Aggregator

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம்

1 month 1 week ago
08 Aug, 2025 | 09:06 AM யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம்

1 month 1 week ago

08 Aug, 2025 | 09:06 AM

image

யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. 

அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk

நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

1 month 1 week ago
08 Aug, 2025 | 09:57 AM நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார். நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில் திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார். மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர். மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன. விபத்தில் இறப்பு வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம். எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk

நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

1 month 1 week ago

08 Aug, 2025 | 09:57 AM

image

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில்  விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.

நுவரெலியாவில் பிரதான வீதிகளை  ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை  பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம்  பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.

அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில்  விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள்  பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார்.

நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில்  வழுக்குதன்மையும்  அதிகரித்து  விபத்துகளும்  ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில்  திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.

மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர்.  மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில்  அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக  விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன.

விபத்தில் இறப்பு  வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக  திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில்  சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.

IMG-20250808-WA0029__1_.jpg

IMG-20250808-WA0024__1_.jpg

IMG-20250808-WA0022__1_.jpg

IMG-20250808-WA0028.jpg


நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk

"மூன்று கவிதைகள் / 02"

1 month 1 week ago

"மூன்று கவிதைகள் / 02"

'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்'

என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்

அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன்

அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன்

கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்?

வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன்

கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன்

கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன்

எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்?

பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன்

கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

'என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே'

என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே

கண்ணுக்குள் பொத்திவைத்த காதல் தேவதையே

எண்ணத்தில் உன்னைத்தவிர யாரும் இல்லையே

கன்னத்தில் தந்திடவா ஓசையில்லா முத்தம்!

வெண்ணிலாவில் தழுவியது விழிக்குள் நிற்குது

அன்னநடையில் வந்தது இன்பம் பொழியுது

திண்ணையில் உறங்கியது தினமும் வாட்டுது

தேன்குடிக்க வண்ணமலரைச் சுற்றி வருகுது!

பெண்மையின் அழகினைக் கண்ட பின்பே

மண்ணில் பிறந்ததின் பயனை உணர்ந்தேன்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

...................................................

'கொட்டித் தீராதக் காதல்'

கொட்டித் தீராதக் காதல் இதுவோ

முட்டி மோதாத அன்பு நட்போ

கட்டிப் பிடிக்காத அழகு உடலோ

எட்டிப் பார்த்து ஏங்குவது எனோ?

ஒட்டி உடையில் பெண்மை கண்டேன்

வெட்டிப் பேச்சில் வெகுளி பார்த்தேன்

சுட்டி விடையில் அனுபவம் அறிந்தேன்

தட்டிக் கழித்து பாராமுகம் எனோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள் / 02"

https://www.facebook.com/groups/978753388866632/posts/30743827355265842/?

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

1 month 1 week ago
நன்றி சசிகாந்த் செந்தில். சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

1 month 1 week ago
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை written by admin August 8, 2025 கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார். தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார். https://globaltamilnews.net/2025/218987/

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

1 month 1 week ago

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

written by admin August 8, 2025

speakers-vavunia.jpg?fit=650%2C433&ssl=1

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.   இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார்.


https://globaltamilnews.net/2025/218987/

யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம்

1 month 1 week ago
யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பு ட்ரம்ப்: நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு… வாழ்வின் எல்லை சென்று… ஒன்றாக வாழலாம்…. புடின்: ஆயுள் காலம் யாவும்… அன்பே நீயே போதும்…. இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்… ட்ரம்ப்: நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்… புடின்: என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி…. ட்ரம்ப்: என் வானம் நீ… என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி… புடின்: என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி…. ட்ரம்ப்: என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி…. புடின்: ஓ…. நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்….

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

1 month 1 week ago
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பளியுங்கள் - சிறிதரன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நீதியமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமதம்பி சிவகுமார்,விக்னேஸ்வரநாதன் பார்த்திபன்,கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார்,ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 14 முதல் 30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குடும்பத்தை கருத்திற்கொள்ளுங்கள், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222058

