Aggregator

இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!

1 month 1 week ago

இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!

adminAugust 7, 2025

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாத கால பகுதி கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள காவற்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , காவற்துறை யினர் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில காவற்துறை  உத்தியோகஸ்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்து, அவரூடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து , காவற்துறையினர் பிரதான சந்தேக நபரை 08 மாத காலம் கடந்து கைது செய்யாது , அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனை அடுத்து குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று காவற்துறையிருக்கு கட்டளையிட்டுள்ளது.

பின்னணி

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் காவற்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை காவற்துறையினர் 08 மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/218934/

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

1 month 1 week ago
37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442186

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

1 month 1 week ago


37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக  இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில்  நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.

அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ்  மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442186

7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!

1 month 1 week ago
7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் குவாங்சௌ( Guangzhou) நகரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற கோரத்தனமான இராணுவ மோதல் இருநாட்டு உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியில் சீன விஜயம் இந்திய -சீன உறவுகளை மீளாய்வு செய்யும் எனவும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும், மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், பிராந்திய நிலைமை தொடர்பான விவாதங்களுக்கு ஒரு புதிய திருப்பு முனையாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எவ்வாறு இருப்பினும் மோடியின் சீன விஜயம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442200

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

1 month 1 week ago
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti) மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், குறித்த ஹெலிகொப்டர் விபத்து இடம் பெறுவதற்கு முன்னர் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442204

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

1 month 1 week ago

Capture-1.jpg?resize=478%2C308&ssl=1

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti)  மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோர் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், குறித்த ஹெலிகொப்டர் விபத்து இடம் பெறுவதற்கு  முன்னர்  ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442204

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 1 week ago
செம்மணி புதைகுழி: இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; 133 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது - சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் Published By: VISHNU 06 AUG, 2025 | 08:09 PM செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடொன்று நேற்று முன்தினம் செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/221997

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 1 week ago
80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது Published By: VISHNU 06 AUG, 2025 | 08:03 PM இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். இது பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் இருந்ததாகவும், இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/221995

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

1 month 1 week ago
சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் - அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு 06 AUG, 2025 | 08:20 PM மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 - 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 - 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி, இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221981

நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

1 month 1 week ago
நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 05:36 PM இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. நிசாந்த உலுகேதன்ன குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நிசாந்த உலுகேதென்ன 2010 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினார். 2025 ஜூலை மாதம் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். ஆள்கடத்தல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் மற்றும் நாட்டின் மிக பாதுகாப்பான கடற்படை தளமான திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோத படுகொலைகள் ஆகியவை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். (இது கன்சைட் என அழைக்கப்பட்டது) இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான நம்பகதன்மை மிக்க அறிக்கையிடல்களின் படி கன்சைட் எனப்படுவது தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான அனுமதியளிக்கப்படாத பகுதி என்பதை முன்னாள் கடற்படை தளபதி ஏற்றுக்கொண்டுள்ளார். கன்சைட் என்ற நிலத்தின் கீழ் அமைந்துள்ள சட்டவிரோத சித்திரவதை கூடம் ஒன்று உள்ளது என்பதை 2015 முதன்முதலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அம்பலப்படுத்தியிருந்தது. இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரினதும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் நிசாந்த உலுகேதென்னவும் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பிற வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்ட உயிர் பிழைத்த தமிழர்களிடமிருந்து விரிவான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவிரிவான தகவல்களின் அடிப்படையில் சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த நிலத்தடி சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்திரவதை கூடம் இருப்பதை முதன்முதலில் 2015 இல் வெளிப்படுத்தியது. பின்னர் அவை 2015 நவம்பர் மாதம் அந்த இடத்திற்கு விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவால் சரிபார்க்கப்பட்டன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அதன் செயல்பாட்டின் போது குறைந்தது 75 - 100 நபர்கள் சட்டவிரோதமாக "கன்சைட் தளத்தில்" தடுத்து வைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இது 2005 - 2006 முதல் 2012 வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மிகமோசமான மனிதாபிமானமற்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளிற்குள்ளாக்கப்பட்டனர். அக்டோபர் 2019 இல் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம் இலங்கை இலங்கை கடற்படையின் "கன் சைட்" எனப்படும் ரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பிற கடுமையான மீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இந்த மீறல்கள் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை 2008 - 2009ல் ("திருகோணமலை 11") திருகோணமலை கடற்படைத் தளத்தில் 11 பேர் காணாமல் போனது தொடர்பான இலங்கை காவல்துறையின் கடந்த கால விசாரணையிலிருந்து ஆவண ஆதாரங்களையும் 2008 முதல் 2012 வரை இலங்கை கடற்படையின் பரந்த முறையான மீறல்களைப் பற்றிப் பேசிய நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக 2008 ஆகஸ்ட் 25 முதல் 2009 பிப்ரவரி வரை கொழும்பில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான “திருகோணமலை ” விசாரணையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 2009 இல் “கன்சைட்டிற்கு” மாற்றப்பட்டனர். இந்தக் குழுவில் ஆறு தமிழர்கள் அடங்குவர், இருவர் சிங்களவர்கள் மற்றும் மூவர் முஸ்லிம்கள். இந்த குறிப்பிட்ட வழக்கைத் தாண்டி புலிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அதே இடத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததை - பெரும்பாலும் தமிழர்களை - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஆவணப்படுத்தியது. அவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர், மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உட்பட அவர்கள் அனுபவித்த கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம். அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2013 வரை கடற்படை புலனாய்வு இயக்குநராகவும் கடற்படை ஆயுத இயக்குநராகவும் நிஷாந்த உலுகேதென்ன பணியாற்றினார். 2008 முதல் 2012 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்துடன் நேரடியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு காலம் கடற்படை உளவுத்துறையால் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் "கன் சைட்" இல் தடுத்து வைக்கப்பட்ட காலகட்டம். நிசாந்த உலுகேதென்னவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட கடற்படை பிரிவான கடற்படை புலனாய்வு பிரிவினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களும் உயிர் பிழைத்தவர்களும் கன்சைட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் வாக்குமூலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி மிகவும் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட கடற்படை தளத்திற்குள் கடற்படையினர் சுதந்திரமாக சென்று வந்தனர். கடற்படை புலனாய்வு பிரிவினரின் வாகனங்களிற்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது, அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத கடத்தல்கள் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை வான்கள் தளத்திற்குள் இலகுவாக கொண்டு போவதை சுலபமாக்கியது. நாட்டின் கடும் பாதுகாப்பு மிக்க தளத்திலிற்குள் இந்த வெள்ளை வான்கள் எந்த வித சோதனையும் இன்றி சென்று வந்தன. கடற்படை புலனாய்வுத் துறையில் அவரது உயர் பதவி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கான மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சிஐடியில் அவரது சொந்த அனுமதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிஷாந்த உலுகேதென்ன தனது கட்டளையின் கீழ் நீண்டகாலமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் ஆனால் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மற்றும் மேலும் மீறல்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார். மீறல்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர் மே 2019 இல் கடற்படைத் தலைமைத் தளபதியாகவும் ஜூலை 2020 இல் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இறுதியில் டிசம்பர் 2022 இல் ஏராளமான கௌரவங்களுடன் ஓய்வு பெற்றார். 17 அக்டோபர் 2023 இல் அவர் கியூபாவிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார். 18 நவம்பர் 2024 இல் அவர் அரசாங்கத்தால் திரும்ப அழைக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/221977

நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

1 month 1 week ago

நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

Published By: RAJEEBAN

06 AUG, 2025 | 05:36 PM

image

இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும்  அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில்  ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

நிசாந்த உலுகேதன்ன குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நிசாந்த உலுகேதென்ன 2010 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

2025 ஜூலை மாதம்  இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டார்.

trinco-navel-base-1.jpg

ஆள்கடத்தல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் மற்றும் நாட்டின் மிக பாதுகாப்பான கடற்படை தளமான திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோத படுகொலைகள் ஆகியவை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். (இது கன்சைட் என அழைக்கப்பட்டது)

இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான நம்பகதன்மை மிக்க அறிக்கையிடல்களின் படி கன்சைட் எனப்படுவது தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான அனுமதியளிக்கப்படாத பகுதி என்பதை முன்னாள் கடற்படை தளபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

கன்சைட் என்ற நிலத்தின் கீழ் அமைந்துள்ள சட்டவிரோத சித்திரவதை கூடம் ஒன்று உள்ளது என்பதை 2015 முதன்முதலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அம்பலப்படுத்தியிருந்தது.

இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரினதும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும்  அடிப்படையாக வைத்து இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் நிசாந்த உலுகேதென்னவும் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம்.

மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பிற வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்ட உயிர் பிழைத்த தமிழர்களிடமிருந்து விரிவான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவிரிவான தகவல்களின் அடிப்படையில் சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  இந்த நிலத்தடி சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்திரவதை கூடம் இருப்பதை முதன்முதலில் 2015 இல் வெளிப்படுத்தியது. 

