Aggregator

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

1 month 1 week ago

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது,

இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்." என்றது.

அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை.

30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது.

அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது." என வாதிடப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது....

https://www.vikatan.com/government-and-politics/governance/the-government-is-arguing-in-the-madurai-high-court-regarding-the-thiruparankundram-issue

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

1 month 1 week ago
திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்." என்றது. அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது." என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.... https://www.vikatan.com/government-and-politics/governance/the-government-is-arguing-in-the-madurai-high-court-regarding-the-thiruparankundram-issue

வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

1 month 1 week ago
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்! வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர், யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக் காரைதீவில் அமைந்துள்ள சென். அந்தோனிஸ் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலேயே தோற்றுகின்றனர். எழுவைதீவிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருப்பதால், அவை பரீட்சை நிலையங்களாகப் பேணப்படவில்லை. புள்ளிவிவரப்படி, 2022இல் 10 மாணவர்களும், 2023இல் 8 மாணவர்களும், 2024இல் 5 மாணவர்களுமே சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படாமல், மிக அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்களுக்குக் காரைதீவுத் தீவில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அதேபோல், தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடத்தில் தமிழ் மன்னர்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது. பத்தாம் தரத்தின் ஏழாவது பாடத்தில் அதற்கென ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தாம் தரத்தின் பத்தாவது பாடத்தில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஓர் அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த காலம் குறித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், நாம் தற்போது ஆறாம் ஆண்டுக்கான வரலாறு பற்றிய புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளதுடன், அதில் சங்கிலி இராச்சியத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கும்போது சிங்களம் மற்றும் தமிழ் எனப் பிரித்துக் கற்பிக்கப்படுவதில்லை. இலங்கையின் வரலாறு என்ற வகையில் பல்வேறு காலப் பகுதிகளில் மன்னர்கள் மற்றும் இராச்சியங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன. இலங்கையின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் முன்னோடியான தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தமிழர் வரலாற்றைக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்சிக்கூடங்களில் இடங்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கல் புராதனப் பொருட்கள் கூடங்களில், நான்கு தமிழ்த் தூண் கல்வெட்டுகளும், இரண்டு தமிழ்க் கல்வெட்டுக் கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இந்தியாவின் இராசராச மற்றும் இராஜேந்திராதிராச மன்னர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாலும் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியர்களாலும் நிறுவப்பட்ட கல்வெட்டுகளாகும். மேலும், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு நூல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவினால் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்த சிவன், பார்வதி, நடராசர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கல் மற்றும் வெண்கலச் சிலைகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, யாழ்ப்பாண இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களின் தொகுப்பு ஒன்று பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் குறித்து கலாநிதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேனரத் விக்ரமசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சித்திரக்கலை பாடமானது நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் சிறந்த கலைப் படைப்புகளைக் கற்பதற்கான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும்போது குறிப்பாகச் சர்வ தேசிய, சர்வ மத மற்றும் சர்வ பௌதிக கலைப் படைப்புகளை உள்ளடக்கிய சர்வதேசத் தரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. அத்தோடு, சித்திரக்கலை பாடத்தின் மறுசீரமைப்பின்போது இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார். https://athavannews.com/2025/1455104

வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

1 month 1 week ago

Harini.png?resize=750%2C375&ssl=1

வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர், 

யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. 

1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை. 

இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக் காரைதீவில் அமைந்துள்ள சென். அந்தோனிஸ் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலேயே தோற்றுகின்றனர். 

எழுவைதீவிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருப்பதால், அவை பரீட்சை நிலையங்களாகப் பேணப்படவில்லை. புள்ளிவிவரப்படி, 2022இல் 10 மாணவர்களும், 2023இல் 8 மாணவர்களும், 2024இல் 5 மாணவர்களுமே சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். 

எனவே, இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படாமல், மிக அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்களுக்குக் காரைதீவுத் தீவில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

அதேபோல், தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடத்தில் தமிழ் மன்னர்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் தரத்தின் ஏழாவது பாடத்தில் அதற்கென ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தாம் தரத்தின் பத்தாவது பாடத்தில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஓர் அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த காலம் குறித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், நாம் தற்போது ஆறாம் ஆண்டுக்கான வரலாறு பற்றிய புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளதுடன், அதில் சங்கிலி இராச்சியத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கும்போது சிங்களம் மற்றும் தமிழ் எனப் பிரித்துக் கற்பிக்கப்படுவதில்லை. 

இலங்கையின் வரலாறு என்ற வகையில் பல்வேறு காலப் பகுதிகளில் மன்னர்கள் மற்றும் இராச்சியங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன.

இலங்கையின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் முன்னோடியான தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தமிழர் வரலாற்றைக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்சிக்கூடங்களில் இடங்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கல் புராதனப் பொருட்கள் கூடங்களில், நான்கு தமிழ்த் தூண் கல்வெட்டுகளும், இரண்டு தமிழ்க் கல்வெட்டுக் கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இந்தியாவின் இராசராச மற்றும் இராஜேந்திராதிராச மன்னர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாலும் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியர்களாலும் நிறுவப்பட்ட கல்வெட்டுகளாகும். மேலும், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு நூல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவினால் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்த சிவன், பார்வதி, நடராசர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கல் மற்றும் வெண்கலச் சிலைகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இவை தவிர, யாழ்ப்பாண இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களின் தொகுப்பு ஒன்று பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் குறித்து கலாநிதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேனரத் விக்ரமசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சித்திரக்கலை பாடமானது நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் சிறந்த கலைப் படைப்புகளைக் கற்பதற்கான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும்போது குறிப்பாகச் சர்வ தேசிய, சர்வ மத மற்றும் சர்வ பௌதிக கலைப் படைப்புகளை உள்ளடக்கிய சர்வதேசத் தரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. 

அத்தோடு, சித்திரக்கலை பாடத்தின் மறுசீரமைப்பின்போது இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1455104

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

1 month 1 week ago
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு! நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர். 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், குருநாகலையில் 53 இறப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் இன்னும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர். https://athavannews.com/2025/1455085

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

1 month 1 week ago

1764766618-dead_L.jpg?resize=650%2C375&s

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர்.

448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதே நேரத்தில், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், குருநாகலையில் 53 இறப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் இன்னும் பேரிடர் காரணமாக காணாமல் போயுள்ளனர்.

