Aggregator

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள்

1 month 1 week ago
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள்

1 month 1 week ago

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகள் 

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள் | Chemmani Mass Graves Updates Tamil

இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270

400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்

1 month 1 week ago
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். அதிகார பூர்வ மொழிகளாக அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://tamilwin.com/article/australian-man-20-forms-new-country-1754510124

மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்

1 month 1 week ago
மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..! 07 AUG, 2025 | 03:44 PM மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை (06) திருகோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும், தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222047

இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்

1 month 1 week ago
இலங்கையில் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பு Thursday, August 07, 2025 செய்திகள் ஜூலை (கடந்த மாதம்) 2025 இல் இலங்கைக்கு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வலுவான அதிகரிப்பைக் காண்பித்துள்ளது. 1,966 இஸ்ரேலியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர். இது ஒரு மாதத்திற்கு முன்பு 573 ஆக இருந்தது. அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இதிலையும் ஒன்றைக் கவனியுங்கள்....நம்ம பெண்கள் சுத்தம்

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்

1 month 1 week ago
காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் - இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை 07 AUG, 2025 | 02:32 PM ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐந்து மாதங்களிற்குள் காசா முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது. இஸ்ரேலிய பிரதமரின் இந்த திட்டத்தினால் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கும் ஆபத்து ஏற்படும் உயர் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச்செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது என பல ஹீப்ரூ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தைய பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள ஹமாசினை அழிப்பதும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம். ஹமாசின் பிடியில் 20 பணயக்கைதிகள் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் கருதுகின்றது. காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் காசா நகரிலிருந்து ஆரம்பமாகி மத்திய காசா பள்ளத்தாக்கை நோக்கி நகரும். இதன்போது இந்த பகுதியில் உள்ள காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மாவசி மனிதாபிமான வலயத்தை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சில அமைச்சர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் இந்த திட்டத்திற்கான ஆதரவு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு கிடைக்கும் பாதுகாப்பு அமைச்சரவையின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு கிடைக்கும். சிறிய குழுவொன்று கடந்த மூன்று நாட்களாக இது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது காசா மீதான நீண்டகால நடவடிக்கைகளிற்கான பல திட்டங்களை இஸ்ரேலிய இராணுவத்தின் முப்படை பிரதானி லெப் ஜெனரல் எயால் சமீர் முன்வைத்துள்ளார். திட்டத்தில் உள்ள விடயங்கள் காசா நகரை முதலில் கைப்பற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களை விஸ்தரிக்கும் திட்டம் இஸ்ரேலிடம் உள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக காசா நகரில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் பிறப்பிக்கும், இந்த நகரில் ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர். முதல்கட்டம் பல வாரங்களிற்கு நீடிக்கும். இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கும், இதன்போது இஸ்ரேலுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்துவார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நான்கைந்துமாதங்கள் நீடிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்களான வைநெட், சனல் 13 போன்றவை தெரிவித்துள்ளன. காசா நகரை கைப்பற்றுவதுடன், மத்திய காசாவில் உள்ள முகாம்களை நோக்கி செல்லும் திட்டம் உள்ளதாக கான் என்ற ஒலிபரப்புச்சேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் இதுவரை மத்திய காசாவை நோக்கி நகராதது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மக்கள் காசாவின் தென்பகுதி நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும். பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும். இதேவேளை யுத்த நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்ககூடாது என வற்புறுத்தி வருகின்றன, அமெரிக்கா ஊடாக இந்த செய்தியை இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன. அதேவேளை ஹமாஸ் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. இதேவேளை மேலும் அதிகளவு காசா மக்களை தென்மாவாசி நோக்கி நகர்த்துவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என கான் ஒலிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் காசாவிலிருந்து மக்களை வெளியேறச்செய்யும் திட்டத்திற்கு இது உதவலாம் என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222049

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு

1 month 1 week ago
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 01:30 PM பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர். 11.9 சதவீதமான 13–17 வயதுடைய மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர். 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன. 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர். இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில், இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில், நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது. தற்போது, 100,000 பேரில் 15 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது." அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. “இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள் இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன: - அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926 - சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570 - லங்கா லைஃப் லைன்: 1375 - CCCline : 1333 (இலவச சேவை) https://www.virakesari.lk/article/222035

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு

1 month 1 week ago

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு 

Published By: DIGITAL DESK 3

07 AUG, 2025 | 01:30 PM

image

பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,

  • 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.

  • 11.9 சதவீதமான 13–17 வயதுடைய  மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.

  • 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.

  • 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.

  • 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என  எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.

அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில், 

நாட்டில்  நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம்  கணிசமாகக் குறைந்தது.

