1 month 1 week ago
"Not One Inch" எனும் வார்த்தையை உதிர்த்தவர் ஜேம்ஸ் பாக்கர்.அலுவல் முடிய அந்த வார்த்தையை நிகாரித்தவர் அன்றைய் ஜெனாதிபதி ஜோர்ஜ் புஷ். M. E. Sarotte அவர்கள் எழுதிய புத்தகத்தில் நிறைய விபரங்கள் உள்ளது.
1 month 1 week ago
ஐயா! நீங்கள் சொல்வதில் தப்பில்லை, ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கையாளும் சந்தர்ப்பமே எங்களை சிந்திக்க வைக்கிறது. தமிழ் மக்களுக்கெதிராக, தொடர்ந்து அழிவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டபொழுது அதை திசைமாற்றி அழிவுகளை குறைத்து மறைத்து மனிதநேய அமைப்புகளை வெளியேற்றி கோரத்தாண்டவம் ஆடும்போது நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்? ஏன் விமர்ச்சிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை? அந்த ஏதிலி மக்களிடமே வாக்கு வாங்கி, அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லி பதவிகளை அனுபவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி அந்த மக்களுக்கெதிராக செயற்பட்டது ஏன்? நீங்கள் நிஞாயம் கேட்டால்; எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் எல்லா அரசாங்கத்திலும் ஒரே மாதிரியாக கேள்வி எழுப்பியிருந்தால் நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம், அது நிஞாயமானது. ஆனால் நீங்கள் அப்படியல்லவே, இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றே கேள்வி கேட்க்கிறீர்கள், குறை கூறுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள். சுனாமி நிவாரணத்தை கொள்ளையடித்தனர். மஹிந்த, தான் அரசியலை கைப்பற்றியவுடன் அதற்குள் மறைந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அந்த மக்களின் பிரதிநிதிகளினதும் முக்கிய கடமை. அரசாங்கத்தை விட பிரதிநிதிகளின் பணி முக்கியமானது. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? முந்திக்கொண்டு அனுராவையோ அரசாங்கத்தையோ குறை கூறினால்; தங்களை மறைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்த நேரத்திலும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் இவர்களது அரசியல். உதவி செய்யும் இவர்களின் கரங்களை அனுரா கட்டிப்போட்டுவிட்டாராம். அனுரா எதுவுமே செய்ய வில்லையா? அப்படியென்றால் ஒரு விமானி, கடற்படை வீரர்கள் இறந்தது, வெள்ளத்திலடித்துச்செல்லப்பட்டது எப்படி? ஒரு இடத்திலா அழிவு ஏற்பட்டது? நாடு முழுவதும் வெள்ளத்திலும் அழிவுகளிலும் தத்தளிக்கிறது. வடக்கில் இவ்வளவுபேரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மக்கள் தொகையை குறைத்து கூறி ஏற்படுத்தப்பட்ட அழிவை, அத்தனை துல்லியமான கணக்கை மறைத்து அழித்த அழிவுகளை மறைத்து சொன்னபோது யாரும் கேள்வி கேட்கவில்லை, விமர்ச்சிக்கவில்லை, அப்போது நிவாரணம் சரியாக சென்றதா? உணவோடு, மருந்தோடு வந்த கப்பலை திருப்பியனுப்பியபோது வராத மனிதநேயம் இப்போது எப்படி வந்தது? எத்தனை பொதுமக்கள், நிறுவனங்கள், விளம்பரம் தேடாமல், விமர்ச்சிக்காமல், குற்றம் கூறாமல், தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார்கள். இவர் படப்பிடிப்பு வைத்து பதவிக்காக, சுற்றி விமர்ச்சிக்கிறார். அதுசரி, இதுவெல்லாம் இவரது சொந்தப்பணத்திலா செய்கிறார்கள்? எதிலும் பதவி, பெயர் வேண்டும். அதற்காகவே கேள்வி கேட்பார், விமர்சிப்பார். அதை அனுரா இவருக்கு வழங்கியிருந்திருந்தால்; இவ்வளவு கேள்வி, விமர்சிப்பு, குறை இருந்திருக்காது. அதனாற்தான் எல்லா ஜனாதிபதிகளும் இவருக்கு பதவி கொடுத்து மக்களின் உரிமைகளுக்கு விலை கொடுத்து இவரை வாங்கி பக்கத்தில் வைத்திருந்திருப்பார்கள் போலுள்ளது. மக்களின் அழிவுகளிக்கிடையில் அரசியல் லாபம் தேடும் சாக்கடைகள். இனிமேலாவது நேரம், இடம், காலம், ஆட்கள் பாராது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கட்டும். இவர் விமர்சிக்கப்போய் தனது சுயரூபத்தை சொல்லிக்காட்டிவிட்டார். இதற்கு பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். உளறுவாயன் தன் வாயால் கெட்டார்.
