Aggregator

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
2009 இதன்பின்புதான் தமிழன்யார்? தமிழ் பேசுபவன்யார்?? தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்??? என்பதனை அறியமுடிந்தது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month ago
ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது.. நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ... மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்.. எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்

நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - உயர் நீதிமன்றம் தானாக விசாரணை

1 month ago
விரிவானஅறிக்கை வெளிவரும்போது அதனைப் பார்க்கவோ, படிக்கவோ மனித இனம் உலகில் இருக்குமா?????? அறிவு அளவுக்குமிஞ்சிக் கூடியதால்தான் மனித இனம் அணுகுண்டைக் கண்டுபிடித்தது.☠️🫣

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

1 month ago
பாவம் அண்ணை, வயசு போன காலத்தில கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டா….. காலங்காத்தாலா கலர் கலரா கத்த வச்சிட்டானுவோ 😂 அடேய் சுமந்திரா…அண்ணனுக்கு ரத்த கொதிப்பு, மூல கொதிப்பு ஏதும் ஆச்சு… அதுக்கு நீதான் பொறுப்பு அஹங்😂

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
சம்பந்தனை அன்றி வேறு எந்த தனிமனிதரையும் பற்றி அல்ல. போரட்டத்தில் 2009 க்கு பின் தீர்வை அடைய ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தாதாக இங்கே ஒரு உருட்டு, உருட்டப்பட்டது… அதை இல்லை என நான் மறுத்து ஒரு வியாபார உதாரணத்தை சொன்னேன். அதை ஏதோ பஞ்சமாபாதகம் போல நீங்கள் எழுதினீர்கள். அப்படி இல்லை, போராட்டத்தில் வயிறு வளர்தோரே வெட்கம் இல்லாமல் உலாவும் உலகில் இப்படி ஒரு ஒப்பீட்டை செய்வது ஒண்டும் மோசமான செயல் இல்லை என எழுதினேன்.

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

1 month ago
சூரியன் எப்.எம் வானொலி முகப் புத்தக பக்கத்தில் பிள்ளையின் காயப்பட்ட பக்கங்களளை மறைக்காமல் போட்டிருக்கிறார்கள்.ரத்தக் காயங்கள், தையல் வேறு போட்டு இருக்கிறார்கள்.குறிப்பிட பட்ட ஆசிரியர் என்று சொல்லப்படுபவர் அதற்கு எந்த வித தகுதியும் அற்றவர் என்று நான் நினைக்கிறேன்.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month ago
ஒருவர் எழுதும் எழுத்தை வைத்து அவரை இனத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றி, அல்லது வேண்டுமென்றே யாரோ ஒரு அனாமதேயம் பரப்பிய வதந்தியை வைத்து என்னை வேற்று இனம் என்று கதைகட்டி வசைபாடுபவர்களால் எழுதப்படும் ஒருதலைப்பட்ச வரலாறுகள் எவ்வாறான பல வதந்திகளை வைத்து கதை கட்டி இருப்பார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள உங்களது இந்த பதிவு சாட்சி

சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

1 month ago
சிறை திரைப்படமும் எதார்த்தமும் - ஒரு அலசல் ஒவ்வொரு மனிதனுக்குள் உறைந்து கிடைக்கும் கருணையினால் இருவரின் வாழ்க்கை துவக்கி வைக்கப்படுகிறது என்பதன் ஒரு துளியை சிறைப்படத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அப்பட்டமான அத்துமீறல் அயோக்கியத்தனங்களின் ஒரு சொட்டுவை இப்படத்தில் காணலாம். சிறுபான்மையாக இருப்பவர்களின் - அது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி - அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இப்படம் காட்டுகிறது. அசாமில் மியா முஸ்லிம்களை விரட்டி அடியுங்கள் என்று சொன்னவர் மீது சூமோட்டோ வழக்கு போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் போல நாமும் இது நாள் வரை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இது பற்றிய தெளிவான பார்வையும் அதற்கான கல்வியும் பெரும்பான்மையோருக்கு கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே தெளிந்து அறியும் நுட்பத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதனும் அடைவதற்குள் அவன் அடையும் துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல. நீதியும் சட்டமும் எப்போதும் வேறு வேறாக பயணிப்பவை. இதை சிறை திரைப்படம் தெளிவாக காட்டுகிறது. பலர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களிடம் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கும் மூளை நரம்பு வெடித்து சிதறி கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடக்கிறார். இவர்களுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. இது இயற்கையின் நீதி. சட்டத்துக்கும், நீதிக்கும் மேலாக இயற்கையின் நீதி என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தூங்குவதில்லை என்பது உண்மை என இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். யாரும், எவரும் தப்பவே முடியாது. இயற்கை நீதியை மீறி இந்தப் பூமியில் வாழும் எவரும் வாழ்ந்து விட முடியாது. அடாது செய்பவன் படாது போவான் சிறை படத்தின் ஹீரோயினின் தந்தை போல. நானொரு லீகல் ஒப்பீனியன் கொடுத்த ஒரு வாடிக்கையாளரை பணபலத்தைக் காட்டி கைது செய்தார்கள். அவர்களை ஜாமீனில் எடுக்க முனைந்த போது நான் பெற்ற அனுபவங்கள் திகில் கிளப்புவை. சக மனிதனின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் சட்டம் அயோக்கியர்களுக்கு துணை போகிறது. கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கிறேன். எதிர்வாதிகள் ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ய, அவரை ஜெயிலுக்குள் முடக்கி, பயம் காட்டி தான் நினைத்ததை அடைந்து விட முயற்சித்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? பல வக்கீல்களை ஜெயிலுக்குள் அனுப்பி ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து வாங்க முயற்சித்தார்கள். அப்படி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால், ஒருவருக்கு பல வக்கீல்கள் ஜாமீன் கோருவார்கள். முதலில் யார் உண்மையான வாதியின் வக்கீல் என கோர்ட்டில் கேள்வி எழுந்திருக்கும். கோர்ட்டில் ஜாமீன் வழக்கு தள்ளிப் போயிருக்கும். அவர் ஜெயிலுக்குள்ளே கிடப்பார். அதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நடக்குமா? ஆமாம் நடந்தது. இந்தக் காரியத்தை வக்கீல்களே செய்தார்கள். அவர்களுக்கு அது அயோக்கியத்தனம் என்று தெரியும். தெரிந்தும் செய்தார்கள். இதை சட்டம் அனுமதிக்கிறது. சட்டத்தின் ஓட்டை இது. எளிதில் தப்பி விடுவார்கள். ஒருவரின் வாழ்க்கை மீது வக்கீல்களுக்கு அவ்வளவு எளக்காரம். எல்லா வக்கீல்களும் இதைச் செய்வதில்லை. கொலைக்கும் அஞ்சாத படுபாதகர்கள் வாழும் பூமி அல்லவா இது? என் மீது புகார் தெரிவித்தார் எனது ஒப்பீனியனால் பாதிக்கப்பட்டவர். என்னை முடக்கி விட வழக்கு. பொய் வழக்கு என நிரூபித்தேன். அவர் மீது நான் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையில் எனக்கிருந்த மனநிலை வேறு. பிரச்சினையை முடிக்கத்தான் நினைப்பேன். வளர்த்தால் அது எவருக்கும் நல்லதல்ல. ஒரே ஒரு நொடி யோசித்தேன். அவரை மன்னித்தேன். நான் வேறு மாதிரியான ஆள் என்றால் அவர் சாகும் வரை சிறைக்குள் கிடந்திருப்பார். எனக்கு அது தேவையில்லை. வாழ வைக்கணும் அது எவரானாலும் சரி. அதைச் செய்தேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. காகிதத்தில் குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழவும், சுதந்திரமாகப் பேசவும் ஒரே அளவிலான உரிமைகளை பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. நடைமுறையில் நிலைமை வேறு. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்தும், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்து அனுபவிக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது. இதை வெளிப்படையாகச் சொல்ல நாம் தயங்கினாலும், அதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். சட்டமும் நீதியும் வேறு வேறு. சட்டம் என்பது எழுதப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் அமல்படுத்தப்படும் ஒரு அமைப்பு. நீதி என்பது ஒரு விளைவு — அது நெறிமுறையுடனும், நியாயத்துடனும், மனிதாபிமானத்துடனும் தொடர்புடையது. சட்டம் செயல்படுத்தப்படுகிறது ஆனால் உண்மையான நீதி யாருக்கும் கிடைப்பதில்லை. சட்டம் உண்மையான நீதிக்கு தடையாக நிற்கிறது. இதற்காக பல உதாரணங்களைக் காட்டலாம். அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் - சட்டம் என்பது கொடூரங்களின் தொகுப்பு என்பதாய் நினைக்க வைத்து விடும். இந்தக் கொடூரங்களுக்கு இடையில் ஒரு துளி நீதி. அதைச் சிறை திரைப்படம் காட்டுகிறது. ஒரு மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு தூணில் தீபமேற்ற உத்தரவிடுவது சட்டம். ஆனால் அதை நிறைவேற்றினால் கலவரம் ஏற்படும் என்பதால், தடை உத்தரவு போட்டு, கலவரம் ஏற்படாமல் தடுப்பத் நீதி. அரசு நீதி பரிபாலனம் செய்கிறது. சட்டம் அதை உடைக்கிறது. இது அரசியலமைப்பை எதிர்க்கும் கருத்தல்ல; மாறாக, அதன் உயர்ந்த இலட்சியங்களை ஒரு வாழும் யதார்த்தமாக மாற்ற நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறித்து நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுவது. இந்த நடைமுறைகளை சிறைப்படம் தெளிவாக காட்டுகிறது. விசாரணைக் கைதிகள் - ஒன்றும் அறியாத அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை? பற்றி யாருக்கேனும் கவலை உண்டா? இது