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

1 month 1 week ago
போலி வாக்காளர் சர்ச்சை: ராகுல் காந்தியின் 5 குற்றச்சாட்டுகளும் தேர்தல் ஆணையத்தின் பதிலும் பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் 7 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் "வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி" நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். "இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் 'திருட' பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்" என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் 'தவறாக வழிநடத்துவதாக' இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார், பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாகக் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்யான தகவல்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆதாரங்களை ராகுல் காந்தி வழங்கினார். வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய முக்கிய கூற்றுக்கள் பற்றிய ஒரு பார்வை. பட மூலாதாரம், ANI 1: 'மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி' குற்றச்சாட்டு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்: மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியது, இந்த சந்தேகத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம். மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வாக்கு சதவிகிதத்தில் திடீரென ஒரு பெரிய ஏற்றம் ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம். மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2: கர்நாடகா தேர்தல் குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார்? ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள்: கர்நாடக மக்களவைத் தேர்தலில், உள் கருத்துக் கணிப்புகள் 16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தன, ஆனால் காங்கிரசுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பதை தங்கள் ஆய்வில் காங்கிரஸ் கண்டறிந்தது. கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 'திருடப்பட்டுள்ளன'. வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்களித்த சுமார் 11 ஆயிரம் வாக்காளர்கள் கர்நாடகாவில் வாக்களித்தனர். இந்த வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி எண்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 3: 'போலி வாக்காளர்' ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு: பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை. ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 மற்றும் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 4: ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் ராகுல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்: ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன. கிட்டத்தட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தையும் பாஜக தவறாக நிரூபித்து, பெரும்பான்மையை எளிதாகக் கடந்து 48 இடங்களை வென்றது. 5: தேர்தல் ஆணையம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னார்? "2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோதி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் 25 இடங்களைத் திருட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில், பாஜக 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றது" என்று ராகுல் காந்தி கூறினார். "இந்திய ஜனநாயகத்தை அழிக்காமல் பாதுகாக்க பாடுபடுங்கள் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் எங்கள் கூற்றுக்கு முக்கிய சான்றாகும். கர்நாடகாவின் தகவல்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் இப்போது ஒரு சான்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார். "இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்தியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்பதைவிட குறைவானதில்லை. இது, ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்று. இந்த வடிவத்தை அவதானித்தால் இதனை நாங்கள் முழுமையாக உறுதியாக நம்புகிறோம். இதை நாங்கள் சரியாக கவனித்து ஆய்வு செய்திருக்கிறோம்." "தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளைத் தரவில்லை, சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்களே கூறினார்கள்... அதனால்தான் அவர்கள் அந்தக் காட்சிகளை அழிக்க விரும்பினார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக சில தரவுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணரின் கருத்து என்ன? ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்ணீஸ், "இது தேர்தல் ஆணையத்தை சுற்றிவளைக்கும் ஒரு செயல். தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு சோதனையாக இருக்கும்" என்று கூறினார். "தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமற்ற நிறுவனம் ஒன்றிற்கு எதிராக முதன்முறையாக இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் நேர்மையற்ற செயலைச் செய்ததால் பல வாக்காளர்களின் கைகளில் இருந்த வாக்கு என்ற ஆயுதம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் அவரிடம் பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, எனவே இது தர்க்கரீதியானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தியிடம் வலுவான ஆதாரம் ஏதேனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்." ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ஃபட்ணீஸ், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பிரசாரம் அதாவது SIR தொடர்பாக சர்ச்சைகள் தொடரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குகின்றன. 'பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் பிரச்னைகளில் ஒன்றாக மாறும்' என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக என்ன சொன்னது? மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார். "ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருவதோடு, பொய்யான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதை நான் எதிர்க்கிறேன். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாக அவர் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார். அவரது கட்சி தனது இருப்பை இழந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் பொதுமக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறினார். "மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக இடங்களை இழந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. கர்நாடகாவில், சட்டமன்றத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்தாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திலும், மக்களவையிலும் நீங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது, நாட்டிற்கும் உலகிற்கும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?" "தர்க்கமும், புத்திசாலித்தனமும் முக்கியம். இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று உலகிற்குச் சொல்ல முயற்சிக்கிறீர்களா? ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய அமைப்புகளை அவதூறு சொகிறார். தேர்தல்களில் மோசடி நடத்தப்பட்டது உண்மையாக இருந்தால், ஜார்க்கண்டில் உங்கள் வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? ஜம்மு காஷ்மீரில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?" ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புப் பற்றி பேசிய பாஜக எம்.பி சம்பித் பத்ரா, "இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி அரசியலமைப்பு நிறுவனம் ஒன்றை தாக்கிப் பேசுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. தான் வெற்றி பெற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை அவர் ஏன் நம் முன் முன்வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewyd0v218no

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

1 month 1 week ago
பயங்கரவாத தடைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்பாட்டுடன்தான் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டதா?????🤔

பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!

1 month 1 week ago
தீ வைத்துக் காட்டு மிருகங்களை துரத்துவதுபோல் இராணுவத்தையும் துரத்திவிடலாம் என்ற எண்ணம் போலும். மனிதருக்கு நரி மூளையும் உண்டு, அது பலவிதமாகவும் சிந்திக்கும்.🤪 எனக்கும் சிந்தனைகள் வருவதுண்டு, ஆனாலும் எங்கள் கற்பகதருவை எரிக்கும் சிந்தனைகள் வந்ததில்லை.🥺

மாத்து

1 month 1 week ago
நிஜமாகவே சிரிப்பு சிரிப்பாய் வருகுது . .......! அதுசரி கிருபன், நம்ம ஆசான் இதுக்குள்ள எந்த வைத்தியம் பார்க்கிறார் ....... தெரிஞ்சா எங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் அதுதான் ....... ! 😀

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

1 month 1 week ago
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டை ஏமாற்றுவதற்கு வழமைபோல சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் நடத்தும் நாடகம்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர், விடுதலை புலிகள் அமைப்பின் 8 உறுப்பினர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் ,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 2 கைதிகள், 2 மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மெகசின், மஹர, தும்பர, பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலையாவார்கள். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம். சிறைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இவ்விடயத்தில் எனக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது. ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/222065