Aggregator

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 month ago
கமிந்து, குசல், தீக்ஷன, ஹசரங்க அசத்தலான ஆற்றல்கள், ரி20 உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை 09 Feb, 2026 | 12:26 AM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தில் தனது வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது. கமிந்து மெண்டிஸின் அதரிடி துடுப்பாட்டம், குசல் மெண்டிஸின் பொறுமையான அரைச் சதம், மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை ஈட்டிய நான்காவது நேரடியான வெற்றி இதுவாகும். உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் கடைசி நேரத்தில் அழைக்கப்பட்ட கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு உற்சாகத்தை கொடுத்ததுடன் வெற்றிக்கும் வித்திட்டது. 'உலகக் கிண்ணத்திற்கு நான் கடைசி நேரம் அழைக்கப்பட்டிருந்தாலும் தெரிவாளர்களே அந்தத் தீர்மானத்தை எடுத்தனர். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது முழுமையான பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வது எனது குறிக்கோள். இன்றையத் தினமும் அதனைத் தான் செய்தேன். அதேவேளை குசல் மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் தீக்ஷன, வனிந்து ஆகியோர் மிகவும் அவசியமான நேரத்தில் விக்கெட்களை சரித்தனர். எல்லா பாராட்டுகளும் அவர்களுக்கே' உரியது என போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கமிந்து மெண்டிஸ் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை அணி 14ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களையே பெற்றிருந்தது. காமில் மிஷார (14), பெத்தும் நிஸ்ஸன்க (24), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். அதனைத் தொடர்ந்து 6ஆம் இலக்க வீரராக கமிந்து மெண்டிஸ் களம் நுழைந்த பின்னரே இலங்கை அணியின் ஆக்ரோஷம் வெளிப்பட்டது. பவர் ப்ளேயின் கடைசிப் பந்தில் பவுண்டறி அடித்த இலங்கை அடுத்த 53ஆவது பந்திலேயே பவுண்டறி அடித்தது. அதுவரை பவுண்டறிகள் இலங்கைக்கு வராத நிலையில் அந்த பவுண்டறியை கமிந்து மெண்டிஸ் அடித்தார். தொடர்ந்து அதிரடியில் இறங்கிய கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். அவரும் குசல் மெண்டிஸும் 5ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குசல் மெண்டிஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங் (6) ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மற்றைய ஆரம்ப வீரர் மார்க் அடயார் 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (58 - 2 விக்.) அடுத்து ஜோடி சேர்ந்த ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் லோக்கன் டக்கர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹெரி டெக்டரின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க வீழ்த்தினார். ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 120 ஓட்டங்களாக இருந்தபோது பென் காலிட்ஸ் (1), கெரத் டிலேனி (0), ஆகிய இருவரின் விக்கெட்களை மஹீஷ் தீக்ஷன அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். எட்டாவது ஓவரில் அடயாரின் விக்கெட்டைக் கைபற்றிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக சில ஓவர்கள் ஓய்வுபெற்றார். அவர் மீண்டும் களம் திரும்பி 2 ஒவர்களுக்கு பின்னர் 15ஆவது ஓவரில் முதல் பந்தில் மேலும் ஒரு விக்கெட்டையும் கடைசி ஓவரில் 3ஆவது விக்கெட்டை யும் கைபற்றினார். அதனைத் தொடர்ந்து எஞ்சிய 3 விக்கெட்களை துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (பட உதவி: எஸ். நாதன்) https://www.virakesari.lk/article/238174

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

1 month ago
மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே. மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார். மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களால், மீன்பிடி பெருவலைத் தொழிலில் டிராக்டர்கள் மற்றும் வின்ச்சுகளை (Winches) பயன்படுத்துவதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்தத் தற்காலிக அனுமதியை நிரந்தரமாக்கக் கோரியே மீனவர்கள் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டார். குறிப்பாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும்போது அது கடலின் அடிப்பகுதியைச் சுரண்டிச் செல்லும் ‘பாட்டம் ட்ராலிங்’ (Bottom Trawling) போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகவும், இதனால் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்க வாழ்விடங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். மேலும், கடற்கரை ஓரமாக டிராக்டர்கள் இயக்கப்படுவதால் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் சேதமடைவதோடு, கடற்கரையின் இயற்கை மணல் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், வரும் 27ஆம் தேதி வரை இது குறித்து அமைச்சு எந்தவொரு இறுதி முடிவையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கடந்த கால அமைச்சர்கள் மீனவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த அறிவியல் பூர்வமற்ற முடிவுகளின் விளைவுகளையே இன்று மீனவர்கள் அனுபவித்து வருவதாகவும் சாடினார். கடலையும் கடற்கரைச் சூழலையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு நிலையான தீர்வைக் காணத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்னகமகே மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1463777

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

1 month ago

Screenshot-2026-02-09-112223.png?resize=

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே.

மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களால், மீன்பிடி பெருவலைத் தொழிலில் டிராக்டர்கள் மற்றும் வின்ச்சுகளை (Winches) பயன்படுத்துவதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தத் தற்காலிக அனுமதியை நிரந்தரமாக்கக் கோரியே மீனவர்கள் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டார். குறிப்பாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும்போது அது கடலின் அடிப்பகுதியைச் சுரண்டிச் செல்லும் ‘பாட்டம் ட்ராலிங்’ (Bottom Trawling) போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகவும், இதனால் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்க வாழ்விடங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், கடற்கரை ஓரமாக டிராக்டர்கள் இயக்கப்படுவதால் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் சேதமடைவதோடு, கடற்கரையின் இயற்கை மணல் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், வரும் 27ஆம் தேதி வரை இது குறித்து அமைச்சு எந்தவொரு இறுதி முடிவையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கடந்த கால அமைச்சர்கள் மீனவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த அறிவியல் பூர்வமற்ற முடிவுகளின் விளைவுகளையே இன்று மீனவர்கள் அனுபவித்து வருவதாகவும் சாடினார்.
கடலையும் கடற்கரைச் சூழலையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு நிலையான தீர்வைக் காணத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்னகமகே மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1463777

பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது

1 month ago
பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றிவளைப்பின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், அவர் ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதைத் தொடர்ந்து, குறித்த வைத்தியரின் உதவியாளர் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொகையையும் வழங்குவதாகக் கூறி, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். https://athavannews.com/2026/1463760

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.

1 month ago

32350.jpg?resize=700%2C375&ssl=1

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம்.

தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாகஇ இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பதுஇ மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2026/1463787

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.

1 month ago
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை. சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம். தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாகஇ இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார். விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பதுஇ மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1463787

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

1 month ago
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது. அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது. https://athavannews.com/2026/1463740

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

1 month ago

Police.jpg?resize=750%2C375&ssl=1

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, 

சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். 

அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது.

Image

https://athavannews.com/2026/1463740

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

1 month ago
யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது 09 Feb, 2026 | 10:10 AM யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/238192

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

1 month ago

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

09 Feb, 2026 | 10:10 AM

image

யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/238192

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

1 month ago
இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம் Feb 9, 2026 - 09:41 AM இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmlenmjiq00062a6ewdxirgjn

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
நேபாளம் அணியின் பயிற்சியாளர் struart law. அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த இவர் திறமையிருந்தும் அதிஷ்டமில்லாதவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார். அதிலும் இவர் ஆட்டமிழக்காமல் 50க்கு மேல் ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக பெற்றார். 1995 இல் நடைபெற்ற இந்த போட்டியில்தான் ரிக்கி பொண்டிங்கும் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயமடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டுவர்ட் law, பிறகு அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் அக்காலத்தில் அவுஸ்திரேலியா பலம் பொருந்திய அணி. ஸ்டீவ் வோ, மார்க் வோ இரட்டையர்கள், மார்க் டெய்லர் என பல புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினார்கள். ஸ்டுவர்ட் லா , இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அக்காலத்தில் இங்கிலாந்து நாசர் குசென் ஒரு பேட்டியின் போது ஸ்டுவர்ட் law இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றால் இங்கிலாந்து அணியில் அவரைத்தான் முதலில் அணியில் எடுத்திருப்பார்கள் என்று சொல்லியிருந்தார் .

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
உலகம் முழுக்க பரந்து இருக்கிறோம். அவரவர் நேரத்திற்கேற்பதான் எல்லாமே. இதுக்காக எல்லாம் நித்திரை முழிச்சுப் போட்டியைப் பார்க்க முடியாதுதானே. இறுதிப் போட்டி என்றால் முயற்சிக்கலாம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

1 month ago
"ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,, அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
இத்தாலியின் கன்னிப் போட்டி. எப்பிடி விளையாடுகிறார்கள் என்று பார்க்க தயாரா. உதை பந்தில் சாதிப்பவர்கள் கிரிக்கட்டிலும் நுழைவது நல்லதே.