https://athavannews.com/2025/1455085

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 month 1 week ago
நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் December 2, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால் பேரிடருக்கு உள்ளாகியிருக்கின்ற நிலைவரத்துக்கு மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன.. விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 வது பிறந்த தினமான நவம்பர் 26 புதன்கிழமை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களில் அவரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. போரில் பலியானவர்களை நினைவுகூருவதன் பேரில் விடுதலை புலிகளை புகழ்ந்து போற்றும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பிரபாகரனின் பிறந்ததினக் கொண்டாட்டங்களை தடுப்பதற்கு பொலிசாரோ அல்லது படையினரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இரண்டாவது தடவையாக கொண்டாடப்பட்ட மாவீரர் வாரம் இதுவாகும். இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையில் இலங்கை தமிழரசு கட்சியின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கார்த்திகைப்பூவின் முன்னால் தீபமேற்றி நினைவேந்தல் செய்து படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர். முன்னென்றுமில்லாத வகையில் இந்தத் தடவை பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற வேளைகளில் மாவீரர்களை நினைவேந்திய வண்ணமே தங்களது பேச்சுக்களை ஆரம்பித்தையும் பிரபாகரனுக்கு பிறந்ததின வாழ்த்துக் கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தோ எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவுமில்லை. கடந்த வருடமும் கூட மாவீரர்வாரக் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த வருடத்தை விடவும் இந்த தடவை கொண்டாட்டங்களில் கூடுதலான அளவுக்கு உத்வேகத்தை காணக் கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசு கட்சியும் நினைவேந்தல்களில் தீவிரமாக பங்கேற்றன. முன்னர் இத்தகைய நினைவேந்தல்களில் பெருமளவுக்கு அக்கறை காட்டாத தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்களும் கூட கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகரும் மாவீரர்களை நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த வழிகாட்டியாகச் செயற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனக்கு (ஜே.வி.பி.) தமிழ் மக்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் செய்தததையும் காணக்கூடியதாக இருந்தது. எது எவ்வாறிருந்தாலும், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களை எந்தவிதமான இடையூறுமின்றி சுதந்திரமாக நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதித்தது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு செயலாகும். ஜே.வி. பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர உட்பட அரச படைகளினால் கொல்லப்பட்ட தங்களது முன்னைய தலைவர்களையும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் பலியான இயக்க உறுப்பினர்களையும் வருடாந்தம் நினைவேந்தல் செய்து வரும் அரசாங்கத் தலைவர்கள் உள்நாட்டுப்போரில் உயிர்தியாகம் செய்த தமிழ்ப் பேராளிகளும் பலியான மக்களும் நினைவுகூரப்படுவதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல என்ற தர்க்கநியாயத்தின் அடிப்படையிலேயே மாவீரர்தின நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்க தாங்களாகவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனலாம். ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ‘நவம்பர் வீரர்கள் தினத்தை’ அனுஷ்டித்து வருகிறது. விஜேவீர கொழும்பில் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதால் வருடாந்தம் அன்றைய தினத்தில் அவர்கள் நினைவு நிகழ்வை நடத்திவருகிறார்கள். இறுதியாக இரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 14 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையில் நவம்பர் வீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. அதேவேளை, மாவீரர் தினத்தை விடுதலை புலிகள் 1989 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கத் தொடங்கினர். அரசாங்க படையினருடனான மோதலில் முதன்முதலாக இயக்கப் போராளி (சங்கர் என்ற சத்தியநாதன்) 1982 நவம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்ட காரணத்தினால் மாவீரர் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதற்கு அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்தனர். பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 26 ஆம் திகதியாகும். முதலாவது மாவீரர்தினம் முல்லைத்தீவு காட்டுக்குள் அனுஷ்டிக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கில் இந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் 1990 மார்ச் மாதம் முற்றாக வெளியேறியதை தொடர்ந்து விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பகுதிகளில் மாவீரர்தின நிகழ்வுகளை விரிவுபடுத்தினர். அந்த தினத்தில் பிரபாகரன் முக்கியமான உரையை நிகழ்த்துவதும் வழக்கமாக இருந்தது. 2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர்தின நிகழ்வுகளை பகிரங்கமாக நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், சில சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன. ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து படிப்படியாக விரிவான முறையில் அந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுவந்தன. தற்போது பரந்தளவில் மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டுவரும் மாவீரர் வார நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் காணாமல் போனோரினதும் உயிரிழந்த போராளிகளினதும் குடும்பங்களும் இதுவரையில் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் கவலையையும் வேதனையையும் வெளிக்காட்டுவதற்கு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் அணிதிரண்டு பங்கேற்கிறார்கள். ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் இருக்கும் தமிழ்க் கட்சிகள் தியாகங்களும் அழிவுகளும் நிறைந்த போராட்டகால நினைவுகளுடன் தமிழ் மக்களைக் பிணைத்து வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன. பல தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நினைவேந்தல்களே அவை முன்னெடுக்கின்ற பிரதான அரசியல் செயற்பாடுகளாக இருக்கின்றன. தங்கள் சொந்தத்தில் கொள்கைகளை வகுத்து தமிழ் மக்களை வழிநடத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கட்சிகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளின் உதவியுடன் கடந்த காலப் போராட்டங்களை நினைவுபடுத்துவதில் காலத்தைக் கடத்துகின்றன. விஜேவீரவோ அல்லது பிரபாகரனோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் போராட்டத்தை எவரும் தொடர முடியாது. அரசியல் யதார்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்ட ஜே.வி.பி.யினர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பாராளுமன்ற அரசியலின் மூலமாக இன்று அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டனர். விஜேவீரவை வருடம் ஒருமுறை நினைவு கூருவதை தவிர, அவரது கொள்கைகளைப் பற்றி அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை. தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன் இன்று ஆட்சியை நடத்துகின்ற ஜே.வி.பி. தலைவர்கள் பழைய கொள்கைகள் பலவற்றைக் கைவிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். விஜேவீர அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்தார். ஆனால், தோற்கடிக்கப்பட்ட பிறகு புதிய சூழ்நிலைகளில் அரசியலில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை அவரின் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், பிரபாகரனின் இயக்கத்தைப் பொறுத்தவரை, அவ்வாறு மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தின் பழைய போராளிகள் சிலர் சேர்ந்து அமைத்த அரசியல் கட்சி ஒன்று தற்போது ஜனநாயக அரசியலில் இருக்கிறது. ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்த எவரையும் தமிழ் மக்கள் பிரதேச சபைக்குத் தானும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை. இத்தகைய பின்புலத்தில், நினைவேந்தல் அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை எதுவரைக்கும் கொண்டுசெல்ல முடியும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேணடும். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நினைவேந்தலை முதன்மைப்படுத்துவதாகவே தமிழர் அரசியல் விளங்குகிறது. இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை. அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள். இறுதியாக, மாவீரர்வாரத்தை சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதித்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கு பெரியதொரு விட்டுக்கொடுப்பைச் செய்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்க தலைவர்கள் நினைக்கக்கூடாது. இன்று அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான மாகாணசபைகள் முறையை புதிய அரசியலமைப்பில் ஒழித்துவிடப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆபத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டும். கற்பனையில் காலத்தைக் கடத்தினால் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும். https://arangamnews.com/?p=12467

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 month 1 week ago

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும்

December 2, 2025

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால்  பேரிடருக்கு  உள்ளாகியிருக்கின்ற  நிலைவரத்துக்கு  மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன..

விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 வது பிறந்த தினமான நவம்பர் 26 புதன்கிழமை வடக்கு,  கிழக்கில் பல்வேறு இடங்களில்  அவரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. போரில் பலியானவர்களை நினைவுகூருவதன் பேரில் விடுதலை புலிகளை புகழ்ந்து போற்றும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பிரபாகரனின் பிறந்ததினக் கொண்டாட்டங்களை தடுப்பதற்கு பொலிசாரோ அல்லது படையினரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இரண்டாவது தடவையாக கொண்டாடப்பட்ட மாவீரர் வாரம் இதுவாகும்.  இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையில் இலங்கை தமிழரசு கட்சியின்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கார்த்திகைப்பூவின் முன்னால் தீபமேற்றி நினைவேந்தல் செய்து படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.  முன்னென்றுமில்லாத வகையில் இந்தத் தடவை பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின்  உறுப்பினர்கள் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற வேளைகளில்  மாவீரர்களை நினைவேந்திய வண்ணமே தங்களது பேச்சுக்களை ஆரம்பித்தையும் பிரபாகரனுக்கு பிறந்ததின வாழ்த்துக் கூறியதையும்  காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தோ எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவுமில்லை. 

கடந்த வருடமும் கூட மாவீரர்வாரக் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த வருடத்தை விடவும் இந்த தடவை கொண்டாட்டங்களில் கூடுதலான அளவுக்கு உத்வேகத்தை காணக் கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில்  தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசு கட்சியும் நினைவேந்தல்களில் தீவிரமாக பங்கேற்றன. முன்னர் இத்தகைய நினைவேந்தல்களில் பெருமளவுக்கு அக்கறை காட்டாத தமிழரசு கட்சியின் பொதுச்  செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்களும் கூட கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகரும் மாவீரர்களை நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த வழிகாட்டியாகச்  செயற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனக்கு  (ஜே.வி.பி.) தமிழ் மக்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் செய்தததையும் காணக்கூடியதாக இருந்தது.

எது எவ்வாறிருந்தாலும், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களை  எந்தவிதமான இடையூறுமின்றி சுதந்திரமாக நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதித்தது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு செயலாகும். 

ஜே.வி. பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர உட்பட அரச படைகளினால் கொல்லப்பட்ட  தங்களது முன்னைய தலைவர்களையும்  இரு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் பலியான இயக்க உறுப்பினர்களையும் வருடாந்தம் நினைவேந்தல் செய்து வரும் அரசாங்கத் தலைவர்கள் உள்நாட்டுப்போரில் உயிர்தியாகம் செய்த தமிழ்ப் பேராளிகளும் பலியான மக்களும் நினைவுகூரப்படுவதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல  என்ற தர்க்கநியாயத்தின் அடிப்படையிலேயே  மாவீரர்தின நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்க தாங்களாகவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனலாம்.

ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ‘நவம்பர் வீரர்கள் தினத்தை’ அனுஷ்டித்து வருகிறது. விஜேவீர கொழும்பில் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதால் வருடாந்தம் அன்றைய தினத்தில் அவர்கள் நினைவு நிகழ்வை நடத்திவருகிறார்கள். இறுதியாக இரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 14 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி  அநுர குமார திசநாயக்க தலைமையில் நவம்பர் வீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. 

அதேவேளை, மாவீரர் தினத்தை விடுதலை புலிகள் 1989 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கத் தொடங்கினர். அரசாங்க படையினருடனான மோதலில் முதன்முதலாக இயக்கப் போராளி (சங்கர் என்ற சத்தியநாதன்) 1982 நவம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்ட காரணத்தினால் மாவீரர் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதற்கு அன்றைய தினத்தை  அவர்கள் தெரிவு செய்தனர். பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 26 ஆம் திகதியாகும். 

முதலாவது மாவீரர்தினம் முல்லைத்தீவு காட்டுக்குள் அனுஷ்டிக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கில் இந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் 1990 மார்ச் மாதம் முற்றாக வெளியேறியதை தொடர்ந்து விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பகுதிகளில் மாவீரர்தின நிகழ்வுகளை விரிவுபடுத்தினர். அந்த தினத்தில் பிரபாகரன் முக்கியமான உரையை நிகழ்த்துவதும் வழக்கமாக இருந்தது. 

2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர்தின நிகழ்வுகளை பகிரங்கமாக நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், சில சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன.  ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து படிப்படியாக விரிவான முறையில் அந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுவந்தன. தற்போது பரந்தளவில் மக்களின் பங்கேற்புடன்  நடத்தப்பட்டுவரும் மாவீரர் வார நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களும்  காணாமல் போனோரினதும்  உயிரிழந்த போராளிகளினதும்  குடும்பங்களும் இதுவரையில் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில்  கவலையையும் வேதனையையும் வெளிக்காட்டுவதற்கு  நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் அணிதிரண்டு  பங்கேற்கிறார்கள். 

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற  முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் இருக்கும் தமிழ்க் கட்சிகள்  தியாகங்களும் அழிவுகளும் நிறைந்த போராட்டகால நினைவுகளுடன் தமிழ் மக்களைக் பிணைத்து வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன. பல தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நினைவேந்தல்களே அவை  முன்னெடுக்கின்ற பிரதான அரசியல் செயற்பாடுகளாக இருக்கின்றன. தங்கள் சொந்தத்தில் கொள்கைகளை வகுத்து தமிழ் மக்களை வழிநடத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கட்சிகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளின் உதவியுடன் கடந்த காலப் போராட்டங்களை நினைவுபடுத்துவதில் காலத்தைக் கடத்துகின்றன.

விஜேவீரவோ அல்லது பிரபாகரனோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் போராட்டத்தை எவரும்  தொடர முடியாது. அரசியல் யதார்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்ட ஜே.வி.பி.யினர்   ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து   பாராளுமன்ற அரசியலின் மூலமாக இன்று அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டனர். விஜேவீரவை வருடம் ஒருமுறை நினைவு கூருவதை தவிர,  அவரது கொள்கைகளைப் பற்றி அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை.

தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன் இன்று ஆட்சியை நடத்துகின்ற ஜே.வி.பி. தலைவர்கள் பழைய கொள்கைகள் பலவற்றைக் கைவிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். 

விஜேவீர அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக  இரு  ஆயுதக் கிளர்ச்சிகளை  வெவ்வேறு காலகட்டங்களில்  முன்னெடுத்தார். ஆனால், தோற்கடிக்கப்பட்ட பிறகு புதிய சூழ்நிலைகளில் அரசியலில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை அவரின் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

 பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், பிரபாகரனின் இயக்கத்தைப் பொறுத்தவரை, அவ்வாறு மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. விடுதலை புலிகள் இயக்கம்  இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தின் பழைய போராளிகள் சிலர் சேர்ந்து அமைத்த அரசியல் கட்சி ஒன்று தற்போது ஜனநாயக அரசியலில் இருக்கிறது.  ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்த எவரையும் தமிழ் மக்கள் பிரதேச சபைக்குத் தானும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை. 

இத்தகைய பின்புலத்தில்,   நினைவேந்தல் அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை எதுவரைக்கும் கொண்டுசெல்ல முடியும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேணடும். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நினைவேந்தலை முதன்மைப்படுத்துவதாகவே தமிழர் அரசியல் விளங்குகிறது. 

இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை.  அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள். 

இறுதியாக, மாவீரர்வாரத்தை சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதித்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கு பெரியதொரு விட்டுக்கொடுப்பைச் செய்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்க தலைவர்கள் நினைக்கக்கூடாது. இன்று அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான மாகாணசபைகள் முறையை புதிய அரசியலமைப்பில் ஒழித்துவிடப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆபத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள்  செயற்பட வேண்டும். கற்பனையில் காலத்தைக் கடத்தினால் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும்.

https://arangamnews.com/?p=12467

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

1 month 1 week ago
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்! தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன். நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது. சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது. 1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின் பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார். அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார். சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார். அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம். https://athavannews.com/2025/1455129

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

1 month 1 week ago

New-Project-53.jpg?resize=750%2C375&ssl=

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன்.

நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். 

இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது.

சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். 

இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால்  காலமானார். 

அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். 

இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது.

1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின்  பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். 

தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார்.

அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார்.

சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. 

அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார்.

அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம்.