1 month 1 week ago
இல்லை. இது. பொய். அவர்கள். விலையைக். குறைத்து. முன். கூட்டியே. விற்று. விடுவார்கள். உணவுப். பொருள்கள். பழுதானத. இல்லையா. என்பதை. பரிசோதிக்க. தகதி வாய்ந்த. பயிற்றுவிக்கப்பட்ட. அதிகாரிகள் உண்டு அவர்களின். நற்சான்றுகள். இல்லமால். உற்பத்திப். பொருள்கள். சந்தைப்படுத்துவதில்லை. இறைச்சிக்குகூட. சீல். இன்றி. ஒரு நாட்டிலிருந்து. இன்னொரு. நாட்டுக்கு. எடுத்து. செல்ல. முடியாது. பிடி. பட்டால். இறைச்சி. விலையைவிட. தண்டப்பணம். அதிகம்.
1 month 1 week ago
அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு ] இந்த அநுர குமார திசாநாயக்க என்பவர் செம்ரம்பர் 2024 முன்பும் அரசியலில் தீவிரமாக இருந்திருக்கின்றார். தனி மனித நம்பிக்கை சொல்லி ஆட்சிக்கு ஆதரவு திரட்டுவது பேய்காட்டுவது சுலபம். ஜேவிபி மிக பெரிய அளவில் இணைய தளங்கள் மூலம் தமிழில் பிரசாரம் நடத்துகின்றது. ஒரு காணொளி பார்த்தேன் அதன் தலைப்பு தேரர்களை கம்பெடுத்து விரட்டிய சிங்கள மக்கள் - தென்னிலங்கையில் கடும்பதற்றம். இப்படியானதை பார்த்தால் தமிழர்கள் மிகவும் சந்தோசம் அடைவார்கள் என்று தான் அப்படி
1 month 1 week ago
ஆம். உண்மை. அவ்வளவுக்கு. பணத்தின். மேல். ஆசை. ஜேர்மன். கடைக்கார்ர். முடிவுத். திகதிகளுக்கு. ஆறு. மாதங்களுக்கு. முன்பு. அதன். விலையை 50. 60. 70. %கள். குறைத்து. விற்று. விடுவார்கள். இலங்கையில். நல்ல. அரசிக்குள். கல்லுகள். அற்ற. அரிசிக்குள. சிறு கல்லைக். கலந்து. விற்று. பணம். பாரத்த. தமிழன். எதையும். செய்வன்.
1 month 1 week ago
நீங்கள் சரியாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஜேம்ஸ் பேக்கர் வாய் மூலம் வழங்கிய வாக்குறுதி இது என்று தான் தற்போது இருக்கும் ரஷ்ய தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதற்கு அமெரிக்கர்கள் சொல்லியிருக்கும் பதில் "கிழக்கு ஜேர்மனியில் இருந்து சோவியத் படைகள் வெளியேறும் வரை, ஒரு அங்குலம் கூட மேற்கு ஜேர்மனியில் இருக்கும் நேட்டோ படைகள் கிழக்கு ஜேர்மனி நோக்கி நகராது" என்ற வாய் வாக்குறுதி மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது" இதையே, காலமாகி விட்ட கொர்பச்சேவும் கூறியிருந்தார் (அவர் பேச்சு வார்த்தையில் நேரடியாக ஈடுபட்டிருந்த ஒருவர்). இதைப் பற்றி ரஷ்யர்களும், உக்ரேனியர்களும், அமெரிக்கர்களும் எழுதிய பல நூல்கள் இருக்கின்றன. முதல் நிலை ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால், யூ ரியூப் அலட்டல்களைக் கேட்டு விட்டு அப்படியே இங்கே வந்து ஒப்புவிப்பார்கள்- ஆதார ஆவணம் கேட்டால் தாறு மாறாகத் திட்டி விட்டுப் போய் விடுவார்கள். இப்போது திட்டுவது மட்டும் கொஞ்சம் குறைந்திருக்கிறது😂.
