Aggregator

புதிய அரசியலமைப்பின் நோக்கம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 month 2 weeks ago
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? August 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டன. 1970 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே மாதம் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) ஆயுதக் கிளர்ச்சியினால் இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால் அந்த அரசாங்கம் முன்கூட்டியே அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவும் கூடும். 1977 ஜூலையில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 15 மாதங்களுக்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவிப்பின் அரசியல் விவேகம் குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால், அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த வாரம் (ஜூலை 25) பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கிளப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் கூறினார். இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முற்பகுதியிலும் பிரதமர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் காலவரிசை ஒன்றை குறிப்பிட்டிருந்தார். “புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக அரசாங்கம் அவசரமாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பல வருடங்களாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்வதிலும் முழுமையாக கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. மாகாணசபை தேர்தல்களை நடத்திய பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை அரசாங்கம் தொடங்கும்” என்று அவர் கூறினார். அதேவேளை, இந்த வருடம் இந்த செயன்முறையை முன்னெடுப்பதற்கு பட்ஜெட்டில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்ட பிரதமர் பொதுக் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னைய அரசாங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடருவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன — பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் (2015 –2019) அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதியையே பிரதமரும் மீண்டும் பாராளுமன்றத்தில் கூறினார். கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தற்போதைக்கு அரசாங்கம் அவரசம் காட்டப்போவதில்லை என்று பரவலாக நிலவிய அபிப்பிராயத்துக்கு மத்தியில் கடந்த வாரம் அமைச்சரும் சபை முதல்வருமான பிமால் இரத்நாயக்க அடுத்த வருட முற்பகுதியில் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதன் பிரகாரம் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அடுத்த வருட முற்பகுதியில் இருந்து அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம். முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை ஒன்றை 2017 செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது அந்த இடைக்கால அறிக்கையில் இருந்தே மீண்டும் செயன்முறையை தொடங்க வேண்டும். அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதை செயன்முறை தொடங்கும்போதுதான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த கட்டத்தில் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவருவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை? இலங்கை இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. பல தசாப்தகால அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதார நெருக்கடி, நிறுவனங்களின் சிதைவுகளுக்கு பிறகு கடந்தகால தவறான பாதையில் இருந்து விடுபட்டு புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு ஜனாதிபதி திசநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பல தசாப்தங்களாக நாட்டின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொனறைக் காண்பதற்கு பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் தவிர புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை பொறுத்தவரை கூடுதல் முன்னுரிமைக்குரிய வேறு விடயங்கள் இருக்க முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது வெறுமனே குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனம் அல்ல. அது முன்னேறிச் செல்வதற்கு இலங்கைக்கு இருந்த ஆற்றல்கள் மற்றும் வாய்ப்புக்கள் சகலதையும் பாழ்படுத்திய ஒரு அரசியல் காலாசாரத்தை உருவகப்படுத்திநிற்கும் ஒரு நிறுவனமாகும். இனமோதல், பொருளாதார அனர்த்தம், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று இலங்கை அனுபவித்து வந்த பேரிடர்களை எல்லாம் மேலும் மோசமாக்கிய மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியாகும். இலங்கையின் அரசியல் வரலாறு “ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல பிரதான அரசியல் கட்சிகளுமே அதை மீறிச்செயற்பட்ட கவலை தருகின்ற” ஒரு முரண்நிலையைக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வசதியாக மறந்ததுடன் மாத்திரமல்ல, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்ததை நாம் கண்டோம். அநுர குமார திசநாயக்கவே நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று 2024 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறியதை மக்கள் மறந்து விடவில்லை. புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமானது என்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றும் கடந்த வாரம் பிரதமர் அமரசூரியவும் பாராளுமன்றத்தில் கூறினார். ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பிலான வாக்குறுதி மீறல்கள் வட்டத்தை முறிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை தற்போதைய தருணம் தருகிறது. அதை தேசிய மக்கள் சக்தி தவறவிடுமானால், அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறிய இன்னொரு கட்சி என்று வரலாற்று அபகீர்த்திக்குள்ளாக வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு மானசீகமாக விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை என்கிற அதேவேளை, போதிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்களிடம் அந்த பதவியை ஒழிப்பதற்கான அரசியல் விருப்பம் இருக்கவில்லை. சொந்த அரசியல் நலன்களை மனதிற் கொண்டு செயற்படாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் உறுதியாகச் செயற்படக்கூடிய தலைவர்கள் இதுவரையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி திசநாயக்க அத்தகைய தலைவர்களின் வரிசையில் தானும் இணைந்து கொள்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார் என்று நம்புவோமாக! 13 வது திருத்தத்தின் கதி: அடுத்ததாக, புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அரசாங்கம் கொண்டுவரும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை உள்ளடக்குவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதுவரையில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வு தொடர்பான சட்டரீதியான ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமே விளங்குகிறது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் கடந்த 38 வருடங்களாக பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே அந்த திருத்தத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாக அபகரித்து வந்திருக்கின்றன. 13 வது திருத்தத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுமா? அதில் இருப்பவற்றை விடவும் கூடுதலான அதிகாரங்களை புகுத்துவதற்கு அரசாங்கம் முன்வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிரிவினைக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்று கூச்சலிடும் தென்னிலங்கை தேசியவாத சக்திகள் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படும்போது அந்த திருத்தத்தை இல்லாமல் செய்து விடுமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற ஏனைய அரசியல் கட்சிகளும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது. தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே கடந்த வாரம் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருக்கும் முக்கியமான சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். “தற்போதைய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் சிலவற்றை உறுதி செய்கின்ற போதிலும், சிங்களம் தமிழை விடவும் மேலானதாகவும் பௌத்த மதம் மற்றைய மதங்களை விடவும் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யாத இந்த அரசியலமைப்பு இனங்களுக்கு இடையில் பிளவுக்கும் இன மோதல்களுக்கும் வழிவகுத்தது. “புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். “13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும். “அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தாமதமான தொடக்கம் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறது. தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் துணிவாற்றல் இல்லாமல் போய்விடும். முன்னர் அவ்வாறு நடந்தது. மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது. “இலங்கையை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற புதியதொரு ஜனநாயக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அதில் பங்குபற்றுவதாக உணரக்கூடிய முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இது எளிதான செயன்முறை அல்ல. இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது.” https://arangamnews.com/?p=12231

புதிய அரசியலமைப்பின் நோக்கம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 month 2 weeks ago

புதிய அரசியலமைப்பின் நோக்கம்?

August 4, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் —

புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை  அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். 

அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில்  செய்வதே வழமை.  சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும்   அரசாங்கங்களின் பதவிக்காலங்களின்  முற்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டன. 

1970 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே  மாதம்  முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) ஆயுதக் கிளர்ச்சியினால் இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால் அந்த அரசாங்கம் முன்கூட்டியே அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவும் கூடும். 1977 ஜூலையில் 

 பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 15 மாதங்களுக்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவிப்பின் அரசியல் விவேகம் குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது.

ஆனால், அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த வாரம் (ஜூலை 25) பிரதமர் ஹரிணி அமரசூரிய  பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கிளப்பிய கேள்விக்கு  பதிலளித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்  என்றும் கூறினார்.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முற்பகுதியிலும் பிரதமர் பாராளுமன்றத்தில்  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் காலவரிசை ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.

 “புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக அரசாங்கம் அவசரமாக  முன்னுரிமை கொடுக்க வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பல வருடங்களாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம்  ஜனநாயகத்தை உறுதிசெய்வதிலும் முழுமையாக கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது.  மாகாணசபை தேர்தல்களை நடத்திய பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை அரசாங்கம் தொடங்கும்” என்று அவர் கூறினார். 

அதேவேளை, இந்த வருடம் இந்த செயன்முறையை  முன்னெடுப்பதற்கு பட்ஜெட்டில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்ட பிரதமர் பொதுக் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னைய அரசாங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருந்த  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடருவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன — பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  அரசாங்கத்தின்  (2015 –2019)  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதியையே  பிரதமரும் மீண்டும் பாராளுமன்றத்தில் கூறினார். 

கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தற்போதைக்கு அரசாங்கம் அவரசம் காட்டப்போவதில்லை என்று பரவலாக நிலவிய அபிப்பிராயத்துக்கு  மத்தியில் கடந்த வாரம் அமைச்சரும் சபை முதல்வருமான பிமால் இரத்நாயக்க அடுத்த வருட முற்பகுதியில் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதன் பிரகாரம் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அடுத்த வருட முற்பகுதியில் இருந்து அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம். 

முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை ஒன்றை 2017 செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது அந்த இடைக்கால அறிக்கையில் இருந்தே மீண்டும் செயன்முறையை தொடங்க வேண்டும். அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதை செயன்முறை தொடங்கும்போதுதான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்த கட்டத்தில் முக்கியமான  கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவருவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை? 

இலங்கை இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. பல தசாப்தகால  அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதார நெருக்கடி, நிறுவனங்களின் சிதைவுகளுக்கு பிறகு கடந்தகால தவறான பாதையில் இருந்து விடுபட்டு புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு  ஜனாதிபதி திசநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும்  உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பல தசாப்தங்களாக நாட்டின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொனறைக் காண்பதற்கு பயனுறுதியுடைய  அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் தவிர புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை  பொறுத்தவரை கூடுதல் முன்னுரிமைக்குரிய வேறு விடயங்கள் இருக்க முடியாது. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது வெறுமனே குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனம் அல்ல. அது  முன்னேறிச் செல்வதற்கு இலங்கைக்கு இருந்த ஆற்றல்கள் மற்றும் வாய்ப்புக்கள் சகலதையும் பாழ்படுத்திய  ஒரு அரசியல் காலாசாரத்தை உருவகப்படுத்திநிற்கும் ஒரு நிறுவனமாகும்.  இனமோதல், பொருளாதார அனர்த்தம்,  மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம்  என்று இலங்கை அனுபவித்து வந்த பேரிடர்களை எல்லாம் மேலும் மோசமாக்கிய மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியாகும்.

 இலங்கையின் அரசியல் வரலாறு “ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல பிரதான அரசியல் கட்சிகளுமே அதை மீறிச்செயற்பட்ட கவலை தருகின்ற” ஒரு முரண்நிலையைக் கொண்டது.  அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வசதியாக  மறந்ததுடன் மாத்திரமல்ல, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்ததை நாம் கண்டோம்.