தற்போது, 100,000 பேரில் 15 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது."

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள்  இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத்  தெரிவித்துள்ளார்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன: 

- அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926

- சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570

- லங்கா லைஃப் லைன்: 1375

- CCCline : 1333 (இலவச சேவை)

https://www.virakesari.lk/article/222035

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

1 month 1 week ago
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 03:35 PM ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது. ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை தொடர்ச்சியாக களத்தில் நின்று வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222054

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 1 week ago

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

07 AUG, 2025 | 11:28 AM

image

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.

ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது.

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும்.

நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.

இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு  குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/222030

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 1 week ago
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 11:28 AM செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன். இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன். மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு. ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது. இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும். செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும். நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும். இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222030

செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 1 week ago
செம்மணி அகழ்வுக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பு - இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு Published By: VISHNU 07 AUG, 2025 | 02:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்களென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தை நீதியமைச்சர் காது வழி செய்து என்று குறிப்பிட்டதாக நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை நான் தெளிவாக கேட்டிருந்தேன். செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் உரையாற்றுகையில் திருகோணமலை, மண்டைத்தீவு பகுதியில் உள்ள மனிதப்புதைக்குழிகள் பற்றி குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அனுமானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளியுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இந்த விடயத்தை ஒரு தரப்பினர் திரிபுப்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எமது ஆட்சியே தொடரும் ஏனெனில் நாங்கள் மக்களுக்கு உண்மையாக செயற்படுகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222010

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்

1 month 1 week ago
இப்படி புவிசார் அரசியலை ஆழமாக வாசித்து, சிந்தித்து, "எல்லாரும் செய்வது சரிதான், இதில் பிழையேதும் கிடையாது" என்ற முடிவுக்கு வந்து விட வேண்டும்! பிறகேன், எங்களை சிங்களவன் கொன்றது பிழையென்று நீலிக் கண்ணீர் வடிப்பான்? அதுவும் அவசியமில்லை😎!

இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்

1 month 1 week ago
Published By: VISHNU 07 AUG, 2025 | 01:59 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது. பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம். அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது. இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/222005

இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்

1 month 1 week ago

Published By: VISHNU

07 AUG, 2025 | 01:59 AM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது  இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால்  இன்று  இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது.

பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த  பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள்  மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில்  கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம்.

அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது  அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது.

இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/222005

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு!

1 month 1 week ago
😂"தலைவன்" ட்ரம்ப், "மாண்புமிகு புரின்", "தியாகி" கடாபி, "கண்ணியவான்" ஹிற்லர்...இப்படியே போனால் விரைவில் "எங்கள் தலைவன்" ராஜபக்ஷ என்றும் வரும் என நினைக்கிறேன்! ஒரு மெல்லிய லைன் தான், தொடர்ந்து செல்லுங்கள்!

96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!