1 month 1 week ago
பாகிஸ்தான் காலாவதியான பழுதடைந்த உணவுப்பொருட்களை வழங்கியது மோசமான செயல். தீமை செய்கின்ற பழுதடைந்த உணவுகளை கொடுப்பதை விட புடின் மாதிரி ஒன்றும் கொடுக்காமல் இருந்திருக்கலாம். இந்தியா புகழ் அதிகரித்துவிட்டது . பாகிஸ்தான் பொருட்கள் காலாவதி ஆகவில்லை என்று புர்க்கா போட்ட தமிழ் பெண் பேசும் காணொளி ஒன்று வந்தது ஆரம்பம் கேட்டேன் அதை பற்றிய செய்திகளே இல்லை
1 month 1 week ago
மனித அபிவிருத்திச் சுட்டெண் போன்ற பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்த ஒரு அளவீட்டில் பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதை தான். இதில் மொழி எங்கே வருகிறது? இந்தக் கவுண்ட லொஜிக் படி பார்த்தால் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைப் பேசும் பீகார் தான் "மிக்க வளர்ச்சியடைந்த" மாநிலம்😂!
1 month 1 week ago
அமெரிக்க தரப்பும் ஜேர்மன் தரப்பும் வெறும் உறுதி மொழியே வழங்கினார்கள் என நினைக்கிறேன் (சரியாக தெரியவில்லை), அமெரிக்க தரப்பின் சார்பாக ஜேம்ஸ் பேக்கர் உறுதி மொழியினை வழங்கியதாக எங்கோ படித்த நினைவு அமெரிக்க அதிபர் அந்த உறுதி மொழியினை கொடுத்தாரா என தெரியவில்லை. புவியியல் என்பது மாற்ற முடியாத விடயம் என்பது உண்மைதான், இதனால் இந்த பூகோள அரசியலில் எப்படி நாம் மாட்டிக்கொண்டோமோ அதே போலவே உக்கிரேனும் மாட்டிக்கொண்டுள்ளது. 2014 இரஸ்சிய சார்பு உக்கிரேன் அரசு கவிழ்க்கப்பட்டவுடன் இரஸ்சியா தனது பூகோள நலனை தக்கவைக்க கிரிமியாவினை ஆக்கிரமித்தது, இந்த போர் நீடித்தால் உக்கிரேன் மிக்கலோவ் மற்றும் ஒடிசாவினையும் இழக்க நேரிடும், அதன் மூலம் இரஸ்சியா முழுமையான கருங்கடல் கட்டுப்பாட்டினை அடைந்து விடும் ஆனால் உக்கிரேன் தனது கடல் வழித்தடத்தினை இழந்தால் அதன் பொருளாதார பெருமளவில் மற்றவர்களில் தங்கி நிற்கும் நிலை ஏற்படுவதுடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
1 month 1 week ago
அப்படி மூன்றாம் நபர் சொல்வதை பொய் என்று நிரூபியுங்களேன்? ஜோர்ஜ் புஷ் '89 இல் சோவியத் ரஷ்யாவுக்குக் கொடுத்த "எழுத்து மூல" வாக்குறுதியில் இருந்து ஆரம்பியுங்கள்😇!
1 month 1 week ago
அரசியல் தந்திரம், இராணுவ தந்திரம், இராஜ தந்திரம், இது, வியாபார தந்திரம். எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள். இவர்கள் கொள்வனவு செய்த விலையைவிட இரண்டு மூன்று மடங்கு லாபம் வைத்துதான் விற்பனை செய்கிறார்கள். முடிவுதிகதியை நெருங்கும்போது, மலிவு விலையில் கொடுக்கும்போது நுகர்வோரும் பலனடைவர், வியாபாரியும் நட்டமடையார். தாங்கள் கொள்ளை லாபம் அடைய வேண்டுமென்பதற்காக வியாபார தர்மத்தையே இழந்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்/ இழக்கிறார்கள்
1 month 1 week ago
யாழ்களத்தில் எழுத்தில் இல்லாத ஒரு விதி இருக்கிறது எங்கள் கருத்துக்களை நாங்கள் எழுத முடியாது ......... இவர் என்ன எழுதுவார் என்று மூன்றாம் நபர் எழுதுவார்.