https://athavannews.com/2025/1455129

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

1 month 1 week ago
மலையகம்: பேரழிவும் மீட்சியும் Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகிறது. கடந்த தசாப்தங்களில், நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகள், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகள் ஆண்டுதோறும் நிலச்சரிவு அபாயத்தின் கீழ் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில், ‘திட்வா’ போன்ற தீவிர இயற்கைப் பேரழிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூக உட்கட்டமைப்பையும் கடுமையாகச் பாதிக்கும் ஒரு புறச் சக்தியாக எழுந்துள்ளன. திட்வா சூறாவளி (Cyclone Ditwah), சடுதியான தீவிரமடைந்து, இலங்கையின் மீது நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இலங்கை முழுவதும் அசாதாரணமான அளவில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் முக்கியமாக மத்திய மலை நாட்டின் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை கடுமையாகப் பாதித்தது. இந்த மாவட்டங்களே இலங்கையின் பெருந்தோட்டங்களை மையப்படுத்திய மலையக சமூகம் செறிந்து வாழும் தோட்டப் பகுதிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் அதிக கனமழை, ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் இருந்த இச்சமூகத்தின் குடியிருப்புகளைத் தாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திட்வாவின் தாக்கத்தினால் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் 15,000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்தன.இந்தப் பேரழிவு பல சமூகங்களை பாதித்தாலும், இலங்கையின் சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகங்களின் மீது திட்வாவின் தாக்கம் அசமத்துவமான அளவில் அதிகமாக இருந்தது. எனவே, இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன, நிலச்சரிவுகளின் தாக்கம்: திட்வா சூறாவளியைத் தொடர்ந்து மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் காயங்களின் அளவையும் ஆவணப்படுத்துதல். குடியிருப்புகளின் அழிவு: பாரம்பரிய லயன் அறைகள் (Line Rooms) மற்றும் தோட்டக் குடியிருப்புகள் மீது ஏற்பட்ட அழிவின் அளவை மதிப்பீடு செய்தல். இழப்பீட்டுப் பொறிமுறைகள்: அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரண மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் (Compensation Schemes) அணுகல், அமுலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்வது. நீடித்த தாக்கம்: பேரழிவின் விளைவாக இச்சமூகங்களின் வாழ்வாதாரத்தில் (Livelihood) ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்புகளைப் பகுப்பாய்வு செய்தல். இந்த ஆய்வின் முக்கியத்துவமானது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை ஆவணப்படுத்துதல் மற்றும் கொள்கை வகுப்பவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். அதாவது, திட்வா சூறாவளியால் மலையக சமூகம் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள், இழப்பு மற்றும் சேதத்தின் (Loss and Damage) அளவை ஒரு முறையான ஆவணப்படுத்துதல், அதேபோல் காலநிலை மாற்றத்தின் தாக்கம், வரலாற்று ரீதியிலான சமூக, பொருளாதார ஒடுக்குமுறையுடன் எவ்வாறு இணைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான சுமையை அதிகரிக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல், மற்றும் எதிர்காலத்தில் காலநிலை சார்ந்த பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), மீள்குடியேற்றம் (Resettlement) மற்றும் இழப்பீடு வழங்கும் பொறிமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் களைய, வலுவான மற்றும் சமூகநீதி சார்ந்த பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். வரலாற்று ரீதியிலான பாதிப்பு மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்த மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தபோதிலும், சமூக, பொருளாதார ரீதியில் நீடித்த பாதிப்புக்குள்ளானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஆரம்பம் முதலே அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் உரிய ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களால் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது இவர்களை நாடற்றவர்களாகவும், இலங்கையின் சமூக அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்கியது. இவர்களின் குடியிருப்பு ‘லயன் அறைகள்’ 150 ஆண்டுகளுக்கும் மேலானவை, மிகக் குறைந்த கட்டமைப்புத் தரம் கொண்டவை, மேலும் அதிக மழை மற்றும் காற்றைத் தாங்கும் வலிமையற்றவை.தோட்டத் தொழிலாளர்கள் இந்த லயன் அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாலும், இந்த நிலம் பெரும்பாலும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானது. இதனால், இவர்களுக்குத் தங்கள் வசிப்பிடத்தின் மீதான நிரந்தர உரிமையும் (Tenure Rights), நில ஆவணங்களும் (Land Deeds) இல்லை. இந்த வீட்டுரிமைப் பிரச்சினை, பேரழிவுக் காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற உதவியைப் பெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இவர்களின் வரலாற்று வறுமை (ஏனைய சமூகங்களை விடக் குறைவான வருமானம் மற்றும் அதிக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்தல்), நிரந்தரமற்ற வசிப்பிடம் மற்றும் வீட்டுரிமையின்மை ஆகியவை, திட்வா போன்ற பேரழிவுகளின் போது இவர்களின் பாதிப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன. மலையகத் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் குறிப்பாக செங்குத்தான மலைச் சரிவுகளிலும், நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பே, அவர்களை இயற்கைப் பேரழிவுகளுக்கு மிகவும் ஆளாக்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைநீர் விரைவாக வெளியேற முடியாத பாறைகள் மற்றும் களிமண் கலந்த சரிவுகளில் காணப்படுகின்றன. லயன் அறைகள் அமைக்கப்படும் இடங்கள் நீடித்த குடியிருப்புகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சியின் போது, மண் அதிக நீரை உறிஞ்சி, அதன் இறுக்கத்தை இழக்கிறது. இதனால், செங்குத்தான சரிவுகளில் உள்ள லயன் அறைகள் மீது நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல தோட்டப் பகுதிகளை உயர்ந்த அபாய வலயங்களாக (High-Risk Zones) வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும், மழைக்காலங்களில் நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மண் அரிப்பை (Soil Erosion) விரைவுபடுத்துகின்றன, இது நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் அளவு (சில பகுதிகளில் 400 மி.மீ.க்கு மேல்), இந்த அபாயங்களை ஒரு பேரழிவாக மாற்றியது. வாழ்வாதாரத்தின் தன்மை மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரம் (Livelihood) ஏறத்தாழ தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தே உள்ளது. இந்த ஒற்றைச் சார்புத் தன்மை, அவர்களைப் பேரழிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவைப் பொறுத்தே பெரும்பாலும் அவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. தோட்ட வேலை பாதிக்கப்படும்போது, அவர்களின் அன்றாட வருமானம் உடனடியாக நின்றுவிடுகிறது. திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தேயிலைத் தோட்டப் பயிர்கள், தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் பெருந்தோட்ட வீதிகள் என்பவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்தச் சேதங்கள் நீண்டகாலத்திற்குத் தேயிலைத் தோட்டச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. தங்கள் வீடுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வேலையையும் இழந்த தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கும், மீண்டு வருவதற்கும் நீண்டகாலம் எடுக்கும். இது இவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் (Deeper Poverty Cycle) தள்ளுகிறது. உதாரணமாக, ஒரு சில நாட்கள் வேலை இழந்தால் கூட, அது குடும்பத்தின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை நேரடியாகப் பாதிக்கிறது. பேரிடர் காலங்களில் சமூகத்தின் தயார்நிலை மற்றும் அணுகல் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், மலையகச் சமூகங்களின் தயார்நிலை (Preparedness) மற்றும் உதவிகளை அணுகும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. தோட்டப் பகுதிகளுக்கான நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் பெரும்பாலும் தேசிய மொழிகளிலோ (சிங்களம், தமிழ்) அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தத் தகவல் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில், தெளிவான முறையில், அவர்களது உள்ளூர் மட்டத்தில் சென்றடைவதில்லை. தகவல் தொடர்பில் உள்ள இடைவெளிகள் காரணமாக, பலர் அபாயங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் அல்லது தாமதமாகவே வெளியேற முற்படுகிறார்கள்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் போது, தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், அருகிலுள்ள பாதுகாப்பான வெளியேற்ற மையங்கள் (Evacuation Centers) பாடசாலைகள், சமூக மண்டபங்கள் பெரும்பாலும் போதிய இடவசதி, அடிப்படைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மனிதாபிமான உதவி வரும்போது, அது பொதுவாக உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தடங்கல்களால் மெதுவாகவே சென்றடைகிறது. நாடற்றவர்களாக வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, இச்சமூகத்தினர் அதிகார மட்டத்தில் தங்கள் தேவைகளைக் கோருவதிலும், நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் உள்ள சவால்கள் அதிகம். திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட அசாதாரணமான கனமழை (பல பகுதிகளில் 400 மி.மீ முதல் 500 மி.