Aggregator

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

1 month ago
புதிய பிரேரணையை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்ட உறுப்புநாடுகள் 07 Oct, 2025 | 09:12 AM (நா.தனுஜா) இணையனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணையின் ஊடாக இலங்கை தொடர்பில் பேரவையும், உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கொண்டிருக்கும் ஆணை காலநீடிப்பு செய்யப்படுவது பற்றி உறுப்புநாடுகள் சில வரவேற்பு வெளியிட்ட அதேவேளை, மேலும் சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு: சீனா மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலுக்கு விரோதமாக நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நாம் நிராகரிக்கின்றோம். இப்பிரேரணையின் பிரகாரம் இலங்கை தொடர்பான ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வதன் ஊடாக எந்தவொரு பெறுபேறும் கிட்டாது. எனவே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டும். கொரியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். இம்முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பவற்றுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுமாறு வலியுறுத்துகின்றோம். ஜப்பான் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்றியமையாதனவாகும். அதன்பிரகாரம் உயர்ஸ்தானிகரின் விஜயத்துக்கு அனுமதி அளித்தமையைப் பாராட்டுகின்றோம். எதியோப்பியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தல் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளின்போது அந்நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் அதன் உள்ளக விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகள் உரியவாறு பேணப்படவேண்டும். அதன்படி இலங்கையின் விருப்பத்துக்கு முரணான வகையில் வெளியகப்பொறிமுறை மேலும் காலநீடிப்பு செய்யப்படுவது குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/227077

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

1 month ago
சுத்துமாத்து சுமந்திரன் என்றுமே….. தமிழ் இனம் சார்ந்தோ, தமிழரசு கட்சி சார்ந்தோ…. கொள்கை அளவில், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்காக நல்ல முடிவு எடுக்கும் மனிதன் கிடையாது. செய்வது முழுக்க “பின்கதவு சுத்துமாத்து” வேலைகள்தான். கடந்த காலங்களில் கூட…. ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் போன்றவர்களை…. தமிழரசு கட்சிக்கும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல், இரகசியமாக பின் கதவால் சென்று சந்தித்து விட்டு வந்து, அதனைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் “அமுசடக்கி திருடன்” போல் இருப்பது அவரின் வழமையான செயல். ஜனாதிபதிகளை பின்கதவால் சந்தித்த செய்திகள் பத்திரிகைகளில் கசிந்த பின்பு…. தான், இவர் அங்கு சென்று இரகசிய சந்திப்பு நடத்தியது வெளியே தெரிய வரும். அதே போன்று தான்… வெளி நாட்டு தூதுவர்களையும் கட்சி சார்பாக அல்லாமல், தனியாக சென்று சந்தித்து…. சந்திப்பில் என்ன விடயமாக பேசப் பட்டது என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் “இருட்டுக்குள், திருட்டு பேரம்” பேசுவதை வழமையாக கொண்ட கீழ்த்தரமான நடத்தை கொண்ட தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பிரயோசனமற்ற ஆபத்தை விளைவிக்கும் கேடு கெட்ட மனிதன்தான் சுமந்திரன். சுமந்திரன்…. காலம் காலமாக செய்து வரும், இந்தத் திருட்டுத்தனமான இரகசிய சந்திப்புக்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையோ, அல்லது ஏதாவது ஒரு முன்னேற்றமோ கிடைத்ததா என்றால்… எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலை. “தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து…. தங்களது வயிற்றை வளர்க்கும்” இந்தச் செயல் உடனடியாக, அடியோடு நிறுத்தப் பட வேண்டும். வர இருக்கும் ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக…. சுமந்திரன், பிரித்தானியாவுக்கு இரகசியமாக சென்று தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யக் கூடிய ஆள்தான் சுமந்திரன். சுமந்திரன், கடந்த காலங்களில் கூட… ஐக்கிய நாடுகள் சபையில், போர்க்குற்ற விசாரணகளுக்கு வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை, உள்ளக விசாரணையே போதும் என்றும் சொல்லி ஶ்ரீலங்கா சிங்களவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு வந்த, “தற்குறி”தான் சுமந்திரன். இப்படிப்பட்ட….. சுமந்திரன் போன்ற நாத்தம் பிடித்த அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு, ஆபத்தாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை.

