1 month 2 weeks ago
உங்கள் வாழ்தது கருத்துக்கு எதிராக நான் எதுவுமே கூறவில்லை. பொதுபடையாக தாயகமக்கள் உரிமை போராட்டத்திற்கு இது கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்ற உண்மையை எனது கருத்தாக மட்டுமே தெரிவித்ததற்கு நீங்கள் தான் எனக்கு பதிலெழுதி விவாதத்தை ஆரம்பித்தீர்கள். அதில் தவறில்லை ஆனால், இப்போது உங்கள் வாழ்த்துக்கு எதிராக உங்கள் கருத்துக்கு எதிராக நான் பதிவிட்டது போல் கதையை மாற்ற எத்தனிக்கின்றீர்கள். அது தான் தவறு. நான் பல முறை கூறிவிட்டேன் உங்கள் திருப்தி என்பது உங்கள் உரிமை என்பதை. உங்கள் உரிமையில் நான் என்றும் தலையிடவில்லை.
1 month 2 weeks ago
இது நல்ல கற்பனைதான்...இது ரொம்ப பழையது...கொஞ்சம் புதிசாக எழுதினால்தான் ...பதில் எழுதமுடியும் ...கற்பனையில் வாழாமல் கொஞ்சம் நியத்தில் வாழவும் .. நான் இந்த திரியில் குறிப்பிட்ட விசயம் ..கொடி ஏற்றியவர்களுக்கு வாழ்த்து தெர்வித்ததே ...அதையே விளங்க்காமல் எங்க்கெங்கோ போவதில்...இங்கு நான் என்ன எழுதக்கிடக்கு....அமைதியாக படுத்து ஆறுதலாக புதுவிடையத்துடன் வரலாம்
1 month 2 weeks ago
மக்கள் சாகும், அழிவை ஊக்குவிக்கும் அரசியலை செய்துவிட்டு, மக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நன்றிகடன் என்று உண்டியல் குலுக்கும் அரசியலை மட்டும் தான் செய்து வருகிறார்கள். இப்ப கொஞ்ச நாள் மக்கள் சாகவில்லை என்பது பும் பெயர் தேசியர்களுக்கு மிகுந்த கவலை. புதிய தலைமுறை பிள்ளைகள் படித்து முன்னறுகிறார்களே, அவர்களை உசுப்பேற்றி மீண்டும் இரத்தகளரியை உண்டாக்கி, பின்னர் இறந்த மக்களுக்கு நன்றி செலுத்துவதாக முதலைக்கணீர் வடித்து கலெக்சன் செய்வது, தாயகத்தில் மக்களின் வாழ்வை சீரழித்து அந்த பிள்ளைகளின் கல்வியை சீரழிக்கும் வேலைகளை செய்வது, ஆனால் தமது பிள்ளைகளை மட்டும் மேற்கு நாட்டு பல்கலைகழகங்களில் கற்பிப்பது போன்ற சுயநல செயற்பாடு குறித்து தாயக மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
1 month 2 weeks ago
அரசுப் பேருந்துகளின் நெருக்குதலே தனியார் பேருந்துகளின் வேகம் .தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் இரண்டு நிமிட இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்கி நெருக்கடி கொடுப்பதுதான் காரணம் கவன சிதைவுக்கு காரணம் அனைத்து பேருந்துகளிலும் பாட்டு கேட்க தடை செய்ய வேண்டும் பயணிகளிடம் பாட்டு கேட்பதற்கான செல்போன்கள் உள்ளன. குறிப்பிட்ட ஊரை சொல்லி டிக்கெட் ஏறிய பின்பும் கத்தி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே செல்லவே அரைமணி நேரம் ஆக்கி விடுவார்கள்,சில பஸ்கள் 60 நிமிடம் கூட எடுத்துக்கொள்ளும். நகருக்குள் தேவையில்லாமல் விட்ட நேரத்தை பிடிக்கிறேன் என நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது. குறிப்பாக பெண் பயணிகள். அரசு பஸ்க்கு முன்னால் சீக்கிரம் போவீர்களா என்று கேட்டுத்தான் ஏறுகிறார்கள். பெண் பயணிகள் ஓட்டுநர் அருகே உட்கார்ந்து அவர்களை உசுப்பேற்றுகிறார்கள்.பெண் பயணிகளை பஸ்சின் பின் பகுதியில் அமரவைத்தாலே பாதி விபத்து குறையும். வருவாய் அதிகம் எதிர்பார்க்கும் உரிமையாளர் வருவாய் குறைந்தால் ஓட்டுநர் நடத்துனரின் வேலை பறிபோகும் என்ற அவல நிலையும் காரணம்
1 month 2 weeks ago
நான்காம் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு 45 நிமிடம் வரை தென்னாபிரிக்கா ஆடினால் 440 ஓட்டங்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தை நிறுத்தினால், இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸுக்காக 130 ஓவர்கள் ஆடவைக்கலாம். ஆனால் எனது கணிப்பின்படி 350 ஓட்டங்கள் போதுமானது, இன்று நான்காம் நாள் முடிவதற்குள்ளாகவே இந்திய விக்கட்டுக்களை வீழ்த்தி விடலாம்!