மீ வரை), இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகளைத் தூண்டியது. இந்த நிலச்சரிவுகளே, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீதான திட்வாவின் மிகக் கொடூரமான நேரடித் தாக்கமாக அமைந்தது. திட்வா சூறாவளியின் மையப்பகுதிகளில் ஒன்றான நுவரெலியாவில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் போன்ற தோட்டப் பகுதிகளில் பெரிய நிலச்சரிவுகள் பதிவாகின. இங்குள்ள செங்குத்தான சரிவுகளில் லயன் அறைகள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்ததால், பல குடும்பங்கள் விடியலுக்கு முன்னர் உயிருடன் புதைக்கப்பட்டன. அதேபோல் ஊவா மாகாணத்தின் அமைந்துள்ள தோட்டப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தின. மீரியபெத்தை போன்ற வரலாற்று ரீதியிலான நிலச்சரிவு அபாயப் பகுதிகளில், மீண்டும் பல சிறிய மற்றும் நடுத்தர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளின் போது, அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. இதனால், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் உயிரிழந்த சோக நிகழ்வுகள் பல தோட்டப் பகுதிகளில் ஆழமான சமூக வடுவை ஏற்படுத்தின. திட்வா சூறாவளியின் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக, மலையக சமூகத்தின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள லயன் அறைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கால் முழுமையாக இடிந்து, பயன்படுத்த முடியாதவையாகின. அதிகமான லயன் அறைகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுவர்கள், கூரைகள், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவை சேதமடைந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீடுகளை இழந்த சுமார் 2 இலட்சம் மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் (பாடசாலைகள், சமூக மண்டபங்கள், கோவில் வளாகங்கள்) தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தனியுரிமை (Privacy) ஆகியவை பெரும் சவால்களாக அமைந்தன. இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்பதால், நீண்டகால மீள்குடியேற்றத்தின் அவசியம் உடனடியாக உணரப்பட்டுள்ளது. பல தோட்டப் பாடசாலைகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதால்,மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவுகளாலும், வெள்ளத்தினாலும் பிரதான வீதிகள், தோட்ட வீதிகள் மற்றும் புதையிரத பாதைகள் பெரும் சேதமடைந்துள்ளன. தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் மற்றும் கால்வாய்கள் அழிந்ததால், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. வாழ்வாதார மற்றும் பொருளாதார இழப்புகள் மலையகச் சமூகத்தின் வாழ்வாதாரமான தேயிலைத் தோட்டத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகள், இந்த பேரழிவின் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டப் பயிர்கள் நிலச்சரிவுகளால் புதைந்து போயின. குறிப்பாக இளம் தேயிலை நாற்றுக்கள் முழுமையாக அழிந்தன. அதேபோல் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தோட்டக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது வேலையின்றி இருக்க நேரிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பெரும்பாலும் அன்றாடத் தேயிலை பறிக்கும் அளவைச் சார்ந்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால், இவர்களின் அன்றாட வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை உடனடியாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் பசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இன்றும் தவிக்கின்றனர். தேயிலை அல்லாத சிறிய அளவிலான உணவுப் பயிர்கள் (உதாரணமாக, மரக்கறிகள், உருளைக்கிழங்கு) மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடும்பங்களின் சிறிய அளவிலான கால்நடைகள் (மாடுகள், கோழிகள், ஆடுகள்) வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் உயிரிழந்தன. இந்த இழப்புகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சொத்து இருப்பை மேலும் சிதைத்துள்ளன. இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றச் சவால்கள் திட்வா சூறாவளியால் மலையகத் தமிழ்ச் சமூகம் அனுபவித்த பேரழிவுக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளில், அரசாங்கத்தின் இழப்பீட்டுப் பொறிமுறைகளை அணுகுவது தற்போது ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது. அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இச்சமூகத்தின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடுகளையும் வழங்குவதற்கான பல திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், இந்தப் பொறிமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.பேரழிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணமும் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகங்கள் (Divisional Secretariats) மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் மற்றும் ஆரம்ப நிதி உதவிகள் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மாகாண மற்றும் பிரதேச செயலகங்கள் வழியாக, தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையும் இந்தச் சங்கிலி சிக்கலாகவும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, அனுமதி வழங்குவது மற்றும் நிதி விடுவிப்பது ஆகியவை தாமதமாகின்றன. சேதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒட்டுமொத்த தேவைகளை ஈடுசெய்யப் போதாமல் இருக்கிறது. இதனால், உதவிகள் பல குடும்பங்களுக்குக் குறைவான அளவிலேயே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தோட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளாலும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் சவால்கள் உள்ளதாக சமூக அமைப்புகள் ஆரம்ப காலங்களிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளன. இவ்வாறான சவால்கள் இம்முறையும் ஏற்படலாம். இழப்பீட்டை வெற்றிகரமாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகள், இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. பெரும்பாலான லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் (Land Deeds) அல்லது சட்டரீதியான நிரந்தர வீட்டுரிமை ஆவணங்கள் இல்லை. இழப்பீடு பெறுவதற்கு வீட்டு உரிமையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு மானியங்களைப் பெற, இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து சேதத்தை நிரூபிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவசியமாகின்றன. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இந்தச் சமூகத்தில், இந்த ஆவணங்களைப் பெறுவதிலும், அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதிலும் மிகப் பெரிய சவால்கள் காணப்படுகின்றன. இழப்பீட்டு விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் ஆகியவை தமிழ் மொழியில் முழுமையாகவோ அல்லது தெளிவாகவோ தோட்டப் பகுதிகளுக்குச் சென்றடையாதது, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் குழப்பங்களையும் பிழைகளையும் ஏற்படுத்துகிறது. பேரழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதில் காப்புறுதிப் பாதுகாப்பு (Insurance Coverage) முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், திட்வாவால் பாதிக்கப்பட்ட மலையகச் சமூகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. லயன் அறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானவை. சொத்தின் மீதான உரிமையின்மை காரணமாக, தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வசிப்பிடங்களுக்குக் காப்புறுதி செய்ய முடியாது. பெரும்பாலான தோட்டக் கம்பனிகள், தங்கள் தொழில்சார் சொத்துகளுக்கு (தொழிற்சாலைகள், இயந்திரங்கள்) மட்டுமே காப்புறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகளைக் காப்புறுதி செய்வதற்கான நிதிப் பொறுப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதன் விளைவாக, திட்வாவால் லயன் அறைகள் அழியும்போது, தொழிலாளர்கள் நேரடியாக எந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற முடிவதில்லை. மேலும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் குறைந்த வருமானம் காரணமாக, தனிப்பட்ட குடும்பங்கள் தனியார் காப்புறுதித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இழப்பீடுகளைக் கடந்து, திட்வாவால் பாதிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயத்தில் வாழும் மலையக மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மீள்குடியேற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. பாதுகாப்பான புதிய இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இல்லாத, பாதுகாப்பான, மற்றும் குடியிருப்புகளுக்கு உகந்த நிலங்கள் குறைவாகவே இருக்கின்றன. புதிய இருப்பிடங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது அவர்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, வருமானத்தைக் குறைக்கிறது. எனவே, பாதுகாப்பையும், பொருளாதார அணுகலையும் இணைக்கும் நிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருக்கிறது. புதிய குடியிருப்புகளுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பிரதேசவாதக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும், உரியவர்களுக்குப் பதிலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நிலங்களைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன. பரிந்துரைகள் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்ச் சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் (Sustainable Resettlement) முக்கிய மையமாக இருக்கிறது. அபாயகரமான லயன் அறைகளிலிருந்து அவர்களை மாற்றுவது மிக அவசியமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின்படி, நிலச்சரிவு அபாயம் இல்லாத புதிய நிலப் பகுதிகளை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இந்த நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பது இன்றியமையாதது. மீள்குடியேற்றத்தின் போது நிர்மாணிக்கப்படும் புதிய வீடுகளுக்கு முழுமையான வீட்டுரிமைப் பத்திரங்களை (Full Land Deeds) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது அடிப்படைத் தேவையாக உள்ளது. இது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. புதிய குடியிருப்புகள் அமையவிருக்கும்போது, இச்சமூகத்தின் கலாசார மற்றும் சமூகப் பிணைப்புகளைக் காக்கும் வகையில், சமூக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டுப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய கூட்டு வாழ்க்கைத் திட்டங்களை உருவாக்குவது அவசியம். திட்வா போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிரந்தரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு (Non-Economic Losses), சர்வதேச காலநிலை நிதியுதவியை அணுகுவது இலங்கைக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது.இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு, நாட்டின் உள்நாட்டு வளங்களைக் கொண்டு ஈடுசெய்ய முடியாததாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் (UNFCCC) கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து (Loss and Damage Fund) நிதியுதவியைப் பெற அரசாங்கம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த நிதி உதவியைப் பெறும்போது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மறுசீரமைப்புத் தேவைகளை இந்த நிதியில் முதன்மைப்படுத்துவது, காலநிலை நீதியை நிலைநாட்டுவதாகும். இனிவரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ள, மலையகச் சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை முழுமையாக மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் உடனடியாக, துல்லியமாக மற்றும் தமிழ் மொழியில் தோட்டப் பகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தத் தகவலை உள்ளூர் மட்டத் தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க புதிய தொழில்நுட்ப வழிமுறைகள் (குறுஞ்செய்தி சேவைகள்) தற்போது பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் மற்றும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமூகங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒருங்கிணைக்க, நன்கு பயிற்சி பெற்ற சமூக அடிப்படையிலான குழுக்களை (Community-Based Organizations) உருவாக்குவது அவசியம். முடிவுரை திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் முடிவடைந்திருந்தாலும், அதன் சமூக, பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் தற்போது வரை நீடிக்கின்றன. வீடுகளின் நிரந்தரமற்ற தன்மை, வாழ்வாதாரத்தின் இழப்பு, மற்றும் நிவாரணம் பெறுவதில் உள்ள நிர்வாகத் தாமதங்கள் ஆகியவை, காலநிலை மாற்றம் என்பது சமூக அநீதியுடன் இணைந்த ஒரு நெருக்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. நீடித்த மீட்சி (Resilience) அடைய, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதுடன், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் முழுமையான அணுகுமுறை தற்போது தேவைப்படுகிறது. அருள்கார்க்கி https://maatram.org/articles/12449