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

1 month ago
அரச இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அங்கிருந்த அரச உடமைகளை திருடிச்சென்று விட்டாராம் மஹிந்தா. எங்களிடம் ஒன்றுமேயில்லை என அவரது இளைய புதல்வர் புலம்புகிறார். நாமலோ தன்னிடமுள்ளதெல்லாம் தனது மனைவியின் சொத்துக்கள் என்கிறார். மஹிந்தவோ தனக்கு வசிப்பதற்கு கொழும்பில் வீடு இல்லை என மக்களைப்பார்த்து அழுகிறார். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கை நிலையை மறக்கவில்லை என புரிகிறது. இவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி. இவர் பிச்சைப்பாட்டுப்பாடுகிறார். நாட்டில் அனிஞாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது குமுறுகிறார்கள், ஏன்? இவர்களுக்கெல்லாம் எஜமானர் இவர்கள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா? சுடுகாடாக்கி சூறையாடினார்களா? தங்கள் ஏவல் நாய்கள், தங்களை காட்டிக்கொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்கிறார்கள். இவர்களுக்கு முன் முந்திக்கொள்பவர்கள் இவர்களை காட்டிக்கொடுத்து தாம் தப்புவர். எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளை இழந்து தனிமையில் தவிப்பதுபோல் இவர்களும் தவிப்பார்கள். அதுதான் தர்மத்தின் வேலை.

தைவான் மீதான PRC படையெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடிய PLA வான்வழி பட்டாலியனை சித்தப்படுத்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ரஷ்ய திட்டங்களை கசிந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.

1 month ago
பொலிடிக்கோ மற்றும் இந்த இணையத்தளத்தினை ஒரு பிரச்சார ஊடகம் ( டீப் ஸ்ரேர்) என கூறுகிறார்கள், அதன் உண்மை தன்மை தெரியாது, உண்மையில் அப்படி ஒன்று உள்ளதா என்பதில் கூட சந்தேகமாக உள்ளது. இந்த இணையத்தளத்தின் இராணுவ ஆய்வுகள் பல மோசமான தவறான ஆய்வுகளாக உக்கிரேன் இராணுவம் தொடர்பில் கடந்த காலத்தில் வெளியிட்டதாக கூறப்படுவதுண்டு, இந்த செய்தியின் உண்மை தன்மை தெரியாது, ஆனால் மேற்கு ஊடகங்களால் பெரிதும் கூறப்படும் ஊடகமாக இருப்பதால் இந்த செய்தியினை பதிந்தேன், அத்தோடு எதிர்காலத்தில் நேரெதிர்மாறான சம்பவம் நிகழ்ந்தால் வாசகர்கள் அதன் மூலம் சரியானவற்றை அடையாளம் காண உதவுமாக இருக்கும் என்பதால் இதன் இணைத்துள்ளேன்.

ஜப்பானின் முதல் பெண் ஆளும் கட்சித் தலைவர், ஆண் ஆதிக்கம் செலுத்தும் குழுவில் தீவிர பழமைவாத நட்சத்திரம்.

1 month ago
பணச்சந்தைக்கு பங்கு சந்தைக்கு நேரெதிர் தொடர்புகள் காணப்படுவதுண்டு, 50 புள்ளி வட்டி விகித குரைப்பு அமெரிக்க பங்கு சந்தையில் ஒரே நாளில் (காலம் சரியாக நினைவில்லை) 40% ? (இந்த எண்ணிக்கையும் சரியாக நினைவில்லை) வருடாந்தர வளர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. வட்டி விகிதம் குறையும் போது பணச்சந்தையில் நாணயத்தினை விற்பார்கள் அதே வேளை பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவார்கள் அதற்கு இரண்டு காரணிகள் கூறப்படுகிறது. 1. பாதுகாப்பான பணச்சந்தை, பணமுறிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இலாபம் குறையும், அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை பங்குகளுக்கு மாற்றுவார்கள் 2. வட்டி விகிதம் குறையும் போது கடன் சுமைகள் குறையும், குறைந்த செலவில் கடனை பெறலாம் அதனால் வியாபாரங்கள் வளம்பெறும் அதனால் பங்கு சந்தை முதலீடு அதிகரிக்கும், பங்கு விலை அதிகரிக்கும். ஜப்பானிய ஜென்னினை பொதுவாக carry trade இற்கே பயன்படுத்துவார்கள் அதனால் ஜப்பான் பண வீழ்ச்சி அடையும் போது மேலும் அதனை விற்கும் நிலை காணப்படுகிறது ஆனால் பங்கு சந்தை அதிகரிப்பிற்கு இது நேரடியான பங்கினை வட்டி விகித மாற்றம் போல வகிக்காது என கருதுகிறேன் ஆனாலும் பங்கு சந்தை இதற்கு எதிர்வினையாற்றுகிறது. 2016 இலிருந்து என கருதுகிறேன் பணச்சுருக்கத்தில் இருக்கும் ஜப்பான் அண்மையிலேயே தனது பணச்சுருக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என கூறியிருந்த்து (மற்ற நாடுகள் பணவீக்கத்தில் பாதிக்கப்படும் போது) தற்போது மீண்டும் இந்த சந்தை நிகழ்வு ஜப்பானிய பொருளாதார தளம்பலை நோக்கி செல்கிறதோ என தோன்ற வைக்கிறது மீண்டும் ஒரு வட்டிவிகித குறைப்பு ஏற்படலாமோ என தோன்றுகிறது (எதுவும் உறுதியாக தெரியவில்லை அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்)