1 month 1 week ago
"தரமான செய்திக்கு இடமுண்டு; அச்சு ஊடகத்துக்கு மதிப்பு குறையாது" - வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் Published By: VISHNU 07 AUG, 2025 | 08:54 AM பத்திரிகை மற்றும் ஊடக துறையில் புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும் என்று வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான குமார் நடேசன் தெரிவித்தார். வீரகேசரி பத்திரிகை நேற்று தனது 95 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குமார் நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார். ‘‘நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார் குமார் நடேசன். 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை 95 வருட காலமாக பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிநடை போட்டு வருவதுடன் நூற்றாண்டை நோக்கி சாதனை பயணத்தை முன்னெடுக்கிறது. அச்சுப் பத்திரிகைகளை இன்னும் டிஜிட்டல் ஊடகங்களை விட அதிக நம்பகத்தன்மை கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். போலி செய்திகள் அதிகம் பரவும் இன்றைய சூழலில், நம்பகமான ஆதாரமாக அச்சு ஊடகங்கள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய குமார் நடேசன், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானதாகவுள்ளது என்று குறிப்பிட்டார். ‘‘இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது’’ என்று கூறினார் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன். மேலும் உலகளாவிய ரீதியில் அச்சுப் பத்திரிகை துறை வீழ்ச்சியடையவதாக தென்பட்டாலும் அச்சுப் பதிப்புக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்றும் உண்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நோக்கி மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் குமார் நடேசன் எடுத்துக்கூறினார். ‘‘உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் குமார் நடேசன் மேலும் உரையாற்றுகையில், இன்று, ஆகஸ்ட் 6ஆம் திகதி உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது. வீரகேசரி பத்திரிகையின் 95ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1930 ஆம் ஆண்டு இதே நாளில், எமது வீரகேசரி செய்தித்தாளின் முதல் பதிப்பு அச்சகத்தில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சேவையைக் கொண்டாடும் வகையில், இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீடித்த தொலைநோக்கு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான வார்த்தையின் சக்திக்கு இது ஒரு சான்றாகும். வீரகேசரி வெற்றியின் உண்மையான அளவுகோல் அதன் இலாபத்தின் அளவைக் கொண்டு மட்டுமே வரையறுக்கப்பட்டதில்லை. அவ்வாறு ஒருபோதும் அந்த அளவுகோல் வரையறுக்கப்படாது. மாறாக, எங்கள் வாசகர்களிடமிருந்து நாம் பெரும் அசைக்க முடியாத நம்பிக்கை, சமூகங்களுக்கிடையில் எங்கள் அணுகலின் அகலம் மற்றும் இலங்கையிலும் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் என்பவற்றில் எங்கள் பத்திரிகையின் மரபு உருவாகியுள்ளது. எங்கள் பயணம் நீண்டது மற்றும் தனித்துவமானதாக இருக்கிறது. ஆனால் எங்கள் பார்வை உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். கடந்த 95 ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுவது மட்டுமல்ல; அடுத்த 5 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம். நமது நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கிறோம். உண்மையில், அதற்குப் பிந்தைய தலைமுறைகளுக்கு நாம் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது நமது பகிரப்பட்ட மரபாகும். இது உங்களுடையதும் என்னுடையதுமாகும். இது - வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமானதாகும். இந்த தொடர்ச்சியான பொருத்தமான தன்மையை நாம் எவ்வாறு உறுதி செய்வது? இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகமான நங்கூரமாக நமது உள்ளார்ந்த பலங்களை உருவாக்குவதன் மூலம் இதனை செய்யலாம். நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், நமது செய்திகளையும் கண்ணோட்டங்களையும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு எடுத்துச் சென்று, அவர்களின் வேர்களுடனும், முக்கியமான பிரச்சினைகளுடனும் இணைக்கும் வகையில், எமது குரலை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இன்றும் கூட, வீரகேசரி ஒரு செய்திப் பத்திரிகையையும் தாண்டி ஒரு ஆழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. எங்கள் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நம்பகமான குரலாக உள்ளனர். சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும், அவர்களுக்குத் தகவல் அளிக்கும், கல்வி கற்பிக்கும், இணைக்கும் உயர்தர வெளியீட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இன்றைய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்கள். மேலும் சிக்கலான உலகத்தைப் பற்றிய புரிதலை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறீர்கள். விசேடமாக முக்கியமான உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது. எமது நாட்டின் தேசியத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சமமான கருத்துகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில் எங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. கவனயீர்ப்பு அதிகரித்து வரும் இந்த யுகத்தில், குறுகிய கானொளிகள் மற்றும் பரபரப்பான தலைப்புச் செய்திகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால், நான் அந்தக் கருத்துடன் உறுதியாக உடன்படவில்லை. ஒரு விடயத்தின் உள்ளடக்கம், விதிவிலக்கான தரம், உண்மையான நுண்ணறிவு, அழகாக எழுதப்பட்டிருத்தல் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பன நம்பிக்கையான பார்வையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும். இவை மறுக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளன. புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும். இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு, தலையங்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் என ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் திறமையான குழு தேவைப்படுகிறது. வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஊடக சக்தியாக மாறுவதற்கான எமது கூட்டு கனவை அடைய, நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவான குறிக்கோள் உணர்வு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் பிரகாசிக்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீரகேசரி இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம். ஒருவேளை வடிவம், பாணி, தொனி அல்லது அளவு கூட வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது ஒரு பலவீனம் அல்ல. மாறாக தழுவல் மற்றும் பரிணாமமாகும். இருப்பினும், எங்கள் முக்கிய நோக்கம் நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறை வாசகர்களுக்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது அவசியமாகும். இறுதியாக, வீரகேசரி குடும்பமாகிய நாம் மட்டுமே இந்த அவசியமான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னெடுக்க முடியும். ஏற்கனவே உள்ள வடிவங்கள் மற்றும் பணி செயல்முறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய முடியும் என்றார். இதேவேளை அச்சு பத்திரிகை சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில் அது பரிணாம வளர்ச்சி அடையும்" என்று ஆய்வுகள் கூறுகின்றன. அச்சுப் பத்திரிகை அதன் பாரம்பரிய வடிவத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும், அது முழுமையாக முடிந்துவிடாது. மாறாக, புதிய யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, புதிய வடிவங்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமூக ஊடகங்களில் விரைவான மற்றும் சுருக்கமான செய்திகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், ஆழமான பகுப்பாய்வு, விரிவான கட்டுரைகள் மற்றும் புலனாய்வு செய்திகளை அச்சு ஊடகங்களே தொடர்ந்து வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/222004