Aggregator
புதிய அரசியலமைப்பின் நோக்கம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —
புதிய அரசியலமைப்பின் நோக்கம்?
— வீரகத்தி தனபாலசிங்கம் —
புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டன.
1970 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே மாதம் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) ஆயுதக் கிளர்ச்சியினால் இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால் அந்த அரசாங்கம் முன்கூட்டியே அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவும் கூடும். 1977 ஜூலையில்
பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 15 மாதங்களுக்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவிப்பின் அரசியல் விவேகம் குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது.
ஆனால், அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த வாரம் (ஜூலை 25) பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கிளப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முற்பகுதியிலும் பிரதமர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் காலவரிசை ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.
“புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக அரசாங்கம் அவசரமாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பல வருடங்களாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்வதிலும் முழுமையாக கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. மாகாணசபை தேர்தல்களை நடத்திய பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை அரசாங்கம் தொடங்கும்” என்று அவர் கூறினார்.
அதேவேளை, இந்த வருடம் இந்த செயன்முறையை முன்னெடுப்பதற்கு பட்ஜெட்டில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்ட பிரதமர் பொதுக் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னைய அரசாங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடருவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன — பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் (2015 –2019) அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதியையே பிரதமரும் மீண்டும் பாராளுமன்றத்தில் கூறினார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தற்போதைக்கு அரசாங்கம் அவரசம் காட்டப்போவதில்லை என்று பரவலாக நிலவிய அபிப்பிராயத்துக்கு மத்தியில் கடந்த வாரம் அமைச்சரும் சபை முதல்வருமான பிமால் இரத்நாயக்க அடுத்த வருட முற்பகுதியில் மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதன் பிரகாரம் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அடுத்த வருட முற்பகுதியில் இருந்து அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்.
முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை ஒன்றை 2017 செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது அந்த இடைக்கால அறிக்கையில் இருந்தே மீண்டும் செயன்முறையை தொடங்க வேண்டும். அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதை செயன்முறை தொடங்கும்போதுதான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இந்த கட்டத்தில் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவருவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை?
இலங்கை இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. பல தசாப்தகால அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதார நெருக்கடி, நிறுவனங்களின் சிதைவுகளுக்கு பிறகு கடந்தகால தவறான பாதையில் இருந்து விடுபட்டு புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு ஜனாதிபதி திசநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பல தசாப்தங்களாக நாட்டின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொனறைக் காண்பதற்கு பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் தவிர புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை பொறுத்தவரை கூடுதல் முன்னுரிமைக்குரிய வேறு விடயங்கள் இருக்க முடியாது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது வெறுமனே குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனம் அல்ல. அது முன்னேறிச் செல்வதற்கு இலங்கைக்கு இருந்த ஆற்றல்கள் மற்றும் வாய்ப்புக்கள் சகலதையும் பாழ்படுத்திய ஒரு அரசியல் காலாசாரத்தை உருவகப்படுத்திநிற்கும் ஒரு நிறுவனமாகும். இனமோதல், பொருளாதார அனர்த்தம், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று இலங்கை அனுபவித்து வந்த பேரிடர்களை எல்லாம் மேலும் மோசமாக்கிய மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியாகும்.
இலங்கையின் அரசியல் வரலாறு “ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல பிரதான அரசியல் கட்சிகளுமே அதை மீறிச்செயற்பட்ட கவலை தருகின்ற” ஒரு முரண்நிலையைக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வசதியாக மறந்ததுடன் மாத்திரமல்ல, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்ததை நாம் கண்டோம்.
அநுர குமார திசநாயக்கவே நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று 2024 ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறியதை மக்கள் மறந்து விடவில்லை. புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமானது என்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றும் கடந்த வாரம் பிரதமர் அமரசூரியவும் பாராளுமன்றத்தில் கூறினார்.
ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பிலான வாக்குறுதி மீறல்கள் வட்டத்தை முறிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை தற்போதைய தருணம் தருகிறது. அதை தேசிய மக்கள் சக்தி தவறவிடுமானால், அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறிய இன்னொரு கட்சி என்று வரலாற்று அபகீர்த்திக்குள்ளாக வேண்டியிருக்கும்.
கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு மானசீகமாக விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை என்கிற அதேவேளை, போதிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்களிடம் அந்த பதவியை ஒழிப்பதற்கான அரசியல் விருப்பம் இருக்கவில்லை.
சொந்த அரசியல் நலன்களை மனதிற் கொண்டு செயற்படாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் உறுதியாகச் செயற்படக்கூடிய தலைவர்கள் இதுவரையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி திசநாயக்க அத்தகைய தலைவர்களின் வரிசையில் தானும் இணைந்து கொள்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார் என்று நம்புவோமாக!
13 வது திருத்தத்தின் கதி:
அடுத்ததாக, புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எத்தகைய அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை அரசாங்கம் கொண்டுவரும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை உள்ளடக்குவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இதுவரையில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வு தொடர்பான சட்டரீதியான ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமே விளங்குகிறது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் கடந்த 38 வருடங்களாக பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே அந்த திருத்தத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாக அபகரித்து வந்திருக்கின்றன.
13 வது திருத்தத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுமா? அதில் இருப்பவற்றை விடவும் கூடுதலான அதிகாரங்களை புகுத்துவதற்கு அரசாங்கம் முன்வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிரிவினைக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்று கூச்சலிடும் தென்னிலங்கை தேசியவாத சக்திகள் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படும்போது அந்த திருத்தத்தை இல்லாமல் செய்து விடுமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற ஏனைய அரசியல் கட்சிகளும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பது நிச்சயமானது.
தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே கடந்த வாரம் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருக்கும் முக்கியமான சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
“தற்போதைய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் சிலவற்றை உறுதி செய்கின்ற போதிலும், சிங்களம் தமிழை விடவும் மேலானதாகவும் பௌத்த மதம் மற்றைய மதங்களை விடவும் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யாத இந்த அரசியலமைப்பு இனங்களுக்கு இடையில் பிளவுக்கும் இன மோதல்களுக்கும் வழிவகுத்தது.
“புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும்.
“13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.
“அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தாமதமான தொடக்கம் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறது. தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் துணிவாற்றல் இல்லாமல் போய்விடும். முன்னர் அவ்வாறு நடந்தது. மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது.
“இலங்கையை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற புதியதொரு ஜனநாயக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அதில் பங்குபற்றுவதாக உணரக்கூடிய முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இது எளிதான செயன்முறை அல்ல.
இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது.”
இரசித்த.... புகைப்படங்கள்.
கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?
தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்! - ஜனாதிபதி
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றுபடுவோம்! - ஜனாதிபதி
Published By: VISHNU
06 AUG, 2025 | 01:32 AM
பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கினார்.
கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும், சமூக மதிப்புகள் மற்றும் சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி, தமக்குக் கிடைத்த பொறுப்பை மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தாமல், சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை வழங்குவதற்கும் பயன்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.
அரச சேவை இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், நேரம் எடுத்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றும், இல்லையெனில், நமது பங்கை சுயமதிப்பீடு செய்து, குடிமக்களின் தேவைகளின் அடிப்படையில் திறமையான சேவையை வழங்குவதற்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
புதிய மாற்றத்திற்குத் தேவையான புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழு உரை:
இங்குள்ளவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் சந்தித்துள்ளோம். எங்களுடன் படித்தவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் எங்களுடன் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் உள்ளனர். எனவே, பல்வேறு துறைகளில் பணிபுரியும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம். இருப்பினும், அந்த அனைத்து சந்திப்புகளையும் விட 'இந்த சந்திப்பு' மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நமது நாட்டின் அரச சேவையில் முன்னணி சேவையான இலங்கை நிர்வாக சேவையின் இந்த வருடாந்த மாநாட்டில் பங்கேற்கும் நீங்கள், நமது அரச கட்டமைப்பைப் பராமரிக்க அதிக முயற்சி மற்றும் பொறுப்பைக் கொண்ட ஒரு குழு. எனவே, உங்களுடன் இந்த வகையான கலந்துரையாடலை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆரம்பத்தில், இலங்கை நிர்வாக சேவையின் இதுவரை வளர்ந்த வரலாறு குறித்த ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. எங்கள் நிர்வாக சேவைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப்
பிறகும், எங்கள் அரசியல் துறைக்கும் நீண்ட வரலாறு உண்டு. எனவே, எங்கள் அரச சேவையும் அரசியல் இயந்திரமும் இணைந்து இந்த நாட்டை நீண்ட காலமாக வழிநடத்தி வருகின்றன.
