month 3 weeks ago

AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்!
தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது .
இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2025/1440629
1 month 3 weeks ago
சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் ஆட்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂
1 month 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம் அரசு மதமாக மாறியது. மாலத்தீவு உலகின் மிகச் சிறிய இஸ்லாமிய நாடு. மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் இன்று(ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இது பிரதமர் மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம் ஆகும். 2023 ஆம் ஆண்டு முகமது முய்சு அதிபரான பிறகு மாலத்தீவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோதி ஆவார். மாலத்தீவில் முய்சு ஆட்சிக்கு வர அவரது இந்திய எதிர்ப்பு பிரசாரமும் ஒரு முக்கிய காரணமாகும். முந்தைய மாலத்தீவு அசு 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. முய்சு அந்தக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். சீனாவுடனான உறவுகளை முய்சு மேலும் வலுப்படுத்தினார். 7.5 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட மாலத்தீவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, இந்தியா அந்நாட்டை காப்பாற்றியது. இதனால் முய்சு இந்தியா மீதான தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. அதிபரான பிறகு, முய்சு முதலில் துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்கு பயணம் செய்தார். இதற்குப் பிறகு, இந்தியாவுடனான கசப்பை நீக்க முய்சு ஒரு முயற்சியைத் தொடங்கினார். முன்னதாக இந்தியா குறித்து மாலத்தீவு அரசின் சார்பில் ஆக்ரோஷமான அறிக்கைகள் வந்தபோதும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பொறுமையும் நிதானமும் வெளிப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், ஏழரை பில்லியன் டாலர்கள் மட்டுமே பொருளாதாரம் கொண்ட ஒரு மிகச் சிறிய நாட்டின் மீது இந்தியா ஏன் இவ்வளவு நிதானத்தைக் காட்டியது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1. மாலத்தீவின் இருப்பிடம் மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அதற்கு சிறப்பு. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் நல்லதாகக் கருதப்படவில்லை. மாலத்தீவு ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறுகிறார். "இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. மாலத்தீவுடனான நல்லுறவு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பிலும் மாலத்தீவின் ஒத்துழைப்பு முக்கியமானது" என்று சிக்ரி கூறுகிறார். "மாலத்தீவு அமைந்துள்ள இடங்களில், முக்கியமான கடல் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் பாரசீக வளைகுடாவிலிருந்து கிழக்கு ஆசியா வரை செல்கின்றன. இந்தியாவும் வர்த்தகத்திற்காக இந்தப் பாதையைப் பயன்படுத்துகிறது" என்று சிந்தனைக் குழுவான ORF இன் மூத்த உறுப்பினரான மனோஜ் ஜோஷி கூறுகிறார். 2.பூகோள ரீதியாக இந்தியாவுடனான நெருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மனோஜ் ஜோஷி கூறுகையில், "சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை அமைத்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும். சீனா மாலத்தீவில் வலுவாக மாறினால், போர் போன்ற சூழ்நிலையில் இந்தியாவை அடைவது சீனாவுக்கு மிகவும் எளிதாகிவிடும். சீனா மாலத்தீவில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை உருவாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம்." என்கிறார். மேலும் மனோஜ் ஜோஷி கூறுகையில் "மாலத்தீவு இன்னும் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அழைத்திருந்தாலும், மாலத்தீவு அதிபர் முய்சு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார். மாலத்தீவின் பொது மக்கள் கருத்து இன்னும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. முய்சு இதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். முய்சு இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியிருப்பது, விருப்பத்தின் பேரில் அல்ல கட்டாயத்தால் நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு மாலத்தீவு சீனாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் லட்சியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்து, ஈடுபாடு காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுப்பதில் மாலத்தீவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவின் பல முக்கிய திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவற்றில், கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் ( Greater Malé Connectivity Project ) சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதுகாப்புத் துறையில் சீனா தங்களுக்கு உதவும் என்று மாலத்தீவு கூறியிருந்தது. பின்னர் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பாதுகாப்பு உதவியையும் வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்படும்" என்று எழுதியிருந்தது. சீனா மாலத்தீவில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா-மாலத்தீவு நட்புப் பாலத்தைக் கட்டி வருகிறது. மாலத்தீவில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரியில், முய்சு சீனாவுக்கு சென்றார், இரு நாடுகளும் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வருடாந்திர மதிப்பாய்வு 2018 இன் படி, டிசம்பர் 27, 2016 அன்று, மாலத்தீவின் மாலே விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு தீவை சீனா 50 ஆண்டுகளுக்கு $4 மில்லியனுக்கு குத்தகைக்கு எடுத்தது. ஃபெய்தூ பினோல்ஹு என்பது தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும், இது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது, இதற்காக மாலத்தீவில் பல திட்டங்களில் சீனா பங்கெடுத்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு ஏலச் செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை மாலத்தீவு ஜூலை 2016 இல் இயற்றியது. இந்த செயல் சீனாவிற்கு சாதகமாகக் கருதப்பட்டது. "பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் தொடர்ந்து பாதுகாப்பாக வந்தடைவதற்கு அரபிக் கடலில் ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க சீனா விரும்புகிறது. மறுபுறம், மாலத்தீவுகள் சீனாவிற்கு எளிதான இடமாக மாறி விடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது" என்று மனோஜ் ஜோஷி கூறுகிறார். 4. இந்தியா மீதான முய்சுவின் நிலைப்பாடு "மே 10 ஆம் தேதிக்குப் பிறகு, மாலத்தீவில் எந்த வடிவத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் இருக்க மாட்டார்கள். சீருடையில் இருந்தாலும் சரி, சிவில் உடையில் இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தினர் இனி மாலத்தீவில் இருக்க மாட்டார்கள். இதை நான் முழு உறுதியுடன் சொல்கிறேன்" என்று முய்சு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முய்சு சீனாவுக்கு சென்றார். இதன் பின்னர் அவருடைய பேச்சுகளில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைத்தார். "மாலத்தீவுகள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது தன்னை அச்சுறுத்த யாருக்கும் உரிமை தராது" என்று முய்சு கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "அச்சுறுத்தும் நாடு 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை வழங்காது" என்று கூறியிருந்தார். அனந்தா மைய சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு இன்னும் இருப்பதால் இந்தியாவிற்கும் மாலத்தீவு முக்கியமானது. "மாலத்தீவுகள் இந்தியாவை நேசிக்காது, ஆனால் அது ஒரு பாதுகாப்பு சவாலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பாக்சி கூறுகிறார். கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் இருப்பதால், மாலத்தீவு சீனாவிற்கும் மிகவும் முக்கியமானது. வளைகுடாவிலிருந்து சீனாவிற்கு வரும் அனைத்து எண்ணெய் பொருட்களும் இந்தப் பாதை வழியாகவே வருகின்றன. இது தவிர, மாலத்தீவுக்கு அருகிலுள்ள டியாகோ கார்சியாவில் அமெரிக்கா ஒரு முக்கியமான கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. 1988ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி இராணுவத்தை அனுப்பி அப்துல் கயூமின் அரசாங்கத்தைக் காப்பாற்றினார். 2018 ஆம் ஆண்டில், மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டபோது, இந்தியா தண்ணீரை கப்பலில் அனுப்பியது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6273lx2x5ko