பின்னர் அவை 2015 நவம்பர் மாதம் அந்த இடத்திற்கு விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவால்  சரிபார்க்கப்பட்டன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அதன் செயல்பாட்டின் போது குறைந்தது 75 - 100 நபர்கள் சட்டவிரோதமாக "கன்சைட் தளத்தில்" தடுத்து வைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இது  2005 - 2006 முதல் 2012 வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. 

இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மிகமோசமான மனிதாபிமானமற்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளிற்குள்ளாக்கப்பட்டனர்.

அக்டோபர் 2019 இல் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம்  இலங்கை  இலங்கை கடற்படையின் "கன் சைட்" எனப்படும் ரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பிற கடுமையான மீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.

இந்த மீறல்கள் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை 2008 - 2009ல் ("திருகோணமலை 11") திருகோணமலை கடற்படைத் தளத்தில் 11 பேர் காணாமல் போனது தொடர்பான இலங்கை காவல்துறையின் கடந்த கால விசாரணையிலிருந்து ஆவண ஆதாரங்களையும் 2008 முதல் 2012 வரை இலங்கை கடற்படையின் பரந்த முறையான மீறல்களைப் பற்றிப் பேசிய நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

குறிப்பாக 2008 ஆகஸ்ட் 25 முதல் 2009 பிப்ரவரி வரை கொழும்பில் பதினொரு இளைஞர்கள்  கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான “திருகோணமலை ” விசாரணையை  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  இலங்கை  ஆய்வு செய்தது. 

பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 2009 இல் “கன்சைட்டிற்கு” மாற்றப்பட்டனர். இந்தக் குழுவில் ஆறு தமிழர்கள் அடங்குவர், இருவர் சிங்களவர்கள் மற்றும் மூவர் முஸ்லிம்கள். 

இந்த குறிப்பிட்ட வழக்கைத் தாண்டி புலிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அதே இடத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததை - பெரும்பாலும் தமிழர்களை - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  ஆவணப்படுத்தியது.

அவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர், மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உட்பட அவர்கள் அனுபவித்த கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம். 

nishantha2.jpg

அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2013 வரை கடற்படை புலனாய்வு இயக்குநராகவும் கடற்படை ஆயுத இயக்குநராகவும் நிஷாந்த உலுகேதென்ன பணியாற்றினார்.

2008 முதல் 2012 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்துடன் நேரடியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு காலம் கடற்படை உளவுத்துறையால் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் "கன் சைட்" இல் தடுத்து வைக்கப்பட்ட காலகட்டம். 

நிசாந்த உலுகேதென்னவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட கடற்படை பிரிவான கடற்படை புலனாய்வு பிரிவினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களும் உயிர் பிழைத்தவர்களும் கன்சைட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான  திட்டத்திடம் வாக்குமூலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி மிகவும் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட கடற்படை தளத்திற்குள் கடற்படையினர் சுதந்திரமாக சென்று வந்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினரின் வாகனங்களிற்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது, அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் துல்லியமாக  பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோத கடத்தல்கள் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை வான்கள் தளத்திற்குள் இலகுவாக கொண்டு போவதை சுலபமாக்கியது.

நாட்டின் கடும் பாதுகாப்பு மிக்க தளத்திலிற்குள் இந்த வெள்ளை வான்கள் எந்த வித சோதனையும் இன்றி சென்று வந்தன.

கடற்படை புலனாய்வுத் துறையில் அவரது உயர் பதவி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கான மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சிஐடியில் அவரது சொந்த அனுமதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிஷாந்த உலுகேதென்ன தனது கட்டளையின் கீழ் நீண்டகாலமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் 

ஆனால் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மற்றும் மேலும் மீறல்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார்.

gunsite__2_.png

மீறல்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர் மே 2019 இல் கடற்படைத் தலைமைத் தளபதியாகவும் ஜூலை 2020 இல் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இறுதியில் டிசம்பர் 2022 இல் ஏராளமான கௌரவங்களுடன் ஓய்வு பெற்றார். 17 அக்டோபர் 2023 இல் அவர் கியூபாவிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார். 18 நவம்பர் 2024 இல் அவர் அரசாங்கத்தால் திரும்ப அழைக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

https://www.virakesari.lk/article/221977

இதயங்களின் மொழி

1 month 1 week ago
penetration test மாதிரி முதல் மூன்றைத் திறந்தால் தான் மற்றது தெரிய வரும் போல. எங்கடை batch இலையே 5,6 பேருக்கு மாரடைப்பு வந்திட்டுது. சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.