இருப்பினும், எங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், அரசியல் அதிகாரத்திற்கும் அதனுடன் தொடர்புடைய அரச கட்டமைப்பிற்கும் எங்கள் நாடு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நாங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளோம். கட்டளைகள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், நாம் திரும்பிப் பார்த்தால், நாம் அனைவரும் நம் மனசாட்சியுடன் நம்மை நாமே கேட்டுக்கொண்டால், இந்த அரச சேவையின் நிலையில் திருப்தி அடைய முடியுமா? நம்மில் யாரும் இதில் திருப்தி அடைய முடியாது என்று நினைக்கிறேன். நமது சொந்த அளவீடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண குடிமக்கள் திருப்தி அடைகிறார்களா என்று கேட்போம். அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே, நாம் ஒரு மிக முக்கியமான கட்டத்தை அடைந்த நேரத்தில் உங்களின் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் உள்ளன.
பழைய முறைப்படி உங்கள் நேரத்தை செலவழித்து, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை அந்த சமயத்திற்கு ஏற்ப மாத்திரம் நிறைவேற்றுவதற்கான பழைய முறையை தெரிவு செய்யலாம். அதுதான் நம் நாடு நீண்ட காலமாகச் சென்று வரும் பாதை. மிகவும் எளிதான பாதை.
ஆனால், இன்னொரு பாதை உள்ளது. இந்த அரசை உருவாக்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நமது பங்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுய மதிப்பீடு செய்வதன் மூலம் இதை மாற்றுவதற்கான உறுதியுடன் அனைவரும் செயல்படுவது அது எளிதான பாதை அல்ல. ஏனெனில், பொதுவாக, மக்களின் ஒரு பண்பு உள்ளது. மக்கள் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். மக்கள் பரிசோதனைகள் செய்து பார்க்க பயப்படுகிறார்கள். நமக்கு அன்றாட நடவடிக்கைகள் இருந்தால், நாம் தினமும் நம் கடமைகளைச் செய்தால், நாம் பழக்கங்களுக்கு அடிமையாகி அந்தக் கடமைகளைச் செய்ய முடியும்.
ஆனால், நாம் புதிய சோதனைகளைச் செய்தால். புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், பழக்கத்தின் சக்தி அதற்குத் தடை போடும். ஆனால், இன்று மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றத்தை நாம் திரும்பிப் பார்த்தால், மனித நாகரிகம் அடைந்துள்ள சாதனைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய ரகசியம் பரிசோதனைகளுக்கு பயப்படாமல் இருப்பதுதான்.
புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். ஆம், நீங்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவில்லை என்றால், சமூகத்தால் நிராகரிக்கப்படுவீர்கள். எனவே, புதிய
மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு நான் முதலில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாத ஒரு உயிரினம் அல்லது கோட்பாடு இல்லை. இன்றேல் மிக விரைவாக அழிக்கப்படும். எனவே, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள்.
இருப்பினும், சிதைவடைந்த அரசில் இருந்தே உங்களை மாற்றிக் கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது அரச தேகம் அழிந்துவிட்டது. நமது அரசு பௌதிக மற்றும் ஆன்மீகம் இரண்டும் அழிந்துவிட்டது. இதுதான் யதார்த்தம். நமக்கு முன்னால் உள்ள கடுமையான உண்மையைப் பற்றி ஆராயாமல் விட்டு விட்டால்,அந்த கல்லறைக்கு முன்னால் கடந்து செல்லும்போது நாம் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு சென்றால், இந்த மாற்றத்தை நாம் செய்ய முடியாது.