அநுர குமார திசநாயக்கவே நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று 2024 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறியதை மக்கள் மறந்து விடவில்லை.  புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமானது என்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றும்  கடந்த வாரம் பிரதமர் அமரசூரியவும் பாராளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பிலான வாக்குறுதி மீறல்கள் வட்டத்தை முறிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை தற்போதைய தருணம் தருகிறது. அதை தேசிய மக்கள் சக்தி தவறவிடுமானால், அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறிய இன்னொரு கட்சி என்று வரலாற்று அபகீர்த்திக்குள்ளாக வேண்டியிருக்கும்.

கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு மானசீகமாக விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை என்கிற அதேவேளை, போதிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்களிடம் அந்த பதவியை ஒழிப்பதற்கான அரசியல் விருப்பம் இருக்கவில்லை. 

சொந்த அரசியல் நலன்களை மனதிற் கொண்டு செயற்படாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் உறுதியாகச் செயற்படக்கூடிய தலைவர்கள் இதுவரையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி திசநாயக்க அத்தகைய தலைவர்களின் வரிசையில் தானும் இணைந்து கொள்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார் என்று நம்புவோமாக!

13 வது திருத்தத்தின் கதி:

அடுத்ததாக, புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அரசாங்கம் கொண்டுவரும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. 

தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை உள்ளடக்குவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 

 இதுவரையில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற  அதிகாரப்பகிர்வு தொடர்பான  சட்டரீதியான ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமே விளங்குகிறது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் கடந்த 38 வருடங்களாக பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே அந்த திருத்தத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாக அபகரித்து வந்திருக்கின்றன. 

13 வது திருத்தத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுமா? அதில் இருப்பவற்றை விடவும் கூடுதலான அதிகாரங்களை புகுத்துவதற்கு அரசாங்கம் முன்வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. 

 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால்  நாடு பிரிவினைக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்று கூச்சலிடும் தென்னிலங்கை தேசியவாத சக்திகள் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படும்போது அந்த திருத்தத்தை இல்லாமல் செய்து விடுமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சி,  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற ஏனைய அரசியல் கட்சிகளும்  அதிகாரப்பகிர்வு விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப்  போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது. 

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே கடந்த வாரம் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம்’  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருக்கும் முக்கியமான சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

“தற்போதைய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் சிலவற்றை உறுதி செய்கின்ற போதிலும், சிங்களம் தமிழை விடவும் மேலானதாகவும் பௌத்த மதம் மற்றைய மதங்களை விடவும் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் விருப்பங்களை  பூர்த்தி செய்யாத இந்த அரசியலமைப்பு இனங்களுக்கு இடையில் பிளவுக்கும்  இன மோதல்களுக்கும் வழிவகுத்தது.

“புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும்  பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். 

“13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம்,  நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும். 

“அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தெரிவித்தது.  ஆனால், தாமதமான தொடக்கம் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறது.  தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் துணிவாற்றல் இல்லாமல் போய்விடும்.  முன்னர் அவ்வாறு நடந்தது. மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது.

“இலங்கையை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற புதியதொரு ஜனநாயக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அதில் பங்குபற்றுவதாக உணரக்கூடிய முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இது எளிதான செயன்முறை அல்ல.

இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது.” 

https://arangamnews.com/?p=12231

கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?

1 month 2 weeks ago
தர்மஸ்தலா: நூற்றுக்கணக்கான மரணங்களும் நீடிக்கும் மர்மமும் -1979 முதல் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய் கட்டுரை தகவல் சதிஷ் பிபிசி 5 ஆகஸ்ட் 2025 (இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்) ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றியதாகவும், ஒரு அதிகாரம் மிக்க குடும்பம் கூறியதன் அடிப்படையில் அதை செய்ததாகவும் தெரிவிக்கிறார். 1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்ட அந்த உடல்களில் பலவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உடையது என்று ஜூலை 3ம் தேதி செய்தியை வெளிக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத தலித் நபர் தெரிவித்தார். படக்குறிப்பு, நேத்ராவதி ஆறு சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை இந்த விவகாரத்தை விசாரிக்க, ஜூலை 19ம் தேதி கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. புகார் அளித்தவர் அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டி ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வுப் பணி முடிந்துள்ள எட்டு இடங்களில் ஒன்றில், எலும்பு கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தடயவியல் பகுப்பாய்வுக்கு பிறகே, ஒரு முடிவுக்கு வர முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தர்மஸ்தலா கோயில் பொறுப்பாளரின் சகோதரர், மத தலத்தை நடத்தி வரும் குடும்பத்துக்கு எதிராக "அவதூறு" செய்திகளை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பெற்றிருந்தார். அந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது. ஜூலை 20ம் தேதி, கோயில் அதிகாரிகள் "வெளிப்படையான மற்றும் நியாயமான" விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். "ஒரு சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்கு உண்மையும் நம்பிக்கையுமே ஆதாரமாக விளங்குகின்றன. சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், நம்புகிறோம்" என்று அந்த அறிக்கை கூறியது. தர்மஸ்தலா மரணங்கள் குறித்த மர்மமும் கோபமும் சமீபத்திய நிகழ்வுகள் தர்மஸ்தலா மீது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல. 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 452 சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தர்மஸ்தலா மற்றும் அருகில் உள்ள உஜ்ரே கிராமத்தில் நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல்துறையினர் பதில் அளித்திருந்தனர். இவை தற்கொலைகளாகவோ, விபத்துகளாகவோ இருக்கலாம். மேலும், இந்த 452 மரணங்கள் தற்போது புதையுண்டிருக்கலாம் என்று முன்னாள் துப்புரவு ஊழியர் கூறும் உடல்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல, ஏனென்றால் இவை காவல்துறையால் விசாரிக்கப்படாத வழக்குகளாகும். எனினும், இரண்டு கிராமங்களிலும் நடைபெற்ற சந்தேகத்துக்கு இடமான மரணங்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நாகரிக சேவா அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பு பிபிசியிடம் கூறியது. காவல்துறை பதிவு செய்த மரணங்களை விட மேலும் பல சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் குறித்த புகார்கள் கடந்த ஆண்டுகளில் எழுந்துள்ளன. படக்குறிப்பு, மகேஷ் ஷெட்டி தனது இல்லத்தில் உயிரிழந்தவரின் புகைப்படத்தை, தனது விருப்பமான தலைவர்களின் படத்துடன் வைத்துள்ளார். 1979-ல் பள்ளி ஆசிரியர் உயிருடன் எரிக்கப்பட்டதாக வழக்கு தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக 1979-ல் வேதவள்ளி என்ற பள்ளி ஆசிரியர் எரித்து கொல்லப்பட்டார் என்று அப்பகுதியில் உள்ள மகேஷ் ஷெட்டி திமரோடி மற்றும் கிரீஷ் மட்டேனவர் குற்றம் சாட்டுகின்றனர். தர்மஸ்தலா மற்றும் உஜ்ரேவில் உள்ள பலர் 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தை நினைவு கூறுகின்றனர். கல்லூரியிலிருந்து காணாமல் போன 17 வயது மாணவி, 56 நாட்கள் கழித்து நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அந்த மாணவியின் தந்தை முடிவு செய்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று அவரது குடும்பமும் உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று பிபிசியிடம் பேசும் போது அவர்கள் புகார் தெரிவித்தனர். "எனது சகோதரியின் உடல் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் வழக்கப்படி எரிக்காமல் அவரது உடலை புதைத்துவிட்டோம். அவரது முன் வரிசை பற்கள் காணவில்லை என்று உடலை பார்த்த எனது அத்தை கூறினார். கிராமத்தில் உள்ள அதிகாரம் மிக்கவர்கள் எங்கள் தந்தையின் மீது கோபம் கொண்டிருந்தனர்" என்று அவரது சகோதரி கூறினார். இதே போன்ற மற்றொரு சம்பவம் குறித்த புகார் 2003-ம் ஆண்டு எழுந்தது. முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி, தனது நண்பர்களை காண வந்த போது தர்மஸ்தலாவிலிருந்து காணாமல் போய்விட்டார். இது குறித்தான புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துவிட்டனர் என்று அவரது தாய் குற்றம் சாட்டுகிறார். கிராமத்தின் பெரியவர்களும் அவரை கடிந்துக் கொண்டதாக பிபிசியிடம் கூறுகிறார். "இது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வேலையா? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அவரிடம் கூறப்பட்டதாக தெரிவிக்கிறார். "நான் கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த போது என்னை யாரோ சிலர் கடத்தி சென்றனர். அவர்களிடம் எனது மகள் குறித்து கேட்ட போது, தலையின் பின் பக்கத்தில் அடித்து தாக்கினர். மூன்று மாதங்கள் கழித்து பெங்களூரூவில் ஒரு மருத்துவமனையில் நான் கண் விழித்தேன்" என்கிறார். மங்களூரூ திரும்பிய போது, அவரது வீடு எரிக்கப்பட்டது தெரிய வந்தது. "எனது துணி, ஆவணங்கள் மற்றும் எனது மகளின் துணி மற்றும் ஆவணங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்தன" என்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் தோண்டும் பணிகளின் போது தனது மகளின் உடல் கிடைத்தால், அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். படக்குறிப்பு, 1986-ம் ஆண்டு உயிரிழந்த 17 வயது மாணவியின் உடலை, எதிர்கால விசாரணைக்காக குடும்ப வழக்கப்படி எரிக்காமல் புதைத்துள்ளார் அவரது தந்தை திருப்பத்தை ஏற்படுத்திய சிறுமி வழக்கு இந்த சம்பவங்களுக்கு இடையில் ஒரு சம்பவம் 2012-ம் ஆண்டு நடைபெற்றது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காயங்கள் நிறைந்த ஆடைகளற்ற ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "அவளது உடலை பார்த்தால், அவள் பல பேரால் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானவள் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிட முடியும்" என்கிறார் பிபிசியிடம் பேசிய அந்த சிறுமியின் தாய். சிறுமியின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் காவல்துறை விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் மக்களும் உரிமை கோரும் அமைப்புகளும் நீதி கேட்க தொடங்கிய போது கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சந்தோஷ் ராவ் என்பவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். சிறுமியின் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்ட தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்க அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர் ஒன்பது ஆண்டு காலம் சிறையில் கழித்த சந்தோஷ் ராவை சிறப்பு சி பி ஐ நீதிமன்றம் விடுவித்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேற்கூறிய வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினரின் பதிலை கேட்க பிபிசி தொடர்ந்து முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமிக்கு வைக்கப்பட்டுள்ள சிலை. தர்மஸ்தலாவின் "செல்வாக்கு மிக்கவர்கள்" மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகள் மற்றும் தலித் நபர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் பொதுவாக இருப்பது தர்மஸ்தலா கோயிலை நடத்தும் குடும்பம் தான். அவர்களை நோக்கியே புகார் சொல்லும் கைகள் நீள்கின்றன. "குற்றவாளி யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று 2012-ம் ஆண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தாத்தா கூறுகிறார். "அவர்கள் கொலை செய்து விட்டு, காவல்துறை குறித்த எந்த பயமும் இன்றி, உடல்களை சாலைக்கு அருகில் புதைத்துவிடுவார்கள். கழிவறை வசதி இல்லாததால் அந்த காலத்தில் நாங்கள் காடுகளுக்கு செல்வோம். அப்போது காட்டுப் பன்றிகளால் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் உடல்களை பார்ப்போம்" என்றார். இதே கருத்தை நாகரிக சேவா அறக்கட்டளையின் நிர்வாகி சோமநாதாவும் தெரிவிக்கிறார். "இங்கு ஒரு கும்பல் உள்ளது. 'டி' (D) கும்பல் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவு உள்ளது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். உயிருடன் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வழக்கை நடத்தி வரும் மகேஷ் ஷெட்டி திமரொடி, கடந்த 13 ஆண்டுகளில் தனக்கு எதிராக 25 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார். தர்மஸ்தலாவில் நடைபெற்றதாக புகார் எழுப்பப்படும் குற்றங்கள் குறித்து, " நான் எனது சிறு வயதிலிருந்து இதை பார்த்து வருகிறேன். காடுகளில் அழுகிய உடல்கள் எத்தனை என்று தெரியுமா? சாலைகளில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியுமா?" என்கிறார் அவர். இந்த சட்டப் போராட்டத்தில் அவருக்கு துணை நிற்கும் முன்னாள் காவல் அதிகாரியும் முன்னாள் பாஜக தலைவருமான கிரிஷ் மட்டேனவர், நூற்றுக்கணக்கான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். "குற்றவாளிகள் மதம் மற்றும் கடவுள் என்ற போர்வையை பயன்படுத்தி வருகின்றனர்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். சமீப காலங்களில் எழுப்பப்படும் புகார்கள் சமீப காலங்களிலும் செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும் கோயிலை நடத்தி வரும் குடும்பம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மாணவர் தலைவர் தனுஷ் ஷெட்டி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தர்மஸ்தலா குடும்பம் குறித்து தான் எழுத ஆரம்பித்த பிறகு, "உனக்கு விரைவில் ஒரு விபத்து நிகழப் போகிறது" என்று தனது செல்போனில் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்தார். சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, அவர் ஆட்டோ ஒன்றினால் மோதப்பட்டதாக கூறுகிறார். அதன் பின், "நான் உனது விபத்தை நேரில் பார்த்தேன். அது கடவுளின் ஆசை" என்று மற்றொரு குறுஞ்செய்தி வந்ததாகவும் கூறுகிறார். காவல்துறை முதலில் புகாரை பெற மறுத்ததாகவும், காவல் கண்காணிப்பாளரை அணுகிய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று ஷெட்டி மேலும் கூறுகிறார். "எனினும் விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார். கர்நாடகாவில் உள்ள பிரபல யூடியூபர் எம் டி சமீர், தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக பேசியதற்காக தானும் குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார். 2012ம் ஆண்டு சிறுமியின் மரணத்துக்கு பிறகு இந்த விவகாரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்கு சமீர் போன்ற உள்ளூர் சமூக ஊடகவியலாளர்கள் காரணமாக இருந்தனர். தற்போது மூன்று வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் யூ டியூப் சேனலிலிருந்து உள்ளடகத்தை நீக்குமாறு பல சட்ட உத்தரவுகள் வந்துள்ளதாகவும் சமீர் பிபிசியிடம் தெரிவித்தார் புகார் கொடுத்த முன்னாள் துப்புரவு ஊழியர் தனது வாக்குமூலத்தில், "பெயர்களை சொல்லும் முன் மாயமாவது அல்லது கொல்லப்படுவது" குறித்த கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை பெற தர்மஸ்தலா கோயில் பிரதிநிதிகளை பிபிசி அவர்களை தொடர்பு கொண்ட முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொண்டு பதில் பெற இயலவில்லை. படக்குறிப்பு, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் புகார் அளித்த முன்னாள் துப்புரவு ஊழியர் கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு கர்நாடகாவில் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் – பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் கோயிலை நடத்தும் குடும்பத்தினரை பாதுகாப்பதே அவர்கள் தைரியமாக செயல்பட காரணம் என்று மகேஷ் ஷெட்டி திமரொடி கூறுகிறார். "மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் அவர்களை வந்து பார்க்கின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் மூன்று கட்சிகளும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. தனது பெயரை குறிப்பிட விரும்பாத பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்து, விசாரணை அறிக்கை பொது வெளிக்கு வரட்டும்" என்றார். கர்நாடக காங்கிரஸ் ஊடக கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ், காங்கிரஸ் தலைமையிலான அரசே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது என்று சுட்டிக்காட்டினார். "குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. அதோடு, உண்மையை பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு" என்றார். அதே நேரம் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அறிவழகன் தங்கள் கட்சிக்கும் கோயிலை நடத்தும் குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். "சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை காத்திருப்போம்" என்றார். முன்னாள் துப்புரவு ஊழியரின் புகாரை எடுத்து வாதாடி வரும் வழக்கறிஞர் கே வி தனுஞ்சயா இந்த விவகாரத்தின் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து பேசினார். "தனது கட்சிக்காரரின் புகார்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது காவல்துறையினரின் வேலை" என்று பிபிசியிடம் கூறினார். "அவரது குற்றச்சாட்டுகள் கடந்த கால புகார்கள் அல்லது நிலுவையில் உள்ள விசாரணைகளுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. இது முற்றிலும் புதிய புகார். எனக்கு தெரிந்த வரையில் இது இந்திய நீதித்துறையில் ஒரு அரிய வழக்காகும்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98d9vl511o

தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?

1 month 2 weeks ago
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” உலகெங்கும் நல்லோர்கள் அதிகரித்து விட்டனர். அதனால்தான் எங்கும் பெருமழை. கள உறவுகளே! நீங்கள் அறிந்த, தெரிந்த அனைத்து நல்லோரையும் அறியத்தந்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவியுங்கள். 😆

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்! - ஜனாதிபதி

1 month 2 weeks ago
Published By: VISHNU 06 AUG, 2025 | 01:32 AM பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கினார். கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும், சமூக மதிப்புகள் மற்றும் சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி, தமக்குக் கிடைத்த பொறுப்பை மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தாமல், சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை வழங்குவதற்கும் பயன்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். அரச சேவை இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், நேரம் எடுத்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றும், இல்லையெனில், நமது பங்கை சுயமதிப்பீடு செய்து, குடிமக்களின் தேவைகளின் அடிப்படையில் திறமையான சேவையை வழங்குவதற்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார். புதிய மாற்றத்திற்குத் தேவையான புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழு உரை: இங்குள்ளவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம். எங்களுடன் படித்தவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் எங்களுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். எனவே, பல்வேறு துறைகளில் பணிபுரியும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம். இருப்பினும், அந்த அனைத்து சந்திப்புகளையும் விட 'இந்த சந்திப்பு' மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நமது நாட்டின் அரச சேவையில் முன்னணி சேவையான இலங்கை நிர்வாக சேவையின் இந்த வருடாந்த மாநாட்டில் பங்கேற்கும் நீங்கள், நமது அரச கட்டமைப்பைப் பராமரிக்க அதிக முயற்சி மற்றும் பொறுப்பைக் கொண்ட ஒரு குழு. எனவே, உங்களுடன் இந்த வகையான கலந்துரையாடலை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், இலங்கை நிர்வாக சேவையின் இதுவரை வளர்ந்த வரலாறு குறித்த ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எங்கள் நிர்வாக சேவைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகும், எங்கள் அரசியல் துறைக்கும் நீண்ட வரலாறு உண்டு. எனவே, எங்கள் அரச சேவையும் அரசியல் இயந்திரமும் இணைந்து இந்த நாட்டை நீண்ட காலமாக வழிநடத்தி வருகின்றன. இருப்பினும், எங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், அரசியல் அதிகாரத்திற்கும் அதனுடன் தொடர்புடைய அரச கட்டமைப்பிற்கும் எங்கள் நாடு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நாங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளோம். கட்டளைகள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், நாம் திரும்பிப் பார்த்தால், நாம் அனைவரும் நம் மனசாட்சியுடன் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இந்த அரச சேவையின் நிலையில் திருப்தி அடைய முடியுமா? நம்மில் யாரும் இதில் திருப்தி அடைய முடியாது என்று நினைக்கிறேன். நமது சொந்த அளவீடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண குடிமக்கள் திருப்தி அடைகிறார்களா என்று கேட்போம். அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே, நாம் ஒரு மிக முக்கியமான கட்டத்தை அடைந்த நேரத்தில் உங்களின் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் உள்ளன. பழைய முறைப்படி உங்கள் நேரத்தை செலவழித்து, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை அந்த சமயத்திற்கு ஏற்ப மாத்திரம் நிறைவேற்றுவதற்கான பழைய முறையை தெரிவு செய்யலாம். அதுதான் நம் நாடு நீண்ட காலமாகச் சென்று வரும் பாதை. மிகவும் எளிதான பாதை. ஆனால், இன்னொரு பாதை உள்ளது. இந்த அரசை உருவாக்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நமது பங்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுய மதிப்பீடு செய்வதன் மூலம் இதை மாற்றுவதற்கான உறுதியுடன் அனைவரும் செயல்படுவது அது எளிதான பாதை அல்ல. ஏனெனில், பொதுவாக, மக்களின் ஒரு பண்பு உள்ளது. மக்கள் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். மக்கள் பரிசோதனைகள் செய்து பார்க்க பயப்படுகிறார்கள். நமக்கு அன்றாட நடவடிக்கைகள் இருந்தால், நாம் தினமும் நம் கடமைகளைச் செய்தால், நாம் பழக்கங்களுக்கு அடிமையாகி அந்தக் கடமைகளைச் செய்ய முடியும். ஆனால், நாம் புதிய சோதனைகளைச் செய்தால். புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், பழக்கத்தின் சக்தி அதற்குத் தடை போடும். ஆனால், இன்று மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை நாம் திரும்பிப் பார்த்தால், மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய ரகசியம் பரிசோதனைகளுக்கு பயப்படாமல் இருப்பதுதான். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். ஆம், நீங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சமூகத்தால் நிராகரிக்கப்படுவீர்கள். எனவே, புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு நான் முதலில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாத ஒரு உயிரினம் அல்லது கோட்பாடு இல்லை. இன்றேல் மிக விரைவாக அழிக்கப்படும். எனவே, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள். இருப்பினும், சிதைவடைந்த அரசில் இருந்தே உங்களை மாற்றிக் கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது அரச தேகம் அழிந்துவிட்டது. நமது அரசு பௌதிக மற்றும் ஆன்மீகம் இரண்டும் அழிந்துவிட்டது. இதுதான் யதார்த்தம். நமக்கு முன்னால் உள்ள கடுமையான உண்மையைப் பற்றி ஆராயாமல் விட்டு விட்டால்,அந்த கல்லறைக்கு முன்னால் கடந்து செல்லும்போது நாம் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு சென்றால், இந்த மாற்றத்தை நாம் செய்ய முடியாது. எனவே, முதலில், நமக்கு முன்னால் உள்ள கடினமான யதார்த்தத்தின் தன்மையை, உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதை விவாத மேசையில் முன்வைக்க வேண்டும். நம் முன் உள்ள யதார்த்தம் என்ன?இன்று இங்குள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் 15-16 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மற்றும் சிதைவடைந்த வாகனங்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் மேசையில் உள்ள கணினி பழைய ஒன்றாகும். எனவே,பௌதீக ரீதியான அரச சேவை சேதமடைந்துள்ளது. எனவே, ஒரு சேதமடைந்த அரச சேவையிலிருந்து ஒரு நவீன அரசை உருவாக்க முடியாது. எனவே, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையை நவீனமயமாக்க தேவையான வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை நோக்கி நாம் மிக விரைவாக செல்ல வேண்டும். அதுதான் நமது அடுத்த கட்டத்தில் மிக முக்கியமான மாற்றம். இருப்பினும், பழக்கதோசம் அந்த மாற்றத்தைத் தடுக்கிறது. சில நிறுவனங்களில் மென்பொருள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது சிறந்தது. மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, தனது ஒரு அலுவலகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஒரு மாவட்ட செயலாளர் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்குக் காரணம், அந்த அலுவலகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை விரும்பும் அதிகாரிகள் இருப்பதுதான். அப்போது அது அங்குள்ளவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளதுடன், பொதுவான மாற்றமாக அல்ல. பழக்க வழக்கத்தின் அதிகாரம் இதற்கு சவால் விடுகிறது. ஆனால் எமது அரச சேவையை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற பொதுவான தேவை எமக்கு உள்ளது. இதன்போது, அண்மைய வரலாற்றில் மிக அதிக அடிப்படை சம்பள உயர்வை நாம் உங்களுக்கு வழங்கினோம். இந்த சம்பள உயர்வுக்கு இந்த ஆண்டு 11,000 கோடி ரூபா தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு கிடைக்கும். அதற்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. 2027 சம்பள உயர்வுக்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு ரூபா 33,000 கோடி செலவினச் சுமையை நாம் சுமக்க வேண்டியுள்ளது. இது வழங்கப்படும் சம்பளத்திற்கு கூடுதலானதாகும். 2027 வரவு செலவுத்திட்டத்தில் இதை நாம் ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 11,000 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுவரவு செலவுத்திட்டத்தில் அது 22,000 கோடியாக மாறும். 2027 ஆம் ஆண்டில் இந்த மொத்த சம்பள உயர்வைச் செலுத்த, ரூபா 33,000 கோடி செலவினத்தை ஏற்க வேண்டியிருக்கும். நமது அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்ற, நியாயமான சம்பள அளவை நிறுவ வேண்டும் என்பதை நாம் அறிவோம். நாம் அதைச் செய்துள்ளோம். 80% சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், அரச கட்டமைப்பில் சில இடங்களில் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை கண்டுகொள்வதில்லை. லொக்கரில் பணம் வைத்திருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவை மனப்பான்மை ரீதியிலான பிரச்சினை. கைதிகளிடம் கைவிலங்குகளும் அவற்றின் சாவிகளும் உள்ளன. இது என்ன பிரச்சினை? தமது பொறுப்பும் சமூக மதிப்பும் நிதி மதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. மனிதகுலம் முழுவதும் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. அவை சுற்றறிக்கைகள், கட்டளைகள் அல்லது அரசியலமைப்புச் சட்டங்கள் மூலம் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. பிரஜைகளாக தமது பொறுப்புகள் மற்றும் சமூகக் கடமைகளாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு நவீன அரச சேவையை உருவாக்க வேண்டுமென்றால், மேலே நான் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களைப் போலவே, ஒரு புதிய மனப்பான்மையுடன் கூடிய அரச சேவையை உருவாக்க வேண்டும். நமது அரச சேவைக்கு ஒரு புதிய பெறுமதிகள் மற்றும் நெறிமுறைகள் தேவை. மேலும் பெறுமதிகளின் உண்மையான அர்த்தத்தை நாம் அடையாளம் காண வேண்டும். பெறுமதிகள் என்பது மிகை-நுகர்வு அல்லது மற்றவர்களை நசுக்கி உயர்ந்தவர்களாக மாறுவது அல்ல.இந்த தவறான பெறுமதிகள் மற்றும் மதிப்பு கட்டமைப்புகளுக்கு பதிலாக சமூகத்திற்கு புதிய பெறுமதிகளின் மதிப்பு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கு மென்மை, இரக்கம், தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக்கூறல் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் பிரஜைகள். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது துறைகளில் பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளில் எதுவும் மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு குடிமக்கள் நம் ஒவ்வொருவரையும் கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து நம் நாட்டையும் குடிமக்களையும் விடுவிப்பீர்களா என்று எம்மை கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்களும் நாங்களும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நம் நாட்டின் குடிமக்கள் ஒரு புதிய உலகத்தையும் நல்ல விடயங்களையும் கனவு கூட காண மாட்டார்கள். எனவே, இந்த நல்ல விடயங்களை உருவாக்குவதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு உண்டு. சில விசாரணைகள் குறித்து சில விமர்சனங்களும் கருத்துகளும் உள்ளன. யாரும் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதிகாரிகளின் கடந்த கால நடைமுறைகள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி கேள்விப்பட்ட விடயங்கள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி அறியப்பட்ட விடயங்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு அதிகாரி பற்றிய பழைய கருத்துகளின்படி நாங்கள் உங்களைப் பார்க்கவில்லை. அவை எங்களுக்கு தேவையில்லை. ஆனால், உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நீங்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து நாங்கள் உங்களை அளவிடுகிறோம். கடந்த கால நிகழ்வுகள் விசாரிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களை இடுகிறீர்கள். சமூக மதிப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கையொப்பம் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் சட்டத்தை அமுல்படுத்துவோம். இதை அரச சேவையை கட்டுப்படுத்துவதாகவோ அல்லது அரச அதிகாரிகளை மிரட்டுவதாகவோ கருத முடியாது. எங்களுக்கு அத்தகைய விருப்பம் இல்லை. சமீபத்தில் ஒரு முன்னாள் ஜனாதிபதி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை இப்படியே தொடர விட்டுவிடுங்கள். எதுவும் கூறவேண்டாம் என்று கூறியதை நான் பார்த்தேன். மக்கள் அதன் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் அங்குதான் விழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்போது, அவர் கோபப்படுவார், இவர் கோபப்படுவார், அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அரச சேவைக்குத் தேவையான எல்லைகளை மீண்டும் நிறுவுவது ஒரு அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காரணமாகுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்த நாட்டில் அரச சேவையில் ஒரு புதிய கலாசாரத்தை நாமே கொண்டு வர வேண்டும். குடிமக்களுக்கு திருப்திகரமான அரச சேவையை வழங்க வேண்டும். புதன்கிழமை உங்கள் அலுவலகத்திற்கு வரும் மக்களில் எத்தனை பேர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள் என்பதை நீங்கள் தேடிப்பாருங்கள். ஏன் அவ்வாறு நிகழ்ந்துள்ளது? எனவே, எமது அரச சேவையை ஒரு புதிய கலாசாரமாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். அதற்காக எடுக்கப்படும் எந்தவொரு முடிவிற்கும் நாங்கள் பாதுகாவலர்களாக மாறுவோம். நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்ல, ஆனால் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சி எங்களிடம் உள்ளது. இது யாரும் பயப்பட வேண்டிய முயற்சி அல்ல, மாறாக ஆசிர்வதிக்கப்பட வேண்டிய முயற்சி. நீங்கள் அதில் எங்களுடன் இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையும் சவாலும் எமக்கு உள்ளது. இந்த நாடு தொடர்பில் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைந்த உள்ளம் உங்களிடம் உள்ளது. ஆனால், நமது நல்லெண்ணத்திற்கும் நமது பணிக்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. உங்கள் உண்மையான மனசாட்சியின்படி செயல்படத் தொடங்குங்கள். உங்கள் உண்மையான மனசாட்சியைக் கேட்கத் தொடங்குங்கள். அரசியல் அதிகாரமும் அரச துறையும் ஒன்றுபட்ட நோக்கத்துடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நல்ல செயலைச் செய்ய முடியும். ஒரு அரசியல் அதிகாரமாக எங்களுக்கும், ஒரு அரச ஊழியராக உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம். நாம் ஒரே நோக்கத்திற்காக எங்கள் கடமைகளைச் செய்வோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவான இலக்கைப் பற்றி கலந்துரையாடிய குழுக்கள் உள்ளன. நண்பர்களாகச் செயல்பட்ட குழுக்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வலுவான அரச சேவையை உருவாக்கவும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதுடன், இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய: சில காலமாக, நமது நாட்டில் அரச நிர்வாக சேவையின் மதிப்பும் கண்ணியமும் ஓரளவு குறைந்துள்ளது. அரசியல் தலையீடும் இதற்கு ஒரு காரணமாகும். இதன் விளைவாக, அரச நிர்வாக சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச நிர்வாக சேவையில் நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு அரசியல் அதிகாரமாக, மக்கள் சார்ந்த அரசாங்கத்தை நிறுவ நாங்கள் தலையிடுகிறோம். நீங்கள் செய்யும் மிக முக்கியமான கடமையை மக்கள் சார்ந்த சேவையாக மாற்ற அரசியல் அதிகாரம் ஊடாக முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் பங்களிப்பு தேவை. அரச சேவையில் தவறு செய்ய நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. அதை நாங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. அந்த நம்பிக்கையில், இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்கள் சேவையில் செயல்படுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்த நம்பிக்கை, நாட்டிற்காக உருவாக்கப்படும் கொள்கைகளை செயல்படுத்த உங்களுக்கு பலத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய: அரச சேவையில் டிஜிட்டல் மயமாக்கலின் சக்தியுடன், நாட்டு மக்கள் திறமையான சேவையைப் பெற முடியும். சர்வதேச திறன்களைக் கொண்ட நாடாக முன்னேற, அரச நிர்வாக சேவைக்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியம். இலங்கை கிரிக்கெட், இலங்கை வரலாறு போன்றவை உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன போன்று, டிஜிட்டல் மயமாக்கல் மூலம், அரச சேவையையும் உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இதற்கு முன்னர் இருந்த பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் வெற்றி கொள்ள அரச நிர்வாக சேவை வழங்கிய சேவை மிகவும் முக்கியமானது. நெருக்கடியின் போது இலங்கையைப் பார்த்த சர்வதேச சமூகம், இவ்வளவு விரைவாக நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் இலங்கை அரச நிர்வாக சேவை அந்த பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனுடன் டிஜிட்டல் மயமாக்கலும் சேர்க்கப்படும்போது, இலங்கையை உலகளவில் முன்னேற்றுவது கடினமான விடயம் அல்ல.டிஜிட்டல் மயமாக்கல் உலகத்தரம் வாய்ந்த நிர்வாக அமைப்பை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இந்த நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி சஞ்சிகையொன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/221923