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

1 month 1 week ago

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

ba83163011046c5f2fdd1eca6f005758d4368226

Photo, Facebook: mariyan.teran

காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகிறது. கடந்த தசாப்தங்களில், நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகள், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகள் ஆண்டுதோறும் நிலச்சரிவு அபாயத்தின் கீழ் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில், ‘திட்வா’ போன்ற தீவிர இயற்கைப் பேரழிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூக உட்கட்டமைப்பையும் கடுமையாகச் பாதிக்கும் ஒரு புறச் சக்தியாக எழுந்துள்ளன.

திட்வா சூறாவளி (Cyclone Ditwah), சடுதியான தீவிரமடைந்து, இலங்கையின் மீது நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இலங்கை முழுவதும் அசாதாரணமான அளவில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் முக்கியமாக மத்திய மலை நாட்டின் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை கடுமையாகப் பாதித்தது. இந்த மாவட்டங்களே இலங்கையின் பெருந்தோட்டங்களை மையப்படுத்திய மலையக சமூகம் செறிந்து வாழும் தோட்டப் பகுதிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் அதிக கனமழை, ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் இருந்த இச்சமூகத்தின் குடியிருப்புகளைத் தாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திட்வாவின் தாக்கத்தினால் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் 15,000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்தன.இந்தப் பேரழிவு பல சமூகங்களை பாதித்தாலும், இலங்கையின் சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகங்களின் மீது திட்வாவின் தாக்கம் அசமத்துவமான அளவில் அதிகமாக இருந்தது.

எனவே, இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன,

நிலச்சரிவுகளின் தாக்கம்: திட்வா சூறாவளியைத் தொடர்ந்து மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் காயங்களின் அளவையும் ஆவணப்படுத்துதல்.

குடியிருப்புகளின் அழிவு: பாரம்பரிய லயன் அறைகள் (Line Rooms) மற்றும் தோட்டக் குடியிருப்புகள் மீது ஏற்பட்ட அழிவின் அளவை மதிப்பீடு செய்தல்.

இழப்பீட்டுப் பொறிமுறைகள்: அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரண மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் (Compensation Schemes) அணுகல், அமுலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்வது.

நீடித்த தாக்கம்: பேரழிவின் விளைவாக இச்சமூகங்களின் வாழ்வாதாரத்தில் (Livelihood) ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.

இந்த ஆய்வின் முக்கியத்துவமானது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை ஆவணப்படுத்துதல் மற்றும் கொள்கை வகுப்பவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். அதாவது, திட்வா சூறாவளியால் மலையக சமூகம் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள், இழப்பு மற்றும் சேதத்தின் (Loss and Damage) அளவை ஒரு முறையான ஆவணப்படுத்துதல், அதேபோல் காலநிலை மாற்றத்தின் தாக்கம், வரலாற்று ரீதியிலான சமூக, பொருளாதார ஒடுக்குமுறையுடன் எவ்வாறு இணைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான சுமையை அதிகரிக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல், மற்றும் எதிர்காலத்தில் காலநிலை சார்ந்த பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), மீள்குடியேற்றம் (Resettlement) மற்றும் இழப்பீடு வழங்கும் பொறிமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் களைய, வலுவான மற்றும் சமூகநீதி சார்ந்த பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும்.

வரலாற்று ரீதியிலான பாதிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்த மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தபோதிலும், சமூக, பொருளாதார ரீதியில் நீடித்த பாதிப்புக்குள்ளானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஆரம்பம் முதலே அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் உரிய ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களால் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது இவர்களை நாடற்றவர்களாகவும், இலங்கையின் சமூக அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்கியது. இவர்களின் குடியிருப்பு ‘லயன் அறைகள்’ 150 ஆண்டுகளுக்கும் மேலானவை, மிகக் குறைந்த கட்டமைப்புத் தரம் கொண்டவை, மேலும் அதிக மழை மற்றும் காற்றைத் தாங்கும் வலிமையற்றவை.தோட்டத் தொழிலாளர்கள் இந்த லயன் அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாலும், இந்த நிலம் பெரும்பாலும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானது. இதனால், இவர்களுக்குத் தங்கள் வசிப்பிடத்தின் மீதான நிரந்தர உரிமையும் (Tenure Rights), நில ஆவணங்களும் (Land Deeds) இல்லை. இந்த வீட்டுரிமைப் பிரச்சினை, பேரழிவுக் காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற உதவியைப் பெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இவர்களின் வரலாற்று வறுமை (ஏனைய சமூகங்களை விடக் குறைவான வருமானம் மற்றும் அதிக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்தல்), நிரந்தரமற்ற வசிப்பிடம் மற்றும் வீட்டுரிமையின்மை ஆகியவை, திட்வா போன்ற பேரழிவுகளின் போது இவர்களின் பாதிப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.

மலையகத் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் குறிப்பாக செங்குத்தான மலைச் சரிவுகளிலும், நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பே, அவர்களை இயற்கைப் பேரழிவுகளுக்கு மிகவும் ஆளாக்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைநீர் விரைவாக வெளியேற முடியாத பாறைகள் மற்றும் களிமண் கலந்த சரிவுகளில் காணப்படுகின்றன. லயன் அறைகள் அமைக்கப்படும் இடங்கள் நீடித்த குடியிருப்புகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சியின் போது, மண் அதிக நீரை உறிஞ்சி, அதன் இறுக்கத்தை இழக்கிறது. இதனால், செங்குத்தான சரிவுகளில் உள்ள லயன் அறைகள் மீது நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல தோட்டப் பகுதிகளை உயர்ந்த அபாய வலயங்களாக (High-Risk Zones) வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும், மழைக்காலங்களில் நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மண் அரிப்பை (Soil Erosion) விரைவுபடுத்துகின்றன, இது நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் அளவு (சில பகுதிகளில் 400 மி.மீ.க்கு மேல்), இந்த அபாயங்களை ஒரு பேரழிவாக மாற்றியது.

வாழ்வாதாரத்தின் தன்மை

மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரம் (Livelihood) ஏறத்தாழ தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தே உள்ளது. இந்த ஒற்றைச் சார்புத் தன்மை, அவர்களைப் பேரழிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவைப் பொறுத்தே பெரும்பாலும் அவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. தோட்ட வேலை பாதிக்கப்படும்போது, அவர்களின் அன்றாட வருமானம் உடனடியாக நின்றுவிடுகிறது. திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தேயிலைத் தோட்டப் பயிர்கள், தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் பெருந்தோட்ட வீதிகள் என்பவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்தச் சேதங்கள் நீண்டகாலத்திற்குத் தேயிலைத் தோட்டச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. தங்கள் வீடுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வேலையையும் இழந்த தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கும், மீண்டு வருவதற்கும் நீண்டகாலம் எடுக்கும். இது இவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் (Deeper Poverty Cycle) தள்ளுகிறது. உதாரணமாக, ஒரு சில நாட்கள் வேலை இழந்தால் கூட, அது குடும்பத்தின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை நேரடியாகப் பாதிக்கிறது.

பேரிடர் காலங்களில் சமூகத்தின் தயார்நிலை மற்றும் அணுகல்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், மலையகச் சமூகங்களின் தயார்நிலை (Preparedness) மற்றும் உதவிகளை அணுகும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. தோட்டப் பகுதிகளுக்கான நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் பெரும்பாலும் தேசிய மொழிகளிலோ (சிங்களம், தமிழ்) அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தத் தகவல் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில், தெளிவான முறையில், அவர்களது உள்ளூர் மட்டத்தில் சென்றடைவதில்லை. தகவல் தொடர்பில் உள்ள இடைவெளிகள் காரணமாக, பலர் அபாயங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் அல்லது தாமதமாகவே வெளியேற முற்படுகிறார்கள்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் போது, தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், அருகிலுள்ள பாதுகாப்பான வெளியேற்ற மையங்கள் (Evacuation Centers) பாடசாலைகள், சமூக மண்டபங்கள் பெரும்பாலும் போதிய இடவசதி, அடிப்படைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மனிதாபிமான உதவி வரும்போது, அது பொதுவாக உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தடங்கல்களால் மெதுவாகவே சென்றடைகிறது. நாடற்றவர்களாக வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, இச்சமூகத்தினர் அதிகார மட்டத்தில் தங்கள் தேவைகளைக் கோருவதிலும், நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் உள்ள சவால்கள் அதிகம்.