எனவே, முதலில், நமக்கு முன்னால் உள்ள கடினமான யதார்த்தத்தின் தன்மையை, உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதை விவாத மேசையில் முன்வைக்க வேண்டும். நம் முன் உள்ள யதார்த்தம் என்ன?இன்று இங்குள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் 15-16 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மற்றும் சிதைவடைந்த வாகனங்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் மேசையில் உள்ள கணினி பழைய ஒன்றாகும். எனவே,பௌதீக ரீதியான அரச சேவை சேதமடைந்துள்ளது. எனவே, ஒரு சேதமடைந்த அரச சேவையிலிருந்து ஒரு நவீன அரசை உருவாக்க முடியாது. எனவே, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையை நவீனமயமாக்க தேவையான வசதிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.
டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை நோக்கி நாம் மிக விரைவாக செல்ல வேண்டும். அதுதான் நமது அடுத்த கட்டத்தில் மிக முக்கியமான மாற்றம். இருப்பினும், பழக்கதோசம் அந்த மாற்றத்தைத் தடுக்கிறது. சில நிறுவனங்களில் மென்பொருள் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது சிறந்தது. மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது, தனது ஒரு அலுவலகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஒரு மாவட்ட செயலாளர் எனக்கு தெளிவுபடுத்தினார்.
அதற்குக் காரணம், அந்த அலுவலகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை விரும்பும் அதிகாரிகள் இருப்பதுதான். அப்போது அது அங்குள்ளவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளதுடன், பொதுவான மாற்றமாக அல்ல. பழக்க வழக்கத்தின் அதிகாரம் இதற்கு சவால் விடுகிறது. ஆனால் எமது அரச சேவையை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற பொதுவான தேவை எமக்கு உள்ளது.
இதன்போது, அண்மைய வரலாற்றில் மிக அதிக அடிப்படை சம்பள உயர்வை நாம் உங்களுக்கு வழங்கினோம். இந்த சம்பள உயர்வுக்கு இந்த ஆண்டு 11,000 கோடி ரூபா தேவைப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு கிடைக்கும். அதற்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. 2027 சம்பள உயர்வுக்கும் 11,000 கோடி தேவைப்படுகிறது. எனவே, இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு ரூபா 33,000 கோடி செலவினச் சுமையை நாம் சுமக்க
வேண்டியுள்ளது. இது வழங்கப்படும் சம்பளத்திற்கு கூடுதலானதாகும். 2027 வரவு செலவுத்திட்டத்தில் இதை நாம் ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 11,000 கோடி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுவரவு செலவுத்திட்டத்தில் அது 22,000 கோடியாக மாறும். 2027 ஆம் ஆண்டில் இந்த மொத்த சம்பள உயர்வைச் செலுத்த, ரூபா 33,000 கோடி செலவினத்தை ஏற்க வேண்டியிருக்கும். நமது அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்ற, நியாயமான சம்பள அளவை நிறுவ வேண்டும் என்பதை நாம் அறிவோம். நாம் அதைச் செய்துள்ளோம். 80% சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆனால், அரச கட்டமைப்பில் சில இடங்களில் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை கண்டுகொள்வதில்லை. லொக்கரில் பணம் வைத்திருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவை மனப்பான்மை ரீதியிலான பிரச்சினை. கைதிகளிடம் கைவிலங்குகளும் அவற்றின் சாவிகளும் உள்ளன. இது என்ன பிரச்சினை? தமது பொறுப்பும் சமூக மதிப்பும் நிதி மதிப்பாக மாற்றப்பட்டுள்ளது. மனிதகுலம் முழுவதும் பனிக்கட்டி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. அவை சுற்றறிக்கைகள், கட்டளைகள் அல்லது அரசியலமைப்புச் சட்டங்கள் மூலம் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. பிரஜைகளாக தமது பொறுப்புகள் மற்றும் சமூகக் கடமைகளாக புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரு நவீன அரச சேவையை உருவாக்க வேண்டுமென்றால், மேலே நான் குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களைப் போலவே, ஒரு புதிய மனப்பான்மையுடன் கூடிய அரச சேவையை உருவாக்க வேண்டும். நமது அரச சேவைக்கு ஒரு புதிய பெறுமதிகள் மற்றும் நெறிமுறைகள் தேவை. மேலும் பெறுமதிகளின் உண்மையான அர்த்தத்தை நாம் அடையாளம் காண வேண்டும். பெறுமதிகள் என்பது மிகை-நுகர்வு அல்லது மற்றவர்களை நசுக்கி உயர்ந்தவர்களாக மாறுவது அல்ல.