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்! - ஜனாதிபதி

1 month 2 weeks ago

Published By: VISHNU

06 AUG, 2025 | 01:32 AM

image

பௌதீக  ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (05)  நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு  ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி  சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச  சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கினார்.

கவர்ச்சிகரமான அரச  சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம்   உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக  அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி கூறினார்.

தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும், சமூக  மதிப்புகள் மற்றும் சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி, தமக்குக் கிடைத்த பொறுப்பை மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தாமல், சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை வழங்குவதற்கும் பயன்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.

அரச சேவை இன்று ஒரு முக்கிய  கட்டத்தை எட்டியுள்ளது என்றும்,  நேரம் எடுத்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றும், இல்லையெனில், நமது பங்கை சுயமதிப்பீடு செய்து, குடிமக்களின் தேவைகளின் அடிப்படையில் திறமையான சேவையை வழங்குவதற்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

புதிய  மாற்றத்திற்குத் தேவையான புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழு உரை:

இங்குள்ளவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம். எங்களுடன் படித்தவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் எங்களுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். எனவே, பல்வேறு துறைகளில் பணிபுரியும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம். இருப்பினும், அந்த அனைத்து சந்திப்புகளையும் விட 'இந்த சந்திப்பு' மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நமது நாட்டின் அரச சேவையில் முன்னணி சேவையான இலங்கை நிர்வாக சேவையின் இந்த வருடாந்த மாநாட்டில் பங்கேற்கும் நீங்கள், நமது அரச கட்டமைப்பைப் பராமரிக்க அதிக முயற்சி மற்றும் பொறுப்பைக் கொண்ட ஒரு குழு. எனவே, உங்களுடன் இந்த வகையான கலந்துரையாடலை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆரம்பத்தில், இலங்கை நிர்வாக சேவையின் இதுவரை வளர்ந்த வரலாறு குறித்த ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எங்கள் நிர்வாக சேவைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப்

பிறகும், எங்கள் அரசியல் துறைக்கும் நீண்ட வரலாறு உண்டு. எனவே, எங்கள் அரச சேவையும் அரசியல் இயந்திரமும் இணைந்து இந்த நாட்டை நீண்ட காலமாக வழிநடத்தி வருகின்றன.

இருப்பினும், எங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், அரசியல் அதிகாரத்திற்கும் அதனுடன் தொடர்புடைய அரச கட்டமைப்பிற்கும் எங்கள் நாடு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நாங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளோம். கட்டளைகள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், நாம் திரும்பிப் பார்த்தால், நாம் அனைவரும் நம் மனசாட்சியுடன் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இந்த அரச சேவையின் நிலையில் திருப்தி அடைய முடியுமா? நம்மில் யாரும் இதில் திருப்தி அடைய முடியாது என்று நினைக்கிறேன். நமது சொந்த அளவீடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண குடிமக்கள் திருப்தி அடைகிறார்களா என்று கேட்போம். அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே,  நாம் ஒரு மிக முக்கியமான கட்டத்தை அடைந்த நேரத்தில் உங்களின் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் உள்ளன.

பழைய முறைப்படி உங்கள் நேரத்தை செலவழித்து, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை அந்த சமயத்திற்கு ஏற்ப மாத்திரம் நிறைவேற்றுவதற்கான பழைய முறையை தெரிவு செய்யலாம்.  அதுதான் நம் நாடு நீண்ட காலமாகச் சென்று வரும் பாதை. மிகவும் எளிதான பாதை.

ஆனால், இன்னொரு பாதை உள்ளது. இந்த அரசை  உருவாக்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நமது பங்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுய மதிப்பீடு செய்வதன் மூலம் இதை மாற்றுவதற்கான உறுதியுடன் அனைவரும் செயல்படுவது அது எளிதான பாதை அல்ல. ஏனெனில், பொதுவாக, மக்களின் ஒரு பண்பு உள்ளது. மக்கள் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். மக்கள் பரிசோதனைகள் செய்து பார்க்க பயப்படுகிறார்கள். நமக்கு அன்றாட நடவடிக்கைகள் இருந்தால், நாம் தினமும் நம் கடமைகளைச் செய்தால், நாம் பழக்கங்களுக்கு அடிமையாகி அந்தக் கடமைகளைச் செய்ய முடியும்.

ஆனால், நாம் புதிய சோதனைகளைச் செய்தால். புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், பழக்கத்தின் சக்தி அதற்குத் தடை போடும். ஆனால், இன்று மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை நாம் திரும்பிப் பார்த்தால், மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய ரகசியம் பரிசோதனைகளுக்கு பயப்படாமல் இருப்பதுதான்.

புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். ஆம், நீங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சமூகத்தால் நிராகரிக்கப்படுவீர்கள். எனவே, புதிய 

மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு நான் முதலில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாத ஒரு உயிரினம் அல்லது கோட்பாடு இல்லை. இன்றேல் மிக விரைவாக அழிக்கப்படும். எனவே, புதிய  சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள்.

இருப்பினும், சிதைவடைந்த அரசில் இருந்தே  உங்களை மாற்றிக் கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது அரச தேகம் அழிந்துவிட்டது. நமது அரசு  பௌதிக மற்றும் ஆன்மீகம் இரண்டும் அழிந்துவிட்டது. இதுதான் யதார்த்தம். நமக்கு முன்னால் உள்ள கடுமையான உண்மையைப் பற்றி ஆராயாமல் விட்டு விட்டால்,அந்த கல்லறைக்கு முன்னால் கடந்து செல்லும்போது நாம் வேறுபக்கம் பார்த்துக்  கொண்டு சென்றால், இந்த மாற்றத்தை நாம் செய்ய முடியாது.

எனவே, முதலில், நமக்கு முன்னால் உள்ள கடினமான யதார்த்தத்தின் தன்மையை, உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதை விவாத மேசையில் முன்வைக்க வேண்டும். நம் முன் உள்ள யதார்த்தம் என்ன?இன்று இங்குள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் 15-16 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மற்றும் சிதைவடைந்த வாகனங்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் மேசையில் உள்ள கணினி பழைய ஒன்றாகும். எனவே,பௌதீக ரீதியான அரச சேவை சேதமடைந்துள்ளது.  எனவே, ஒரு சேதமடைந்த அரச சேவையிலிருந்து ஒரு நவீன அரசை உருவாக்க முடியாது. எனவே, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையை நவீனமயமாக்க தேவையான வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை நோக்கி நாம் மிக விரைவாக செல்ல வேண்டும். அதுதான் நமது அடுத்த கட்டத்தில் மிக முக்கியமான மாற்றம். இருப்பினும், பழக்கதோசம் அந்த மாற்றத்தைத் தடுக்கிறது. சில நிறுவனங்களில் மென்பொருள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். அதை நாங்கள்  ஏற்றுக்கொள்கிறோம். அது சிறந்தது. மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, தனது ஒரு   அலுவலகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஒரு மாவட்ட செயலாளர் எனக்கு தெளிவுபடுத்தினார்.

அதற்குக் காரணம், அந்த அலுவலகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை விரும்பும் அதிகாரிகள் இருப்பதுதான். அப்போது அது அங்குள்ளவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளதுடன், பொதுவான மாற்றமாக அல்ல. பழக்க வழக்கத்தின் அதிகாரம் இதற்கு சவால் விடுகிறது. ஆனால் எமது அரச சேவையை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற பொதுவான தேவை எமக்கு உள்ளது.

இதன்போது, அண்மைய வரலாற்றில் மிக அதிக அடிப்படை சம்பள உயர்வை நாம் உங்களுக்கு வழங்கினோம். இந்த சம்பள உயர்வுக்கு இந்த ஆண்டு 11,000 கோடி ரூபா தேவைப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு கிடைக்கும். அதற்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. 2027 சம்பள உயர்வுக்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு ரூபா 33,000 கோடி செலவினச் சுமையை நாம் சுமக்க 

வேண்டியுள்ளது. இது வழங்கப்படும் சம்பளத்திற்கு கூடுதலானதாகும். 2027 வரவு செலவுத்திட்டத்தில் இதை நாம் ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில்  11,000 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுவரவு செலவுத்திட்டத்தில் அது 22,000 கோடியாக மாறும். 2027 ஆம் ஆண்டில் இந்த மொத்த சம்பள உயர்வைச் செலுத்த, ரூபா 33,000 கோடி செலவினத்தை ஏற்க வேண்டியிருக்கும். நமது அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்ற, நியாயமான சம்பள அளவை நிறுவ வேண்டும் என்பதை நாம் அறிவோம். நாம் அதைச் செய்துள்ளோம். 80% சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால், அரச கட்டமைப்பில் சில இடங்களில் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை கண்டுகொள்வதில்லை. லொக்கரில் பணம் வைத்திருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவை மனப்பான்மை ரீதியிலான பிரச்சினை. கைதிகளிடம் கைவிலங்குகளும் அவற்றின் சாவிகளும் உள்ளன. இது என்ன பிரச்சினை? தமது பொறுப்பும் சமூக மதிப்பும் நிதி மதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. மனிதகுலம் முழுவதும் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. அவை சுற்றறிக்கைகள், கட்டளைகள் அல்லது அரசியலமைப்புச் சட்டங்கள் மூலம் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. பிரஜைகளாக தமது பொறுப்புகள் மற்றும் சமூகக் கடமைகளாக புரிந்து கொள்ள வேண்டும்.