1 month 1 week ago
"புரின் சர்வாதிகாரி" என்று சொல்லும் அதே ஆட்கள் தான் - குறைந்த பட்சம் இந்தக் களத்திலாவது- "ட்ரம்ப் ஒரு மெலிதான (lite) சர்வாதிகாரி" என்றாவது எழுதுகிறார்கள். கறுப்பின மக்கள் மேல் நடத்தப் பட்ட, நடத்தப் படும் அடக்கு முறையையும் அவர்கள் தான் இங்கே கண்டித்திருக்கிறார்கள். பெண்கள் - ஓம், பெண்கள்😉 - மேல் நடத்தபடும் அடக்கு முறைகள், மாற்றுப் பாலினர் மேல் நடத்தபடும் அடக்கு முறைகள் இவையெல்லாவற்றையும் இங்கே கண்டிக்கிறார்கள். உங்கள் "காய்ச்சல் இல்லாத கண்ணுக்கு" இவற்றுள் எதையாவது "புரின் புரியன்மார்" இங்கே பேசியதாக தெரிந்திருந்தால் ஒரு தடவை சுட்டிக் காட்டுங்கள்! புலிகள் மீது இருந்த குறைகளை சொல்வோரால் புலிகளின் பெயர் நாறியதை விட, அந்தப் பிழைகளுக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் "மண் லாறி" களால் தான் அவர்கள் பெயர் இங்கே மிகவும் நாறியிருக்கிறதென நினைக்கிறேன்.
1 month 1 week ago
அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் .... தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம். சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?
1 month 1 week ago
தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது
1 month 1 week ago
28 அம்ச சமாதான திட்டம் என்பது ரஷ்யாவினாலேயே தயாரிக்கப்பட்டது. அதை அவர்கள் அமெரிக்காவிடம் கொடுத்தார்கள். அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால் மார்க் ரூபியோவும், அதிபரின் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கூட இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை நியாயம் அற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தத் திட்டம் உக்ரேன் முற்று முழுதாக ரஷ்யாவிடம் சரண் அடையும் நிலை என்றே அமெரிக்க பிரநிதிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மார்க் ரூபியோவின் தலைமையில் 28 அம்ச திட்டம் 19 அம்ச திட்டமாக மாற்றப்பட்டது. இதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இங்கு எவருமே அவர்களின் இலக்கை அடையாமல் போரை நிறுத்தி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்பதே உண்மை. நான்கு தரப்பிற்கும் வெவ்வேறான இலக்குகள் உள்ளன என்றே தெரிகின்றது: அமெரிக்கா - வழமை போலவே அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் குறுகிய மற்றும் நீண்ட கால பொருளாதார நலன்களே அமெரிக்காவின் பிரதான இலக்கு. அரசியல் பலம் மற்றும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தல் என்பன அடுத்த இலக்குகள். அதிபர் ட்ரம்ப் வந்த பின் அவரினதும், அவரைச் சார்ந்தவர்களினதும் (அவரது கட்சியினர் அல்ல) நலன்களும், அவர்கள் அடையப் போகும் பயன்களும் இன்னொரு இலக்காகி உள்ளது. இந்தச் சண்டையில் நோபல் பரிசு பெறுவது என்பது கூட ஒரு இலக்கு என்பது முகம் சுளிக்க வைக்கும் நிஜம். ரஷ்யா - அதிபர் புடின் ஒரு பலமான ரஷ்யாவை, சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போல, உருவாக்க நினைக்கின்றார். ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், இரசாயன ஆயதங்கள் போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால், இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் அருகில் கூட வரமுடியாத நிலையிலேயே ரஷ்யா உள்ளது. உக்ரேனுடன் சண்டை போடுவதற்கே ரஷ்யாவிற்கு வட கொரியாவின் பத்தாயிரம் வீரர்கள் களத்தில் தேவைப்படுகின்றார்கள். அதை விட வேலை வாய்ப்புகள் என்று சொல்லி அழைத்து வரப்பட்ட இலங்கை இளைஞர்கள் கூட கட்டாயமாக களத்துக்கு ரஷ்யாவால் அனுப்பப்படுகின்றார்கள். நேற்று தென் ஆபிரிக்காவில் இதே விடயத்தில், ரஷ்யாவின் போருக்கு ஆட்களை சேர்த்த குற்றத்திற்காக, சில பிரபலமான தென் ஆபிரிக்கர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அதிபர் புடினின் நோக்கம் ஒன்றே. அது சமாதானம் அல்ல. அவருடைய நோக்கம் முழு உக்ரேனையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே. ஐரோப்பா: யாராவது சண்டை பிடித்துக் கொள்ளட்டும், யாராவது அவர்களின் வளங்களை செலவழித்துக் கொள்ளட்டும், நாங்கள் அப்படியே இருந்து விடுவோம் என்று நினைக்கின்றார்கள். அத்துடன் ரஷ்யாவின் மீதும், அதிபர் புடினின் மீதும் பயமும் இருக்கின்றது. பலம் என்பதை விட, அதிபர் புடினின் மூர்க்கத்தனமே அவர்களை யோசிக்க வைக்கின்றது. அதிபர் புடினின் சாத்தான் - 2 நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை இந்த வாரமும் வெற்றியளிக்கவில்லை. அதிபர் புடின் இதை தொடரப் போவதாகவே சொல்லியிருக்கின்றார். ஐரோப்பாவும், அமெரிக்காவும் இப்படியான ரஷ்யாவின் நடவடிக்கைகளை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எதிர்க்கவே போகின்றார்கள். உக்ரேன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம். உக்ரேன்: உக்ரேனியர்கள் தங்கள் இறைமைக்காகவே போராடுகின்றார்கள். உலகில் மிகப் பெரிய நாடுகளின் அருகில் அமைந்திருக்கும் சிறிய நாடுகளுக்கு தெரிவுகள் மிகக் குறைவு. உக்ரேனுக்கும் அதுவே நிலை. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆதரவளிக்கா விட்டால், உக்ரேன் இன்றே முடிந்தது. ஒரு தேசிய இனமே இந்த உலகில் இருந்து மெதுமெதுவாக மறைந்துபோகும். நீங்கள் கல்விச் சமூகம் என்று சொன்னதை நான் என்னை நோக்கியதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பொதுவாக படித்து பட்டம் பெற்றவர்களையே நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டேன். துறைசார் நிபுணர்களை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பட்டங்கள் பெறுபவர்கள் எல்லோரும் கல்விச் சமூகமாக ஆவதில்லை.................. போகும் வழியில் கிடைத்த பட்டங்களாக எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமூகமாக மாறாமல், தங்கள் வழியிலேயே வாழ்ந்து முடிப்பவர்களும் பலர் இருக்கின்றார்கள்......................
1 month 1 week ago
ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது: 1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். 3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே? இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!
1 month 1 week ago
கொழும்பில போய் படித்தவர்கள் கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?
1 month 1 week ago
தயாரித்த உணவுப் பொருட்களை எந்தக் காலத்திலும் காலாவதியாகி விட்டது என்று தூக்கி எறிய மாட்டார்கள். ஏதோ ஒரு விதத்தில், மறு சுழற்சியாக வாடிக்கையாளர் தலையிலேயே கட்டி விடுவார்கள் என்று நினைக்கின்றேன். "புது மொந்தையில் பழைய கள்ளு" 😂
1 month 1 week ago
முந்தியெல்லாம் காலாவதி திகதியெல்லாம் பாத்து தான் சாப்பிட்டனீங்களோ எண்டு கேட்டால் என்ன செய்யிறது? சட்டத்துக்கு பயப்பிடுற ஜேர்மனியிலை கூட உள்ள சுத்துமாத்துக்கள் சொல்லி வேலையில்லை. 😄