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
1 month 2 weeks ago
அப்படி "பேர்சனலாகக்" கதைத்தவர் சொன்ன ஆதாரமில்லாத குற்றச் சாட்டிற்கு அவருக்கே நம்மிடையே நடந்த உரையாடலை நினைவூட்டீனேன், பின்னர் அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்ததைக் கவனித்திருப்பீர்கள்😎! அதெல்லாம் ஒரு விதி மீறல் அல்ல! ஆனால், உங்கள் பழைய கஞ்சி அப்படியல்ல. நீங்கள் தீவிரமான இனவாதத்தை முஸ்லிம்கள் நோக்கி வெளிப்படுத்தி வரும் ஒருவர், இதை இன்று சுட்டிக் காட்டியதால் கொஞ்சம் முக்காடைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! அவ்வளவே! இனி கொஞ்சம் கவனமாக இனவாதம் குறைத்து எழுதுங்கள்!
1 month 2 weeks ago
இந்த போர் நிற்காது என கருதுகிறேன், மேற்கு உக்கிரேனிற்கு போருக்கு தேவையான ஆயுத பண உதவியினை செய்கிறது, ஆனால் அதனை ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ ஏன் தாமாக இணைக்க முன்வரவில்லை (ஆனால் பெயரளவில் உக்கிரேனிற்கு தேவையான அனைத்தையும் செய்வதாக கூறுகிறார்கள், உக்கிரேனிற்கு தேவையானது போரா?)? போர் முடிவடைய வேண்டுமாயின் இரஸ்சிய வளங்கள் மீதான நலனை எதிர்நோக்கும் பெரு நிறுவனங்களின் நலன் பேணப்படும் வகையில் இரஸ்சியா இறங்கி வரவேண்டும் அல்லது போரை தொடரவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பலாம். இரஸ்சியா 2026 பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையினை எட்டும் என கூறுகிறார்கள் குறித்த தரப்பினர், அதற்கு ஏற்றது போல இராணுவத்திற்கான சலுகைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இரஸ்சியாவினை உடைக்கிறோம் என கூறி பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானது போல எதோ செய்யாமல் இருக்கமாட்டார்கள் போல உள்ளது🤣.
1 month 2 weeks ago
உங்கடை சுட்டிக்காட்டல் ...எங்களுக்கு பழைய கஞ்சிதான்... நாங்கள் அதை பெரிதாக எடுப்பதில்லை .... எல்லோரும் கவரிமானாக இருப்பதில்லை...அதுசரி இந்த விடையத்தில் நீங்கள் குத்தி முறிவதேன் ...ஓ..ஓ ..இது வந்து தமிழ் தேசிய ஆதரவு என்பதாலா.... ஆரம்ப முதலே தேசிய விடுதலைக்கு எதிர்ப்பு தெர்வித்தோர் ...உங்களுடன் சேர்ந்திருக்கலலாம் ...இதனை நான் நன்கு உணர்ந்தவன் ...ஏன் எனக்கேதுணிவிருந்தால் போடர் கட பார்க்கலாம் என்று சவால் விட்டவரல்லவா...ஒருவர் ..ஊர் ..என்னதொழில் செய்கிறார் என்று துப்பறிந்தும் எழுதினவர் .....இப்படி கனக்க இருக்கு ...யாழ்களம் என்ன எனக்கு...அப்பன் வீட்டுச் சொத்தா...இரு என்றால் இரு ...போவென்றால் போக வேண்டியதுதான் ... அய்யா இன்னுமொன்றூ ...பேசனலாக பேசிய விடையங்களை ...கருத்துக்களத்தில் அப்பட்டமாக எழுதி நீங்களும்...ஜமீந்தாராக காட்டினீர்களே ... இதைட்யும் ஏனயவர்கள் பார்த்தவர்கள் தானே...இங்குநான் ஏனையவர் அனுதாபதை எதிர்பார்த்து ...எதையும் எழுதவில்லை ..அல்வாயான் ...அல் ..இது இசுலாமியப் பெயர் என்று கூட சொன்னார்கள் .. இதைவிட அண்மையில் ...பொத்துவில் என்ன்றால் விருப்பம்தானே என்றார்கள் ... இதுக்கெல்லாம் நான் பயந்தா ஓடிவிட்டென் ..... இல்லையே .. இயலாமையில் இறுகப்பற்றிக்கொள்ளத் தான் இன்னொரு கரம் தேவை மற்றபடி இயலுமான நாட்களை எல்லாம் இலகுவாகக் கடந்திடமுடியும் இத்தருணமதைப் போல்....(நன்றி என் தோழிக்கு)
1 month 2 weeks ago
🤣ஆம் உறவே! அநுர பால்குடி. "ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர எல்லாம் செய்யும் வல்லமை பெற்ற" அதிபர் பதவியில் இருந்த படி, ஆனந்த சுதாகரனைக் கூட விடுவிக்காமல் இருக்கும் அநுர, நீங்கள் சொன்னது போல இனவாதியல்ல! இது வெறும் அலகு குத்திய காவடியல்ல உறவே, அலகை "வேறெங்கோ" குத்திக் கொண்டு தூக்கும் அபூர்வ காவடி😎!