பற்றி கவலைப்பட வேண்டிய சிறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் அமைதியாக இருக்கின்றன. சட்டத்தின் நடைமுறைகள் காலதாமத்துக்கு காரணம். இங்கே யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவருடன் சார்புடையவன். அவன் தனியாக வாழ்ந்து விட முடியாது. அதை ஒவ்வொருவரும் உணர மறுக்கிறார்கள். பசித்திருப்பவனுக்கு உணவிடுவது ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொருவரின் துன்பத்திற்காக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவுவது வாழ்க்கை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. ஒரு உணவு டெலிவரி செய்பவரை - கீழ்மை செய்யும் நபர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எவருக்கும் நன்மை கிடைக்கவே கிடைக்காது. இவர்களைப் போன்றவர்கள் மாற வேண்டும். மதமும், மொழியும் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ உருவானவை. இப்போது அவைகள் மனிதர்களின் அழிவுக்கான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றியவர்கள் யார்? அவர்கள் ஏன் இங்கே? என்பது பற்றிய தெளிவான அறிவினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவ்சியம். அதற்கான ஒரு படி தான் கல்வி. கல்வி எல்லோருக்குமானவையாக எளிதில் கிடைப்பதாக செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஒரு படி முன்னேற வேண்டும். அதற்காக சக மனிதனின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அது ஆறறிவு பெற்ற மனிதனாலும் சரி. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக இருந்தாலும் சரி. சக உயிர்களின் துன்பத்தை நாம் சற்றே உணர வேண்டும். இங்கு வாழத்தான் பிறந்தோமே ஒழிய, பிறரை அழிக்க அல்ல என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறு செயல் - ஒரு வாழ்க்கையின் விதை - சிறையின் கதா நாயகி, கதா நாயகன் இருவரும் நம்மிடையே வாழும் பல கோடிக்கணக்கானவர்கள் தான். அவர்கள் மீது நாம் அக்கறை கொள்வோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு நாமும் ஆதாரமாய் இருப்போம். சிறை திரைப்படத்தை அனைவரும் பாருங்கள். அது நம்மை செம்மைப் படுத்தும். https://thangavelmanickadevar.blogspot.com/2026/02/blog-post_10.html @கலைஞன் அண்ணை, @தயா அண்ணையின் பழைய சொந்தக் கதைகளை சில நாட்களாக வாசித்தேன்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 month ago
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:24 PM (நெவில் அன்தனி) சென்னை சேப்பாக்கம், எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் நியூஸிலாந்து 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டது. இந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகவும் கடினமான குழு என வருணிக்கப்படும் டி குழுவில் இடம்பெறும் நியூஸிலாந்துக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமான வெற்றியாக அமைந்திருக்கும் என்பது உறுதி. தென் ஆபிரிக்காவும் இந்தக் குழுவில் இடம்பெறுகிறது. இன்றைய போட்டியில் நியூஸிலாந்தின் வெற்றியில் டிம் சீபேர்ட் குவித்த அரைச் சதமும் க்ளென் பிலிப்ஸின் சிறப்பான துடுப்பாட்டமும் நியூஸிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் சார்பாக குல்பாதின் நய்ப் குவித்த அரைச் சதம் பயனற்றுப்போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். அவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாதின் நய்ப் 35 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார். அவரை விட சிதிக்குல்லா அத்தல் (29), ரஹ்மானுல்லா குர்பாஸ் (27), டார்விஷ் ரசூல் (20) ஆகியோர் தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிகவும் கடினமான 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இரண்டாவது ஓவரில் முஜீப் உர் ரஹ்மானின் அடுத்தடுத்த பந்துகளில் பின் அலன் (1), ரச்சின் ரவிந்த்ரா (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். ஆனால், பில் சீபேர்ட், க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். க்லென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 7 புவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சீபேர்ட் 42 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மார்க் சப்மன் 28 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் செட்னர் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: பில் சீபேர்ட். https://www.virakesari.lk/article/238162

சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

1 month ago
சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு 08 Feb, 2026 | 11:02 AM (இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது. நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். லாப் நிறுவனம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பிள் தலைவர் ரஞ்சித் விதானகே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது. எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக்கொள்கிறார்கள்.நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேட்கிறோம். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார். இதற்கமை லிட்ரோ நிறுவனம் கடந்த மூன்று மாதகாலமாக விலைகளை திருத்தம் செய்யவில்லை. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1482 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238131

சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

1 month ago

சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

08 Feb, 2026 | 11:02 AM

image

(இராஜதுரை ஹஷான்)

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது.

நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

லாப் நிறுவனம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பிள் தலைவர் ரஞ்சித் விதானகே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது.

எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக்கொள்கிறார்கள்.நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேட்கிறோம். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதற்கமை லிட்ரோ நிறுவனம் கடந்த மூன்று மாதகாலமாக விலைகளை திருத்தம் செய்யவில்லை. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1482 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/238131