 நாம் ஒரு நவீன அரச சேவையை உருவாக்க வேண்டுமென்றால், மேலே நான் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களைப் போலவே, ஒரு புதிய மனப்பான்மையுடன் கூடிய அரச சேவையை உருவாக்க வேண்டும். நமது அரச சேவைக்கு ஒரு புதிய பெறுமதிகள் மற்றும் நெறிமுறைகள் தேவை. மேலும் பெறுமதிகளின் உண்மையான அர்த்தத்தை நாம் அடையாளம் காண வேண்டும். பெறுமதிகள் என்பது மிகை-நுகர்வு அல்லது மற்றவர்களை நசுக்கி உயர்ந்தவர்களாக மாறுவது அல்ல.இந்த தவறான பெறுமதிகள் மற்றும் மதிப்பு கட்டமைப்புகளுக்கு பதிலாக சமூகத்திற்கு புதிய பெறுமதிகளின் மதிப்பு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கு மென்மை, இரக்கம், தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக்கூறல் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் பிரஜைகள். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது  துறைகளில் பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளில் 

எதுவும் மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு குடிமக்கள் நம் ஒவ்வொருவரையும் கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து நம் நாட்டையும் குடிமக்களையும் விடுவிப்பீர்களா என்று எம்மை கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

நீங்களும் நாங்களும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நம் நாட்டின் குடிமக்கள் ஒரு புதிய உலகத்தையும் நல்ல விடயங்களையும் கனவு கூட காண மாட்டார்கள். எனவே, இந்த நல்ல 

விடயங்களை உருவாக்குவதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு உண்டு. சில விசாரணைகள் குறித்து சில விமர்சனங்களும் கருத்துகளும் உள்ளன. யாரும் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதிகாரிகளின் கடந்த கால நடைமுறைகள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி கேள்விப்பட்ட விடயங்கள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி அறியப்பட்ட விடயங்கள் உள்ளன. இருப்பினும், 

ஒவ்வொரு அதிகாரி பற்றிய பழைய கருத்துகளின்படி நாங்கள் உங்களைப் பார்க்கவில்லை. அவை எங்களுக்கு தேவையில்லை. ஆனால், உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நீங்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து நாங்கள் உங்களை அளவிடுகிறோம். கடந்த கால நிகழ்வுகள் விசாரிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களை இடுகிறீர்கள். சமூக மதிப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கையொப்பம் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் சட்டத்தை அமுல்படுத்துவோம். இதை அரச சேவையை கட்டுப்படுத்துவதாகவோ அல்லது அரச அதிகாரிகளை மிரட்டுவதாகவோ கருத முடியாது. எங்களுக்கு அத்தகைய விருப்பம் இல்லை.

சமீபத்தில் ஒரு முன்னாள் ஜனாதிபதி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை இப்படியே தொடர விட்டுவிடுங்கள். எதுவும் கூறவேண்டாம் என்று கூறியதை நான் பார்த்தேன். மக்கள் அதன் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் அங்குதான் விழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்போது, அவர் கோபப்படுவார், இவர் கோபப்படுவார், அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அரச சேவைக்குத் தேவையான எல்லைகளை மீண்டும் நிறுவுவது ஒரு அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான  காரணமாகுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்த நாட்டில் அரச சேவையில் ஒரு புதிய கலாசாரத்தை நாமே கொண்டு வர வேண்டும். குடிமக்களுக்கு திருப்திகரமான அரச சேவையை வழங்க வேண்டும். புதன்கிழமை உங்கள் அலுவலகத்திற்கு வரும் மக்களில் எத்தனை பேர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள் என்பதை நீங்கள் தேடிப்பாருங்கள். ஏன் அவ்வாறு நிகழ்ந்துள்ளது? எனவே, எமது அரச சேவையை ஒரு புதிய கலாசாரமாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். அதற்காக எடுக்கப்படும் எந்தவொரு முடிவிற்கும் நாங்கள் பாதுகாவலர்களாக மாறுவோம்.

நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்ல, ஆனால் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சி எங்களிடம் உள்ளது. இது யாரும் பயப்பட வேண்டிய முயற்சி அல்ல, மாறாக ஆசிர்வதிக்கப்பட வேண்டிய முயற்சி. நீங்கள் அதில் எங்களுடன் இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையும் சவாலும் எமக்கு உள்ளது. இந்த நாடு தொடர்பில் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைந்த உள்ளம் உங்களிடம் உள்ளது. ஆனால், நமது நல்லெண்ணத்திற்கும் நமது பணிக்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. உங்கள் உண்மையான மனசாட்சியின்படி செயல்படத் தொடங்குங்கள். உங்கள் உண்மையான மனசாட்சியைக் கேட்கத் தொடங்குங்கள். அரசியல் அதிகாரமும் அரச துறையும் ஒன்றுபட்ட நோக்கத்துடன் செயல்பட்டால் 

மட்டுமே இந்த நல்ல செயலைச் செய்ய முடியும். ஒரு அரசியல் அதிகாரமாக எங்களுக்கும், ஒரு அரச ஊழியராக உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம். நாம் ஒரே  நோக்கத்திற்காக எங்கள் கடமைகளைச் செய்வோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவான இலக்கைப் பற்றி கலந்துரையாடிய குழுக்கள் உள்ளன. நண்பர்களாகச் செயல்பட்ட குழுக்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நான் 

கேட்டுக்கொள்கிறேன். ஒரு வலுவான அரச சேவையை உருவாக்கவும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதுடன், இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

சில காலமாக, நமது நாட்டில் அரச நிர்வாக சேவையின் மதிப்பும் கண்ணியமும் ஓரளவு குறைந்துள்ளது. அரசியல் தலையீடும் இதற்கு ஒரு காரணமாகும். இதன் விளைவாக, அரச நிர்வாக சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச நிர்வாக சேவையில் நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு அரசியல் அதிகாரமாக, மக்கள் சார்ந்த அரசாங்கத்தை நிறுவ நாங்கள் தலையிடுகிறோம்.

நீங்கள் செய்யும் மிக முக்கியமான கடமையை மக்கள் சார்ந்த சேவையாக மாற்ற அரசியல் அதிகாரம் ஊடாக   முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் பங்களிப்பு தேவை. அரச சேவையில் தவறு செய்ய நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. அதை நாங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. அந்த நம்பிக்கையில், இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்கள் சேவையில் செயல்படுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்த நம்பிக்கை, நாட்டிற்காக உருவாக்கப்படும் கொள்கைகளை செயல்படுத்த உங்களுக்கு பலத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய:

அரச சேவையில் டிஜிட்டல் மயமாக்கலின் சக்தியுடன், நாட்டு மக்கள் திறமையான சேவையைப் பெற முடியும். சர்வதேச திறன்களைக் கொண்ட நாடாக முன்னேற, அரச நிர்வாக சேவைக்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியம். இலங்கை கிரிக்கெட், இலங்கை வரலாறு போன்றவை உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன போன்று,  டிஜிட்டல் மயமாக்கல் மூலம், அரச சேவையையும் உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

இதற்கு முன்னர் இருந்த பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் வெற்றி கொள்ள அரச நிர்வாக சேவை வழங்கிய சேவை மிகவும் முக்கியமானது. நெருக்கடியின் போது இலங்கையைப் 

பார்த்த சர்வதேச சமூகம், இவ்வளவு விரைவாக நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் இலங்கை அரச நிர்வாக சேவை அந்த பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனுடன் டிஜிட்டல் மயமாக்கலும் சேர்க்கப்படும்போது, இலங்கையை உலகளவில் முன்னேற்றுவது கடினமான விடயம் அல்ல.டிஜிட்டல் மயமாக்கல் உலகத்தரம் வாய்ந்த நிர்வாக அமைப்பை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இந்த நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி சஞ்சிகையொன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி  சந்தன அபேரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/221923