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம்

திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட அசாதாரணமான கனமழை (பல பகுதிகளில் 400 மி.மீ முதல் 500 மி.மீ வரை), இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகளைத் தூண்டியது. இந்த நிலச்சரிவுகளே, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீதான திட்வாவின் மிகக் கொடூரமான நேரடித் தாக்கமாக அமைந்தது. திட்வா சூறாவளியின் மையப்பகுதிகளில் ஒன்றான நுவரெலியாவில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் போன்ற தோட்டப் பகுதிகளில் பெரிய நிலச்சரிவுகள் பதிவாகின. இங்குள்ள செங்குத்தான சரிவுகளில் லயன் அறைகள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்ததால், பல குடும்பங்கள் விடியலுக்கு முன்னர் உயிருடன் புதைக்கப்பட்டன. அதேபோல் ஊவா மாகாணத்தின் அமைந்துள்ள தோட்டப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தின. மீரியபெத்தை போன்ற வரலாற்று ரீதியிலான நிலச்சரிவு அபாயப் பகுதிகளில், மீண்டும் பல சிறிய மற்றும் நடுத்தர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளின் போது, அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. இதனால், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் உயிரிழந்த சோக நிகழ்வுகள் பல தோட்டப் பகுதிகளில் ஆழமான சமூக வடுவை ஏற்படுத்தின.

திட்வா சூறாவளியின் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக, மலையக சமூகத்தின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள லயன் அறைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கால் முழுமையாக இடிந்து, பயன்படுத்த முடியாதவையாகின. அதிகமான லயன் அறைகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுவர்கள், கூரைகள், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவை சேதமடைந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீடுகளை இழந்த சுமார் 2 இலட்சம் மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் (பாடசாலைகள், சமூக மண்டபங்கள், கோவில் வளாகங்கள்) தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தனியுரிமை (Privacy) ஆகியவை பெரும் சவால்களாக அமைந்தன. இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்பதால், நீண்டகால மீள்குடியேற்றத்தின் அவசியம் உடனடியாக  உணரப்பட்டுள்ளது.

பல தோட்டப் பாடசாலைகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதால்,மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவுகளாலும், வெள்ளத்தினாலும் பிரதான வீதிகள், தோட்ட வீதிகள்  மற்றும் புதையிரத பாதைகள் பெரும் சேதமடைந்துள்ளன. தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் மற்றும் கால்வாய்கள் அழிந்ததால், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

வாழ்வாதார மற்றும் பொருளாதார இழப்புகள்

மலையகச் சமூகத்தின் வாழ்வாதாரமான தேயிலைத் தோட்டத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகள், இந்த பேரழிவின் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டப் பயிர்கள் நிலச்சரிவுகளால் புதைந்து போயின. குறிப்பாக இளம் தேயிலை நாற்றுக்கள் முழுமையாக அழிந்தன. அதேபோல் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தோட்டக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது வேலையின்றி இருக்க நேரிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பெரும்பாலும் அன்றாடத் தேயிலை பறிக்கும் அளவைச் சார்ந்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால், இவர்களின் அன்றாட வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை உடனடியாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் பசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இன்றும் தவிக்கின்றனர்.

தேயிலை அல்லாத சிறிய அளவிலான உணவுப் பயிர்கள் (உதாரணமாக, மரக்கறிகள், உருளைக்கிழங்கு) மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடும்பங்களின் சிறிய அளவிலான கால்நடைகள் (மாடுகள், கோழிகள், ஆடுகள்) வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் உயிரிழந்தன. இந்த இழப்புகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சொத்து இருப்பை மேலும் சிதைத்துள்ளன.

இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றச் சவால்கள்

திட்வா சூறாவளியால் மலையகத் தமிழ்ச் சமூகம் அனுபவித்த பேரழிவுக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளில், அரசாங்கத்தின் இழப்பீட்டுப் பொறிமுறைகளை அணுகுவது தற்போது ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது. அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இச்சமூகத்தின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடுகளையும் வழங்குவதற்கான பல திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், இந்தப் பொறிமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.பேரழிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணமும் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகங்கள் (Divisional Secretariats) மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் மற்றும் ஆரம்ப நிதி உதவிகள் விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மாகாண மற்றும் பிரதேச செயலகங்கள் வழியாக, தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையும் இந்தச் சங்கிலி சிக்கலாகவும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, அனுமதி வழங்குவது மற்றும் நிதி விடுவிப்பது ஆகியவை தாமதமாகின்றன. சேதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒட்டுமொத்த தேவைகளை ஈடுசெய்யப் போதாமல் இருக்கிறது. இதனால், உதவிகள் பல குடும்பங்களுக்குக் குறைவான அளவிலேயே  கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தோட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளாலும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் சவால்கள் உள்ளதாக சமூக அமைப்புகள் ஆரம்ப காலங்களிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளன. இவ்வாறான சவால்கள் இம்முறையும் ஏற்படலாம்.

இழப்பீட்டை வெற்றிகரமாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகள், இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. பெரும்பாலான லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் (Land Deeds) அல்லது சட்டரீதியான நிரந்தர வீட்டுரிமை ஆவணங்கள் இல்லை. இழப்பீடு பெறுவதற்கு வீட்டு உரிமையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு மானியங்களைப் பெற, இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து சேதத்தை நிரூபிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவசியமாகின்றன. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இந்தச் சமூகத்தில், இந்த ஆவணங்களைப் பெறுவதிலும், அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதிலும் மிகப் பெரிய சவால்கள் காணப்படுகின்றன. இழப்பீட்டு விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் ஆகியவை தமிழ் மொழியில் முழுமையாகவோ அல்லது தெளிவாகவோ தோட்டப் பகுதிகளுக்குச் சென்றடையாதது, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் குழப்பங்களையும் பிழைகளையும் ஏற்படுத்துகிறது.

பேரழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதில் காப்புறுதிப் பாதுகாப்பு (Insurance Coverage) முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், திட்வாவால் பாதிக்கப்பட்ட மலையகச் சமூகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. லயன் அறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானவை. சொத்தின் மீதான உரிமையின்மை காரணமாக, தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வசிப்பிடங்களுக்குக் காப்புறுதி செய்ய முடியாது. பெரும்பாலான தோட்டக் கம்பனிகள், தங்கள் தொழில்சார் சொத்துகளுக்கு (தொழிற்சாலைகள், இயந்திரங்கள்) மட்டுமே காப்புறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகளைக் காப்புறுதி செய்வதற்கான நிதிப் பொறுப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதன் விளைவாக, திட்வாவால் லயன் அறைகள் அழியும்போது, தொழிலாளர்கள் நேரடியாக எந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற முடிவதில்லை. மேலும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் குறைந்த வருமானம் காரணமாக, தனிப்பட்ட குடும்பங்கள் தனியார் காப்புறுதித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இழப்பீடுகளைக் கடந்து, திட்வாவால் பாதிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயத்தில் வாழும் மலையக மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மீள்குடியேற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. பாதுகாப்பான புதிய இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இல்லாத, பாதுகாப்பான, மற்றும் குடியிருப்புகளுக்கு உகந்த நிலங்கள் குறைவாகவே இருக்கின்றன. புதிய இருப்பிடங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது அவர்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, வருமானத்தைக் குறைக்கிறது. எனவே, பாதுகாப்பையும், பொருளாதார அணுகலையும் இணைக்கும் நிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருக்கிறது. புதிய குடியிருப்புகளுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பிரதேசவாதக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும், உரியவர்களுக்குப் பதிலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நிலங்களைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பரிந்துரைகள் 

பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்ச் சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் (Sustainable Resettlement) முக்கிய மையமாக இருக்கிறது. அபாயகரமான லயன் அறைகளிலிருந்து அவர்களை மாற்றுவது மிக அவசியமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின்படி, நிலச்சரிவு அபாயம் இல்லாத புதிய நிலப் பகுதிகளை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இந்த நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பது இன்றியமையாதது. மீள்குடியேற்றத்தின் போது நிர்மாணிக்கப்படும் புதிய வீடுகளுக்கு முழுமையான வீட்டுரிமைப் பத்திரங்களை (Full Land Deeds) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது அடிப்படைத் தேவையாக உள்ளது. இது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. புதிய குடியிருப்புகள் அமையவிருக்கும்போது, இச்சமூகத்தின் கலாசார மற்றும் சமூகப் பிணைப்புகளைக் காக்கும் வகையில், சமூக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டுப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய கூட்டு வாழ்க்கைத் திட்டங்களை உருவாக்குவது அவசியம்.