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

1 month ago
அரசியல் திருடர்களை கைது செய்தால், தெருவுக்கு இறங்கி ஊளையிடுகிறார்கள். பாதாள உலகைச் சேர்ந்தவர்களை கைது செய்தால், அது தேவையில்லை என்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்தால், பதறுகிறார்கள். கொலைகாரரை கைது செய்தால், அவர்களின் சொந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். அப்போ; இதில் எல்லாம் இவர்களுக்கு பங்குண்டு. தங்கள் ஊழல், கொலை, களவுகளை மறைக்க பயங்கரவாதிகளை அழித்தோம் என்று மக்களை திரட்டி ஏமாற்றுகிறார்கள். சந்திரிகா சொன்னார், ராஜபக்சக்கள் திருடர் என்று. ஆனால் இவர்கள் திருடர் மட்டுமல்ல கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு என்று செய்யாத வேலையே இல்லை. அரசியலுக்கு எள்ளளவும் தகுதியற்றவர்கள். தமிழரை மட்டுமல்ல, தமது அடாவடிகளை தட்டிகேட்ப்பவர்கள், விமர்ச்சிப்பவர்கள், தங்களுக்கு உதவியவர்களையே கொலை செய்து தம்மை காத்துக்கொண்டவர்கள். மக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதைப்பற்றி கணக்கெடுக்காமல், தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதை மக்களிடமிருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை காட்டி தங்களை வீரர்களாக சித்தரித்தனர். யார் எதை களவெடுக்கிறார்கள், அதை எப்படி தடுப்பது என்கிற அறிவு கூட இல்லாத முட்டாள்கள். இவர்கள் தான் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதில குட்டிச்சாத்தானுக்கு ஜனாதிபதி கனவு வேறு. இவர்களுக்குப்பின்னால் பல திருடர் பதுங்கி காத்திருக்கிறார்கள், இவர்கள் அடாவடி, அரசியல் சூழ்ச்சி செய்து தம்மையும் காப்பாறுவார்களென. முடியாவிட்டால், அரச சாட்சிகளாக மாறி தங்களை காத்துக்கொள்வார்கள்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

1 month ago
வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பிரான்சில் நிற்கின்றார், சுவிசிக்கு செல்கின்றார் என நினைக்கின்றேன். இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் இம்முறை நிகழ்வு செய்திகள் சற்று வித்தியாசமாக வரலாம். சரி பார்ப்போம்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
இந்த. பாண்டா. என்பவர். நாலு ஐந்து. மாநிலங்களில். பொறுப்பளாராக இருந்து. ஆட்சி மாற்றத்தை. எற்படுத்தியுள்ளார். அதாவது. பாரதிய. ஐனத. கட்சியை. ஆட்சியில். அமர்த்தினார். எனவே. கூட்டணி எப்படியுமிருக்கலாம். பாரதிய. ஐனத. கட்சி. தமிழ்நாட்டில். 2026. இல் ஆட்சி அமைக்கும். இனி ஓருபோதும். திமுக. தமிழ்நாட்டை ஆளாது. நாம்தமிழர். சீமான். 3%. எடுப்பார். அவர் ஒருபோதும்். தமிழ்நாட்டை. ஆளப்போவதில்லை. மோடி. இந்தியாவுக்கு. சிறந்த. பிரதமர். இதுவரை. இப்படியான. பிதமர். இந்தியாவில்்ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

1 month ago
உலக அமைதிக்கான நோபல் பரிசு⛔ மனித உரிமைக்கான நோபல் பரிசு⛔ இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

1 month ago
சினிமாக்காரர்களை கடவுளாக பார்க்கும் கூட்டம் இருக்கும் வரைக்கும் மாற்று கட்சியினர் அனைவருக்கும் வெற்றி வேட்டைதான்.

நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

1 month ago
சுமந்திரன் என்பவர் தமிழ் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் ஒரு சில நல்ல முடிவுகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என சொல்கிறார்கள். அதை விட 2009க்கு பின்னர் சமரசம் இல்லாத நல்லதொரு அழுத்தம் சிங்களத்தின் மேல் இருந்திருக்கும் எனவும் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

1 month ago
என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣 சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁 பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️ விஜய் ரசிகர்களைப்போல் நீங்களும் சளைத்தவர் இல்லை என நான் நினைக்கிறேன்.🤣 சீமான் உண்மையை பேசுகின்றவர்.எதிரியாக இருந்தாலும் திறமையை பாராட்டுகின்றவர்.அந்த வகையில் சீமான் ரஜனியை புகழ்ந்து தள்ளியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சினிமா என்ற முறையில் ரஜனி பாராட்டப்பட வேண்டியவரே.தன் சுயநல அரசியலுக்காக தன்னை தேடி வந்த மக்களையோ, நம்பியிருந்த இனத்தையோ பலிக்கடாவாக்கியவர் இல்லை இந்த சீமான்.

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

1 month ago
மத்திய பிரதேச சிந்த்வாராவை சேர்ந்தவர் கேட்கின்றார் விஷத்தன்மை கொண்ட ஆபத்தான மருந்து அது என்பதை தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்குள்ளே கண்டுபிடித்துவிட்டது ஆனால் மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? மத்திய பிரதேசத்தை பழைய காலங்களில் காங்கிரசும் கடந்த 20 வருடங்களாக பாஜகவும் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டை 58 வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்கின்றன.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
ஏதோ உங்கட சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லீட்டு போங்க...நானேன் குறுக்க நிக்கப்போறன்...😂

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

1 month ago
கடலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது சீமான் றிலக்ஸ்சாக மீன் பிடிக்கின்றார். அவரது இந்திய கடற் பரப்பில் தான் மீன் பிடிக்கின்றார். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதையே தமிழ்நாட்டு மீனவர்களும் பின்பற்ற வேண்டும் .

ஒரு கிராமமே பிரமிட் மோசடியில் சிக்கியது – மொத்தமாக கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அம்பாறை பிரதேச மக்கள் சத்தமிட்டு சாபம் விடும் நிலையில் மோசடிக்காரர்கள் குழந்தையையும் விட்டுவிட்டு ஊரிலிருந்து தப்பியோடி தலைமறைவு

