1 month 1 week ago
தவறாக விளங்கிக்கொண்டமைக்கு வருந்துகிறேன். பின்னர்தான் நீங்கள் இட்ட குறியீட்டை கவனித்தேன்.
1 month 1 week ago
படுபட்சி நாவலை தோழர் பெளசரிடம் இருந்து ஆர்வமாக வாங்கினேன். எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் இன்னமும் வாசிக்கவில்லை. தமிழில் ஆசான் ஜெயமோகனினதும், தோழர் ஷோபாசக்தியினதும் புத்தகங்களை அதிகம் படித்ததால் ஒரே மாதிரியான எழுத்துக்களைத் தவிர்த்து பிற எழுத்தாளர்களின் தனித்துவ எழுத்துக்களைத் தேடிப் படிக்கமுயற்சிக்கின்றேன். படுபட்சி இப்படி தனித்துவமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தோழர் ஷோபாசக்தியின் கச்சிதமான சொற்களால் செதுக்கப்பட்டிருக்கும் போலுள்ளது. டிசம்பர் விடுமுறைக் காலத்தில் கட்டாயம் படிப்பேன்😀
1 month 1 week ago
'காதல் சிறகினிலே' காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு மோதல் தந்து தூர விலகுது! சாதல் கண்களில் அருகில் தெரியுது கூதல் காற்றும் நெஞ்சை வருடுது! காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது! கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்! பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே நடிக்கும் உன்னை நம்பியது எனோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?
1 month 1 week ago
'காதல் சிறகினிலே'
காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு
மோதல் தந்து தூர விலகுது!
சாதல் கண்களில் அருகில் தெரியுது
கூதல் காற்றும் நெஞ்சை வருடுது!
காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை
வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது!
கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து
கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்!
பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே
நடிக்கும் உன்னை நம்பியது எனோ?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே']
https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?
1 month 1 week ago
ஐரோப்பா 3 ஆண்டுகளுக்கு உக்கிரேனுக்கான போருக்கு தேவையான நிதியினை ஒதுக்க 2024 - 2027 முடிவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் போரின் மூலமான தீர்வினையே கொண்டுள்ளது, ஆனால் நிலையான சமாதானம் எட்டப்பட வேண்டும் என கூறுகின்றது, இது நியோ லிபரலிசத்தின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் உக்கிரேனின் நிலைப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையுடன் இந்த போரினை தொடர விரும்புகிறது. தற்போது கூட சமாதானத்தின் பின்னர் 800000 உக்கிரேன் இராணுவத்தினை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பேணப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை எடுக்க முனைகிறது, ஒரு நடு நிலையான நாடாக உக்கிரேன் ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்கும் இடையே உக்கிரேன் இருந்தால் அது அதிகமான அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பினை வழங்கும் எனும் அடிப்படையினை ஏற்காத நிலை காணப்படுகிறது. தற்போதய இரஸ்சிய இராணுவ வெற்றி அதனை அரசியல் வெற்றியாக்க முடியாவிட்டால் இரஸ்சியாவிற்கு இந்த போரினால் ஏற்பட கூடிய குறைந்த பட்ச நன்மைகள் கூட இல்லை என நான் கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), அதற்காகவே அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு அரசியல் ரீதியான தீர்வினை முன்னகர்த்த முனைகிறார்கள், மறுவளமாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் போர் மூலமான தீர்வு எனும் ஒரே தெரிவே உள்ளது. துரதிஸ்ரவசமாக தற்போது உக்கிரேன் போர் ஒரு இராணுவ ரீதியான தோல்வியினை