திட்வா போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிரந்தரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு (Non-Economic Losses), சர்வதேச காலநிலை நிதியுதவியை அணுகுவது இலங்கைக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது.இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு, நாட்டின் உள்நாட்டு வளங்களைக் கொண்டு ஈடுசெய்ய முடியாததாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் (UNFCCC) கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து (Loss and Damage Fund) நிதியுதவியைப் பெற அரசாங்கம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த நிதி உதவியைப் பெறும்போது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மறுசீரமைப்புத் தேவைகளை இந்த நிதியில் முதன்மைப்படுத்துவது, காலநிலை நீதியை நிலைநாட்டுவதாகும்.

இனிவரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ள, மலையகச் சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை முழுமையாக மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் உடனடியாக, துல்லியமாக மற்றும் தமிழ் மொழியில் தோட்டப் பகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தத் தகவலை உள்ளூர் மட்டத் தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க புதிய தொழில்நுட்ப வழிமுறைகள் (குறுஞ்செய்தி சேவைகள்) தற்போது பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் மற்றும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமூகங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒருங்கிணைக்க, நன்கு பயிற்சி பெற்ற சமூக அடிப்படையிலான குழுக்களை (Community-Based Organizations) உருவாக்குவது அவசியம்.

முடிவுரை

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் முடிவடைந்திருந்தாலும், அதன் சமூக, பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் தற்போது வரை நீடிக்கின்றன. வீடுகளின் நிரந்தரமற்ற தன்மை, வாழ்வாதாரத்தின் இழப்பு, மற்றும் நிவாரணம் பெறுவதில் உள்ள நிர்வாகத் தாமதங்கள் ஆகியவை, காலநிலை மாற்றம் என்பது சமூக அநீதியுடன் இணைந்த ஒரு நெருக்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. நீடித்த மீட்சி (Resilience) அடைய, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதுடன், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் முழுமையான அணுகுமுறை தற்போது தேவைப்படுகிறது.

Ramesh-Arul-e1764751501850.jpg?resize=10அருள்கார்க்கி

https://maatram.org/articles/12449

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

1 month 1 week ago
லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் முன்னிலையான 45 வயதான நபர் பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் கடுமையான வகை ஆபாசங்களை உருவாக்கல் உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெட் காவல்துறைக்கு கிடைத்த மிகவும் சிக்கலான வழக்கு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது பராமரிப்பில் இருந்த குழந்தைகளை இரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை ஆடியோவுடன் இணைத்து வெளியிடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் 23 ஆம் திகதின்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=351068

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

1 month 1 week ago

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

Nursery-worker-admits-sexually-abusing-c

வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் முன்னிலையான 45 வயதான நபர் பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் கடுமையான வகை ஆபாசங்களை உருவாக்கல் உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெட் காவல்துறைக்கு கிடைத்த மிகவும் சிக்கலான வழக்கு இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது பராமரிப்பில் இருந்த குழந்தைகளை இரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை ஆடியோவுடன் இணைத்து வெளியிடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் 23 ஆம் திகதின்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

https://akkinikkunchu.com/?p=351068

மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல்

1 month 1 week ago
மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல் General03 December 2025 காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 என்ற மலேசிய வானூர்தி 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது. அதன் பின்னர் குறித்த வானூர்தியை தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்தநிலையில், 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று, குறித்த வானூர்தியை தேடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே, வானூர்தியை கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப்பிடப்பட்ட இலக்கு பகுதியில் இந்த தேடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், அந்த இடம் எது என்பது குறித்த தகவலை மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை. முன்னதாக, மலேசிய புலனாய்வாளர்கள் ஆரம்பத்தில் குறித்த வானூர்தி வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதற்கான சாத்தியக் கூறுகளையும் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/434105/missing-plane-search-resumes-after-10-years

மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல்

1 month 1 week ago

மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல்

General03 December 2025

1764781684_9950560_hirunews.jpg

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 என்ற மலேசிய வானூர்தி 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது. 

அதன் பின்னர் குறித்த வானூர்தியை தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. 

இந்தநிலையில், 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று, குறித்த வானூர்தியை தேடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

இந்தநிலையிலேயே, வானூர்தியை கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப்பிடப்பட்ட இலக்கு பகுதியில் இந்த தேடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

எனினும், அந்த இடம் எது என்பது குறித்த தகவலை மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை. 

முன்னதாக, மலேசிய புலனாய்வாளர்கள் ஆரம்பத்தில் குறித்த வானூர்தி வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதற்கான சாத்தியக் கூறுகளையும் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/434105/missing-plane-search-resumes-after-10-years

வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு

1 month 1 week ago
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு adminDecember 3, 2025 வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்தொழில் அமைச்சர் , அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகிறது. அது நீருக்கான போராக உள்ளது. இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான். வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும். இது தான் வழமை, இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர். இதொரு அருவருப்பான செயல். வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்த முனைகிறார். தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது.இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/223529/

வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு

1 month 1 week ago

வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு

adminDecember 3, 2025

34-1.jpeg?fit=1170%2C878&ssl=1

வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில்  வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்தொழில் அமைச்சர் , அங்கிருந்து உரிய தரப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , உடனடியாக மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

  நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகிறது. அது நீருக்கான போராக உள்ளது. இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான்.  வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும். இது தான் வழமை,

இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்.

இதொரு அருவருப்பான செயல். வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்த முனைகிறார். தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது.இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும் என மேலும் தெரிவித்தார்.

34-3.jpeg?resize=800%2C600&ssl=1


https://globaltamilnews.net/2025/223529/

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

1 month 1 week ago
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு adminDecember 4, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை காவற்துறையினர் மீட்டுள்ளனர். திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவற்துறையினர் மறுநாள் திங்கட்கிழமை இளைஞனை வெட்டியா நால்வரில் இருவர் உள்ளிட்ட 06 பேரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் , மேலும் சில சான்று பொருட்களை மீட்கவும் , சந்தேகநபர்களை காவற்துறையினரின் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு மன்றில் காவற்துறையினர் விண்ணப்பம் செய்தனர். காவற்துறையினரின் விண்ணப்பத்தை அடுத்து , சந்தேகநபர்களை 24 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்தது. அதனை அடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையின் போது, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது, எவரேனும் பின் தொடர்ந்தால் , அவர்களிடம் இருந்து கொலையாளிகளை காப்பாற்றும் நோக்குடன் , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவாறு கொலையாளிகளை பின் தொடர்ந்த கார் தொடர்பில் காவற்துறையினர் கண்டறிந்து , குறித்த காரினை மீட்டுள்ளனர். இந்நிலையில், காவற்துறையினருக்கு நீதிமன்று அனுமதித்த 24 மணிநேரம் நேற்றைய தினம் புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் , நேற்றைய தினம் சந்தேகநபர்கள் 06 பேரையும் மீண்டும் மன்றில் முற்படுத்திய வேளை 06 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அதேவேளை , இளைஞனை கொலை செய்த நால்வரில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , ஏனைய இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , கொலையாளிகள் தப்பி செல்ல பாதுகாப்பு அளித்து சென்ற காரினை மீட்டுள்ள நிலையில் , காரில் பயணித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223543/