Aggregator
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்
சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்
7 Aug 2025, 1:14 PM
சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர்.
அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ்.
முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?
2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன.
ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.
பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.
அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.
இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை.
பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன.
இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது.
இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை.
ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!
ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!
ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!
ஆகஸ்ட் 07, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (07.08.2025) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மன்னார் காற்றாலை மின் கோபுரங்கள்
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் . 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் .
தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்
கருத்து படங்கள்
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
adminAugust 7, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07.08.25) முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரியை அறவிடவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார்.
குறைந்தபட்ச விகிதம் 10% ஆக இருந்ததுடன், இது சில நாடுகளுக்கு மிக அதிகமாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது.
அத்தகைய சூழலில், இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.
இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தியதன் பலனாக இலங்கைக்கு 20% வரி அறவிடுவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், இந்த புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்த வரி கொள்கையை கையாள்வதில் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை?
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை?
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை?
adminAugust 7, 2025
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ நிபுணர் லக்மினி மாகொடரத்ன கருத்து தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, எங்கள் குழந்தைகளின் தரவுகளைப் பார்த்தபோது, 22.4% குழந்தைகள் தனிமையால் பாதிக்கப்பட்டனர். 13-17 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11.9% பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டு இரவில் தூங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் 18% பேரிடம் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட்டது. 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25% மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர். அதாவது 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. எனவே இலங்கையில் இது நடக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், பெரியவர்கள் பல்வேறு மன அழுத்தத்தில் இருக்க முடியும். பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் மன அழுத்தமும் இவர்களையும் பாதிக்கலாம்.
இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலைகள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டில், தற்கொலைகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம், ஒரு இலட்சத்திற்கு 47 பேர். அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தோம். இப்போது அது ஒரு லட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை. நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள் நடக்கின்றன. பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல தற்கொலைகள் உள்ளன. தற்கொலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய தற்கொலைகள் இப்போதெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம்.