நோக்கி செல்கிறது, ஆனால் அரசியல் ரீதியான எந்த தீர்வு திட்டமும் ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் இல்லை, அதனால் மோதல் உறை நிலை ஒன்றினை ஏற்படுத்தி அதன் பின்னர் உக்கிரேனினை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைதி நடவடிக்கையினை விரும்புகிறது. மறுவளமாக இரஸ்சியா ஒரு நிரந்தர அமைதி தீர்வினை அதனது விருப்பிற்கேற்றவாறு ஏற்படுத்த முனைகிறது, இந்த போரினை உக்கிரேன் தொடர்ந்தால் உக்கிரேன் இதனை விட மோசமான இராணுவ அரசியல் சூழ்நிலையில் சிக்க நேரிடும், அதன் பேரம் பேசும் ஆற்றல் மேலும் மேலும் வீழ்ச்சியடையும், போர் முடிவினை உடனடியாக ஏற்படுத்தாவிடால் 2022 கிடைத்த தீர்வு நிலை போன்ற ஒரு தீர்வு தற்போது சாத்தியமற்றது அதே போல தற்போதுள்ள நிலை போல எதிர்காலத்தில் இருக்காது. ரசோதரன் நான் கல்வி சமூகம் என கூறியதனை நீங்கள் உங்களை நோக்கியதாக எடுத்து கொண்டுள்ளதாக புரிகிறது நான் கூறவந்தது தமிழ் மென்போக்கு சிந்தனை குழாத்தினரை (அரசியல் துறசார் நிபுணர்கள்), எமது சமூகத்தில் முறைசார் கல்வி துறைசார் கல்வி நிபுணத்தினர் (வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள்) பொதுவான கல்வி சமூகமாக பார்க்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் துறைசார் நிபுணத்தினர்கள் அனைவரையும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள துறைசார் நிபுணத்துவர்கள் போலவே அவர்களை பார்க்கிறார்கள், இ மித் ஒப் சிமோல் பிஸ்னஸ் எனும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டெக்னீசியன் என வகுக்கிறார், வேறுபட்ட perception வேறுபட்ட புரிதலை உருவாக்கிவிடுகிறது.
1 month 1 week ago
1 month 1 week ago
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு! 22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1454913
1 month 1 week ago

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார்.
https://athavannews.com/2025/1454913
1 month 1 week ago
இதே நிலை தான் என் வீட்டில், நண்பர்கள மத்தியில், உறவுகள் மத்தியிலும். இன்று புலிகள் இல்லை. செயல்திறன் அற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனைய சிங்கள கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை. அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு. அனுர மீதான நம்பிக்கை, அவர் சார்ந்த கட்சி மீது இல்லை என்பதும், தனி மனிதன் மீதான நம்பிக்கை ஆபத்தானது என்பதையும் காலம் அவர்களுக்கு காட்டாமல், அவர்களின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமாகும் வாய்ப்புகள் வாய்க்கட்டும்.
1 month 1 week ago
நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே. ஏன் வீட்டில் கூட அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றது, அண்மை யாழ் போன போது பலர் அவரைபற்றி நன்றாக கதைத்தார்கள்.
1 month 1 week ago
வணக்கம் நித்திலா, உங்களை…. யாழ்.களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
1 month 1 week ago
இதே போன்று விடுதலைப் புலிகளால் ஏதேனும் கட்டப்பட்டதா என்பது குறித்து அறிந்தவர்கள் தெரிந்தவர் பதிவிடுங்கள். 😍😍 வான்புலி வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் 1991-2009
1 month 1 week ago
நல்ல திறமை. அம்புட்டும்தா... நானறிந்தது. மொத்தத்தில் சொந்த வடிவத்தில் யாரும் பறக்கக்கூடிய ஆள்கொண்ட வானூர்தியை தீவினுள் உருவாக்கவில்லை. இந்த கருத்தை நான் எடுத்துக்கொண்ட 2009 வரையான காலத்திற்குள் யாரும் கட்டவில்லை என்பதால் அன்று அவ்வாறு கூறினேன். எனினும் நான் புதிதாக தேடி சிங்களவரின் இவ்வானூர்தியை - 2003 இல் கட். - கண்டுபிடித்துள்ளதால், இதை பின்வாங்கிக்கொள்கிறேன்.