இந்த தவறான பெறுமதிகள் மற்றும் மதிப்பு கட்டமைப்புகளுக்கு பதிலாக சமூகத்திற்கு புதிய பெறுமதிகளின் மதிப்பு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதற்கு மென்மை, இரக்கம், தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பொறுப்புக்கூறல் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் பிரஜைகள். மேலும் நம் ஒவ்வொருவருக்கும் நமது துறைகளில் பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளில்
எதுவும் மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு குடிமக்கள் நம் ஒவ்வொருவரையும் கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து நம் நாட்டையும் குடிமக்களையும் விடுவிப்பீர்களா என்று எம்மை கெஞ்சும் கண்களால் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
நீங்களும் நாங்களும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நம் நாட்டின் குடிமக்கள் ஒரு புதிய உலகத்தையும் நல்ல விடயங்களையும் கனவு கூட காண மாட்டார்கள். எனவே, இந்த நல்ல
விடயங்களை உருவாக்குவதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு உண்டு. சில விசாரணைகள் குறித்து சில விமர்சனங்களும் கருத்துகளும் உள்ளன. யாரும் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அதிகாரிகளின் கடந்த கால நடைமுறைகள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி கேள்விப்பட்ட விடயங்கள் உள்ளன. ஒருவரையொருவர் பற்றி அறியப்பட்ட விடயங்கள் உள்ளன. இருப்பினும்,
ஒவ்வொரு அதிகாரி பற்றிய பழைய கருத்துகளின்படி நாங்கள் உங்களைப் பார்க்கவில்லை. அவை எங்களுக்கு தேவையில்லை. ஆனால், உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நீங்கள் நடந்துகொண்ட விதத்தை வைத்து நாங்கள் உங்களை அளவிடுகிறோம். கடந்த கால நிகழ்வுகள் விசாரிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களை இடுகிறீர்கள். சமூக மதிப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கையொப்பம் நிதி ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பட்டால், நாங்கள் சட்டத்தை அமுல்படுத்துவோம். இதை அரச சேவையை கட்டுப்படுத்துவதாகவோ அல்லது அரச அதிகாரிகளை மிரட்டுவதாகவோ கருத முடியாது. எங்களுக்கு அத்தகைய விருப்பம் இல்லை.
சமீபத்தில் ஒரு முன்னாள் ஜனாதிபதி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை இப்படியே தொடர விட்டுவிடுங்கள். எதுவும் கூறவேண்டாம் என்று கூறியதை நான் பார்த்தேன். மக்கள் அதன் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் அங்குதான் விழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும்போது, அவர் கோபப்படுவார், இவர் கோபப்படுவார், அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அரச சேவைக்குத் தேவையான எல்லைகளை மீண்டும் நிறுவுவது ஒரு அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காரணமாகுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்த நாட்டில் அரச சேவையில் ஒரு புதிய கலாசாரத்தை நாமே கொண்டு வர வேண்டும். குடிமக்களுக்கு திருப்திகரமான அரச சேவையை வழங்க வேண்டும். புதன்கிழமை உங்கள் அலுவலகத்திற்கு வரும் மக்களில் எத்தனை பேர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள் என்பதை நீங்கள் தேடிப்பாருங்கள். ஏன் அவ்வாறு நிகழ்ந்துள்ளது? எனவே, எமது அரச சேவையை ஒரு புதிய கலாசாரமாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். அதற்காக எடுக்கப்படும் எந்தவொரு முடிவிற்கும் நாங்கள் பாதுகாவலர்களாக மாறுவோம்.
நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்ல, ஆனால் எங்கள் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சி எங்களிடம் உள்ளது. இது யாரும் பயப்பட வேண்டிய முயற்சி அல்ல, மாறாக ஆசிர்வதிக்கப்பட வேண்டிய முயற்சி. நீங்கள் அதில் எங்களுடன் இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவையும் சவாலும் எமக்கு உள்ளது. இந்த நாடு தொடர்பில் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற விருப்பம் நிறைந்த உள்ளம் உங்களிடம் உள்ளது. ஆனால், நமது நல்லெண்ணத்திற்கும் நமது பணிக்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. உங்கள் உண்மையான மனசாட்சியின்படி செயல்படத் தொடங்குங்கள். உங்கள் உண்மையான மனசாட்சியைக் கேட்கத் தொடங்குங்கள். அரசியல் அதிகாரமும் அரச துறையும் ஒன்றுபட்ட நோக்கத்துடன் செயல்பட்டால்
மட்டுமே இந்த நல்ல செயலைச் செய்ய முடியும். ஒரு அரசியல் அதிகாரமாக எங்களுக்கும், ஒரு அரச ஊழியராக உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம். நாம் ஒரே நோக்கத்திற்காக எங்கள் கடமைகளைச் செய்வோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவான இலக்கைப் பற்றி கலந்துரையாடிய குழுக்கள் உள்ளன. நண்பர்களாகச் செயல்பட்ட குழுக்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நான்
கேட்டுக்கொள்கிறேன். ஒரு வலுவான அரச சேவையை உருவாக்கவும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதுடன், இந்த மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
சில காலமாக, நமது நாட்டில் அரச நிர்வாக சேவையின் மதிப்பும் கண்ணியமும் ஓரளவு குறைந்துள்ளது. அரசியல் தலையீடும் இதற்கு ஒரு காரணமாகும். இதன் விளைவாக, அரச நிர்வாக சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. நீண்ட வரலாற்றைக் கொண்ட அரச நிர்வாக சேவையில் நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு அரசியல் அதிகாரமாக, மக்கள் சார்ந்த அரசாங்கத்தை நிறுவ நாங்கள் தலையிடுகிறோம்.
நீங்கள் செய்யும் மிக முக்கியமான கடமையை மக்கள் சார்ந்த சேவையாக மாற்ற அரசியல் அதிகாரம் ஊடாக முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் பங்களிப்பு தேவை. அரச சேவையில் தவறு செய்ய நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. அதை நாங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. அந்த நம்பிக்கையில், இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உங்கள் சேவையில் செயல்படுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்த நம்பிக்கை, நாட்டிற்காக உருவாக்கப்படும் கொள்கைகளை செயல்படுத்த உங்களுக்கு பலத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய:
அரச சேவையில் டிஜிட்டல் மயமாக்கலின் சக்தியுடன், நாட்டு மக்கள் திறமையான சேவையைப் பெற முடியும். சர்வதேச திறன்களைக் கொண்ட நாடாக முன்னேற, அரச நிர்வாக சேவைக்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியம். இலங்கை கிரிக்கெட், இலங்கை வரலாறு போன்றவை உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன போன்று, டிஜிட்டல் மயமாக்கல் மூலம், அரச சேவையையும் உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.
இதற்கு முன்னர் இருந்த பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் வெற்றி கொள்ள அரச நிர்வாக சேவை வழங்கிய சேவை மிகவும் முக்கியமானது. நெருக்கடியின் போது இலங்கையைப்
பார்த்த சர்வதேச சமூகம், இவ்வளவு விரைவாக நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் இலங்கை அரச நிர்வாக சேவை அந்த பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதனுடன் டிஜிட்டல் மயமாக்கலும் சேர்க்கப்படும்போது, இலங்கையை உலகளவில் முன்னேற்றுவது கடினமான விடயம் அல்ல.டிஜிட்டல் மயமாக்கல் உலகத்தரம் வாய்ந்த நிர்வாக அமைப்பை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. இந்த நிகழ்வில், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆராய்ச்சி சஞ்சிகையொன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன
சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது.
புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது.
உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை.
இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர்.
இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை.
இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன்.
இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது.
இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.
அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார்.
இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது-
இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது.
இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும்.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார்.
https://newuthayan.com/article/இலங்கை_முழுவதும்_இந்தியாவின்_கையில்;_விமல்_வீரவன்ஸ_கொதிப்பு!
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!
adminAugust 6, 2025
செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.