Aggregator

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ

1 month 1 week ago
30 Sep, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பரஸ்பர மரியாதையை தொடர்ந்து பேணிச்செல்ல முடியுமான அரசில் கலசாரத்தில் நாங்கள் இருவரும் சமகாலத்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்திற்கு வந்து சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்று தங்கல்லை கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு நாங்கள் இருவரும் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டருந்தோம். அரசியல் ரீதியில் நாங்கள் இருவரும் வேறு நிலைப்பாட்டை வகித்தபோதும் தேசியப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில் பரஸ்பர மரியாதையைப் பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள். அன்புக்குரிய ரணில் விக்ரமசிங்கவின் வருகை தொடர்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று மைத்திரி விக்ரமசிங்கவையும் மரியாதையுடன் நினைவு கூருகிறேன். பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ

1 month 1 week ago

30 Sep, 2025 | 05:20 PM

(எம்.ஆர்.எம்.வசீம்)

பரஸ்பர மரியாதையை தொடர்ந்து பேணிச்செல்ல முடியுமான  அரசில் கலசாரத்தில் நாங்கள் இருவரும் சமகாலத்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்திற்கு வந்து சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்று தங்கல்லை கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு  நாங்கள் இருவரும் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டருந்தோம். 

அரசியல் ரீதியில் நாங்கள் இருவரும் வேறு நிலைப்பாட்டை வகித்தபோதும் தேசியப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில் பரஸ்பர மரியாதையைப் பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள்.

அன்புக்குரிய ரணில் விக்ரமசிங்கவின் வருகை தொடர்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று மைத்திரி விக்ரமசிங்கவையும்  மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

1 month 1 week ago
30 Sep, 2025 | 07:36 PM பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கக்கூடும் என்று அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க முடியும் பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை | Virakesari.lk

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

1 month 1 week ago

30 Sep, 2025 | 07:36 PM

image

பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கக்கூடும் என்று அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, மேலும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்க முடியும்