1 month 1 week ago
வெளிநாட்டு வடிவமைப்பில் பல மாற்றங்களுடன் சிங்கள வான்படையின் முதல் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு: Centenary X முதன்மை மாற்றம்: இது Weedhopper Ultralight ஐ ஒத்தாக கொண்டு கட்டப்பட்டது. வீட்ஃகொப்பரில் முன்னுக்கு இயந்திரம் இருக்கும், இதில் இயந்திரம் பின்னுக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றும் இறக்கை இயந்திரத்திற்கேற்ப சற்று உயரமாக உள்ளது............ . ஆண்டு: 2003 இஸ்ரேலிய 28 HP Piston இயந்திரம் பாவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஒன்றே ஒன்றுதான் தயாரிக்கப்பட்டது, அதுவும் சோதனை முயற்சியாக. தரவு & படிமம்: சிறிலங்கா வான்படை நூலிலிருந்து. https://www.donstheory.org/centenary.html https://www.airforce.lk/pages.php?pages=centenary_x_ultra_light
1 month 1 week ago
தமிழருக்கு இந்த நாட்டில் பிரச்சனையுண்டு, சிங்கள அரசியல்வாதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அநிஞாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள், அது தீர்க்கப்படவேண்டும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள், சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக, அரச கதிரையில் இருந்து கொண்டு பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார். பதவியிழந்த பின் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் மத்தியில் காலந்தாழ்த்தியேனும் உணர்ந்தது வரவேற்கத்தக்கது, தைரியமானது. அதை நான் வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்குள்ளது. அதற்காக மற்றவர்களும் ஆதரிக்க வேண்டுமென பரப்புரையோ, வற்புறுத்தலோ பண்ண மாட்டேன். அவரது கை பலம் பெற்றால் நல்லது நிகழ வாய்ப்புண்டு காலந்தாழ்த்தியேனும். அதற்காக அவர் நிறைய சவால்களை சந்திக்க, கடக்க வேண்டியது நிதர்சனம். அவர் தன் சொந்தக்கட்சிக்காரர்களாலேயே விமர்ச்சிக்கவும் பழி சுமத்தவும் படலாம். ஏன் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை. அப்பாவிபோலிருந்த சஜித் எப்படி குரைக்கிறார் பாருங்கள். மற்றவர்கள் சும்மா விடுவார்களா?
1 month 1 week ago
நீங்கள் புதிய பதிவரா... நல்ல மாற்றுக்கருத்து கண்மணியாக உள்ளீர்களே... வாருங்கோ.😂 வணக்கம். உருட்டலா... 🤔 நீங்கள் பத்தி பத்தியாக இங்கே செ.நு. கேட்டு எழுதியிருப்பதையே நான் மூன்று சொற்களில் ரத்தின சுருக்கமாக எழுதியுள்ளேன். என். குணரத்தினம் அமெரிக்க Pazhmany Pl2 ஐ இலங்கையில் கட்டியுள்ளார், பாகங்களை ஒன்றாக்கி/ உருவாக்கி. எனினும் Pazhmany pl-2 வடிவம் நான் முன்னர் சொன்னது போன்று சிங்களத்தின் சொந்த உள்நாட்டு வடிவமைப்பு கிடையாது. வெளிநாட்டு புளூ பிரிண்டை வாங்கி அதன் படி கட்டப்பட்டது தான். சொந்தமாக வடிவமைப்பது வேறு. புளூ பிரின்ட் வாங்கி கட்டுவது/உருவாக்குவது வேறு. நீங்கள் ஆதரிப்போர் செய்தது இந்த இரண்டாவதே. நீங்கள் உருட்டுவது போன்று அவர்கள் இருவரும் அங்கே சொந்தமாக வான்கலங்களை வடிவமைக்கவில்லை. அத்தனையும் புலூ பிரின்ட் வாங்கி கட்டினதுதான்... எனவே தான் அதனை "கொப்பி" என்றேன், சொந்தமாக வடிவமைத்து கட்டாமல் அடுத்தவனின் டிசைனை புலூ பிரின்ட் வாங்கி பார்த்து கட்டியதால்! முன்னால் இருப்பவன் எழுதிய விடைத்தாளை வாங்கிப் பார்த்து தன் விடையை எழுதுவது போலத் தான் இதுவும். அம்புட்டும்தா... நானறிந்தது. மொத்தத்தில் சொந்த வடிவத்தில் யாரும் பறக்கக்கூடிய ஆள்கொண்ட வானூர்தியை