1 month 2 weeks ago
அல்வாயன், நீங்கள் அந்தக் குறிப்பிட்ட திரியில் பாவித்த சொற்பதங்கள் என்ன என்பதைப் பார்த்தோர் இங்கே பலர் இருக்கிறார்கள், எனவே உங்களுக்கு நீங்களே பொய் சொல்லி திருப்திப் பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை☺️! ஆனால், இது தீவிர தமிழ் தேசியர்களின் ஒரு "தனித்துவ இயல்பு" தான், ஆச்சரியமில்லை! சும்மா கருத்தைப் பார்த்து விட்டு இருப்போரெல்லாம் தங்களை ஆதரித்து "மௌனமாக" இருக்கிறார்கள் என்று நீங்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் இங்கே தவறாக ஊக்கம் பெற்று உலா வருகிறார்கள். இத்தகைய ஊக்கம் கீழ்மையான கருத்துகளுக்குக் கிடைக்கக் கூடாது என நான் நம்புவதால் தொடர்ந்து உங்கள் போன்றோரைச் சுட்டிக் காட்டுவேன்!
1 month 2 weeks ago
முதலில் உங்கள் பார்வைப் பிழைகளை சரி செய்து கொள்ளுங்கள் பிறகு காட்சிப்பிழைகள் பற்றி கருத்து சொல்லுங்கள்...! (copy from facabook... நன்றி தர்சன்)
1 month 2 weeks ago
நாங்கள் சஜித்தின் இனத்துவேஷத்தைப்பற்றி, இரட்டை வேடத்தைப்பற்றி இங்கு கதைக்கிறோம். கடந்துபோன பஸ்சுக்காக காத்திருக்கவில்லை. அனுராவை ஒரு இனவாதியாக காட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் இனவாதத்தை, மதவாதத்தை விட்டு வெளியேறினால், அதைவைத்து பிழைக்கும் கூட்டத்திற்கு வாழ வழியில்லை. அதனால் எப்படியாவது அதை வளர்த்து, ஊதிப்பெருப்பிக்க முயற்சிக்கிறார்கள். தேவையற்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களுக்கு சென்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.
1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 49 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 49 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'கடமானின் [elk] வடிவம் எடுப்பது, இதிகாச ராமாயணத்தின் பிரதியா?' தேவநம்பிய திஸ்ஸாவின் ஆட்சி, புகழ்பெற்ற இந்திய மன்னர் அசோகரின் முழுமையான நகல் [copy] என்று நம்புவதற்கு வலுவான நிகழ்தகவு (Probability) உள்ளது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்கள் 12 முதல் 17 வரை முக்கியமாக மத விடயங்களைப் பற்றியும், திஸ்ஸ, மகிந்த தேரர் மற்றும் அசோகா பற்றியும் உள்ளது. இந்த ஆறு அத்தியாயங்களிலும் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தான் முடிசூடி, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தரின் கோட்பாட்டின் சாதாரண மாணவரானார் என்று செய்தியை திஸ்ஸாவுக்கு அசோகர் அனுப்பினார். ஆனால், இது இந்தியாவில் அசோகர் உருவாக்கிய அசோகர் கல்வெட்டு 13 உடன் நேரடியாகவே முரண்படுகிறது. காரணம் பாளி நூலை, பக்தர்களின் மகிழ்வுக்காக மட்டும் தொகுத்த புத்த தேரர்களுக்கு, அப்படி ஒரு கல்வெட்டு இருப்பதோ, அது தங்கள் வஞ்சனைப் பொய்யை ஒரு நாள் வெளிக்கொணரும் என்றோ அன்று தெரிய வாய்ப்பு இருக்கவில்லை. பாவம் தேரர்கள் ! ஆனால் இன்னும் பெரும்பாலான சிங்கள மக்களோ, தேரர்களோ அல்லது அரசோ அதை அப்படியே முழுமையாக நம்பியபடியே, வடக்கு கிழக்கில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்கிறது. சிவத்த கொடி பிடிப்பவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல! அசோகரின் முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கப் போர் நடந்தது; ஆனால் கலிங்கத்தை கைப்பற்றிய உடனேயே, அங்கு நடந்த கொடுமைகளையும் அவலங்களையும் கண்டு, கலங்கி, அசோகர் விசுவாசத்தின் பக்கம் உடனே சாய்ந்தார். ஆனால் இலங்கையில், உள்நாட்டு போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும், அதற்கு ஒரு விசாரணையோ, நீதியோ வழங்காமல், ஏன் ஒரு மன்னிப்புக்கூட கேட்காமல், புத்த பக்தர்கள், குருக்கள் உட்பட இன்னும் புத்தர் சிலையாக வாழ, இடம் அபகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்? என்ன பக்தி! மேலதிக தகவலுக்கு, 13 ம் பாறை ஆணையைப் பார்க்கவும். மகிந்த தேரர் பறந்து இலங்கை வந்தார். [12-36; They flew through the air from Jambudīpa, as the king of swans flies in the air. Having thus risen, the Theras alighted on the best of mountains (Missaka).] அசோகர் மற்றும் தேவியின் மகனான அவர் மனிதனாக இருந்ததால், கட்டாயம் பறக்க இயலாது; மேலும், மகிந்த தேரரும், அவருடன் பறந்து வந்த மற்ற தேரர்களும், ஒரு பெரிய தூரத்திலிருந்து இனி நடக்கப் போகும் விடயங்களைப் பார்க்கும் அல்லது உணரும் திறன் அல்லது எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறன் கொண்டவர்களாகப், தேவநம்பியதிஸ்ஸ, தனது