Aggregator

ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு!

1 month 2 weeks ago
ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு! ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார். ஜனவரி முதல் 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அடங்கும். https://athavannews.com/2025/1442044

ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு!

1 month 2 weeks ago

New-Project-69.jpg?resize=750%2C375&ssl=

ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு!

ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அடங்கும்.

https://athavannews.com/2025/1442044

கருத்து படங்கள்

1 month 2 weeks ago
(முன்னாள்) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 👇 சோமரத்ன ராஜபக்ச சம்பந்தமாக... தொடர்புடைய செய்தி கீழே உள்ளது. 👇

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !

1 month 2 weeks ago
தேசபந்து விவகாரம்; நாடாளுமன்ற தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு! தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நேற்று (05) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நேற்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.ப 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் (வருகைதராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஒரு உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனவின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாடாளுமன்றத்தில் கூடி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441995

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

1 month 2 weeks ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1442026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

1 month 2 weeks ago

New-Project-68.jpg?resize=750%2C375&ssl=

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1442026

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 2 weeks ago
மன்னாரில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட காற்றாலை பாகங்கள்! மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள், குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. இதேநிலையில்,இன்று அதிகாலை மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும் , பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன், காற்றாலை பாகங்களை ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1442009

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 2 weeks ago
120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்! கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் சேவை கவுண்டர், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்க உதவுகிறது. தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1442019

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

1 month 2 weeks ago
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் 1,200 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அப்பகுதியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் ஆரம்பித்த தீ பரவல் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதால் தீப் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442005

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

1 month 2 weeks ago
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு! ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது. இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும், ஒரு முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது. இந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, இது பல நாட்கள் இடைவெளியில் நடந்தது. அணுசக்தி வல்லரசான அமெரிக்கா மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாத இஸ்ரேல் உட்பட 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், இந்த மைல்கல் ஆண்டிற்கான ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர். குண்டுவெடிப்பு நடந்த சரியான நேரமான உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2025/1442012

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

1 month 2 weeks ago

New-Project-65.jpg?resize=750%2C375&ssl=

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.

மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது.

அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது.

இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர்.

American bomber drops atomic bomb on Hiroshima | August 6, 1945 | HISTORY

இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும், ஒரு முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது.

இந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, இது பல நாட்கள் இடைவெளியில் நடந்தது.

அணுசக்தி வல்லரசான அமெரிக்கா மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாத இஸ்ரேல் உட்பட 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், இந்த மைல்கல் ஆண்டிற்கான ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த சரியான நேரமான உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://athavannews.com/2025/1442012

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 2 weeks ago
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்களாவர். 10 நிமிடங்களுக்குள் இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. Tamilwinஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெள...

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்

1 month 2 weeks ago
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக விமர்சனம் படிக்க முடிந்தது.இந்த திரைப்படம் சம்பந்தமாக ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை சீமானின் ஆதரவாளர்கள் நீக்கும் காட்சியை இன்று ஒரு லிங்கில் பார்க்கவும் முடிந்தது.மேலேயுள்ளதிலும் அப்படித் தான் இருக்கிறது.வழமையாக சொல்வது போல் கண்டும் காணமல் போவதே மேல்.🖐