தீவினுள் உருவாக்கவில்லை. ரே விஜயவர்த்தனேயும் இதே கதை தான்; வெளிநாட்டு புளூ பிரிண்டை வாங்கி அதன் படி கட்டப்பட்டது (முன்னர் நான் கூறியது போன்றல்லாமல்). அவர் கட்டிய 5 வான்கலங்களின் படிமங்களும் இப்போது உள்ளன. ஐந்தும் (3 இலகு வான்கலங்கள், மற்றும் 2 கொச்சு இலகு வான்கலங்கள்(Micro Light aircraft) ) வெளிநாட்டு புளூபிரின்டை வாங்கி கட்டியதே. சொந்த வடிவமைப்பு கிடையாது. என்றாலும் ஒன்றின் தெளிவான படிமம் இல்லாமையால் அதன் கொச்சு இலகு வான்கல வகையை கண்டறிய முடியவில்லை. (அவரது திறமையை நான் மதிக்கிறேன். எனினும் சொந்த வடிவமைப்பு இல்லை.) 51ம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வான்படையே "30" ஆண்டுகள் கழித்து 80ல் தான் புளூ பிரின்ட் வைத்து கட்டியது, முதல் வானூர்தியை. அத்தனை வளங்கள் இருந்தும் ஒன்றும் கட்டவில்லை 30 ஆண்டுகளில்...😜 ஆனால், வளமற்ற சறம் கட்டின கரந்தடிப்படையாக இருந்த காலத்திலையே புலிகள் சொந்தமாக வடிவமைத்து 2 வானூர்திகள் கட்டியிருக்கிறார்கள் (பறந்ததோ பறக்கேலையோ என்பது வேறு விடையம்) என்றால் அதுவே மிகப்பெரிய மைல்கல் தான். முயற்சிப்பதற்கே தனித் திறமை வேண்டும். இதனால் தான் அவர்கள் புலிகள்... 😎 இல்லையே... நீங்கள் கூறுவது இந்த வீடியோவா? இருப்பின் இதில் வான்கலம் பறக்கிறதே! 1995~ வான்புலிகளின் இரண்டாவது பறப்பு | Tamileelam Air Force | க...Skytigers இதில் தெரிவது ஒரு கொச்சு இலகு கீழிதை(microlight glider) ஆகும்.
1 month 1 week ago
டியர் Justin, Autofiction வரைவிலக்கணப்படி நீங்கள் சொல்வது சரி. ஆனால் இந்நாவல் சம்பந்தமாக இரண்டு பாரிய குற்றச்சாட்டுக்கள் உண்டு. 1. இந்நாவலை உண்மையில் எழுதியவர் டிலுக்சன் அல்ல. இதை எழுதிக்கொடுத்தவர் சோபாசக்தி. அதாவது Ghostwriting. 2. நாவல் வெளிவந்தபின் இது உண்மையில் நடந்த கதை எனவும் தான் கைது செய்யப்பட்டேன் எனவும் டிலுக்சன் பேட்டிகளில் அடித்துவிடும் அண்டப்புழுகுகள். பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் டிலுக்சனின் தந்தை தியேட்டர் மோகன் (கணபதிப்பிள்ளை மோகன்) பிள்ளையானின் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். உண்மையில் டிலுக்சன் கைது செய்யப்பட வாய்ப்புமில்லை. கைது செய்யப்படவும் இல்லை. நட்சத்திரனின் முகநூல் பதிவு பின்வருவது👇 இப்போது சோபாசக்தியின் எழுத்து மோசடிகள் சம்மந்தமாக ஒரு விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. Elanko DSe, Katsura Bourassa Athanas Jesurasa Suhan Kanagasabai P A Jayakaran Arullingam Shaseevan Ganeshananthan Navaratnam Giritharan முதலிய பலர் இவ்விவாதச் சமரில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இச்சமர் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இது அடுத்த கட்டத்திற்கு போவதற்கு இங்கு விவாதிக்க வேண்டிய சில சில அடிப்படையான விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். முக்கியமான பிரச்சனை விவாதிகளில் ஒரு புனைவு/புனைவு சாரா எழுத்து உருவாக்க வழிமுறையில் எழுதிய ஆசிரியருக்கப்பால் இருக்கின்ற இரண்டு முக்கியமான உருவாக்க பொறிமுறை பற்றிய தெளிவின்மையே. அந்த வழிமுறைகளாவன 1. Manuscript Editing (எழுத்தாளர் ஒருவர் எழுதிய பிரதியை செம்மைப்படுத்துவது) 2. Ghost Writing (எழுதத் தெரியாத ஒருவருடைய கதையை வாய்மொழியாகக் கேட்டு எழுதிக் கொடுப்பது, மொக்கையாக மிக ஆரம்பகட்ட எழுத்தில் இருப்பதை தேவைக்கேற்ப முற்றிலும் புதிதாகப் படைத்துக் கொடுப்பது, எழுதவே