நாற்பதாயிரம் படைவீரர்களுடன் வேட்டையாடப் போவதாக முன்கூட்டியே அறிந்தனர் என்கிறது. [12-28; (They added:) “It is time, venerable sir, let us go to the mountain called Missaka; the king (Devānampiyatissa) is just leaving the town in order to hunt.”] மனிதர்களுக்கான தொலைநோக்குத் திறன் [far-seeing capability] மற்றொரு கட்டுக்கதை. மகிந்த தேரர் தேவநம்பியதிஸ்ஸவைச் சந்திப்பதைத் திட்டமிட்டாலும், அது வெளிப்படையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர் இலங்கைக்கு அதற்கு ஏற்றவாறு பறந்து வர திட்டமிட்டார். மகிந்த தேரர் மிஸ்ஸகா மலையில் [mount Missaka / இதை இன்று மிகிந்தலை என்று கருதுகிறார்கள்] பறந்து வந்து, இறங்கிய போது, ஒரு கடவுள் கடமானின் [elk] வடிவம் எடுத்து, தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்கு முன் தோன்றினார். அரசன் உடனடியாக கடமானுக்குப் பின் சென்றான். ஆனால், கடமானின் உருவத்தில் வந்த அந்த இயக்கர், அரசனுக்கு முன் மறைந்தது [12- 46 & 47: The king, seeing the elk, quickly rushed on him and running behind him he came to a place enclosed by hills. There the Yakkha disappeared near the Thera; seeing the Thera sitting there, the king was frightened.] புத்தர் தனது இலங்கை பயணத்தில், தகுதியற்றவர்கள், மனித பிறவியற்றவர்கள் என்று யாரை இலங்கையில் இருந்து துரத்தினாரோ, அதே இயக்கர், இங்கு, இப்போது கடவுளுக்குச் சமமானவர் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்! எனவே, புத்தர், தனது முதல் பறந்து வந்த இலங்கைப் பயணத்தின் போது, கடவுள்களான இயக்கர்களை விரட்டியடித்தார் என்று கருதவேண்டி உள்ளது!! அது தான் பெரும்பாலும் காடையர்கள் மலிந்த இலங்கை போலும்? தீபவம்சத்தின் அத்தியாயம் 1 யும் பார்க்கவும். மேலும், கடமானின் வடிவத்தை எடுப்பது இதிகாச இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரதியாகும் என்று இலகுவாக முடிவெடுக்கலாம். புத்தர் மற்றும் மகிந்த தேரரின் பறக்கும் நிகழ்வுகளும் இதிகாச இராமாயணத்தில் இருந்து எடுத்த திருட்டு போலத்தான் தெரிகிறது? அதாவது பொசென் போயா [Poson, also known as Poson Poya] தினத்தன்று அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்ததாகவும் தேவநம்பிய தீசன் மான் வேட்டைக்குச் சென்ற போது அங்கு சந்தித்ததாகவும் அதன் பின் சிறிது நேரம் நடத்திய போதனையின் மூலமாக பௌத்த மதத்தை தேவநம்பியதீச மன்னனிடம் அறிமுக்கப்படுத்தியதாகவும் மகாவம்சம் கூறுகின்றது. தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தின்படி, சிலப்பதிகாரம் 5. அடைக்கலக் காதை - வசனம் 115 முதல் 124 வரை, இயக்கி ஒரு தெய்வம் எனக் கூறுகிறது. அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி யையையைக் கண்டடி தொழலும் ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி [115 - 124 / சிலப்பதிகாரம் 5. அடைக்கலக் காதை] அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியடிகளைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்; என்று கூறுகிறது. அதாவது இயக்கி - ஒரு பெண் தெய்வம் என்கிறது! ஆகவே, ஒரு விதத்தில் புத்தர் தனது நம்பிக்கைக்குத் தயாராக்க இலங்கையின் பாரம்பரிய தெய்வத்தை விரட்டுகிறார், அதுவும் அவர் ஞானமடைந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு! அப்படி என்றால் அந்த ஞானம் தான் என்ன? நான் இங்கு உண்மையான இந்தியாவில் பிறந்து, அங்கு தருமம் போதித்த புத்தரைச் சொல்லவில்லை, இலங்கையில் இன்று சிலைகள் ஆகிவிட்ட புத்தரை மட்டுமே சொல்கிறேன். Part: 49 / Appendix – Dipavamsa / 'Is the taking the form of an elk is a copy from the Epic Ramayana?' There is a strong probability to believe that the rule of Devanampiya Tissa is a carbon copy of the famous Indian monarch Asoka. It is already elaborated earlier. Chapters 12 to 17 are mainly about religious matters, and about Tissa and Mahinda Thera, and Asoka. No significant of human historical events that took place in Lanka are given in these six chapters. Asoka sent message to Tissa eighteen years after his coronation that he, Asoka, became lay pupil of the doctrine. This is in direct conflict with the Rock Edict 13 made by Asoka in India. Asoka became inclined towards