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 16 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 16 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முதல் முடிசூட்டு விழா முடிந்து ஆறு மாதங்களில், இரண்டாவது முடிசூட்டு விழா?' தேவநம்பியதிஸ்ஸ மன்னராக முடிசூட்டு விழா செய்யப்பட்டபோது, பல அதிசயங்கள் நடந்தன. பல விலைமதிப்பற்ற, அரிய பொருட்கள் தானாகத் நிலத்திலும் கடற்கரையிலும் தோன்றின. இது பற்றிய விபரங்களை, தீபவம்சம் மற்றும் மகாவம்சம் அத்தியாயம் 11 ஐப் பார்க்கவும். அசோக மன்னன் தான், அந்த அரிய பொருட்களுக்கு தகுதியானவர் என்று தேவநம்பியதிஸ்ஸ கருதி, அவைகளை அசோகரிடம் அனுப்பினார். அதற்குப் பதிலாக, அசோகன் தானும் தேவனம்பியதிஸ்ஸனுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பியதுடன், இலங்கை அரசன் தேவநம்பியதிஸ்ஸனை இரண்டாவது முடிசூட்டு விழாவை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார் என்று இலங்கை நாளாகமம்கள் கூறுகின்றன. இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது. அந்தக் காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து, நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம், மிகக் குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை. இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை. அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும். அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே! தேவநம்பியதிஸ்ஸ தனது இரண்டாவது முடிசூட்டு விழாவை ஆறு மாதங்களுக்குப் பிறகு நடத்தினார் மற்றும் மிகப் பெரிய இந்தியப் பேரரசுடன் தேவநம்பியதிஸ்ஸ நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதும், ஆசிரியரின் ஒரு பொய்யான புகழ்ச்சி சோடனையாகவே இருக்க வேண்டும். என்றாலும் மறைந்த கலாநிதி எஸ்.பரணவிதான அதற்கு சில நொண்டிக் காரணங்களை கட்டாயம் கூறியிருப்பார். கலிங்கப் போருக்குப் பிறகு, பேரரசர் அசோகன் (கிமு 268–232) பௌத்த மதத்திற்கு மாறிய பிறகு, இரண்டாம் முறை, ஒரு தார்மீக மாற்றத்தையும் பௌத்த கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பையும் குறிக்கும் முகமாக ஒரு குறியீட்டு தர்ம முடிசூட்டு விழாவிற்கு உட்பட்டதாகக் அசோகவதனம் போன்ற புத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ப ஏன் தேவநம்பியதிஸ்ஸாவும் இரண்டாம் முறை முடிசூட்டு விழா நடத்தினான் என்பதற்கு ஒரு காரணம் காண்கிறோம். அதாவது மீண்டும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் இடையில் ஏற்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்! என்றாலும் ஆறுமாதத்துக்குள் முடிசூட்டு விழா மீண்டும் நடப்பதற்கு எந்த சாத்தியமும், நாம் சுட்டிக்காட்டியவாறு கட்டாயம் இல்லை. Part: 16 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Six months after the first coronation, the second coronation took place?' When Devanampiyatissa was consecrated as king, and many miraculous things happened, and rare items came to him. Refer the chapter 11 of the Dipavamsa and the Mahavamsa. Quite a lot of invaluable items appeared in land and along the coast. Devanampiyatissa considered only the King Asoka was worthy of those, and sent those to Asoka. Asoka in turn sent something in return to Devanampiyatissa, and requested him to have a second coronation. Devanampiyatissa, dutifully, had a second coronation six months after his first coronation. This is quite impossible from the travel logistics involved in those days. Merchant ships were few in those days, and finding a one departing to the port Tamralipti is another problem. There were no mechanised vessels in those days, and the vessel had to take the South-West Monsoon to go and return by the following North-East Monsoon. They had to walk from Tamralipti, near the confluence of the River Ganges with sea, to Pataliputra, about another three hundred miles one way and back to Tamralipti. It would have taken more than a year even everything was favourable to complete the round trip. They also stayed at Pataliputra for five months. Devanampiyatissa had his second coronation six months after the first is therefore not logistically possible, and it was quite unwarranted to have the second coronation in six months of the first coronation. This must be to flatter that Devanampiyatissa had close connection with the greatest Indian Empire. Late Dr. S. Paranavitana would give some lame duck reasons for it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 17 தொடரும் / Will Follow பகுதி Part: 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/30703835682598343/?

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்

1 month 2 weeks ago
தமிழர்கள் முடிந்தால் தெலுங்கரை கெட்டவர்களாக சித்தரிக்கும் ஒரு படத்தை எடுத்துக் காட்டட்டும் . தெலுங்கானாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட ஓடவிட மாட்டார்கள். தெலுங்குப் படத்தை ஓடவிடாமல் தடுத்தால் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற வியாபார புத்தியினால்த் தான் தமிழர்கள் குப்புற படுத்து விட்டார்கள்.

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !

1 month 2 weeks ago
யாராவர் நாமலா? எத்தனை ஆட்டம்? அத்தனையும் அதிகாரம் தந்த போதை! இனி அதன் பலனை உணரட்டும். தனக்காகவா இத்தனையும் செய்திருப்பார்? அவர்கள் ஒருவரும் இவரை இனி சந்திக்கவே முன்வர மாட்டார்கள். யோசிக்கட்டும் தனிய இருந்து.