1 month ago
wp-content/litespeed/avatar/2684735edbe524bb22324f0d9738aa29.jpg?ver=1759301393 Madawala News14 hours ago 0 2 minutes read wp-content/uploads/2025/10/Picsart_25-10-06_13-48-50-155-780x993.jpg அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது, அவர்களுக்கு 1,000 பத்திகள் மற்றும் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. பத்திகளை பெட்டிகளில் அடைத்து, தயாரித்து, கொண்டு வந்து ஒப்படைக்கும்போது, இந்த நிறுவனம் ரூ. 75,000 தொகையை வழங்கியுள்ளது. பன்னல்கம கிராமத்தில் தொடங்கப்பட்டு இந்த வர்த்தகத்தில், கிராமத்தில் ஏராளமான மக்கள் ரூ. 50,000 யை செலுத்தி, பத்திகளை எடுத்து, பொதிச் செய்து திருப்பி அனுப்பி, ரூ. 75,000 பெற்றுள்ளனர். இந்த வணிகம் கிராமத்திலும் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டது, இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு இடத்திலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, இந்த வணிகத்தை மேலும் விரிவுபடுத்த அந்த பிரதிநிதிகள் மூலம் பணம் பெறப்பட்டது. பின்னர், இந்த வியாபாரி அதை ரூ. 50,000 க்கு பதிலாக ரூ. 250,000 ஆக அதிகரித்து 6,000 பத்திகளையும் பெட்டிகளைக் கொடுத்தார், மேலும் பத்திகளை மீண்டும் பொதி செய்த பிறகு, ரூ. 250,000 உடன் கூடுதலாக ரூ. 150,000 கொடுத்தார். இந்த வணிகம் தங்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும் என்று நினைத்த கிராம மக்கள், தங்கள் வயல்களை அடமானம் வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் பொருட்களை அடகு வைத்து, இந்த தொழிலதிபருக்கு ரூ. 10 லட்சம், 15 லட்சம், 30 லட்சம், 40 லட்சம், 100 லட்சம் கொடுத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, பணத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காததால் சிலர் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றவர்கள் மூலப்பொருட்கள் உடனடியாக வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளனர். பின்னர், இது ஒரு பிரச்சனைக்குரிய சூழ்நிலையாக இருந்ததால், இந்த விஷயம் தொடர்பாக 2025.09.29 அன்று பன்னல்கம விஹாரையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது, மேலும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்ட மக்களும் பிரதேச சபையின் அரசியல் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். தான் அனுப்பிய பொருட்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொருட்களை திருப்பி அனுப்பியதாகவும், பிரச்சினையைத் தீர்த்து ஒரு மாதத்திற்குள் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட பணத்தை செலுத்துவதாகவும் கூறினார். இருப்பினும், 3 ஆம் திகதி மாலை, பன்னல்கம கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் பார்வையிலும் மண்ணை தூவிவிட்டு இந்தத் தொழிலை மேற்கொண்ட பன்னல்கம கிராமத்தைச் சேர்ந்த சுரங்க சதருவன் மற்றும் பியூமி புத்தினி ஜெயதுங்கா ஆகியோர் பன்னல்கம கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தையை அவர்கள் வெளியேறும்போது அவர்களுடன் அழைத்துச் செல்லவில்லை, பின்னர் அவர்களின் உறவினர் ஒருவர் குழந்தைக்கு மருந்து வாங்கச் செல்வதாகக் கூறி குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்று தாய் மற்றும் தந்தையிடம் ஒப்படைத்தார். இப்போது இந்தத் தொழிலைச் செய்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர். 2025.10.04 அன்று, அசல் பன்னல்கம கிராம மக்கள் அந்த வீடுகளுக்கு அருகில் நாள் முழுவதும் கூடினர், மேலும் அவர்களின் பணத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றதாகிவிட்டது. சில பெண்கள் அழுது, இந்தப் பணத்துடன் ஓடிப்போனவர்களை சபித்தனர். இந்த மூலப்பொருட்களை வாங்கும் போது, பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது, மேலும் பில்லை ஆய்வு செய்தபோது, அந்த ரசீதில் அவர்கள் கையொப்பமிட்டு பணம் செலுத்தியதாகத் தெரிந்தது. பணம் கொடுத்தவர்களுக்கு பணம் செலுத்தப்பட்டதை இது குறிக்கிறது. பன்னல்கம கிராமம் முழுவதும் மற்றும் தொட்டம, குமனா, பக்மிடியாவ, ஹிகுரானா, திம்பிரிகொல்ல, மடவலந்த, எக்கலோயா, உஹான அம்பாறை கொக்னஹாரா, சியம்பலாந்துவ, வெல்லவாய, மொனராகல மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்த பிரமிட் திட்டத்தில் மிகவும் நுட்பமான மோசடியுடன் சிக்கியுள்ளனர். பன்னல்கம கிராமத்தில் மட்டும், 10 லட்சம் வைப்பிலிட்ட பலர் உள்ளனர், மேலும் இந்த ஜோடி சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமண காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குழுவினர் புகார் அளித்துள்ளனர், மேலும் அதிக பணம் செலுத்தியவர்கள் அம்பாறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மோசடி புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்துள்ளனர். கிராம மக்கள் மற்றும் சில தொழிலதிபர்கள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், குடும்ப சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்தப் பண மோசடியில் சிக்கியுள்ளனர். இந்தத் தொழிலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளானவர்கள் இப்போது தப்பி ஓடிவிட்டதாகவும், தங்கள் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் இன்னும் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரதிநிதிகள் கிராம மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதன் மூலம் இந்த மோசடிக்கு உதவியுள்ளனர். இங்குள்ள சோகமான உண்மை என்னவென்றால், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் சில பெண்கள் பத்து சதவீத வட்டிக்கு பணம் கடன் வாங்கி இந்த மோசடி செய்பவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர், இப்போது அவர்களால் கடன் கொடுத்தவருக்கு பணம் கொடுக்க முடியவில்லை, மேலும் மிகவும் உதவியற்றவர்களாக உள்ளனர். சில பெண்கள் இந்தத் தொழிலுக்காக தங்கள் கணவர்களிடம் கொள்ளையடித்து பணம் கொடுத்துள்ளனர், இப்போது அந்த வீடுகளில் உள்ள கணவர்கள் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். பன்னல்கம கிராமம் முழுவதும் இப்போது ஒரே மரண ஓலம் கேட்கிறது. பன்னல்கம மக்கள் வரவிருக்கும் பருவத்தில் நெல் அல்லது மருதாணி பயிரிட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சிலர், கிராம மக்கள் இந்த வலையில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர், ஆனால் அவர்களின் அதிகப்படியான பண ஆசை காரணமாக, இந்த கிராம மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். https://madawalaenews.com/29576.html