the Faith soon after his conquest of Kalinga. The Kalinga war took place eight years after his coronation; See the Rock Edict 13. Mahinda Thera came to Lanka flying, 12-36; it is impossible for him to fly as he was a human, being the son of Asoka and Devi; both humans. The Theras with Mahinda Thera far-saw that Devanampiyatissa was about to go on hunting with forty thousand soldiers, 12-28; far-seeing capability for humans is another myth. He planned his flying to Lanka accordingly so that Mahinda Thera would have planned but apparently unplanned meeting with Devanampiyatissa. When Mahinda Thera alighted on mount Missaka, a god took the form of an elk and appeared to the king Devanampiyatissa. The king went after the elk, and the elk, the Yakkha, disappeared in front of the king, 12-47. It should be noted that it is indirectly indicated Yakkha is equivalent of god. The Buddha, therefore, chased away the gods, Yakkhas, on his first flying visit to Lanka; see the chapter 1 of the Dipavamsa. Furthermore, the taking the form of an elk is a copy from the Epic Ramayana. The flying visits of the Buddha and Mahinda Thera are also plagiarism from the Epic Ramayana. As per the Tamil Epic Silappthikaram, Canto 15-verse 115 to 124, Iyyakki is a goddess, see the Reference 'The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939.' In a way the Buddha is chasing away the traditional goddess of Lanka to prepare for his Faith, he was doing it nine months after his enlightenment! The abstract of the meaning of the above referenced verses in the Epic Silappthikaram in part is given below: Quote: ‘Just then, Madari, an old woman of the cowherd caste, who was returning after making the usual offering of milk to the flower eyed Yakkini, enshrined outside the city gates in the quarters of the monks practising Dharma saw and prostrated herself before the saint Kavundi who then thought within herself: ‘The life of cowherds who protect cows and offer what they yield is not harmful. This aged lady is without fault and is, besides, virtuous and merciful. It is not therefore wrong to lodge Kannaki with Madari’. Unquote The above meaning of the verses is from the page 214 of the Reference 'The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939.' நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 50 தொடரும் / Will follow துளி/DROP: 1913 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 49] https://www.facebook.com/groups/978753388866632/posts/32532755169706376/?
1 month 2 weeks ago
அப்படியான் சொற்பதங்கள் ..நான் பாவிக்கவில்லை ...உங்கள் கருத்தின்படி ...தகரத்தை ...கல்லென்றும் ...முள்ளை...பீங்கான் என்றூம் நிறுவி...விதண்டாவாதம் நான் செய்வதில் லை...இந்த களத்தில் போடப்படும் கருத்தாடலுக்கு...அந்த சந்தர்ப்பத்தில் உள்ளதை வைத்தே பதில் எழுதுவேன் ..நான் இந்த யாழில் 15 வருடமாக வலம் வருகின்றேன் ...இப்படி யாரும் எனக்கு வக்காலாத்து வாங்கும்படி விடுவதும் இல்லை ...யாரையும் கேட்டதுமில்லை ...என்னால் முடிந்தவரை எழுதுவேன் ...நிர்வாகம்துரத்தினால் ..விட்டுப்போவேன் ...தமிழன் ..இது என் அடையாளம்... இந்த கருத்தாடல்...1170 பேர் பார்த்திருக்கிறார்கள் ... இதில் ஒருவர் மட்டும் ஒருவருக்காக....வக்காலாத்து...வாங்குகிறார்....மற்றவர்கள் அமைதிகாக்கின்றனர் ...இதில் என்ன தெரிகிறது ...தர்மம் வெல்லும் ...ஏனெனில் நான் ஒரு நியாயத்துக்காக ...போராடுகின்றேன் ...அதிலும் இன்றைய ஒரு லீவு நாளை ...இதற்காக செலவழித்ததில் மிகவும் பெருமை ...சுபம்
1 month 2 weeks ago
நிச்சயமாக! நீங்கள் செய்தது போல ஒரு கள உறவின் குடும்பத்தினரை கீழ்த்தரமான பாலியல் ரீதியாக இழுத்துப் பேசினால், அல்லது ஒரு இனத்தை ஒட்டு மொத்தமாகக் காழ்ப்புணர்வுடன் திட்டினால், அதை யார் செய்தாலும் நீங்கள் சவாலுக்குட்படுத்த வேண்டும்! அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது, ஆனால் அப்படியான வாய்ப்புகள் தான் உங்களுக்கு வருமோ தெரியாது😎!