தெரியாத ஒருவருக்கு எழுதத் தெரிந்த ஒருவர் திருட்டுத் தனமாக எழுதிக்கொடுத்து அதனை எழுதத்தெரியாதவரின் படைப்பாக சந்தைப்படுத்துவது - Plagiarism) இப்போது நடக்கின்ற விவாதம் இன்னமும் " எடிற்றிங்" என்கிற குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரையோட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமான Ghostwriting நோக்கி நகரவேயில்லை. இது மிகமுக்கியமானது. பின்வரும் இரண்டு காரணங்களுக்காக 1. சோபாசக்தியின் மோசடி என்பது அவரே மிகக்கெட்டித்தனமாக தான் 4 புத்தகங்களை எடிற் பண்ணிக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டிருக்கும் போதும் உண்மையில் அவர் செய்தது எடிற்றிங் (Manuscript Editing அல்ல). அவர் செய்திருப்பது Ghostwriting. இது மோசடி. எடிற்றிங் செய்வது மோசடியல்ல. இதில் தேவாவின் மொழிபெயர்ப்பு நூலான குழந்தைப் போராளி எடிற்றிங்குக்குள் வரலாம். மற்ற 3 நூல்களான அகாலம், தனுஜா, படுபட்சி ஆகியவை அப்பட்டமான திருட்டுப் பிரதிகள்.Ghostwriting. 2. தமிழில் இன்னமும் Ghostwriting க்கு முறையான பதம் இல்லை. இதனால் இந்த கருத்தாக்கத்தை முழுமையாக இவ்விதாதத்தில் கலந்து கொள்பவர்கள் துறைபோகக் கற்றுத் தெளியவில்லை. ஆனால் இதனை தமிழில் முதல்முறையாக சோபாசக்தி தொடக்கி வைக்கவில்லை. எஸ் பொன்னுத்துரையே டானியலுக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் Ghostwriting செய்து கொடுத்திருக்கிறார். அதை எஸ்.பொ வெளிப்படையாக பின்னாட்களில் சொல்லியிருக்கிறார். ஜீவாவை விட நேர்மையான டானியல் இதனை வ. அ .இராசரத்தினமிடம் தனது பரிசுபெற்ற கதையொன்றை எஸ்.போ எழுதித்தந்தார்(Ghostwriting)என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது சம்பந்தமாக நான் பலவருடங்களாக எழுதி வருகிறேன். பின்வருவது சோபாசக்தியின் இச்சா நூலுக்கு நான் 2021 பெய்ரவரியில் அகழில் எழுதிய முன்னுரையில் வரும் பகுதிகள். "சயந்தனின் ‘ஆதிரை’ பூர்வாங்கப்பிரதி முதலில் தமிழினி பதிப்பக அதிபரால் படிக்கப்பட்டு அவர் சொன்ன ஆலோசனைகளின் அடிப்படையில் திருத்தங்களும் மேலதிக அதிகாரங்களும் இணைக்கப்பட்டன. தமிழ்கவியின் ஊழிக்கால நாவலும் பலரது ஆலோசனைகளுக்கேற்ப திருத்தப்பட்டே வந்தது. ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை ஜெயமோகன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கொடுத்து எடிற் பண்ணமுடியுமா என்று கேட்டிருந்தார். சுஜாதா அதற்கு “முடியும். அதனை நீங்களேதான் எடிற்பண்ணவேண்டும்” என்று சொல்லியிருந்தாராம். அசேதன முறையில் எழுதப்படும் பல நாவல்கள் சிறப்பாக வராமைக்கு காரணம் அதனை எழுதுபவர்கள் படைப்பாற்றலில் பின்தங்கி இருப்பதுதான். முதல்முறையாக ஒரு நாவல் எழுதுபவர்கள் தமது பிரதியை மற்றவர்களிடம் படிக்ககொடுத்து manuscript editing செய்வது வேறு. அது தேவையானது. ஆனால் ஏற்கெனவே எழுத்தாளர் என்று பெயர்பெற்றவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு தாமோ வேறொருவரோ Manuscript editing செய்வது வேறு. தமிழில் தொழில்சார் (Professional) Manuscript editing இல்லை. Manuscript Editing என்பதே ஒரு விரிவான துறை. இலக்கணத்தையும் தரிப்புக்களையும் பந்தி பிரிப்புக்களையும் செய்வது ஒன்று. விரிவாக கதை, கதைப்பின்னல், பாத்திரங்கள் என்பவற்றையே மாற்று விரிவாக்கி மெருகூட்டி செய்வது வேறு. இந்த இரண்டாவது முறையில் குறித்த எழுத்தாளரைவிட manuscript editor திறமையாக இருந்து இறுதியாக வருகிற பிரதியே ஒரு