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
முகமது சிராஜ் தனது தவறையே மறுநாள் சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1,113 பந்துகள்… சிராஜ் தொடர்பாக எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு புள்ளிவிபரம் இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய சராசரி, ஸ்ட்ரைக் ரேட், எகானமி ரேட் போன்றவற்றைதான் விமர்சகர்களும் ரசிகர்களும் முன்வைப்பார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்துகளின் எண்ணிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது. 'பொதிகாளை' என்று வர்ணிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 5 டெஸ்ட்கள் ஓய்வின்றி விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் முகமது சிராஜ். பும்ராவின் நிழலில் விளையாடுவதாலேயெ சிராஜின் சாதனைகளுக்கான நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. சிராஜ் என்றைக்கும் பும்ராவின் இடத்தை இட்டு நிரப்பிவிட முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை சிராஜின் பங்களிப்பு பும்ராவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதும். கிரிக்கெட்டில் இந்த சிக்கல், இன்று நேற்று தோன்றியது அல்ல. கடந்த காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் விளையாடும் போது, திறமையான வீரர்கள் எதிர்கொண்ட சவாலைத்தான் இப்போது சிராஜும் சந்தித்து வருகிறார். இயான் சேப்பல் தனது கட்டுரை ஒன்றில் ஒருமுறை இப்படி எழுதினார். விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒன்றாக பேட் செய்யும் போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரீனிட்ஜ் அடக்கித்தான் வாசிப்பார்; ஆனால், ரிச்சர்ட்ஸ் இல்லாத சமயங்களில் அவருடைய ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருக்கும் என்பார் இயான் சேப்பல். பட மூலாதாரம், GETTY IMAGES இதை நாம் பும்ரா-சிராஜ் விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். இந்த தொடரில் பும்ரா விளையாடாத பர்மிங்ஹாம், லார்ட்ஸ் டெஸ்ட்களில் 17 விக்கெட்களை சிராஜ் சாய்த்துள்ளார். பும்ராவுடன் பந்தை பங்கிட்டுக் கொண்ட மற்ற 3 டெஸ்ட்களில் மொத்தமாக 6 விக்கெட்கள் மட்டும்தான் எடுத்துள்ளார். பும்ராவுடன் விளையாடும் போதும் அதே 100 சதவீத ஈடுபாட்டுடன்தான் விளையாடுகிறார். பிறகு ஏன் விக்கெட்கள் கிடைப்பதில்லை? இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். பும்ராவுடன் சேர்ந்து விளையாடும் போது, சிக்கனமாக பந்துவீசி ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதுதான் சிராஜின் பிரதான வேலை. அதுவே பும்ரா இல்லாத போது, தனக்காக சுதந்திரத்துடன் பந்துவீச முடிகிறது. வேகப்பந்து படையை முன்னின்று வழிநடத்துகிறோம் என்கிற பெருமிதமே, அவருடய முழுத் திறமைமையும் வெளிக்கொணர்கிறது. கிரிக்கெட் வெறுமனே திறமை, உடற்தகுதி அடிப்படையில் மட்டுமே இயங்கின்ற விளையாட்டு அல்ல. உளவியலும் தனிநபர் ஆளுமையும் பெரியளவில் தாக்கம் செலுத்தும் விளையாட்டு இது. ஓவல் டெஸ்டில் இந்தியா ஒருவேளை தோற்றிருக்குமானால், புரூக் கேட்ச்சை சிராஜ் தவறவிட்டது பேசுபொருளாகியிருக்கும். தான் தவறவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தவர், சதமடிப்பதை பார்ப்பதை விட வலி மிகுந்த தருணம், வேறு ஒன்று ஒரு கிரிக்கெட் வீரருக்கு இருக்காது. அழுத்தம் மிகுந்த தருணங்களை கடந்து வருவது சிராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020-2021 ஆஸ்திரெலிய சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்கு சில நாள்கள் முன்பாக, தனது தந்தையின் மரண செய்தியை எதிர்கொண்ட துயரத்தில் இருந்தே அவர் மீண்டு வந்திருக்கிறார். மகனின் (சிராஜ்) கிரிக்கெட் கனவுகளை மனதில் சுமந்துகொண்டு ஹைதராபாத்தின் மூலை முடுக்குகளில் ஆட்டோ ஓட்டியவர், சிராஜின் தந்தை மிர்ஸா முகமது கவுஸ். கரோனா காலம் என்பதால் தந்தையின் இறுதிசடங்கில் கூட சிராஜால் பங்கேற்க முடியவில்லை. எப்படிப்பட்ட இழப்பு அது! ஆனால் சிராஜ் சோர்ந்து போய்விடவில்லை. இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த அந்த தொடரில், இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்களை சிராஜ்தான் கைப்பற்றினார். ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்வதை சிராஜ் வழக்கமாக வைத்துள்ளார். சிராஜூக்கு கோலி தந்த ஆதரவு சிராஜின் கிரிக்கெட் வரலாற்றில் 2018 ஐபிஎல் தொடர் மிக மோசமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். மோசமான பந்துவீச்சு காரணமாக, சொந்த அணி ரசிகர்களாலேயே ஆன்லைனில் கடுமையாக வசைபாடப்பட்டார். கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளாலும் ஆதரவினாலும் அதையும் வெற்றிகரமாக சிராஜ் கடந்துவந்தார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி தக்கவைக்காதது சிராஜுக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்ககூடும். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சிராஜ், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்துவீச முடியாமல் தவித்ததை பார்த்திருப்போம். பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட்ட லீக் கிரிக்கெட்டில், தன்னை ஆளாக்கி வளர்த்த அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு தயங்கிய சிராஜின் அர்ப்பணிப்பும் விஸ்வாசமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் 24.04 என்ற சிறப்பான சராசரி வைத்திருந்தும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இடம் மறுக்கப்பட்டதால் சிராஜ் கலங்கிப் போனார். ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் நன்றாக பந்துவீசி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்க முடியாது என்று நிரூபித்துக்காட்டினார். சமீபத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்து, ஒவ்வொரு ரன்னாக குருவி சேர்ப்பது போல சேர்த்து, வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் பந்தில் துரதிர்ஷ்டவசமாக பவுல்டானார். அப்போது வேதனையின் உச்சத்துக்கே சென்ற சிராஜை, வெற்றிக் கொண்டாட்டத்தை கூட ஒத்திவைத்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் ஆற்றுப்படுத்தினார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜூக்கு ஆறுதல் கூறும் இங்கிலாந்து வீரர்கள் கிராலி, ஜோ ரூட் பட மூலாதாரம், GETTY IMAGES தவறையே சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றிய சிராஜ் உணர்ச்சிகரமான வீரராக இருப்பதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவெனில், களத்திலும் சரி, களத்துக்கு அப்பாலும் சரி, உங்களுக்கு கிரிக்கெட்டை தவிர வேறெதுவும் மனதை ஆக்கிரமிக்காது. ஓவல் டெஸ்டின் நான்காம் நாளில் புரூக் கேட்ச்சை தவறவிட்ட நிகழ்வு, சிராஜுக்கு ஒரு கிரியா ஊக்கியாக செயல்பட்டுள்ளது. ஐந்தாம் நாளில் வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்துகொண்ட சிராஜ், 'believe' என்ற வார்த்தையை பொறித்த தனக்கு பிடித்த ரொனால்டோவின் படத்தை போன் வால்பேப்பராக வைத்துள்ளார். இதை உளவியலாளர்கள் விசுவலைசேசன் (visuvalaization) என்று அழைக்கிறார்கள். அதாவது நடக்கப் போவதை முன்னரே மனதில் ஒத்திகை பார்ப்பது. உலகப் புகழ்பெற்ற 153* இன்னிங்ஸை லாரா இப்படித்தான் விசுவலைசேசன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் டெஸ்டில் நிகழ்த்திக் காட்டினார். சிராஜுக்கு விசுவலைசேசன் குறித்து தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அதை வெற்றிகரமாக ஓவல் மைதானத்தின் கடைசி நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தி காட்டினார். கடினமான பின்னணியில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கீத் மில்லரிடம், 'நீங்கள் எப்போதாவது ஆட்டத்தில் அழுத்தத்தை எதிர்கொண்டது உண்டா?' என்று கேட்ட போது, 'ஜெர்மனி போர் விமானம் முதுக்குக்கு பின்னால் பறப்பதை பார்த்தவனுக்கு கிரிக்கெட்டின் அழுத்தம் எம்மாத்திரம்' என்கிற தொனியில் பதிலளித்தார். கீத் மில்லர் உலகப் போரின் போது பிரிட்டனுக்காக போர் விமானியாக பணியாற்றியவர். கடினமான சூழல்களில் சிராஜ், தனது முழுத் திறமையை வெளிக்கொணர்வதற்கு அவருடைய கடினமான கடந்த காலம் ஒரு முக்கிய காரணியாக இருந்துவருகிறது. அணிக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்தும், சிராஜின் பங்களிப்புகள் பெரிதாக பேசப்படாததற்கு அவருடைய பந்துவீச்சு பாணியும் ஒரு முக்கிய காரணம். தையலை பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் (seam) வரலாற்றில் பெரிதாக கொண்டாடப்பட்டதில்லை. வால்ஷ், ஆம்புரோஸ், மெக்ராத் என சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினர் சிராஜை போல வசீகரம் குறைந்தவர்கள். சிராஜை இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்கள் கைப்பற்றினாலும், அவருக்கு எந்நாளும் ஆண்டர்சனுக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் கிடைத்ததில்லை. ஸ்விங் பந்துவீச்சாளர்கள் காற்றில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் கண்ணுக்கு இதமானவை. ஆனால் பிராட், சிராஜ் போன்றவர்கள் ஸ்விங் செய்ய முடிந்தும் அணியின் நலனுக்காக அதை தியாகம் செய்து, கடினமான பணியை தங்களின் முத்திரையாக வரித்துக்கொண்டவர்கள். சிராஜ் பிரமாதமான அவுட் ஸ்விங் பந்துகளை வீசத் தெரிந்தவர். அவுட் ஸ்விங் பந்துகளுக்கு செட் செய்துதான், ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் ஸ்மித் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால் அவருடைய ஆதார பந்து (stock ball) என்பது தளர்வாக தையலைப் பிடித்து வீசும் வாபில் சீம்தான் (wobble seam) வழக்கமாக வாபில் சீமில் வீசும்போது, பந்தின் போக்கை பந்து வீச்சாளரால் கூட தீர்மானிக்க முடியாது. ஆனால் சிராஜ் தன்னுடைய மணிக்கட்டை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம் பந்து உள்ளே செல்ல வேண்டுமா வெளியே செல்ல வேண்டுமா என்பதையும் அவரே முடிவு செய்கிறார். ரூட், போப் உள்பட இங்கிலாந்தின் முன்னணி பேட்டர்கள், சிராஜின் உள்ளே வரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தொப் தொப்பென்று கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் வெளியேறியதைப் பார்த்தோம். பட மூலாதாரம், GETTY IMAGES சிராஜ் இனி தளபதி அல்லர்; தலைவன்! பந்து உள்ளேதான் வரப் போகிறது என்று பேட்டருக்கும் தெரியும். ஆனால், அதை அத்தனை எளிதாக எதிர்கொண்டு விட முடியாது. சிராஜின் நூல் பிடித்தது மாதிரியான லெங்த்தும் தொய்வற்ற வேகமுமே காரணம். ஐந்து டெஸ்ட் விளையாடிய பிறகும் கடைசி நாளில் மணிக்கு 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பாஸ்பால் கோட்பாட்டின் பிதாமகனான மெக்கலத்தை ஆச்சர்யப்பட வைத்தவர் சிராஜ். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு லைன் முக்கியமல்ல; லெங்த்தான் முக்கியம் என்பார்கள். ஆனால் சிராஜின் லைனும் கூட சோடை போவதில்லை. இப்படி, எல்லாமே கச்சிதமாக செய்வதாலேயே, சிராஜின் பந்துவீச்சு வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. பும்ராவின் உடற்தகுதி இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அவரை அனுமதிக்கும் என்று தெரியவில்லை. அப்படியே அவர் தொடர்ச்சியாக விளையாடினாலும், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் எல்லா டெஸ்ட்களிலும் விளையாட முடியாது. ஓவல் டெஸ்ட், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு யார் தலைமையேற்பது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. ஹைதராபாத்தில் தொடங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிராஜ், இங்கிலாந்து மண்ணில் வைத்து, இந்திய வேகப்பந்து வீச்சின் தலைவன் தான்தான் என நிரூபித்துள்ளார். ஆம், இனி சிராஜ், இந்திய வேகப்படையின் தளபதி அல்லர்; தலைவன்! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zq6z1v4yo

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 2 weeks ago
இதற்கும் சுவிஸ்ஸில் இந்த நிகழ்வை நடத்தியவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மாவீரர் நாள் நவம்பர் 27 தான். அந்த மாவீரனின் வீர வணக்க நிகழ்வும் அதேநாளில் நடப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

1 month 2 weeks ago
சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல் Published By: VISHNU 06 AUG, 2025 | 02:54 AM செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவ்விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும், அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ, இதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமாத்திரமன்றி மரணதண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அத்தோடு சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/221927

184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன

1 month 2 weeks ago
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது. புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது. உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை. இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர். இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன். இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது. இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=335764

184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன

1 month 2 weeks ago

184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன

%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%

சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது.

புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.

உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை.

இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர்.

இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை.

இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன்.

இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது.

இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=335764

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

1 month 2 weeks ago
அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை - அரசாங்கம் உறுதி Published By: VISHNU 06 AUG, 2025 | 03:00 AM (நா.தனுஜா) அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (5) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப்பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோன்று வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு அவ்வேளையில் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அத்தோடு இலங்கைக்கு வருகைதரும் இஸ்ரேலிய விமானங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தீர்மானம் கடந்த 2023 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அத்தீர்மானமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/221929

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 2 weeks ago
வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற வெளிநாட்டினரிடமிருந்து அதிகளவான கோரிக்கை இருக்கும் நிலையில், அவ்வாறு அனுமதிப்பத்திரத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார். "சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக அனுமதிகளை வழங்க கருமபீடத்தை திறந்துள்ளோம். இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். கோரிக்கைகள் முன்வைத்தாலும் சில அனுமதிகளை வழங்க முடியாது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. வௌிநாட்டினரின் விசா காலத்தின் அடிப்படையில் இரண்டு மாதம் முதல் 5 மாதங்கள் வரை விசா அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படியாகும் காலத்திற்கு அமைய தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், நாங்கள் ஒரு நிரந்தர அனுமதியை வழங்குகிறோம். நாங்கள் விமான நிலையத்தில் அதை வழங்குவதில்லை. வழக்கம் போல், இது வெரஹெர அலுவலகத்தில் செய்யப்படுகிறது." என்றார். புதிய வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் கமல் அமரசிங்க தனது கருத்துக்களை வௌியிட்டார். "ஜனவரி முதல், நாங்கள் 133,678 வாகனங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் மிகப் பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவற்றில் 100,451 பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த பெரிய எண்ணிக்கையாக 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmdziqq8y026sqp4kbwkduttd

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 2 weeks ago
புலிகள் நிகழ்த்திய காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலை குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள் கொன்று குவித்த சம்பவத்தின் 35ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஆபத்து வருகின்றபோது மக்கள் ஒன்றுகூடுகின்ற, அடைக்கலம் தேடுகின்ற இடமாக எப்போதும் வணக்கஸ்தலங்கள் இருக்கின்றன. இறை நம்பிக்கையுள்ள மக்களின் கடைசிப் புகலிடமாகவும் இவை உள்ளன. இதில் எந்த மதக் குழுமத்தைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்லர். கொழும்பிலும் வேறுபல இடங்களிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மிக மிலேச்சத்தனமானது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனோடு சம்பந்தப்பட்டவர்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்காமைக்கும், இதுவரை அந்தக் கும்பலுக்காக வக்காலத்து வாங்காததற்கும் காரணம் இது இஸ்லாத்திற்கு விரோதமான, மனித குலத்திற்கு எதிரான செயல் என்பதனாலாகும். அது மட்டுமன்றி, ஒரு புனித நாளில் வழிபாட்டுத் தலங்களுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாத, பயங்கரவாத குழுவொன்று துணைபோனதை முஸ்லிம் சமூகத்தால் ஒருபோதும் ஜீரணிக்கவே முடியாது. இறைவனின் சந்நிதியிலேயே பலியெடுக்கப்பட்ட மக்களின் வலி கொடியது. அது பெரும் பாவமாகும். ஆனால், இந்த அனுபவத்தை முஸ்லிம்கள் 35 வருடங்களுக்கு முன்னரேயே பெற்று விட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அக்கரைப்பற்றிலும் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடியவர்களைத் துளியளவு கூட ஈவிரக்கமின்றி கொலை செய்ததை, எந்தப் போராட்ட கோட்பாட்டினாலும் நியாயப்படுத்தி விட முடியாது. இதுபோல, தலதா மாளிகை போன்ற வழிபாட்டு இடங்களிலும் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதை நாமறிவோம். அப்படியென்றால், 90களில் இந்த மோசமான கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது விடுதலைப் புலிகளும் அவர்களுடன் சில திட்டங்களில் சேர்ந்த்தியங்கிய ஆயுதக் குழுக்களும் என்றுகூடச் சொல்லலாம். தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால் நிலத்தால் மட்டுமன்றி அரசியல், சமூக ரீதியாகவும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இருந்த காலமொன்று உள்ளது, அப்போதிருந்த மூத்த தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் தனியான ஒரு இனக் குழுமம் என்ற அடையாளத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தனர் எனலாம். இருப்பினும், 80களின் நடுப்பகுதியில் பல தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சிகளை மேவத் தொடங்கின. ஆயுதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கணிசமான தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் ஒத்திசைவாகச் செயற்படத் தொடங்கினர். அப்போது முஸ்லிம்கள் தனிவழியில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உருவானது இந்த தருணத்தில்தான். நிலைமை இப்படியிருக்கும் போது புலிகளும் இன்னும் ஒருசில தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நசுக்கத் தொடங்கின. 90களில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ-முஸ்லிம் உறவில் முதல் கீறல் என்பது கிழக்கு மாகாணத்தில் புலிகள் நடத்திய பள்ளிவாசல் படுகொலைகளில் ஆரம்பித்தது. இரண்டாவது பெரிய உறவு முறிவு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதில் நடந்தேறியது. வரலாற்றை அறிந்த யாரும் இதனை மறுக்க முடியாது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி முஸ்லிம்கள் வழக்கமாக இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அயற் கிராமங்களின் ஊடாக காத்தான்குடிக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் பள்ளிவாசல்களுக்குள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெரியவர்களும் சிறுவர்களுமாக சுமார் 103 பேரை கொன்று குவித்து விட்டுப் போனார்கள். காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் {ஹஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டி லும் தொழுகையி ல் ஈடுபட்டுக் கொண்டிரு ந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் காயமடைந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர், பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். இதன்போது, பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளிவாசலினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் பின்னர்தான் புரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர். தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அப்போது பலர் கூறினர். புலிகள் முஸ்லிம்களைப் போல அபாயக் குரல் எழுப்பி, சிறிய காயங்களுடன் கிட ந்தவர்கள் மற்றும் உயிர் த ப்பிக் கிடந்தவர்களையும் எழுப்பி அவர்களையும் தந்திரமாகக் கொன்றதாகவும் சொன்னார்கள். ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிய இயக்கம், தமக்குப் பக்கத்திலேயே வாழும் இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தை மிக கீழ்த்தரமான முறையில், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்ததை போல ஒரு பேரவலம் உலகில் வேறெங்கும் நடந்திருக்காது. குருக்கள்மடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட சூடு ஆறுவதற்கிடையில் ஒரு மாதத்திற்குள்ளேயே இந்த கைங்கரியத்தைப் புலிகள் மேற்கொண்டனர். முஸ்லிம்களை அழித்தொழிக்கும் திட்டத்தில் புலிகள் எந்தளவுக்கு ஈடுபாடாக இருந்தார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும். அத்தோடு நிற்கவில்லை.இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 121 பேர் இதே பாணியில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே காலப் பகுதியில்தான், அக்கரைப்பற்று பள்ளிவாசலிலும் வேறு இடங்களிலும் புலிகள் தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். ஆனாலும், அவர்களின் வெறி அடங்கியிருக்கவில்லை. 1990ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சம் பேர் உடுத்திருந்த ஆடையோடு மட்டும் சில மணிநேரங்களில் அங்கிருந்து இதே புலிகளால் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் சமூகம், தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கும் அரசியலுக்கும் செய்த பங்களிப்புக்களையும் வரலாற்று உண்மைகளையும் மறைத்து விட்டு, அற்ப காரணங்களுக்காகவும் முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, இன்று ஜனநாயகம் பேசுகின்ற பல தமிழ் குழுக்கள் செய்த கடத்தல்கள், கப்பம்கோரல், அட்டூழியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த விவகாரங்களை முஸ்லிம்கள் இறைவனிடம் பாரம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் சில முயற்சிகளைச் செய்தாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்காக நீதி வேண்டிப் பேராராடவில்லை. தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகப் பேசிய, பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ‘முஸ்லிம்களுக்கும் ஏன் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நடந்ததும் மீறல்தான். அதற்கும் விசாரணைகள் வேண்டும்' என்று கூறியதாக ஞாபகத்தில் இல்லை. இப்படியான ஒரு சூழலில்தான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எனவே, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கடத்தல், காணாமலாக்கபடுதல் சம்பங்கள் மற்றும் கிழக்கில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலைகள் என, 30-35 வருடங்களாக நீதி நிலைநாட்டப்படாத விவகாரங்களுக்கும் நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. புலிகளில் தலைவர் பிரபாகரன், இவ்வாறான பெரிய அநியாயத்தை ‘ஒரு துன்பியல் நிகழ்வு' என்று ஒரே வசனத்தில் சொல்லி முடித்துக் கொண்டார். அவ்வாறே, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி இந்த சம்பவங்களுக்கான நீதி விசாரணைகளை நடத்தாமல் விட முடியாது. இந்தப் படுகொலைகளுக்கு யார் கட்டளையிட்டார்கள், யார் செய்தார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என்பது உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் மீதமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்போர் பொருத்தமானவர்களாக இருப்பார்களாயின் இதற்கு பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புலிகள்-நிகழ்த்திய-காத்தான்குடி-ஏறாவூர்-பள்ளிவாசல்-படுகொலை/91-362355

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 2 weeks ago
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது. இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார். https://newuthayan.com/article/இலங்கை_முழுவதும்_இந்தியாவின்_கையில்;_விமல்_வீரவன்ஸ_கொதிப்பு!

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 2 weeks ago

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

361713748.jpeg

இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது-
இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது.

இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும்.

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார்.

https://newuthayan.com/article/இலங்கை_முழுவதும்_இந்தியாவின்_கையில்;_விமல்_வீரவன்ஸ_கொதிப்பு!

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!

1 month 2 weeks ago
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது! adminAugust 6, 2025 செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/218886/

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!

1 month 2 weeks ago

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!

adminAugust 6, 2025

UN-First.jpg?fit=862%2C485&ssl=1

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

UN-SL.jpeg?resize=800%2C450&ssl=1

unsl1.jpg?resize=640%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/218886/