1 month 2 weeks ago
இதில் என்ன தவறு இருக்கிறது ...சொல்லவா பலஸ்தீனத்தை ..எத்தனையோ காலத்தின் பின் இப்போதுதான் சில் நாடுகள் அங்கீகரித்துள்ளன...முழு உலக்மும் அல்ல ...அதில் கனடாவில் ஒரு மாநகரசபையில்தான் கொடி ஏற்ற்ப்பட்டிருக்கு...எம்மை எந்தநாடும் அங்க்கிகரிக்கவிடினும் ...ஆரம்ப புள்ளியாக ஒரு மாநகரசபை கொடியை அங்கீகரித்து..கொடியேற்றி இருக்கிறது ...ஒரு தமிழனாக இருந்தால் சந்தோசப் பட்டிருப்பான் ...அதில் நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை ...உண்மையான தமிழர் அனவரும் பெருமைப்பட்டிருப்பர் ..இதை தவறாக்ஒரு சிலரைத்தவிர....ஏனையோர் சந்தோசம் அடைதிருப்பர்... இலங்கை அரசின் அனுமதியுடன் புத்தபகவான் வடக்கு, கிழக்கில் சிலைகளாகவும், விகாரைகளாகவும் வியாபிக்கின்றார். தொல்பொருள் திணைக்களம் காலங்காலமாக தமிழர் உரிமைகொண்டாடும் இடங்களை கையகப்படுத்துகின்றது. இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது.....இப்ப விளங்குதா ...இந்த கொடியேற்றம் ...நினைவுத்தூபிகட்டல்...லண்டனில் ஆற்பாட்டம் ..இதுவெல்லாம் சின்ன சின்ன ..சில்லறை வேலையல்ல..எமக்காக உயிநீத்த 60000 போராளிகளுக்கும் ,2 லட்சம் பொது மக்களுக்கும் நாம் செய்யும் சிறு நன்றிக்கடன் ...
1 month 2 weeks ago
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1 வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது. 'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ? கமை உறு மனத்தினால் கருத வந்ததோ? சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக- இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!' நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின். உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான். 'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய், அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!' அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது. ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது. ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள். அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான். “போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு. “போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள். அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்? 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.' இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான் ஈஸ்வர்யாவும் நோக்கினாள். அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?” அவள்:“ஈஸ்வர்யா.” அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.” அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது. அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது. "நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ." "அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான். அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........ 'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, அறத்து ஆறு நுவலும் பூட்கை' பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல். பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்! அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான். அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 02 தொடரும் THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01 The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war. It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope. She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm. She bent down to a frightened little boy and whispered, “Don’t worry, kanna… write your name. I will protect your books.” At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped. “Even in a war?” he asked softly. She looked up at him. Her smile was tired — but firm and unbreakable. “Especially in a war.” And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break. That afternoon, he finally spoke to her. “What is your name?” he asked. “Ishwarya,” she replied. “Meaning?” he teased gently. “Grace and prosperity,” she said, then added with a faint smile, “Though these days, just call me a wandering teacher of wandering children.” Kavin smiled. No one had spoken to him like that in months. Her courage felt like warmth in a frozen desert. Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun. “Do you ever imagine a different world?” he asked. She skipped a small stone across the surface of the water. “I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.” “And you?” he asked, turning towards her. She looked at the distant horizon. “I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.” He laughed softly. “When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.” She stopped walking and turned to face him. “No, Kavin… when this ends… you won’t just build a school.” She looked into his eyes, with a hope that belonged to another world. “You will rebuild a country.” Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Chapter 02 Will follow துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01] https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?
1 month 2 weeks ago
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1
வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது.
'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!'
நேரிலே கண்டவர்கள், தேவர்களைப் போல இமைக்காத விழிகளைக் கொண்டார்களாம். அத்தன்மை, பிறருக்கு வருவதற்கு அருமையான திருமேனியையுடைய கவினின் அழகின் சிறப்பால் உண்டானதா? இல்லை பொறுமையான மனத்தினால் வந்ததோ ?இந்த இரண்டில் பொருத்தமான காரணம் எதுவென நாம் அறிந்தோம் இல்லை. எது பொருத்தமானதோ, அதுவே காரணமாக இருக்கட்டும். யாருக்கும் அமையாத அற்புத வடிவம் கொண்டவன் இந்த கவின்.
உடையார்க்கட்டு (Udaiyaarkaddu) அருகே, உடுத்திய ஆடை கூட முழுமையில்லாத ஒரு அகதிகள் முகாமில், ஒரு உயரமான பனையடியில், அவன் முதன்முறையாக முல்லைதீவைச் சேர்ந்த, 21 வயது ஆசிரிய பயிற்சிப் பெண்ணான ஈஸ்வர்யாவைப் பார்த்தான்.
'அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!'
அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கடற்கரையில் கிடைக்கும் முத்துகளைப் போன்றவை அவளின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்தது போன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற இனிய சொற்களைப் பேசுவாள். இப்படி எல்லா அழகும் தன்னகத்தே கொண்டவள் தான் இந்த ஈஸ்வர்யா
அவள் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, கிழிந்த கூரை, உடைந்த சுவர்கள் கொண்ட, ஒரு தற்காலிக பள்ளிக் கூடத்தில் கற்றுக் கொடுத்தாள். அது உண்மையில் பள்ளி என்று அழைக்க கூட தகுதியற்ற ஓர் இடமாக இருந்தது. ஆனாலும் அவளின் குரல் – நம்பிக்கையை நிரப்பியது.
ஒரு உடைந்த மேசையின் மீது சாய்ந்து, குழந்தைகளின் சிறிய, நடுங்கும் விரல்களைப் பிடித்து எழுத்துகளை வடிவமெடுக்கச் செய்துக் கொண்டிருந்தாள். வெளியே தொலைவில் பீரங்கி சத்தம் ஒரு இடிமுழக்கம் வந்தது. என்றாலும், புயலுக்குள் ஒரு தாலாட்டு போல, உள்ளே அவளின் குரல் மட்டும் தெளிவாய் ஒலித்தது.
ஒரு சிறுவனின் தலை மேல் கையை வைத்து பணிவாக, “அஞ்சாதே கண்ணா … உன் பேரை நீ எழுதிக் காட்டு. உன் புத்தகத்தை நான் காப்பாற்றுவேன்.” என்று, அவனுக்கு நம்பிக்கை கொடுத்துச் சொன்னாள்.
அதே நேரத்தில், தண்ணீர் மற்றும் மருந்துகள் வழங்கும் தொண்டராக, அங்கு தன் படிப்பை இரண்டாம் ஆண்டிற்குப் பின் நிறுத்திவிட்டு வந்திருந்த கவின், கதவின் வாயிலில் நின்று, போர் சூழலிலும் அவள் அமைதியாக படிப்பித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு திகைத்தான்.
“போரிலுமா?” என்று அவன் மெளனமாக அவன் அவளிடம் கேட்டான் - தானே படிப்பை இடையில் நிறுத்திவிட்டு இங்கு நிற்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னான். அவள் தலை நிமிர்த்திப் பார்த்தாள் - களைப்புடன், ஆனால் உறுதியோடு ஒரு புன்னகையோடு.
“போரில்தான் … அது மிக அதிகமாக அவசியம், அவர்களுக்கு இங்கு விளையாட ஒன்றுமே இல்லை, ஏன் ஒழுங்காக சாப்பிடக்கூட , அதை மறக்க, தங்களுக்குள்ளாவது பேச .. ஒன்றில் கவனம் செலுத்துவது நல்லது தானே, அது எழுத்தாக இருக்கட்டுமே .. பிற்காலத்துக்கு உதவ, உண்மையை வெளிப்படுத்த ” என்றாள்.
அந்த தருணத்தில் இரண்டு நபர்களுக்கும் இடையே ஒரு ஆழமான, சொல்லப்படாத தொடர்பு தானாக உருவாகியது. இது ஒரு சக்திவாய்ந்த, ஒருவேளை ஆன்மீக அல்லது உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக அல்லது விதியாக இருக்கலாம்?
'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்.'
இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றை மற்றொன்று உண்ணவும், நிலை பெறாத உணர்வும் ஒன்றிட, கவினும் நோக்கினான்
ஈஸ்வர்யாவும் நோக்கினாள்.
அதன் பின் அவன் அவளிடம்: “உன் பெயர் என்ன?”
அவள்:“ஈஸ்வர்யா.”
அவன்: “அதன் அர்த்தம்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
அவள்: “அருள்… செல்வம்… ஆனாலும் இப்போதெல்லாம் ‘அலைந்து திரியும் குழந்தைகளுக்கான அலைந்து திரியும் ஆசிரியை’ என்றே வைத்துக் கொள்ளலாம்.”
அவன் சிரித்தான். பல மாதங்களுக்குப் பிறகு, அவனை இவ்வாறு சிரிக்க வைத்தது அவளின் அந்த வார்த்தை. அவனுக்கு, அவளின் துணிவு – உறைந்த பாலைவனத்தில் விழுந்த சூடான சூரியக்கதிர் போல தோன்றியது.
அன்று மாலையில், அவர்கள் ஏரியின் ஓரத்தில் நடந்து சென்றனர். வானம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் எரிந்து, காயமடைந்த சூரியனைப் போல தண்ணீரில் பிரதிபலித்தது.
"நீ எப்போதாவது ஒரு வித்தியாசமான உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறாயா?" என்று அவன் கேட்டான். அப்பொழுது அவள் ஒரு கல்லை எடுத்து நீரில் எறிந்து கொண்டு, "நான் ஒரு அமைதியான உலகத்தை கற்பனை செய்கிறேன்," என்று அவள் பதிலளித்தாள். "சோதனைச் சாவடிகள் இல்லாமல் .... பயம் இல்லாமல் .... குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து சிரிக்க ... நீங்கள் பாலங்களை கட்டிட ... ."