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை | Virakesari.lk

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
போனதடவை இருவரும் கைதான போதும், சவுக்கு கைது நியாயமானது ஆனால் பீலிக்ஸை தேவையில்லாமல் கைது செய்கிறார்களோ என தோன்றியது. இந்த முறை இவர்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை. போனமுறை சவுக்கு, பீலிக்ஸ் இருவரையும் கோர்ட் வெளியே விட்டது. இந்த முறையும் வெளிவிடும் என்றே நினைக்கிறேன். அவர்கள் வெளியே வரும் போது அவர்கள் கூறியது வதந்தி அல்ல என்ற தோற்றப்பாடு இயல்பாகவே எழும். இதை திமுக தவறாகவே கையாள்கிறது. அன்பில் ரமேஸ் அழுகையில் ஆரம்பித்து, செய்தியாளர் கைதுவரை, திமுக நாடகம் ஆடுகிறது, எதையோ மறைக்கிறது என்பதே மக்கள் மனதில் பதியல்கூடும். இது உண்மை அல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் சிலசமயம் உண்மையை விட, perception நிலைத்து விடுவது உண்டு. உதாரணம் ரஜீவ்காந்தி கொலையும் திமுகவின் 1991 படுதோல்வியும்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
தமிழ்நாடு காவல்துறை டெல்லிவரை போய் கைது செய்தது என்று நினைக்கிறேன்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
நூறு பேர் புகுந்து வெட்டினார்கள் ஆயிரம் பேர் புகுந்து வெட்டினார்கள் என்று ஏகத்திற்கு அடித்துவிட்டால் வெட்டுப்பட்டவர்கள் எங்கே என்று கேட்கமாட்டார்களா. தங்கள் தவறை மறைக்க ஏகப்பட்ட conspiracy theory க்களை உருவாக்கி எந்த கூச்சமும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது அணில் கூட்டம். ஒரு காணொளியில் சவுக்கு 40 பேரும் இறந்தது நன்மைக்கே என்று பேசிவைத்திருக்கிறான். மிக விரைவில் இவனுக்கும் மாமியார் வீடுதான்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
https://www.facebook.com/share/p/1GxMJAgg8r/?mibextid=wwXIfr• #தமிழ்நாட்டின் இளைய தலைமுறை சினிமா நடிகர்கள் மீதான மோகத்தில், எப்படி தலைகீழாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பற்கான உதாரணம்தான் கரூர் நிகழ்விற்கு பின்னரான நிகழ்வுகள். சரி. திமுக சதி வேலைகள் செய்தது. சரி. உயிரிழப்புகளை திமுகதான் திட்டமிட்டு நடத்தியது. சரி. பெரும் அநீதி சதி திட்டத்தின் ஊடாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. (இது தவெக அதனது பெரும் தவறை மறைப்பதற்காக உருவாக்கும் narrative என்பது எனது பார்வை) • #அப்படியானால் என்ன செய்யவேண்டும்? தவெகவின் தலைவர் தெருவிற்கு இறங்கி நீதி கேட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் தவெக ஆதரவாளர்கள் சொல்லும் சகல காரணங்களையும் விஜய் அவரது சொந்த வாயால் சொல்லிருக்கவேண்டும். சம்பவம் நடந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த புள்ளியில் இவர் எப்படி கூமுட்டை ஆனார் என்பதை தனியாக விவரிக்கிறேன். மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. பெரும் அசம்பாவிதம் நடந்த பிறகு தாழ்ப்பாளை போட்டு உள்ளுக்குள் ஒருவர் இருக்கிறார். இதற்கு ரைட் அப்புகள். “தலைவர் சோகத்தில் 3 நாட்களாக தண்ணீர் மட்டுமே குடித்தார்.” “தலைவா எழுந்து வா! “ • #டேய்! தலைவன் என்பவன் தலைமை தாங்குபவன். அவன் களத்தில் இருக்க வேண்டும். தலைவன் என்பவன் முடிவுகளை தொலைநோக்கு பார்வையில் துரிதமாக எடுப்பவன். மன உறுதியில் மற்றவரை விட கல்லாய் இருப்பவன். தமிழ்நாட்டில் உட்டாலக்கடியாய் நடக்கிறது. எட்டு கோடி மக்களை ஆள கெஞ்சி வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறார்கள். இதை சொல்வது யார்? படிக்காத பாமரனோ, கிராமத்தானோ அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை எடுக்கும் திறனுள்ள இளைய தலைமுறை. அந்தளவிற்கு நடிகர்கள் மீதான போதை தலைகீழாய் சிந்திக்கும் திறனை தந்திருக்கிறது. அநீதி தானே. அதை நீதானே தட்டிக்கேட்க வேண்டும். இன்னும் சில நாள் கழித்து அழும் முகத்துடன் பாவமாக உரையாற்றுவார். நெஞ்சை பிழிய வைக்கும் கதையுடன் வீட்டில் தாழ்ப்பாளை போட்டு இருந்ததற்கான காரணத்தை சொல்வார். அப்போதும் இந்த தலைமுறை “தலைவா! உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரலாமா” என இரண்டு ரைட்அப் எழுதும். இதுவரை சொன்னது திமுக சதி வேலை செய்திருந்தால். • #இனிமேல் சொல்வது“விஜய்தான் இதில் பெரும் குற்றவாளி” என்ற எனது பார்வையில். இந்த சனிக்கிழமை கூட்டம் என்பது விஜய் அவரது செல்வாக்கை காட்டுவதற்காக, அணு அணுவாக வடிவமைக்கப்பட்டது. இதில் Health and Safety Regulations என்பதை முற்றிலும் இரண்டாம் பட்சமாகவே அணுகியிருக்கிறார்கள். சில நாடுகளில் Public Order and Safety Protocols என அழைப்பார்கள். இவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காட்ட பயன்படுத்திய உத்திகளை நான் விவரிக்க கூட தேவையில்லை. “எப்படி அதிகமாக கூட்டத்தை சேர்ப்பது, எப்படி அதனை அதிக நேரம் தக்கவைத்திருப்பது” என்பதுதான் அவர்களது “பிரதான நோக்கமாக” ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது. சகல வழிகளிலும் அவர்களது பிரதான நோக்கத்தை அடைய பாடுபட்டிருக்கிறார்கள். கள தகவல்களை எடுத்து பார்த்தாலே தெரியும். திமுக சதி வேலை செய்தது என சொல்பவர்கூட இதனை மறுக்கமுடியாது. விஜய் இந்த “பிரதான நோக்கத்தை” அடைய எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறார். திமுக சதி செய்திருந்தாலும் கூட, தவெக முறையான Public Order and Safety Protocols பின்பற்றியிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள bottom line. உண்மையில் மேற்குலகில் ஒருவர் இதே உத்திகளை பயன்படுத்தி, 40 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்திருந்தால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பிறந்ததால், விஜய் தப்பித்திருக்கிறார். விஜய் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனால் கூட, திமுக சட்டத்தை பாய்ச்சாது. அது திமுகவிற்கு எதிராக திரும்பிவிடும் என்பதை அது அறியும். முழு அனுதாபத்தையும் விஜய் அறுவடை செய்துவிடுவார். க.ஜெயகாந்த்