ரகசிய Ghost Writer எழுதிய இலக்கிய திருட்ட்டாக வர வாய்ப்பு இருக்கிறது" பின்னிணைப்பாக AI சொல்கிற எடிற்றிங், Ghostwriting வித்தியாசங்களை இணைக்கிறேன். இந்த விவாதம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 📘 Manuscript Editing What it is: Improving an existing manuscript that the author has already written. Focuses on: Grammar, punctuation, and spelling Clarity and flow Structure and organization Tone consistency Strengthening arguments or storytelling Fixing awkward phrasing or redundancies Sometimes includes light rewriting, but the core content is the author’s Levels of editing: 1. Proofreading – Surface-level corrections 2. Copyediting – Style, readability, accuracy 3. Line editing – Sentence-level craft and voice 4. Developmental editing – Big-picture structure and content Who does the heavy lifting: You (the author) wrote the content; the editor improves it. --- ✍️ Ghostwriting What it is: A writer creates the content for you, based on your ideas, notes, interviews, or outlines. Focuses on: Turning concepts or interviews into full manuscripts Building the narrative, style, and structure from the ground up Writing in your voice so it sounds like you Researching, outlining, drafting, and revising the entire work Often includes developmental shaping of the book Who does the heavy lifting: The ghostwriter writes the content; you provide direction and approval.
1 month 1 week ago
அதில். என்ன. தப்பு. ? இலங்கை. தமிழர்கள். இரண்டு. சிறந்த. தமிழ் தலைவர்களை. பெற்று இருந்தார்கள். அகிம்சைக்கு. தந்தை. செல்வா. ஆயுதப் போராட்டத்துக்கு. தலைவர் பிரபாகரன். எந்த. நன்மையும். தீர்வையும் பெற முடியவில்லை. இனியும். பெற முடியாது. என்னைப் பெறுத்த வரையில். இலங்கை. தமிழருக்கு ஒரு. சிறந்த. சிங்களத்தலைவர். தேவை. வேண்டும். அந்த தலைவர் தமிழருக்கு. பிரச்சனைகளுண்டு. என்றும். அதை நான். தீர்ப்பேன். என்றும். நாடு. முழுவதும். தமிழ். சிங்கள. முஸ்லிம். மக்கள் மத்தியில். சொல்ல வேண்டும். இதற்க்கு அனுர. சிறந்த. நபர். அவர். சொல்லியும். உள்ளார். எனவே ஆதரிக்கலாம். அல்லவா. ?
1 month 1 week ago
இந்த உலகில் பிரச்சனைகளே இல்லை என்றால்.....? நீங்கள் சீனா ரெஸ்ரோரண்டில் வேலை செய்ய வேண்டிய அவசியமும் வந்திருக்காது.நானும் கண்டவன் கிண்டவனுக்கு உழைச்சு குடுக்கவேண்டிய நிலையும் வந்திருக்காது.😁 உலக மேலாதிக்க அரசியல் என்பது ஒரு சீட்டாட்டம் போன்றது.முதலில் அமெரிக்கா ரஷ்யா. இன்று மேற்குலகு பாலூட்டி வளர்த்த கிளி சீனாவும் அந்த சீட்டாட்டத்தில் சேர்ந்து விட்டது. இங்கே மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. எமது வீட்டில் எப்படி தினசரி கோழி இறைச்சி பன்றி இறைச்சியோ அது போல்தான் அவர்களுக்கு மனித உயிர்களும்.... வெற்றி நிச்சயமில்லை ஆயினும் வீரம் முக்கியம் கந்தையர். அதுதான் இன்றைய உலக அரசியல்.😎 நிற்க... ஐ போனில் எப்படி அடிக்கடி குற்று போடாமல் தமிழில் எழுதுவது பற்றி சொல்லித்தர உவ்விடம் நான் வரவா? வந்தால் 100 செலவாகும் ...ஓகேயா? 🤣
1 month 1 week ago
ஜெயராசா ஏன் இந்த முக்கு முக்குகின்றார்? இந்த மனுசனுக்கு வழங்கப்படவேண்டிய பழைய கொடுப்பனவுகள் இன்னும் நிலுவையில் உள்ளது போலும்.