"அப்படி என்றாள் நீங்கள் அங்கே ... ?" அவன் அவளை நோக்கித் திரும்பிக் கேட்டான்.
அவள் தொலைதூர அடிவானத்தைப் பார்த்துக்கொண்டு, “ஒரு மாமர நிழலுக்கடியில் நான் கற்றுக் கொடுப்பேன் .... கூரை தேவையில்லை. ... மனமும் ஒளியும் இருந்தால் போதும்.” என்றாள். பின் வானத்தை பார்த்தபடி, அவள் வாய் ஒரு சங்க பாடலை முணுமுணுத்தது ........
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை'
பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என்கிறது இந்தப் பாடல்.
பாடலை முழுதாக முணுமுணுத்தபின் அவனை பார்த்து, 'இப்படி அறவழி கூறியபின் போரிடும் அந்த முறை, புத்தரை முழத்துக்கு முழம் சிலையாக்கி வழிபாடும் நாட்டில் இல்லையே என்பதே என் ஒரே கவலை' என்றாள் கண்ணீருடன்!
அவளின் மனதை புரிந்துகொண்ட அவன், அவளை ஆறுதல் படுத்த, மெளனமாகச் சிரித்தான். “போர் முடிந்ததும், பெரிய பள்ளி ஒன்றை நான் உனக்குக் கட்டித் தருவேன். உறுதியான சுவர்கள், பெரிய ஜன்னல்கள், இங்கு இப்பொழுது அபாயத்துக்கு மணி ஒலிப்பதுபோல் இல்லாமல், சந்தோசத்துக்காக மட்டும் அங்கு ஒலிக்கும் மணி .... ” என்றான்.
அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள். “இல்லை, கவின்... இது முடிந்ததும்... நீ ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட மாட்டாய்.” என்றவள், பெரும் நம்பிக்கையுடன் அவன் கண்களை நேராகப் பார்த்து, “நீ ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாய், கட்டிடங்களால் மட்டும் அல்ல, ஒழுக்கத்தாலும்” என்றாள்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
அத்தியாயம் 02 தொடரும்
THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01
The war had already crowded the skies with military aircraft, and the nights with the thunder of shells. Yet in the middle of that burning world stood Kavin — கவின், a twenty-four-year-old Tamil civil engineering undergraduate, originally from Kilinochchi and educated in the North. Soft-spoken, disciplined, and brilliant at mathematics, he loved photography and dreamed of one day rebuilding shattered homes after the war.
It was under the shade of a tall palmyrah tree in a refugee camp near Udaiyaarkaddu that he first saw Ishwarya — ஈஸ்வர்யா, a twenty-one-year-old teacher-trainee from Mullaitivu. She worked tirelessly, teaching displaced children inside a temporary shelter that barely deserved to be called a classroom. Yet she filled it with hope.
She was leaning over a broken desk, guiding small, trembling hands to form letters on a torn page. Outside, the wind carried the faint echo of distant shelling. Inside, her voice was calm — steady and gentle, like a lullaby in the middle of a storm.
She bent down to a frightened little boy and whispered,
“Don’t worry, kanna… write your name. I will protect your books.”
At that moment, Kavin — who had come as a volunteer to distribute drinking water and medicines — paused at the doorway. He watched her in silence, as if time itself had stopped.
“Even in a war?” he asked softly.
She looked up at him. Her smile was tired — but firm and unbreakable.
“Especially in a war.”
And in that quiet moment, something invisible… something unexplainable… stretched between them — a thread fate did not intend to break.
That afternoon, he finally spoke to her.
“What is your name?” he asked.
“Ishwarya,” she replied.
“Meaning?” he teased gently.
“Grace and prosperity,” she said, then added with a faint smile,
“Though these days, just call me a wandering teacher of wandering children.”
Kavin smiled.
No one had spoken to him like that in months.
Her courage felt like warmth in a frozen desert.
Later that evening, they walked along the edge of the lagoon. The sky burned orange and red, mirrored in the water like a wounded sun.
“Do you ever imagine a different world?” he asked.
She skipped a small stone across the surface of the water.
“I imagine a quiet one,” she replied. “No checkpoints. No fear. Just children laughing… and you building bridges.”
“And you?” he asked, turning towards her.
She looked at the distant horizon.
“I will teach beneath the shade of a mango tree. No roofs necessary. Just minds and light.”
He laughed softly.
“When this ends, I’ll build you a proper school. One with strong walls, wide windows, and a bell that rings only for joy.”
She stopped walking and turned to face him.
“No, Kavin… when this ends… you won’t just build a school.”
She looked into his eyes, with a hope that belonged to another world.
“You will rebuild a country.”
Thanks
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
Chapter 02 Will follow
துளி/DROP: 1912 [கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01]
https://www.facebook.com/groups/978753388866632/posts/32532461203069106/?