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
ஓம்… பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன். முதல் முறை சவுக்குடன் கைதானார்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
அதெப்படி செந்தில்பாலாஜி சரியான நேரத்துக்கு வந்தாரு... அதெப்படி விஜயபாஸ்கர் அங்க வந்தாரு, அதெப்படி முதலமைச்சர் இதுக்கு மட்டும் உடனே நேரடியா கிளம்பிட்டாரு, அதெப்படி அன்பில் மகேஷ், MLA ங்க எல்லாம் அங்க வந்தாங்க, இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க சரி... அவங்க வந்து தான் ஆகணும் அதுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சி இருக்கு, அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் அங்க இருந்து தான் ஆகணும் அது அவங்க கடமை, அது தெரியாம background sound போட்டு எடிட்டிங் கட் போட்டு, பேசுற நீ களத்துக்கு வந்தியா... முதலமைச்சர் ஆகணும்ன்னு திரியுற விஜய்கிட்ட போய் சொல்லுங்க அண்ணா இப்படி ஒரு அசம்பாவிதம் ஆகி போச்சு நம்ம கூட்டத்துக்கு வந்து தான் இது எதிர்க்கட்சி சதியா கூட இருக்கலாம் நீங்க இங்கேயே இருங்க திருச்சில தங்குங்க, மக்களை போய் நம்ம நிர்வாகிகளை பாக்க்க் சொல்லுங்க, மாவட்ட செயலாளர்கள் கிட்ட போய் கலநிலவரம் என்னென்ன்னு தெறிஞ்சி கிட்டு நேரடியா போக வேண்டாம் atleast video call மூலமாவது ஆறுதல் சொல்லுங்க, நான் அங்க வந்தா இன்னும் பெரிய நெருக்கடி ஆகும் ஆனா உங்க கூட தான் நான் இருக்கேன், பயப்படாதீங்க எல்லாரும் சேர்த்து இந்த துயரத்தில இருந்து வெளியே வந்துரலாம்ன்னு பேச சொல்லி சொல்லி இருக்கலாம்ல..... Atleast புறமுதுகு காட்டி ஓடி போகும் போதாச்சும் செய்தியாளர்களை பார்த்து ஒரு வருத்தத துயரத்த சொல்ல கூட தயாரா இல்லாத ஒரு தலைவன் 🤦‍♀️🤦‍♀️

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 month 1 week ago
தமிழ் நகை கடை வைத்திருக்கும் பெருசாச்சாளிகளின் வண்டியை வளர்க்காமல் பேசாமல் 24 கரட் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. தமிழ் கடையில் ஒரு நகையை வாங்கி பக்கத்து நகை கடையில் விலைக்கு கொண்டு போனால் 4௦ வீத பெறுமதி குறைத்து கேட்ப்பார்கள் .

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 month 1 week ago
இப்போதைய காலத்தில் கலியாணம் கட்டும் மாப்பிள்ளைமார் பாடு திண்டாட்டம் தான் போல. ஐந்து அரை பவுண் தாலி எடுப்பது என்றாலே பதினைஞ்சு இலட்சத்துக்கு மேல் வேண்டும் போல் உள்ளதே.

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 month 1 week ago
ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.

லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்!

1 month 1 week ago
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கூட இந்த லண்டன் காந்தி சிலையை சேதப்படுத்துவதில் பின்னணியில் இருக்கலாம் மோடி rss இயக்கத்தின் நீண்ட கால விசுவாசி . நாதுராம் விநாயக் கோட்சே rss இயக்கத்தில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை ஆதாரம் https://www.bbc.com/tamil/india-60108094

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 month 1 week ago
இரண்டு டிரோன் இங்கிலாந்து பக்கமும் பறந்தால் தங்க விலை யும் சேர்ந்தே பறக்கும் . போனமாதம் காஸ்ட்கோ தங்க விலைக்கு இந்தமாத தங்க விலை வித்தியாசம் 11௦௦ பவுன் கூடியுள்ளது . us டொலரில் நம்பிக்கை இன்மை இன்னும் போக போக விலை அதிகரிக்கும் என்கிறார்கள் .